புதன், 26 ஆகஸ்ட், 2026

ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி - வாலாசா வல்லவன்.

 வாலாசா வல்லவன்  :   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
 இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
 எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன். 

திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி - கனிமொழி ஆதரவாளர்கள் போட்டி

Latest Tamil News

 தினமலர் :திமுகவில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலாளர்கள் சிலர், தலைமை நிலையச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். பதவிகளை கைப்பற்ற, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும், திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட எண்ணிக்கை 77ல் இருந்து, 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான, அதிகபட்ச வயது 70 எனவும், மூன்று முறை மட்டுமே, அப்பதவியில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூரில் சாவு மணி அடித்த தவேக அரசு!

 Muralidharan Pb : சென்னைக்கு எதற்காக இரண்டாவது விமான நிலையம் தேவை?
ஏறத்தாழ 2 கோடி மக்கள் புழங்கும் மிகப்பெரிய நகரமான சென்னை. விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஏனைய நகரங்கள் முதல் சிற்றூர்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2000 க்கு பிறகு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் வருவாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

திமுகவின் 110 மாவட்டங்கள்- பொறுப்பாளர்கள் அறிவிப்பு? கனிமொழி எதிர்பார்க்கும் ‘அந்த’ பதவி-

  minnambalam.com  :  திமுகவோட செயற்குழு ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு இல்லையா.. அதுலதான், ”திமுக 110 மாவட்டங்களாக பிரிக்கப்படும்; 2 தொகுதிக்கு 1 மா.செ. நியமனம்; தேவைப்படுகிற இடத்தில் 3 தொகுதிகளும் இருக்கும்.. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்தான் நடத்தப்படும். மா.செ.க்கள் உட்பட மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வயது வரம்புகள்”ன்னு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு..

பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரியாணி போல் வேக வைத்து! கதிகலங்கிப் போன கூடுவாஞ்சேரி!

tamil.oneindia.com :சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 அப்பெண்ணை இளைஞர், காதலி சேர்ந்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அதன் ஒரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழாராய்ச்சி மன்றத்தை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!

May be a doodle of monument
May be an image of one or more people, people smiling and text that says "PUNITHAM THERUCHELVAM gflip.com gflip com"

 ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக  வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர் 
 தமிழரசு கட்சியினர் நான்காவது உலக  தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர்  கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்) 
திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின்  சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

PTR : பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Dr PTR.Palanivel Thiaga Rajan - Former Minister for Information Technology & Digital Services, Tamil Nadu | Home

 hindutamil.in : தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறு​வனங்​கள் சரி​யான தலை​மைப் பண்பு இல்​லாத​தால் நஷ்டத்​தில் இயங்​கு​கின்றன என முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார்.
தஞ்​சாவூர் தொழில், வர்த்தக சங்​கம் சார்​பில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற சிறப்பு கருத்​தரங்​கில் பங்​கேற்​று, “வணி​கத்​தில் நெருக்​கடி​யான சூழலில் தலை​மைப்​பண்​பு” என்​கிற தலைப்​பில் முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் பேசி​யது: சிஏஜி தணிக்கை அறிக்​கை​யில் தமிழக அரசின் நிறு​வனங்​களுக்​கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்​றும், சராசரி மூலதனத்​தின் மீதான வரு​வாய் 0.8 சதவீதம் மட்​டுமே என்​றும் கூறப்​பட்​டுள்​ளது.

திமுக மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?

 மின்னம்பலம் - மதி :திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.

