அதிரடி : காஸாவில் தங்களின் அரசைக் கலைப்பதாகவும், ஆட்சி அதிகாரங்களை ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய நிா்வாகக் குழுவிடம் (என்சிஏஜி) ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து காஸா அரசு ஊடகத் துறை இயக்குநா் இஸ்மாயில் அல்-தவாப்தா கூறுகையில், ‘காஸாவின் அன்றாட நிா்வாகத்தைக் கவனிக்க தேவையான பணியாளா்கள் மட்டுமே தங்களின் பதவிகளில் நீடிப்பா். தேசிய நிா்வாகக் குழுவின்கீழ் பணியாற்ற அவா்கள் முழுத் தயாராக உள்ளனா்’ என்று தெரிவித்தாா்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
செவ்வாய், 7 ஜூலை, 2026
பலஸ்தீன் காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
லெனின் 1918ல் கட்டாய பறிமுதலில் ஆரம்பித்து குலாக் முகாம்களையும் கேள்வியே கேட்காமல் சுட்டுக்கொல்லும் செக்கா போலிசையும்தான் உருவாக்கினார்
Chandru R : பண்ணையடிமைகளுக்கு 1,இடம்பெயரும் உரிமை இல்லை ,நிலத்துடன் பிணைக்கபட்டவர்கள், 2உயிர்வாழ மட்டுமே உணவு, 3குடிசையை சுற்றி தோட்டம் இவைதான் கூட்டுப்பண்ணை விவசாயிகளுக்கு ரசியாவிலும் சீனாவிலும் வழங்கப்பட்ட உரிமைகள்.
இதுதான் நிலவுடமை உற்பத்திமுறையிலும் பண்ணையடிமைகளுக்கு கொடுக்கபட்ட உரிமைகள் ஆகும்.
நிலபிரபு சில நேரங்களில் கோபபட்டாலும் சிலநேரம் கருணை காட்டுவான் ,ஆனால் சீனாவிலும் ரசியாவிலும் எப்போதும் உளவு போலிசின் கண்காணிப்பில் சுதந்திரமாக மூச்சுக்கூட விடமுடியாது விட்டால் மரணம் அல்லது குலாக் முகாம்,
ஆனால் ஒன்று மருத்துவமும் கல்வியும் இலவசமாக கிடைத்தன மருத்துவம் இலவசமாகவே கொடுத்தாக வேண்டும் ஏனெனில் பணம் கொடுத்த அவர்களால் வாங்க முடியாது, நோய் தாக்கினால் உற்பத்தி தேங்கி கம்யூனிச எஜமான்கள் சொகுசாக வாழமுடியாது.
பிரபாகரன் ராஜீவ்காந்தியை படுகொலை செய்யச் சொன்ன ஒலிப்பதிவை நானே இந்தியவுக்கு வழங்கினேன் ! முன்னாள் கடற்புலி காகுஸ்தன் அரியரத்தினம்
தேசம் நெட் - arulmolivarman : தேசம்குரல் யூரியூப் தளத்தில், இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா) தன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.
(இணையத்தின் கீழே இப்பதிவுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.) இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காகுஸ்தன் அரியரத்தினம் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து தேசம்நெற்க்கு அனுப்பி வைத்துள்ளார்.
26 பேர் உயிரிழப்பு -நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு காரணம் போதைவஸ்து மாபியாக்கள்
Jathu Edit : மலையக குரல் ; சிறைச்சாலைக்குள் இரகசியமாக இயங்கி வந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலமானதே இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாகும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம்: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த கொடூர வன்முறைச் சம்பவங்களில், ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இக்கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வாலிபர்கள், இளம்பெண்கள் பைக் ஓட்டி அராஜகம் - வாகன ஓட்டிகள் பீதி
dinamalar.com : தலைநகர் சென்னையில், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர். பைக் ரேஸில் பெண்களையும் ஊக்கப்படுத்தி, அட்டூழியத்திற்கு வழிவகுப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில நாட்களாக, விலை உயர்ந்த பைக்குகளில் வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகின்றனர்.
திமுக பாஜக கூட்டணியா? Progressive Alliance for State Autonomy
KULITALAI MANO: Truth is a Pathless Land.
