நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
செவ்வாய், 3 மார்ச், 2026
சங்கீதாவுக்கு எதிராக ஆபாச விமர்சனங்கள்.. விஜய் மவுனம்..ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்
மின்னம்பலம் - Mathi : விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள சங்கீதாவை தவெக தொண்டர்கள் ஆபாசமாக இழிவுபடுத்தி வருவதை அவரது கணவரும் தவெக தலைவருமான விஜய் கண்டிக்காமல் மவுனமாக இருப்பதற்கு ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ஜி.பிரமிளா, பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் இணையர் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.
திமுகவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இணைப்பு விழா: மதுரை அருகே மார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு
hindutamil.in - ஒய்.ஆண்டனி செல்வராஜ் : மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே வரும் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, எக்காரணம் கொண்டும் அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு
hindutamil.in - கி.மகாராஜன் : மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், மார்ச் 23-ல் தீர்ப்பளிக்கப்படும் என விசாரணை நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரக் கட்டுப்பாடு தாண்டி கடையை திறந்து வைதிருந்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஞாயிறு, 1 மார்ச், 2026
ஈரான் பாதுகாப்பில் சீனாவின் HQ-9B ‛டிபென்ஸ் சிஸ்டம்’ காலை வாரியது! சீன டபுள் கேம் விளையாடியதா?
tamil.oneindia.com - Nantha Kumar R : டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சேர்ந்து மேற்கொண்ட போர் நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதல்களால் ஈரான் பெரும் அழிவை சந்தித்துள்ளன. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஈரானின் இந்த பேரழிவுக்கு சீனாவை நம்பியதும், சீனாவின் வான்வெளி பாதுகாப்பு சாதனம் காலை வாரியதும் தான் முக்கிய காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் பந்தாடி வருகின்றன.
29 இடங்களைக் கேட்கும் காங்கிரஸ்... 23-க்கு இழுக்கும் திமுக!
hindutamil.in : தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக உடனான அதிகாரபூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 29 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
:ஈரானிய பட்டத்து இளவரசர் : சரண் அடைந்து அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்!
தினமலர் : வாஷிங்டன்: கமேனியுடன் இணைந்து ஆட்சி நடத்தியவர்களில் மீதமுள்ள அனைவரும் உடனடியாக சரண் அடைய வேண்டும். அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி கூறியுள்ளார்.
ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கொல்லப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹல்வி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஈரானின் குடிமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்ட அரக்கன் கமேனி மறைந்துவிட்டார்.
அமெரிக்க தாக்குதலில் ஈரான் சர்வாதிகாரி அலி காமனி உயிரிழந்துள்ளார்
ராதா மனோகர் : ஈரான் சர்வாதிகாரி அலி காமனி அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்துள்ளார்
இந்த செய்தியை ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது
இந்த செய்தி பெரும்பான்மையான ஈரான் மக்களுக்கு பெரும் மகிழ்சியை அளித்திருக்கிறது என்றே கருதுகிறேன்.
ஒரு மிக சிறந்த நாட்டை வெறும் மத அடிப்படை வாதிகள் கைப்பற்றி எப்படி எப்படி எல்லாம் சீரழித்தார்கள் என்பதை இனி வரலாறு தெளிவாக கூறும்.
இந்த செய்தியை அறிந்த ஈரான் மக்கள் ஒரு விடுதலை உணர்வு பெற்று தெருக்களில் ஆடி பாடும் காட்சிகள் உலகம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக பெண்கள் மீதான அடிப்படை மத ஒடுக்குமுறைக்கு ஒரு முடிவு ஏற்றப்பட்டிருக்கிறது.
மறைந்த மன்னர் Mohammad Reza Pahlavi ஷாவின் மகன் Reza Pahlavi ரெஸா பல்லவி அமேரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளின் உதவியோடு இந்த ஈரான் மீட்பு நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிகிறது.
கமேனி மகள், மருமகன் உயிரிழப்பு.. உறுதி செய்த ஈரான்.. மொத்தமாக காலி செய்த அமெரிக்கா!
tamil.oneindia.com -Vigneshkumar : தெஹ்ரான்: ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகத் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கமேனியின் மகள், மருமகன், பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதை ஈரானின் அரசு ஊடகமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஈரானை சுற்றிலும் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வந்தது. கடந்த வாரமே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தும் எனச் சொல்லப்பட்டது.
