tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: சென்னை பெருங்குடியில் 50 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது.
இன்றும் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் விலகி இருந்தாலும்,
சில மணிநேரங்கள் மழை நீடிக்கும் எனவும் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Michaung: Chennai Perungudi receives 50 CM Heavy Rain
சென்னையில் இன்று காலை 8.30 மணிவரையில் பெரும்பாலான பகுதிகளி 21 செ.மீ முதல் அதிகபட்சமாக 29 செ.மீ வரை மழை பதிவாகி இருந்தது.
![]() |
nakkeeran : திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால், மூன்று கோடி ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.