*Progressive Alliance for State Autonomy*
என்ற பெயரில்
இவர்களுடன்
MK.Stalin - Convenor
Akhilesh Yadav
Supriya Sule
Uthav Thakrey
Tejaswi Yadav
TRS Rama Rao
Hemanth Shoren
Aravind Kejriwal
Umar Abdullah
பாஜக விற்கு ஆதரவு தரலாம்
Umar Abdullah or Mufti Muhamad Saeed, whoever is willing to join
Step 1 - create a forum to discuss state autonomy under general common banner
Step 2 - conduct seminars in each of these states and invite those party leader in that state
Step 3 - Continue doing this for 6 - 9 months
Step 4 - Analyse the data and facts collected in those forums and prepare a common minimum program draft
திங்கள், 6 ஜூலை, 2026
இந்தியாவின் தண்ணீரை குடிக்க மறுத்த ஜப்பானிய பிரதமர்
Maniam Shanmugam : இந்தியாவின் தண்ணீரை தவிர்த்த ஜப்பானிய பிரதமர்!
ஜப்பானிய பிரதமர் சனாய் டகாயிச்சி அண்மையில் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அந்த வருகையின் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக சீனாவில் இருந்து வெளியாகும் 'குளொபல் ரைம்ஸ்' ஏடு சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்து ஏடு கூறியதாவது:
"இந்தியப் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை புன்னகையுடன் வாழ்த்தி, அவரைத் தனது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். இருப்பினும், உள்ளூர் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்ட பின்னர், ஜப்பானிய தூதுக்குழு அரசு விமானத்தில் பாட்டில் தண்ணீரை எடுத்து வந்ததாக ஜப்பானிய ஊடக நிறுவனம் ஒன்று பின்னர் செய்தி வெளியிட்டது. சில பார்வையாளர்களின் பார்வையில், இந்த முரண்பாடான நடத்தை இந்தியாவின் மீதான ஜப்பானின் உணர்வற்ற, முறையான மற்றும் அவமதிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை 25 பேர் உயிரிழப்பு! என்ன நடக்கிறது?
ilakkiyainfo.com : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஞாயிறு, 5 ஜூலை, 2026
: "கீழடிக்குச் சவுக்கடி"கீழடி நாகரீக காலம் 2000 க்குக் கீழே இறக்கப்படும். தமிழ் மொழி, தமிழ் எழுத்துருவின் (தமிழி) காலமும் 2600 லிருந்து குறைக்கப்பட்டு விடும்.
Siva Ilango : "கீழடிக்குச் சவுக்கடி"
கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவிடும் கீழடியின் தொல்லியல் ஆய்வறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.
அவ்வறிக்கை "முழுமையற்றது" என்று தொல்லியல் துறையின் 'மதிப்பீட்டுக் குழு' கருத்துக் கூறியதை அடுத்து,
அதில் திருத்தம் செய்யுமாறு, கீழடி, தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றியத் தொல்லியல் துறை வற்புறுத்தி வந்தது.
அதற்குப் பதிலளித்த திரு அமர்நாத், "மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில், ஏற்புடைய காரணங்களும் இல்லை; தகுந்த நியாயமும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து இந்தியத் தொல்லியல் துறையின் ஐவர் கொண்ட உள்நிலைக் குழு, கீழடிக் களத்திற்கே சென்று மறு ஆய்வு செய்யும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர், ஒன்றிய அரசின் கருத்துப் படி, அறிவித்துள்ளார்.
கொக்கி குமார் ஆட்சியை பிடித்த கதை
கொக்கி குமார் + திரிஷா அணில்களின் கவனத்திற்கு !
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் கொக்கி குமார் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
அடுத்தாக கொக்கி குமாரின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
கொக்கி குமார் - அமித்ஷா சந்திப்பு.*
கொக்கி குமாரின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின் 'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் கொக்கி குமார் கட்சியில் சேர்ந்தார்.
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
கொக்கி குமார் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம் இருந்து.
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
"ராஜினாமா செய்ய வைப்போம்னு மிரட்டுறாங்க” : தவெக மீது திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
minnambalam.com - Kavi : அனிதா ராதாகிருஷ்ணனை போலவே எனக்கும் மிரட்டல் விடுக்கின்றனர் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது திமுக எம்எல்ஏ கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ”எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்கள். கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி 30 கோடி ரூபாய் செலவு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சனி, 4 ஜூலை, 2026
ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர்கள் கொதித்தெழும்புகிறார்கள்!
