minnambalam.com - Kavi : திமுக இளைஞர் அணி மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாக்களர்களுக்கு நன்றி
1.நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், தலைவர் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
திமுக தலைவருக்கு நன்றி
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 23 மே, 2026
எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை - திமுக இளைஞர் அணி கூட்டத்தில் வன்மையான கண்டனத் தீர்மானம்!
நிதியமைச்சர் மரிய வில்சன் கையில் ஆயுதங்களோடு
புகச்சோவ் புகச்சோவ் : தேர்தலுக்கு முன்பே தற்போதைய தற்குறி நிதியமைச்சன் மரிய வில்சன்
கையில் ஆயுதங்களோடு ஒரு குடும்பத்தை வீடுபுகுந்து தாக்குகிற வீடியோ ஊடகங்கள் முழுக்க உலவுகிறது.
ஆனாலும்
அவனை கைதுபண்ணல
அவன்மீது போலீஸ் வழக்குபதியல
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கல
அவன் நிதியமைச்சரா பதிவியேற்கிறான்
தேர்தலாணையம் அவனை தகுதி நீக்கம் செய்யல...
நூற்றியெட்டு தவெக எம்எல்ஏக்களோட அஃபிடவிட்டும் தவறானது
இதில் பன்னிரண்டுபேர் கிரிமினல் குற்றவழக்குள்ளவர்கள்
ஒன்பதுபேர் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்தவர்கள்.
வெள்ளி, 22 மே, 2026
அபோர்ஷன் கிங் அனிருத் கலாநிதி மாறனின் காவியா மீது கண் வைக்கிறான் - சந்தியா கிருஷ்னன் அதிரடி
![]() |
![]() |
Sandhiya Krishnan : அனிரூத் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக என்னை லூசு, பைத்தியம் என்று கூறி என் வாழ்க்கை அழித்துள்ளனர் திமுகவினர். தொடர்ந்து 15 வருடத்திற்கு மேலாக சன் நெட்வொர்க் என் கதைகளை தான் சினிமா துறையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட எனக்கு எந்த உதவியும் இல்லை. நான் இன்னும் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்வதற்கு அனிரூத் மட்டுமே காரணம். ஏனா 10 வருடத்திற்கு மேலாக கிழவன்களை திருமணம் செய்து கொள்ள சொல்லியும், தொடர்ந்து போன் நம்பர் டிரேஸ் செய்தும் பல பிரச்சினைகள் ஏற்படுத்தி என் வாழ்க்கையை பாழாக்கியவன் அனிரூத். அனிரூத் மட்டும் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்; நான் பிச்சைகாரியாக வாழ வேண்டுமா? என்ன அநியாயம் இல்லையா?? அதுவும் SC, vanniyar ஜாதியை தொடர்பு படுத்தி அசிங்க படுத்தி இருக்கிறான் அனிரூத்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் ”Cockroach Janta Party”.. இந்தியாவிலும் Gen Z கிளர்ச்சிக்கு
minnambalam.com - Mathi : மத்தியில் ஆளும் பாஜக (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது “Cockroach Janta Party”.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 15-ந் தேதியன்று வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த், வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” (Cockroaches) மற்றும் “சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என்று ஒப்பிட்டுப் பேசியதாக விமர்சனம் எழுந்தது.
ஆனால் போலிப் பட்டப் படிப்புகளைக் கொண்டு முறைகேடு செய்பவர்களையே தாம் அவ்வாறு விமர்சித்ததாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் தந்தார்.
பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்திய விஜய்! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
hindutamil.in ; சென்னை: கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து திமுக, அதிமுக, தவெக வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளன.
கடந்த ஏப்.21-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பேசிய விஜய், தவெகவுக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கை செலுத்தியுள்ளார். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக செய்தி வெளியானது.
