புதன், 1 ஏப்ரல், 2026

காங். தேர்தல் குழு பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

 தினமலர் : புதுடில்லி: காங்கிரசின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்த உடனடியாக பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.
காங். வேட்பாளர் பட்டியல் எப்போது; ராகுல் வரணும் என்கிறார் செல்வப்பெருந்தகை

திமுக, அதிமுக, தவெக – லோக்பால் அமைப்பின் கருத்து கணிப்பு

  minnambalam.com  -Pandeeswari Gurusamy : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என லோக்பால் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

திருமாவின் ஜாதிப்பாசம் - பொற்கொடிக்கு ஆதரவு


 மதுரம் சந்திரசேகர்
; பொற்கொடிக்கு பிரதிநிதித்துவம் அளித்த அதிமுக அளித்துள்ளதால் அண்ணன் திருமாவளவன் அவருக்கு ஆதரவா இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்பார் போல..
ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு பேசிவிட்டார் என்கிறீர்கள்..
பூவை மூர்த்தி பாஜகவுடன் கூட்டு.ரஞ்சித் சங்கிகளுடன் கைகோர்த்திருக்கிறார்.. 
இவர்களெல்லாம் அவர்களது சாதியவர்கள் பிரதிநிதித்துவம் பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர் சித்தாந்தாந்தத்தை ஆதரிக்கின்றனர். 
இவர்களுக்கு எதிராக அண்ணன் சனாதன எதிர்ப்புக்குரல் எழுப்புவதில்லை.
அதிமுக இவருக்கு எதிர் கூட்டணி..

திங்கள், 30 மார்ச், 2026

நடிகர் கருணாஸ் சிவகங்கை அதிருப்தியாளர்களை சமரசப்படுத்த முயற்சி!

 hindutamil.in  :  சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் நடிகர் கருணாஸ் ஈடுபட்டுள்ளார்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை இந்த முறை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களது தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
திமுகவில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உள்ளிட்டோரும், காங்கிரஸில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோரும் சீட் பெற முயற்சித்தனர்.

திருமாவளவன் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்; சீமான் கேள்வி

 தினமலர் : காரைக்குடி: காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள திருமாவளவன் அதில் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
சிதம்பரம் எம்பியாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் சட்டசபை வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறார்? அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. ஒருவர் இரு தொகுதிகளில் போட்டி போடுவதை நான் எதிர்த்தேன். வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த போது, கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்றார்.

திருமாவளவன் அமைச்சர் பதவிக்காக சட்டமன்ற தேர்தலில் போட்டி! பேராசை பெரும் வினையாகும்

 மின்னம்பலம் -Mathi : அமைச்சர் பதவிக்காகவா சட்டசபை தேர்தலில் போட்டி? திருமா சொன்ன பதில் என்ன? முழுமையாக!
தமிழக சட்டசபை தேர்தலில், மக்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் தாம் போட்டியிடுவது அமைச்சர் பதவிக்காக அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று மார்ச் 30-ந் தேதி மாலை நடைபெற்றது.

ஞாயிறு, 29 மார்ச், 2026

மத்திய கிழக்கு போர் - 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் சம்பவங்களும்

 hirunews.lk : 1. ஹவுதிகளின் தொடர் தாக்குதல்
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது இரண்டாவது முறையாக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை நிறுத்தும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2. ஈரான் மீதான தாக்குதல்களும் பதிலடி எச்சரிக்கையும்
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. புஷெர் (Bushehr) மாகாணத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டதுடன், குசிஸ்தான் (Khuzestan) மாகாணத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளது.

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் Vs சுந்தர் சி - நட்சத்திர தகுதி பெற்ற மதுரை மத்தி

 hindutamil.in - ஒய்.ஆண்டனி செல்வராஜ் : மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அதிமுக போட்டி யிடவில்லை என்று வருத்தத்தில் இருந்த அக்கட்சியினருக்கு சுந்தர் சிபோட்டியிடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் 2016. 2021 தேர்தல்களில் போட்டியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பேராசிரியர் ஜெயபாலிடம் வெறும் 5,762 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு அதிமுக போட்டியிடாமல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், பழனிவேல் தியாகராஜன் எளிதாக வெற்றி பெற்றார்.

