tamiloneindia : மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
முந்தைய தேர்தல்களை ஒப்பிடும்போது இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதும், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதுக்குட்பட்டவர்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொ.செ. எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி சாதாரண கட்சிகளின் தலைவர்கள் வரை, ரிசல்ட் எப்படி இருக்கும் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மே 4-ந்தேதி வரை இந்த டென்சன் இருக்கத்தான் செய்யும்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 25 ஏப்ரல், 2026
எப்படி பார்த்தாலும்.. விஜய்க்கு 8%தான்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. சொல்வது என்ன?
பாகிஸ்தானுக்கு சென்ற ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.. அமெரிக்கா விஷயத்தில் பாசிட்டிவ் சிக்னல்!
tamil.oneindia.com - Halley Karthik : இஸ்லாமாபாத்: ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் குறையவில்லை. இப்படி இருக்கையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி பாகிஸ்தான் சென்றிருக்கிறார்.
அப்பாஸ் அராக்ச்சி உயர்மட்டக் குழுவுடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றிருக்கிறார். இவர் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?
Tamil Oneindia : கொடைக்கானலில் ஸ்டாலினின் தோராய பட்டியல்! ரெஸ்ட்டில் ரெடியாகும் சீக்ரெட் லிஸ்ட்! அமைச்சரவை மாற்றம்?
தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கொடைக்கானலில் முகாமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களின் வெற்றி வாய்ப்பு குறித்த சபரீசனின் ரகசிய ரிப்போர்ட் மற்றும் புதிய அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு என தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகி வருகிறார்.. ராசியான இடத்தில் அமர்ந்து அவர் எடுக்கும் இந்த முடிவுகள், தற்போதைய அமைச்சர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்போகிறதா அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறதா என்கிற பரபரப்பு அதிகரித்துள்ளது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஒருவழியாக அமைதியடைந்திருக்கிறது.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அரசியல் கட்சிகளின் கவனம் எல்லாம் தேர்தல் முடிவுகளை நோக்கியே இருக்கிறது.
வெள்ளி, 24 ஏப்ரல், 2026
100% பொய்யை நிஜமாக்க முயலும் தற்குறிகள்- பின்னணியில் பாஜக தில்லுமுல்லு
புகச்சோவ் புகச்சோவ் : கவன ஈர்ப்பு பதிவு...வ்
நேற்று தேர்தல் முடிந்த இரவிலிருந்தே, ஒரு பொய்த்தகவலை கட்டமைக்க,
அனைதுவகை ஊடகங்களும், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களும், தெருவுக்குத்தெரு புரளிகளை கிளப்பும் பெய்டு பிச்சைக்காரர்களும், டீக்கடைதோறும் தகவல்களை விளம்புகிற குவாட்டர் காவாலி புரோக்கர்களும், திராவிட எதிர்ப்பின் அத்தனை தலைமைகளும், நூறடிக்கு ஓரிடத்தில் அத்தகவல் பரவுகிறபடி அந்தப்பொய்யை தமிழ்நாடெங்கும் உலவ விட்டுள்ளனர்.
அந்த தகவல்களின் வெளிப்பாடு பின்வருமாறு...
1, பசங்கள சும்மா சொல்லக்கூடாதுபா...
மெரட்டிட்டானுக
2, அடேங்கப்பா! இவ்வளவுதூரம் ஏறிவருவானுகன்னு திமுககாரன் சத்தியமா நெனைச்சிருக்கமாட்டான்.
3, வந்துட்டாண்டா திமுகவ அழிக்க. இனிமே திமுக காலிதான்
4, பசங்களோட ஆரவாரமும், உற்சாகமும் பெரிபெரிய திமுக தலைங்களையே ஆட்டிருச்சிபா...
5, எப்புடியும் இந்த பசங்கள கொறசொல்லவே முடியாது. ஆட்டம் ஆரம்பமாய்டிச்சி.
தவெக தோற்கும். 200க்கும் மேற்பட்ட பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.