வியாழன், 21 மே, 2026
என் இனிய பொன் நிலாவே பாட்டிற்கு இளையராஜா உரிமை கோர முடியாது; இளையராஜாவின் மனு தள்ளுபடி
தினமலர் : ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் தொடர்பான வழக்கில், காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது'' எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
‛என் இனிய பொன் நிலாவே' பாடல், பதிப்புரிமை தொடர்பாக இளையராஜா டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மே 21) நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விஜய் அமைச்சரவையில் புதிதாக அமைச்சராகும் 23 பேர் பட்டியல்
மாலைமலர் : தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 23 பேர் அமைச்சராக இன்று பதவியேற்கிறார்கள்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. இந்நிகழ்வில், முதலில் வந்தே மாதரமும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்ட பின்னரே, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதன் பின்னர், புதிய அமைச்சர்களாக ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேரும் பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பழம்பெரும் நடிகை .விஜயகுமாரி : திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு என்ன ஆகுமோ என்ற கவலை
Rebel Ravi : பிரபல பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தின் தற்போதைய புதிய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் ஆட்சி குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் வெற்றியை ஒரு அதிர்ஷ்டமாகப் பார்க்கும் அவர், அவரது தற்போதைய ஆட்சி ‘குருவி தலையில் பனங்காய்’ இருப்பது போல் உள்ளதாகவும், அரசியலில் பயணிப்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ஏற்கனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள் தான் என்றும், புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திமுகவைத் தனிமைப்படுத்தும் fast track அரசியல் நடந்துகொண்டிருக்கிறது.
Amudhan R P : திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.
சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.
இதற்கான எதிர்வினை தான் தோழமைக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதென்பது. திமுக மீண்டுவரக்கூடாது. மக்கள் மத்தியில் விஜய் தடுமாறுவது போன்ற செய்தி போகக்கூடாது என்பது தான் திட்டம். இது ஒரு பெர்ஷப்சன் வார் (perception war). நிஜத்தை விட தோற்றங்கள் தான் சக்தி மிக்கவை. பங்கு சந்தை போல, யார் மேலே, யார் கீழே என்கிற விளையாட்டு காட்சிப்பொருளாக நடக்கிறது.
இப்போதாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டியது, இங்கு நடப்பது நீங்கள் வாக்களித்தது போல, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. அது வெறும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கற்கள்.
பி டி ஆர்களை திமுகவே தோற்கடித்தது அதன் விளைவுதான் தவேகவின் வெற்றி
Aravindan Kannaiyan : 2026 தமிழகத் தேர்தல் - கேட்கப்பட வேண்டிய கேள்விகள்
விஜயின் தேர்தல் வெற்றியை சமீபத்திய, நான் நேரில் அனுபவித்த, தேர்தல் அதிர்வுகளுடன் ஒப்பிட வேண்டுமென்றால் 2016-இல் டிரம்ப் ஜெயித்ததோடு ஒப்பிடலாம். இது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டின் படியான ஒப்பீடு தான், வேறு வகைகளிலல்ல. அந்த 2016 நவம்பர் அதிகாலையில் அமெரிக்காவும் உலகமும் அதிர்ந்தன என்றால் மிகையில்லை. ஜனநாயக கட்சியினர் பலர் வெளிப்படையாகவே அழுதனர், அதிர்ச்சியில் உறைந்து போயினர் என்றும் சொல்லலாம் ஆனால் கூடவே பலர் “நாம் நம் வாக்கு வங்கிகளை இழந்தோம், ஏன் உழைக்கும் வர்க்கம் நம்மை கைவிட்டதென்று ஆராய வேண்டும்” என்றும் பேசினர்.
1967-இல் காமராஜரே தோற்ற போது கண்ணதாசன் “அறம் பாடி அழித்து விடவா விருதுநகரை” என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இன்று கொளத்தூரில் ஒரு முதல்வரே தோற்ற அதிர்ச்சியில் இருந்து திமுக-வினர் பலர் மீளவேயில்லை, புரிந்துக் கொள்ளக் கூடியது தான். திமுக பல தோல்விகளை சந்தித்திருக்கிறது என்றாலும் இது மிக மிக பலமான அடி, கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய அடி.
