Giri Sundar : இந்தத் தேர்தலில், திமுகவின் வியூகம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
அவர்கள் தங்கள் கவனத்தை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது —
'சத்தம்' அரசியலில் கவனம் சிதறாமல், கள யதார்த்தத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.
புதிய முகங்கள், சிறப்பு வேட்பாளர்கள் அல்லது நோட்டாவை விரும்பும் சுமார் 10-15% வாக்காளர்களைக் கொண்ட 'சத்த வாக்கு' என்று அழைக்கப்படுபவர்களை ஒவ்வொரு கட்சியும் ஈர்க்க முயற்சிக்கிறது,
ஆனால் திமுக அந்தப் பிரிவினரை நேரடியாகப் பின்தொடர்வதில் அதிக அக்கறை காட்டவில்லை.
மாறாக, அவர்களின் அணுகுமுறை தமிழ்நாட்டின் முக்கிய வாக்கு வங்கிகளை —
குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையேயான கடுமையான போட்டியை —
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
திங்கள், 27 ஏப்ரல், 2026
இந்த தேர்தலில் திமுகவினர் அதிகமாக குறிவைத்தது எந்த வாக்காளர்களை
3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்! விசாரணை நீதிமன்றங்களில்- நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
hindutamil.in : சேலத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் திறந்து வைத்தார். உடன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதிகள் | படம்: எஸ். குருபிரசாத் |
சேலம்: நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59.43 கோடியில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளந்திரையன், ஜெயச்சந்திரன், குமரப்பன் பங்கேற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு! உலகநாடுகள் கண்டனம்
minnambalam.com - Mathi : அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்திற்கு (White House Correspondents’ Dinner) வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 25-ந் தேதி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 2,600 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த ஆண்டு வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்து, திடீர் துப்பாக்கிச்சூடு சப்தத்தால் நிலைகுலைந்தது. விருந்தினர்கள் மேசைகளுக்கு அடியில் பதுங்கியனர். இந்நிலையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
விஜய் கூட்டத்தில் பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன- பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு
புகச்சோவ் புகச்சோவ் : இடதுசாரி கலைஞர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களுக்கும், நடத்தை மற்றும் நாகரீகத்தில் வித்யாசமிருப்பதுபோல, இடதுசாரி கலைஞர்களின் ரசிகர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களின் ரசிகர்களுக்கும்கூட வித்யாசமுண்டு.
அணில் விஜயின் கேம்பெய்ன்ல பத்தாயிரம்பேர் கூடினப்போ கூட, பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன. தெருவெங்கும் குப்பையும், போக்குவரத்து விதிமீறல்களும், அடிதடி சண்டைகளும் , நாய்ஸ் பொலியூஷனும், பிக்பாக்கெட் முதல் செயின் ஸ்னாச்சிங் வரை நடந்திருக்கிறது.கிட்டத்தட்ட கள்ளக்காதலர்கள் சந்தித்தித்துக்கொள்ளும் களமாகவே விஜயின் கேம்பெய்ன்கள் நடத்தப்பட்டன.
கலப்பட ஐஸ்கிரீம் ஆபத்து .. உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட உத்தரவு
tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: கோடை வெயில் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, கலப்படம் குறித்த கவலையும் எழுந்திருக்கிறது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடித்தால், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அதில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலப்படம் என்பது மெல்ல கொல்லும் விஷம். எனவே இதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும்
![]() |
Janaki Karthigesan Balakrishnan : Solar PV மின்சார உற்பத்திக்கு மேலும் முன்னேற்றம்
இணைத்துள்ள பதிவு சூரிய ஒளிக்கதிர்களால் உற்பத்தியாக்கப்படும் மின்சாரத்திட்டத்தில் solar panel சூடாகுவது மின்சகர உற்பத்தியின் அளவைக் குறைப்பதாக இருக்கும். அந்தக் குறையை நீக்க, அவுஸ்திரேலியாவில் கடற்கரையோரத்தில் நிறுவப்பட்ட solar PV கட்டமைப்பில் solar panel களை குளிரூட்டும் வகையில் கடல்நீரைப் பயன்படுத்தும் முறையொன்றை நிறுவியுள்ளது. அதனால் உற்பத்தியாகும் மின்சாரம் 20% ஆல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள் பாவனைகளைக் குறைத்து பூகோளம் மாசடைதலைத் தவிர்ப்பதும், பூகோளம் வெப்பமாதலைத் தடுப்பதும் நோக்கமாகக் கருதி கடந்த பல ஆண்டுகளாக உலகளாவ கற்பித்தலும், ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தல் எனவும் பரவலாக நடைபெற்று வருகின்றன. பலநாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் உட்பட, இவற்றைக் கடைபிடித்து வருகின்றன.
