தமிழ்மிரோர் : யாழ்ப்பாணம், நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு அய்யர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்ததில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் 35 வயதுடைய நிரந்தரப் பூசகருக்கும், நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமித்தம் சென்றிருந்த குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற குருக்கள் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக நயினா தீவு ஆலயங்களுக்குத் தொழில் நிமித்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
செவ்வாய், 10 மார்ச், 2026
நயினா தீவில் ஐயர்கள் இடையே மோதல் : ஒருவர் படுகொலை
காத்திருக்க வைத்து பழி வாங்கிய காங்கிரஸ்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?
daylyseythi : காத்திருக்க வைத்து பழி வாங்கிய காங்கிரஸ்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?
திமுக கூட்டணியில் இருந்து விலகி நம்மோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் வந்து விடும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய், திமுக கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தததில் மிகவும் அதிருப்தி அடைந்தார். காங்கிரசை நம்பி காலத்தை வீணாக்கி விட்டோமோ? நமக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதோ? என்றெல் லாம் கவலைப்பட்டார் விஜய்.
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை விட, விஜய்யின் தற்போதைய பெரும் கவலை 'கூட்டணி' என்பதுதான். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைத் தங்களது கூடாரத்திற்கு இழுத்து வர வேண்டும் என்பதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான். இதற்காக தனது கட்சியின் டாப்-3 நிர்வாகிகளிடம் (முக்கிய ஆலோசகர்கள் மற்றும் டெல்லி வரை செல்வாக்குள்ள புள்ளிகள்) இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் விஜய்.
உண்மையில் விஜய் சங்கீதா இடையில் என்ன பிரச்சனை??
dailyseythi: உண்மையில் விஜய் சங்கீதா இடையில் என்ன பிரச்சனை??
Chronogical Order படிஸ
1. 15, 20 வருடங்களுக்கு முன்புவரை (திருமணத்துக்குப் பின்னரும்) விஜய் சம்பாதிக்கும் பணம் அனைத்துக் கணக்கு வழக்குகளும் அவரின் தந்தை திரு SA சந்திரசேகர் தான் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே எதாவது செலவுக்கு வேண்டும் என்றால் கூட அவரிடம் கேட்க வேண்டிய சூழல். இதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது சங்கீதா.. இதுவே தொடக்கம்.
2. அதன் பின்னர் ஏற்பட்ட சமரசத்தில் (ஆளுக்குப்பாதி) தனியாக குடித்தனம் வந்து, விஜய் சம்பாதிக்கும் பணத்தில் சரிபாதியாய் பிரித்து, தன் வசம் வந்த பாதி பணத்தை அனைத்தையும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யத்தொடங்கியதும் சங்கீதாஸ
3. இதுபோல் 10,15 வருடங்களாய் விஜய் சம்பாதித்த சில கோடிகளில், சங்கீதா செய்திருந்த முதலீடுகளின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 2000 கோடிக்கு மேல்..
ஈரான் மகளிர் கால்பந்து அணியினருக்கு அமெரிக்கா புகலிடம் கொடுக்கும் – டிரம்ப்
மாலைமலர் : “ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் மகளிர் கால்பந்து அணியினர் ஆஸ்திரேலியா சென்றனர்.
கடந்த வாரம் தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது, ஈரான் வீராங்கனைகள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் செயலால் ஈரானிய அரசு ஊடகங்கள், வீராங்கனைகளை “யுத்த காலத் துரோகிகள்” என்று விமர்சித்தன.
அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திங்கள், 9 மார்ச், 2026
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேர்காணல் நடத்தும் விஜய்! நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய சி.பி.ஐ.
நக்கீரன் : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்றார்.
அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
மானாமதுரையில் கைதி உயிரிழப்பு: போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்
hindutamil.in ; சென்னை: மானாமதுரையில் கைதி மரணமடைந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரையில் 2 தொழிலாளர்களை வாளால் வெட்டிய வழக்கில் கைதாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தார். இந்த விவகாரத்துக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்! - நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!
தினமணி : பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக முதல் நாளில் தாக்கலாக உள்ளது.
ஏப். 2 வரை நடைபெறும் இந்த அமா்வில் மேற்காசிய போா் நிலவரம், ஈரான் மீதான மத்திய அரசின் நிலைப்பாடு, அமெரிக்க அனுமதியின்பேரில் ரஷிய எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல்கட்ட அமா்வில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன.
ஈரான் ஒரு இஸ்லாமிய நாடாகவோ மதப்பற்றுள்ள நாடாகவோ முன்பு இருக்கவில்லை !