![]() |
Sharmila Seyyid : இத்தனை ஆண்கள் கேள்வி எழுப்பியபோது கொந்தளித்தபோது றிழா மர்சூக் பதட்டமடையவில்லை. நிதானமாக இருந்தார். ஆனால் ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர் கொதித்தெழும்புகிறார்.
அப்போது , ஸர்மிளா ஸெய்யித்திற்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவள்; முர்தத் என்று பத்வா அளித்தவர். இவள் கொல்லப்படவேண்டியவள் என்றவர்.
இப்போது, பெட்டை நாய்; சமூகத்தை நிர்வாணப்படுத்தியவள் என்ற பத்வாக்களை அளித்திருக்கிறார். நிர்வாணமானால் திரும்பவும் ஆடையை உடுத்திக்கொள்ள முடியும். குண்டு வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றால், போன உயிர்களைத் திரும்ப பெற முடியா.
ஆக மொத்தமாக அவர் பத்வா பெக்டரியை இன்னமும் மூடவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
ஆனால் என் கேள்விகள் அவர் என்னைத் தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தியதைப் பற்றியதோ, தற்போது என்னை நடத்தைக் கொலை செய்வதைப் பற்றியதோ அல்ல.
எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!
ராதா மனோகர் : தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!
இது எப்படி நிகழ்ந்தது என்பது மிக பெரிய ஆய்வுக்கு உரியது.
ஏற்றங்களும் இறக்கங்களும் கணக்கு வழக்கில்லாமல் கலைஞரை புரட்டி போட்ட அளவு வேறெந்த தலைவரையும் புரட்டி போடவில்லை.
இவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்தும் ஏதோவொரு விடயம் கலைஞரின் அத்திவாரமாக நின்றிருக்கிறது.
எந்த புயலிலும் அடித்து கொண்டு போகாத ஒரு உறுதியான பண்பு கலைஞரை காப்பாற்றி கொண்டே வந்திருக்கிறது.
அந்த பண்புதான், இன்று கூட கலைஞர் என்று சொன்னதுமே கண்கலங்கும் தொண்டர்களை கலைஞருக்குக் பெற்று தந்திருக்கிறது.
மனிதர்கள் அடிப்படையில் அன்பானவர்கள்தான்
சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கம் எல்லோருக்கும் உண்டு
எந்தப் பையனும் நீ என்ன உடை உடுக்கவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு வகுப்பெடுக்க மாட்டான்.
![]() |
Sharmila Seyyid : இந்தக் குழந்தைகள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.
இன்னும் பத்தாண்டுகளில் இவர்கள் பதினெட்டு வயதையடைவார்கள்.
இதே உடையில் இன்னும் மகிழ்ச்சியாக உட்கார்ந்து கதைபேசுவார்கள்.
நீச்சலடிப்பார்கள். எந்தப் பையனும் நீ என்ன உடை உடுக்கவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு வகுப்பெடுக்க மாட்டான்.
தொடை தெரிய உடை இருக்கிறதே அப்போ அவள் அந்த மாதிரிப் பெண் என்ற எண்ண ஓட்டம் கூட வராது.
இந்தக் கலாசாரத்தில் ஆசியப் பண்பாட்டிலிருந்து வந்தவர்களுக்குப் பல ஒவ்வாமைகள் இருக்கலாம். இருப்பினும் என் இரு ஆண் பிள்ளைகளும் பெண்களை மதிக்கிறவர்களாக நீச்சலுடையில் கூட அவர்களோடு கண்ணியமாக அருகே அமர்ந்து உண்டு களிக்கும் 'மனிதர்களாக' வளர்வதைக் கண்டு உண்மையில் பெருமிதம் கொள்கிறேன்.
எ.வ.வேலு மருத்துவமனையில் அனுமதி.. விசாரணைக்கு ஆஜராகாமல் சிங்கப்பூர் பறந்தார்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு இன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகாத நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2021 முதல் 2026 வரை நடந்து முடிந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார் எ.வ.வேலு. தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில், சாலை அமைக்காமலேயே அரசின் பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
minnambalam.com - Kavi : கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூரில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய்யை பற்றி அவதூறாக பேசி இருந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் நகர தமிழக வெற்றிக் கழக செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஒரு முன்னாள் அமைச்சர் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இப்படி பேசலாமா என்று கூறி அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெள்ளி, 3 ஜூலை, 2026
தலைமைக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக தொண்டர்கள்
ராதா மனோகர் திமுகவின் உண்மையான ஆதரவாளர்கள் இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்து பல கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கிறார்கள்
இன்னும் சரியாக சொல்லப்போனால் இவை தமிழ்நாட்டு நலன் சார்ந்தவை!
