onindia-tamil .com : காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் பணம் சம்பாதிப்பதற்காக மனைவி, மகள் என்று அனைவரையும் பாலியல் உறவில் தள்ளும் கொடுமை இன்று வரை நடந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தனது குடும்ப பெண்களுடன் உறவு வைக்க வெளி ஆட்களை சொந்த தந்தை, அண்ணனை அழைத்து வருவது தான். இந்த ஷாக் சம்பவம் நடக்கும் கிராமத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரிய பெரிய நகரங்களில் 'ரெட்லைட் ஏரியா'க்கள் தனியாக உள்ளன. இங்கு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விருப்பப்பட்டு இந்த தொழிலில் இருப்பது கிடையாது. குடும்ப சூழல், சிறிய வயதிலேயே நடந்த கொடுமைகள் உள்ளிட்டவற்றால் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
ஞாயிறு, 20 செப்டம்பர், 2026
மனைவி - மகளுடன் உடலுறவு வைக்க.. வாடிக்கையாளர்களை அழைத்த வரும் ஆண்கள்! குஜராத்தின் கொடூர கிராமம்
கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் பேட்டி ! ஆனந்த விகடன் இதழிலிருந்து ...
![]() |
ஆனந்த விகடன் ''மகனுக்குத் தேசிய அவார்டு ('மூன்றாம் பிறை') கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!''
''சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?'' பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் டி.சீனிவாசன்.
''உங்க மகன் இந்த அளவுக்கு சூப்பர்ஸ்டாரா வருவார்னு ஆரம்ப காலத்துல நெனச்சீங்களா?''
''நிச்சயமா! நேத்துகூட 'Oh my boy, you deserve oscar'னுதான் அவனுக்குத் தந்தி அடிச்சேன்!''
''இந்தப் பெருமையில், கமலை வளர்த்து ஆளாக்கிய உங்கள் பங்கு பற்றி...''
''கமல்கிட்டே அளவுக்கதிகமான திறமை இருக்கு. முன்னுக்கு வந்துட்டான். அவ்வளவுதான். மத்தபடி, பெரிசா சொல்லிக்கொள்ற அளவுக்கு நான் ஒண்ணும் செஞ்சிடலை!''
சனி, 19 செப்டம்பர், 2026
காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ராதிகா, உதவி ஆணையர் யாஸ்மின் மீது சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு!
![]() |
கருப்பு எழுத்துக் கழகம்.: வீரமணி போக்சோ வழக்கு: மூன்று அதிகாரிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டதா? – காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ராதிகா, உதவி ஆணையர் யாஸ்மின் மீது சவுக்கு சங்கர் கடும் குற்றச்சாட்டு!
"மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது" – பிப்ரவரி 19, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை; சிறப்பு போக்சோ நீதிமன்றம் மறுத்ததால் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது!
சென்னை, செப்டம்பர் 19 – தொழிலதிபர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், கைது செய்யப்பட்ட குற்ற எண் 174/2025-ல், பிப்ரவரி 19, 2026 அன்று "மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது" (Further Action Dropped) என்று இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தவர் உதவி ஆணையர் யாஸ்மின். அப்போது குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தவர் ராதிகா ஐபிஎஸ். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர் அருண் ஐபிஎஸ்.
இந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களும், வீரமணி விவகாரம் தொடர்பான பெரும்பாலான ஊடகச் செய்திகளில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. "இவர்கள் இல்லாமல் வீரமணி காப்பாற்றப்பட்டிருப்பாரா?" என்ற கேள்வி எழுந்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி தடை செய்வது? தேர்தல் ஆணையத்திடம் கேட்கும் தவெகவினர்- குடைச்சல் தாங்கல..
tamil.oneindia.com - Halley Karthik : சென்னை: தவெக ஆட்சி அமைக்க ஒரு வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) என இரண்டு கட்சிகளும் காரணமாக இருந்தன. இருப்பினும் ஆட்சியில் தங்கள் கொள்கைக்கு எதிரான செயல்பாடுகள், திட்டங்கள் அமல்படுத்தப்படும்போது அவரை எதிர்க்கின்றன. இது தவெகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளை எப்படி தடை செய்வது என்று தவெக ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்க தொடங்கியிருக்கின்றனர்.
