திங்கள், 4 டிசம்பர், 2023

சென்னை பெருங்குடி.. புரட்டிப் போட்ட 50 செ.மீ. மழை- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்!

tamil.oneindia.com -  Mathivanan Maran  :  சென்னை: சென்னை பெருங்குடியில் 50 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது.
இன்றும் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் விலகி இருந்தாலும்,
 சில மணிநேரங்கள் மழை நீடிக்கும் எனவும் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Michaung: Chennai Perungudi receives 50 CM Heavy Rain
சென்னையில் இன்று காலை 8.30 மணிவரையில் பெரும்பாலான பகுதிகளி 21 செ.மீ முதல் அதிகபட்சமாக 29 செ.மீ வரை மழை பதிவாகி இருந்தது.

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்!

 மாலை மலர் :விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள்.
ஆசிரியர் அடித்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொருளாதாரத் துறை ஆசிரியர் கடற்கரை (வயது 12). இவர் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கும்படி கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு கமல்நாத்தின் பிடிவாதம் மட்டும் காரணம் அல்ல

May be an image of 1 person and text that says 'JUSTIN செய்திகள் சித்தாந்தப் போர் தொடரும்! "மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் முடிவுகளை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். சித்தாந்தப் போர் தொடரும். தெலங்கானா மக்களுக்கு மிகவும் நன்றி. நாங்கள் கூறிய வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்." -ராகுல் காந்தி எம்.பி! Kalaignar News R www.kalaignarseithigal.com 03.12.2023'

Kandasamy Mariyappan :  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு கமல்நாத்தின் பிடிவாதமே காரணம் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.!
நான் மாறுபடுகின்றேன்.!
கமல்நாத், அசோக் போன்றவர்கள் RSS/ காங்கிரஸ்வாதிகள்.! அது மட்டுமே நமது கவலை.!
ஆனால்.,
மத்தியபிரதேசத்தில் அகிலேஷ் ஆட்சியமைக்கப் போவதில்லை.!
இன்றைய சூழலில், அங்கே போட்டியிடுவதால் அகிலேஷ் சாதிக்கப் போவது ஏதுமில்லை.!
2024ல் INDIA கூட்டணிக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்ற சிந்தனையே அகிலேஷுக்கு இருந்திருக்க வேண்டும்.!
அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள எல்லையோர மாவட்டங்களில் திமுக போட்டியிட்டால் 10-15% வாக்குகளை பெற முடியும். அதனை வைத்து தமிழ்நாட்டில் உங்களுக்கு பங்கு வேண்டும் என்றால், அந்த மாநிலங்களில் எங்களுக்கு 10 சீட் கொடுங்கள் என்று காங்கிரஸ், கம்யூனிஸ கட்சிகளிடம் பேரம் பேசலாம்.!
அதனால் திமுகவிற்கு எந்த பலனும் இல்லை.!

சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்- சென்னை புறநகர் அனைத்து ரெயில்களும் நிறுத்தம்

மாலை மலர் :  மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

திண்டுக்கல் கைது... திக் திக் CBI க்கு மாறுகிறதா ED அதிகாரி கைது வழக்கு?

Minnambalam - Selvam  :  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது கோட்டூர்புரத்தில் உல்ள இல்லத்துக்கே சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 2-ஆம் தேதி காலை நேரில் சந்தித்தார்.
சமீப நாட்களாக துரைமுருகன் அமைச்சராக இருக்கும் நீர்வளத்துறையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் வேட்டை தீவிரமாக இருக்கிறது. நீர் வளத் துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவை கடந்த நவம்பர் 20, 21 தேதிகளில் அழைத்து விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
மேலும் இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் கொடுக்க, அதற்கு நீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே அவ்வப்போது சில மன வருத்தங்கள் வருவதும் மறைவதும் தொடர்ந்து நடக்கும் சங்கதி தான். ஏற்கனவே இ.டி. ரெய்டு குறித்து முதல்வரே அமைச்சர் துரைமுருகனுக்கு போன் செய்து எச்சரித்திருந்தார். இதற்கிடையே திண்டுக்கல்லில் இ.டி. அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

