செவ்வாய், 24 மார்ச், 2026

கமலுக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை : ஸ்டாலின் பதிவு! I

 மின்னம்பலம் -  Kavi :  2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 
தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு  முழு ஆதரவு கொடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
இதைத்தொடர்ந்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். 

சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை: கமல் அறிவிப்பு

 தினமலர் : சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் மநீம போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.
கூட்டணி தர்மம்
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தேச நன்மைக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். 
கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். 
அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் ராஜ்யசபாவில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.

திங்கள், 23 மார்ச், 2026

ஈரான் பணிந்தது- பேச்சு வார்த்தைக்கு தயார் - தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக டிரம்ப் அறிவிப்பு

 BBC News தமிழ்   மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு 'முழுமையான தீர்வு' காண்பது குறித்து இரானுடன் 'பயனுள்ள பேச்சுவார்த்தை' நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில், வெளியிட்ட ஒரு பதிவில், "அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே, கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது குறித்து, மிகச் சிறந்த மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளார் டிரம்ப் .

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

 hindutamil.in - கி.மகாராஜன்  :  மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 
அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 
கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, 

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 + தொகுதிகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்! தமிழ்நாடு

 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 + தொகுதிகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
சென்னை பிரஸ் கிளப்பில் கருத்து கணிப்பு வெளியீடு!

Air Canada ஓடுதளத்தில் இருந்த தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்!L: இருவர் உயிரிழப்பு

 மாலைமலர் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த ‘ட்ரக் 1’ என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

மகாராஷ்ட்ரா ஆசிரமத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் .. சி சி டிவியில் மாட்டிய பாஜக பிரமுகர்கள்

 Maha Laxmi  :  சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், கனடா பகுதியில் இருக்கும், மிர்கௌம் கிராமத்தில்,
இஷனேஷ்வர் மகாதேவ் கோவில் டிரஸ்ட் தலைவரும்
ஹெர்மிடேஜ் ஆசிரம சாமியாரும்,
பாஜக சாதுக்கள் செயலக தலைவருமான அஷோக் கராத்(67) போந்து பாபா என்றும் இவரை அழைப்பதுண்டு.‌
இந்த சாமியார் தன் ஆசிரமத்திற்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஜல்சா வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 
மேலும் அந்தப் பெண்களிடம் இந்த காணொளியை காண்பித்து மிரட்டி தன்னுடைய காம இச்சையை பல வருடங்களாக தீர்த்து வந்துள்ளார். கூடுதலாக பாஜக தலைவர்களுக்கும் அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். 

ஞாயிறு, 22 மார்ச், 2026

ஈரான் அல் காமினிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் இந்திய இடதுசாரிகள்

 Sridhar Subramaniam : ஈரான்-அமெரிக்கப் போரில் எழும் எதிர்வினைகளில் என்னை ரொம்பவும் ஆச்சரியமூட்டியது ஒரு விஷயம்: 
கமேய்னிக்கு இந்திய இடதுசாரிகள் கொடுத்த / கொடுக்கும் ஆதரவும் மரியாதையும்தான். 
பலர் கமேய்னியின் ஃபோட்டோவை முகநூல் முகப்புப் படமாகவே வைத்திருக்கிறார்கள். 
கமேய்னி ஒரு ஆயதொல்லா. ஆயதொல்லா என்றால் 'அல்லாஹ்வின் பிரதிபலிப்பு' அல்லது 'அல்லாஹ்வின் அறிகுறி' என்று அர்த்தம். 
அதாவது அவர் உண்மையில் ஒரு மதத் தலைவர். 
அவருடன் மோடியைக் கூட ஒப்பிட முடியாது. 
காரணம் மோடி மதத்தலைவர் அல்ல. மோகன் பகவத்தையும் ஒப்பிட முடியாது. 
காரணம், அவரிடம் மத அதிகாரம், அரசியல் அதிகாரம் இரண்டுமே இல்லை.     வேண்டுமானால் யோகி ஆதித்யநாத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம், 
அவரும் ஒரு மடத்தின் தலைவர் என்பதால். 'ஓரளவுக்கு' என்று சொன்னதற்குக் காரணம், யோகி மக்களால் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர். கமேய்னி அது கூட இல்லை. 'நிரந்தர முதல்வர்' என்பது போல 'நிரந்தர அதிபர்'. 

