ஞாயிறு, 7 ஜூன், 2026

மு.க.ஸ்டாலின் : மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இந்த ஆட்சி.

 hindutamil.in -தமிழினி  : சென்னை: மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பனையூர் பாபு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றும் போது, '' திமுகவைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபுவை வரவேற்கிறேன்.

டெல்லியை கதறவிடும் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி - சவால் விடும் CJP- பின்னண

கரப்பான் பூச்சி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு லண்டனில் சாத்துப்படி

 தினமலர் : புதுடில்லி: பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பிர்க்பெக் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, நம் உச்ச நீதிமன்ற த லைமை நீதிபதியிடம், அவரது கரப்பான்பூச்சி கருத்து குறித்து சிலர் கேள்வி கேட்டதால் சர்ச்சை வெடித்தது.
கடும் கண்டனம் இந்த சம்பவத்திற்கு லண்டனில் உள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி, ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வாய்மொழியாக சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
அப்போது அவர், 'வேலையில்லாத இளைஞர்கள் சிலர், சமூக வலைதளங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். கரப்பான்பூச்சிகள் போல சமூகத்தை சீரழிக்கின்றனர்' என, விமர்சித்து இருந்தார்.

சிங்கள மொழி திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்ததுதான் விரிவான ஆய்வறிக்கை

சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு கூறுகள்  வரலாறு
May be a doodle of text that says "சிங்கள மக்களின் மரபணு வரலாறு GENE GENETICHISTORYOFTHESINHIALESE GENETICHISTORYOF TIC HISTORY OF SINHALESE का Z ጣ த ர ma 斗 ಇ यी 99 தாம் கி எ"
 Rajasekar Pandurangan :  சிங்களரும் தமிழரும் ஒன்றே
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத்  திகழ்ந்து வருகிறது.
 இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு, 
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது? 
அல்லது இரண்டுமே உண்மையானதா?  

சனி, 6 ஜூன், 2026

தவேவில் அதிமுக இரண்டு எம் எல் எம் கம்பனிகளின் வரலாற்று பின்னணி


 ராதா மனோகர்
: தவேகவை நோக்கி அதிமுக தலைவர்கள் தொண்டர்கள் என்று ஏராளமானோர் படை எடுக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் பிரேக்கிங் நியூஸ்களாக காட்டி கொண்டிருக்கின்றான் 
தவேக என்ற கட்சி அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியே கிடையாது 
தமிழகம் இப்போது சந்தித்திருப்பது ஒரு அரசியல் விபத்து.
எந்த விதமான கொள்கையோ கோட்பாடுகளோ கட்சி கட்டமைப்புக்களோ எதுவுமே இல்லாத ஒரு சமூக ஊடக   விளையாட்டில் தமிழகம் சிக்கி விட்டது.

4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தவேகவில் சேர்ந்தனர்

மின்னம்பலம் -Mathi : தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) அதிமுகவின் (AIADMK) 4 முன்னாள் அமைச்சர்கள் இணைந்துள்ளனர்.
பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான
    உடுமலை ராதாகிருஷ்ணன்
    கடம்பூர் ராஜூ
    எம்.சி. சம்பத்
    சிவபதி
உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். அதேபோல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாப்பிரெட்டிபட்டி; கோவிந்தசாமி; கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

மு.க.ஸ்டாலின் அதிரடி : மறந்து விடாதீர்கள்... தவெக ஆட்சி நடப்பதே நமது தயவில் தான்!

 hindutamil.in -   தமிழினி : சென்னை: “நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடந்தது.
அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “எப்போதுமே ஓர் இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்துக்குப் பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால், ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதோ வசதியை மனதில் கொண்டு, ஆளுங்கட்சியை நோக்கித்தான் அதிகமாகப் போவது உண்டு. அதைத்தான் நாமும் பார்த்திருக்கிறோம்.

ரஞ்சித் முன்னெடுக்கு பறையர் ஜாதி பெரும்பான்மை ஆதிக்க அரசியல்

 Amudhan R P   : சென்னை மேயர்  - திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை.  
அவர் கறாராக, வழக்கமான, இயல்பான அரசாங்க நடைமுறையைக் கடைபிடித்தார் என்பதற்காக மட்டுமல்ல. 
சென்னை மேயர் மாதிகா எனும் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் விசிக தலைவர்களாலும் தாக்கப்படுகிறார்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டது. 
பா ரஞ்சித் போன்றோர்கள் ஆசைப்பட்டது நடந்துவிட்டது.

