tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
புதிய கட்சிகளுக்கு இடமளிக்கவும், முக்கிய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைச் சமாளிக்கவும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு திமுக தலைமை தனது கூட்டணிக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முக்கியமான அரசியல் நகர்வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியின் நலன் கருதி திமுக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
திங்கள், 23 பிப்ரவரி, 2026
ஆளுக்கு 1 தொகுதியை விட்டுக்கொடுங்க.. தேமுதிகவுக்கு தரணும்.. கூட்டணிக்கு ஸ்டாலின் செக்.. திமுக மூவ்
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026
வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய தவேக
தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் அரசியல் படியிலேயே சறுக்கலைச் சந்தித்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
"கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்" என்று மார்தட்டிய நிலையில், வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் வெறிச்சோடிய நிலை விஜய்யை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது தேர்தல் பணிகளைத் தொடங்கிய நிலையில்,
27+ 1(ராஜ்யசபா).. திமுக- காங். ஒப்பந்தம் இன்று இரவு கையெழுத்து! DMK–Congress Seat Deal 27+1 to Be Signed Tonight
minnambalam.com - Mathi : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு (DMK Congress) 27 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று பிப்ரவரி 22-ந் தேதி இரவு கையெழுத்தாகிறது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி கடந்த நவம்பர் 22-ந் தேதி ஐவர் குழுவை அறிவித்தது. தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், (கிரிஷ் சோடங்கர்), தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
அதானி மோடி காம்போ ! ரூ. 25,000 கோடி மறைக்கப்பட்ட முதலீடுகள் - உலகையே உலுக்கும் நிதி மோசடிகள்
![]() |
புதுதில்லி, பிப். 21 –
உலகின் மூன்றாவது பெரிய பணக் காரரான - மோடியின் கூட்டுக் கள வாணி நண்பரான கௌதம் அதானி நடத்தும் வணிக சாம்ராஜ்யம் இன்று கடும் சட்ட நெருக்கடி யில் சிக்கியுள்ளது. இத்தாலியின் மிகப்பெரிய வங்கியின் உள்விசாரணையில் ₹25,000 கோடிக்கும் அதிகமான அதானி பங்குகள் ரகசிய மாக இரு மர்ம நபர்களிடம் இருப்பது அம்பலமாகி யுள்ளது. இது வெறும் பங்குச் சந்தை விவகாரம் அல்ல - இந்திய பொருளாதாரத்தையே உலுக்கிய ஊழல் இது.
அதானி குழுமம் என்றால் என்ன?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில்...
![]() |
Abdul Careem Muhammad Ismail : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உருவாக்கிய மைதானத்தில், தாங்கள் செய்த காரியமென்றுபோல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு விளையாடிக்கொண்டே வெட்கமோ நாணமோ இல்லாமல் பெருமை பேசுகிறார்கள்.
“இந்த மைதானத்தை நாங்கள்தான் உருவாக்கினோம்” என்று கூறுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாடுகிறார்கள். விளையாடவிடுகிறார்கள்.
அதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூட மாலிமா அரசை பாராட்டியிருப்பதாகும்.
உண்மையில் வேலை செய்தவர் யார் என்பதைத் தெரிந்திருந்தும்,
ஜார்ஜீவா இப்படிப்பட்ட கருத்தை ஏன் வெளியிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்! தொண்டமான் - நடேச அய்யர்
![]() | ||
|
Badulla Senathiraja : நடேச அய்யர் மற்றும் தொண்டமான் – இலங்கை தோட்டத் தொழிலாளர் ஊதியப் போராட்டம்—
20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இலங்கையின் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் குறைந்த தினக்கூலியே பெற்றனர்.
• 1922 ஆம் ஆண்டு ஆண்களுக்கு தினம் 26 சதம் பெண்களுக்கும் 26 சதம் வழங்கப்பட்டது.
• 1928 ஆம் ஆண்டு ஆண்களுக்கு 54 சதம் பெண்களுக்கு 43 சதம்வழங்கப்பட்டது.
• ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் முறையாகக் கூலி குறைக்கப்பட்டது: ஆண்களுக்கு 49 சதம்பெண்களுக்கு 39 சதம்
• 1933 ஆம் ஆண்டு மீண்டும் குறைக்கப்பட்டு ஆண்களுக்கு 46 சதம் பெண்களுக்கு 37 சென்ட் வழங்கப்பட்டது.
• இந்தக் குறைப்பு 1939 ஜூன் 1 வரை தொடர்ந்தது.
இது தோட்டத் தொழிலாளர்களுக்கு மிகவும் துயரமான மற்றும் அநியாயமான நிலைமையாக இருந்தது.
சிலோன் இந்தியன் காங்கிரஸ் அமைப்பு
இந்த காலகட்டத்தில் Mahatma Gandhi இலங்கைக்கு விஜயம் செய்து பல இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களில் ஒருவர் Savumiamoorthy Thondaman.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் இணைந்து 1939 ஆகஸ்ட் மாதத்தில் Ceylon Indian Congress அமைப்பை உருவாக்கினர்.
1940 ஆம் ஆண்டு இந்த அமைப்பிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தொண்டமான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கம்பளையில் 100,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போராட்டங்களும் அமைதியான எதிர்ப்பும் தொடர்ந்து, 1941 பிப்ரவரி 1 அன்று கூலி உயர்வு கிடைத்தது:
• ஆண்களுக்கு தினம் 54 சதம்
• பெண்களுக்கு தினம் 43 சதம்
இது தொழிலாளர் சங்கத்திற்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
சனி, 21 பிப்ரவரி, 2026
உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்? புதிய சிக்கலில் திமுக கூட்டணி?
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக உள்பட சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை தனிசின்னத்தில் நிறுத்தாமல் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்த திமுக தலைமை தயாராகி வருகிறது. இது கூட்டணி கட்சிகளை சிக்கலை ஏற்படுத்த உள்ளது. அதாவது திமுகவின் இந்த முடிவால் அந்த கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படலாம் என்றால் கூட்டணி கட்சியினர் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
“அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீதம் வரி- அதிபர் டிரம்ப் அறிவிப்பு
மாலைமலர் : “அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” திறப்பு
திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு
minnambalam.com -Pandeeswari Gurusamy : திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இன்று (பிப்ரவரி 21) திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டி உருவாக்கியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராகுலின் திமுக ஒவ்வாமை? பொங்கி எழுந்த முதல்வர் ஸ்டாலின்!
tamil.oneindia.com பொறுத்துப் பார்த்த திமுக.. அந்த 2 பேரால் பொங்கி எழுந்த ஸ்டாலின்! ராகுல் காந்திக்கு சீக்ரெட் மெசேஜ்?
தமிழக அரசியல் களத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு இப்போது ஒரு நெருப்பு வளையத்திற்குள் சிக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.. காரணம் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இழுபறியில் உள்ளது.. இரு கட்சிகளிடையே இணக்கமான போக்கு இருப்பதாகவும் தெரியவில்லை.. தேமுதிகவும் கூட்டணிக்குள் வந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் நிலைமை தெரியவில்லை.. என்னதான் நடக்கிறது கூட்டணியில்?
பல ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான "கிச்சன் கேபினட்" நட்பு இப்போது கசக்கத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த கால தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டின்போது முதல் ஆளாக வந்து கைகுலுக்கும் காங்கிரஸ், இந்த முறை இழுபறியில் நிற்பது அரசியல் நோக்கர்களை புருவம் உயர்த்தச் செய்துள்ளது..
தமிழ்நாடு இன்னொரு ஐரோப்பிய நாடு? புள்ளி விபரங்கள் கூறுவதென்ன?
Vimalaadhithan Mani : ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால், அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட கழக ஆட்சிகளில் கடந்த 50 வருடங்களில் தமிழ்நாடு முன்னேறவே இல்லை என்று ஒரு பச்சை பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது.
பல்துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி மத்தியில் ஆளும் காவி அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) கொடுத்து இருக்கும் கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள்:
*உயர் கல்வி*
பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.