1,37,000 தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு .. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மதுரை நீதிபதி


ராதா மனோகர்
  :  ஸ்ரீமா -  சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீமா இந்திரா காந்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா 6 இலட்சம் பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி இருக்கவேண்டும்
ஆனால் இந்தியா இதுவரை 4.6 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கி உள்ளது ’
நன்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
33 ஆண்டுகளாக அகதிகளாக இருந்து இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 70 வயது முதியவருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
"இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு லட்சம் பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டிய  கடமை உள்ளது
ஆனால்  இன்றுவரை 4,61,639 பேர்களுக்கு மட்டுமே  இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது"!

அண்மையில் மதுரையில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதுபற்றி குறிப்பிடுகையில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51வது பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் கையாள்வதில் உடன்படிக்கைக் கடமைகளுக்கு மதிப்பளிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்
இதன் படி இன்னும் 1,37,000 பேர்களுக்கு இந்தியா குடியுரிமையை வழங்க வேண்டும்

தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் பெரும் பங்களித்த சந்திரசேகர ராவை மக்கள் ஒதுக்கியது ஏன்

 மாலை மலர்  :   தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

பில் கேட்ஸ் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

 hirunews.lk : பில் கேட்ஸ் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
உலகின் முன்னணி செல்வந்தர்களுள் ஒருவரும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனருமான பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், விவசாய நவீனமயமாக்கல், தரவு அமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு தமது ஆதரவை வழங்குவதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தாழமுக்கம் வலுவடைந்து யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது!

 hirunews.lk  : தாழமுக்கம் வலுவடைந்து யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது!
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இது வடக்கு கடற்கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு நகர்கிறது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம்.. சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை!

 tamil.oneindia.com - Vigneshkumar :சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் முக்கிய அலர்ட்டை வெளியிட்டுள்ளது.
Cyclone Michaung Very heavy rain predicted in Chennai and neighbor districts chennai meteorological dept
வானிலை மையம்: அதன்படி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (02-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03-12-2023) காலை 0530 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்று, 1130 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் - ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக- LIVE

மாலைமலர் :     நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.  தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

Counting Day For 2023 State Elections Live | India Today News Live

2023 Live | Assembly Polls Results Updates | Congress | BJP | KCR | BRS

Election Result 2023 LIVE | MP Results | Rajasthan Results | Telangana Results | Chhattisgarh Result

 

LIVE UPDATES : 5 State Election Results 2023 | நாடே எதிர்பார்க்கும் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்

வியூகம் வகுத்த விஜிலென்ஸ் இயக்குனர் அபய்குமார்... அமலாக்கத் துறைக்கு ’அபாய’ குமார்

minnambalam.com - Aara :  மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் (விஜிலென்ஸ்) கையும் களவுமாக பிடித்து கைது செய்தது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகாலமாக அமலாக்கத் துறையினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் மாநில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடுநடுங்கிபோய் இருந்தனர்,  ஆனால் இப்போது திண்டுக்கல் விஜிலென்ஸ் போலீஸார் அமலாக்கத்துறையை அலறவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்துவரும் டாக்டர் சுரேஷ்பாபு மீது 2018 இல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரெய்டு செய்து வழக்கு பதிவு செய்தனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்,

மிக்ஜம் புயல்: தமிழ்நாட்டில் எப்போது, எங்கு கரையைக் கடக்கும்? எச்சரிக்கை?

 BBC News தமிழ்  : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் புகுதியால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
அடுத்துவரும் நாட்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் – விகாரையிலிருந்த 13 வயதான பிக்குவை காணவில்லை !

