சனி, 18 பிப்ரவரி, 2012

பிரபுதேவாவின் பச்சையை அழிக்க நயன்தார கடும் முயற்சி

பிரபு தேவாவை முற்றிலுமாக பிரிந்து வந்துவிட்ட நயன்தாரா, தன்னிடமிருக்கும் அவரது நினைவுகளின் அடையாளங்களையும் அழித்துவிட விரும்புகிறாராம்.
அதன் விளைவு கையில் பச்சையாகக் குத்தியுள்ள பிரபு தேவாவின் பெயரை அழிக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.
வில்லு படம் முடிந்த உடனேயே இந்தப் பச்சையை குத்திக் கொண்டாராம் நயன். பிரபு தேவா மீதுள்ள காதலின் அடையாளமாக, எந்த நடிகையும் செய்யத் துணியாத இந்த செயலை நயன்தாரா செய்தார்.
ஆனால் பிரபு தேவாவோ, அடுத்த படம் எங்கேயும் காதலை இயக்கியபோது, அதன் ஹீரோயின் ஹன்ஸிகா மீது மோகமாகிவிட்டார் என்கிறார்கள்.

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!

பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா
“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.
இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.
பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை.

மார்ட்டின் கைது விமானத்தில் லாட்டரி சீட்டு கடத்தல்


Martin
கோவை: விமானத்தில் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியதாக படத்தயாரிப்பாளரும் லாட்டரி அதிபருமான மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த மாதம் 13ம் தேதி பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜீவானந்தத்திற்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஒரு கண்டெனரில் கோவை விமான நிலையத்திற்கு 30 லட்சம் மதிப்பிலான தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வருவதாக தெரியவந்தது.

அழகிரி: சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்.. வெற்றி திமுகவுக்கே!


Azhagiri
சென்னை: சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் திமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்போம் என்றும், திமுக வேட்பாளர் வெற்றி நிச்சயம் என்றும் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறினார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார். அன்பழகன், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, ஆற்காடு வீராசாமி, துரை முருகன், சற்குணபாண்டியன், வி.பி. துரைசாமி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பெண்கள் உள்பட 41 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

கல்லூரி மாணவி கொலை: ஒருதலைக்காதல் விபரீதம்!

சென்னையில் ஒருதலைக்காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வசித்து வந்தவர் சங்கீதா (19). இவர் காயிதே மில்லத் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் சங்கீதாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.
ஆனால் மணிகண்டனின் காதலை சங்கீதா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டு அருகே சங்கீதா சென்று கொண்டிருந்த போது மணிகண்டன் அவரை வழிமறித்து பேசினார். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்தால் நான் சும்மாவிட மாட்டேன் என மிரட்டினார். ஆனால் சங்கீதா இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டே இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் கைது

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடராஜனை அழைத்துச்சென்றது போலீஸ்."நில அபகரிப்பு தொடர்பாக  சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.

தஞ்சாவூரைச்சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரின் பேரில் காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது

நீதிபதி முன் கதறியழுத சசிகலா ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது


Sasikala
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆருயிர் தோழி  என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மின்தடையால் டிவி ரேட்டிங் அதல பாதாளத்தில் சீரியல்'களிலிருந்து விடுதலை

மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால், "டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும் தினமும் 8 மணி நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; கிராமப்புறங்களில் இந்த நேரம், இன்னும் அதிகமாகவுள்ளது. மின்சாரம் போகும் நேரத்தை மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பதை விட, மின்சாரம் இருக்கும் நேரத்தை அறிவித்தால் பரவாயில்லை, என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கல்வி, வேலை, தொழில், சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் என எல்லாமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கூடங்குளம் போராட்டக்காரர்களால் மத்திய அரசுக்கு ரூ.2,225 கோடி நஷ்டம்'

சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களால், இதுவரை மத்திய அரசுக்கு, 2,225 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து, ரஷ்ய விஞ்ஞானிகள் வெளியேற இருந்த சூழ்நிலையில், ரஷ்ய அரசிடமும், ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ரஷ்ய விஞ்ஞானிகள் நாடு திரும்புவது தவிர்க்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விஷயத்தில், தமிழக அரசு ஒரு நிபுணர்குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு, அடுத்த சில வாரங்களில் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இதைத் தொடர்ந்து, தமிழக அரசுடன் இணைந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி மிக விரைவில் துவங்கும்.

காந்தியின் எளிமை என்பது மக்களுக்கு துளியும் நன்மை பெயர்க்கவில்லை.

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

விஞர் அ.ப.சிவா
தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.
  மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 தலைவர்கள் அதிலும் நேர்கோட்டில் பயனித்த இருவரும் எதிர் திசையில் பயனித்த ஒருவருமாக மூவர் வழியே இம்முன்று காரணிகளை இவர்கள் கையாண்ட விதம் அதற்காண எதிர் வினை இவைகளை ஆராய்வோம்.
     உணவு பழக்க வழக்கம் என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை பொறுத்தே அமையும்.
கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் உணவுகளை தம் உடல்நிலைக்கேற்ப உண்பதே எளிமை.இவ்விடயத்தில் காந்தி இங்கிலாந்து சென்றாலும் ஆட்டுப்பால் தான் குடிப்பாராம்.விமான பயணத்தில் இவருடன் ஆடும் பயணிக்கும். ‘பாய்‘ விட்டு திருமணத்திற்கு போனாலும் தயிர் சாதம் கேட்பாராம்.

தலிபானை உடனடியாகக் கொண்டு வா Karzai பாகிஸ்தானிடம் ஆவேசம்

இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, பாகிஸ்தான் தனது நாட்டில் பதுங்கியுள்ள தலிபானையும் கொண்டு வர வேண்டும் என, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆவேசமாக பாக்., தரப்பிடம் தெரிவித்ததாகவும், அவரது ஆவேசம் கண்டு, பாக்., தரப்பு அதிர்ந்து போய் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனில், தலிபானுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டு நாடுகளின் போர், பெரிய அளவில் பலனைத் தராத நிலையில், தலிபானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தான் சிறந்தது என, ஆப்கன், அமெரிக்க நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு, பாக்., ஒத்துழைப்பும் அவசியம் என, அவை கூறி வருகின்றன. ஆப்கனின் முன்னேற்றம் குறித்து, நேற்று முன்தினம், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆப்கன், பாக்., மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு துவங்கியது.

