![]() |
குமரிக் கிழவனார் : காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் வரலாற்று பிழையை விளவங்கோட்டில் நிகழ்த்தியிருக்கிறது.......
வயனாட்டு மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் இஸ்லாமிய மதமேற்றவர்களுக்கும் சொந்தமான தொகுதியில் ராகுலை கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாமியர்களுக்கும் பூர்வகுடிகளுக்குமான பிரிதிநித்துவத்தை புடுங்கி பின்னர் அதில் பிரியங்காவை நிறுத்தி தொடர்ந்த இஸ்லாமியர் நீக்க அரசியலை செய்து கொண்டிருப்பது போல் இதோ தமிழ்நாட்டில் தமிழர் நீக்க அரசியலை செய்து கொண்டிருக்கிறது........
விளவங்கோட்டில் கை சின்னம் தொடர்ந்து வெற்றி பெற காரணம் தமிழர் மலையாள மொழி ஆதிக்கத்திர்க்கும் மலையாளிகளின் நில அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்து எழுந்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராட்ட களத்தை கண்டு அதை வென்றெடுத்ததுதான். குமரி தமிழர்கள் அன்று போராடியது திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் திருகொச்சி மாநில ஆரசுக்கு எதிராக என்றாலும் அன்று அவர்கள் களத்திவ் நேரடியாத எதிர்த்தது சம்ஸ்த்தான காங்கிரஸைதான்.