இண்டியா கூட்டணி திமுக விலகல் ... பாஜகவுக்கு சாதகம் ஏன்? - எக்ஸ்ப்ளைனர்

  hindutamil.in : ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறிவித்திருக்கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது.
திமுக-​வின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்றுதான். அதேசம​யம் இந்த விஷ​யத்​தில் ஒரே கல்​லில் இரண்டு மாங்காய்களை சத்​தமில்​லாமல் அடித்​துச் சாய்த்து​விட்ட திருப்தியில் இருக்​கிறது பாஜக. இதன்மூலம், தொடக்கம் முதலே தங்​களுக்கு தொல்லை கொடுத்து வரும் இண்​டியா கூட்​ட​ணி​யை​யும் கலகலக்க வைத்​து​விட்ட சந்​தோஷத்​தில் திளைக்​கிறது அந்​தக் கட்​சி. இதன் பின்புல அரசியலை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் : காங்கிரஸுக்கும் இன்றைய தமிழ்நாடு அரசுக்கும் சம்பந்தம் இல்லை!

May be an image of text

 Dev JB : நான் திரு DKS, இப்போதைய கர்நாடகா முதலமைச்சரை 4-5 முறை நேரில் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். பேசுவதை கேட்டிருக்கிறேன். 
பேசும் போது அனைவரையும் கேட்க வைக்கும் ஆற்றல் உள்ளவர். பொம்மையின்‌ போன அரசை 40% கமிஷன் அரசுனு கூட சொல்லியிருக்கிறார். 
ஆனால் யாரையும் இன்சல்ட்லாம் செய்து நான் பார்த்ததில்லை. 
எதுக்கு  ஓப்பனாக ரோஸ்ட் பண்றார்னு கூட சொல்லமுடியாமல் கேவலமாக பேசறார்னு தெர்ல. சென்னையிலிருப்பவர் இதுவரை கர்நாடகாவில் இருக்கும் க வையோ அல்லது காங்கிரஸில் இருக்கும் கா வையோ கூட சொல்லாத போது... இம்மெஸ்சூர்டுங்கிறார். அதுவும் காங்கிரஸுக்கும் இன்றைய தமிழ்நாடு அரசுக்கும் சம்பந்தம் இல்லைங்கிறார். 

வெள்ளி, 5 ஜூன், 2026

சுன்னாகம் திராவிடர் சங்க அங்கத்தவர்கள் பட்டியல் இது 1927 february 11

 ராதா மனோகர் ; : திராவிடன் பத்திரிகை 
 11 ஆம் தேதி பெப்ருவரி மாதம் 1927 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை 
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர் சங்கத்தினால் இந்த திராவிடன் பத்திரிகை வெளியிடப்பட்டது 
இந்த அமைப்பின் சார்பாகத்தான் திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது 
அச்சங்கந்தின்  சார்பாக திராவிட வித்தியா சாலை என்ற பள்ளிக்கூடமும் நடத்தப்பட்டது 
சுன்னாகம் திராவிடர் சங்க அங்கத்தவர்கள் பட்டியல் இது 
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்
சங்கத்தின் தலைவர் அப்புக்காத்து ஸ்ரீமான் mr சு.ராசரத்தினம் அவர்கள் 
சங்கத்தின் உபதலைவர் 
ஸ்ரீ டி எஸ் நாகலிங்கம் அவர்கள் ஸ்ரீ கே முருகப்பா , ஸ்ரீ எம் .மண்டலம் அவர்கள் 
சங்கத்தின் காரியதரிசிகள் 
ஸ்ரீ பி கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள்,  ஸ்ரீ வி எஸ் பூதப்பிள்ளை அவர்கள் 

வியாழன், 4 ஜூன், 2026

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சம் பேர் நீக்கமா?

 minnambalam.com-  Pandeeswari Gurusamy : தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் 80 லட்சம் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி எனத் தமிழக அரசின் தகவல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சம் பேர் நீக்கமா? – தமிழக அரசு விளக்கம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அப்போதைய திமுக அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சுமார் 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

திமுக இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கிறது - காங்கிரஸ் பங்கேற்பதால் இந்த முடிவு!

