நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
செவ்வாய், 17 மார்ச், 2026
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திராவிட இயக்ககங்கள் கட்சிகளின் களப்பணிகள்
இதுக்கு எல்லாம் திமுக காரணமெனில் வேற யார் இருந்தப்ப அங்க கொலை நடக்கல?
சமூகமாகவே ஆதிக்க ஜாதியவாதிகளும்,அந்த வளர்ப்பு முறைகளும் ,ஆயுதப்புழக்கமும் அங்க இருக்குது.
அதற்கான திருத்தப்பணி பெரியார் இயக்கங்கள்,கம்யூனிஸ்ட் அமைப்புகள் சார்ந்து அங்கு பிற மாவட்டங்களில் நடப்பது போல் நடப்பதில்லை.நடத்தவேண்டும்.அந்த அளவு பண்பட்டு இன்னும் அந்தபகுதி மேம்படவில்லை.
ஜாதியக்கலவரம் என்பதிலிருந்து ஜாதியக்கொலை என தனிநபர் கொலைவழக்காகவும்,
ஜாதியவாதிகள் என்பதிலிருந்து ஜாதி அரசியல் கட்சிகளாகவும்,அமைப்புகளாகவும் மாறியிருக்கு.
கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் - The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்
ராதா மனோகர் : கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் - Bennett, Coleman & Co. Ltd. (commonly known as The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்!
2ஜி வழக்கின் போது தலைப்பு செய்திகளாக
நாள்தோறும் பச்சை பொய்களை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு கொண்டிருந்தது அல்லவா?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வந்தால் அது வெறும் செய்தி அல்ல,
அதுவே தீர்ப்பு என்ற அளவில் அதன் நம்பகத்தன்மை கட்டமைக்கப்பட்டு இருந்தது.
![]() |
அதே டைம்ஸ் ஆப் இந்தியாவை வெளியிடுவது Bennett, Coleman & Co. Ltd. குழும நிறுவனம்தான்
இந்நிறுவனம் பல கம்பனிகளை தன்வசம் வைத்திருக்கிறது
ஷாஜி ஜெயின் குடும்பத்திற்கு சொந்தமானது
இதன் வருமானம் 2022 இல் Increase ₹4.57 billion (US$54 million!
Bharatiya Jnanpith பாரதீய ஞானபீடம் என்பது இவர்களின் நிறுவனம்தான்.
இவர்களின் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில்தான் ஆ.ராசா அவர்கள் அமெரிக்க வங்கியில் 3000 அமெரிக்க டாலர்களை வைத்துள்ளார் என்று தலைப்பு செய்தியாக முழு பொய்யை வெளியிட்டது
இந்த செய்தியை பார்த்துவிட்டுதான் 2 ஜி விசேஷ நீதிமன்ற அமர்வில்,
2 ஜி வழக்கை விசாரித்து கொண்டிருந்த நீதிபதி Special Judge OP Saini அவர்கள் ஆர் ராசாவை எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத ஒரு குற்றவாளியாகவே பார்த்தார்
ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்! 400 நோயாளிகள் உயிரிழப்பு -. மருத்துவமனை மீது தாக்கியது போர் குற்றம்
tamil.mykhel.com -Javid Ahamed : காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எனினும் பாகிஸ்தான் இத்தாக்குதலை மறுத்தபோதும், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி நீதி கோரினர். இந்தச் சம்பவம், இரு நாடுகள் உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
’உறுதியாக’ நிற்கும் சிபிஎம்.. திருமாவிடம் ஆதங்கப்பட்ட ஸ்டாலின்.. வேல்முருகன் ‘கண்ணாமூச்சி’!
minnambalam.com : “இப்படி எல்லாமா நெருக்கடி வரும்”? என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எந்த கட்சிக்கு நெருக்கடி வந்துருக்கு?
தேர்தல் நேரத்துல நெருக்கடியை சந்திக்காத கட்சிதான் உண்டா? தலைவர்கள்தான் உண்டா? நடக்கிறதை சொல்றேன்..
திமுக கூட்டணியில ரொம்பவே போக்கு காட்டிய காங்கிரஸை ஒரு வழியாக சமாளிச்சு ஒப்பந்தம் போட்டு முடிச்சாரு சிஎம் ஸ்டாலின்..
இதுக்கு அப்புறமா மதிமுகவுக்கு 4 சீட் கொடுத்து சுமூகமா கையெழுத்தாகிடுச்சு..