தேர்தலுக்கு பிறகு, போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாதபோது.. காங்கிரஸுக்கு அடுத்தபடியாக தங்களது ஆதரவை உடனடியாக அறிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். பின்னர்தான் ஐயுஎம்எல்.. கடைசியாக விசிக ஆதரவு தெரிவித்திருந்தது.
தமிழக மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் இரு அரசாணைகளை திரும்பப் பெறுக” - பெ.சண்முகம்
hindutamil.in -வெற்றி மயிலோன் : சென்னை: ‘தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைக்கும் இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப் பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் தனியார் மயம்- விஜய்க்கு திமுக, அமமுக எதிர்ப்பு
minnambalam.com - Mathi : சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருப்பதற்கு திமுக, சிபிஐ, அமமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (AAI) மாற்றி, வேறு ஆபரேட்டரைக் கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக
தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதியில் சிக்கி கொண்ட இளைஞனின் உயிர்
வீரகேசரி : மகனை விடுவித்து தாருங்கள் மடிப்பிச்சையாக கேட்கிறேன் ; சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் கண்ணீர் மல்க உருக்கம் - ilakkiya info
எனது மகன் செய்தது தவறுதான். அதனை மன்னித்து எனது மகனை விடுவத்து தாருங்கள். அதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்திடம் ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அரசாங்கத்தினரும் நாட்டின் அனைவரும் உதவிடுங்கள். உங்களிடத்தில் கையெடுத்துக் கும்பிட்டு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கின்றேன் என்று சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தாயாரான சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளி, 18 செப்டம்பர், 2026
காணாமல் போன தவெக வாக்குகள் 35% மக்களில் 15% முதல் 20% வரை புலம்பல்
முனைவர் க செல்வம் · ஜேம்ஸ் வசந்தன் குபீர் கணக்கு.. விஜய்க்கு ஓட்டு போட்ட 35% பேரில் 20% அப்செட்? இப்பவே புலம்பல் ஆரம்பமா?
தவெகவுக்கு வாக்களித்த 35% மக்களில் 15% முதல் 20% வரை இப்போது ஏமாற்றமடைந்து புலம்பத் தொடங்கிவிட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றாலும், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டனர்.
இவர்கள் தகுதியவற்றவர்கள் என்பதையும் உணர ஆரம்பித்து விட்டனர். இது வரப்போகும் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்" என்று இசையமைப்பாளரும் அரசியல் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
The TN Voice சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜேம்ஸ் வசந்தன், "நீண்ட காலமாக சோஷியல் மீடியாவில் மோதிக்கொண்ட விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், இப்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் அஜித்தின் ஆதரவாளர்களை கவர விஜய் நட்புக் கரம் நீட்டுகிறார்.
வியாழன், 17 செப்டம்பர், 2026
இந்திய இலங்கை தரைப்போக்கு வரத்து பாதை கடந்து வந்த பாதை
![]() |
![]() |
ராதா மனோகர் : ஆங்கில பத்திரிகைகளில் வெளியான இந்திய இலங்கை தரைப்போக்கு வரத்து பாதையை படித்து விட்டு தனது தீர்க்க தரிசனத்தில் ஞான திருஷ்டியில் கண்டதாக கதையளந்தார் பாரதியார்
அளவு கணக்கில்லாமல் ஊதி பெருபிக்கப்பட்ட பலூன் பிம்பம்தான் சுப்பிரமணியன் பாரதி.
வாலிக்கும் கண்ணதாசனுக்கும் மருதகாசிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் பாதி தூரம் கூட வரமாட்டார் சுப்பிரமணியன் பாரதி!
சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது
உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும் . தீர்க்க தரிசனம் அல்ல!
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்திய விஜய் - காங்கிரஸ் கடுப்பு - அண்ணாமலை வாழ்த்வில்லை
tamil.oneindia.com -Shyamsundar I : சென்னை: செப்டம்பர் 17, தந்தை பெரியாருக்கும், பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள்! பாஜகவை பாசிச சக்தி என கடுமையாக எதிர்த்து வரும் திமுக தலைவர் தான் மோடிக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். இதனை பார்த்ததும் முதல்வர் விஜய், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னதுடன் மோடியின் ஆட்சியை புகழ்ந்தும் செய்தி அனுப்புகிறார்.