Thesam Jeyabalan : ஈரான் ஒரு இஸ்லாமிய நாடாகவோ மதப்பற்றுள்ள நாடாகவோ இருக்கவில்லை ! பிற்காலத்தில் மத அடிப்படைவாத நாடாக மாற்றப்பட்டது !
கொமெய்னி, தலிபான், ஹமாஸ், அல்கைதா, ஐஎஸ்ஐஎஸ் என்று மத அடிப்படைவாதிகளை உருவாக்கியது மேற்கின் புலனாய்வு உலகமே !
தமிழர்கள் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தியது போல் இஸ்லாமியர்கள் அராபிய மொழியை பரப்ப முயல்கின்றனர் !
சர்வதேச விவகார ஆய்வாளர், சமூக செயற்பாட்டளர் ராதா மனோகருடன் ஈரானின் வரலாறு தொடர்பான உரையாடல்
ஞாயிறு, 8 மார்ச், 2026
ரணில் விக்கிரமசிங்க : இலங்கை கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்! - அரசுக்கு அழுத்தம்
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சனி, 7 மார்ச், 2026
ஆண்டவரே மக்களே என்னை மன்னித்து கொள்ளுங்கள் - நடிகர் விஜய்
நடிகர் விஜய் : இந்த நிமிடம் வரை திரைப்படங்களில் என்னை ரசித்து பின்பு எனது அரசியலையும் ஆதரித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எனது அன்பை தெரிவித்து கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் மேலாக உங்களிடம் மன்னிப்பு கேட்கும் மனநிலையில்தான் நான் உள்ளேன் என்பதை முதலில் தெரிவினது விடுகிறேன்.
திரையில் எவ்வளவு வெற்றிகரமான ஒரு நடிகனாக என்னால் உயர முடிந்தது என்பது எல்லோரும் அறிந்ததுதான்
ஆனால் அரசியலில் என்னால் கொஞ்சம் கூட உயர முடியாது என்பதை காலம் கடந்து நான் இப்போது உணர்ந்துள்ளேன்.
அரசியலுக்கும் திரைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது
இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளாதது எனது தவறுதான்.
இதற்காக யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.
என்னை பார்க்க வந்து உயிரிழந்த அந்த 41 மனிதர்களுக்கும் இனி எந்த காலத்திலும் என்னால் எந்த பிராயச்சித்தமும் செய்து விடமுடியாது
இவர்களின் ஆன்மா என்னை இனி ஒரு போதும் நிம்மதியாக தூங்க விடாது
எல்லாமே ஒரு விளையாட்டு போல கருதி இருந்தேன்
சத்தியாயமாக் சொல்கிறேன் இப்படி எல்லாம் ஆகும் என்று முன்பே உணர்ந்திருந்தால் இந்த விளையாட்டில் நான் நிச்சயமாக இறங்கி இருக்க மாட்டேன்
தெரிந்தோ தெரியாமலோ என்னை உசுப்பேற்றியவர்களின் ஆலோசனைகள் இன்று என்னை மீளவே முடியாத பாவக்கிடங்கில் தள்ளிவிட்டது!
நடிகர் விஜய் மனைவி சங்கீதாவுக்கு எதுவும் கொடுக்காமலே கழற்றி விடப்பார்க்கிறார்? அது சாத்தியமா?
![]() |
tamil.oneindia.com ; விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால்.. வீட்டிலேயே அனுமதி இல்லை என்றார் விஜய்.. சங்கீதா குற்றச்சாட்டு!
தன்னிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யின் வீட்டில் வசிக்க சங்கீதா நீதிமன்றத்தை நாடியுள்ள சூழலில், நீலாங்கரை வீட்டில் தனக்கும் சரி பாதி பங்கு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
கடந்த வாரம் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தவெக தலைவர் விஜய் நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன்பின் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய் நடிகர் திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே டிசைனில் ஆடை அணிந்து ஒன்றாக தம்பதியை வாழ்த்தினர்.
திமுகவுக்கு தூதுவிட்ட செங்கோட்டையன் - பிடி கொடுக்காத ஸ்டாலின் .. தவேக வில் மரியாதையை இல்லயாம்
![]() |
tamil.asianetnews.com : பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!
விஜயியிடம், தான் எதிர்பார்த்த அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை உணர்ந்த செங்கோட்டையன், இப்போது தனது அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கிவிட்டார்.
சென்னையில் பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில், செங்கோட்டையன் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், மேடை நாகரிகம் கூட இல்லாமல் அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "அரசியல் அரிச்சுவடியே தெரியாதவர்கள் எல்லாம் அண்ணனை அவமானப்படுத்துவதா?" என கொங்கு மண்டல ஆதரவாளர்கள் இப்போதே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.