திங்கள், 16 மார்ச், 2026
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!
tamil.oneindia.com - Vishnupriya R : சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த உத்தேசப் பட்டியல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த கூட்டணியில் இணைந்தால் அதிமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதே தற்போது ஹாட் டாபிக்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் கூட்டணி கட்சிகளுக்கு 100 தொகுதிகளை அதிமுக ஒதுக்க நேரிடும். அப்படிபார்த்தால் அதிமுக 134 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் சூழல் ஏற்படலாம்.
கூட்டணிக் கட்சிகளுக்கான உத்தேசப் பட்டியல் இதோ:
தவெக-விற்கு 50 முதல் 70 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி,... ?
Vasu Sumathi : டெல்லியில் நேற்று சுமார் 7 மணி நேரம் சிபிஐ-யுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்த விஜய்,
இன்று அதிகாலை 12.30 AM அளவில் சென்னை வந்தடைந்தார்.
தவெக - NDA இடையிலான இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில்,
தவெக-விற்கு 50 முதல் 70 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் எத்தனை இடங்கள், ஆட்சியில் பங்கு வேண்டாம் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் தேர்தலுக்கு முன் 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீஸ் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாம்.
எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் விஜய்க்கும், விஜய்யை கூட்டணியில் சேர்க்க எடப்பாடிக்கும் இருக்கும் தயக்கங்களே அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதமாவதற்குக் காரணமாம். இதில் ஆகச்சிறந்த காமெடி என்னவென்றால் - டெல்லியில் இவ்வளவு நடப்பது இங்குள்ள தமிழ்நாடு பாஜகவினருக்கு ஒரு 'மானாவும்' தெரியாதாம்!
இந்தி சினிமா - பவன் கல்யாணுக்குத் தெரியாத சம்பவம்!
R Muthukumar "' இந்தி சினிமா: மனமொடிந்த சிரஞ்சீவி
பவன் கல்யாணுக்குத் தெரியாத சம்பவம்!
லாப நோக்கத்துக்கு தமிழ்ப்படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியை எதிர்ப்பது ஏன்.. இது என்ன லாஜிக்... என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பவன் கல்யாண்.
இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்வதைவிட பவன் கல்யாணின் மூத்த சகோதரர் சிரஞ்சீவிக்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் சரியாக இருக்கும். இனி சிரஞ்சீவியே பேசுவார்.
1988ல் ருத்ரவீணா படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது கிடைத்திருந்தது. அந்த விருதை வாங்குவதற்காக டெல்லி சென்றேன். மாலையில் விருது வழங்கும் விழா. அதற்கு முன்னதாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விருந்து அரங்கின் சுவர்களை திரைப்பட சுவரொட்டிகளால் வண்ணமயமாக அலங்கரித்திருந்தார்கள்.
ஞாயிறு, 15 மார்ச், 2026
கரூர் துயரம்: டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை
மின்னம்பலம் - Mathi : கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு முதல் கட்ட விசாரணையை நடத்தினர்.
தமிழ்நாடு தேர்தல் ஏப். 23-இல் வாக்குப்பதிவு -வாக்கு எண்ணிக்கை மே 4 - 6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
தினமணி : மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரம், குஜராத்தில் ஏப். 23-இல் வாக்குப்பதிவும் கர்நாடகம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப். 9-இல் வாக்குப்பதிவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் - போன்டா
குஜராத்தில் - அம்ரேத்
கர்நாடகத்தில் - பாகல்கோட், தாவநாகரி தெற்கு
மகாராஷ்டிரத்தில் - ராஹூரி, பாராமதி
நாகாலாந்தில் - கோரிடாங்க்
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ இன்று விசாரணை - 41 பேர் பலியான கரூர் துயரம்
மின்னம்பலம் -Mathi : கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் இன்று மார்ச் 15-ந் தேதி விசாரணை நடத்துகின்றனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சனி, 14 மார்ச், 2026
வட இந்திய சகோதர்களுக்கு 400 ஆண்டுகள் சிறை தண்டனை! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
![]() |
தினமலர் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி ஆகியோருக்கு, பல மில்லியன் டாலர் மோசடி வழக்குகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஹெர்மன் குல்கே (1938-2026) : தென்னிந்திய வரலாற்றைத் தெளிவுபடுத்திய வரலாற்றறிஞர் - Prof.Hermann Kulke
![]() |
Ravi Kumar : ஹெர்மன் குல்கே மறைந்தார் என்ற செய்தியை நண்பர் நரேந்திரன் நேற்றிரவு பகிர்ந்திருந்தார். அதைப் படித்ததும் துணுக்குற்றேன். அவரது எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்றபோதிலும் அவரை நெருக்கமாகப் பின் தொடர்ந்ததில்லை. அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது அவர் முதியவர் என்ற உணர்வு வந்ததில்லை. இப்போது தேடிப் பார்க்கும்போதுதான் அவர் 1938 இல் பிறந்தவர் என்ற விவரம் தெரிந்தது. நிறைவாழ்வு வாழ்ந்தவர்தான் என்றபோதிலும் அவரது மறைவு துயரமளித்தது. இந்தியாவை அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவைப் பற்றி ஆய்வு செய்யும் அயல்நாட்டு அறிஞர்களின் மறைவு ஒவ்வொன்றுமே துயரமளிப்பதுதான். ஏனென்றால் அவர்களது இடங்களை இட்டு நிரப்ப எவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது இல்லை.