இருப்பினும், சில காரணங்களால் கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்படவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
dinamani.com : துருக்கிஷ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், ஐபீரியா எக்ஸ்பிரஸ், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா, ஹங்கேரியின் விஸ் ஏர், ஃப்லை துபை, ஓமன் ஏர், டச்சு நாட்டின் கேஎல்எம் உள்பட முக்கிய விமான சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார்? டொனால்ட் ட்ரம்ப் டுவீட்
hirunews.lk : ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத்சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள அவர், இது ஈரானிய மக்களுக்கும், ஈரானால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கும் கிடைத்த நீதி எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன், இஸ்ரேலுடன் இணைந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமேனியுடன் இருந்த மற்ற தலைவர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் பாடசாலை மீது ஏவுகணைத் தாக்குதல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!
hirunews.lk : ஈரானின் மினாப் (Minab) பகுதியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம், மினாப் வழக்கு தொடுநரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 53 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
1983 கலவரத்தில் உண்மையிலேயே எத்தனைபேர் கொல்லப்பட்டிருந்தனர் ?
வெலிகடையில் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு கொல்லப்பட்டாரா ?
திடீர் டிமாண்ட்.. அதிர்ந்த அறிவாலயம்..அதிரடி ரிப்ளை.. திமுக- காங். பேச்சுவார்த்தையில் என்ன
மின்னம்பலம் - Mathi : என்னய்யா எலக்ஷன் களைகட்டுதோ?
ஆமாய்யா.. அதுவும் திமுகவோட அண்ணா அறிவாலயம் பக்கம் போகவே முடியலையே.. அவ்வளவு கூட்டம் குவிஞ்சு கிடக்கு..
திமுகவில தேர்தலில் போட்டியிட விரும்புறவங்க பிப்ரவரி 20-ந் தேதியில இருந்து விருப்ப மனு கொடுத்துட்டு இருக்காங்க.. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேர் ஆதரவாளர்கள் படையோடு அறிவாலயத்துல விருப்ப மனு கொடுக்கிறாங்க.. அதுவும் நல்ல நாளா இருந்துட்டா போதும்.. அறிவாலயம் இருக்கிற தேனாம்பேட்டை சிக்னல் பக்கம் போகவே கூடாதுங்கிற அளவுக்கு கூட்டம் அலை மோதுதுய்யா..
இன்னொரு பக்கம், பிப்ரவரி 22-ந் தேதியில இருந்து கூட்டணி கட்சிகளோட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில நடக்குது… ஒவ்வொரு கட்சி குழுவும் அவங்க கட்சிகாரர்களோடு வந்து பேசிட்டு போறாங்க..
சனி, 28 பிப்ரவரி, 2026
விவகாரத்து கேட்கும் விஜய் மனைவி.. அம்பலமான திரிஷா உறவு.. பனையூரில் நடந்தது என்ன?
minnambalam.com - Mathi : விஜய் மனைவி சங்கீதா.. என்ன பிரச்சனையாம்?
தேர்தல் தேதி அறிவிக்கப் போறாங்க.. கூட்டணிகளில்ல தொகுதி பங்கீடு எப்படி இருக்கும்னு எல்லாரும் பேசிகிட்டு இருக்கிற நேரத்துல தான் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செஞ்சிருக்காங்க..
சங்கீதா வெறும் விவாகரத்து மட்டும் கேட்கலை.. அதுல நடிகைக்கும் விஜய்க்குமான தொடர்பை பத்தி பல விஷயங்களை சொல்லி இருக்காங்க.. விஜய் பொது நிகழ்ச்சிக்கு போனாலும் வெளிநாடு போனாலும் அந்த நடிகை கூடவே போறாங்கன்னும் பெரிய அணுகுண்டையே வீசியிருக்காங்க..
இதைப் பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட என்னதான் நடந்ததுன்னு விசாரிச்சப்ப, “விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்குமான பிரச்சனை பல வருஷங்களாக இருக்குது.. பனையூரில ஒரே பங்களாவுல இருந்தாலும் சங்கீதா ஒரு ப்ளோரிலும் விஜய் இன்னொரு ப்ளோரிலும் இருக்கிறாங்க.. சமையல் கூட வெவ்வேறதான்.. வெளியே எங்கே போனாலும் வெவ்வேற கார்லதான் போறாங்க.. ஒரே வீட்டுல தனித்தனியாதான் வாழ்றாங்க..
தி.மு.க.-காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை - 25 தொகுதியா?.. 35 தொகுதியா?
தினத்தந்தி : சென்னை - சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். அவருடைய இந்த கருத்தை வழிமொழியும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.