ஒரு கட்சி ஆட்சியும் பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையும்

 Santhirapalan Saminathar  : ஜனநாயக நாடுகளில்  பலர் குறிப்பிடும் குறைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.  ஜனநாயகம் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதை . 
இதை வளர்த்து எடுப்பது மக்கள் தான். 
நவீன உற்பத்தி முறை வளர்ச்சி,  மக்களை சிந்தனையிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
இலங்கை இந்தியாவில் இருக்கும் ஜனநாயக அரசுகளுக்கும் நோர்வே, சுவீடன், சுவிஸ் அரசுகளுக்கும் இடையே ஜனநாயக வளர்ச்சி பாரிய அளவு வித்தியாசம் ஆகும் 
நோர்வே,டேன்மார்க், சுவீடன், நியூசிலாந்து, ஜஸ்லாந்து அரசுகளின் ஜனநாயகம் நல்ல வளர்ச்சி அடைந்தவை. ஜனநாயகத்தில் குறைகள் இருக்கு என்பதற்காக மன்னர் ஆட்சிக்கு சென்று விட முடியாது. 
அல்லது அதன் சாயலான  ரஸ்சியா, சீனா, வடகொரியா, ஈரான் சர்வாதிகார ஆட்சிக்கு சென்றுவிட முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படை பல கருத்துக்களும் மோதி மக்கள் தெளிவடைவதற்கான களமாக இருப்பதுதான். பல கட்சிகளின் தேர்தலில் மக்கள் தமது ஆட்சியாளரை  தெரிவு செய்யும் முறையாகும்.  

அரசியலில் நடிகர்கள் - இடஒதுக்கீடு -இலவசங்கள் - மகளிர் மேம்பாடு! தஞ்சை மாணவர்களின் காரசாரமான கருத்துக்கள்

 

அண்ணா அறிவாலயத்தில் நின்று வீரலட்சுமி

‘தனி ஆவர்த்தனம்’ செய்யும் செல்வப்பெருந்தகை: கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திப்பிரிவு

 hindutamil.in  : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்" என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடக்கம் முதலே முரண்பாடுகள் தலைதூக்கின. 
இறுதிக் கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 35 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்பதில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால், அதற்கு ஸ்டாலின் உடன்படவில்லை. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் உதவியுடன் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒத்துக்கொண்டு காங்கிரஸை கையெழுத்திட வைத்தார் செல்வப்பெருந்தகை. அவரது இந்த தடாலடி முடிவு, ஒட்டுமொத்த காங்கிரஸ் சீனியர்களையும் அதிரவைத்தது.

திமுக வேட்பாளர்கள்: 4 முஸ்லிம்கள், 18 பெண்களுக்கு வாய்ப்பு!

 minnambalam.com  - Mathi  : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 5 பேர் முஸ்லிம்கள்.
1) ஆவடி- சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
3) ராமநாதபுரம்- காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
4) செஞ்சி- கே.எஸ். மஸ்தான்.
5) டாக்டர் சுபேர் கான்- ராயபுரம்
ஆனால் அதிமுக அறிவித்த 150 வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில்
முஸ்லிம் லீக்- 2

சனி, 28 மார்ச், 2026

மத்திய கிழக்கை சீரழிக்க ஈரான் இஸ்லாமிய கடும்போக்கு அரசு முயல்கிறது.

 ராதா மனோகர் : உலகம் முழுவதும் இஸ்ரேலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் 
இதை விட முக்கியமான லெபனானை பற்றி பேசுவதிலை 
லெபனானுக்குள் ஊடுருவி இருக்கும் ஹிஸ்புல்லா என்பது வெறும்  ஒரு  பயங்கரவாத இயக்கம் அல்ல 
அது ஈரானின் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அரங்கேற்ற ஈரானால் பணமும் ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து லெபனானுக்குள் ஊடுருவிய அமைப்பாகும் 
இந்த ஹிஸ்புல்லா அமைப்பானது ஈரானிய இஸ்லாமிய தீவிரவாத அரசை லெபனானுக்குள் அமைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது 
லெபனானுக்குள் மட்டுமல்லாமல் முழு மத்திய கிழக்கையும் ஈரான் போன்று ஒரு அடிப்படை வாத மதவெறி ஆட்சியை அமைப்பதற்காக ஈரான் ஆட்சியாளர்களால் ஹிஸ்புல்லா ஹமா ஐ எஸ் ஐ எஸ் ஹுத்தி போன்ற இயக்கங்கள் வழி நடத்த படுகின்றன 
இன்று லெபனானில் என்ன நடக்கிறது?