![]() |
A Sivakumar 1991 தொடங்கி களத்திலும் 2011 தொடங்கி தளத்திலும் இயங்கும் எனக்கு இந்த மீடியாக்களும் நட்ட நடுநிலை நக்கிகளும் எந்த அடிப்படையில் தவெக 20% வாங்குவான்னு சொல்லுறாங்கன்னே தெரியலை, புரியலை.
What is the scale these people use to measure this percentage for TVK…?
அரசியல் தவிர வேறு எதுவும் பேசாத நமக்கே தவெகவின் 10 வேட்பாளர்களின் பெயர் தொகுதி பெயரோடு தெரியாது.
தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலும், எந்த ஊரிலும் வேட்பாளரின் பெயரை சொல்லி வாக்கு கேட்டு நேரடி / மறைமுக பிரச்சாரமே செய்யாத தலைவன்...
இந்த தவெக வேட்பாளர் தன் கடினமான உழைப்பால் தொகுதியை தலைகீழாக பிரித்து மேய்கிறார் என்று தமிழ்நாட்டு ஊடகங்களின் கவனம் பெறுமளவுக்கு தொகுதியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள உழைக்காத, உழைக்கத் தெரியாத 231 இதர வேட்பாளர்கள்...
எல்லாம் சேர்ந்து தங்கள் தொகுதியிலும் தமிழ்நாடு அளவிலும் எப்படி 20% வாங்குவாங்க…?
ஈரான் 8 பெண்களைத் தூக்கிலிடாது! - டிரம்பின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியா?
![]() |
புதிய புனல் : "8 உயிர்கள்.. ஒரு ஒப்பந்தம்! - மரண தண்டனைக் கைதிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமெரிக்க அதிபர்!"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு முக்கிய மனிதாபிமான நிபந்தனையாக, அந்நாட்டினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பெண்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
"தயவுசெய்து அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! அவர்களை விடுவித்தால் நான் அதனைப் பெரிதும் பாராட்டுவேன். இது நமது பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக (Great start) அமையும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுதலை செய்யக் கோரிய அந்த 8 பெண்களும், ஈரானில் அண்மையில் நடைபெற்ற அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததாகக் கூறப்படும்
ரஷிய அதிபர் ஜோசெப் ஸ்டாலினும் ரஷ்ய உளவு தலைவர் பெரியாவும்
மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் இல்லாத நிலை, அதனால் தனியாக இங்கே தங்கி ரோஜா செடிகளை வளர்ப்பதிலும், எலுமிச்சை மற்றும் தர்பூசணி பயிரிடுவதிலும் நேரம் செலவிட்டார். இது அவருக்கு ஒருவித மன அமைதியைத் தந்ததாகக் கூறப்படுகிறது. அவரது தட்சாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. அவர் தினமும் பல மணிநேரம் வாசிப்பதில் செலவிடுவார். மேலும், கிராமபோன் இசைத்தட்டுகள் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்.
வியாழன், 23 ஏப்ரல், 2026
மே முதல் வாரத்தில் உதயசூரியன் உதிக்கும்.வெற்றி - DMK பெறுவார்கள் -என்.ராம் உறுதி
ராஜா ஜி : வாக்கு சதவிகிதம் கூடினால் ஆளும்கட்சிக்கு பாதிப்பு என்கிறார்களே என்று பலரும் கேட்கிறார்கள்!
பல முறை நடந்தது போல் இதும் கொஞ்சம் உண்மைதான்.
SIR நடந்ததற்குப் பிறகு கிட்டத்தட்ட 15% வாக்காளர்கள் நீக்கம்!
இதன் படி பார்த்தால் இப்போது கிடைக்கும் வாக்குகள் சதவீதத்தோடு 15% கழித்து விட்டு பாருங்கள் உண்மை தெரியும்!
90% என்றால் 75%
80% என்றால் 65%
அப்படி பார்த்தாலும் 5% அதிகமாக வாக்கு எண்ணிக்கை தெரியும், இதுவும் உண்மைதான்.
என்னப்பா குழப்புற என்பீர்களே.
