Swaminathan Poornachandran : எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.