Suresh Bhim : தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கு யார் காரணம்? இந்துக்களா? இல்லை,
தலித்துகள் தான் காரணம்!
தம்மை இந்துக்கள் என நினைத்துக்கொண்டு, இந்துக்களோடு மல்லுக்கட்ட நினைப்பது தான் தலித்துகளை இந்துக்கள் அடக்கி வைக்க நினைப்பதற்கு காரணம்.
தான் ஒரு பெளத்தன், அதனால் தான் இந்து நம்மை ஒதுக்குகிறான் என்பதை உணர்ந்து ஒரு பெளத்தனாக வாழ ஆரம்பித்தால், தலித்துகள் தாழ்த்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
இந்துக்களின் பார்வையில் அவர்கள் வேற்று மதக்காரர்களாகிப்போய்விடுவார்கள். தலித்துகளாய் தெரிய மாட்டார்கள்.
எனவே, தலித்துகளாய் இருப்பதற்கு, தலித்துகளே காரணம்.
தீண்டாமை ஒரு மன நோய்!
யாருக்கு மன நோய்? தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாதி இந்துக்களுக்கா?
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
புதன், 25 பிப்ரவரி, 2026
தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கு தலித்துகள் தான் காரணம்!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் : நள்ளிரவில் எடுத்த முடிவு; மகளிருக்கு ரூ. 67 ஆயிரம் கோடி வழங்கினோம்!
நக்கீரன் - து. ராஜா : தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் திமுக சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்கும் காலம் இது. மாற்றத்திற்கான காலம் இது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல மாற்றங்களை உலகம் சந்தித்துள்ளது
திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி! .. கூட்டணிக்கு அழைத்த விஜய்.. கிரிஷ் சோடங்கர் சொன்னது என்ன?
மின்னம்பலம் - Mathi : “அதிகாரப் பகிர்வை வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சி சொல்லும்? காங்கிரஸ் NGO அல்ல.. விஜய்யின் தவெக காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்துள்ளது” என்று அக்கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளரும் திமுகவுடனான பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Indian Express நாளிதழுக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி:
கேள்வி: திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு வந்துள்ளதா?
கிரிஷ் சோடங்கர்: இல்லை, திமுக இன்னும் எங்களை அழைக்கவில்லை. பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அரச புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி சுரேஷ் சாலி கைது
கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலியை 72 மணித்தியால தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் வைரச் சுரங்க ரகசியம்!
![]() |
நக்கீரன்.: தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியின் தற்போதைய தட்பவெப்பத்தோடு, மாணிக்கம் தாகூரின் அரசியல் போக்குகளும் முடிச்சுப் போட்டு பேசப்படுகின்றன.
தங்களது அரசியல் எதிரியான தி.மு.க. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற திட்டத்துடன்,
மாணிக்கம்தாகூரை பின்னால் இருந்து இயக்குவது பா.ஜ.க.தான் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரங்களிலேயே பரவலாக விவாதிக்கப்படுகிறது.
மாணிக்கம்தாகூரின் பொருளாதாரப் பின்னணி குறித்த ரகசியத் தகவல்களை, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. தேர்தல் மேடைகளில் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார்.
செவ்வாய், 24 பிப்ரவரி, 2026
சசிகலாவை கைது செய்ய துடித்த எடப்பாடி பழனிசாமி! சசிகலா அதிரடி
Uma Pa Se : அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியை கொஞ்சமேனும் அசைத்துப் பார்க்கும் statement.
ஆனால். இதில் சில flipside இருக்கின்றன.
1. பாஜகவால் பேசாமால் silence செய்யப்பட்ட சசிகலா தற்போது திடீரென எடப்பாடி மீது தாக்குதல் நடத்துவது யார் தந்த க்ரீன் சிக்னல்?.
2. அதிக சீட் வேண்டும் என்று அதிமுகவை Pressurize செய்ய , இதை ஒரு நல்ல வாய்ப்பாக பாஜக கையிலெடுக்க வாய்ப்பு.