இதுதான் 18 முதல் 30 வயது வரை எப்போதும் வாக்களிக்காத இளைஞர்களில் சிலர் விசைக்கு வாக்காளித்திருப்பார்களே அவர்களின் எண்ணிக்கை!
TN Election 2026 தமிழக வாக்குப்பதிவு நிறைவு... மொத்த வாக்கு சதவீத பட்டியல்
tamil.news18.com : தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல், வாக்குப்பதிவு குறித்த இன்றைய முக்கிய செய்திகளை நியூஸ் 18 தமிழ்நாட்டில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்பில் இருங்கள்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குறிப்பாக இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே அதிகப்படியான வாக்குப் பதிவு பதிவாகிவருகிறது. காலை முதலே இளைஞர்கள் முதல் 100 வயது கடந்த, உடல் நலன் நலிவுற்ற முதியவர்கள் வரை தங்கள் ஜனநாயக கடமையை செய்துவருகின்றனர்.
புதன், 22 ஏப்ரல், 2026
நடிகன் விஜய்யின் வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
![]() |
![]() |
Mugil Bharathi : வீரதமிழச்சிகளும் அலாதி அபிலாஷைகளும்
சோம்பேறி பொறுக்கி நடிகன் அரசியலுக்கு வந்ததில் ஒரு மிகப்பெரிய நன்மை இருக்கு. தமிழ்நாட்டில் நிலவிய ஒரு பலநாள் Myth உடைஞ்சிருக்கு..!!
எதோ தமிழ்நாட்டில் ஆண்கள் எல்லாரும் நடிகைகள் மீது காமரீதியான மோகம் கொண்டவர்கள்.
"ஒரு நடிகை பொதுவெளியில் வந்துரக்கூடாதே, உடனே முண்டி அடித்துக்கொண்டு எலும்பை கண்ட நாயை போல் நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைபவர்கள் இந்த ஆண்கள்" என்று எகத்தாளமும் ஏளனமும் செய்த்தவர்கள்தான் இந்த மங்கையற்கரசிகள்..!! மூச்சுவிடக்கூட இடமில்லாத நகர பேருந்துகளில் தப்பி தவறி ஒரு ஆணின் கை மேலேபட்டுவிட்டால் அப்பிடியே கண்ணகியாய் அலறி துடித்து காளி அவதாரமெடுத்து அவனை துவம்சம் செய்துவிடுவார்கள் இந்த குலக்கொழுந்துகள்..!!
அப்பிடியாய்ப்பட்ட வீர தமிழச்சிகள்தான், இதோ, தங்கள் ஆதர்ச நாயகனை காணும் ஆவலில்... தப்பு, தப்பு... ஆதர்ச நாயகனை காணும் "வெறியில்", இவ்ளோ கும்பலையும் பொருட்படுத்தாது, பாதுகாப்பு பணியில் உள்ள காவலரைக்கூட துச்சமாக மதித்து, மிதித்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
பாலகணேசன் அருணாசலம் : நடிகர் விஜய்-ன் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது!
முதலில் வருமான வரித் துறையை வைத்து விஜய்-ஐ வளைத்தது பா.ஜ.க!
அடுத்து... அந்த விஜய்-ஐ 'ஜோசப் விஜய்' என்று. எச். ராஜாவை ஏவி விட்டு மத அடையாளப்படுத்தியது பா.ஜ.க!
அதனை தொடர்ந்து விஜய்-ஐ கட்சி தொடங்க கட்டளையிட்டது பா.ஜ.க!
₹1,000 கோடி மோசடியில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கிய லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் தொடங்கி,
விஜய் மீதான வருமான வரி சோதனையை முன்னின்று நடத்திய I.R.S., அதிகாரி அருண்ராஜ், பா.ஜ.க-விடம் அரசியல் அபயம் தேடி டெல்லிக்கு ஓடி வந்த செங்கோட்டையன்,
வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!