*கல்வி நிலையங்களின் தரம்*
2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,
*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*
திமுக ஐ டி விங் ( DMK ITWing ) சரியாக இயங்குகிறதா? ஒரு எக்ஸ்ரே பார்வை
Vasugi Lakshmanan · DMK ITWing இடம் பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன்!
சில வாரங்களுக்கு முன்பு திமுக ஐடி விங் முகநூலில் அபத்தமான பிழைகளோடு அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் வந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தேன்!
செய்திக்குப் பொருத்தமான ஹேஷ்டேக்ஸ் கூட போடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதன் தலைமைப் பொறுப்பில் உள்ள (நியூஸ் 18இல் என்னுடன் பணியாற்றிய) ஒருவருக்கு டிஜிட்டல் மீடியா பற்றி தெரியாததால்தான் அப்படியெல்லாம் நேர்வதாகக் கருதி அந்தக் குழுவுக்கு நான் வேண்டுமானால் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தேன்.
அனைத்துக் கட்சி சமூக ஊடகங்களையும் பின் தொடரும் நான், //என்னவோ மணிப்பூரில் வாழ்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தவெக நாளொன்றுக்கு நான்கு செய்திக் கதைகளை திரித்து உருவாக்கிப் பகிரும் நிலையில், திமுகவின் whatsapp சேனலில் சில நாட்கள் வெறும் திருக்குறள் பதிவதோடு நின்று விடுகிறார்கள் என்றும் குறை கூறியிருந்தேன்!
வெள்ளி, 20 பிப்ரவரி, 2026
முதல்வர் ஸ்டாலினின் 4 பேர் டீம்! எதிர்கட்சிகளளை காயவிட்டு கணக்குகளை புரட்டி போட்ட அந்த விடயங்கள்
tamil.oneindia.com ஸ்டாலினின் 4 பேர் டீம்.. மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த.. அந்த யோசனை வந்தது எப்படி?
தமிழக அரசியலில் அடுத்த இரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது வேகத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மக்களை கவரும் பல்வேறு நிதிச் சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது.
முக்கியமாக தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழகத்தின் மிக முக்கியமான வாக்கு வங்கியான பெண் வாக்காளர்களின் மனங்களை வெல்லும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிரடியைத் தொடங்கியுள்ளார்.
ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்
கடந்த மாதம் பொங்கல் பரிசாக 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
காங்-ஐ கதறவிட்ட ஸ்டாலின்! கதர் கட்சியில் வெடித்த மோதல்! கப்சிப் ஆன ’கை’ - Election Exclusive: ஓவர் வாய் உடம்புக்கு ஆகாது
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம். அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது
தேமுதிக. திமுக கூட்டணியில் தேமுதிக வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட இந்த தேர்தலில் குறைவாக இடங்கள் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
சில காங்., நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராக பேசியதால்தான் கோபப்பட்டு ஸ்டாலின் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்து வந்து விட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்குள் மோதல் எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி அமைப்புகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக தேமுதிக எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்தது.
ஓ .பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - பொறுமையாக இருங்க நல்லதே நடக்கும் உறுதியளித்த ஸ்டாலின்
இணைய விருப்பம் தெரிவிக்கிறார்
முதல்வர் சொல்கிறார்
அவசரப்படாதீங்க ஓபி
நீங்க முதல்வரா இருந்திருக்கீங்க
கட்சியில முக்கியமான இடத்துல இருந்திருக்கீங்க
பொறுமையா இருங்க நல்லதே நடக்கும் என்கிறார்
நாகரிகத்தின் உருவம் முதத்துவேல் கலைஞர் ஸ்டாலின்
மின்னம்பலம் - Kavi : முதல்வர் ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருடன் சென்ற ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக பிரிந்து மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.
இந்தசூழலில், யாருடன் செல்வது என தொடர்ந்து ஓபிஎஸ் ஆலோசித்து வந்தார்.
ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை..
tamil.oneindia : ஆண்டாள் அழகர் கல்லூரி முதல் அண்ணா அறிவாலயம் வரை.. திமுக - தேமுதிக இடையில் உறவு உருவானது இப்படிதான்!