வெள்ளி, 13 மார்ச், 2026
தூத்துக்குடி மாணவி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு; கனிமொழியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
hindutamil.in - ரெ.ஜாய்சன் : தூத்துக்குடி: குளத்தூர் அருகே வேடநத்தம் காட்டுப் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்துள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, நேற்று இரவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
TVK + BJP - நடிகர் விஜய் பாஜக கூட்டணி - மாவட்ட செயலாளர்கள் அமோக ஆதரவு
தினமலர் : சென்னை: வரும் சட்டசபை தேர்தலை தேஜ கூட்டணியில் இணைந்து சந்திக்க தவெகவின் 90 சதவீதம் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தவெக என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் தற்போது கரூர் சம்பவம், நடிகை திரிஷா விவகாரம் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். அவருடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்று வருகிறது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் அவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றெல்லாம் மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், இது பற்றி தமிழகத்தில் கூட்டணி தலைவரான இபிஎஸ், எதுவும ் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தவெகவின் ஆதவ் ஆர்ஜூனாவும் நேற்று நடந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்றார். நிர்மல் குமாரும்இதேபோன்ற கருத்தை கூறினார்.
சிட்டிங் காங் எம்எல்ஏ-க்களில் 12 பேருக்கு சீட் இல்லை: திமுக நிபந்தனையால் அலறும் காங்கிரஸ்
hindutamil.in -வே.கோபாலகிருஷ்ணன் : காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதியான நிலையில், அடுத்ததாக காங்கிரஸின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 12 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது எனவும் அந்தத் தொகுதிகளில் சிலவற்றை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் எனவும் திமுக தரப்பிலிருந்து அழுத்தம் தரப்படுவதாகச் சொல்லப் படுவதால் மீண்டும் காங்கிரஸ் வட்டாரம் கொதிநிலைக்கு மாறி வருகிறது.
காங்கிரஸில் தற்போது எம்எல்ஏ-க்களாக இருக்கும் 17 பேரும் மீண்டும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், அவர்களில் 12 பேருக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் திமுக செக் வைப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் - கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை
hindutamil.in : சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் 15 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சந்தையில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தீவிரத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி கோமாவில் இருக்கிறாரா? ஒரு காலை இழந்ததாகவும் தகவல்
dinamalar.com : டெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஒரு காலை இழந்துள்ளதாகவும் பிரிட்டன் நாளிதழ் பகீர் செய்தியை வெளியிட்டு உள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் முரண்பாடு காட்டியதால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இரு வாரங்களை எட்டியுள்ள இந்தப் போரில், ஈரானின் ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனி, வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி,56, பொறுப்பேற்றுக் கொண்டார்.
வியாழன், 12 மார்ச், 2026
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை!
hindutamil.in- வெற்றி மயிலோன் : சென்னை: “பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வின் சுவடு மறைவதற்குள்,
மதுராந்தகம் அருகே கடந்த 09.03.26 இரவு 16 வயது சிறுமி கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியும்,
ஈரான் அணுஆயுத தளம் தரைமட்டம்; வான் பாதுகாப்பு முடக்கம்: இஸ்ரேலிய இராணுவம் அதிரடி அறிவிப்பு!