திமுக வேட்பாளர்கள் பட்டியல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

 தினமலர் : சென்னை: 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அமைச்சராக இருந்த காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது .கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சி சின்னங்களிலும் போட்டியிடுகிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட பட்டியலில் வாய்ப்பு கிடைத்தவர்கள் விவரம்
1. கன்னியாகுமரி - மகேஷ்
2. நாகர்கோயில் - ஆஸ்டின்
3. ராதாபுரம்- அப்பாவு

யாழ்மாவட்டம் திருட்டு மணல் உழவு இயந்திரம் மோதி போலீஸ் உயிரிழப்பு!

hirunews : சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோதியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன். மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து கொடிகாமம் காவல்துறையினர் இருவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்..வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணங்கள்

 tamil.oneindia.com-  Mani Singh S  :  சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர் லிஸ்ட் நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதம் ஆகியுள்ளது. 
எப்போதும் ரேசில் முந்தும் திமுக இந்த முறை வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு கூட்டணி கட்சிகள் வைக்கும் நெருக்கடியே காரணம் என்று சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ்-28, தேமுதிக -10, விடுதலைச் சிறுத்தைகள்-8, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு-5, இந்திய கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் கட்சி-2 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

புதுசேரியிலும் முதுகில் குத்திய காங்கிரஸ் - ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்!

 tamil.oneindia.com -  Shyamsundar : அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்?
சென்னை: திமுக கூட்டணியில் 28 இடங்களை காங்கிரஸ் தட்டித் தூக்கிய போதே, உடன்பிறப்புகள் மத்தியில் ஒருவித சலசலப்பு இருந்தது. இப்போது அது எரிமலையாய் வெடித்திருக்கிறது. காரணம், காங்கிரஸ் கேட்டிருக்கும் தொகுதிகள் அனைத்தும் திமுகவின் 'கோட்டை' என்று சொல்லப்படும் வலுவான இடங்கள்.
"ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை எங்களிடம் தள்ளிவிட்டு, நாங்கள் ரத்தம் சிந்தி வளர்த்த தொகுதிகளை அவர்கள் கேட்பதா?" என மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
புதுச்சேரி 'நட்பு ரீதியான' மோதல்? ஸ்டாலின் செம அப்செட்!
தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் நிலைமை படுமோசம். அங்கே காங்கிரஸ் - திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீடு இழுபறியாக இருந்த நிலையில், பல தொகுதிகளில் திமுக மற்றும் விசிக வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. "இதைவிட ஒரு மோசமான 'நட்பு ரீதியான' போட்டியை பார்க்க முடியாது" என புதுவை திமுகவினர் கொந்தளிக்கின்றனர்.
ராகுல் காந்தி மீது பாயும் கோபம்!

வெள்ளி, 27 மார்ச், 2026

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் லிஸ்ட்!

minnambalm :மின்னம்பலம் Mathi :  திமுக (DMK) கூட்டணியில் காங்கிரஸ் (Congress) கட்சி மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளன. 5 தொகுதிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள்
1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு

காங். தொகுதிகள் தேர்வு ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத் தன்மை இல்லை; ஜோதிமணி புகார்

  தினமலர் : சென்னை;காங்கிரஸ் தொகுதிகள் தேர்வு அனைத்தும் ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத்தன்மை இல்லை என்று அக்கட்சியின் எம்பி ஜோதிமணி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
காங்கிரஸ் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.

மோடியோடு படுத்து பதவி வாங்கிய பெண்கள்?

