மின்னம்பலம் - கவி : ஒடிஷா கோரமண்டல் ரயில் விபத்தில் 120 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் ஒடிசா தீயணைப்பு சேவைகள் பிரிவு தலைவர் சுதான்ஷு சாரங்கி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 3.20 மணிக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா அருகே பாலசோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் ஒடிசா பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ஒடிசா தீயணைப்புத் துறை, மேற்கு வங்கத்திலிருந்து வந்த ஸ்பெஷல் டீம் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டிருப்பதால், பெட்டிகளுக்கு அடியில் சிக்கி இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 3 ஜூன், 2023
ஒடிஷா கோரமண்டல் ரயில் விபத்தில் 120 பேர் உயிரிழப்பு! மேலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
வெள்ளி, 2 ஜூன், 2023
அண்ணாமலை பார்ப்பனர்களுக்கு எதிரி - எஸ் வி சேகர் கடுமையான குற்றச்சாட்டு
tamil.samayam.com : சமீபகாலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பாஜக நிர்வாகி எஸ்.வி. சேகர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தன்னை பிராமணர்களின் விரோதி என எஸ்.வி. சேகர் கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதி என எஸ்.வி. சேகர் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் கொஞ்சம் திமிரு பிடித்தவன்.. இப்படித்தான் இருப்பேன்; என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது" என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக பாஜகவில் சமீபகாலமாக பல கோஷ்டிகள் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மாலைமலர் : சென்னை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா்.
அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், கோகுல்ராஜ் இறப்பு விவகாரம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் விசாரணைக்கு பின்பு, இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராகுல் காந்தி வாஷிங்டனில் L 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும்
மாலைமலர் : ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
முதலில் சான்பிரான்சிஸ்கோ சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வாஷிங்டன்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரின் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
இந்நிலையில், வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
வியாழன், 1 ஜூன், 2023
ஒன்றிய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
தினத்தந்தி : மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் எதிர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
சென்னை,
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய பிறகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லி மாநில மக்களின் நலனுக்காக திமுக அரசு தோள் கொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.
சென்னையில் CM ஸ்டாலின் CM அர்விந்த் கெஜ்ரிவால் சந்திப்பு .. ஒன்றிய அரசுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சி
தினத்தந்தி : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னையில் சந்தித்து பேசுகிறார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோருகிறார்.
சென்னை,
தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே அதிகாரப்பகிர்வு, ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இது பல்வேறு சம்பவங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது.
அமெரிக்க என் ஆர் ஐக்கள் அதிர்ச்சி! பிறப்புரிமை மூலம் குடியுரிமை ரத்து.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிப்பதில் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அந்நாட்டின் பொருளாதாரம் வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கும் வேளையில்,
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கான அதிரடிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் போட்டியிடும் வேளையில், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் உட்பட சில இந்திய அமெரிக்கர்களும் போட்டிப்போட உள்ளனர்.
குடியரசு கட்சி அதன் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் Donald Trump 2024 ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாக கிடைக்கும் குடியுரிமையை ரத்து செய்ய முற்படுவேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
புதன், 31 மே, 2023
பாம்புபிடி வீரர் நரேஷ் ஸ்கூட்டருக்குள் வைத்த நாக பாம்பு தீண்டி பலி. bredcrumb ராஜநாகம்.. மலைப்பாம்புகளை மீட்ட
tamil.oneindia.com - Halley Karthik : பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் விஷ பாம்பு கடித்ததில், பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் மனிதர்கள் பரிணாமம் அடைவதற்கு முன்னரே பாம்புகள் தோன்றிவிட்டன. அது தோன்றிய காலம் முதல் பாம்பு-மனிதன் மோதல்கள் தவிர்க்க இயலாததாக நீடித்து வருகிறது.
பாம்பு எல்லா காலநிலைக்கும், எல்லா இடத்திலும் வாழும் தன்மையை பெற்றிருப்பதால் விவசாய நிலங்கள் தொடங்கி வீடுகள் வரை இந்த மோதல்கள் நிகழ்ந்துவிடுகிறது.