21 ஆண்டு கால தேமுதிக அரசியல் வரலாற்றில், முதல்முறையாக திமுக உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் இந்த முடிவுக்கு பின் பல்வேறு சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் முதல்முறையாக தேமுதிக இணைந்துள்ளது. 2011 தொடங்கி 2019 வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கொண்டே இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது விஜயகாந்த் கண்ணீர்விட்டு அழுத வீடியோ திமுகவினரையும் கலங்க செய்தது.
தேமுதிக கூட்டணி
இதனை மனதில் வைத்து தான் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது ஸ்டாலின் கூட்டணிக்கு அழைத்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்த சில செயல்கள் திமுகவை கொந்தளிக்க வைத்தது. இதன்பின் விஜயகாந்த் மறைவின் போது யாரும் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதை வழங்கி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திமுக பணிகளை செய்து கொடுத்தது.
தேமுதிக 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணிக்கே ஆதரவாக உள்ளனர்!
![]() |
vikatan.com : தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். - தேமுதிக நிர்வாகிகள்
அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக 'கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?' என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம்.
'10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு' என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். 'எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார்.
ஸ்டாலினிடம் பேசிய சோனியா.. அறிவாலயத்தில் பிரேமலதா..
மின்னம்பலம் - Mathi : , ”க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறுகின்றன” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது
ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகளா?
ம்ம்..அப்படியும் சொல்லலாம்.. இன்னைக்கு அண்ணா அறிவாலயத்துல ஸ்டாலினை பிரேமலதா சந்திச்சு திமுக கூட்டணியில தேமுதிக இடம் பெறுவதை உறுதி செஞ்சு பிரஸ் மீட்டுல அறிவிச்சதுதான் ஹாட் டாபிக்.
திமுக கூட்டணியில சேர்ந்துட்டோம்னு அறிவிச்ச பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்துக்கு போய் விஜயகாந்துக்கு ராசியான நம்பரான 5-ஐ குறிக்கும் வகையில அங்க கட்டியிருந்த பெரிய மணியை 5 டைம் அடிச்சு மரியாதை செலுத்திட்டு அங்கேயும் பிரஸ் மீட் கொடுத்துட்டு, ‘தொகுதி விவகாரங்களை எல்லாம் அண்ணன் ஸ்டாலின் அறிவிப்பாரு’ன்னு சொல்லி இருக்காங்க.
சட்டப்பேரவையில சிஎம் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் காரசார வாக்குவாதம்னு அனல் பறந்தாலும் திமுக அமைச்சர்கள்கிட்ட, எம்.எல்.ஏக்கள்கிட்ட மெஜாரிட்டியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கவலையாக கேட்டது எல்லாம், “தேமுதிக வந்துருச்சு.. எங்களை கழற்றிவிடுறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா”?” என்கிற கேள்வியைத்தான்.
இலங்கை எம்பிக்களுக்கு கொடுப்பனவு தோராயமாக ஐந்தரை லட்சம் ரூபா....
Kalmunaitoday : MP ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை கொடுப்பனவுகள்
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று அதனை - நாடாளுமன்றில் தெரியப்படுத்தியிருக்கிறார்.
கணக்கை பார்போம் வாருங்கள்;
👉சம்பளம் - 54,285/=
👉பொழுது போக்கு கொடுப்பனவு 1000/=
👉சாரதிக் கொடுப்பனவு - 3500/= (அல்லது சாரதி வழங்கப்படுவார்).
👉தொலைபேசிக் கொடுப்பனவு - 50,000/=
👉போக்குவரத்து - 15,000/=
👉அலுவலக கொடுப்பனவு - 100,000/=
👉சபை அமர்வு ஒன்றுக்கு - 2500/=
👉அமர்வு இல்லாத நாளில் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டால் - 2500/=
👉எரிபொருள் கொடுப்பனவு - தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவருக்கு 419.76 லீட்டர் டீசல் கிடைக்கிறது.