வெள்ளி, 20 மார்ச், 2026

2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்க கப்பல்

 தினமலர் : வாஷிங்டன் : மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்காவின், 'யு.எஸ்.எஸ்., திரிபோலி' என்ற பிரமாண்ட போர்க்கப்பல், 2,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சண்டையிட்டு வருகின்றன. உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும், 'ஹார்முஸ் ஜலசந்தி'யை ஈரான் மூடி உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் உட்பட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்., திரிபோலி, 2,000க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஈரானின் கார்க் தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் பரிசீலனை; ஹார்முஸ் நீர் வழியை திறக்க நடவடிக்கை

 தினமலர் : வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, கார்க் தீவை ஆக்கிரமிப்பது அல்லது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஆதவ் அர்ஜுனா நிறுவனங்கள் 38.- ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து 10 நிறுவனத்தை மூடுவாங்க! அத்தனையும் போலி கம்பனிகள்

May be an image of one or more people, people smiling, newsroom and text that says "க் ர்க்கு 1 1L"

 மாரி தாஸ் : ஆதவ் அர்ஜுனா வச்சு நேர்மை அரசியல் பேசும் தற்கூறிகளா... 
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டீன் மகள்) மொத்தம் தற் போது நடத்தும் நிறுவனங்கள் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38.  (ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து வேறு நாளில் 10 நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுக. அனைத்தும் Shell companies.  அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனா நடப்பது போல காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
ரியல் எஸ்டேட் 20க்கும் மேற்பட்ட நிறுவனம்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம் 

வியாழன், 19 மார்ச், 2026

என் முக்காட்டை 2001 ஆம் ஆண்டு ஏறாவூரிலேயே கழைந்துவிட்டேன்! ஷார்மிளா சையத்

May be an image of one or more people and people smiling

 Sharmila Seyyid  :  அன்பார்ந்த மக்களே, என் முக்காட்டை 2001 ஆம் ஆண்டு ஏறாவூரிலேயே கழைந்துவிட்டேன்!  என்னம்மோ அமெரிக்கா வந்த பிறகு தான் முக்காட்டைக் கழற்றினாற் போலவும்,
 எனக்கு சுதந்திர தாகம் வந்தது போலவும்,
 இங்குவந்த பிறகுதான் பிறந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும் முஸ்லிம் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பேசும் ஞானதோயம் வந்ததென்றும் உங்கள் பாட்டுக்குப் பிதற்றாதீர்கள். 
நான் அமெரிக்கா வந்து நான்கரை ஆண்டுகள் தான் ஆகிறது. 
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண் உடல் மீது நிகழும் பல வித வன்முறைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். 
அமெரிக்கா வருவதற்கு  முன்பு இஸ்தான்புல்லில் வசித்தபோதும் பள்ளிவாசல்களில் பெண்களுக்கு இருக்கும் புழங்கு வெளிகளை சிலாகித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் விவகாரம் - முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கும் தொடர்பு

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

 hirunews.lk  : 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, கையூட்டலாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா பணம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின்படி, தமக்குக் கிடைத்த 60 மில்லியன் ரூபா பணம் மூன்று தவணைகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎம் சில தொகுதிகளில் தனித்து போட்டி… பல தொகுதிகளில் திமுக அணிக்கு ஆதரவு - ஆலோசனை

  minnambalam.com  - Kavi :  திமுக கூட்டணியில் சிபிஎம் கூடுதல் தொகுதிகளை கேட்பதில் உறுதியாக இருக்கிறது.  
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.  இதில் கந்தர்வ கோட்டை, மதுரை தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 
தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
கடந்த மார்ச் 17ஆம் தேதி  திமுகவுடன் சிபிஎம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், ‘அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ என பேட்டி அளித்தார். 

முகாம் தமிழர்களின் குடியுரிமைக்கு குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்! நன்றி கெட்ட புலி ஆதரவாளர்கள்

முகாம் வாழ் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்! இது பற்றி இலங்கை தமிழ் தேசிய தலைவர்கள் இதுவரை வாயே திறக்கவில்லை மேற்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களும் தமிழக முகாம் வாழ் மக்களை தமிழர்களாகவே கருதவில்லை! உலகிலேயே ஒரு மோசமான இனம் உண்டென்றால் அது தமிழ் தேசியர்கள்தான்!