110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 22 இலங்கை பௌத்த துறவிகள் 22 இன்று காலை கைது
![]() |
புதிய நிதர்சனம் செய்திகள் · 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 22 இலங்கை பௌத்த துறவிகள் 22 இன்று காலை கைது
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை இதுவாகும்
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் கொண்டு
திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் - திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம் திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
![]() |
Periasamy Ponnusamy : ஏன் நான் திமுகவிற்கு 43% வாக்குகள் கிடைக்கும் எனப் பதிந்துள்ளேன்?
திமுகவின் கடந்த தேர்தல் வாக்கு சதவீதம்
திமுக கூட்டணி -20,982,088 வாக்குகள் 45.38%
அதிமுக கூட்’ணி-18,363,499 வாக்குகள் 39.71%
மற்றவை - 6,919,189 வாக்குகள் 14.9%
இதில் திமுகவிற்கு SIR அடிப்படையில் வாக்குகள் குறைக்கப்பட்டதன் தாக்கம், எல்லா அணிகளையும் பாதிக்கும், SIR ஆல் 15.2% வாக்குகள் தமிழ் நாட்டில் குறைக்கப்பட்டன.
இந்த சதவீதத்தை கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளில் எத்துனை சதவீதத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் எனில்,
கடந்த 2021 சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 73.63% பதிவாகத வாக்குகள் 26.37%
15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு – இலங்கை கரந்தெனியா வாக்குமூலம்
ilakkiyainfo.com : பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளன.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
"மே 4-ல் விஜய் அவுஸ்திரேலியா பயணம்! கிரேட் எஸ்கேப் ? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏன் வெளிநாட்டு பயணம்
![]() |
Dailyhunt : "மே 4-ல் ஒரு மெகா ட்விஸ்ட். ஆஸ்திரேலியா டிக்கெட் கன்பார்ம்.. விஜய்யின் மாஸ்டர் பிளான் இதுதான். அதிர்ச்சியில் அரசியல் களம்".!!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் 85.15% என்ற வரலாறு காணாத வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், முக்கிய அரசியல் தலைவர்கள் இளைப்பாறுவதற்காகச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே துபாய் சென்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம் மேற்கொள்கிறார். வழக்கமாகத் தனது திரைப்படப் பணிகள் முடிந்ததும் வெளிநாடு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது தேர்தல் முடிந்தும் இன்னும் பயணத்தைத் தொடங்காமல் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சனி, 25 ஏப்ரல், 2026
நம்பிக்கையில் ஸ்டாலின், எடப்பாடி.. விஜய் கட்சியில் ’அமைச்சரவை’ கலாட்டா.. பீதியில் பாஜக! Mk
minnambalam.com - Kavi : வாருமய்யா.. எலக்ஷனை எல்லாம் ஜோரா முடிச்சுட்டீரு.. அடுத்து என்னவாம்?
ஆமாய்யா.. நான்தான் எலக்ஷன் கமிஷனர் பாரு… ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகமாக இருக்குன்னு எலக்ஷன் கமிஷன் சொன்னதுல இருந்தே எல்லா கட்சிகளிலும் ஒரே பரபரப்புதான்…
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான்னு எல்லாருமே ’கள நிலவரம்’ என்னான்னு ரொம்பவே ஆர்வமாக விசாரிச்சுகிட்டே இருக்காங்க..