சனி, 22 ஆகஸ்ட், 2026

பிரகாஷ் ராஜ் : 3,000 ஆண்டுகளாக இந்தியா மாதிரி அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை!

 tamil.oneindia.com - Nantha Kumar R  : சென்னை: ''அரசியலமைப்பை திருத்தணும்னு இருக்காங்களே திருட்டு பசங்க.. இவங்க மூன்றாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்த திருட்டு பசங்க சொல்வாங்க எங்களுடைய நாடு அற்புதமாக இருந்தது. பொன் இருந்தது என்று பொய்யாக சொல்வார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் வருடங்களாக இந்தியா மாதிரியான அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை. அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

இலங்கை: யாழ் கோவில் திருவிழாவில் விபரீதம்- 385 பேருக்கு கண் பாதிப்பு

 மின்னம்பலம் - மதி :இலங்கை யாழ்ப்பாணத்தில் ( Jaffna) கோவில் திருவிழாவில் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் 385 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் ஆகஸ்ட் 20-ந் தேதி இரவு பெருமளவில் வாண வேடிக்கைகள் மற்றும் அதீத சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாக அடுத்தடுத்து பொதுமக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 385 பேர் யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ‘கண்’ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி முதல்வரை கொன்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் - தெலங்கானாவில்

 தினமணி : பாபு' - இந்த ஒற்றை வார்த்தைதான், ஒரு கொடூரக் கொலை வழக்கில் சந்தேக நபர்களைக் கண்டறியவும், விசாரணையை முன்னெடுத்துச் செல்லவும் உதவியதாக போலீசார் கூறுகின்றனர்.
நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர்.
"ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிய அவர்கள், பணத்திற்காகவே முதல்வரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். திருடுவதற்காகச் சென்றபோது, ​​முதல்வர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதால் அவரைக் கொன்றுவிட்டனர்," என்று காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு கார் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

Image 1611226

 தினமலர் :சென்னை: தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, எந்த வகை கார் வழங்கலாம் என தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
'அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் இலவசமாக கார் வழங்கப்படும்; தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று முன்தினம் முதல்வர் விஜய் அறிவித்தார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

அமித்ஷா கூட்டத்தில் விஜய் பேச்சு - தமிழ்நாட்டின் நலன் என்று வந்துவிட்டால் திமுகவின் நிலைப்பாட்டுக்கு தான் வந்தாக வேண்டும்

 minnambalam.com -Mathi : தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மண்டல கவுன்சில் கூட்டதில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்குத் தண்டனை

 dinamalar.com : திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலஇலந்தகுளத்தில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம், 47, என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம், மதபோதகராக ஊழியம் செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.

கிழக்கு பல்கலை கழக விடுதியில் மாணவியின் சடலம் மீட்பு: இரு மாணவிகள் மயங்கினர்

  ilakkiyainfo.com  : கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில், மாணவி ஒருவர் புதன்கிழமை (19) பிற்பகல் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 84 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எதையுமே விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் தவேக + காங்கிரஸ் கல்வி அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு

No photo description available.

 சாவித்திரி கண்ணன் :  விளக்கெண்ணை போல ஒரு விளக்கம்!
கடைந்தெடுத்த ஒரு மூடரா, அமைச்சரென கல்வித் துறையை நிர்வகிக்கிறார் ! 
நம்ப முடியவில்லை!
அனுப்பப்பட்ட அறிக்கை கல்வி வளாகத்தின் ஒழுங்கமைவு சம்பந்தப்பட்டதாம்! 
அதில் தவறுதலாக சில வாசகங்கள் இடம் பெற்றுவிட்டதாம்…! 
அதை அவர்களே உணர்ந்து வாபஸ் வாங்கிவிட்டார்களாம்..!
அதிகாரிகள் தந்த விளக்கத்தை அப்படியே எடுத்து வந்து அவையில் வாசிக்கிறார், அமைச்சர்!
ஆக, இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்ட அதிகாரியிடம் அமைச்சர் விசாரணை கூட மேற்கொள்ளவில்லை. 

புதன், 19 ஆகஸ்ட், 2026

இம்ரான் கான்9 மாதங்களுக்கு பின் மனைவி சகோதரியை சந்தித்தார் - உச்சநீதிமன்ற தீர்ப்பு

 தினமலர் : இஸ்லாமாபாத்: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 9 மாதங்களுக்கு பின்னர் இம்ரான் கான் அவரது மனைவி, சகோதரியை சிறையில் சந்தித்து பேசினர்.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் சிறையில் அவர் மரண படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற தொடர்ச்சியான செய்திகளை தொடர்ந்து இம்ரானை இஸ்லாமாபாதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை குடும்பத்தினர் வாரம்தோறும் சந்திக்க, மகன்களிடம் தொலைபேசியில் பேசவும் அனுமதி அளித்தது.

