திங்கள், 4 மே, 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026!

TN Election Result 2026 | எந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தொகுதியில் அதிக வாக்கு பதிவு?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் LIve

JVP அரசாங்கத்தில் இருந்து 15 MPக்கள் விலகல்? owner

 வீரகேசரி : தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்திலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் அதிகளவில் பரவி வருகின்றன.
திசைகாட்டி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பெரிதாகப் பேசி வந்தாலும், திசைகாட்டியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் அமைத்து இரண்டு மூன்று வாரங்கள் கடந்த போதே இது குறித்து கிசு கிசுக்கள் எழுந்தன. திசைகாட்டி அரசாங்கத்திற்குள் பல்வேறு வடிவங்களில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே மோதல்கள் நிலவியமையே இதற்கு காரணம்.

கலாநிதி – பேராசிரியர் பதவிகள், கொள்கை ரீதியான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களை மையமாகக் கொண்டு இந்த மோதல்கள் உருவெடுத்து வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி.யின் அரசியல் குழுக்கூட்டங்கள் இதனால் மிகவும் சூடுபிடித்திருந்துள்ளன.

ஞாயிறு, 3 மே, 2026

ஆர் எஸ் பாரதி : வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க பாஜக திட்டம்!

  hindutamil.in  :  சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே.4 அன்று சட்டம் ஒழுங்கு சீர்குலையக்கூடும் என்ற அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த மனுவில், “2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, பாரதிய ஜனதா கட்சியும் , அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்படும் பிற அரசியல் கட்சிகளும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பங்களை விளைவிக்கத் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

வேடசந்தூர் தொகுதி : ஆண்டுகளாக அரியணை ஏறும் கட்சியை அடையாளம் காட்டும் தொகுதி!

 dinamalar.com  :  தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் இருந்தாலும் பெல்வெதர் தொகுதியான வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தான் அரியணை ஏறும். இந்த உண்மை 2026 தேர்தலிலும் தொடருமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. அனைத்து முன்னிலை விவரங்கள், ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் அதன் பின்னர் படிப்படியாக அறிவிக்கப்பட இருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கட்சித் தலைவர்களின் தொகுதிகள், முக்கிய கட்சிகளின் பாரம்பரிய தொகுதிகள் இருந்தாலும் ஒரேயொரு தொகுதியை தான் அனைத்து கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றன.

OCI Card வெளிநாடுவாழ் இந்திய குடிமக்கள் அட்டை எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? என்ன ஆவணங்கள் தேவை?

 ilakkiyainfo.com  : வெளிநாட்டு வாழ் இந்திய குடிமக்கள் கார்ட் என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.
இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நடைமுறைகள் தொடர்பில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் வெளிநாட்டு வாழ் இந்திய பிரஜைகள் அட்டை என்பது என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்வது? அதற்கான ஆவணங்கள் என்ன? என்பது போன்ற விடயங்கள் கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது.

சனி, 2 மே, 2026

செல்வப்பெருந்தகை : 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்!

 hindutamil.in -டி.ஜி.ரகுபதி  : கோவை: 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கோவையில் செல்வப்பெருந்தகை உறுதிபட தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மே 2) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
சமீபத்தில் வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. மக்கள் முடிவு செய்து விட்டனர்.

கூட்டணி கட்சிகளை பற்றி தலைமை பார்த்துக்கொள்ளும்.. தான்தோன்றித்தனம் வேண்டாம்

Sabaa Naayagam :  கூட்டணி கட்சிகளை பற்றி தலைமை பார்த்துக்கொள்ளும்...
பத்து மாசம் குழந்தையை தாங்கி பெற்று எடுக்கும் தாயுக்கு தான் தெரியும் உண்மையான வலி...
தந்தைக்கு கூட பிரசவ வலி தெரியாது..
இது cringe ஆக இருந்தாலும் உண்மை...அதேப்போல தான் கூட்டணி கட்சி விஷயமும்..
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் உட்கார்ந்துட்டு easy ஆக விசிக வேண்டாம் என சொல்லலாம்..திருமா waste என பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்... தேர்தல் நேரத்தில் அசோக் நகர் விசிக அலுவலகத்துக்கு சென்று நம்ம தொகுதிக்கு திருமா பிரச்சாரத்திற்கு வருவாரா என ஏங்கி தவிக்கும் வட மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், வேட்பாளருக்கு தான் தெரியும் விசிகவின் உபயோகம்...  MRK, SS, நெய்வேலி சபா, அன்னியூர் சிவா, VILLUPURAM லட்சுமணன், நந்தகுமார், மெட்ராஸ் SEKAR BAABU, சைதை மாசு, கார்த்திக் மோகன்,  ஜெயங்கொண்டம் கண்ணன், குடந்தை ANBU, மருதூர் செழியன், பூம்புகார் நிவேதா என 150 மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள், செலவு செய்யும் வேட்பாளர்கள், கழக நிர்வாகிகளுக்கு தான் கூட்டணி கட்சியான விசிக வின் USE தெரியும்... 

