![]() |
ராதா மனோகர் : திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்
அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை எல்லாம் கொன்றொழிப்பதில் குறியாக இருந்தார்கள்
அதில் ஒப்பமிட்ட ராஜீவ் காந்தியையே கொன்றார்கள்
அந்த ஒப்பந்தத்தில் மக்களுக்கு எதிரான ஏதாவது ஒரு ஒற்றை விடயமாவது இருக்கிறதா?
இல்லையே!
அந்த ஒப்பந்தம் சாதாரண மக்களுக்கு ஒரு ஜனநாயக வெளியை பெற்று தந்தது
இதுதான் புலிகளை அச்சுறுத்திய விடயம்
சாதாரண மக்கள் மகிழும்போதெல்லாம் பயந்து நடுங்குவார்கள் புலிகள்
அந்த பயத்தின் காரணமாக அந்த சாதாரண மனிதர்களை கொல்வார்கள்
சாதாரண மனிதர்களின் சுயசிந்தனை சுயமரியாதை எல்லாம் புலிகளுக்கு பெரும் பயத்தை கொடுத்தது