3.உயிரோடு தான் இன்னும் இருக்கிறாரா என்று தெரியாத பண்ருட்டி ராமச்சந்திரன், திடீரென விஜய் ஆதரவு நிலைப்பாடு எடுப்பது ஏன்?
4. அதிமுகவுடன் சீட் allocation குறித்து பேசமாட்டோம், பாஜகவுடன் தான் என்று டிடிவி சொல்வதும்,
என்கவுண்ட்டர் வெள்ளதுரை சசிகலா பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை
மின்னம்பலம் - Kavi : பசும்பொன்னில் நடைபெறும் சசிகலாவின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளதுரை கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார்.
“களம் காண்போம்… அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பசும்பொன், அருகே கமுதியில் இன்று (பிப்ரவரி 24 – ஜெயலலிதா பிறந்தநாள்) பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இதற்கு அதிமுக கொடி கட்டிய வேனில் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை வரவேற்புரை ஆற்றினார்.
வளர்ப்பு நாய் நக்கியதால் கை, கால்களை இழந்த பெண்
மாலைமலர் : இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்ஜீத் சங்கா கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாமல் மன்ஜீத் தனது செல்ல நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நாய் அவரது காயத்தை நக்கியுள்ளது.
அடுத்த நாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.
மணிசங்கர் அய்யர் உயிரை கலைஞர் காப்பாற்றினார்! காணொளியில் மணிசங்கர் அய்யர் பேட்டி
அ. வெற்றிவேல் : நக்கீரன் கோபாலை கொலை செய்ய கிரிமினல் #1 , எடுத்த இரண்டு முயற்சியையும் , சரியான நேரத்தில் தகவல் கொடுத்து தன்னைக் கலைஞர் காப்பாற்றி விட்டதாக தன் பேட்டியில் சொல்லி இருப்பார்
இன்று நியூஸ் 18 மேடையில் கிரிமினல் அறிவுறுத்தலின் படி தன்னைக் கொலை செய்ய வந்தவர்களிடம் இருந்து கலைஞர் தான் தன்னைக் காப்பாற்றினார் என்கிறார் மணி சங்கர் அய்யர்
கொள்ளைக்காரி மட்டுமல்ல..மகாமகக் குளத்தில் 60 உயிர்களைக் கொன்று அரசு பதவியை ஆரம்பித்த கிரிமினல் கடைசி வரை கொள்ளைக்காரியாகவும் கொலைகாரியாகவுமாகத்தான் இருந்திருக்கிறார். அவரைப் போய் அம்மா நொம்மா ந்னு
மணி சங்கர் அய்யர் காணொளி முதல் பின்னூட்டத்தில்
குட்டிமணி தங்கதுரையை பிரபாகரன்தான் காட்டி கொடுத்தார் . ஒரு நேரடி சாட்சியம்
தமிழக பத்திரிகைகளின் ஈழப்போராட்ட கதைகள் பல மசாலா திரைப்படங்களுக்கு நிகராக ஒரு காலத்தில் விற்பனையானது.
அதில் ஜூனியர் விகடனின் வசூல் தலையாயது.
குறிப்பாக வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் பற்றிய செய்திகள்,
உண்மைகளும் பொய்களும் இணைந்தே பயணித்தவை .
உண்மைகள் காலம் கடந்தாவது மக்களுக்கு தெரியவேண்டும் அல்லவா?
இந்த காணொளி ஒரு நேரடி சாட்சியமாகும்
திங்கள், 23 பிப்ரவரி, 2026
Low-Cost Energy Must Remain Sri Lanka’s National Priority (Video)
lankaenews.com : An Open Letter to the President: Low-Cost Energy Must Remain Sri Lanka’s National Priority (Video)
-On behalf of the LEADS Forum
Sri Lanka’s Energy Policy Stands at a Turning Point
Sri Lanka faces a critical moment in shaping its energy future. The newly drafted National Electricity Policy and Tariff Strategy raises serious concerns,
as it appears to diverge from the objectives set out in the Electricity Act No. 36 of 2024 (as amended).