அதே சமயம், மோடிக்கு வாழ்த்து சொல்லாத அண்ணாமாலை, பெரியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்து செய்தியை வெளியிடுகிறார். இதில் சில நுண்ணரசியல் இருக்கிறது என்கிறார்கள்.
கோவையில் தங்கி பயங்கரவாத சதி? 19 வயது இளைஞர் கைதானதன் பின்னணி! - CAPTAIN M NETWORK” மூலம்
minnambalam.com - Pandeeswari Gurusamy : அல்கொய்தா சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்த மக்சூத் அலி (19) என்ற இளைஞரை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு அளித்த தகவலின் பேரில் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து உ.பி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உபி காவ்லதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 12-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கைது செய்தனர்.
ஏமாற்றிய பாகிஸ்தான்! இஸ்ரேலிடம் உதவி கேட்ட சவுதி அரேபியா! ஹவுதிகளால் மாறும் நிலவரம்
புதன், 16 செப்டம்பர், 2026
அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது? அடுத்த ‘குறி’ துரைமுருகன்
minnambalam.com : அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டுக்கு போயிட்டாங்களே ப்ரோ.. இப்ப ரெய்டு நடத்துறது விஜிலென்ஸ் இல்லை.. சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ்.
போலீஸ் விளக்கம் என்ன?
இதை பத்தி ரெய்டு நடக்கும் போதே மத்திய குற்றப் பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்காங்க.. அதுல என்ன சொல்றாங்கன்னா, “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார் 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அன்பில் மகேசை கைது செய்ய வேண்டாம்.. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்? என்ன காரணம்?
tamil.oneindia.com- Shyamsundar : சென்னை: லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் தவெக அரசின் காவல்துறை உயரதிகாரிகள். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதற்காக நடந்துள்ள மோசடி புகார்கள் குறித்து மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அன்பில் மகேஷ் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி மாறினீர்கள்?”: திருமாவை நோக்கி கேள்வி எழுப்பிய பிரேமலதா!
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy :தேமுதிகவிற்கு 10 தொகுதி ஒதுக்கியதால் தான் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது உண்மைக்கு புறம்பானது என ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அண்ணன் திருமாவளவன் மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறது.
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக - அழைப்பாணையை அறிந்திருந்தும்
ilakkiyainfo.com " நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அறிந்திருந்தும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்ஷ குடும்பத்தினர் முற்றுமுழுதாக மறுத்துள்ளனர்.
விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பாணையும் கிடைக்கவில்லை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திங்கள், 14 செப்டம்பர், 2026
வரலாறு மறைத்த கிட்டுவின் கொடூர முகம்! கிட்டுவின் அதிகார வெறி, துரோகம் மற்றும் சுயநல ஒழுக்க நாடகம்
![]() |
வெற்றி மாறன் : வரலாறு மறைத்த கிட்டுவின் கொடூர முகம்.
கர்னல் கிட்டு ஒருபுறம் “வீரத் தளபதி” எனப் போற்றப்பட்டவர். மறுபுறம், 1980களின் யாழ்ப்பாணத்தில் மாற்றுக் குரல்களையும் சக தமிழர்களையும் ஆயுத பலத்தால் ஒடுக்கிய
எல்.டி.டி.இ.யின் முக்கியத் தளபதி.
அந்த அதிகாரத்தின் பின்னால் நடந்தது என்ன? யார் கொல்லப்பட்டார்கள்? யார் மௌனமாக்கப்பட்டார்கள்?
ஆதாரங்களுடன் அந்த மறைக்கப்பட்ட அத்தியாயத்தைத் தேடும் ஒரு வரலாற்றுப் பதிவு இது.
யாழ்ப்பாணத்தின் கருப்புச் சர்வாதிகாரி கர்னல் கிட்டுவின் அதிகார வெறி, துரோகம் மற்றும் சுயநல ஒழுக்க நாடகம்
(இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களுக்கும் சான்றாக விளங்கும் சர்வதேச மனித உரிமை ஆவணங்கள், அதிகாரப்பூர்வ வரலாற்றுப் பக்கங்கள் மற்றும் புத்தகங்களின் விவரங்கள் அனைத்தும் வாசகர்களின் சரிபார்ப்பிற்காக இப்பதிவின் முதலாவது பின்னூட்டத்தில் (First Comment) ஆதாரக் குறிப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.)
JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு! 1987-1989
நித்தியானந்தன் உங்கள் தோழன் : JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு!
1987-1989
JVP கலவரத்தை பார்க்கும் முன் இன்றைய விமர்சனம் பற்றிய சிறிய பதிவை பார்த்துவிட்டு செல்வோம்...
இன்று JVP பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு மலையகத்தின் எதிர்காலம் பற்றி பேசுகிறது. தொண்டமான் தலைமையிலான *இ.தொ.கா* வை விமர்சிக்கிறது.
ஆனால் 1987-1989ல் ஒரு முழு சமூகத்தின் எழுச்சியை ஆயுதம் ஏந்தி நாசமாக்கியது யார்?
தேயிலை தொழிற்சாலைகளை எரித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பசியிலும் பயத்திலும் தள்ளியது யார்?
ஒரு பக்கம் நாசம். மறுபக்கம் *அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்* அவர்கள் உருவாக்கிய *இ.தொ.கா* மலையக மக்களுக்கு கல்வி, வீடு, குடியுரிமை, அரசியல் அங்கீகாரம் என ஒரு சமூகத்திற்கே விடிவை தந்தது.
நேற்று எங்கள் வாழ்வை குழிதோண்டி புதைத்தவர்கள், இன்று எங்கள் தலைமையை பார்து குறை சொல்கிறார்கள்.
மலையகத்தை பற்றி பேச JVP-யின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஞாயிறு, 13 செப்டம்பர், 2026
கமல் ரஜனி சுமன் ஆகியோரை பந்தாடி துரத்திய எம்ஜியார்
Giri Sundar : மிசா காலத்தில் முக முத்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
முக அழகிரி அரசியலில் இல்லை.
தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மதுரையில் முரசொலி பதிப்பகம் தொடங்க வேண்டும் என கலைஞர் முடிவெடுத்தபோது அதனை கவனித்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும் என முக அழகிரி 1980ல் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை சென்று இன்று வரை அங்கு தான் இருக்கிறார்.
அப்போ மிசா காலத்துல அரசு ஊழியராக பணியாற்றியவர் எப்படி அரசியலில் ஈடுபட்டிருக்க முடியும்???
முக ஸ்டாலின் 80ல்திமுகவின் இளைஞரணித் தலைவர்.60களில் இருந்தே அரசியலில் இருக்கிறார்.75ல் எமர்ஜென்சிக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவந்தார்.
கலைஞரை கைதுசெய்தால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பயந்த ஒன்றிய அரசு கலைஞருக்கு நெருக்கமான அவரது மகன் ஸ்டாலினை கைது செய்து அவரை தாக்கிக் கொடுமைப் படுத்தி, கலைஞருக்கு எதிராக வாக்குமூலம் கேட்டது. அவர் மறுத்ததால் அவரது தாடை உடைக்கப்பட்டது.
சனி, 12 செப்டம்பர், 2026
திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.!
Kandasamy Mariyappan : 8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு...
EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.!
திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.!
பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்...
பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக கொண்டு வருகிறார் திருமா என்று, அன்றே எச்சரித்தேன்.!
திருமாதான், உண்மையான RSSன் கள்ளக் குழந்தை.!
நாம்தான் தவறாக புரிந்துகொண்டு, புள்ள பூச்சிகளான திரு. பழனிச்சாமி, திரு. பன்னீர்செல்வங்களை அடித்துக் கொண்டிருந்தோம்.!
திராவிட அரசியலின் விளைவால், கிராமங்களில் தலித்திய மக்கள் குடியான மக்களோடு சகஜமாக பழக ஆரம்பித்தனர். 2000க்கு பிறகு தலித்திய இளைஞர்கள், குடியானவர்களை அண்ணா, அக்கா, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா என்று உறவுகளை சொல்லி அழைத்து வந்தனர். எங்கள் கிராமமே உதாரணம்.
