வெள்ளி, 3 ஜூலை, 2026

தலைமைக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக தொண்டர்கள்

ராதா மனோகர்  திமுகவின் உண்மையான ஆதரவாளர்கள்  இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்து பல கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கிறார்கள் 
இன்னும் சரியாக  சொல்லப்போனால் இவை  தமிழ்நாட்டு  நலன் சார்ந்தவை!
தமிழ்நாட்டு நலனும் திமுக நலனும் வேறு வேறு என்று கருதாத தொண்டர்கள் இவர்கள்.  
ஒரு காரசாரமான கருத்து மோதல்கள் நடக்கும் போது பலருக்கும் விருப்பம் இல்லாத விடயங்கள் வெளியே வருவது இயல்புதான் 
அதுதான் சரியான ஜனநாயக பொதுவெளியுமாகும் 
இப்படி வெளிப்படையாக கருத்து கூறுவோர்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவோர்கள் பெரும்பாலும் தலைமையை குளிர்விக்க வேண்டும் என்ற ஜால்ரா மனநிலை கொண்டவர்கள்தான்.
எல்லா அரசியல் கட்சிகளின் வீழ்ச்சிக்கும் ஜால்ராக்கங்களின் பங்கே பிரதானமாக இருந்தது என்பது வரலாறு.
இதில் கருத்து கூறும் எல்லோரும் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள்தான் 
திமுக ஆதரவாளர்கள்தான்!
இன்னும் சரியாக சொல்லப்போனால் இவர்கள் பலரும் நடுநிலைமையாளர்கள் கூட கிடையாது 
இவர்கள் திமுக ஆதரவாளர்கள் பெரும்பாலும் தன்னார்வலர்கள்

ஆர்.எஸ் பாரதி : கரூர் பெருந்துயரம்: ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி!

 minnambalam.com  -Pandeeswari Gurusamy  : கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் - தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு - ஆஜராக உத்தரவு

 hindutamil.in - செ.ஞானபிரகாஷ் : இது தொடர்பான கொலை முயற்சி வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரிய வில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து, அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு குற்றப்பத்திரிகையை லாஸ்பேட்டை போலீஸார் தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

செந்தில் பாலாஜி Vs விஜய் . போலீஸ் தீவிர ‘வேட்டை’

 மின்னம்பலம் ”சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் ஆபரேஷனை செந்தில் பாலாஜி டீம் தொடங்கிச்சு.. தவெக எம்.எல்.ஏக்கள்கிட்ட பேசுச்சு.. ஆனா உளவுத்துறை காதுக்கு போனது ஆபரேஷன் ஸ்டாப்”ன்னு நாமதான் போன ஜூன் 23-ந் தேதியே சொன்னோம்..
அதோட பாலோ அஃப்தான் இந்த கேஸ் ஓபனா வெட்டவெளிச்சமாகிடுச்சு.. இந்த கேஸில இன்னைக்கு வரைக்கும் 9 பேரை அரெஸ்ட் செஞ்சுட்டாங்க.. இவங்க எல்லாமே திமுக மாஜி செந்திலபாலாஜிக்கு வலது இடதுமா இருந்த சோ கால்ட் ‘கரூர் கம்பெனி’ ஆட்கள்தானாம்..

திமுக தோத்தது திமுகவிற்கு தெரியும்.. -ஈழப்போராட்டத்தை காண்பித்துதான் இயக்கங்களை வளர்த்து கொண்டிருந்தோம் - தோழர் மனோஜ்

