மின்னம்பலம் : போன ஜூன் 23-ந் தேதி நாம பேசுன, ”தவெக எம்.எல்.ஏக்களை தூக்கிய செந்தில் பாலாஜி” விவகாரம்தான் இப்ப தீ பிடிச்சு எரியுது.. இந்த கேஸில 3 பேரை அரெஸ்ட் செஞ்சிருக்கு போலீஸ். செந்தில் பாலாஜிக்கும் அவரோட தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பிருக்குன்னு போலீஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கு..
இந்த அறிக்கையை அடுத்து பிரஸ் மீட்ல அமைச்சர் நிர்மல்குமார், மு.க.ஸ்டாலினை ரொம்பவே கடுமையாக பேசினார்..
இந்த சம்பவங்கள்தான் திமுகவில இப்ப பேசுபொருளா மட்டுமில்ல ‘குமுறலா’ இருக்குதுன்னு சொல்றாங்க.. அப்படி என்ன குமுறல்னு சில மா.செ.க்களை தொடர்பு கொண்டு பேசுனப்ப, “செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு ஆக்ஷனுமே நம்ம பாலிட்டிக்ஸ்ல கான்ட்ரவர்சியாகத்தான் இருக்குது..
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
புதன், 1 ஜூலை, 2026
ஸ்டாலினை சிக்கலில் மாட்டிவிட்ட செந்தில் பாலாஜி.. குறுமும் திமுக நிர்வாகிகள்!
ஜெர்மனியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு
இளவேனில் : வடக்கு ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில் இன்று (29) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சாந்தனு நன்றி- “நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேன்...”
“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது” என பாக்யராஜ் மகன் சாந்தனு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது” என பாக்யராஜ் மகன் சாந்தனு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காலை வாரப்போகும் கம்யூனிஸ்டுகள்? தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தோழர்கள்! என்னாச்சு?
tamil.oneindia.com -Rajkumar R ; வேலையைக் காட்டிய தோழர்கள்.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கம்யூனிஸ்ட்கள்! என்னாச்சு?
சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தோழமைக் கட்சிகளுக்கான முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் அழைப்பு விடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளன.
பாகிஸ்தான் மனித உரிமையாளர் மஹ்ரங் பலூச்சிற்கு ஆயுள் தண்டனை! குவெட்டா நீதிமன்றம் தீர்ப்பு
பிபிசி தமிழ் : "பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் மஹ்ரங் பலூச்சிற்கு ஆயுள் தண்டனை! குவெட்டா நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் கொந்தளிப்பு!"
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த முக்கிய சமூக ஆர்வலரான மஹ்ரங் பலூச் (Mahrang Baloch) மற்றும் அவரது கூட்டாளி சிப்கத்துல்லா (Sibghatullah) ஆகிய இருவருக்கும், ஒரு துணை ராணுவ வீரரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து குவெட்டாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 2024-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது, கடமையில் இருந்த துணை ராணுவ வீரர் ஷபீர் பலூச் (Shabbir Baloch) கொல்லப்பட்டார்.
செவ்வாய், 30 ஜூன், 2026
ரஷ்ய சீன புரட்சிகளின் தோல்விகளும் உண்மையும்! ,பதிவு 8
![]() |
Chandru R · : 1935 முதல் 1941 வரையிலான காலகட்டத்தில், சோவியத் ரசியாவில் (USSR) ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்றைய வடகொரியாவின் நிலையைப் போன்றே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடனும், மிகக் குறைந்த சுதந்திரத்துடனும் தான் இருந்தது.
சொல்லப்போனால், கம்யூனிசக் கொள்கைகளின்படி அது "தொழிலாளர்களின் அரசு" என்று அழைக்கப்பட்டாலும், நடைமுறையில் தொழிலாளர்கள் கடுமையான சட்டங்களால் ஒடுக்கப்பட்டனர்.
:1. வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமின்மை (இன்றைய வடகொரியா போல)1938 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொழிலாளர்களின் சுதந்திரத்தை முழுமையாகப் பறித்தன:வேலையை மாற்ற தடை:
ஒரு தொழிலாளி தனது தொழிற்சாலையை விட்டுத் தன்னிச்சையாக விலகவோ அல்லது வேறு வேலைக்கு மாறவோ சட்டப்படி அனுமதியில்லை.