![]() |
ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு
இந்த நாடகம் யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
அன்றாட வாழ்வியலில் காணப்படும் அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது
கடுமையான விமர்சனங்களையும் கூட நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்! நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை
செவ்வாய், 21 ஏப்ரல், 2026
சூரத்தில் வேலையை இல்லை - குஜராத் ரயில் நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்
bbc.com : உத்னா: சூரத்தில் வேலையை இல்லை - குஜராத் ரயில் நிலையத்தில் கும்பலாக கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியது ஏன்? வீடியோவின் பின்னணி
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் 'லேசான' தடியடியைப் பிரயோகிக்கும் சூழல் உருவானது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
தோழர் மகாலிங்கத்தின் சிகிச்சையை தடை செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கியூ உளவு பிரிவு
![]() |
Suresh Vijaya Rajan : தோழர் மகாலிங்கத்தின் முறையான சிகிச்சையை தடை செய்து,
அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்
கியூ உளவு பிரிவின் அராஜகங்களை #கண்டிப்போம்!
தோழர் மகாலிங்கம் மாவோயிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டுள்ள, 70 வயது முதியவர் ஆவார்.
இவர் இருதய நோய் காரணமாக நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த போதும், சிறைச்சாலை நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை வழங்கவில்லை.
இதய நோய் முற்றிய நிலையில், கடந்த மாதத்தில் சிறைச்சாலையில் டிஐஜி பார்வையிட்ட போது, தோழர் மகாலிங்கம் மயங்கி விழுந்ததால், வேறு வழியின்றி அவரை மதுரை பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மதுரை மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு, மருத்துவர்கள் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (open heart surgery) செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது செய்யவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாக மாறும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
திங்கள், 20 ஏப்ரல், 2026
இந்திய delimitationனும் இலங்கை GG.POnnambalam த்தின் fify fifty கோரிக்கையும்
ராதா மனோகர் : இந்திய ஒன்றியத்தின் delimitationனும் இலங்கை பொன்னம்பலத்தின் fify fifty கோரிக்கையும்
மணிமேகலை பிரசுரமானது அமரர் ஜி ஜி பொன்ன்னம்பலம் அவர்களின் நீண்ட பேச்சை முன்பு நூலாக வெளியிட்டிருக்கிறது
இந்நூலின் பெயர் The Marathon Crusade for 'Fifty, Fifty'
1939 இல் இலங்கையில் பிரித்தானியவின் சோல்பரி கமிஷன் முன்பாக தோன்றி திரு ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு 50 வீத உறுப்புரிமை வேண்டும் என்று கோரிகை விடுத்தார்
சுமார் 9 மணித்தியாலங்கள் இது பற்றிய நீண்ட உரையை அவர் நிகழ்த்தி இருந்தார்
![]() |
இந்த நீண்ட உரையில் அவர் கூறிய முக்கிய விடயமானது ஒரு பெரும்பான்மை இனமானது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் பலத்தை மட்டும் கொண்டு இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதாகும்
ஒரு உண்மையினை ஜனநாயக அமைப்பில் இனரீதியான அல்லது மதரீதியான பெரும்பான்மைவாதம் என்பது காலப்போக்கில் வரை முறையற்ற அதிகார வரம்பு மீறலுக்கு வழிவகும் என்று குறிப்பிட்டிருந்தார்
ஈரானில் அதிகார சண்டை..? மூத்த தலைவர்களை ஓரம்கட்டம் IRGC மேஜர் ஜெனரல்.. என்ன நடக்குது?
tamil.oneindia.com : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிக் பாதுகாப்பு படையின் (IRGC) கமாண்டர் மேஜர் ஜெனரல் அஹ்மத் வஹிதியும் அவரது தலைமையிலான முக்கிய குழுவும், கடந்த 48 மணி நேரத்தில் ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமின்றி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் தற்காலிகமாக கட்டுப்படுத்தி வருவதாக போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம், ஈரானின் அரசியல் தலைவர்களுக்கு இருந்த பேச்சுவார்த்தை அதிகாரத்தை IRGC பக்கம் திருப்பியுள்ளது. இதனால் ஈரான் அரசியலில் புதிய குழப்பமும், அதிகார சண்டையும் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2026
DELIMITATION BILL: மின்னம்பலம் சொன்ன ‘ஆல் இந்தியா ஸ்கெட்ச்’.. விரிவாக விளக்கிய முதல்வர் ஸ்டாலின்! Mathi
![]() |
minnambalam.com : - Mathi : நமது மின்னம்பலத்தில், “டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ‘ஆல் இந்தியா’ ஸ்கெட்ச்.. |அதிர்ந்த மோடி- அமித்ஷா! என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளை இதில் நாம் பதிவு செய்திருந்தோம்.