 ராதா மனோகர் : இன்றைய தமிழர்கள் பெரிதும் இனவாதிகள்தான் 
இதை கூறினால் பலருக்கும் கோபம் வரும் 
நாம்தானே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உலக மானுடவியல் பேசியவர்கள் என்று ஒரு பதில் சொல்வார்கள்.
தமிழர்களிடையே எவ்வளவு மோசமான நோயிருந்திருந்தால்,
 இப்படி ஒரு ஸ்ட்ராங்கான மருந்தை முன்னோர்கக்ள் கண்டு பிடித்திருப்பார்கள்,
என்று நாம் பதிலடி கொடுக்கலாம்?
நாம் தமிழர்கள் ரேசிஸ்ட் தான்!   
ஆனால் இதுதான் உண்மை .
திராவிட சித்தாந்தம் இனவாதத்திற்கு நேரெதிரான கோட்பாடு 
தமிழர்களின் இனவாத சிந்தனைக்கு தீனி போட்டு வளர்த்தது தமிழ் தேசியம் என்ற  முகமூடியை போட்டுகொண்டு வந்த வெறுப்பு அரசியல் வியாபாரிகள்தான்.
இன்று இந்த வெறுப்பு அரசியலின் பக்க விளைவுகள் மிக மோசமானது 
இவர்களின் முதல் குறி சுயசிந்தனை 
தமிழ் தேசியர்களிடம் இது சுத்தமாக இல்லை 
இவர்கள் ஒரு வெறுப்பு அரசியல் பஜனையே கோஷ்டிதான் 
அடுத்ததாக இந்த தமிழ் அரசியல் வியாபாரிகள் குறிவைத்தது  சுயமரியாதை கோட்பாட்டைதான் 

திமுகவின் தோல்வி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதி அமைச்சில் இருந்து தூக்கியதில் இருந்துதான் தொடங்கியது

 ராதா மனோகர் :திமுகவை அதிகமாக அல்லது மிக மோசமாக விமர்சிக்கும் பலரும் ஏதோவொரு காலத்தில் திமுகவை ஆதரித்தவர்களாகவே இருப்பது வழக்கம் 
எம்ஜியாரின் பிரிவினைக்கு  முன்பிருந்தே  இந்த லிஸ்ட் வளர்ந்தது 
விலகி போனவர்கள் ஏதோவொரு சுயநலம் சார்ந்த விடயத்தின் காரணமாகவே விலகி போனார்கள் என்று கூறுவதும் வழக்கம்தான் 
அநேகமாக அதுவும்  உண்மைதான். 
ஆனாலும் கூட சில சமயங்களில்  விலகலுக்கு நியாயமான காரணங்களும் இருந்தது உண்டு
இன்னும் சிலரை திமுகவே கொஞ்சம் தள்ளி வைப்பதுவும் அல்லது ஒதுக்கி வைப்பதுவும் கூட எல்லா கட்சிகளிலும் நடக்கும் அரசியல் வித்தைகள்தான்.

வியாழன், 2 ஜூலை, 2026

உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம்

 உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் முழு வீச்சில் நடக்கிறது 
குறிப்பாக அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில்தான் இந்த இந்தியா கோ ஹோம் முழக்கம் மையம் கொண்டுள்ளது 
இதற்க்கு முழு பொறுப்பையும் வடஇந்தியர்கள்   குறிப்பாக சங்கிகள் பொறுப்பேற்க வேண்டும் 
இந்தியர்கள் உலகின் ஏனைய மனித குழுமங்களை மதிப்பதில்லை 
எப்போதும் பிறரை தன்னை விட அல்லது தான் சார்ந்த இனக்குழுமத்தை விட கீழானதாகவே கருதும் இந்த இந்திய பண்பு முழுவதுமாக வெளிப்பட்டு விட்டது 
முன்பு சிறிய அளவில் இருக்கும் போது கொஞ்சம் அடக்கி வாசித்த இந்த சங்கித்தனம் இப்போது அதிக அளவில் இருப்பதால் கொஞ்சம் குளிர் விட்டு போய் பொதுவெளியிலேயே தங்களின் பொது இடங்களில் குப்பை போடுதல் மற்றும் சிறுநீர் எச்சில் எக்சிபிஷன்களை அரங்கேற்றுகிறார்கள்.