முதல்வர் விஜயும் கோக்கையின் கலாச்சாரமும்! முதல்வரே கோகைன் பயனாளியா ? சுசித்ரா பேட்டி
Abilash Chandran : அமைச்சர் கில்லி சரத் கொக்கெய்ன் விவகாரம் தந்த நன்மை
தவெகவினர் போதை இல்லா தமிழகம் மராத்தான் நடத்தும்போது திமுக தரப்பு இந்த கொக்கெய்ன் காணொளியை வெளிவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
தவறில்லை. அரசியலில் இப்படியான எதிர்ப்பிரச்சாரமும் வேண்டும்.
அதேநேரம் என்னுடைய பார்வையில் ஒரு அமைச்சர் கொக்கெய்ன் பயன்படுத்துவது பிரச்சினை அல்ல. முதல்வர் மீதே இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்டு.
அதாவது அவர் முன்பு தன் வீட்டில் நடத்திய சினிமா பார்ட்டிகளில் இது வெள்ளமாக ஓடுவதாகச் சொல்வார்கள்.
அவர்தான் என்றில்லை இந்தியாவில் கணிசமான மேற்தட்டு இளைஞர்களின் விருந்துகளில் கொக்கெய்ன் உள்ளிட்ட போதை வஸ்துகள் புழங்குவது சாதாரணமாகி விட்டது.
திங்கள், 29 ஜூன், 2026
தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்திலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
உதயநிதி : தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது!
hindutamil.in : தஞ்சாவூர்: தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது: தமிழகத்தில் அமைந்துள்ள சோஃபா மாடல் ஆட்சியின் போலி பிம்பம் கடந்த ஒரு மாதத்தில் நொறுங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஆட்சியின் அவலங்களை மக்கள் புரிந்து வருகின்றனர். அரசின் தவறுகளை இளைஞர்கள் தட்டிக்கேட்கத் தொடங்கியுள்ளனர். தட்டிக்கேட்கும் இளைஞர்களையும், திமுகவினரையும் கைது செய்யும் வேலையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. எனவே, இதுபோன்ற அடக்கு முறைகளை எதிர்கொள்ள திமுகவுக்கு அதிக வழக்கறிஞர்கள் தேவைப்படுகின்றனர்.
ஞாயிறு, 28 ஜூன், 2026
பிரபாகரன் ஊரான் வீட்டு பிள்ளைகளுக்கு சயனைட் கட்டிவிட்டு தன் பிள்ளைகளை டாக்டர்களாக்க கனவு கண்டார்!
போர்க்காலங்களில் வன்னியில் இருந்து ஆங்கில இலக்கியம் படித்தது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே
அந்த இரண்டு மாணவர்களின் பெயர்கள்
துவாரகா பிரபாகரன் ( பிரபாகரனின் மகள்)
சார்ள்ஸ் பிரபாகரன் (பிரபாகரனின் மகன்)
கிரிக்கெட் மாணவிகளை வன்புணர்ந்த கேரளா பயிற்சியாளருக்கு 99 ஆண்டுகள் சிறை
வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த மனு, கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு, பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பொலிஸார் அவர் மீது 6 போக்சோ (POCSO) வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.
சனி, 27 ஜூன், 2026
ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் அமெரிக்க தம்பதி கடத்தலும்
![]() |
ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்!
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன்
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது
திரு கே பாக்யராஜ் காலமானார் - தமிழ் திரையுலகின் இறுதி Feel good moive maker பீல் குட் மூவியே மேக்கர்
ராதா மனோகர் : திரு கே பாக்யராஜ்தான் தமிழ் திரையுலகின் இறுதி Feel good movie maker!