சூரியசக்தியில் தமிழகம் முதலிடத்தில் , 218.60 கோடி யூனிட்கள் - ஒன்றிய மின்சார ஆணையம் மார்ச் மாத அறிவிப்பு

 தினமலர் : சென்னை: தென் மாநிலங்களில் உள்ள சூரியசக்தி மின் நிலையங்களில், கடந்த மார்ச்சில் உற்பத்தியான மின்சாரம் விபரத்தை மத்திய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகம், 218 கோடி யூனிட்களுடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல், மின்சாரம் கிடைக்கும் வகையில், சாதகமான வானிலை நிலவுகிறது. இதனால், தனியார் நிறுவனங்கள், நிலத்தில் அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, ஆர்வம் காட்டுகின்றன.

வெள்ளி, 1 மே, 2026

வட்டிக்கு கடன் வாங்கி விஜய் கட்சியில் போட்டியிட்ட அரசியல் எம் எல் எம் பேர்வழிகள்

 tamil.oneindia.com  - Shyamsundar :; தோற்றால் கதை ஓவர்.. கடன் கழுத்தை நெறிக்கும்.. விஜய்தான் உதவனும்.. புலம்பும் தவெக வேட்பாளர்கள்?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது. விஜய், அரசியலில் காலடி எடுத்து வைத்தபோது அவரோடு பயணித்த வேட்பாளர்கள் இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, பல வேட்பாளர்களின் வீடுகளில் நிம்மதி மறைந்து, 'கடன்' என்ற பூதம் ஆட்டமிழக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கை : 2.5 மில்லியன் டாலர் ஹெக்கரின் கணக்குக்கு மாற்றம் - அதிகாரி மர்மமாக உயிரிழப்பு

ரங்க ராஜபக்ஸ

 bbc.com : ரஞ்சன் அருண் பிரசாத் : இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹெக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஸ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ரங்க ராஜபக்ஸ நேற்றைய தினம் குளியாபிட்டிய பகுதியிலுள்ள அவரது வீட்டு வளாகத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் இந்திய நிறுவனத்திடம்! “நாட்டின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறி” – வசந்த முதலிகே கடும் விமர்சனம்!

 ilakkiyainfo.com - Mathdusha : இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் (People’s Struggle Movement) முக்கிய செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 
இத்திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், 
இது நாட்டின் சுயாதீனமான முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பாதிப்பதுடன், இலங்கைப் பிரஜைகளின் தேசியத் தரவுப் பாதுகாப்பிற்கு (National Data Security) அச்சுறுத்தலாகவும் அமையும் என எச்சரித்துள்ளார்.

வியாழன், 30 ஏப்ரல், 2026

பாடகி ஸ்வாகதாவிற்கு பாலியல் தொல்லை: யார் அந்த இசையமைப்பாளர்? இசையமைப்பாளர் சாம்?

முக்கிய செய்தி | இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது மோசடி புகார் | மாலை முரசு  செய்திகள் | Sam C .S - YouTube

 தினமலர் : பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பிக்பாஸ் மாயா சகோதரி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஓர் இசையமைப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்து பேசியுள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாடகி ஸ்வாகதா பேசியதாவது: என்னிடம் ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார். அது ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் இல்லை. அவரால் தான், சினிமாவே வேண்டாம் என சொல்லி சென்னையில் இருந்து வெளியேறி ரிஷிகேஷில் செட்டில் ஆகிவிட்டேன். 6 வருடமாக துணி வியாபாரம் செய்து வருகிறேன். அந்த
இசையமைப்பாளரின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடி இருக்கிறேன். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விஷயங்களும் நடந்தது. அதை செய்திருந்தால் இப்போது பெரிய இடத்தில் இருந்திருப்பேன். எனக்கு திறமை இருக்கிறது என முயற்சித்து வாய்ப்பு தேடினேன். நான் சினிமாவில் கஷ்டப்பட்டு பெற்ற இடத்தை விட்டுவிட்டு வர ஒரு இசையமைப்பாளர் தான் காரணம்.