இஸ்லாமிய தஜிகிஸ்தான் ஹிஜாப் தடை ! பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் banned

 95 வீதம் இஸ்லாமிய மக்களை கொண்ட தஜிகிஸ்தான் குடியரசு பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ளது 
மேலும் அந்த நாட்டு அதிபர் இமமோலி ராக்மோன் 1560 மசூதிகளை மூட உத்தரவு. அவைகள் படிக்கும் வசதி, கிளினிக், விளையாட்டு கற்கும் இடங்களாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார் . 
18 வயதுக்குள்ளான குழந்தைகள் மத பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அறிவிக்க பட்டுள்ளது 
இந்த அறிவித்தலை மீறி செயல்படும் கட்டிடங்கள் பறிமுதல்  செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது 
அநேகமான சட்டவிரோத மசூதிகள் மக்களை  ISIS. பயங்கரவாத இயக்கத்தில் கொண்டு சேர்க்கின்றன என சொல்கிறார் அவர்.

புதன், 1 ஜூலை, 2026

ஸ்டாலினை சிக்கலில் மாட்டிவிட்ட செந்தில் பாலாஜி.. குறுமும் திமுக நிர்வாகிகள்!

 மின்னம்பலம் : போன ஜூன் 23-ந் தேதி நாம பேசுன, ”தவெக எம்.எல்.ஏக்களை தூக்கிய செந்தில் பாலாஜி” விவகாரம்தான் இப்ப தீ பிடிச்சு எரியுது.. இந்த கேஸில 3 பேரை அரெஸ்ட் செஞ்சிருக்கு போலீஸ். செந்தில் பாலாஜிக்கும் அவரோட தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பிருக்குன்னு போலீஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கு..
இந்த அறிக்கையை அடுத்து பிரஸ் மீட்ல அமைச்சர் நிர்மல்குமார், மு.க.ஸ்டாலினை ரொம்பவே கடுமையாக பேசினார்..
இந்த சம்பவங்கள்தான் திமுகவில இப்ப பேசுபொருளா மட்டுமில்ல ‘குமுறலா’ இருக்குதுன்னு சொல்றாங்க.. அப்படி என்ன குமுறல்னு சில மா.செ.க்களை தொடர்பு கொண்டு பேசுனப்ப, “செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு ஆக்‌ஷனுமே நம்ம பாலிட்டிக்ஸ்ல கான்ட்ரவர்சியாகத்தான் இருக்குது..

ஜெர்மனியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

 இளவேனில் : வடக்கு ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில்  இன்று (29) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 
ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சாந்தனு நன்றி- “நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேன்...”

p> tamil.news18.com  : சாந்தனு, தந்தை பாக்யராஜ் மறைவுக்கு ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்
“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது” என பாக்யராஜ் மகன் சாந்தனு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது” என பாக்யராஜ் மகன் சாந்தனு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காலை வாரப்போகும் கம்யூனிஸ்டுகள்? தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தோழர்கள்! என்னாச்சு?

  tamil.oneindia.com -Rajkumar R  ; வேலையைக் காட்டிய தோழர்கள்.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கம்யூனிஸ்ட்கள்! என்னாச்சு?
சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தோழமைக் கட்சிகளுக்கான முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் அழைப்பு விடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் மனித உரிமையாளர் மஹ்ரங் பலூச்சிற்கு ஆயுள் தண்டனை! குவெட்டா நீதிமன்றம் தீர்ப்பு

 பிபிசி தமிழ் : "பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் மஹ்ரங் பலூச்சிற்கு ஆயுள் தண்டனை! குவெட்டா நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் கொந்தளிப்பு!"
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த முக்கிய சமூக ஆர்வலரான மஹ்ரங் பலூச் (Mahrang Baloch) மற்றும் அவரது கூட்டாளி சிப்கத்துல்லா (Sibghatullah) ஆகிய இருவருக்கும், ஒரு துணை ராணுவ வீரரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து குவெட்டாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 2024-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது, கடமையில் இருந்த துணை ராணுவ வீரர் ஷபீர் பலூச் (Shabbir Baloch) கொல்லப்பட்டார்.

செவ்வாய், 30 ஜூன், 2026

ரஷ்ய சீன புரட்சிகளின் தோல்விகளும் உண்மையும்! ,பதிவு 8

No photo description available.