வியாழன், 19 பிப்ரவரி, 2026
திமுக கூட்டணியில் தேமுதிக - ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு
hindutamil.in அனலி : சென்னை: வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.19) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது.
வாச்சாத்தி: தமிழ்நாட்டை உலுக்கிய வன்கொடுமை வழக்கு; நீதிபதி நேரில் ஆய்வு - நடந்தது என்ன?
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில், 1992, தமிழக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையால், பழங்குடியின மக்கள்மீது நடத்தப்பட்ட வன்கொடுமை, தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. ‘வீரப்பனுக்கு வாச்சாத்தி மக்கள் உதவுகின்றனர். சந்தன மரக்கட்டைகளைக் கடத்துகின்றனர்,’ எனக் கூறிய வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் 1992, ஜூன் 20-ம் தேதி வாச்சாத்தி கிராமத்தை முற்றிலுமாகச் சுற்றிவளைத்து, வன்முறையைக் கட்டவிழ்த்தனர்.
வழக்கு தொடர்ந்த மக்கள்!
‘‘தங்கள் வீடுகளை வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் சூறையாடினர், குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், 13 வயது சிறுமி உட்பட, 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சந்தன மரங்கள் கடத்தியதாகப் பொய் வழக்கு பதிந்தனர்’’ எனக் கூறி, வாச்சாத்தி கிராம மக்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து வழக்கு பதிவுசெய்திருந்தனர்.
18.02.1992 - கும்பகோணம் மகாமக நிகழ்வில் உயிரிழந்த மக்களுக்கு நினைவஞ்சலி
![]() |
Giri Sundar : தமிழ்நாட்டை ஆண்டுவிட்டுப்போன அதிமுக அரசின் அல்லி ராணியான கோமளவள்ளியின் மூடநம்பிக்கையான செயலுக்காய், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை..மனித உயிர்களை படுகொலை செய்த வரலாற்று துக்கத்தை..கருப்பு நாளைப்பற்றி பேசியே ஆகவேண்டும் இன்று.
18.02.1992. கால் நூற்றாண்டுக்கு முன், இதே தேதியில்..
கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் விழா.
கோவிலின் குளத்தில் நீராடினால் பாவங்கள் விலகுமென்று திரண்டுவந்த மக்களுக்கு..தங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதுதான் இறுதி நாளென்பது தெரியாது.
ராஜீவ் படுகொலை தந்த பரிசால் ..முதன்முறையாக ஜெயலலிதா முதல்வராகி இருந்த காலகட்டம்.
30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி நீராடி செல்கிற ஒரு இடத்தில், முதல்வராக இருப்பவர் கலந்து கொண்டால், மக்களுக்கு என்னென்ன அசௌகர்யங்களையும், ஆபத்துகளையும் அது ஏற்படுத்தும் என ஆராயாமல்.. கணக்கில் கொள்ளாமல்..
முடிவெடுத்த ஸ்டாலின்... தலையிட்ட கனிமொழி... திமுக-காங்கிரஸ் கூட்டணி?
Krithika Tharan : தூக்கம் வரல.
இன்பாக்சில் ஒரு நட்பு, “ஏன் நாளை துணை முதல்வர் கையால் விருது”ன்னு பரபரன்னு இருக்கிங்களான்னு. இல்லை,
தமிழ்நாட்டைச் சுற்றி நடக்கும் யூகங்கள் கவலை தருது. என்னதான் தைரியமா பேசினாலும் அடி ஆழத்தில் ஒரு கவலை.
வெளியில் லாபி செய்யும் பலர் எப்படி நம்ப வச்சுருக்காங்க எனில்,
திமுக மிகுந்த பவரில் உள்ளது. அவர்களை அசைக்க முடியாது. இங்கிருந்து பிஜேபியை காலி செய்யணும்னா நம்பர் டூ இடத்துக்கு வரணும்.
அப்ப தவெகுடன் கூட்டணி நல்லது என்று தலையை கழுவி வச்சுருக்காங்க.
இதை ஒரு சமூக ஆர்வலரே சந்தோஷமா பெங்களூரில் என்னிடம் பகிர, அதிர்ச்சி ஆனேன்.