இதை பத்தி சிஎம் ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ எலக்ஷன் முடிஞ்ச உடனேயே தன்னுடைய செயலாளர்களிடம் பேசுன ஸ்டாலின், ‘நிலவரம்’ என்னான்னு கேட்டாரு.. அவங்க மாவட்ட கலெக்டர்களை கூப்பிட்டு கேட்டாங்க.. கலெக்டர்கள் மாவட்டங்களோட நிலவரம் பத்தி கொடுத்த ரிப்போர்ட்டை ஸ்டாலினுக்கு அனுப்பி வெச்சிருக்காங்க..
எப்படி பார்த்தாலும்.. விஜய்க்கு 8%தான்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சொல்வது என்ன?
tamiloneindia : மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதும், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொ.செ. எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி சாதாரண கட்சிகளின் தலைவர்கள் வரை, ரிசல்ட் எப்படி இருக்கும் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மே 4-ந்தேதி வரை இந்த டென்சன் இருக்கத்தான் செய்யும்.
பாகிஸ்தானுக்கு சென்ற ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. அமெரிக்கா விஷயத்தில் பாசிட்டிவ் சிக்னல்!
tamil.oneindia.com - Halley Karthik : இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் குறையவில்லை. இப்படி இருக்கையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பாகிஸ்தான் சென்றிருக்கிறார்.
அப்பாஸ் அராக்ச்சி உயர்மட்டக் குழுவுடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றிருக்கிறார். இவர் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?
Tamil Oneindia : கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கொடைக்கானலில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த சபரீசனின் ரகசிய ரிப்போர்ட் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு என தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறார்.. ராசியான இடத்தில் அமர்ந்து அவர் எடுக்கும் இந்த முடிவுகள், தற்போதைய அமைச்சர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்போகிறதா அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறதா என்கிற பரபரப்பு அதிகரித்துள்ளது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஒருவழியாக அமைதியடைந்திருக்கிறது.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அரசியல் கட்சிகளின் கவனம் எல்லாம் தேர்தல் முடிவுகளை நோக்கியே இருக்கிறது.
வெள்ளி, 24 ஏப்ரல், 2026
100% பொய்யை நிஜமாக்க முயலும் தற்குறிகள்- பின்னணியில் பாஜக தில்லுமுல்லு
புகச்சோவ் புகச்சோவ் : கவன ஈர்ப்பு பதிவு...வ்
நேற்று தேர்தல் முடிந்த இரவிலிருந்தே, ஒரு பொய்த்தகவலை கட்டமைக்க,
அனைதுவகை ஊடகங்களும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களும், தெருவுக்குத்தெரு புரளிகளை கிளப்பும் பெய்டு பிச்சைக்காரர்களும், டீக்கடைதோறும் தகவல்களை விளம்புகிற குவாட்டர் காவாலி புரோக்கர்களும், திராவிட எதிர்ப்பின் அத்தனை தலைமைகளும், நூறடிக்கு ஓரிடத்தில் அத்தகவல் பரவுகிறபடி அந்தப்பொய்யை தமிழ்நாடெங்கும் உலவ விட்டுள்ளனர்.
அந்த தகவல்களின் வெளிப்பாடு பின்வருமாறு...
1, பசங்கள சும்மா சொல்லக்கூடாதுபா...
மெரட்டிட்டானுக
2, அடேங்கப்பா! இவ்வளவுதூரம் ஏறிவருவானுகன்னு திமுககாரன் சத்தியமா நெனைச்சிருக்கமாட்டான்.
3, வந்துட்டாண்டா திமுகவ அழிக்க. இனிமே திமுக காலிதான்
4, பசங்களோட ஆரவாரமும், உற்சாகமும் பெரிபெரிய திமுக தலைங்களையே ஆட்டிருச்சிபா...
5, எப்புடியும் இந்த பசங்கள கொறசொல்லவே முடியாது. ஆட்டம் ஆரம்பமாய்டிச்சி.
தவெக தோற்கும். 200க்கும் மேற்பட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.
