நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வெள்ளி, 29 மே, 2026
டெல்லியில் காத்திருந்த ராகுல் சோனியா - அமித் ஷாவுக்கு பயந்து பின்வாங்கிய விஜய்
tamil.oneindia.com - Shyamsundar : டெல்லி: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சி. ஜோசப் விஜய், தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை இன்று நிறைவு செய்தார். இரண்டு நாட்கள் நீடித்த இந்த உயர் மட்டப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினார். எனினும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்னை திரும்பியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கூட டெல்லி போன ஆந்திரா முதலாளிகள் - அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம்
tamil.oneindia.com : விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன்
விஜய் கூட டெல்லிக்கு போனது யார், அவர்களுக்கும் தமிழக அரசியலுக்கு என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. ஏன் அமைச்சர்களை அவர் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் என்பது அதிகாரத்திற்கான யுத்தம்; இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற யதார்த்தமான உண்மையுடன் உரையாடலைத் தொடங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!
![]() |
![]() |
Esther L Shanmugham :சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருக்கும் (தென்னிலங்கை) மலையக மக்களின் நிலைமை! எஸ்தர் - கவிஞர் /எழுத்தாளர் மலையகம் இலங்கை
மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!
தற்போது ஊடகங்களில் பேசப்படும் முக்கியமான விடயமாக, மலையக மக்கள் தென்னிலங்கை தனியார் தோட்டங்களில் எதிர்கொள்ளும் சுரண்டல், அடாவடித்தனம் மற்றும் குறைந்த கூலி தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் மனிதர்களாகவும் மனிதாபிமானம் அற்றவர்களாகவே தனியார் தோட்டகம்பனிகள் மக்க ளை நடத்துகிறார்கள்
ஆனால் இது இன்றோ நேற்றோ உருவான பிரச்சினையல்ல; காலம் காலமாக மலையகப் பகுதிகளில் இடம்பெற்று வரும் பெரும் மனித வதை
வியாழன், 28 மே, 2026
திமுக அதிமுக இணைப்பு சாத்தியமா
ராதா மனோகர் : கலைஞர் எம்ஜியார் என்ற இரு தலைவர்களுக்கு இடையேயான பிரச்சனைதான் அதிமுக திமுக பிரச்சனை!
இவர்களின் பிரச்னை கொள்கை சார்ந்தது அல்ல.
விரும்பத்தகாத பல விடயங்கள் நடந்து முடிந்து போய்விட்டன.
இப்போது இருவரும் உயிரோடு இல்லை
ஆனால் இருவரின் கட்சிகளுக்கும் இருவரின் திரைப்படங்களும் இன்றும் உயிர்துடிப்போடு உள்ளன
எனவே இருவரும் தமிழக வாழ்வியலில் தொடர்ந்து இருப்பார்கள்
சுமார் 40 வருடங்கள் ஒன்றாக ஒரே கொள்கையில் பயணித்த இரு தலைவர்களின் இயக்கங்கள்,
இன்று வடவர் பேராபத்தை எதிர்கொண்டு நிற்கிறது
முன்னெப்போதையும் விட இப்போது வரலாற்று பகைவர்கள் பெரும் பலத்தோடு உள்ளார்கள் .
வாசல் படி வரை வந்துவிட்டார்கள்
“காவலர் மீது தவெக குண்டர்கள் தாக்குதல்... ” - அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம்
hindutamil.in - வெற்றி மயிலோன் : சென்னை: “கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெகவில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
மட்டக்களப்பில் hotel அறையில் தீப்பரவல் - மூச்சுத்திணறி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
hirunews.lk : மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தந்தை தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு, வெளியில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
Victim syndrome விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ராதா மனோகர் : ஒருவர் எப்போதும் நான் பாதிக்கப்பட்டேன் என்னை எல்லோரும் துன்புறுத்துகிறார்கள்
என்று பிறரின் கவனத்தை கவர்வதற்காக அல்லது பிறரின் அனுதாபத்தை பெறுவதற்காக ஓயாமல் கூவிக்கொண்டே இருப்பது ஒரு உளவியல் நோய்!
இது வெறும் நோய் மட்டுமல்ல .இது ஒரு வியாபாரம் .. முதல் இல்லாத வியாபாரம்
இதில் ருசி கண்டவர்கள் ஒரு போதும் இதை கைவிட மாட்டார்கள்
இந்த விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ருசி கண்ட பூனை அல்லவா . இலகுவில் விட்டு விடாது .
தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சாபக்கேடு இவர்
ஏன் திருமாவை இப்படி கூறுகிறேன் என்பதை முன்பே கொஞ்சம் விபரமாக எழுதியுள்ளேன்
திருமாவளவன் வைகோ விஜயகாந்த்
மீள்பதிவு 28 செப்டெம்பர் 2020 நாம் சம காலத்தில் கண்டு வியக்கும் நம் தமிழ்நாடு பெற்றெடுத்த மிகப் பெரிய அறிவுச்சொத்து என்று கட்டுக்கடங்காத தொண்டர்களையுடைய விசிக கட்சி தலைவர் திருமாவளவனை சிலர் குறிப்பிட்டுள்ளனர் .
ஆனால் வரலாறு அப்படி இல்லையே?
புதன், 27 மே, 2026
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு - தமிழக அரசின் கோரிக்கைகள் மனு அளிப்பு
hindutamil.in : புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
பேருந்து அரசுடமை - ஏழை மக்களின் வாழ்வை திருப்பி போட்ட கலைஞர்
![]() |
Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 7! பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கியவர்
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானபோது திமுக 138 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையைக் காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டது.
சைதாப்பேட்டையில் பதினோரு லட்சம் (கலைஞர்) வெற்றிபெற்றிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு அபாரவெற்றி. 25 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது திமுக. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா வெற்றி .
முக்தார் கைது ! பிரபல ஊடகவியலாளர் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார் பழிவாங்கும் நடவடிக்கை
நக்கீரன் -து. ராஜா : நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர். பத்திரிகை, மீடியாக் கள், சோசியல் மீடியாக்கள் வழியாக விமர்சித்தவர்களை முதலமைச்சர் என்கிற அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் பழிவாங்கும் படலத்தை துவங்கியுள்ளார் ஜோசப் விஜய்.
"மை இன்டியா 24/7' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்துகிறார் பத்திரிகையாளர் முக்தார் அஹமத். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவரு கிறார். கடந்த மே22ஆம் தேதி இரவு ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீட்டிலிருந்து காரில் தனது மனைவி, பிள்ளைகள், தனது மனைவியின் தங்கை, அவரின் இரண்டு குழந்தைகளோடு இரவு 11.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகுகிறார்? சிவகுமாருக்கு விட்டுத்தர ஒருவழியாக ஒப்புதல்
dinamalar.com : பெங்களூரு: 'கர்நாடக முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குகிறோம்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதை அடுத்து, முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தர சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் சிவ குமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சி மேலிடம் இருவரையும் டில்லிக்கு அழைத்தது. நேற்று முன்தினம் இரவே, இருவரும் தனித்தனி விமானங்களில், தங்கள் ஆதரவாளர்களுடன் டில்லிக்கு பறந்தனர்.
விவசாயிகள் பெரும் ஏமாற்றம்- யார் யாருக்கு கடன் தள்ளுபடி? விவசாயிகள் கடும் எதிர்ப்பு
minnambalam.com - Mathi : முதல்வர் விஜய் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடியால் பெரும் ஏமாற்றம்- விவசாயிகள் போராட்டம்- தலைமை செயலகம் முற்றுகை- சிபிஐ, சிபிஎம் கண்டனம்!
முதல்வர் விஜய் (Vijay) வெளியிட்ட பயிர் கடன் தள்ளுபடி (Farm Loan) குறித்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
முதல்வர் விஜய் நேற்று விவசாயிகளின் பயிர் கடன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
ரூ.50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.
இடைத்தேர்தல்கள் ஆட்சியை காப்பாற்றுமா அல்லது காவு வாங்குமா? மில்லியன் டாலர் கேள்வி
tamil.oneindia.com சியாம் சுந்தர் ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 107 இடங்களைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருந்தாலும், தவெக அரசுக்கான ஆபத்து இன்னும் விலகவில்லை என்பதை தற்போதைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.
செவ்வாய், 26 மே, 2026
அன்னா ஹாசாரேக்களும் மங்காத்தாக்களும் அடிமை வரலாற்று மிச்சம் மீதிகள்
![]() |
ராதா மனோகர் : நவம்பர் 2011 - சென்னை மெரீனா பீச்சில் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தமிழர்களை பற்றி கொண்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கமும் படித்தவர்களும் உணர்ச்சியோடு அங்கு கூடி முழக்கங்களை எழுப்பினார்கள். ஊழலை ஒழித்து விட்டுத்தான் இனி காலை உணவே உண்பார்கள் என்ற ரேஞ்சில் இருந்தது
அதற்கு அடுத்த நாளே அஜித் அர்ஜுன் நடித்த மங்காத்தா பிளாக் காமடி படம் வெளியானது
இந்த அன்னா ஹாசாரேயின் கூட்டத்திற்கு நிகரான கூட்டம் மங்காத்தா படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் தெருவெங்கும் மிரண்டு கொண்டிருந்தது
அன்னா ஹாசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மங்காத்தா என்கவுண்டர் செய்து விட்டது என்று தோழர் மருதையன் குறிப்பிட்டிருந்தார்
மோசடியை ஊழலை அதுவும் நாட்டை காக்க வேண்டியே போலீஸ் திறமையாக கொலை கொள்ளைகளை செய்வதை அழகியலாக்கி படமாக்கினார்கள் .