கலைஞரின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர் கைது
ராதா மனோகர் : முரசொலி ஏட்டின் ஆசிரியரும் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான திரு மாறன் விடுதலை ஏட்டின் ஆசிரியர் கி வீரமணி காண்டீபம் ஏட்டின் ஆசிரியர் மாரிசாமி பா உ நீட்டோலை அடியார் டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் மு க அவர்களின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட சில திமுக கழக பிரமுகர்கள் பின்வருமாறு ;
நீலநாராயணன் , சிட்டி பாபு , ஆற்காடு வீராசாமி . வை பாலசுந்தரம் .கோவிந்தராசன் , தோப்பூர் வேங்கடம் . பொன் முத்துராளமலிங்கம். கு திருப்பதி .
" மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக! -வே. மதிமாறன்
மதிமாறன் " மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக!
ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் எனக் கலைஞரை குறித்து மிகக் கேவலமான கட்டுரை வெளியிட்ட இந்துதான், அதுகுறித்த எந்த வருத்தமும் தெரிவிக்காமல், கூச்சமே இல்லாமல் தெற்கிலிருநது ஒரு சூரியன் என கலைஞரை வர்ணித்து புத்தகம் வெளியிட்டது.
இந்துவிடம் குறைந்தபட்ச அறிவு நாணயம்கூடக் கிடையாது. அவர்கள் சங்கியாக இருக்கக்கூட லாயக்கற்றவர்கள். சங்கிகளிடம் கூட அவதூறில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.
வெள்ளி, 11 செப்டம்பர், 2026
கேரளா கள்ளுக் கடைகளின் ரகசியம்: ஏன் அங்கே மட்டும் அனுமதி? விநியோகிக்கப்படும் விசித்திர தொழில்நுட்பம்
Maha Laxmi : கேரளா கள்ளுக் கடைகளின் ரகசியம்: ஏன் அங்கே மட்டும் அனுமதி? விநியோகிக்கப்படும் விசித்திர தொழில்நுட்பம்!
நாம கேரளாவுக்கு (God's Own Country) டூர் போனா... சாலையோரங்கள்ல தென்னை மரங்களுக்கு நடுவே கறாரான போர்டுகளோடு 'Toddy Shop' (ஷாப்) அப்படின்னு எழுதியிருக்கிறதைப் பார்ப்போம். நம்ம தமிழ்நாட்டுல கள்ளுக்குத் தடை இருக்கும்போது, கேரளால மட்டும் ஏன் இதுக்கு இவ்வளவு மவுசு? இதோட கொள்முதல் மற்றும் விநியோக ரகசியங்கள் இதோ!
1. கேரளாவில் மட்டும் ஏன் கள்ளுக்கு அனுமதி?
Neander Selvan : உங்கள் அமெரிக்க விசா யாரால் வழங்கப்படுகிறது என கேட்டால் "அமெரிக்க தூதரகம்" (American Embassy) என சொன்னால் தவறு. உலகம் முழுக்க அமெரிக்க விசாக்களை வழங்குபவர் ஒரு இந்தியர், அதிலும் பார்ஸி, அவரது பெயர் ஜுபின் கார்காரியா (Zubin Karkaria).
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜுபின் கார்காரியா என்பவர் 'கூனி டிராவல்' (Kuoni Travel) என்ற சுற்றுலா நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனது தொழிலின் காரணமாக தூதரகங்கள் விசா வழங்கும் முறையை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பொதுமக்கள் தூதரகங்களின் வெளியே நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. தூதரக அதிகாரிகளுக்கும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, வரிசையை நிர்வாகிப்பது போன்ற நிர்வாகப் பணிகள் பெரும் சுமையாக இருந்தன.
வியாழன், 10 செப்டம்பர், 2026
பணத்தை கொடுத்துட்டு போ..’ பிரசவ வலியில் துடித்த பெண்ணை தடுத்த நபர்.. தாய், சிசு உயிரிழப்பு
மாலைமலர் :கடன் தொகையை காரணம் காட்டி கர்ப்பிணியை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால் தாய் மற்றும் சிசு இருவரும் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல வாங்கியகடன் காரணமாக உரிமையாளர் தடை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