  hindutamil.in : சென்னை: டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு வருமாறு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் மரணம்! - நாவலப்பிட்டியில் அதிகாரிகளின் அலட்சியம்

 ceylonmirror.net :  ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் மரணம்! – நாவலப்பிட்டியில்.
கண்டி, நாவலப்பிட்டி, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோ மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண்ணே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து ஓட்டோவின் சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

புதன், 3 ஜூன், 2026

நடிகர் விஜய் மீது இப்போது உள்ள பிம்பம் வெறும் பலூன் போன்றதுதான்

May be an image of one or more people and text that says "விக் வைத்தால் வழுக்கை மறையும் திரிஷாவால் வாழ்க்கையை மறைக்க முடியாது mgflip.com"

ராதா மனோகர் : தமிழர்கள் பிளாக் காமெடியையும்  ரசிப்பார்கள் 
முறை கேடான காதலையும் ரசிப்பார்கள் 
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு முழங்கி விட்டு 
அடுத்த நாளே ஊழலை விலாவாரியாக காட்டும் மங்காத்தாவையும்   விழுந்து விழுந்து ரசிப்பார்கள் 
ஓவராக பண்பு குடும்ப ஒழுக்கம் தூய்மையான காதல் அரசியல் நேர்மை கொள்கை என்றெல்லாம் வாய் வலிக்க வகுப்பெடுப்பார்கள்.  மனைவியையும் இரு பிள்ளைகளையும் அம்போ என்று விட்டு விட்டு ஊர் அறிந்த திரை மகளோடு  பொதுவெளியில் பிலிம் காட்டுவதையும் ரசிப்பார்கள் 
போனால் போகட்டும்  ரசித்து விட்டு போகட்டும் 
ஆனால் இப்படி பட்ட ஒரு ஓடுகாலியிடம் நாட்டை ஒப்படைத்தது மட்டுமல்லாமல் அவனுக்காக உருகி உருகி வழிவதை எந்த ரகத்தில் சேர்ப்பது 

கர்நாடகா புதிய அமைச்சரவையில் சித்தராமையா கை ஓங்கியது - மகன் உட்பட பல சித்தராமையா ஆதரவாளர்கள்

tamil.oneindia.com  - Nantha Kumar R : பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வராகவும், மற்ற 12 பேர் அமைச்சர்களாகவும் செயல்பட உள்ளனர். இதில் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களாக பதவியேற்ற எம்எல்ஏக்களின் ஜாதி விவரங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மல்லை சத்யா : “தவெக பக்கம் செல்ல பெட்டி படுக்கையுடன் தயாராகிவிட்டார் வைகோ!

hindutamil.in -  வெற்றி மயிலோன் : சென்னை: “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. முதல்வர் விஜய்யை அண்ணாவுடன் வைகோ ஒப்பிட்டு பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் மூத்த தேரர் கைது - அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்

 ilakkiyainfo.com  : 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக  துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம  பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில்  3 இளம் பிக்குகள் அண்மையில்  தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கலைஞர் புதிய தமிழகத்தின் நிர்மாண சிற்பி Kalaignar is an Architect of Modern Thamizhnaadu.

Kandasamy Mariyappan : கலைஞரின் ஒவ்வொரு பிறந்தநாளிலும், இந்த பதிவை எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர்..... 
நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். 
மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால்.....
ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். 
காற்று, 
தண்ணீர், 

முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!

May be an image of text that says "திராவிடம் என்னும் போதினிலே" I и 屋 கலைஞர் எங்கள் கட்டுமரம் தான் சிறகு விரிகிறது னாகர் தோள்களிலே imgflip.com com imgflip"

 ராதா மனோகர் : தமிழ்நாட்டின் அச்சாணி திராவிட முன்னேற்ற கழகம்தான்! ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி திராவிட முன்னேற்ற கழகம்தான் 
இந்த பாரம்பரியம் இன்று நேற்று வந்ததல்ல.
அந்நியராலும் மதவாதிகளாலும்  ஜாதிவாதிகளாலும் வீழ்த்தப்பட்டு தரையோடு தரையாக கிடந்த திராவிட மக்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி திருப்பள்ளி எழுச்சி பாடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
இந்த சுயமரியாதை இயக்கத்தின் அடுத்தடுத்த படைகளாக  திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும்  வரிசை கட்டி வந்தன.
திராவிடப்படை கட்டி வந்த ஒப்பற்ற தளகர்த்தர்களின் வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் தம்பி என வந்த முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!
கலைஞர் நடந்து வந்த பாதையில் அவரின் கால்களில் குத்திய முட்கள் ஏராளம்.