May be an image of one or more people Ethiraj Madhavan Madhavan  ;  இந்திய அரசியலில் மாபெரும் வெடிப்பு......
இந்தப் பெண் மது கிஷ்வர், இவர் இந்துத்துவா சித்தாந்தத்தின் ஆதரவாளர், 
இவர் 2013-2014 இல் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரானார். 
மோடியை பற்றி ("Modi, Muslims and Media") புத்தகம் எழுதி, ஊடகங்களை விமர்சித்து, மோடியை டெவலப்மெண்ட் மேன் என்று அழைத்தார்.
இந்திய அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக நேற்று இரவு ட்வீட், பிரதமர் மோடி மீது தீவிர குற்றச்சாட்டு... இதுதான் முழு ட்வீட் 👇
"2014 மே மாதம் மோடி ஆட்சியை கைப்பற்றிய போது அவரிடம் இருந்து நான் என் பாதுகாப்பான தூரத்தை கடைபிடித்தேன். என் புத்தகத்தின் நகலை நானே அவர்களுக்குக் கொடுக்கவில்லை. 
இப்போதுதான் கையொப்பமிடாத பிரதியை அவருக்கு பிடித்த பீரோ பாரத் லால் வழியாக அனுப்பி வைத்தேன்!

வியாழன், 26 மார்ச், 2026

இத்தாலி பொலிஸில் பணியாற்றிய இலங்கையர் பலி

 வீரகேசரி : இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மிலானோ நகரில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து பரிசீலிக்கிறது- ஈரானிய வெளிவிவகார அமைச்சர்!

  hirunews.lk  : மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படும் '15 அம்ச சமாதானத் திட்டத்தை' ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி உடனடியாக நிராகரிக்கவில்லை.
எனினும், அந்தத் திட்டம் குறித்த ஈரானின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டதுடன், அவை ஒருசில இடங்களில் '15 அம்சத் திட்டம்' என அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

புதன், 25 மார்ச், 2026

ஒற்றை வதந்தி.. 10 தொகுதிகளை அள்ளி தந்த திமுக.. தேமுதிகவுக்கு ‘ஜாக்பாட்’ அடித்தது எப்படி

 minnambalam.com - Mathi  :   “அவனுக்கு என்ன தூங்கிவிட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா..”என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இந்த நேரத்துல தத்துவ பாடல்?
தத்துவம் காலத்துக்கும் பொருந்துமே.. அந்த டிபேட் இப்ப எதுக்குய்யா? நாம ஏற்கனவே சொன்ன மாதிரி தேமுதிக 10 சீட்டை வாங்கி கையெழுத்து போட்டிருச்சே..
தேமுதிகவுக்கு இந்த 10 சீட்டை திமுக கொடுத்ததுக்கு பின்னாடி ‘நிறைய’ சம்பவங்கள் இருக்குய்யா.. வரிசையா சொல்றேன்..
தேமுதிகவை அதிமுக கூட்டணியில இருந்து திமுக கூட்டணிக்கு கொண்டு வரனும்னு 2 மாசத்துக்கு மேல தொடர்ந்து பிரேமலதாகிட்ட பேசிகிட்டு இருந்தவர் எ.வ.வேலு..

கமல் முடிவுக்கு காரணம் என்ன? தியாகமா; தந்திரமா?

https://images.dinamalar.com/data/large_2025/Tamil_News_lrg_4182037.jpg

தினமலர் : கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா ‛சீட்' கொடுத்து அமுக்கியது போதும் என திமுக நினைத்துவிட்டது போலும். அதனாலேயே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக அழுத்தம் கொடுத்தது. 
அந்த அழுத்தத்தின் வெப்பத்தை உணர்ந்து கொண்ட கமல், தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் வகையில், 'தேர்தலிலேயே போட்டியிடவில்லை' என்று ஜகா வாங்கி விட்டார்.
இந்த ‛‛டுவிஸ்ட்' யாரும் எதிர்பாராதது. இது, கமலின் தந்திரமான, புத்திசாலித்தனமான முடிவு, என்று சிலரும், தேர்தலில் போட்டியிடாத கட்சி, களத்தில் இருந்து காணாமல் போகும் என்று சிலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.