எங்க மீது அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கும்.. திமுக பகிரங்க எச்சரிக்கை
மின்னம்பலம் - மதி : சமூக வலைதளங்களில் திமுக (DMK) மீது திட்டமிட்டு அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று மே 25-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட அந்த சம்பவத்தை திசைதிருப்புகிற வகையில் ஒரு பெண் சோஷியல் மீடியாவிலே பேட்டியளித்து, அது வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கொழும்பில் சினிமா பாணி கடத்தல்... தங்கம் கொள்ளை! சிக்கிய எஸ்.ஐ!
![]() |
Kanakanayakam Vijaypiragaash · சினிமா பாணி கடத்தல்... தங்கம் கொள்ளை! சிக்கிய எஸ்.ஐ – கொழும்பில் அதிரடி திருப்பம்!
மக்களைக் காக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே, பட்டப்பகலில் சினிமா பட பாணியில் கடத்தலில் ஈடுபட்டு 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! இந்த மெகா கொள்ளை வழக்கில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஒருவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் வெளிவந்துள்ள சுவாரசியமான பின்னணி இதோ...
பிளான் போட்ட ‘வடக்கு’ போலீஸ்!
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய போதுதான் இந்த "தங்க வேட்டை" அரங்கேறியுள்ளது. நபர் ஒருவரைக் கடத்தி, அவரிடமிருந்த 2 கிலோ தங்கத்தை இந்த அதிகாரி சத்தமில்லாமல் அள்ளியுள்ளார்.
மட்டக்களப்புக்கு எஸ்கேப்... ஆனால்?
திங்கள், 25 மே, 2026
இலங்கையில் JVP அதிகார மோதல் ... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் Episode
அரசியல் பேசலாம் ·ஒரு சிம்மாசனம்... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் எபிசோட்!
இலங்கை அரசியல் என்பது எப்போதுமே முடிவில்லாத ஒரு 'மெகா சீரியல்' தான். இதில் "கட்சி அதிகாரம் vs அரசாங்க அதிகாரம்" என்ற பழைய சீசன் இப்போது மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இம்முறை கதைக்களத்தில் இருப்பவர்கள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா!
ஜே.ஆர். போட்ட 'மாஸ்டர் பிளான்'
"முடிவு எடுத்தாச்சு. ஒத்துவந்தா இருங்க, இல்லனா கதவு திறந்தே இருக்கு, தாராளமா வெளியேறலாம்!" - இதை ஏதோ கோபத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தன சொல்லவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போது நாடாளுமன்றக் குழுவை கூட்டி மிக 'கூல்' ஆகச் சொன்னார். இதைக் கேட்டதும் எம்.பிக்கள் எல்லாம் காற்றிறங்கிய பலூன்கள் போல கப்சிப் என உட்கார்ந்திருந்தார்கள்.
தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா ?
Gowtham Sham : கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்தால், முதலில் பலருக்கும் தோன்றுவது ௮ ஒரு visible political presence இல்லாத வெற்றிடம்.
சமூக பதற்றங்கள், சட்ட ஒழுங்கு விவாதங்கள், இணையத்தில் தீவிரமாக பேசப்படும் பிரச்சனைகள், அரசியல் சர்ச்சைகள் ௮ எல்லாமே ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில், “அரசியல் தலைமையே இப்போது எங்கே இருக்கிறது?” என்ற கேள்வி பொதுமக்களிடையே இயல்பாக எழ ஆரம்பிக்கிறது.
ஏனெனில் தமிழ்நாடு அரசியல், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், ஒரு தொடர்ச்சியான public presence-க்கு பழகியிருந்தது.