கடல் நீர் குடிநீரானது - அதிகமாக பேசப்படாத கலைஞரின் அரிய சாதனைகளில் ஒன்று.

May be an image of text that says "பல்வேறு துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன். முத்தமிழறிஞர் கலைஞர் செயல்படுத்த த்திய திட்டங்கள், உருவாக்கிய கட்டமைப்புகள் கட்ட குறித்து இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் குடிநீரான கடல்! ல்! குடிநீரான கடல்! தாகம் தணித்த தெற்காசியாவின் முன்னோடித் திட்டம்!"

 Muralidharan Pb  :  கலைஞர்  பக்கம் பதிவு 13 கடல் நீர் குடிநீரானது
கலைஞரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டால்?
நிலைமை இதுதான் இதற்கு மேல் நம்மிடம் சாத்தியங்கள் இல்லை,வசதிகள் இருக்காது. இதிலிருந்து எப்படி நமக்கு என்ன தேவையோ எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என்று வினவினால்
நமக்குத் தேவையானதை நாம் எடுத்துக் கொண்டு அதனை வைத்து எவ்வாறு பயன் பெறுகிறோம் என்று சிந்திப்பதே அவருடைய பேராற்றல். 
ஆற்றல் மிக்க பகுத்தறிவுவாதிகளுக்கு Optimistic Rationlist மட்டுமே இப்படித் தோன்றும். அதனால் தான் அதை பலமுறை low resources இருந்தும் அதைவைத்து maximum output சாத்தியம் என அதை பல்வேறு முறை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர். 

தமிழ் மொழி விதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிங்கள இடதுசாரிகளின் கறைபடிந்த வரலாறு


No photo description available.

ராதா மனோகர் : இலங்கையில் எப்போதும் இடது சாரிகள் எனப்படுவோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சிங்கள இனவாதிகளாகவே செயல்பட்டுள்ளனர் 
இவர்களுக்கு அவ்வப்போது முட்டு கொடுக்கும் வேலையை தமிழ் இடது சாரிகளும் செய்துள்ளனர் 
இவர்கள் என்னதான் குத்தி முறித்து திரிபு வாதங்களில் ஈடுபட்டாலும் வரலாறு இவர்களை அம்பலமாகி கொண்டே வருகிறது 
பச்சை இனவாதிகளான  பண்டராநாயகக்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் எதிராக விஷம் கக்கியதுதான் இலங்கை இடதுசாரிகளின் வரலாறு 
அதிலும் இவர்களில் பலர் லண்டனில் படித்த அசல் மேட்டுக்குடி கனவான்கள் 
இலங்கையின் முதல் இடதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரான டாக்டர் என் எம் பெரேராவின் தமிழ் இன வெறுப்பு அரசியல் வரலாறு பற்றிய பதிவு இது 

செவ்வாய், 2 ஜூன், 2026

குமரி முத்து பற்றி நடிகை ஊர்வசி உருக்கம் - திமுக பேச்சாளர் நடிகர்

 tamil.oneindia.com - V Vasanthi : சென்னை: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகைகளில் முக்கியமானவர் ஊர்வசி. ஹீரோயினாக அறிமுகமாகி, இன்று குணச்சித்திர நடிகையாகவும் தேசிய விருது வென்ற கலைஞராகவும் திகழும் அவர், சமீபத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள 'பரிமளா & கோ' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி, மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து குறித்து பகிர்ந்த நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதிமுக தொண்டரின் விபரீத முடிவு… கண்ணீர் மல்க குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஈபிஎஸ்

 மின்னம்பலம் - Kavi  :  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறி  உயிரை மாய்த்துக்கொண்ட தொண்டரின் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நேரில் அஞ்சலி செலுத்தினார். 
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுகவில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவரது மனைவி முனீஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

ஆதவ் அர்ஜுனா + மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்) நடத்தும் 59 நிறுவனங்கள்!

May be an image of one or more people and people smiling

 Anbalagan Manivannan :  ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38.  (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு  நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies.  அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம் 
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை.  ஏறக்குறைய அனைத்துமே மார்டின் கும்பல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா.. 
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED...  இதுவும் மார்டினின் கறுப்புபப் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP