புதன், 3 ஜூன், 2026

கர்நாடகா புதிய அமைச்சரவையில் சித்தராமையா கை ஓங்கியது - மகன் உட்பட பல சித்தராமையா ஆதரவாளர்கள்

tamil.oneindia.com  - Nantha Kumar R : பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் மொத்தம் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வராகவும், மற்ற 12 பேர் அமைச்சர்களாகவும் செயல்பட உள்ளனர். இதில் சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்களாக பதவியேற்ற எம்எல்ஏக்களின் ஜாதி விவரங்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மல்லை சத்யா : “தவெக பக்கம் செல்ல பெட்டி படுக்கையுடன் தயாராகிவிட்டார் வைகோ!

hindutamil.in -  வெற்றி மயிலோன் : சென்னை: “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது” என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி படுக்கையெல்லாம் கட்டி வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. முதல்வர் விஜய்யை அண்ணாவுடன் வைகோ ஒப்பிட்டு பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் மூத்த தேரர் கைது - அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்

 ilakkiyainfo.com  : 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக  துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம  பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன்போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில்  3 இளம் பிக்குகள் அண்மையில்  தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கலைஞர் புதிய தமிழகத்தின் நிர்மாண சிற்பி Kalaignar is an Architect of Modern Thamizhnaadu.

Kandasamy Mariyappan : கலைஞரின் ஒவ்வொரு பிறந்தநாளிலும், இந்த பதிவை எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர்..... 
நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். 
மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால்.....
ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். 
காற்று, 
தண்ணீர், 

முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!

May be an image of text that says "திராவிடம் என்னும் போதினிலே" I и 屋 கலைஞர் எங்கள் கட்டுமரம் தான் சிறகு விரிகிறது னாகர் தோள்களிலே imgflip.com com imgflip"

 ராதா மனோகர் : தமிழ்நாட்டின் அச்சாணி திராவிட முன்னேற்ற கழகம்தான்! ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி திராவிட முன்னேற்ற கழகம்தான் 
இந்த பாரம்பரியம் இன்று நேற்று வந்ததல்ல.
அந்நியராலும் மதவாதிகளாலும்  ஜாதிவாதிகளாலும் வீழ்த்தப்பட்டு தரையோடு தரையாக கிடந்த திராவிட மக்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி திருப்பள்ளி எழுச்சி பாடிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.
இந்த சுயமரியாதை இயக்கத்தின் அடுத்தடுத்த படைகளாக  திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்ற கழகமும்  வரிசை கட்டி வந்தன.
திராவிடப்படை கட்டி வந்த ஒப்பற்ற தளகர்த்தர்களின் வரிசையில் பேரறிஞர் அண்ணாவின் தம்பி என வந்த முத்துவேலர் மகன் கலைஞருக்கு இன்று (ஜூன் 3)பிறந்த நாள் 103 ஆவது பிறந்த நாள்!
கலைஞர் நடந்து வந்த பாதையில் அவரின் கால்களில் குத்திய முட்கள் ஏராளம்.

கடல் நீர் குடிநீரானது - அதிகமாக பேசப்படாத கலைஞரின் அரிய சாதனைகளில் ஒன்று.

May be an image of text that says "பல்வேறு துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன். முத்தமிழறிஞர் கலைஞர் செயல்படுத்த த்திய திட்டங்கள், உருவாக்கிய கட்டமைப்புகள் கட்ட குறித்து இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் குடிநீரான கடல்! ல்! குடிநீரான கடல்! தாகம் தணித்த தெற்காசியாவின் முன்னோடித் திட்டம்!"

 Muralidharan Pb  :  கலைஞர்  பக்கம் பதிவு 13 கடல் நீர் குடிநீரானது
கலைஞரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்டால்?
நிலைமை இதுதான் இதற்கு மேல் நம்மிடம் சாத்தியங்கள் இல்லை,வசதிகள் இருக்காது. இதிலிருந்து எப்படி நமக்கு என்ன தேவையோ எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? என்று வினவினால்
நமக்குத் தேவையானதை நாம் எடுத்துக் கொண்டு அதனை வைத்து எவ்வாறு பயன் பெறுகிறோம் என்று சிந்திப்பதே அவருடைய பேராற்றல். 
ஆற்றல் மிக்க பகுத்தறிவுவாதிகளுக்கு Optimistic Rationlist மட்டுமே இப்படித் தோன்றும். அதனால் தான் அதை பலமுறை low resources இருந்தும் அதைவைத்து maximum output சாத்தியம் என அதை பல்வேறு முறை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர். 

தமிழ் மொழி விதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிங்கள இடதுசாரிகளின் கறைபடிந்த வரலாறு


No photo description available.

ராதா மனோகர் : இலங்கையில் எப்போதும் இடது சாரிகள் எனப்படுவோர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடுமையான சிங்கள இனவாதிகளாகவே செயல்பட்டுள்ளனர் 
இவர்களுக்கு அவ்வப்போது முட்டு கொடுக்கும் வேலையை தமிழ் இடது சாரிகளும் செய்துள்ளனர் 
இவர்கள் என்னதான் குத்தி முறித்து திரிபு வாதங்களில் ஈடுபட்டாலும் வரலாறு இவர்களை அம்பலமாகி கொண்டே வருகிறது 
பச்சை இனவாதிகளான  பண்டராநாயகக்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அவர்களோடு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கும் எதிராக விஷம் கக்கியதுதான் இலங்கை இடதுசாரிகளின் வரலாறு 
அதிலும் இவர்களில் பலர் லண்டனில் படித்த அசல் மேட்டுக்குடி கனவான்கள் 
இலங்கையின் முதல் இடதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனரான டாக்டர் என் எம் பெரேராவின் தமிழ் இன வெறுப்பு அரசியல் வரலாறு பற்றிய பதிவு இது 

செவ்வாய், 2 ஜூன், 2026

குமரி முத்து பற்றி நடிகை ஊர்வசி உருக்கம் - திமுக பேச்சாளர் நடிகர்

 tamil.oneindia.com - V Vasanthi : சென்னை: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகைகளில் முக்கியமானவர் ஊர்வசி. ஹீரோயினாக அறிமுகமாகி, இன்று குணச்சித்திர நடிகையாகவும் தேசிய விருது வென்ற கலைஞராகவும் திகழும் அவர், சமீபத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள 'பரிமளா & கோ' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி, மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து குறித்து பகிர்ந்த நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதிமுக தொண்டரின் விபரீத முடிவு… கண்ணீர் மல்க குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஈபிஎஸ்

 மின்னம்பலம் - Kavi  :  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறி  உயிரை மாய்த்துக்கொண்ட தொண்டரின் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நேரில் அஞ்சலி செலுத்தினார். 
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுகவில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவரது மனைவி முனீஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

ஆதவ் அர்ஜுனா + மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்) நடத்தும் 59 நிறுவனங்கள்!

May be an image of one or more people and people smiling

 Anbalagan Manivannan :  ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டினின் மகள்)தற்போது நடத்தும் நிறுவனங்கள் மொத்தம் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38.  (ஒரே நாளில் 20 நிறுவனங்கள் ஆரம்பித்து வேறொரு  நாளில் 10 நிறுவனங்களை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுங்க. அனைத்தும் Shell companies.  அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனால் நடப்பது போல காட்டி கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
20க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம் 
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை.  ஏறக்குறைய அனைத்துமே மார்டின் கும்பல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா.. 
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED...  இதுவும் மார்டினின் கறுப்புபப் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP

ஒன்றரை வயது குழந்தையை தெருவில் அடித்து கொலை செய்த காதலன் - உத்தர பிரதேச கொடுமை

toddlerஒன்றரை வயது குழந்தையை தெருவில் அடித்து கொலை செய்த கொடியவன் 
அந்த குழந்தையின் தாயை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினான் அவள் அதற்கு மறுத்தாள் 
அந்த கோபத்தில்தான் இந்த கொடுமையை செய்தான் என்று தெரிகிறது 
இப்போது போலீஸ் இவனை கைது செய்துள்ளது 
இவனை உடனே கொல்லவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது  UP man kills toddler after mother rejects marriage proposal
Brutal killing: Police allege Jitendra Pathak killed a toddler by slamming him to the ground after the child’s mother rejected his marriage proposal.
CCTV evidence: Disturbing footage shows the accused carrying the child before attacking him, sparking outrage and shock in the community.
Gunfight arrest: Pathak was caught after opening fire on police, sustaining leg injuries before being taken into custody.