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு
tamil.oneindia.com - Vishnupriya R :கோயமுத்தூர்: நானே குழந்தையை பறிகொடுத்துவிட்டு இருக்கும் நிலையில் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோவை சூலூர் சிறுமியின் தாய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது குழந்தையின் தாய்க்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும், குழந்தையை காணவில்லை என்பது கூட தெரியாமல் போதையில் படுத்திருந்ததாகவும் பெண் ஒருவர் வீடியோவில் கூறியிருக்கும் நிலையில் மறுத்துள்ளார்.
திமுக தலைவர்கள் மீது கடும் கோபத்தில் எகிறி பாயும் உடன்பிறப்புக்கள்
Kandasamy Mariyappan : அன்பின் திமுக மூத்த தலைவர்களே..வணக்கம்.! நீங்கள் நலமாக வாழ வாழ்த்துகள்.
உங்களில் பலரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைத்துள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) உள்ளீர்கள்.!
உங்கள் பலரின் பிள்ளைகளும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) அல்லது கட்சி பொறுப்புகளில் உள்ளார்கள்.!
உங்களில் பலர் அமைச்சர்களாக உள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளீர்கள்.!
இந்த வசதிகள் எல்லாமே, கட்சியால் உங்களுக்கு கிடைத்தது.!
திரு. ஸ்டாலின் திமுகவை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பித்து அதில் நீங்களெல்லாம் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும், 15-20% வாக்குகளை மட்டுமே பெற முடியும்.!
நாயகன் வெற்றி படத்தினால் எந்த இலாபமும் தயாரித்த முக்தா பிலிம்ஸுக்கு கிடைக்கவில்லை
ராதா மனோகர் : நாயகன் படத்தை தயாரித்தது முக்தா பிலிம்ஸ்
முக்தா வி ராமசாமி முக்தா வி சீனிவாசன் ஆகியோர்கள் தயாரித்தார்கள்
படத்தின் மொத்த நெகட்டிவ் உரிமையை ஜி வெங்கடேசனுக்கு விற்றுவிட்டார்
அந்த காலத்திலேயே சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் உருவான படம்
நாயகன் வரை இன்றுவரை மக்களால் பேசப்படும் ஒரு கல்ட் மூவி என்று கூறலாம்
ஜி வெங்கடேசனுக்கு பெரும் வசூலை அள்ளிக்கொடுத்த படம்
படத்தை வெளியிடும் போது பலரும் அது வெங்கடேசனின் ஜி வி பிலிம்ஸ் படம் என்றுதான் கருதினார்கள்
அந்த அளவுக்கு ஜிவி பிலிம்ஸ் விளம்பரம் இருந்தது
விசிகவுக்கு பனையூர் பாபு குட்பை.. ஸ்டாலினை சந்தித்த ஆளூர் ஷாநவாஸ்.. ராஜ்யசபா எம்.பி.
மின்னம்பலம் - Mathi : என்ன ப்ரோ.. யாரு எங்க தாவப் போறாங்களாம்?
நான் அப்படி சொல்லலையே ப்ரோ.. ஆனா அந்த மாதிரி சம்பவங்கள் நடக்குதே..
இன்னைக்கு விசிகவில இருந்து மாஜி எம்.எல்.ஏ. பனையூர் பாபு (Panaiyur Babu) விலகிட்டாரு.. அதே மாதிரி ஆளூர் ஷாநவாஸை (Aloor Shanavas) பத்தியும் பல தகவல்கள் பரவுது..
சட்டசபை தேர்தலில் விசிக ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காததால ஏகப்பட்ட சர்ச்சைகள்.. யூகங்கள்.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி விசிகவின் முதன்மை செயலாளர் பதவியை கொடுத்தாரு திருமா..
உதயநிதி ஸ்டாலின் : "பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!
தினமணி ஜீவகணேஷ்.ப : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ் கட்சி.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
ஞாயிறு, 24 மே, 2026
நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைந்திருந்தது
![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : காங்கிரஸ் கட்சிக்குள் நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது
இந்திய வாழ்வியலின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்துத்துவா கருத்துக்களை இந்த காங்கிரஸ் சங்கிகள் விதைத்து கொண்டே வந்துள்ளார்கள்
இதற்கு பல உதாரணங்கள் உண்டு
இந்திய ஒலிபரப்பு சேவைக்கு ஆகாஷ்வாணி என்று பெயர் சூட்டியது பாஜக அல்ல காங்கிரஸ்தான்
ராமாயணம் பாரதம் போன்ற இந்துத்துவா புராணங்களை அரசு செலவில் பிரமாண்ட தொலைக்காட்சி சீரியல்களாக தயாரித்து மக்களை சங்கிகளாக்கியது பாஜக அல்ல காங்கிரஸ்தான்
இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம் உண்டல்லவா!