அழகிரியே பெட்டர்’ என கலைஞரே நினைத்துவிட்டாராம்

நான் சொன்ன ‘ஆகாயத்தில் போட்ட அச்சாரம்’ கதையின் மிச்சத்தையும் முடித்துவிடுகிறேன். வீரபாண்டியார் - ஸ்டாலின் மோதல் சிக்கல் ஒருபக்கம் நடக்கும் நிலையில், ராசாத்தி அம்மாளும் கடும் கோபத்தில் இருக்கிறாராம். கட்சியின் மாநில மகளிர் அணிக்கு கனிமொழியைத் தலைவியாக்க சமீபத்தில் நடந்து முடிந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எந்த மாற்றுக் கருத்தும் வரவில்லையாம்.
இருந்தும் ராசாத்தி அம்மாள் ஒற்றைக் காலில் நின்று வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்...’’
‘‘ஏனாம்?’’
‘‘குஷ்புவை எப்படியும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பு கச்சை கட்டி நிற்கிறதாம். இதுதான் ராசாத்தி அம்மாளின் பயங்கர கோபத்துக்குக் காரணம். மேலும், கனிமொழியும் அழகிரியின் மகள் கயல்விழியும்கூட, ‘குஷ்புவுக்கு ஏன் தளபதி தரப்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?’ என சீறினார்கள ம்.

Chennai புதிதாக வளர்ந்து வரும் மெடிக்கல் டூரிஸம்

ம்மில் பலரும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது மட்டுமே மருத்துவமனைகளைத் தேடுகிறோம், அப்படித் தேடும்போது சில நேரங்களில் நேரப்பற்றாக்குறை, எமர்ஜெ ன்சி போன்ற காரணங்களால் ஒரே வளாகத்தில் அனைத்துவிதமான உடல்நலக் குறைபாடுகளுக்கும் தரமான சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளைப் பற்றிய விவரங்கள் அறிந்தும் கூட அங்கே போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அவகாசம் நமக்கு இருப்பதில்லை .
இதனால் என்ன ஆகிறது? நாம் விரும்பும் மருத்து வமனைக்குச் செல்ல முடியாத பட்சத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் என்ற ரீதியில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள நேர்கிறது.இப்படியான சூழலைத் தவிர்க்க, சென்னையின் பிரபலமான மருத்துவமனைகள் பற்றியும் அங்கே கிடைக்கக் கூடிய அனைத்துவகையான சிகிச்சை முறைகளுக்கான பட் டியல் குறித்தும், அங்கே வந்து செல்லும் வெளிமாநில, வெளிநாட்டு நோயாளிகளோடு தற்போது புதிதாக வளர்ந்து வரும் துறையான மெடிக்கல் டூரிஸம் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை உதவலாம்.நீங்கள் இப்போது சென்னையில் வசிப்பவரா ?சென்னை உங்கள் சொந்த ஊரா? அல்லது வேலைக்காக நீங்கள் வந்த ஊரா?

பாம்பன் சுவாமி கோவிலில் சசிகலா

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில், சசிகலா நேற்று இரவு உருக்கமாக வழிபட்டார்.
சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி அருகில் பாம்பன் சுவாமி கோவில் உள்ளது. மயூரபுரம் என அழைக்கப்படும் அந்த இடத்தில் பாம்பன் சுவாமியின் ஜீவ சமாதி உள்ளது.
இந்த கோவிலில் பக்தர்கள் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது. வி.ஐ.பி.,க்கள் பலர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த கோவிலுக்கு வந்தார். அவருடன் ஒரு பெண் உதவியாளர் வந்திருந்தார்.
சாமி கும்பிட்டு விட்டு இரவு 9 மணியளவில் கோவிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், சீருடை அணியாமல் மப்டியில் அவரது காரில் வந்து சென்றார்.

கட்சி நிதி??? பெரும்பகுதி ராவணனின் பாக்கெட் டுக்குப் போய்விட்டதாம்

ராவணன் மீது ஒவ்வொரு நாளும் ஒரு புது கேஸ் போட்டுத் தாளிக்கிறது காவல்துறை. இதுவரை நடந்த விசாரணையில் தான் சேர்த்த சொத்துக்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் ஒரு வரிகூட விடாமல் கக்கிவிட்டாராம் ராவணன். இருந்தும் தொடர்கின்றன வழக்கு அம்புகள்.
கடந்த ஏழு மாதங்களில் சசிகலா உறவுகள் அத்துமீறி ஆடிவிட்டார்களாம். குறிப்பாக, தான் ரொம்பவும் நம்பிய ராவணன் சந்துபொந்துகள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டிருக்கிறார் என்பதை அறிந்து முகம் சிவந்துவிட்டாராம் முதல்வர். ஆகவேதான் வழக்குச் சாட்டை சொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறதாம். ‘ராவணனின் பினாமிகள் குறித்த எல்லா விவரங்களையும் தோண்டியெடுங்கள்’ என உளவுத் துறைக்கு உத்தரவு போட்டிருக்கிறதாம் தலைமை..’’

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது.
 இதையடுத்து சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் ஜவஹர் சூர்யகுமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.
 சென்னையில் இன்று நடந்த நேர்காணலுக்குப்பின் ஜவஹர் சூர்யகுமார் பெயர் அறிவித்தார்

தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது!


சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டானது, 2 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 8 மணி நேர மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. ஆனால் இது பெரும்பாலான மாவட்டங்களில் 9 முதல் 12 மணி நேரம் வரை இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.
அதேசமயம், தலைநகர் சென்னையில் மட்டும் ஒரு மணி நேர மின்வெட்டு மட்டுமே அமலாகி வருகிறது. இது தமிழகத்தின் இதர பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது மின்வெட்டு பாகுபாட்டை சரி செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதன், மின்வாரிய அதிகாரிகள், தலைமைச் செயலாளர், மின்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சென்னைக்கான மின்வெட்டு அளவை 2 மணி நேரமாக உயர்த்தியும், தமிழகத்தின் இதர பகுதிகளுக்கான மின்வெட்டு அளவை 5 மணி நேரமாக குறைத்தும் அமல்படுத்துவது என்று முடிவாகியுள்ளதாக தெரிகிறது.