திங்கள், 1 ஜூன், 2026

முதல்வரான பிறகு முதல் கூட்டத்தில் விஜய் பேசிய 7 விஷயங்கள் என்ன?

 BBC News தமிழ் :  திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தான் கோட் சூட் போடுவது, தவெகவுக்கு யாருக்கு போட்டி, தவெக தொண்டர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், திமுக மீது விமர்சனம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசினார்.

ஸ்டாலின் ஒன்றிய அரசியலுக்கு செல்கிறார்! மம்தாவை பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தும் ஸ்டாலின்? மத்திய அமைச்சர் ஆவாரா?

 tamilminutes.com  : மம்தாபானர்ஜியுடன் இணைந்து காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணி? மம்தாவை பிரதமர் வேட்பாளராக பிரகடனப்படுத்தும் ஸ்டாலின்? ஜெயித்தால் மத்திய அமைச்சர் ஆவாரா?
 தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத அதிரடி திருப்பங்களுக்கும் வியூகங்களுக்கும் பெயர் போனதாகும்.அந்த வகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப் பரவி, மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதன் பின்னணியில், மிக ஆழமான ஒரு நீண்ட கால அரசியல் கணக்கு இருப்பதாக அறிவாலய முக்கியப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர். ஒரு மாநில இடைத்தேர்தல் வெற்றியை விட, இந்திய அளவில் தற்பொழுது எழுந்துள்ள அரசியல் மாற்றங்களை எதிர்கொள்வதே கட்சியின் எதிர்காலத்திற்கு முக்கியம் என தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.

திமுகவை கைப்பற்ற புலிகளும் வைகோவும் தீட்டிய திட்டங்களும் கனவாய் போன கதையும்

ராதா மனோகர்  வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை 
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை 
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர் 
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி 
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினர் 
அது ஓரளவு பயனளித்தது   ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை 
அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு ..பாவம் 
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும் 
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன் 
புலிகள் இவரின் திறமையை இவரின் செல்வாக்கை இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள் 
உலகில் எவருக்குமே உண்மையாகவோ விசுவாசமாகவோ இருந்தே பழக்கப்படாத புலிகள் இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள் 
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும்  தாராளமாக வழங்கினார்கள் 

ஞாயிறு, 31 மே, 2026

யாழ்ப்பாண பணிக்கர்களும் கேரள பணிக்கர்களும்

 ஒரு விளம்பரத்தில் யாழ்.திருநெல்வேலி பகுதியில் "பணிக்கர் வீதி"என்று உள்ளது ...இந்த "பணிக்கர்" பெயர் எங்கிருந்து வந்தது?..
Aiyoob Azmin
பணிக்கர், சோனகந்தோப்பு, காக்காக்கடை, அவுலியா வீதி
Maha Laxmi
பார்பனர்ல பணிக்கர் எனும் பிரிவு உள்ளது
Maha Laxmi
கேரளாவில் தான் பணிக்கர் பிரிவு பிரபலம்
 Annesley Ratnasingham
Maha Laxmi ...அதுதான் உண்மை - அதை தான் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறேன் ...."பணிக்கர்" என்பது கேரளாவில் உள்ள ஒரு சாதீய பிரிவு ..
Krishna Kannan
Annesley Ratnasingham யானை பராமரிக்கும் கேரளர்கள்
புகச்சோவ் புகச்சோவ்
பணிக்காரர். வேலைக்காரர்.