பல்லாவரத்தில் வடமாநில சிறுமி கல்குட்டையில் சடலமாக மீட்பு... விசாரணையில் தெரியவந்தது என்ன..
news18-tamil : காணாமல்போன வடமாநில சிறுமி மர்மமான முறையில் கற்குட்டையில் அழுகிய நிலையில், சடலமாக மிதந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அருகே காணாமல்போன வடமாநில சிறுமி, அழுகிய நிலையில் கற்குட்டையில் சடலமாக மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமிக்கு நேர்ந்தது என்ன? போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என்ன?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 41 வயதான புள்ளுதாஸ். இவரது மனைவி ரிங்கு தேவி. இந்த தம்பதி கடந்த 15 வருடங்களாக பம்மல், நாகல்கேணி ஆதாம் நகர் பகுதியில் 15 வயது மகள் அனிசா உள்ளிட்ட நான்கு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.
சென்னையில் களமிறங்கும் விசிக: விஜய்க்கு எதிராக ஷா நவாஸை நிறுத்தவும் பரிசீலனை
hindutamil.in - கோ.யுவராஜ்: தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அந்தத் தொகுதியை தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறது விசிக. தொகுதி தங்களுக்குக் கிடைத்தால் ஆளூர் ஷா நவாஸை அங்கு நிறுத்தும் திட்டத்தில் அந்தக் கட்சி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 இடங்களை வென்றது. தற்போது அந்தக் கட்சி மாநிலக் கட்சி அங்கீகாரத்துடன் தேர்தல் களத்துக்கு வருவதால் இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை விரும்பியது. அந்தக் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், புதிய கட்சிகளின் வரவைக் காரணம் காட்டி விசிக-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
வெள்ளி, 6 மார்ச், 2026
ஐஆர்ஐஎஸ் புஷெர்: இலங்கை அருகே இரானின் மற்றொரு போர்க்கப்பல் - என்ன நடக்கிறது?
![]() |
bbc.com - கெல்லி என்ஜி மற்றும் பிபிசி சிங்கள சேவை : இலங்கை தனது கடற்கரைப் பகுதியில் இரானிய கடற்படைக் கப்பல் ஒன்றைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானிய போர்க்கப்பல் ஒன்று அதே கடல் பகுதியில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டு, குறைந்தது 87 பேர் உயிரிழந்ததற்கு ஒரு நாள் கழித்து, இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
போரை நிறுத்த அமெரிக்காவுக்கு தூதுவிட்ட ஈரான் உளவுத்துறை?
hirunews.lk : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இப்போதைக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் உளவுத்துறை அமைச்சை சேர்ந்த அதிகாரிகள், ஒரு மூன்றாவது நாட்டின் வழியாக அமெரிக்க மத்திய புலனாய்வு முகவரகததுக்கு (CIA) செய்தி அனுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராகிறார்
minnambalam.com - Mathi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி (Tamil Nadu R.N.Ravi) மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆளுநராக, கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்தார்.
ஈரானின் 2ஆவது கப்பல் திருகோணமலைக்கு செல்கிறது! மனிதநேய நடவடிக்கை!
தமிழ் மிரர் : ஈரானின் 2ஆவது கப்பல் திருகோணமலைக்கு செல்கிறது! பாதுகாப்பு ஏற்பாடு – ஜனாதிபதி அறிவிப்பு
-208 பணியாளர்கள் இலங்கை ஜனாதிபதியால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பல் தொடர்பில் மனிதநேய அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (5) (இரவு) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஈரானுக்கு சொந்தமான “Iris Bushehr” எனப்படும் கப்பலின் ஒரு என்ஜின் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து,
திமுக மீண்டும் வெற்றி பெற்று விடும் என்று ஆர் எஸ் எஸ் பயப்படுகிறது - கட்டுரை
சோழன் ஸ்டாலின் எவ்வளவு டேஞ்சரான அரசியல்வாதி என்று நாம் உணர்வில்லை
எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது மீண்டும் திமுக ஜெயித்து விடுமோ என்று...
திமுகவின்
நுண் அரசியலின்
தேர்தல் வியூகத்தின் வீரியத்தை நாம் உணர வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன்...
தேமுதிகவை திமுக சும்மா ஆதாயம் இல்லாமல் சேர்க்கவில்லை
ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக 350 (பூத்) வாக்குச்சாவடிகள் வரை இருக்கலாம்.