T.Nagar ரங்கநாதன் தெரு மேலும் 8 வாரம் திறந்து வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை தியாகராயர் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைகளைத் திறந்து வைப்பதற்கான அனுமதியை மேலும் 8 வார காலத்துக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்று 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!

 இஸ்லாத்தை எதிர்த்து எழுதினால் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும்  தகுதி இல்லை.
கடந்த 27/01/2012 வெள்ளிக் கிழமை மதியம் கடையநல்லூர் கடைவீதியில் (மெயின் பஜார்) இருக்கும் மஸ்ஜிதுன் முபாரக் பள்ளிவாசலின் ஜும்மா பேருரையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ”மக்கட்டி துராப்ஷா என்பவர் வைத்திருக்கும் கறிக்கோழி கடையில் யாரும் கோழி வாங்கி சமைக்க வேண்டாம். அவர் இஸ்லாத்துக்கு விரோதமானவர் என்பதால் அவரிடம் கோழி வாங்கி உண்பது ஹராமாகும்( இஸ்லாமிய முறைப்படி விலக்கப்பட்ட உணவு)” என்று போகிறது அந்த அறிவிப்பு. அறிவித்தவர் மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைபுல்லா ஹாஜா என்பவர்.
இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது என்ன? “இறையில்லா இஸ்லாம்” எனும் தளத்தில் தஜ்ஜால் என்பவர் எழுதி வெளியிட்ட “லூத் என்றொரு லூஸ்” என்ற கட்டுரையை தோழர் துராப்ஷா தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) சமூக தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தார், அவ்வளவு தான். இதற்குத்தான் மேற்படி நடவடிக்கை. முகநூல் போன்ற சமூக தளங்களில் யாராரெல்லாம், என்னென்ன விதமான விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் பாவிக்கும் யாரும் அறிந்தது தான். ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரது இணைப்புகளையும் ஒருவர் வைத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது.

Autistic குழந்தைகளுக்கு விசேஷ கவனிப்பு



Kolkotta 5 நபர்களால் காரில் வைத்து பாலியல் பலாத்காரம்

கொல்கத்தாவில் 30 வயதுடையை பெண் 5 நபர்களால் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 3வது நபரை அப்பெண் பேஸ்புக் மூலம் அடையாளம் காட்டியுள்ளாராம்.
பிப்ரவரி 4ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.இந்த வழக்கு தொடர்பாக தற்போது 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பெண் போலீஸாரிடம் கூறுகையில், பார்க் தெருவில் உள்ள ஒரு நைட் கிளப்புக்கு வெளியே டாக்சிக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தனது காரில் அந்தப் பக்கமாக வந்தார். எனக்கு லிப்ட் கொடுப்பதாக அவர் கூறினார். அவரை நைட் கிளப்பில் வைத்து நான் பார்த்து பரிச்சயமாகியிருந்ததால் தயக்கம் காட்டாமல் ஏறிக் கொண்டேன்.

நவீன மெருகேற்றலுடன் கர்ணன் படம் மீண்டும் ரிலீஸாகிறது!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1964களில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட்டான படம் “கர்ணன்”. கர்ணன் என்ற பெயரை கேட்டதும் சிவாஜியின் உருவம் மனதில் தானாகத் தோன்றும். 
சிவாஜி கர்ணனாகவே மாறி படத்தில் நடித்திருந்தார்.   “கொடுத்த வாக்கை காபாற்ற உயிரையும் துச்சமென மதித்தல்”, ”தானம் என்று வந்துவிட்டால் குருதியையும் இன்முகத்துடன் வழங்குதல்” போன்ற பற்பல கருத்துக்களை சாதரணமாக மனதில் பதித்து விடும் படம் கர்ணன்.
கர்ணன் படத்தில் கூறப்பட்டுள்ள இத்தகைய கருத்துக்களை இன்றைய சமுதாயத்தினரின் மனதில் பதிக்க விரும்பிய திவ்யா பிலிம்ஸின் சாந்தி சொக்கலிங்கம் இந்த படத்தை மறுவெளியீடு செய்கிறார்.
 பழைய கர்ணன் திரைப்படத்தின் தரத்தை சற்றும் பாதிக்காத வகையில் புதிய படம் அமைய வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டுள்ளனர்.

Encounter ரவுடிகள் பட்டியல் தயாராகிறது சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி

 ஜெயலலிதா எச்சரிக்கை எதிரொலியாக, தமிழகம் முழுவதும் என்கவுன்டர் செய்யப்பட வேண்டிய ரவுடிகள், கொடூர குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மாணவன் கடத்தல், வங்கிகளில் கொள்ளை, நகைக் கடைகளில் துளைபோட்டு கொள்ளை முயற்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் கொலை, அதிகாரிகளின் வீடுகளில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சென்னை போலீஸ் எஸ்.ஐ.க்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ‘‘கொலையாளிகள், வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்’’ என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். முதல்வரே பச்சைக் கொடி காட்டி விட்டதால், மாநிலம் முழுவதும் ஏற்கனவே 10 ஆயிரம் ரவுடி களை போலீசார் பட்டியிலிட்டு வைத்துள்ளனர்.

கல்வி கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுக்க வருகிறது உடும்பன்!!