பரந்தூர் Airport நிறுத்தம் . சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!

  tamil.oneindia.com - Prasanna Venkatesh·:  பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் DMK GENZ MEET UP திமுக ஆலோசனைக் கூட்டம்

 Khaleel Syed:   என்னவோ புள்ளைங்க, நன்றி அறிவிப்பு  கூட்டம் நடத்துறாங்க போல,  னு ஒரு யோசனையுடன் தான் கிளம்பினேன். 
கலைஞர் அரங்கத்தை அடையும் போதே உள்ளிருந்து பறந்த கைதட்டல்களும் ஆராவாரமும் நடையை வேகமாக்கியது.
போன பிறகு தான் இது வழக்கமான “தீர்மானம் வாசிப்பு கூட்டம் இல்ல,  Political Reboot Event மாதிரியான சந்திப்பு என்பது புரிந்தது. 
நாங்க தான்டா இன்னும் இப்பவும் கேம்ல இருக்கோம் என்று உறுதியோட இருந்தது அத்தனை பேருடைய கண்களும்.
இளைஞர்களிடம் நம் கருத்துக்களை டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் அத்தனை பேச்சிலும் வெளிப்பட்டது.

சனி, 30 மே, 2026

தமிழ்நாட்டில் சமத்துவபுரங்கள் 145 - ஜாதிக்கொரு ஊரும் வீதியும் இருந்த நாட்டில் எல்லா ஜாதிக்கும் ஒரே ஊர் அதுதான் சமத்துவபுரம்

May be an image of ‎text that says "‎itw. Arivagam எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கிற கொள்கையை நிலைநாட்ட, எல்லோரும் சமத்துவமாய் வாழும் வண்ணம் தமிழ்நாட்டின் முதல் சமத்துவபுரம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையில் ARA தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்த நாளின்று (17.08.1998) ஐடி விங் சனமில் ីនពារណាត и ص ஸ்சதேன் 回 பொரியார் நினைவுசமத்துவபுரம் Onde 佛 瀬‎"‎

 Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 9 - சமூக நீதி என்பது யாது?
தலைலர் கலைஞர் எப்படி ஒரு திட்டத்தை வடிவமைத்தார்?
சமூக நீதியை அவர் எங்கிருந்து எடுக்கிறார்?
 வள்ளுவரின் குறளின் வாயிலாக.
சங்கீத வித்வான்கள் சிலர் பாடுவதை காது கொடுத்து கேட்கவே முடியாது, சிலருடைய பாடல்கள் கேட்கவே அமிர்தமாக இருக்கும். தொழிலில் இருவருமே ஒரே வகை. ஆனால் தொழிலுக்குள்ளே இருக்கிற சிறப்பால் அவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.
அதைத்தான் திருவள்ளுவர்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
இக்குறளின் படி, யார் ஒருவர் தான் மேற்கொண்ட தொழிலில் சிறந்தவராக உள்ளாரோ அவரே உயர்ந்தவர். அப்படி தனது தொழிலை சிறப்படைய செய்யாமல் இருப்பவர் தாழ்ந்தவர்  என்கிறார். அதுதான்  கலைஞர் குறிப்பிட்ட உதாரணம்.

வெள்ளி, 29 மே, 2026

குழந்தைகளைத் தூண்டுதல்: தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  hindutamil.in   -ஆர்.பாலசரவணக்குமார் :  சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கும்படி பெற்றோரை நிர்பந்திக்க வேண்டும் என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தது, பணப் பட்டுவாடா நடந்துள்ளது ஆகியவை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தவெக, திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக திமுக, அதிமுக-வுக்கு எதிராகவும், பெற்றோரை தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களிடம் செல்வாக்கை செலுத்தியதாக தவெக கட்சியினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார்.