The Act mandates that the electricity policy align with a comprehensive National Energy Policy;
however, no such overarching framework currently exists.
முன்னாள் பெண் போராளியின் வாக்குமூலம் .. கேடுகெட்ட புலிகள் இயக்கத்தின் வண்டவாளம்
Arulanandam Arun : இந்த ஒலிப்பதிவில் பேசும் பெண் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தக் காலத்தில்,
18 வயது நிரம்பாத சிறுமியாக இருந்த போது,
புலிகளால் அவரது வீட்டிலிருந்து வெள்ளை வானில் பலவந்தமாக கடத்தப்பட்டு
குழந்தைப் போராளியாக மாற்றப்பட்டார். கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர்,
அவர் யுத்தத்தின் முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் அவர் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டார்.
அவர் என்னைத் தொடர்புகொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்தபோது,
நான் பலமுறை கண்ணீர் வடித்தேன். அவர் அனுபவித்த வேதனை,
அவர் எதிர்கொண்ட துயரம், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தைப் பருவம், புலிகளால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
இவை அவரது சாட்சியத்தின் சில பகுதிகள்.
ஆளுக்கு 1 தொகுதியை விட்டுக்கொடுங்க.. தேமுதிகவுக்கு தரணும்.. கூட்டணிக்கு ஸ்டாலின் செக்.. திமுக மூவ்
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
புதிய கட்சிகளுக்கு இடமளிக்கவும், முக்கிய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைச் சமாளிக்கவும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு திமுக தலைமை தனது கூட்டணிக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முக்கியமான அரசியல் நகர்வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியின் நலன் கருதி திமுக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய தவேக
தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் அரசியல் படியிலேயே சறுக்கலைச் சந்தித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
"கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்" என்று மார்தட்டிய நிலையில், வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய நிலை விஜய்யை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிய நிலையில்,
27+ 1(ராஜ்யசபா).. திமுக- காங். ஒப்பந்தம் இன்று இரவு கையெழுத்து! DMK–Congress Seat Deal 27+1 to Be Signed Tonight
minnambalam.com - Mathi : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (DMK Congress) 27 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று பிப்ரவரி 22-ந் தேதி இரவு கையெழுத்தாகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 22-ந் தேதி ஐவர் குழுவை அறிவித்தது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், (கிரிஷ் சோடங்கர்), தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
அதானி மோடி காம்போ ! ரூ. 25,000 கோடி மறைக்கப்பட்ட முதலீடுகள் - உலகையே உலுக்கும் நிதி மோசடிகள்
![]() |
புதுதில்லி, பிப். 21 –
உலகின் மூன்றாவது பெரிய பணக் காரரான - மோடியின் கூட்டுக் கள வாணி நண்பரான கௌதம் அதானி நடத்தும் வணிக சாம்ராஜ்யம் இன்று கடும் சட்ட நெருக்கடி யில் சிக்கியுள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய வங்கியின் உள்விசாரணையில் ₹25,000 கோடிக்கும் அதிகமான அதானி பங்குகள் ரகசிய மாக இரு மர்ம நபர்களிடம் இருப்பது அம்பலமாகி யுள்ளது. இது வெறும் பங்குச் சந்தை விவகாரம் அல்ல - இந்திய பொருளாதாரத்தையே உலுக்கிய ஊழல் இது.
அதானி குழுமம் என்றால் என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில்...
![]() |
Abdul Careem Muhammad Ismail : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில், தாங்கள் செய்த காரியமென்றுபோல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு விளையாடிக்கொண்டே வெட்கமோ நாணமோ இல்லாமல் பெருமை பேசுகிறார்கள்.
“இந்த மைதானத்தை நாங்கள்தான் உருவாக்கினோம்” என்று கூறுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடுகிறார்கள். விளையாடவிடுகிறார்கள்.
அதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூட மாலிமா அரசை பாராட்டியிருப்பதாகும்.