தமிழ்நாட்டு நலனும் திமுக நலனும் வேறு வேறு என்று கருதாத தொண்டர்கள் இவர்கள்.
ஒரு காரசாரமான கருத்து மோதல்கள் நடக்கும் போது பலருக்கும் விருப்பம் இல்லாத விடயங்கள் வெளியே வருவது இயல்புதான்
அதுதான் சரியான ஜனநாயக பொதுவெளியுமாகும்
இப்படி வெளிப்படையாக கருத்து கூறுவோர்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவோர்கள் பெரும்பாலும் தலைமையை குளிர்விக்க வேண்டும் என்ற ஜால்ரா மனநிலை கொண்டவர்கள்தான்.
எல்லா அரசியல் கட்சிகளின் வீழ்ச்சிக்கும் ஜால்ராக்கங்களின் பங்கே பிரதானமாக இருந்தது என்பது வரலாறு.
இதில் கருத்து கூறும் எல்லோரும் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள்தான்
திமுக ஆதரவாளர்கள்தான்!
இன்னும் சரியாக சொல்லப்போனால் இவர்கள் பலரும் நடுநிலைமையாளர்கள் கூட கிடையாது
இவர்கள் திமுக ஆதரவாளர்கள் பெரும்பாலும் தன்னார்வலர்கள்
ஆர்.எஸ் பாரதி : கரூர் பெருந்துயரம்: ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி!
minnambalam.com -Pandeeswari Gurusamy : கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் - தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு - ஆஜராக உத்தரவு
hindutamil.in - செ.ஞானபிரகாஷ் : இது தொடர்பான கொலை முயற்சி வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரிய வில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து, அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு குற்றப்பத்திரிகையை லாஸ்பேட்டை போலீஸார் தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
செந்தில் பாலாஜி Vs விஜய் . போலீஸ் தீவிர ‘வேட்டை’
மின்னம்பலம் ”சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் ஆபரேஷனை செந்தில் பாலாஜி டீம் தொடங்கிச்சு.. தவெக எம்.எல்.ஏக்கள்கிட்ட பேசுச்சு.. ஆனா உளவுத்துறை காதுக்கு போனது ஆபரேஷன் ஸ்டாப்”ன்னு நாமதான் போன ஜூன் 23-ந் தேதியே சொன்னோம்..
அதோட பாலோ அஃப்தான் இந்த கேஸ் ஓபனா வெட்டவெளிச்சமாகிடுச்சு.. இந்த கேஸில இன்னைக்கு வரைக்கும் 9 பேரை அரெஸ்ட் செஞ்சுட்டாங்க.. இவங்க எல்லாமே திமுக மாஜி செந்திலபாலாஜிக்கு வலது இடதுமா இருந்த சோ கால்ட் ‘கரூர் கம்பெனி’ ஆட்கள்தானாம்..
திமுக தோத்தது திமுகவிற்கு தெரியும்.. -ஈழப்போராட்டத்தை காண்பித்துதான் இயக்கங்களை வளர்த்து கொண்டிருந்தோம் - தோழர் மனோஜ்
ராதா மனோகர் : இன்றைய தமிழர்கள் பெரிதும் இனவாதிகள்தான்
இதை கூறினால் பலருக்கும் கோபம் வரும்
நாம்தானே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உலக மானுடவியல் பேசியவர்கள் என்று ஒரு பதில் சொல்வார்கள்.
தமிழர்களிடையே எவ்வளவு மோசமான நோயிருந்திருந்தால்,
இப்படி ஒரு ஸ்ட்ராங்கான மருந்தை முன்னோர்கக்ள் கண்டு பிடித்திருப்பார்கள்,
என்று நாம் பதிலடி கொடுக்கலாம்?
நாம் தமிழர்கள் ரேசிஸ்ட் தான்!
ஆனால் இதுதான் உண்மை .