 Thesam Jeyabalan : தமிழக முகாம்களில் வலிந்து மாவீரர் தினங்களை நிகழ்த்தி இந்திய பிரஜாவுரிமை பெறுவதை திட்டமிட்டு முடக்குகின்றனர் !
சீமானுக்கு உதவினால் தனி ஈழம் அமைக்கலாம் என புலம்த் தமிழர்கள் எண்ணுகின்றார்கள் ! ஆனால் எங்களுக்கு உதவுவதில்லை !
திமுக மீது புலிகளுக்கு இருக்கும் வெறுப்பு, புரிதலில் உள்ள பிரச்சினை ! ராஜீவ், நாபா படுகொலைகளின் எதிர்விளைவு !
திமுக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது ! ஆனால் புலம்பெயர் தமிழர்கள் தான் திமுகாவுக்கு எதிராக உள்ளனர் !
தற்போது இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் மலையகத் தமிழர்கள் ! அவர்கள் இலங்கை வரவிரும்பவில்லை !
புலம்த் தமிழர்கள் இந்திய ஈழத் தமிழர்களைப் பற்றி அக்கறையில்லை ! தங்களுடைய அரசியலுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர் !

புதன், 18 மார்ச், 2026

என் வாழ்நாளில் திமுகவுக்கு ஓட்டு போட்டதே கிடையாது.. தீயாய் பரவும் வீடியோ.. முதல்வர் வெளியிட்ட பதிவு

 tamil.samayam.com - Ashik Mohamed  : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் சம்பந்தமான பணிகளில் முழு மூச்சுடன் இறங்க துவங்கியுள்ளன. அடுத்தடுத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம் என்று தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திமுகவிற்கு இதுவரை ஓட்டு போட்டது கிடையாது என பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஈரானை தாக்க 2270 கிலோ 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது ஏன்?

 
bbc.com  - கிறிஸ் பார்ட்ரிட்ஜ் :  ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள இரானிய ஏவுகணை தளங்களை தாக்கியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தளங்களை, பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.
அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீரிணையின் இரானிய கரையோரம் அமைந்துள்ள கடினமான இரானிய ஏவுகணை தளங்கள் மீது 5000 பவுண்ட் (2270 கிலோ) எடை கொண்ட ஆழமாக ஊடுருவி தாக்கும் ஆயுதத்தை வெற்றிகரமாக உபயோகித்ததாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு

 தினமலர் : டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 
இன்றைய நாளில் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானப்படை தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டுள்ளார்.
அவர்களைவேட்டையாடுவது தொடரும். ஈரானின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து கொல்லும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு பிரதமர் நெதன்யாகு அனுமதி வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

கியூபா கம்யூனிஸ்டு ஆட்சி முறை முடிவுக்கு வருகிறது! ஜனநாயகம் மலர்கிறது?

dinatamil.indianexpress.com  - Mona Pachake : வெனிசுலா, ஈரான்... அடுத்து கியூபா-வுக்கு குறி வைக்கும் டிரம்ப்
டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், கியூபாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் ஒற்றைக் கட்சி ஆட்சியை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், கியூபாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் ஒற்றைக் கட்சி ஆட்சியை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

செவ்வாய், 17 மார்ச், 2026

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திராவிட இயக்ககங்கள் கட்சிகளின் களப்பணிகள்

 Loganayaki Lona  :  எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் குடும்பக் கொலை ,ஜாதியக்கொலை கலவரம் நடந்துகிட்டு இருக்குது.
இதுக்கு எல்லாம் திமுக  காரணமெனில் வேற யார் இருந்தப்ப அங்க கொலை நடக்கல?
சமூகமாகவே ஆதிக்க ஜாதியவாதிகளும்,அந்த வளர்ப்பு முறைகளும் ,ஆயுதப்புழக்கமும் அங்க இருக்குது.
அதற்கான திருத்தப்பணி பெரியார் இயக்கங்கள்,கம்யூனிஸ்ட் அமைப்புகள் சார்ந்து அங்கு பிற மாவட்டங்களில் நடப்பது போல் நடப்பதில்லை.நடத்தவேண்டும்.அந்த அளவு பண்பட்டு இன்னும் அந்தபகுதி மேம்படவில்லை.
ஜாதியக்கலவரம் என்பதிலிருந்து ஜாதியக்கொலை என தனிநபர் கொலைவழக்காகவும், 
ஜாதியவாதிகள் என்பதிலிருந்து ஜாதி அரசியல் கட்சிகளாகவும்,அமைப்புகளாகவும் மாறியிருக்கு.

கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் - The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்

 
ராதா மனோகர்
: கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் -   Bennett, Coleman & Co. Ltd. (commonly known as The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்!
2ஜி வழக்கின் போது  தலைப்பு செய்திகளாக  
நாள்தோறும் பச்சை பொய்களை  டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு கொண்டிருந்தது அல்லவா?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வந்தால் அது வெறும் செய்தி அல்ல,
அதுவே தீர்ப்பு என்ற அளவில் அதன் நம்பகத்தன்மை கட்டமைக்கப்பட்டு இருந்தது.