புதன், 29 ஏப்ரல், 2026

திமுக ஆட்சியை தக்க வைக்கிறது கருத்து கணிப்பு Stalin To Retain Power, Vijay To Make A Mark, AIADMK To Get 65-80 Seats

வடமாநிலம் எங்கும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கிறது

 தீக்கதிர் : தாராளமாகப் புழங்கும் கலப்படப் பொருட்கள்
புதுதில்லி 
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் கலப் படப் பொருட்கள் தொடர்பான நட வடிக்கைகளில் பெரும் அளவி லான போலி உணவு, மருந்து மற்றும் அன்றாடப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
தலைநகர் தில்லியில் போலி சென்சோடைன் பற்பசை தயாரித்த ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது.
நடவடிக்கையில் 1,800 போலி பற்பசை டியூப்கள், 10,000க்கும் மேற்பட்ட காலி டியூப்கள், 130 கிலோ கலப்பட மூலப்பொருட்கள் என பெரும் அள விலான பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

Exit Poll 2026: 234 தொகுதிகளில் மக்கள் வாக்களித்தது எந்த கட்சிக்கு? ஆட்சி அமைக்க போவது யார்? மின்னம்பலம் Exit Poll 2026:

May be an image of text that says "TN ELECTION E- 本 d PREDICTION 2026 Before the exit polls, we are confidently predicting: DMK (Dravida Munnetra Kazhagam) 200+ SEATS 45%- 45%-50% 50% VOTE VOTESHARE SHARE We Dravidians AIADMK 30+ (All India Anna Dravida Munnetra Kazhagam) SEATS 30% VOTE SHARE OTHERS & INDEPENDENTS WON'T EVEN QUALIFY TO GET THEIR DEPOSITS BACK. MAY 4 TH LET'S DISCUSS THIS AGAIN ON MAY 4TH. This isa prediction based on our analysis and ground assessment. Not an exit poll official survey."

 மின்னம்பலம் - Mathi : 17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட்டது.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யாத தமிழ் தேசியம் அத்தனை நன்மைகளும் செய்த திராவிடம்

May be an image of text that says "நக்கீரன் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்! இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம். அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை. சுயததவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது திமுக அரசு. நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும். -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.02.2026 153)"

 ந. சரவணன் :  இலங்கை தமிழர்கள் சிலர் தீவிர தமிழ்த்தேசிய பற்றாளர்களாக தங்களை காட்டிக்கொள்கின்றனர். தற்போதைய தேர்தலிலும் பங்களிப்பு செய்கின்றனர். 
தமிழ்கத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழ்த்தேசியம் என்ன செய்தது என்றால்,
இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்பதற்கு லாபி செய்கிறது.

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

சியோன் தேவலாயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் தந்தை, LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்

May be an image of ‎text that says "‎சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆஸாத்தின் தந்தை LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கப்றுகளைக் الْعَافِية وَالْمُسْلِمِينَ தரிசிக்கும்போது منينَ الْمُوْ مِن الدبارِ أَهل عَلَيْكمْ السُلامُ ஒதும் ளலாழும் அஸ்ஸலாழு وَنَكُمُ لَنَا اللهَ أسنأل لاحقون அஆவுரட்,. இன்லா அழழாஜறு பிதம் அலைக்கும் அவற்லத்தியாரி சாதறிககள், الله شَاءَ شاء وإنا இந்த அம்கச்களிே ரகயிவின พอมนันวก ரன்ஸிட்ஸ் Ca ลจ லதுபல் Κιώσει うの版 မေးတွင်းအတည်ပဲ ลร่ร์อรลูทิด้ ခန်သုံပို ஜாமியுழ்ழாபிரீன் காத்தாண்டுபு No.02 @Mabrook ー 05 ஈஸ்டர் தாக்குதல் உண்மைகளைத் தேடிய களப் பயணம்‎"‎