இலங்கை விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் : நடந்தது என்ன?

 ilakkiyainfo.com : திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விகாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு- 125 தீர்மானங்கள்- கட்டுக் கடங்காத கூட்டம்

 மின்னம்பலம் - மதி : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமாவளவன் பிறந்த நாளான நேற்று ஆகஸ்ட் 17-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு காலை முதலே சாரை சாரையாக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் விசிக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர்.

அனிருத் - காவ்யா மாறன் ( கலாநிதி மாறன் மகள்) திருமணம் கிரீஸில் நடக்கப் போகிறது

 தினமலர் : சென்னை: ராக் ஸ்டார் அனிருத் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 
இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஒய்ஜி மகேந்திரன் பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்திய நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவது உறுதியானது. 

கொழும்பு சிவசுப்பிரமணியர் ஆலய நகைகள் திருட்டு - குருக்கள் கைது

 ilakkiyainfo.com  :குருக்களை கைதுசெய்து ஆஜர்படுத்த கோட்டை நீதிவான் உத்தரவு.
கொம்பனித்தெரு  சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த  தங்க நகைகளை திருடி அடகு வைத்த அவ்வாலயத்தின் பிரதான குருவான சதீஸ்குமாரகுருக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் முன்னிலையான கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமளிக்கையில், கொம்பனித்தெரு ஸ்ரீசிவசுப்பிரமணியர் சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த நகை திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் முறைபாடளிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பாக்கெட் சப்பாத்தியில் 100% கோதுமையா? ஃப்ரோசன் பரோட்டா? பிளேட்டை திருப்பிப் போடும் திடுக் உண்மை

tamil.oneindia.com -Hema Vandhana : சென்னை: பாக்கெட் தோசை மாவு எந்த அளவுக்கு பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டுமோ, அதே போல தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும் பாக்கெட் பரோட்டா, சப்பாத்தி எனலாம்.. அவசர சமையலுக்காக இதை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.. அதேசமயம், அதில் கலக்கப்படும் பொருட்களை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இன்றைய அவசர உலகத்தில் சமையல் நேரத்தை குறைக்க கடைகளில் விற்கப்படும் "ரெடிமேட் சப்பாத்தி". ஃப்ரோசன் பரோட்டா பாக்கெட்டுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் பல குடும்பங்களில் அதிகரித்துவிட்டது.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை! பாரபட்சமற்ற நீதி விசாரணை தேவை” - மு.க.ஸ்டாலின்

 hindutamil.in -அனலி  : சென்னை: “கர்நாடகாவில் நிகழ்ந்த 3 தமிழர்கள் கொலையில் வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்திக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

கல்முனை வைத்தியசாலையில் ஹிஜாப்!

 Satha Thambirajah : கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் அண்மையில் சுகாதார சிற்றூழியர் அனுமதிபெற்று போன 9 பேரில் ஐந்துபேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
@என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நஜீம் எனப்படும் security service incharge ன் மனைவி மனைவியின் தங்கை நஜீமின் தங்கை என ஐவர் அம்பாறையில் இடம்பெற்ற ஒரு மாதகால பயிற்சிக்கே செல்லாமல் அனுமதி பெற்று வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இவ்வாறு அனுமதிபெற்று போனது எப்படி?  
இதுபற்றி வைத்தியசாலையின் பணிப்பாளர் கவனத்தில் எடுத்தாரா?
இந்த புள்ளியில் நடந்தது மத அனுமதியா?  அரச 
 அனுமதியா?
இவர்களே முக்கிய குழப்பவாதிகளாகும்.

ஸ்டாலினை கவிழ்க்க ராகுலின் திட்டம்! நொறுக்கிய உதயநிதி! வாயடைத்து நின்ற விஜய்!

 May be an image of text that says "인두 ေပ "கூத்தாடி கையில் நாட்டை கொடுங்கள், அவன் கூத்தியாள் கையில் நாட்டை கொண்டு கொடுப்பான்" -முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர்"