No photo description available.

அதே டைம்ஸ் ஆப் இந்தியாவை வெளியிடுவது   Bennett, Coleman & Co. Ltd. குழும நிறுவனம்தான் 
இந்நிறுவனம் பல கம்பனிகளை தன்வசம் வைத்திருக்கிறது 
ஷாஜி ஜெயின் குடும்பத்திற்கு சொந்தமானது 
இதன் வருமானம் 2022 இல் Increase ₹4.57 billion (US$54 million!
Bharatiya Jnanpith பாரதீய ஞானபீடம் என்பது இவர்களின் நிறுவனம்தான்.
இவர்களின் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில்தான்  ஆ.ராசா அவர்கள் அமெரிக்க வங்கியில் 3000 அமெரிக்க டாலர்களை வைத்துள்ளார் என்று தலைப்பு செய்தியாக முழு பொய்யை வெளியிட்டது 
இந்த செய்தியை பார்த்துவிட்டுதான் 2 ஜி விசேஷ நீதிமன்ற அமர்வில்,
2 ஜி வழக்கை விசாரித்து கொண்டிருந்த நீதிபதி Special Judge OP Saini அவர்கள் ஆர் ராசாவை எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத ஒரு குற்றவாளியாகவே பார்த்தார் 

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்! 400 நோயாளிகள் உயிரிழப்பு -. மருத்துவமனை மீது தாக்கியது போர் குற்றம்

 
tamil.mykhel.com -Javid Ahamed :  காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 
எனினும் பாகிஸ்தான் இத்தாக்குதலை மறுத்தபோதும், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி நீதி கோரினர். இந்தச் சம்பவம், இரு நாடுகள் உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

’உறுதியாக’ நிற்கும் சிபிஎம்.. திருமாவிடம் ஆதங்கப்பட்ட ஸ்டாலின்.. வேல்முருகன் ‘கண்ணாமூச்சி’!

 
minnambalam.com : “இப்படி எல்லாமா நெருக்கடி வரும்”? என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எந்த கட்சிக்கு நெருக்கடி வந்துருக்கு?
தேர்தல் நேரத்துல நெருக்கடியை சந்திக்காத கட்சிதான் உண்டா? தலைவர்கள்தான் உண்டா? நடக்கிறதை சொல்றேன்..
திமுக கூட்டணியில ரொம்பவே போக்கு காட்டிய காங்கிரஸை ஒரு வழியாக சமாளிச்சு ஒப்பந்தம் போட்டு முடிச்சாரு சிஎம் ஸ்டாலின்..
இதுக்கு அப்புறமா மதிமுகவுக்கு 4 சீட் கொடுத்து சுமூகமா கையெழுத்தாகிடுச்சு.. 

திங்கள், 16 மார்ச், 2026

விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!

tamil.oneindia.com - Vishnupriya R  :  சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த உத்தேசப் பட்டியல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த கூட்டணியில் இணைந்தால் அதிமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதே தற்போது ஹாட் டாபிக்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் கூட்டணி கட்சிகளுக்கு 100 தொகுதிகளை அதிமுக ஒதுக்க நேரிடும். அப்படிபார்த்தால் அதிமுக 134 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் சூழல் ஏற்படலாம்.
கூட்டணிக் கட்சிகளுக்கான உத்தேசப் பட்டியல் இதோ:

தவெக-விற்கு 50 முதல் 70 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி,... ?

 Vasu Sumathi  :   டெல்லியில் நேற்று சுமார் 7 மணி நேரம் சிபிஐ-யுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்த விஜய், 
இன்று அதிகாலை 12.30 AM அளவில் சென்னை வந்தடைந்தார். 
​தவெக - NDA இடையிலான இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில், 
தவெக-விற்கு 50 முதல் 70 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் எத்தனை இடங்கள், ஆட்சியில் பங்கு வேண்டாம் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் தேர்தலுக்கு முன் 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீஸ் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாம்.
​எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் விஜய்க்கும், விஜய்யை கூட்டணியில் சேர்க்க எடப்பாடிக்கும் இருக்கும் தயக்கங்களே அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதமாவதற்குக் காரணமாம். இதில் ஆகச்சிறந்த காமெடி என்னவென்றால் - டெல்லியில் இவ்வளவு நடப்பது இங்குள்ள தமிழ்நாடு பாஜகவினருக்கு ஒரு 'மானாவும்' தெரியாதாம்!