விஜய் அந்த நடிகையோடு நடிக்க சங்கீதாவிடம் அனுமதி கேட்டாரா விஜய்? அசராத திரிஷா- பயில்வான்
tamil.oneindia.com -Hemavandhana : சென்னை: அப்பா, அம்மாவையே தன்னுடைய தவெக -வில் விஜய் சேர்த்து கொள்ளவில்லை என்றும், ஆனால், விரைவில் விஜய்க்காக, திரிஷா தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய அனுமானத்தை தெரிவித்துள்ளார்.
public wing என்ற யூடியூப் சேனலுக்கு பிரபல நடிகரும், மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் திரிஷா பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
வெள்ளி, 27 பிப்ரவரி, 2026
நடிகர் விஜய் மனைவி மணமுறிவு வழக்கு! செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் ஆஜாராக உத்தரவு
![]() |
Rebel Ravi : விவாகரத்து வழக்கு : நடிகர் விஜய் ஏப்ரல் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யுடன் விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2021-இல் நடிகை ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் விஜய் இருப்பதாக தெரிய வந்ததையடுத்து, விவாகரத்து முடிவை எடுத்ததாக சங்கீதா கூறியுள்ளார்.
நடிகையுடனான உறவை விஜய் தொடர்ந்ததால்தான், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் சங்கீதா தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் - MLA பதவியை ராஜினாமா செய்தார்!
மின்னம்பலம் - Mathi : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று பிப்ரவரி 27-ந் தேதி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருக்கிறார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தார். அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க முடியாத சூழல்களில் 2001, 2014-ல் அவருக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக சிறிது காலம் பதவி வகித்தார். 2016-ல் ஜெயலலிதா மறைந்த போதும் சில மாதங்கள் முதல்வராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
வியாழன், 26 பிப்ரவரி, 2026
சென்னை வரும் ராகுல் காந்தி.. த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தையா..? உறுதியாகாத தி.மு.க. கூட்டணி
தினத்தந்தி -Paramasivan S : சென்னை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.
அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை.
புதன், 25 பிப்ரவரி, 2026
தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கு தலித்துகள் தான் காரணம்!
Suresh Bhim : தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கு யார் காரணம்? இந்துக்களா? இல்லை,
தலித்துகள் தான் காரணம்!
தம்மை இந்துக்கள் என நினைத்துக்கொண்டு, இந்துக்களோடு மல்லுக்கட்ட நினைப்பது தான் தலித்துகளை இந்துக்கள் அடக்கி வைக்க நினைப்பதற்கு காரணம்.
தான் ஒரு பெளத்தன், அதனால் தான் இந்து நம்மை ஒதுக்குகிறான் என்பதை உணர்ந்து ஒரு பெளத்தனாக வாழ ஆரம்பித்தால், தலித்துகள் தாழ்த்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
இந்துக்களின் பார்வையில் அவர்கள் வேற்று மதக்காரர்களாகிப்போய்விடுவார்கள். தலித்துகளாய் தெரிய மாட்டார்கள்.
எனவே, தலித்துகளாய் இருப்பதற்கு, தலித்துகளே காரணம்.
தீண்டாமை ஒரு மன நோய்!
யாருக்கு மன நோய்? தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாதி இந்துக்களுக்கா?
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் : நள்ளிரவில் எடுத்த முடிவு; மகளிருக்கு ரூ. 67 ஆயிரம் கோடி வழங்கினோம்!
நக்கீரன் - து. ராஜா : தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் திமுக சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்கும் காலம் இது. மாற்றத்திற்கான காலம் இது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல மாற்றங்களை உலகம் சந்தித்துள்ளது
திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி! .. கூட்டணிக்கு அழைத்த விஜய்.. கிரிஷ் சோடங்கர் சொன்னது என்ன?
மின்னம்பலம் - Mathi : “அதிகாரப் பகிர்வை வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சி சொல்லும்? காங்கிரஸ் NGO அல்ல.. விஜய்யின் தவெக காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்துள்ளது” என்று அக்கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளரும் திமுகவுடனான பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Indian Express நாளிதழுக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி:
கேள்வி: திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு வந்துள்ளதா?
கிரிஷ் சோடங்கர்: இல்லை, திமுக இன்னும் எங்களை அழைக்கவில்லை. பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அரச புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி சுரேஷ் சாலி கைது
கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலியை 72 மணித்தியால தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் வைரச் சுரங்க ரகசியம்!
![]() |
நக்கீரன்.: தமிழ்நாட்டில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியின் தற்போதைய தட்பவெப்பத்தோடு, மாணிக்கம் தாகூரின் அரசியல் போக்குகளும் முடிச்சுப் போட்டு பேசப்படுகின்றன.
தங்களது அரசியல் எதிரியான தி.மு.க. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற திட்டத்துடன்,
மாணிக்கம்தாகூரை பின்னால் இருந்து இயக்குவது பா.ஜ.க.தான் என்ற பேச்சு காங்கிரஸ் வட்டாரங்களிலேயே பரவலாக விவாதிக்கப்படுகிறது.
மாணிக்கம்தாகூரின் பொருளாதாரப் பின்னணி குறித்த ரகசியத் தகவல்களை, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. தேர்தல் மேடைகளில் தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார்.