 Mabrook UL is in Addalachena ஈஸ்டர் தாக்குதல்: உண்மைகளைத் தேடிய களப் பயணம்/05
சியோன் தேவலாயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் தந்தை, LTTE இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்கிற தகலொன்றை, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், ஈஸ்டர் தாக்குதல் நடந்து சில மாதங்களின் பின்னர் பேஸ்புக்-இல் எழுதியிருந்தார். 
 பஷீர் சேகுதாவூத் - ஈரோஸ் இயக்கத்தில் மிக நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர்.
பஷீர் பகிர்ந்த அந்தத் தகவல் பலருக்கும் புதியதாக இருந்தது. 
எனவே, இது தொடர்பில் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக காத்தான்குடிக்குச் சென்றேன்.
ஆசாத்தின் தந்தை நஸார் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்கிற போதும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு, காத்தான்குடியில் நாம் சந்தித்த அநேகர் தயக்கம் காட்டினர். 
சிலரை பெரும் பிரயத்தனங்களுக்குப் பின்னர், இது பற்றிப் பேசுவதற்கு இணங்கச் செய்த போதும், தம்மைப்பற்றிய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்கிற உத்தரவாதங்களை எம்மிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிக்கிறார்? விவரிக்கும் காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

minnambalam.com - Mathi  : தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எந்த கட்சியின் வாக்குகளைப் பிரிக்கக் கூடும்? 
விஜய்யின் வாக்குகள் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விவரித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டியில், 
விஜய் ஃபேக்டர் ஒரு மிஸ்டரி. அதுக்குப் பின்னால இருக்கிற அந்த ஃபோர்ஸினுடைய மூலம் தெரியல. வர்ற கூட்டத்தைப் பார்த்தா நமக்கு ஆச்சரியமா இருக்கு. 

ராஜிவ் காந்தி கொலையாளி பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - பேரறிவாளன் கைதாகி 30 ஆண்டுகள் | Rajiv Gandhi |  Perarivalan - YouTube
hindutamil.in  - ஆர்.பாலசரவணக்குமார்  : சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.
சட்டப்படிப்பை முடித்தவர்கள், பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிட முடியும். அந்த வகையில், சட்டப்படிப்பை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் இன்று நடத்தியது.

திங்கள், 27 ஏப்ரல், 2026

2026சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் வதந்தி பதிவுகளும்

May be an image of text that says "27/04/2026 2026 வாக்குப்பதிவும் வதந்திகளும்! இன்றைய செய்தி நாளைய வரலாறு முரசொலி ചലോபමലෝ MiGBATONE நாமாக பம்ல்து ருப்பிறம் ரருப்பு ស្រមម្ស தமிழா លងាត நிறுவனர்: கலைஞர் மு. கருணாநிதி தீங்கள்கிழமை 27.04.2026"

 முரசொலி_தலையங்கம் 27/04/26  :  ஏப்­ரல் 23 நடை­பெற்ற தமிழ்­நாடு சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வர­லாறு காணாத வாக்­குப்­ப­திவு நடை­பெற்­றுள்­ளது. 84.51 விழுக்­காடு வாக்­கு­கள் பதி­வாகி இருக்­கி­றது. 
ஒவ்­வொரு தேர்­த­லி­லும் வாக்­குப்­ப­தி­வா­னது அதி­க­ரித்தே வரு­கி­றது. அந்த வகை­யில் இந்­தத் தேர்­த­லி­லும் வாக்­குப்­ப­திவு அதி­க­ரித்­துள்­ளது. 
ஆனால், இதை வைத்து பல்­வேறு வதந்­தி­களை பல­ரும் கிளப்பி வரு­கி­றார்­கள். 
ஆளும்­கட்சி மீதான கோபம்’ என்று சில சில்­ல­றை­கள் முட்­டாள் தன­மாக ஊட­கங்­க­ளில் ஊளை­யிட்டு வரு­கி­றார்­கள்.
கடந்த தேர்­தலை விட 30 லட்­சம் வாக்­கு­கள் மட்­டுமே அதி­கம் ஆகி இருக்­கி­றது.

ஏழு ஆம் ஆத்மி ராஜ்யசாபா எம்பிக்கள் பாஜகவுக்கு தாவல் .. ஒப்புதல் தந்த மாநிலங்களவை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்

 மின்னம்பலம் - Mathi : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி 10 எம்.பிக்களைப் பெற்றிருந்தது. இவர்களில் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவினர்.
இந்நிலையில் தாங்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்க கோரி மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 7 எம்.பிக்களும் கடிதம் அனுப்பினர். மேலும் 7 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி கோரியது.

புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு

 hindutamil.in - செ.ஞானபிரகாஷ்  : புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 - 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’-ன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர்.

அர்ச்சுனா ராமநாதன் எம்பி! கைது: துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது

  ilakkiyainfo.com : பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வந்துள்ளது.