 Chandru R    · : 1935 முதல் 1941 வரையிலான காலகட்டத்தில், சோவியத் ரசியாவில் (USSR) ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்றைய வடகொரியாவின் நிலையைப் போன்றே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடனும், மிகக் குறைந்த சுதந்திரத்துடனும் தான் இருந்தது.
சொல்லப்போனால், கம்யூனிசக் கொள்கைகளின்படி அது "தொழிலாளர்களின் அரசு" என்று அழைக்கப்பட்டாலும், நடைமுறையில் தொழிலாளர்கள் கடுமையான சட்டங்களால் ஒடுக்கப்பட்டனர்.
:1. வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமின்மை (இன்றைய வடகொரியா போல)1938 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொழிலாளர்களின் சுதந்திரத்தை முழுமையாகப் பறித்தன:வேலையை மாற்ற தடை:
 ஒரு தொழிலாளி தனது தொழிற்சாலையை விட்டுத் தன்னிச்சையாக விலகவோ அல்லது வேறு வேலைக்கு மாறவோ சட்டப்படி அனுமதியில்லை.

முதல்வர் விஜயும் கோக்கையின் கலாச்சாரமும்! முதல்வரே கோகைன் பயனாளியா ? சுசித்ரா பேட்டி

 Abilash Chandran : அமைச்சர் கில்லி சரத் கொக்கெய்ன் விவகாரம் தந்த நன்மை
தவெகவினர் போதை இல்லா தமிழகம் மராத்தான் நடத்தும்போது திமுக தரப்பு இந்த கொக்கெய்ன் காணொளியை வெளிவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 
தவறில்லை. அரசியலில் இப்படியான எதிர்ப்பிரச்சாரமும் வேண்டும். 
அதேநேரம் என்னுடைய பார்வையில் ஒரு அமைச்சர் கொக்கெய்ன் பயன்படுத்துவது பிரச்சினை அல்ல. முதல்வர் மீதே இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்டு. 
அதாவது அவர் முன்பு தன் வீட்டில் நடத்திய சினிமா பார்ட்டிகளில் இது வெள்ளமாக ஓடுவதாகச் சொல்வார்கள். 
அவர்தான் என்றில்லை இந்தியாவில் கணிசமான மேற்தட்டு இளைஞர்களின் விருந்துகளில் கொக்கெய்ன் உள்ளிட்ட போதை வஸ்துகள் புழங்குவது சாதாரணமாகி விட்டது. 

திங்கள், 29 ஜூன், 2026

தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

 tamil.oneindia.com - Vignesh Selvaraj   :  சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்திலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

உதயநிதி : தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது!

 hindutamil.in  : தஞ்சாவூர்: தமிழகம் தற்​போது பெரிய பேரிடரில் சிக்​கிக் கொண்​டுள்​ளது என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் குற்​றம்​சாட்டி உள்​ளார்.
தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​தநாட்​டில் நேற்று நடை​பெற்ற திமுக நிர்​வாகி இல்​லத் திருமண விழா​வில் அவர் பேசி​யது: தமிழகத்​தில் அமைந்​துள்ள சோஃபா மாடல் ஆட்​சி​யின் போலி பிம்​பம் கடந்த ஒரு மாதத்​தில் நொறுங்கி உள்​ளது. ஒவ்​வொரு நாளும் இந்த ஆட்​சி​யின் அவலங்​களை மக்​கள் புரிந்து வரு​கின்​றனர். அரசின் தவறுகளை இளைஞர்​கள் தட்​டிக்​கேட்​கத் தொடங்​கி​யுள்​ளனர். தட்​டிக்​கேட்​கும் இளைஞர்​களை​யும், திமுக​வினரை​யும் கைது செய்​யும் வேலையை தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது. எனவே, இதுபோன்ற அடக்​கு​ முறை​களை எதிர்​கொள்ள திமுக​வுக்கு அதிக வழக்​கறிஞர்​கள் தேவைப்​படு​கின்​றனர்.

ஞாயிறு, 28 ஜூன், 2026

பிரபாகரன் ஊரான் வீட்டு பிள்ளைகளுக்கு சயனைட் கட்டிவிட்டு தன் பிள்ளைகளை டாக்டர்களாக்க கனவு கண்டார்!