பௌத்த பிக்குகளை குற்றங்களில் இருந்து பாதுகாக்க புதிய தர்ம நீதிமன்றம் அமைக்கப்படும்?இலங்கை

 ilakkiyainfo.com : “தர்ம நீதிமன்றம்” மற்றும் சட்டத்தின் சமத்துவம்
ஜனாதிபதி அரசாங்கத்தின் புதிய கொள்கை முயற்சி சமூகத்தில் எழுப்பும் கேள்விகள்
-சட்டத்தின் முன் அனைவரும் சமமா?
“ஒரே சட்டம், ஒரே நாடு என்றால், ஏன் ஒரு மதத்திற்காக தனி நீதிமன்றம்?”
-அரசியல் அழுத்தமா? மத அழுத்தமா?
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தி, பௌத்த தேரர்களின் ஒழுக்காற்று பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட “தர்ம நீதிமன்றம்” ஒன்றை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்திருப்பது, நாட்டின் அரசியல், சட்ட மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

நடிகர் சத்தியேந்திரன் காலமானார் தேசிய விருது பெற்றவர்

sathiyenraa

விஜய் கூட டெல்லி போன ஆந்திரா முதலாளிகள் - அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம்

 tamil.oneindia.com :  விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன்
 விஜய் கூட டெல்லிக்கு போனது யார், அவர்களுக்கும் தமிழக அரசியலுக்கு என்ன சம்பந்தம் உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. ஏன் அமைச்சர்களை அவர் அழைத்துச் செல்லவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் என்பது அதிகாரத்திற்கான யுத்தம்; இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற யதார்த்தமான உண்மையுடன் உரையாடலைத் தொடங்குகிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!

May be an image of smiling and coffee cup
May be an image of one or more people and spring greens

 Esther L Shanmugham :சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருக்கும் (தென்னிலங்கை) மலையக மக்களின் நிலைமை!  எஸ்தர் - கவிஞர் /எழுத்தாளர்  மலையகம்  இலங்கை
மலையக தோட்டங்களில் நடப்பது என்ன? சர்வதேச அமைப்பு அதிர்ச்சி குற்றச்சாட்டு!
தற்போது ஊடகங்களில் பேசப்படும் முக்கியமான விடயமாக, மலையக மக்கள் தென்னிலங்கை தனியார் தோட்டங்களில் எதிர்கொள்ளும் சுரண்டல், அடாவடித்தனம் மற்றும் குறைந்த கூலி தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
 குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலன்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் மனிதர்களாகவும் மனிதாபிமானம் அற்றவர்களாகவே தனியார் தோட்டகம்பனிகள் மக்க ளை நடத்துகிறார்கள்
ஆனால் இது இன்றோ நேற்றோ உருவான பிரச்சினையல்ல; காலம் காலமாக மலையகப் பகுதிகளில் இடம்பெற்று வரும் பெரும் மனித வதை

வியாழன், 28 மே, 2026

திமுக அதிமுக இணைப்பு சாத்தியமா

 ராதா மனோகர் : கலைஞர் எம்ஜியார் என்ற இரு தலைவர்களுக்கு இடையேயான பிரச்சனைதான் அதிமுக திமுக பிரச்சனை!
இவர்களின் பிரச்னை கொள்கை சார்ந்தது அல்ல.
விரும்பத்தகாத பல விடயங்கள் நடந்து முடிந்து போய்விட்டன.
இப்போது இருவரும் உயிரோடு இல்லை 
ஆனால் இருவரின் கட்சிகளுக்கும் இருவரின் திரைப்படங்களும் இன்றும் உயிர்துடிப்போடு உள்ளன 
எனவே இருவரும் தமிழக வாழ்வியலில் தொடர்ந்து இருப்பார்கள் 
சுமார் 40 வருடங்கள் ஒன்றாக ஒரே கொள்கையில் பயணித்த இரு தலைவர்களின் இயக்கங்கள்,
இன்று வடவர் பேராபத்தை எதிர்கொண்டு நிற்கிறது 
முன்னெப்போதையும் விட இப்போது வரலாற்று பகைவர்கள் பெரும் பலத்தோடு உள்ளார்கள் .
வாசல் படி வரை வந்துவிட்டார்கள் 

“காவலர் மீது தவெக குண்டர்கள் தாக்குதல்... ” - அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம்

 hindutamil.in -  வெற்றி மயிலோன்  : சென்னை: “கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. 
காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெகவில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.