![]() |
A Sivakumar 1991 தொடங்கி களத்திலும் 2011 தொடங்கி தளத்திலும் இயங்கும் எனக்கு இந்த மீடியாக்களும் நட்ட நடுநிலை நக்கிகளும் எந்த அடிப்படையில் தவெக 20% வாங்குவான்னு சொல்லுறாங்கன்னே தெரியலை, புரியலை.
What is the scale these people use to measure this percentage for TVK…?
அரசியல் தவிர வேறு எதுவும் பேசாத நமக்கே தவெகவின் 10 வேட்பாளர்களின் பெயர் தொகுதி பெயரோடு தெரியாது.
தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலும், எந்த ஊரிலும் வேட்பாளரின் பெயரை சொல்லி வாக்கு கேட்டு நேரடி / மறைமுக பிரச்சாரமே செய்யாத தலைவன்...
இந்த தவெக வேட்பாளர் தன் கடினமான உழைப்பால் தொகுதியை தலைகீழாக பிரித்து மேய்கிறார் என்று தமிழ்நாட்டு ஊடகங்களின் கவனம் பெறுமளவுக்கு தொகுதியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள உழைக்காத, உழைக்கத் தெரியாத 231 இதர வேட்பாளர்கள்...
எல்லாம் சேர்ந்து தங்கள் தொகுதியிலும் தமிழ்நாடு அளவிலும் எப்படி 20% வாங்குவாங்க…?
ஈரான் 8 பெண்களைத் தூக்கிலிடாது! - டிரம்பின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியா?
![]() |
புதிய புனல் : "8 உயிர்கள்.. ஒரு ஒப்பந்தம்! - மரண தண்டனைக் கைதிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்க அதிபர்!"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு முக்கிய மனிதாபிமான நிபந்தனையாக, அந்நாட்டினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பெண்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
"தயவுசெய்து அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவர்களை விடுவித்தால் நான் அதனைப் பெரிதும் பாராட்டுவேன். இது நமது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக (Great start) அமையும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுதலை செய்யக் கோரிய அந்த 8 பெண்களும், ஈரானில் அண்மையில் நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகக் கூறப்படும்
ரஷிய அதிபர் ஜோசெப் ஸ்டாலினும் ரஷ்ய உளவு தலைவர் பெரியாவும்
மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் இல்லாத நிலை, அதனால் தனியாக இங்கே தங்கி ரோஜா செடிகளை வளர்ப்பதிலும், எலுமிச்சை மற்றும் தர்பூசணி பயிரிடுவதிலும் நேரம் செலவிட்டார். இது அவருக்கு ஒருவித மன அமைதியைத் தந்ததாகக் கூறப்படுகிறது. அவரது தட்சாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. அவர் தினமும் பல மணிநேரம் வாசிப்பதில் செலவிடுவார். மேலும், கிராமபோன் இசைத்தட்டுகள் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்.
வியாழன், 23 ஏப்ரல், 2026
மே முதல் வாரத்தில் உதயசூரியன் உதிக்கும்.வெற்றி - DMK பெறுவார்கள் -என்.ராம் உறுதி
ராஜா ஜி : வாக்கு சதவிகிதம் கூடினால் ஆளும்கட்சிக்கு பாதிப்பு என்கிறார்களே என்று பலரும் கேட்கிறார்கள்!
பல முறை நடந்தது போல் இதும் கொஞ்சம் உண்மைதான்.
SIR நடந்ததற்குப் பிறகு கிட்டத்தட்ட 15% வாக்காளர்கள் நீக்கம்!
இதன் படி பார்த்தால் இப்போது கிடைக்கும் வாக்குகள் சதவீதத்தோடு 15% கழித்து விட்டு பாருங்கள் உண்மை தெரியும்!
90% என்றால் 75%
80% என்றால் 65%
அப்படி பார்த்தாலும் 5% அதிகமாக வாக்கு எண்ணிக்கை தெரியும், இதுவும் உண்மைதான்.
என்னப்பா குழப்புற என்பீர்களே.