 போர்க்காலங்களில் வன்னியில் இருந்து ஆங்கில இலக்கியம் படித்தது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே 
அந்த இரண்டு மாணவர்களின் பெயர்கள் 
துவாரகா பிரபாகரன் ( பிரபாகரனின் மகள்)
சார்ள்ஸ் பிரபாகரன் (பிரபாகரனின் மகன்) 

கிரிக்கெட் மாணவிகளை வன்புணர்ந்த கேரளா பயிற்சியாளருக்கு 99 ஆண்டுகள் சிறை

ilakkiyainfo.com  :கிரிக்கெட் பயிற்சி பெற வந்த இளம் வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சியாளர் மனு (40) என்பவருக்குத் தொடர்ச்சியாகக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த மனு, கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு, பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பொலிஸார் அவர் மீது 6 போக்சோ (POCSO) வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

சனி, 27 ஜூன், 2026

ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் அமெரிக்க தம்பதி கடத்தலும்

May be an image of one or more people and people smiling

 ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்! 
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன் 
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது 

திரு கே பாக்யராஜ் காலமானார் - தமிழ் திரையுலகின் இறுதி Feel good moive maker பீல் குட் மூவியே மேக்கர்

 

ராதா மனோகர் : திரு கே பாக்யராஜ்தான் தமிழ் திரையுலகின் இறுதி Feel good movie maker! 
இவரை திரைக்கதை மன்னன் என்று கூறுகிறார்கள் 
அது ஓரளவு சரிதான் 
ஆனால் அதைவிட இவரை எனக்கு பிடித்திருப்பது இவரின் feel good movie பீல் குட் மூவிகளுக்காகத்தான் 
எம்ஜியார் படங்களும் இந்த வகையில் ஓரளவு வரும் 
சமூக நியதிகளுக்குள் கொஞ்சம் கட்டுப்பட்டுதான் எம்ஜியார் படங்களின் பீல் குட் தன்மை இருக்கும் 
அந்த நியதிகளை உடைத்து எறிந்ததில் பாக்யராஜின் பங்கு  அதிகம்தான் 
இவரின் படங்களில் இடம் பெற்ற பல சிறு சிறு காட்சிகள் 
பல  சமூக அவலங்களை மிக எளிதாக எள்ளிநகை ஆடியிருக்கிறது 
உதாரணமாக தூறல் நின்று போச்சு படத்தில் பெண் பார்க்க வரும் காட்சியில் சுலோக்சனா பயந்து பயந்து நடுங்கும் போது  பாக்யராஜ் 
ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இது பயத்தில டீயை கீயை கொட்டிடப்போகுது என்று கூறிக்கொண்டே அவரின் தட்டை வாங்கி தானே எல்லோருக்கும் கொடுப்பார் 

வெங்கட நாராயணா நியமனத்துக்கு ஆ.ராசா கடும் விமர்சனம்!- வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) :

 
minnambalam.com - Kavi  :  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான இந்த பதவியை ஒரு பட நிறுவனத்தின் தயாரிப்பாளருக்கு எப்படி கொடுக்க முடியும், முதல்வர் விஜய்க்கு தெரிந்தவர் என்பதால் கொடுக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி, 26 ஜூன், 2026

கரூர் 41 கொலைகள் - ஜனநாயகன் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதியாக நியமனம்!

 மின்னம்பலம் -  Kavi :   தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமைச்சருக்கு இணையான பதவியாகும்.
ஆளுநரின் உத்தரவுப்படி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ”புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கான ‘சிறப்புப் பிரதிநிதி’ என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

எ.வ.வேலு பேட்டி : ”என் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை”

 மின்னம்பலம் - Kavi : திமுகவின் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூன் 25) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் சோதனை நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

”திமுக- அதிமுக” திருமணம்! ஸ்டாலின் நடத்தி வாய்த்த தங்கமணி - மதிவாணன் வீட்டு திருமணம்

 மின்னம்பலம் - Mathi : திருவாரூரில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin), முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் இல்ல திருமணத்தை ஜூன் 25-ந் தேதி நடத்தி வைத்தார்.
உ.மதிவாணனின் இளைய மகன் கதிரவன்- மெளனிகா ஆகியோரது திருமணம் திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசிய தகவல் பகிரப்பட்டு வருகிறது.