இவரை திரைக்கதை மன்னன் என்று கூறுகிறார்கள்
அது ஓரளவு சரிதான்
ஆனால் அதைவிட இவரை எனக்கு பிடித்திருப்பது இவரின் feel good movie பீல் குட் மூவிகளுக்காகத்தான்
எம்ஜியார் படங்களும் இந்த வகையில் ஓரளவு வரும்
சமூக நியதிகளுக்குள் கொஞ்சம் கட்டுப்பட்டுதான் எம்ஜியார் படங்களின் பீல் குட் தன்மை இருக்கும்
அந்த நியதிகளை உடைத்து எறிந்ததில் பாக்யராஜின் பங்கு அதிகம்தான்
இவரின் படங்களில் இடம் பெற்ற பல சிறு சிறு காட்சிகள்
பல சமூக அவலங்களை மிக எளிதாக எள்ளிநகை ஆடியிருக்கிறது
உதாரணமாக தூறல் நின்று போச்சு படத்தில் பெண் பார்க்க வரும் காட்சியில் சுலோக்சனா பயந்து பயந்து நடுங்கும் போது பாக்யராஜ்
ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இது பயத்தில டீயை கீயை கொட்டிடப்போகுது என்று கூறிக்கொண்டே அவரின் தட்டை வாங்கி தானே எல்லோருக்கும் கொடுப்பார்
வெங்கட நாராயணா நியமனத்துக்கு ஆ.ராசா கடும் விமர்சனம்!- வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) :
minnambalam.com - Kavi : தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான இந்த பதவியை ஒரு பட நிறுவனத்தின் தயாரிப்பாளருக்கு எப்படி கொடுக்க முடியும், முதல்வர் விஜய்க்கு தெரிந்தவர் என்பதால் கொடுக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெள்ளி, 26 ஜூன், 2026
கரூர் 41 கொலைகள் - ஜனநாயகன் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதியாக நியமனம்!
மின்னம்பலம் - Kavi : தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமைச்சருக்கு இணையான பதவியாகும்.
ஆளுநரின் உத்தரவுப்படி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ”புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கான ‘சிறப்புப் பிரதிநிதி’ என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
எ.வ.வேலு பேட்டி : ”என் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை”
மின்னம்பலம் - Kavi : திமுகவின் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூன் 25) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் சோதனை நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
”திமுக- அதிமுக” திருமணம்! ஸ்டாலின் நடத்தி வாய்த்த தங்கமணி - மதிவாணன் வீட்டு திருமணம்
மின்னம்பலம் - Mathi : திருவாரூரில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin), முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் இல்ல திருமணத்தை ஜூன் 25-ந் தேதி நடத்தி வைத்தார்.
உ.மதிவாணனின் இளைய மகன் கதிரவன்- மெளனிகா ஆகியோரது திருமணம் திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசிய தகவல் பகிரப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் இளம்தவில் வித்துவான் பிரசாந்த் சச்சின் தற்கொலை
இலக்கியா : இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த கலைஞர் புதன்கிழமை (24) புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.
அதன்பின்னர் புதன்கிழமை (24) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
வியாழன், 25 ஜூன், 2026
ரஷிய சீன புரட்சிகளின் காட்டுமிராண்டித்தனம்! கொலைவெறியாட்டம் தவிர வேறில்லை
![]() |
Chandru R : ரசிய சீனபுரட்சி தோல்வியும் உண்மையும் பதிவு 4
1. கட்டாய கூட்டுப்பண்ணையின் பின்னணி (1928)லெனின் கொண்டு வந்த 'புதிய பொருளாதாரக் கொள்கை'
(NEP)-க்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின், 1928-ல் தனது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன் முக்கிய நோக்கம்:தனிநபர் விவசாய நிலங்களை ஒன்றிணைத்து 'கோல்கோஸ்' (Kolkhoz - கூட்டுப்பண்ணைகள்) மற்றும் 'சோவ்கோஸ்' (Sovkhoz - அரசு பண்ணைகள்) ஆக மாற்றுவது.தானிய உற்பத்தியை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதை ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் நகரங்களில் கனரகத் தொழில்துறையை (Industrialization) வளர்ப்பது
செந்தில் பாலாஜி : மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்!
hindutamil.in - தமிழினி : சென்னை: தவெக அரசு வெளியிட்டுள்ள மின்துறை வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார். மேலும், ‘தவெக அரசு பல தகவல்களை மறைத்து, அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதியை, மின்வாரியத்துக்கு வழங்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக மின்வாரியம் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கும். சீரான மின்சாரத்துக்கு வித்திட்டவர் ஸ்டாலின்.
இவனை ஆதரிக்கும் பெண்களையும் ஆண்களையும் தப்பி தவறியும் நம்பி விடாதீர்கள்!
![]() |
![]() |
ராதா மனோகர் : சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நேர்மையற்ற மனிதன்!