இதுதான் 18 முதல் 30 வயது வரை எப்போதும் வாக்களிக்காத இளைஞர்களில் சிலர் விசைக்கு வாக்காளித்திருப்பார்களே அவர்களின் எண்ணிக்கை!
TN Election 2026 தமிழக வாக்குப்பதிவு நிறைவு... மொத்த வாக்கு சதவீத பட்டியல்
tamil.news18.com : தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல், வாக்குப்பதிவு குறித்த இன்றைய முக்கிய செய்திகளை நியூஸ் 18 தமிழ்நாட்டில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்பில் இருங்கள்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
புதன், 22 ஏப்ரல், 2026
நடிகன் விஜய்யின் வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
![]() |
![]() |
Mugil Bharathi : வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
சோம்பேறி பொறுக்கி நடிகன் அரசியலுக்கு வந்ததில் ஒரு மிகப்பெரிய நன்மை இருக்கு. தமிழ்நாட்டில் நிலவிய ஒரு பலநாள் Myth உடைஞ்சிருக்கு..!!
எதோ தமிழ்நாட்டில் ஆண்கள் எல்லாரும் நடிகைகள் மீது காமரீதியான மோகம் கொண்டவர்கள்.
"ஒரு நடிகை பொதுவெளியில் வந்துரக்கூடாதே, உடனே முண்டி அடித்துக்கொண்டு எலும்பை கண்ட நாயை போல் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைபவர்கள் இந்த ஆண்கள்" என்று எகத்தாளமும் ஏளனமும் செய்த்தவர்கள்தான் இந்த மங்கையற்கரசிகள்..!! மூச்சுவிடக்கூட இடமில்லாத நகர பேருந்துகளில் தப்பி தவறி ஒரு ஆணின் கை மேலேபட்டுவிட்டால் அப்பிடியே கண்ணகியாய் அலறி துடித்து காளி அவதாரமெடுத்து அவனை துவம்சம் செய்துவிடுவார்கள் இந்த குலக்கொழுந்துகள்..!!
அப்பிடியாய்ப்பட்ட வீர தமிழச்சிகள்தான், இதோ, தங்கள் ஆதர்ச நாயகனை காணும் ஆவலில்... தப்பு, தப்பு... ஆதர்ச நாயகனை காணும் "வெறியில்", இவ்ளோ கும்பலையும் பொருட்படுத்தாது, பாதுகாப்பு பணியில் உள்ள காவலரைக்கூட துச்சமாக மதித்து, மிதித்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
பாலகணேசன் அருணாசலம் : நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
முதலில் வருமான வரித் துறையை வைத்து விஜய்-ஐ வளைத்தது பா.ஜ.க!
அடுத்து... அந்த விஜய்-ஐ 'ஜோசப் விஜய்' என்று. எச். ராஜாவை ஏவி விட்டு மத அடையாளப்படுத்தியது பா.ஜ.க!
அதனை தொடர்ந்து விஜய்-ஐ கட்சி தொடங்க கட்டளையிட்டது பா.ஜ.க!
₹1,000 கோடி மோசடியில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கிய லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் தொடங்கி,
விஜய் மீதான வருமான வரி சோதனையை முன்னின்று நடத்திய I.R.S., அதிகாரி அருண்ராஜ், பா.ஜ.க-விடம் அரசியல் அபயம் தேடி டெல்லிக்கு ஓடி வந்த செங்கோட்டையன்,
வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!
![]() |
ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு
இந்த நாடகம் யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
அன்றாட வாழ்வியலில் காணப்படும் அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது
கடுமையான விமர்சனங்களையும் கூட நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்! நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை
செவ்வாய், 21 ஏப்ரல், 2026
சூரத்தில் வேலையை இல்லை - குஜராத் ரயில் நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
bbc.com : உத்னா: சூரத்தில் வேலையை இல்லை - குஜராத் ரயில் நிலையத்தில் கும்பலாக கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியது ஏன்? வீடியோவின் பின்னணி
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் 'லேசான' தடியடியைப் பிரயோகிக்கும் சூழல் உருவானது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.