உண்மையில் வேலை செய்தவர் யார் என்பதைத் தெரிந்திருந்தும்,
ஜார்ஜீவா இப்படிப்பட்ட கருத்தை ஏன் வெளியிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்! தொண்டமான் - நடேச அய்யர்
![]() | ||
|
Badulla Senathiraja : நடேச அய்யர் மற்றும் தொண்டமான் – இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்—
20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் குறைந்த தினக்கூலியே பெற்றனர்.
• 1922 ஆம் ஆண்டு ஆண்களுக்கு தினம் 26 சதம் பெண்களுக்கும் 26 சதம் வழங்கப்பட்டது.
• 1928 ஆம் ஆண்டு ஆண்களுக்கு 54 சதம் பெண்களுக்கு 43 சதம்வழங்கப்பட்டது.
• ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் முறையாகக் கூலி குறைக்கப்பட்டது: ஆண்களுக்கு 49 சதம்பெண்களுக்கு 39 சதம்
• 1933 ஆம் ஆண்டு மீண்டும் குறைக்கப்பட்டு ஆண்களுக்கு 46 சதம் பெண்களுக்கு 37 சென்ட் வழங்கப்பட்டது.
• இந்தக் குறைப்பு 1939 ஜூன் 1 வரை தொடர்ந்தது.
இது தோட்டத் தொழிலாளர்களுக்கு மிகவும் துயரமான மற்றும் அநியாயமான நிலைமையாக இருந்தது.
சிலோன் இந்தியன் காங்கிரஸ் அமைப்பு
இந்த காலகட்டத்தில் Mahatma Gandhi இலங்கைக்கு விஜயம் செய்து பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களில் ஒருவர் Savumiamoorthy Thondaman.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் இணைந்து 1939 ஆகஸ்ட் மாதத்தில் Ceylon Indian Congress அமைப்பை உருவாக்கினர்.
1940 ஆம் ஆண்டு இந்த அமைப்பிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தொண்டமான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்பளையில் 100,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போராட்டங்களும் அமைதியான எதிர்ப்பும் தொடர்ந்து, 1941 பிப்ரவரி 1 அன்று கூலி உயர்வு கிடைத்தது:
• ஆண்களுக்கு தினம் 54 சதம்
• பெண்களுக்கு தினம் 43 சதம்
இது தொழிலாளர் சங்கத்திற்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
சனி, 21 பிப்ரவரி, 2026
உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்? புதிய சிக்கலில் திமுக கூட்டணி?
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உள்பட சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை தனிசின்னத்தில் நிறுத்தாமல் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த திமுக தலைமை தயாராகி வருகிறது. இது கூட்டணி கட்சிகளை சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அதாவது திமுகவின் இந்த முடிவால் அந்த கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றால் கூட்டணி கட்சியினர் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
“அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீதம் வரி- அதிபர் டிரம்ப் அறிவிப்பு
மாலைமலர் : “அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” திறப்பு
திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு
minnambalam.com -Pandeeswari Gurusamy : திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இன்று (பிப்ரவரி 21) திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டி உருவாக்கியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராகுலின் திமுக ஒவ்வாமை? பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!
tamil.oneindia.com பொறுத்துப் பார்த்த திமுக.. அந்த 2 பேரால் பொங்கி எழுந்த ஸ்டாலின்! ராகுல் காந்திக்கு சீக்ரெட் மெசேஜ்?
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு இப்போது ஒரு நெருப்பு வளையத்திற்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.. காரணம் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இழுபறியில் உள்ளது.. இரு கட்சிகளிடையே இணக்கமான போக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.. தேமுதிகவும் கூட்டணிக்குள் வந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் நிலைமை தெரியவில்லை.. என்னதான் நடக்கிறது கூட்டணியில்?
பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான "கிச்சன் கேபினட்" நட்பு இப்போது கசக்கத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த கால தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டின்போது முதல் ஆளாக வந்து கைகுலுக்கும் காங்கிரஸ், இந்த முறை இழுபறியில் நிற்பது அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது..