ஒரு பூத்துக்கு சராசரியாக 1000 - 1500 வாக்காளர்கள் உள்ளனர்...
தமிழகம் முழுவதும் பரவலாக 100சதவீதம் பூத் கமிட்டி போட்டது இரண்டே கட்சி திமுக அதிமுக இரண்டு மட்டுமே,
அடுத்து 90 சதவீதம் பூத் கமிட்டி போட்டது பாஜக, தேமுதிக இரு கட்சிகள்தான்
பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தால் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட்டையும், "பென்" நிறுவனம் எடுத்து கொடுத்த கள நிலவர கணிப்பையும் பார்த்து தான் தேமுதிகவை ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்தார்...
வியாழன், 5 மார்ச், 2026
'ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக
![]() |
விகடன் : ராகுல் பனையூருக்கு வரணுமா?' - கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக
அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர்.
இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நாம் கொளுத்திப் போட்ட வெடிகுண்டு எல்லா கூட்டணியிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது' என விஜய் பெருமிதம் பேசியிருந்தார்.
TVK Vijay - தவெக விஜய்
Iris dena மூழ்கடிப்பு! இந்திய விருந்தினராக வந்த கப்பலை பாதுகாக்க தவறிய இந்தியா
![]() |
![]() |
![]() |
Sinnakuddy Thasan : ஐரிஸ் டேனா மூழ்கடிப்பு: இந்தியப் பெருங்கடலை உலுக்கிய சம்பவம்
மார்ச் 4, 2026 அன்று அதிகாலை வேளை. இந்தியப் பெருங்கடலின் ஆழமான நீல அலைகளுக்கு மேலே 'ஐரிஸ் டேனா' (Iris Dana) கப்பல், சர்வதேசக் கடற்பரப்பில் தான் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதிப் பயணம் செய்து கொண்டிருந்தது. ஆனால், அந்த அமைதிக்கு அடியில் ஒரு "அமைதியான மரணம்" (Quiet Death) பதுங்கியிருந்தது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு சாதாரணப் பயணமாகத் தொடங்கிய அந்த விடியல், சில நிமிடங்களிலேயே ஒரு சர்வதேசப் பதற்றமாகவும், நவீன கடற்போர் வரலாற்றின் ஒரு கறைபடிந்த அத்தியாயமாகவும் மாறியது.
2. "அமைதியான மரணம்":
நவீன நீர்மூழ்கிக் கப்பல் போரின் கோர முகம்
அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஐரிஸ் டேனாவைக் குறிவைத்து நடத்திய இந்தத் தாக்குதல், வெறும் இராணுவ நடவடிக்கை அல்ல; அது ஒரு தொழில்நுட்ப எச்சரிக்கை. இத்தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன மார்க் 48 (Mark 48) ரக கனரக டார்பிடோ பயன்படுத்தப்பட்டது.
ஈரானை தாக்க இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா...
tamil.oneindia.com - Halley Karthik : டெல்லி: ஈரான் கப்பல் மீது, இன்று அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்ததாக வெளியான தகவல்களை, இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர், தீவிர வலதுசாரி ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் (OAN) தொலைக்காட்சியில் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ராகுலை சமாதானப்படுத்திய கார்கே - ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்!
தினமலர் : சென்னை: 'த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாம்' என கூறி, காங்., - எம்.பி., ராகுலை, அக்கட்சியின் தலைவர் கார்கே சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், 2016ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்ததால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்தது.
ஈரான் . உச்சத்தில் இருந்த ஒரு நாடு மதவாதிகளால் விழுந்த கதை
Chowkidar Baburaj Babu : "பெர்சியா" (இன்றைய ஈரான்)! இது ஒரு காலத்தில் நம் நாட்டின் தேநீர் கடைகளிலும் வீடுகளிலும் ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் விவாதிக்கப்பட்ட ஒரு பெயர்.
இன்றைய பாலைவனங்களின் அற்புதமான நகரங்கள் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கடல் கடந்து வந்த ஒரு தலைமுறையின் வியர்வை மற்றும் கனவுகள் விழுந்த நிலம் அது.
1950 களில் இருந்து 70 களின் பிற்பகுதி வரை ஈரானை ஆண்ட ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சிக் காலத்தில், அந்த நாடு உலகத்தின் முன் ஒரு கனவு போன்ற இடமாக இருந்தது.
மேற்கத்திய நாடுகளைக் கூட விஞ்சிய அதன் நவீனத்துவமும், எண்ணெய் பணத்திலிருந்து பாயும் செல்வமும் பெர்சியாவை இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான பூமியாக மாற்றியது.