41 அப்பாவிகளின் உயிரிழப்புக்கு காரணமானவன்
மனைவி குழந்தைகளை துரத்தி விட்டவன்
மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல்,
கூடவே வேறு பல பெண்களோடு தொடர்புகளை
இன்று வரை தொடர்பவன்
இவனின் குடும்ப ஒழுக்கம் பற்றி கேட்டால்,
ஒருவரின் சொந்த வாழ்க்கையை நாம் விமர்சிக்க கூடாது என்று வகுப்பு எடுக்கிறார்கள்
என் ரசிகர்களிடமே பிளாக் டிக்கெட் வித்து சம்பாதித்தவன் என்று மேடையில் பெருமையாக வேறு கூறுகிறான்
ஒழுக்கமோ நேர்மையோ குடும்ப பாசமோ கொஞ்சம் கூட இல்லாத ஒருவனை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன சொல்வது ?
இவனின் வளர்ந்த பிள்ளைகளின் மனோநிலையை கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தானா?
போக்ஸோ வழக்கில் சிக்கிய அமைச்சர் விஸ்வநாதன்.. மாணவிகளின் காலில் கை! உளவுத்துறை 2 வீடியோ ஆதாரம்! கிரிஸ் சோடங்கர் ஆக்ஷன்
tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சூழலில், ஒரு புது சர்ச்சை குபீரென கிளம்பி டெல்லி மேலிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிராக, அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்தே புகார்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளனவாம்.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
மு க ஸ்டாலின் விரைவில் சட்டமன்றத்துக்குள் வருவார் : முதல்வர் விஜய்க்கு கே.என்.நேரு பதில்
மின்னம்பலம் - Kavi ;விரைவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் வருவார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய், ஆளுநர் உரைக்கு பதிலுரை ஆற்றினார். அப்போது, ’உங்க அப்பாவை காணம்” என கூறி குட்டி ஸ்டோரி ஒன்று சொன்னார். இது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்தது.
அதோடு 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர் காணாமல் போய்விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புதன், 24 ஜூன், 2026
41 deaths கொலைகாரனை (vijay) கைது செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலின்
![]() |
Rebel Ravi : திமுக தோல்விக்கு விதை போட்ட நிகழ்வு.
அரசு அரசாகச் செயல் பட வேண்டும்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் தூக்கி உள்ளே வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, எந்தத் தலைவரும் அவர் கட்சித் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று மகாத்மா போல் பேசியது முதல் தவறு.
நள்ளிரவில் கரூர் போனது, செ பா போனது, அன்பில் அழுதது.. இதெல்லாம் அடுத்தடுத்த தவறுகள். தவெக நிர்வாகி பத்து பேரை உடனே கைது செய்து,
![]() |
அந்த நிகழ்வை ஒரு கட்சியின் அலட்சியப் போக்காய்க் கருதி.. கருவிலேயே அழித்திருக்க வேண்டும்.
கைது செய்தால் தேர்தல் வெற்றி பாதிக்கும் ஆட்சி போய் விடும் என் அஞ்சிய ஸ்டாலின் அவர்களே…இப்ப மட்டும் என்ன வாழுது?
பில்லக்கா பையன பெரியாளாக்கி அவனிடமே தோற்றீரே இது எவ்வளவு அசிங்கம்?
Devamathi Venkatesh
அவர் இயல்பு அது தன் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்ட போது காட்டிய கரார் தனத்தை எதிரி கட்சி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்ட தற்குறி குடிகார ஜோம்பிஸ் தலைவன் விர்ச்சுவல் வாரியார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் தான் நமக்கு இந்த நிலைமை
கட்சிக்காரர்களுக்கு பவர் இல்லை என்றால் கட்சிக்கு எப்படி பவர் இருக்கும் திமுகவின் வின் தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டது அதிகம் .நம் கூட்டணியில் இருந்த கட்டப் பஞ்சாயத்து கட்சிகளூக்கு இருந்த சுதந்திரம் மரியாதை அதிமுக பாஜக வுக்கு இருந்த மரியாதை கூட அரசு அலுவலகங்கள் காவல் நிலையத்தில் நம் கட்சிக்காரர்களுக்கு இல்லை. இந்த வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்