Udumban director speaks about movie
சினிமாவில் சில படங்கள் சமூக அக்கறையோடும், பொறுப்போடும் படங்களை படங்களாக காட்டாமல், பாடங்களாக காட்டும் பட வரிசையில் சேரவுள்ள புதியபடம் உடும்பன். 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் குறித்து, அப்படத்தின் டைரக்டர் பாலன் என்ன சொல்கிறார் என்று நீங்களே கேளுங்கள். நான் இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்துள்ளேன். 2006-ல் நாகரீக மோமாளி என்ற படத்தை எடுத்தேன். அதன் பிறகு இப்போது உடும்பன் படத்தை எடுத்துள்ளேன். கதையின் களம், மதுரை கருவேலங்காட்டு பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தன் மகனை திருடனாகவே தயார் படுத்துகிறார். கன்னக்‌கோல் போட்டு திருடுவது, உடும்பை வைத்து திருடுவது தான் அவன் வேலை. அப்படி ஒருநாள் திருட போன வீட்டில் அவனுக்கு ஒன்றும் சிக்கவில்லை. வீட்டில் பணம் ஏதும் இல்லையா என்று அந்த வீட்டு உரிமையாளரிடம் கேட்க, அதற்கு அவர் இப்போது தான் பிள்ளைகளின் படிப்புக்கு கட்டணம் என்ற பெயரில் பள்ளிக்கூடம் கொள்ளையடித்தது என்று கூறுகிறார்.

ராஜா குறுக்கு விசாரணை "2ஜி' வழக்கு: "டிராய்' துணை ஆலோசகரிட

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயக் கொள்கையை உருவாக்கும் போது, ஸ்பெக்ட்ரத்தின் சந்தை மதிப்பு, திறன், முதலீட்டில் லாபம் மற்றும் கிராமப் புறங்களில் தொலைத் தொடர்பு சேவையை அதிகரிப்பது ஆகியவற்றை எல்லாம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) கருத்தில் எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை' என, "டிராய்' அமைப்பின் துணை ஆலோசகர் சாட்சியம் அளித்தார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) துணை ஆலோசகர் வீரேந்திர கோயலை, முன்னாள் அமைச்சர் ராஜா நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.

ரஷ்ய அணு விஞ்ஞானிகளை நாடு திரும்ப விடமாட்டோம்': மத்திய அரசு உறுதி

கூடங்குளத்தை விட்டு ரஷ்ய விஞ்ஞானிகளும், நிபுணர்களும் வெளியேற மாட்டார்கள். அவர்களை நாடு திரும்பவிட மாட்டோம்' என, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி உறுதிபடத் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் டில்லியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: கூடங்குளத்தில் உள்ள ரஷ்ய நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் தங்களது சொந்த நாட்டிற்கே திரும்பப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும், அவ்வாறு நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவர்கள் கூடங்குளத்திலேயே தங்கியிருக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

சென்னையில் வாழ்ந்த வள்ளலார்!

'வடலூரில் சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி, மக்களின் பசி போக்கிய, உருவ வழிபாட்டை ஒதுக்கி ஜோதி வழிபாட்டை நடைமுறைப்படுத்திய வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார், தன் 51 ஆண்டு கால வாழ்க்கையில் 33 ஆண்டுகள் சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் உள்ள வீட்டில்தான் கழித்தார்
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் ஜோதி வடிவமான தைப்பூச நாள், இந்த வீட்டில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வள்ளலார் வாழ்ந்த இந்த வீட்டைப் பற்றி என் விகடனில் எழுதினால் அது பலருக்கும் பயனுள்ள கட்டுரையாக அமையும்!'' - இப்படித் தன் ஆவலை வாய்ஸ்நாபில் பதிவுசெய்து இருந்தார் ராயபுரம் ஆர்.கிருஷ்ணன்.
ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள வள்ளலார் வாழ்ந்த அந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர் ஸ்ரீபதி, வள்ளலார் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

காஞ்சி ஜெயேந்திரர்மீது ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் புகார்

 உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு கேட்டு சென்னை ஆணையரிடம் நேற்று நேரில் மனு அளித்தார்.
இதுதொடர்பாக ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2002 ஆ-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 மர்ம நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னையும், எனது மனைவி மற்றும் வேலையாளையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் பட்டினம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 2004-ஆம் ஆண்டு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, நான் தாக்கப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் விசாரித்தனர். சங்கரராமன் கொலையில் சம்பந்தப்பட்ட அப்புவுக்கு எனது வழக்கில் தொடர்பு இருப்பதையும், அதேபோல் அப்புவுக்கும், காஞ்சி ஜெயேந்திரருக்கும் தொடர்பு உள்ளதையும் சிறப்பு புலனாய்வு காவல்துறை கண்டுபிடித்தனர்.

Free Condom சொந்த செலவில் "காண்டம்' பெட்டி அமைக்கும் எச்.ஐ.வி., பாதித்த வாலிபர்

காரைக்குடி:தன்னைப் போன்று, பிறரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்படக் கூடாது எனக்கருதி, காரைக்குடியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் "காண்டம்' பாக்கெட்கள் உள்ளடக்கிய பெட்டிகளை தன் சொந்த செலவில் பொது இடங்களில் அமைத்துள்ளார்.
கட்டட பணி செய்து வரும் இவருக்கு, 2000ல் திருமணம் நடந்தது. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதால், 2008ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். எச்.ஐ.வி., பாதித்திருப்பது தெரியவந்தது. இந்த விபரம் மனைவிக்கு தெரியவர அவர் விவாகரத்து பெற்று பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.மனைவி, பிள்ளைகளை இழந்த சோகத்துடன் கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளை செய்து வருகிறார்.

தன்னைப்போன்று யாரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கக்கூடாது என எண்ணி சொந்த செலவில் பெட்டி வாங்கி அதில் தொண்டு நிறுவனம் மூலம் பெறப்பட்ட"காண்டம்' பாக்கெட்களை போட்டுள்ளார். அப்பெட்டியில், சுய பாதுகாப்பு... சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே "எய்ட்ஸ்' நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என, வாசகம் எழுதி வைத்துள்ளார். காரைக்குடி புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 18ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடி அமல்

சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

சங்கரன்கோவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த கருப்பசாமி, சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் மார்ச் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிப். 22: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் துவக்கம்
பிப்.29: வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்
மார்ச் 1: வேட்புமனு பரிசீலனை
மார்ச் 3: வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி
மார்ச் 18: ஓட்டுப்பதிவு
மார்ச் 21: ஓட்டு எண்ணிக்கை

ஒன்றும் இல்லாமல் நிற்கிறார் வைகோ : ராமதாஸ் கமெண்ட்

பாமக நிறுவனர் ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,   ‘’வைகோ கலைஞரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க.வை தொடங்கினார்.
சில காலம் சீட்டுக்காக அந்த  அம்மாவிடம் போய் நின்றார். அவர்கள் விரட்டி விட்டனர். இப்போது ஒன்றும் இல்லாமல் நிற்கிறார்.  அவரும் தமிழுக்காக ஒன்றும் செய்து விடவி ல்லை’’ என்று கூறினார்.

பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளிக்கூட விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் எழுதி வைத்த கடிதத்தின்படி பொருளாதார ஆசிரியர் மகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் 1700 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் 1,160 மாணவர்கள், 450 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

சென்னை 'கரண்ட்'டில் கூடுதலாக கை வைக்க முடிவு

தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் வெறும் ஒரு மணி நேர மின்வெட்டோடு எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு சோகச் செய்தி. உங்களுக்கான மின்வெட்டின் அளவைக் கூடுதலாக்கத் திட்டமிட்டுள்ளனராம். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு அனுப்ப மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் வெர்சஸ் சென்னை என்ற நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. மின்சாரத் தடை என்பது சென்னையில் அதிகாரப்பூர்வமாக ஒரு மணி நேரம்தான். இருந்தாலும் அவ்வப்போது கரண்ட் போகும், வரும். அது கணக்கிலேயே கிடையாது. இருந்தாலும் அதிகபட்சம் ஒரு மணி நேர மின்சாரத் தட்டுப்பாட்டோடு சென்னை நகரமும், அதையொட்டியுள்ள புறநகர்களும் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கின்றன.

இத்தாலியர்களால் கொல்லப்பட்ட 2 தமிழக மீனவர்கள்-நடந்தது என்ன?: பரபரப்புத் தகவல்கள்!

கொல்லம்: இத்தாலிய கப்பலின் பாதுகாப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்கள் இருவருமே தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. நடந்தது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான ராமன்துறை, இரயுமன் துறை, பூத்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள கடலில் மீன்பிடித் தொழில் செய்வது வழக்கம். இதுபோல பூத்துறையை சேர்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அஜீஸ் டிங்கு(20), கிலாரி, ஜான்சன், முத்தப்பன், அலெக் சாண்டர், பிரான்சிஸ், பிங்செரியன், மார்ட்டின், ஆன்டனி, குளச்சலை சேர்ந்த ஜெலஸ்டின் ஆகி யோரும் கேரளாவை சேர்ந்த சில மீனவர்களும் இணைந்து கொல்லம் கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்றனர்.
நேற்று ஆழ்கடல் பகுதியில் இவர்கள் வலை வீசி மீன்களை பிடிக்க காத்திருந்த போது அந்த வழியாக ஆயில் டேங்கர் ஏற்றிய சரக்கு கப்பல் வந்தது. திடீரென கப்பலில் இருந்தவர்கள் விசைப்படகின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

அந்த காலத்தில் பெரிய புரட்சி! நாதஸ்வர இசை




நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தனது 16 வயதில் 9 வயது நிரம்பிய சாரதம்மாள் என்பவரை திருமணம் முடித்தார்
என்று அந்தக் காலம் இள வயதிலேயே கல்யாணம் முடிக்கும் பழக்கம் விவரிப்போடு, திரு. சாரி அவர்களின் பாரம்பரிய சொற்பொழிவு ஏற்பாட்டில், திரு ஸ்ரீராம் அவர்களின் ஞாயிறு பிரசங்கம் ஸ்வாரஸ்யமாக துவங்கியது. எள் போட்டால் எண்ணெயாகும் கூட்டம்.
பிள்ளை அவர்கள் 58 வருடங்கள்தான் வாழ்ந்தார். ஆனால் என்ன வளமான சாதனை.

எனக்கு மேக்கப் தேவையில்லை! த்ரிஷா பளீர்!

trisha krishnan hotதமிழ் சினிமா ரசிகர்களிடம் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. த்ரிஷாவிற்கு வயதாகிவிட்டது, மூத்த நடிகை ஆகி விட்டார் என சில நடிகைகளே வதந்திகளை கிளப்பி விட்டார்களாம்.
 அதன் எதிரொலியாக அஹமது இயக்கத்தில் தன்னை விட சிறியவரான ஜீவாவுடன் கைகோர்த்து தனது இளமையை அவர்களுக்கு நிரூபிக்கப் போகிறாராம் த்ரிஷா. த்ரிஷா சில நாட்களாகவே நிகழ்ச்சிகளுக்கு வரும் போது மேக்கப் இல்லாமல் வந்தார். 
மூத்த நடிகை என்று மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறீர்கள் என்று கேட்ட போது த்ரிஷா “ யாருக்காகவும் மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் நானாகவே இருக்கிறேன்.
 மற்ற்வர்கள் பேசும் பேச்சு என்னை பாதிக்காது. நான் நடித்து வெளியான “பாடிகாட்” படத்தை பார்த்துவிட்டு பேசட்டும் நான் மூத்த நடிகையா?

தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கை

2020-ல் இப்படி நடக்கலாம்.
சென்னையில் வசிக்கும் நீங்கள் காலையில் எழுந்து வீட்டிற்குள் இருக்கும் கக்கூசுக்குப் போகிறீர்கள். கக்கூஸ் கதவு திறக்க மறுக்கின்றது. இடது புற மின்னணு பட்டியில் ஒரு தகவல் பளிச்சிடுகிறது.
‘அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் கணக்கில் போதுமான கையிருப்பு இல்லாததால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலுவைத் தொகையான ரூபாய் 2,212 செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொண்டு எங்கள் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள எண் 66832ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’.

தேசபக்தியை மொத்த குத்தகை எடுத்திருக்கும் இந்துத்துவா கும்பல்


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்









தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.

தே.மு.தி.க. வெளியேறியதால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறதா?

மிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
தே.மு.தி.க. உறுப்பினர் பால், பஸ் கட்டண விலை உயர்வு குறித்து பேசியதைத் தொடர்ந்து இந்த மோதல் உருவானது. ஆளும் கட்சி உறுப்பினர்களைப் பார்த்து விஜயகாந்த் மிரட்டும் தொனியில் பேச, ப த்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவரான அவருக்கு அரசு கொடுத்த காரையும் திருப்பி அனுப்பிவிட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இப்போது யாரால் யாருக்கு லாபம் என்ற விவாதம் அரசியல் மேடைகளில் சூடுபிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியதால் விஜயகாந்தின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறதா? சரிந்து இருக்கிறதா? என்ற ஒற்றைக் கேள்வியுடன் தமிழகம் முழுவதும் அதிவேக சர்வே ஒன்றை எடுத்தோம்.

இந்து முன்னணியினர் முகத்தில் கரியைப் பூசிய காதல் ஜோடி!

புதுவை: புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்த்த இந்து முன்னணியினர் முகத்தி்ல் ஒரு காதல் ஜோடி கரியைப் பூசியது.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் சனில் குமார் மற்றும் முருகையா தலைமையிலான 9 பேர் புதுவையில் உள்ள பாரதி பூங்காவிற்கு சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. ஆனால் வடிவேலு, உமாமகேஸ்வரி ஜோடி மட்டும் தைரியமாக பெஞ்சில் அமர்ந்திருந்தது.

புதன், 15 பிப்ரவரி, 2012

நாய் வளர்ப்பவர்களுக்கு இதயநோய் வராது


ஜப்பானில் டோக்கியோ அருகே கனகவா என்ற இடத்தில் உள்ள கிடாசோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் நீண்ட நாட்களாக நோயினால் அவதிப்பட்ட 200 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களில் நாய் வளர்ப்பவர்களின் இதயம் நல்ல திடகாத்திரமாகவும், மனதில் வேதனைகள் இன்றி லேசாக இருப்பதையும் கண்டறிந்தனர். அதே நேரத்தில் நாய்களை வளர்க்காதவர்களின் இதயம் பல குழப்பங்கள் மற்றும் வேதனைகளுக்குட்பட்டு இருந்தது.

நாய்களை வளர்ப்பவர்கள் இதய நோய் இன்றியும், நாய்களை வளர்க்காதவர்கள் இதயம் பாதிக்கப் பட்டவர்களாகவும் இருந்தனர்.

நாய்களுடன் கொஞ்சி விளையாடுவதன் மூலம் மன இறுக்கம் குறைவதா இதற்கு காரணம் என ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதயம் லேசாக, ஆரோக்கியத்துடன் வாழ வேண் டுமா? நாய்களை வளர்ப்பது சிறந்த வழி என்றும் அறிவித்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் இலவசங்களை வாரி வழங்கும் அதிமுக-முதல் போணி முடிந்தது

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் செயலப்டும் அதிமுக அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வருகின்றதாம். முதல் கட்ட பட்டுவாடாவை வெற்றிகரமாக முடித்து விட்டார்களாம்.

வீரபாண்டியார் மீது அவ்வளவு சீக்கிரம் கை வைக்க முடியாது


சென்னை: திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த மோதலில் தான் பலனடைய பார்ப்பதாகவும் கருணாநிதி கருதுவதாகவும், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுகவில் எத்தனையோ தலைவர்கள் வந்துள்ளனர், போயுள்ளனர். அவர்கள் அத்தனை பேருக்குமே கருணாநிதி மனதில் ஒவ்வொரு இடம் இருக்கும். இருப்பினும் கருணாநிதி மனதில் தனி இடம் பிடித்துள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் வீரபாண்டியாரும் ஒருவர். சேலத்தில் கட்சியைப் பற்றி கருணாநிதி ஒருமுறை கூட கவலைப்பட்டதில்லை. காரணம், வீரபாண்டியார் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை.

ரோசய்யாவுடன் ஜெயேந்திரர் சந்திப்பு-குடியரசுத் தலைவருக்கு சங்கரராமன் மனைவி கடிதம்

Sankararaman
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே நீதி தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் எனது கணவரின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரர், தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தது போன்ற புகைப்படம் வெளியாகியிருப்பது இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக உள்ளது. எனவே ஆளுநர் ரோசய்யாவை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடுக்க வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு சங்கரராமன் மனைவி பத்மா கடிதம் அனுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவிலில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யர், அப்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

புலம்புகிறார் தனுஷ் ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி


Aishwarya and Dhanush
ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.
சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ராசாவை நேரில் சந்தித்த பொன்முடி, வேலு-திமுக தலைமையி்ன் முக்கிய முடிவுகளை தெரிவித்ததாக தகவல்!

R Raja
டெல்லி: திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கிட்டத்தட்ட திமுக கைவிட்டு் விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அவரை முக்கியத் தலைவர்கள் யாரும் கடந்த பல மாதங்களாக போய்ப் பார்க்கவில்லை. தனது மகள் கருணாநிதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மட்டுமே கட்சித் தலைவர் கருணாநிதி சில முறை திஹார் சிறைக்கு வந்து போனார். மற்றபடி ஸ்டாலினோ, அழகிரியோ, திஹார் சிறைக்கு வந்து ராசாவை பார்க்கவே இல்லை.

எங்கெங்கும் இல்லை கரண்ட்-தொழிற்சாலைகள் முடக்கம்: எங்கு பார்த்தாலும் போராட்டம்!

சென்னை: சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கடும் மின்வெட்டால் தொழிற்சாலைகள் கிட்டத்தட்ட முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளன. அனைத்து வகையான தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. மக்களும், தொழிலாளர்களும் சாலைகளுக்கு வந்து போராடுவது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் - சென்னை மற்றும் புறநகர்களைத் தவிர்த்து- பல மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் அதையும் தாண்டி மின்தடை அமலில் உள்ளது.

ஆச்சார்யா: அது நிச்சயமாக பொய் வழக்கு. அந்த வழக்கை எதற்காகப்

காவிரி நீர் டிரிப்யூனலில் கர்நாடக அரசு சார்பாக வாதாடுபவர். பத்ராவதி கிருஷ்ணா கொலை வழக்கு, கோலார் ஹன் சிகோலே கொலை வழக்கு என கர்நாடகாவின் புகழ் வாய்ந்த வழக்குகளை நடத்தியவர்.
ஐந்து முறை அட்வகேட் ஜெனரலாகப் பதவி வகித்தவர். சில நாட்களுக்கு முன்பு வரை அதே பதவியை வகித்தவர். கூடவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா போன்றவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் அரசு சிறப்பு வழக்கறிஞர். 78 வயதான மூத்த வழக்கறிஞரான ஆச்சார்யா, சமீபத்தில் தனது அட்வகேட் ஜெனரல் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டார். எப்போதும் பத்திரிகையாளர்களிடம் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே உதிர்த்துவிட்டுப் போகும் ஆச்சார்யா விடம் நாம் பிரத்யேக பேட்டி கேட்டதும் சட்டென்று சம்மதித்தார்.

பிசியாக இருந்த விஜயகாந்தை, அப்படியே விட்டு வைத்திருக்கலாம்

சட்டசபை கலாட்டாவுக்குப்பின், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வாண வேடிக்கை நடத்தத் தொடங்கியிருக்கிறார். “தேவையில்லாமல் என்னை சீண்டினால், நானும்  பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்” என்று, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அவர்.
“எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததே பெரிய விஷயம் என்பதுபோல, அரசியலில் அடக்கி வாசித்துக் கொண்டு, வேறு சோலிகளில் பிசியாக இருந்த விஷயகாந்தை, அப்படியே விட்டு வைத்திருக்கலாம்” இந்த நினைப்பு இப்போது அ.தி.மு.க.-வினருக்கு வந்திருக்கிறது. அமைச்சர்கள் சிலர், மாவட்ட அளவில் விஜயகாந்த் கட்சியினர் அரசியல் ரீதியாக குடைச்சல் கொடுப்பதாக சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.
“என்னை சீண்டிப் பார்க்காதீர்கள்; என் வாயை கிளறாதீர்கள்.. வாழ்க மணமக்கள்”
கட்சியின் தென்மாவட்ட அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். அவர், “6 மாதங்களுக்கு முன்புவரை லோக்கலில் பாலிட்டிக்ஸ் செய்வதற்கு தி.மு.க.-வில் என்ன நடக்கிறது என்பதில் கண் வைத்திருந்தால் போதும்.

முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை ஏமாற்றிய ஆஞ்சநேயன்

நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடோடிகள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவராம். தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டார். இதையடுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.

காதலில் மட்டுமல்லா கடவுளிலும் இதே சாதிவெறி அடங்காமல்

காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.இன்று காதலர் தினம். ஊடகங்களின் உதவியால் ஊதிப்பெருக்கப்படும் இந்த தினத்தில் காதல் குறித்த இந்திய யதார்த்தம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. நம் சமூகத்தில் தோன்றும் காதல் எத்தகைய வில்லன்களையெல்லாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது? குறிப்பாக சாதிவெறி கோலேச்சும் சமூகத்தில் காதல் வெற்றி பெறுவதற்கு வாழ்வா, சாவா என்று போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஊடகங்களின் ஜிகினா காதலையும், யதார்த்தம் சுட்டெரிக்கும் உண்மைக் காதலையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. காதலர் தினத்திற்காக மீள் பதிவு.
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.
காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்
சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை கல்வி நிறுவனங்களின், பாடத்திட்டத்தின் பிரச்சினை என்று மட்டும் பார்ப்பதை விட ஒரு மாணவன் வளரும் சமூக சூழ்நிலையை ஆய்வு செய்வது தேவையாக இருக்கிறது. அந்தச் சூழல் எப்படி ஒரு வன்முறை மனோபாவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. பொருத்தம் கருதி அதை மீள் பிரசுரம் செய்கிறோம்.
- வினவு

சென்னை கொலை போல் நடக்கும்': ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள்

நரிக்குடி: சென்னையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளியில், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிளஸ் 2 மாணவர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மருது பாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று காலை 9.25 மணிக்கு, "பிரேயர்' நடந்தது. பிளஸ் 2 மாணவர்கள் இருவர் பிரேயருக்கு வராமல், வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்டு இடையூறு செய்தனர். இதை ஆசிரியர் சுப்பிரமணி கண்டித்தார். ""சென்னையில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்றது போல் இங்கும் நடந்து விடும்,''என, மிரட்டினார். இதை தொடர்ந்து ஆசிரியர்கள், " உயிருக்கு பாதுகாப்பு இல்லை,' எனக் கூறி, வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால், பள்ளியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

தூதரக கார் தகர்ப்புக்கு நவீன ரக காந்தக்குண்டுகள்: முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு

: டில்லியில், இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்புக்கு நவீன ரக காந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் வீட்டருகே, இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கார் நேற்று, திடீரென வெடித்து தீப்பிடித்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தை, தேசிய புலனாய்வு படையினர் ஆய்வு செய்தனர். கார் வெடித்த இடத்தில் காந்த துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

வீரபாண்டியார் குமுறல் திமுக தலைமை மனதை புண்படுத்தி விட்டது


Veerapandi Arumugam
சேலம்: திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் விட்டது எங்களது மனதைப் புண்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும், திமுகவின் பெரும் ஜாம்பவான்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றி திமுக இளைஞர் அணிக்கான நிர்வாகிகளை கட்சிப் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது.