திமுகவின் அதிகார நாளேடாகவே மாறிவிட்ட தி இந்து-வே தேர்தல் புள்ளி விவரங்களை தொகுத்தக் கட்டுரையில், “1967 முதல் மாநிலத்தில் கோலோச்சிய திராவிட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியலை மாற்றுகின்ற தேர்தலாக இது இருக்கக் கூடும்” என்று சொன்னது.
உட்கட்சி மோதல்களால் சிதைந்து கொண்டிருக்கும் அதிமுக .. திரு செம்மலையின் கவலை
![]() |
Giri Sundar : செம்மலை அஇஅதிமுகவிலிருந்து விலகும் முன் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்திவிட்டுத்தான் விலகியிருக்கிறார்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மூத்த தலைவர்கள் முக்கிய நிர்வாகிகளிடம் இல்லை.அதிமுக தலைவர்கள் மூத்த நிர்வாகிகளிடம் இருக்கும் ஈகோ கட்சியின் வளர்ச்சியை வேகத்தடை போல் தடுக்கிறது.
தன்னுடன் சக அமைச்சரவையில் அமைச்சராக பயணித்த ஒருவரை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது இயக்கத்தின் தலைமையாகவோ ஏற்றுக்கொள்ளும் எந்த எண்ணமும் இவர்களிடத்தில் இல்லை.
தங்கள் மாவட்டங்களில் மற்றும் தங்களது மாவட்டங்களை கடந்தும் தாங்கள் கட்சியில் செய்யும் குறுநில மன்னர் ஆட்சியை கண்டும் காணாது இருக்க தங்கள் விருப்பம் போல் செயல்பட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பொதுச்செயலாளரே இவர்களுக்கு தேவைப்பட்டார்.
அதற்காகவே இவர்கள் எடப்பாடியாரை முன்னிறுத்தினார்கள்.ஆனால் அவரோ தொண்டர்கள் விரும்பும்
புதன், 20 மே, 2026
தமிழர்கள் இவ்வளவு முட்டாள்களாக மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!
![]() |
Swaminathan Poornachandran : எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு
hindutamil.in -மோகன் கணபதி : இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டம்) வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைகிறது
தினமலர் : புதுடில்லி; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இணைவர். நாளை அவர்கள் பதவியேற்கின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைகிறது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்து உள்ளது. அக்கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் உண்டு என்று கூறப்பட்டு வந்த நிலையில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்து வந்தன.
தவேகவின் கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....
![]() |
Dr.M.Wasim Raja : தோண்டத் தோண்ட கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....
அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு (4):
ஆதவ் அர்ஜுனாவிற்கு திலகவதி ஐபிஎஸ் (முன்னாள்) அவர்கள் பெரியம்மா முறை வேண்டுமாம். போலிஸும், குற்றவாளியும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மிகவும் பொருத்தமான முறையில் பொதுப் பணித்துறையின் கமிசன் அமைச்சராக்கப்பட்டுள்ளது அபாயகரமானது.
செவ்வாய், 19 மே, 2026
ராமநாதபுரம் ராஜா சேதுபதியை 15,692 தோற்கடித்த குதிரை வண்டி தங்கப்பன் திமுக - 24,302
![]() |
![]() |
Dr.M.Wasim Raja : விஜய்யின் கார் ஓட்டுனர் மகனை எம்எல்ஏ ஆக்குனதை பக்கம் பக்கமாக பெருமை பேசிட்டு திரியறாங்க...
இராமநாதபுரம் தேர்தல் வரலாறு:
மன்னரை வென்ற குதிரை வண்டி ஓட்டுநர்!
இன்று திமுக சார்பாகப் போட்டியிட வாய்ப்புக் கேட்கும் அறிவிப்பு வந்தால், ஒரு தொகுதிக்கு 1,000 பேர் வரை மனு செய்வார்கள். ஆனால்,
1967-ல் நடந்த மெட்ராஸ் மாநில சட்டமன்றத் தேர்தலில்
திமுகவிற்கு இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பாளரே கிடைக்கவில்லை என்று சொன்னால் அதுதான் நிஜம்.