திராவிட சித்தாந்தம் இனவாதத்திற்கு நேரெதிரான கோட்பாடு
தமிழர்களின் இனவாத சிந்தனைக்கு தீனி போட்டு வளர்த்தது தமிழ் தேசியம் என்ற முகமூடியை போட்டுகொண்டு வந்த வெறுப்பு அரசியல் வியாபாரிகள்தான்.
இன்று இந்த வெறுப்பு அரசியலின் பக்க விளைவுகள் மிக மோசமானது
இவர்களின் முதல் குறி சுயசிந்தனை
தமிழ் தேசியர்களிடம் இது சுத்தமாக இல்லை
இவர்கள் ஒரு வெறுப்பு அரசியல் பஜனையே கோஷ்டிதான்
அடுத்ததாக இந்த தமிழ் அரசியல் வியாபாரிகள் குறிவைத்தது சுயமரியாதை கோட்பாட்டைதான்
திமுகவின் தோல்வி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதி அமைச்சில் இருந்து தூக்கியதில் இருந்துதான் தொடங்கியது
ராதா மனோகர் :திமுகவை அதிகமாக அல்லது மிக மோசமாக விமர்சிக்கும் பலரும் ஏதோவொரு காலத்தில் திமுகவை ஆதரித்தவர்களாகவே இருப்பது வழக்கம்
எம்ஜியாரின் பிரிவினைக்கு முன்பிருந்தே இந்த லிஸ்ட் வளர்ந்தது
விலகி போனவர்கள் ஏதோவொரு சுயநலம் சார்ந்த விடயத்தின் காரணமாகவே விலகி போனார்கள் என்று கூறுவதும் வழக்கம்தான்
அநேகமாக அதுவும் உண்மைதான்.
ஆனாலும் கூட சில சமயங்களில் விலகலுக்கு நியாயமான காரணங்களும் இருந்தது உண்டு
இன்னும் சிலரை திமுகவே கொஞ்சம் தள்ளி வைப்பதுவும் அல்லது ஒதுக்கி வைப்பதுவும் கூட எல்லா கட்சிகளிலும் நடக்கும் அரசியல் வித்தைகள்தான்.
வியாழன், 2 ஜூலை, 2026
உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம்
உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் முழு வீச்சில் நடக்கிறது
குறிப்பாக அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில்தான் இந்த இந்தியா கோ ஹோம் முழக்கம் மையம் கொண்டுள்ளது
இதற்க்கு முழு பொறுப்பையும் வடஇந்தியர்கள் குறிப்பாக சங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்
இந்தியர்கள் உலகின் ஏனைய மனித குழுமங்களை மதிப்பதில்லை
எப்போதும் பிறரை தன்னை விட அல்லது தான் சார்ந்த இனக்குழுமத்தை விட கீழானதாகவே கருதும் இந்த இந்திய பண்பு முழுவதுமாக வெளிப்பட்டு விட்டது
முன்பு சிறிய அளவில் இருக்கும் போது கொஞ்சம் அடக்கி வாசித்த இந்த சங்கித்தனம் இப்போது அதிக அளவில் இருப்பதால் கொஞ்சம் குளிர் விட்டு போய் பொதுவெளியிலேயே தங்களின் பொது இடங்களில் குப்பை போடுதல் மற்றும் சிறுநீர் எச்சில் எக்சிபிஷன்களை அரங்கேற்றுகிறார்கள்.
இஸ்லாமிய தஜிகிஸ்தான் ஹிஜாப் தடை ! பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் banned
95 வீதம் இஸ்லாமிய மக்களை கொண்ட தஜிகிஸ்தான் குடியரசு பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ளது
மேலும் அந்த நாட்டு அதிபர் இமமோலி ராக்மோன் 1560 மசூதிகளை மூட உத்தரவு. அவைகள் படிக்கும் வசதி, கிளினிக், விளையாட்டு கற்கும் இடங்களாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார் .
18 வயதுக்குள்ளான குழந்தைகள் மத பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அறிவிக்க பட்டுள்ளது
இந்த அறிவித்தலை மீறி செயல்படும் கட்டிடங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
அநேகமான சட்டவிரோத மசூதிகள் மக்களை ISIS. பயங்கரவாத இயக்கத்தில் கொண்டு சேர்க்கின்றன என சொல்கிறார் அவர்.