தினமணி : ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி தளம் தரைமட்டம்; வான் பாதுகாப்புக் கட்டமைப்புகள் முடக்கம்: இஸ்ரேலிய இராணுவம் அதிரடி அறிவிப்பு!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,
ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் இதயமாகக் கருதப்படும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை இஸ்ரேலிய வான்படை முற்றுமுழுதாக அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் (Brig. Gen. Effie Defrin) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
'தல்கான்' அணு ஆயுத நிலையம் தகர்ப்பு
வேல்முருகனுக்கு 2 தொகுதிகள்? திமுக விடுத்த கோரிக்கை
hindutamil.in - ந.முருகவேல் : திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடந்த முறை பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவர்.
ஆனால் இந்த முறை, அவர் தன்னை மூன்று முறை சட்டசபைக்கு அனுப்பிய பண்ருட்டிக்குப் பதிலாக, தான் வசிக்கும் நெய்வேலி தொகுதியில் போட்டியிட திமுக-விடம் விருப்பம் தெரிவித்திருக்கிறாராம்.
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
மின்னம்பலம் - Kavi : மறுமலர்ச்சி திமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று (மார்ச் 11) காலை நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் வைகோ, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்தார்.
தொடர்ந்து வைகோ, துரை வைகோ ஆகியோர் இன்று மாலை அறிவாலயம் வந்தனர். அதுபோன்று முதல்வர் ஸ்டாலினும் வந்தார்.
இந்நிலையில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது.
புதன், 11 மார்ச், 2026
சிவாஜியின் உலகுக்கு தெரியாத முதல் மனைவி ரத்னமாலாவுக்க்கு தந்த பங்களா கோடம்பாக்கத்தில்...
![]() |
![]() |
ராதா மனோகர் : சிவாஜியும் அவரது குடும்பமும் மறைத்து வைத்த அவரின் முதல் மனைவி ஏ.ஜி. ரத்னமாலா!
இவர் ஒரு பழம்பெரும் பாடகியும் நடிகையும் ஆவார் .
இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகளில் 500 க்கு மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
எம்ஜியார் சிவாஜி போன்றோருடன் நாடகங்களிலும் நடித்துள்ளார்..
இந்த ஏ ஜி ரத்னமாலா கணவன் யார் தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் இவரது கணவர் .
ஆனால் ஊருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டது.
இவர் ஒரு கிறிஸ்தவர். இவர்களுக்கு குழந்தைகள் இருந்ததாக தெரியவருகிறது.
ஒரு பெண் குழந்தையின் பெயர் லைலா. அவர் தன்ராஜ் என்றொரு நாடக திரைப்பட நடிகரை கல்யாணம் செய்திருந்தார் .
திருமதி ரத்னமாலா கணேசன் 2007 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மனோரமா சரத்குமார் விஜயகுமாரி போன்ற சில நடிகர்கள் பங்கு பற்றினார்கள் .
சிவாஜி குடும்பத்தினர் எவரும் அதில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
சிவாஜிக்கு ரத்னமாலா மீது ஆழமான காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய், 10 மார்ச், 2026
நயினா தீவில் ஐயர்கள் இடையே மோதல் : ஒருவர் படுகொலை
தமிழ்மிரோர் : யாழ்ப்பாணம், நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இரு அய்யர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்ததில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நயினா தீவு வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் 35 வயதுடைய நிரந்தரப் பூசகருக்கும், நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமித்தம் சென்றிருந்த குருக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமாகியுள்ளது.
இச்சம்பவத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற குருக்கள் உயிரிழந்துள்ளார். இவர் வழமையாக நயினா தீவு ஆலயங்களுக்குத் தொழில் நிமித்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
காத்திருக்க வைத்து பழி வாங்கிய காங்கிரஸ்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?
daylyseythi : காத்திருக்க வைத்து பழி வாங்கிய காங்கிரஸ்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?
திமுக கூட்டணியில் இருந்து விலகி நம்மோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் வந்து விடும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய், திமுக கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்தததில் மிகவும் அதிருப்தி அடைந்தார். காங்கிரசை நம்பி காலத்தை வீணாக்கி விட்டோமோ? நமக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதோ? என்றெல் லாம் கவலைப்பட்டார் விஜய்.
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை விட, விஜய்யின் தற்போதைய பெரும் கவலை 'கூட்டணி' என்பதுதான். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைத் தங்களது கூடாரத்திற்கு இழுத்து வர வேண்டும் என்பதுதான் விஜய்யின் மாஸ்டர் பிளான். இதற்காக தனது கட்சியின் டாப்-3 நிர்வாகிகளிடம் (முக்கிய ஆலோசகர்கள் மற்றும் டெல்லி வரை செல்வாக்குள்ள புள்ளிகள்) இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார் விஜய்.