காரணம், அங்கு
இராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் இருந்த இராமநாதபுரம் ராஜவம்சத்து
மன்னர் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியை வேட்பாளராக
நிறுத்தியது , அவர்தான்
அவர் அந்தச் சமஸ்தானத்து அரசர் என்பதால், அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன்வரவில்லை.
திங்கள், 18 மே, 2026
ஸ்டாலின் சறுக்கியது எங்கே? | திமுக தோற்ற கதை | DMK | MK Stalin
ஆக, வேர்ப்புழுவுக்கு வைத்தியம் பார்க்காமல் மேலோட்டமாக மகசூலுக்கு மருந்தடிப்பது நீடித்த பலனைத் தராது என்பதை புரிந்துகொண்டு அப்டேட் ஆக வேண்டும்
திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பொதுவாழ்வில் இருந்து ஒய்வு
![]() |
ராதா மனோகர் : அய்யா திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை மதுரை வாக்காளர்கள் தோற்கடிப்பதற்கு முன்பே பலர் தோற்கடித்துவிட்டனர்
குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் அவரை தோற்கடித்து விட்டது
அரசியல் அவரை தோற்கடித்து விட்டது
மக்கள் அவரை தோற்கடித்து விட்டனர்
திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அரசியல் ஓய்வென்பது தமிழகத்தின் அரசியல் ஒய்வு என்று எடுத்து கொள்ளலாம்
இனி நடக்கப்போவது அரசியல் அல்ல.
வெறும் வியாபாரம் ...
அதுவும் நேர்மை அற்ற வியாபாரம்
இவரின் அரசியல் ஓய்வென்பது ஒரு நீண்ட இருளின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது
நடிகர் விஜய் உண்மையில் தோற்று கொண்டிருக்கிறார்
விஜய் நீ தோற்றுக்கொண்டிருக்கிறாய்!
உன் தோல்வி உனக்கே இன்னும் புரியவில்லை என்கின்ற போது
உன் தற்குறி கூட்டத்திற்கு எப்படி புரியும்?
நீ மிகவும் பலவீனமானவன்
மனிதர்களின் உண்மையான பலம் என்பது நேர்மையில்தான் தங்கி உள்ளது
உனக்குத்தான் அந்த அறம் என்னவென்றே தெரியாதே
இன்று கும்பலில் கோவிந்தா போடும் உன் கூட்டம் வெறும் சந்தை கூட்டம்தான்
அதுவும் கல்லாத மூடர்களின் தற்குறிச்சந்தைதான்
சொந்த குடும்பங்களோடு எந்தவிதமான புரிதலோ அன்போ இல்லாத ஒரு மனிதனின் ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற நாடகம் உன் கும்பலுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம்
ஆனால் சமூகத்திற்கு இது புதிதல்ல
இது போன்ற நாடகங்களை மேடை ஏற்றிய பலரை உலகின் பல மனநல மருத்துவ மனைகள் ஏற்கனவே கண்டிருக்கிறது.
உனக்குதான் எந்த வரலாறும் தெரியாதே
உன்னை சுற்றி உள்ள கும்பல் வெறும் தற்குறி கும்பல் என்பது உலகே அறிந்த உண்மை அல்லவா?
ஞாயிறு, 17 மே, 2026
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை
தினமலர் : சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85.
1983ம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கே. ராஜன் அறிமுகம் ஆனார். நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் போன்ற படங்களை இயக்கியவர். அவள் பாவம், நினைக்காத நாளில்லை, டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். பாம்பு சட்டை, துணிவு, பரகாசுரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா விழாக்கள் மற்றும் சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் கே.ராஜன், திரைக்கலைஞர்களின் செயல்பாடுகளை விமர்சித்து பேசியவர். யூடியூப் சேனல்களிலும் பொது மேடைகளிலும் பலரையும் விமர்சித்து பேட்டியும் அளித்தவர்.
திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
![]() |
ராதா மனோகர் : இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகையாளர் திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகப்பெரும் ஆற்றலை கொண்ட எழுத்தாளர்
மிகவும் சிக்கலான போர் சூழலில் மிக மிக நுட்பமாக செய்திகளை மோப்பம் பிடித்து எழுதுவதில் தனித்திறமையோடு செயல்பட்டார்.
ஈழ போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும்,
பிரபாகரன் உட்பட ஏனைய தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையும் இவர் மூலம்தான் உலகம் அறிந்து கொண்டது.
இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் உயிராபத்து இருந்தும் துணிந்து பல இடங்களிலும் தொடர்புகளை பேணி அவற்றின் மூலம் பல செய்திகளை பொதுவெளிக்கு கொண்டுவந்தார்
புலிகளால் கொலை அச்சுறுத்தல் அளவு கணக்கில்லாமல் இருந்த போதும் ஒரு கத்தி மேல் நடப்பது போல் நடந்து பணியாற்றினார்
சமாதான ஒப்பந்த காலத்தில் இவர் ஆற்றிய எழுத்துப்பணி வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்கது
இவரின் அந்த பணிக்கு பரிசாக கனடாவில் இவர் கொடூரமாக தாக்கப்பட்டார்
பாகிஸ்தான் பெண் நடத்திவந்த மாபியா கேங் அன்மோல் எனும் பிங்கியின் கதை
Neander Selvan : இந்தியாவில், ஏன் அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ கூட முழுக்க பெண்களே நடத்தும் போதை மருந்து கார்ட்டல்களை காண்பது அரிது
ஆனால் பாகிஸ்தானில் அப்படி ஒரு கார்ட்டலை நடத்தி வரலாறு படைத்திருக்கிறார் அன்மோல் எனும் பிங்கி
துரந்தரில் காட்டப்பட்ட கராச்சி நகரின் சட்டவிரோத கடத்தல் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் அன்மோல். இவரது மூன்று சகோதரர்களும் போதைமருந்து பிசினஸில் இருந்தார்கள். அன்மோல் 14 வயதிலேயே மாடலிங் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மாடலிங் துறையில் பிங்கி எனும் பெயருடன் இறங்கினார். கராச்சி மற்றும் பின்னர் லாகூரில் மாடலிங் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தில் கலந்து கொண்டார்.
சனி, 16 மே, 2026
திமுவினரே ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது- ஒரு உடன்பிறப்பின் ஆலோசனை
![]() |
Thamira Aathi : திமுக பூமர்களுக்காக, ஒரு சக பூமரின் கரண்ட் சினாரியோ அறிக்கை
1. நீங்கள் அப்படியே என்னவோ கோட்டையே சரிந்துபோனது போலவும், அவமானப்பட்டது போலவும் நினைத்துக்கொள்ள இதில் ஒன்றுமேயில்லை. திமுக போன்ற கட்சிக்கு ஜெயலலிதாவிடம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோற்றுக் கொண்டிருந்ததை விட அவமானம் வேறொன்று இருக்கவே முடியாது. ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது.
2. உலகத்துலயே இல்லாத ஆட்சியெல்லாம் நாம் பண்ணிவிட்டதாகக் கருத வேண்டாம். காங்கிரஸ், பிசேபி போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு உட்பட்டு, நம்மாலியன்ற அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கல்வி, உட்கட்டமைப்பு, பிற துறைகளில் சிறந்து விளங்குகிறோம். குறிப்பாக சமூகநீதியில் சற்று மேம்பட்டு நிற்கிறோம். அவ்வளவுதான். நாம ஜேம்ஸ்பாண்டுதான், ஜேம்ஸ்பாண்டுதான். அதுக்காக துப்பாக்கியை நீட்டி பிடிச்சமானிக்கே நிக்கத்தேவையில்லை.
10 அமைச்சர் பதவி கொடுப்பதாக தவெக தரப்பில் பேரம் பேசினார்கள்.. போட்டு உடைத்த கேசி வீரமணி!
tamil.oneindia.com - Yogeshwaran Moorthi : சென்னை: தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏ-க்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்களும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தரப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார்.
வியாழன், 14 மே, 2026
புஷ்பாவின் சோபா ஆட்சி லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.
இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர் தெளிவாக்கவும்
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்)
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ் வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து எம்எல்ஏவும் எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!