இலக்கியா இன்போ : இலங்கை -புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராம விகாரையில் உள்ள பயிற்சி பெற்ற 13 வயதான பிக்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போனவர் அமரகெதர தேவசிறி என்ற 13 வயதுடைய பிக்கு மாணவராவார்.
இவர் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி கோவின்ன ரட்டியால பிரிவேனாவில் கல்வி கற்க சென்ற நிலையில் விகாரைக்கு திரும்பவில்லை என விகாராதிபதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சனி, 2 டிசம்பர், 2023

அமீர் பணத்தை சிவகுமார் குடும்பம் ஏமாற்றியுள்ளது- கஞ்சா கருப்பு ஆவேசம்

அமீர் பணத்தை சிவகுமார் குடும்பம் ஏமாற்றியுள்ளது- கஞ்சா கருப்பு ஆவேசம்

மாலை மலர் :  கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பருத்தி வீரன்'. இந்த படத்தின் மூலம் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமானார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பருத்தி வீரன்' திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது.
இப்படம் தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை குவித்தது. 'பருத்தி வீரன்' படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இப்படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

மணல் குவாரி, ஹவாலா, பி.எம். ஆபீஸ்... -கைதான ED அதிகாரி பற்றி FIR இல் புதிய தகவல்கள்!

minnambalam.com :  -Manjula : லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தற்போது திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் அவர் குறித்த மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று (டிசம்பர் 1) கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் அங்கித் திவாரி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கை வடபகுதி குற்ற சம்பவங்கள் ஒரு வரலாற்று பார்வை


 ராதா மனோகர்
: இலங்கை வடபகுதியில் அன்றாடம் நடைபெறும் குற்றவியல் சம்பவங்களின் தொடர் செய்திகளை பார்க்கும் போது  சற்று ஆழமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது.
அதாவது தமிழர்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை மோசடி குற்றங்கள் இவை.
இவற்றிற்கு யார் மீதும் பழிபோட்டு தப்பி விடமுடியாது என்றெண்ணுகிறேன்.
தவறு எங்கே இருக்கிறது?
எப்போதும் எல்லா தவறுகளுக்கும் பிறர் மீது பழி போட்டு நாங்கள் நல்லவர்கள் நாங்கள் அப்பாவிகள்
நாங்கள்  உண்மையில் விக்டிம்கள் அதாவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற கூற்று பெரியதாக உதவாது என்பதைதான் சுமார் நூற்றாண்டுக்கு முன்பு வெளியான ஈழகேசரி பத்திரிகை சுட்டி காட்டுகிறது என்று கருதுகிறேன்.
உண்மை கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.
மக்களின் சமூக உளவியலில் எங்கே ஒரு நோய் இருக்கிறது?
அந்த நோயின் ஊற்று எது?
போர்களை புகழப்படும் புராணங்களை போற்றி அவற்றையே ஒரு ரோல் மாடல் மாதிரி கொள்ளவேண்டும் என்று சதா போதிக்கும் மதவாதிகளா?

20 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.. கிண்டல் செய்து பறக்கும் மீம்ஸ்கள்

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை  மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ள நிலையில், Corrupted_ED என்ற டேக் இணையத்தில் டிரெண்ட் ஆகிறது. திமுக ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையை கலாய்த்து மீம்களை தெறிக்கவிடுகிறார்கள்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கேட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர டாக்டர் சுரேஷ் பாபு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

வவுனியாவில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை!

 தேசம் நெட்  : வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் வவுனியா பொதுய் வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01.) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கை எச்.ஐ.வி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது.

அடுத்த குறி சென்னை அமலாக்கத்துறை; அதிரடியாக இறங்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை

Next stop is Chennai Enforcement Directorate; Tamil Nadu anti-bribery department

nakkeeran : திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால், மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்


ராதா மனோகர்
: திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால்  அதில்  எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும்  இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது  ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு  தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம்   ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று    ஆர் எம் வீரப்பனோ  அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும்  செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால்   ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது  பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.