இது தொடர்பாக சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் சொல்லி இருந்த ‘ஆல் இந்தியா ஸ்கெட்ச்’ குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
சன் நியூஸ் முதன்மை செய்தி ஆசிரியர் மு.குணசேகரனின் முதல்வர் ஸ்டாலினுடனான உரையாடலில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டையே உலுக்கிய விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
dinamalar.com : சென்னை: பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
திரு.ஆலாலசுந்தரம் திரு. தர்மலிங்கம் - அந்நியரின் கூலிப்படைகளான உள்ளூர் ஆயுதக்குழுக்களால் கொலை செய்யப்பட தலைவர்கள்
ராதா மனோகர் : 1985 செப்டம்பர் 5 ஆம் தேதி இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள்
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள்
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின் தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள்
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.
சனி, 18 ஏப்ரல், 2026
திமுக விஜய்யை குறைத்து எடைபோடுகிறது - மு.க.அழகிரி மகள் கயல்விழி
தினத்தந்தி : சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடுபொடியாக்கும் என்று மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“ஸ்டாலினை பணியவைக்க மோடி, அமித் ஷாவால் முடியாது” - திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு
hindutamil.in- எம்.கே.விஜயகோபால் : திருச்சி: “தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்” என்றும் உருக்கமாக கூறினார்.
திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
வெள்ளி, 17 ஏப்ரல், 2026
'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' - பில் போடும் நாஞ்சில் சம்பத்! ஒரு காலி டப்பாவுக்கு வந்த வாழ்வு!
விகடன் : கட்சி சார்பில் பரப்புரைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். பரப்புரையில் ஈடுபட வேண்டியது அவரது பொறுப்பு. அதற்கு இத்தனை கறாராக பில் போடுவது என்ன நியாயம்? என்கின்றனர் நிர்வாகிகள்.
தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச விதிக்கும் கண்டிஷன்களாலும் பாக்கெட்டை பதம் பார்க்கும் அளவுக்கு போடும் பில்லாலும் தவெக வேட்பாளர்களும் நிர்வாகிகளும் விழிபிதுங்கி போயிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் கட்சி வட்டாரத்தினர்.
நாஞ்சில் சம்பத்தை தங்கள் ஊர் பிரசாரத்திற்கு பேச அழைத்து அனுபவப்பட்ட தவெக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், 'எங்கள் தலைவர் எல்லா ஊருக்கும் எல்லா தொகுதிக்கும் போய் பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை. பொதுச்செயலாளர் தொடங்கி இரண்டாம் கட்ட தலைவர்கள் வரைக்கும் ஏன் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் செய்தித் தொடர்பாளர்கள் வரைக்கும் எல்லாரும் ஆளுக்கொரு தொகுதியை பிடித்துக் கொண்டு வேட்பாளராக நிற்கிறார்கள்.
“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!” - மசோதா தோல்விக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் பதிவு
hindutamil.in - வேட்டையன் : சென்னை: மத்திய பாஜக அரசு மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!” என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவின் கீழ் மசோதா நகலை தீயிட்டு எரித்த படத்தை பகிர்ந்துள்ளார்.
வியாழன், 16 ஏப்ரல், 2026
கிருஷ்ணகிரி கணவன் சுரேஷ் மனைவி காவியாவை கத்தியால் குத்திக்கொலை - தற்கொலை, மூன்று வயது மகள் உயிருடன் கண்டெடுக்கப்பட்டார்.
News18 : கருத்து வேறுபாட்டில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொட்டமெட்டரை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 30 வயதான சுரேஷ். ஓசூரில் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி காவியா டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது.