ஆறுமாத காலத்திலேயே ஆறுமுகம் நூறு கோடி செங்கோட்டையன் பதவியேற்று



சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு திவாகரன், ராவணன் என வரிசையாக கைது நடவடிக்கைகள் தொடர்ந்தபோதுகூட ஏற்படாத அதிர்ச்சி அலையை கட்சி வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது,
அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக இருந்து வந்த ஆறுமுகத்தின் கைது! காரணம், முதல்வரே இவ்விஷயத்தில் நேரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்திருப்பதுதான்!
அமைச்சரவையில் மூத்தவரும், அ.தி.மு.க.வில் மிக முக்கிய நபரும், முதல்வருக்கு நெருக்கமானவருமான செங்கோட் டையனின் உதவியாளரைக் கைது செய்ய முதல்வரே உத்தரவிட்டது ஏன்? இதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க.வினரையும் குடைந்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமெனில், முதலில் ஆறுமுகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான் முடியும் என்பதால் அவரைப் பற்றி முதலில் விசாரித்தோம்...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

Valentine’s Day காதல் திருமணங்கள் அவசியம்

காதலை நேசிப்போருக்கு மட்டுமே உரிய நாள் அல்ல பிப்ரவரி 14!
சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற "ஆதலினால் காதல் செய்வீர்" என்று மலர்க்கொடி தூக்குவோரும் "அய்யோ! சமூகக் கட்டுமானம் சரிந்து போகிறதே" என்று கலாச்சார காவலர்களாக அவதரிப்போரும் உச்சரிக்கும் நாளும்கூட!
காதலர்  தினத்தின் பின்னனி
காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரித்துப் போன பாதிரியாரின் நினைவுநாள்தான் பிப்ரவரி 14. கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து காதல் கதை!
திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக மரணதண்டனைப் பெற்ற பாதிரியாரின் பெயர்தான் வேலன்டைன்ஸ்!

Traffic ராமசாமிக்கு கொலை மிரட்டல்! போலீஸ் பாதுகாப்பு!


தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், இதையடுத்து போலீசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் டிராஃபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடைபாதை கடைகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டது.
ஆனால், தொடர்ந்து நடைபாதை கடைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்நதேன். இதையடுத்து போலீசாருக்கு நோட்டீஸ் நீதிமன்றம் அனுப்பியது. பின்னர் பிளவர் பஸார் பகுதிக்கு உட்பட்ட நடைபாதை கடைகளை போலீசார் அகற்றிவிட்டனர்.

சசிகலா பெயரில் பேரவை சங்கரன்கோவிலில் போட்டி

ஒரு வாரத்தில் சசிகலா பெயரில் பேரவை தொடங்க ஏற்பாடு: சங்கரன்கோவிலில் போட்டி

தென்காசி: முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா பெயரில பேரவை தொடங்கி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று பூலித்தேவன் பாசறையின் மாநில பொதுச் செயலாளர் ராஜாமறவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட், சமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற சசிகலா தான் ஏற்பாடு செய்தார். ஆனால் இன்றைய நிலை வேதனை தருகிறது. முக்குலத்தோர் சமுதாயத்தின் சார்பில் சசிகலா பேரவை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கிறோம். 1 மாதத்தில் அது அரசியல் கட்சியாக மாற்றப்படும். சசிகலாவின் ஆலோசனைபடி தான் பேரவையை துவங்குகிறோம்.

நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை!


Stalin Vijayakanth and Karthi Chidambaram
சென்னை: தனியார் விமானம் ஒன்றில் 'தற்செயலாக' ஒன்றாகப் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் ஒருவராகிய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் விமான பயணத்தின்போது ரகசியமாக ஆலோசனை நடத்தியதாக 'வானிலிருந்து' வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்டுக் கொண்டு பிரிந்து கொள்வார்கள். யார் யாருடன் சேருகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமே இல்லை.

போஜ்புரி நடிகை தற்கொலை: நண்பர் கைது

போஜ்புரி படங்களில் நடித்து வந்த ரூபி சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பீகாரைச் சேர்ந்தவர் நடிகை ரூபி சிங்(25). போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். அவரது பெற்றோர் பாட்னாவில் வசித்து வருகின்றனர். அவர் மட்டும் மும்பையை அடுத்த கோரேகான் புறநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

6 நாள் மாணவர்களுடன்தானே என் தாய் இருந்தார்-ஆசிரியையின் மகள் உருக்கம்!


Daughters of Teacher Uma Maheswari
சென்னை: என் தாய், தனது பள்ளி மாணவர்களை என் பிள்ளைகள் என்றுதான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தார். ஒரு நாள் மட்டுமதான் எங்களுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைகளைத்தான் அவர் அதிகம் நேசித்தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கமாக கூறியுள்ளார்.

வீரபாண்டி ஆறுமுகம் மகனுக்கு திமுக மேலிடம் கண்டனம்


சேலம்: சேலத்தில் தன்னிச்சையாக இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவுக்கு திமுக மேலிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக இளைஞர் அணியைப் பலப்படுத்த அக்கட்சியின் பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் 30 வயதுக்குட்பட்டவர்களிடம் மனு வாங்கி தானே நேரில் சென்று நிர்வாகிகளைத் தேர்வு செய்து வருகிறார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

தமிழ்சினிமாவை விட்டு விலகியது ஏன்? தமன்னா

தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

குஜராத் அரசு கலவர ஆவணங்களை அழித்து விட்டது'' காவல்துறை புகார்

குஜராத் கலவரம் தொடர்பான ஆதார ஆவணங்களை அரசு அழித்து விட்டது'' காவல்துறை உயர் அதிகாரி புகார்

ஆமதாபாத், பிப். 12- குஜராத் இனக் கலவரம் தொடர்பான தும், நரேந்திரமோடிக்கு எதிரா னதுமான ஆவணங்களை மாநில அரசு அழித்து விட்ட தாக அஞ்சுவதாக சஸ்பெண்டு ஆன அய்.பி.எஸ்.அதிகாரி, நானாவதி ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.
இனக் கலவரங்கள்

Vijayakanth: என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்

அருப்புக்கோட்டை:""என்னை சீண்டினால் பல உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்,'' என, அருப்புக்கோட்டையில் நடந்த திருமண விழாவில் விஜயகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது: சட்டசபையில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. மக்கள் பிரச்னைகளைத் தான் பேசினேன்; இனியும் பேசுவேன். சபை நாகரிகம் எனக்கு தெரியும். 13 ஆண்டுகளாக பெங்களூரில் வழக்கு நடந்து வருகிறது. அதை உங்களால் தீர்க்க முடியவில்லை. தினமும் 8 மணி நேர மின் தடை, தொழில் முடக்கம், மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மின்சாரத்திற்காக என்ன திட்டம் தீட்டினீர்கள்.

சினிமா வன்முறை காட்சிகள்தான் என்னை கத்தி எடுக்க வைத்தன! - ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்


Student Kill Teached
சென்னை: வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.
மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.