இருப்பினும் மனிதன் இயற்கையை மெல்ல புரிந்துக்கொள்ள தொடங்கிய பின்னர் பாம்புகள் குறித்தும் சரியான புரிதலை வளர்த்துக்கொண்டான்.
இறந்த மூதாதையர்களை நாம் சந்திக்க முடியுமா? - ஐன்ஸ்டீனின் குவாண்டம் மெக்கானிக்ஸ் சொல்வது என்ன?
![]() |
bbc.com - டாலியா வென்ச்சுரா : சபின் ஹோசன்ஃபெல்டர் ஓர் இளைஞருடன் டாக்ஸியில் இருக்கும் போது தான் ஓர் இயற்பியலாளர் என்று அறிமுகப்படுத்தியதும் அந்த இளைஞர் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
"குவாண்டம் மெக்கானிக்ஸ் காரணமாக என் பாட்டி இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு மதகுரு என்னிடம் சொன்னார். அது உண்மையா?" என்பதே அந்தக் கேள்வி.
இது மாதிரியான கேள்விகளைக் கேட்க அவர் பொருத்தமானவர்தான்.
ஏனெனில், ஜெர்மனியின் மியூனிக் பல்கலைக்கழக கணித தத்துவ மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானியான சபின் ஹோசன்ஃபெல்டர், இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதில் நேரத்தை செலவிடுபவர்.
7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை- கலெக்டர் விளக்கம்
மாலைமலர் ; தருமபுரி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தடகள வீராங்கனை என தெரியாமல் வருமான வரித்துறை பெண் அதிகாரி மீது கை வைத்த தி.மு.க.,வினர்
![]() |
dinamalar.com : சென்னை: கரூரில், அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் வீடு முன், அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி, தடகள வீராங்கனை என்பதும், பல போட்டிகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றவர் என தற்போது தெரியவந்துள்ளது.
நாட்டிற்காக பதக்கங்களை வென்றவர் குறித்து அறியாமல் தாக்குதல், நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
செவ்வாய், 30 மே, 2023
சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் : தமிழ்நாட்டு மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?
அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்தில், பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்களின் கிராமத்தை அடைந்த அவர்கள், தங்கள் குழந்தையின் இறுதிசடங்கை செய்து முடித்தனர்.
அந்த குழந்தையின் பெயர் தனுஷ்கா. வயது 18 மாதங்கள்! ஊர் - வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அத்திமரத்துக்கொல்லை கிராமம், தமிழ்நாடு.
வேலூர் அல்லேரி மலைப்பகுதி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மலைகிராம பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள்.
ப.சிதம்பரம் :ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ்: இந்திய பணத்தின் மீதான நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது
கொடுமை என்னவென்றால் அரசு தனது தவறுகளை சரிசெய்து அனைத்து மக்களுக்குமான ஆட்சியை செய்ய முயற்சி எடுக்கவில்லை.
திங்கள், 29 மே, 2023
40சதவீத கமிஷனால் கதறும் கான்ட்ராக்டர்கள்!
![]() |
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி கூட்டத்தை, தொடர்ந்து நடத்தாம ரத்து பண்ணிட்டே போறா... கடந்த, ௨௫ம் தேதி கூட்டம் நடத்தி, 140 தீர்மானங்களை நிறைவேற்ற இருந்தா ஓய்...
''ஆனா, கவுன்சிலரா இருக்கற, 'மாஜி'யின் மகன் முட்டுக்கட்டையால கூட்டத்தை ரத்து பண்ணிட்டா... கூட்டம் நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, அடிப்படை வசதிகளுக்கான பணிகளை துவங்க இருந்தா ஓய்...
''ஆனாலும், 'கட்டிங்' பேரம் படியாம போனதால, 'மாஜி'யின் மகன் கூட்டத்தை நடத்த விடாம தடுத்துட்டார்... இத்தனைக்கும், இவரது அடாவடியால தான், அவரது பதவி, தந்தை பதவிகளை சமீபத்துல பறிச்சிருக்கா... அப்புறமும் அடங்க மாட்டேங்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு
ஞாயிறு, 28 மே, 2023
Sundar Pichai: கஷ்டப்பட்டு கட்டினதுபா: நடிகருக்கு வீட்டை விற்றபோது அழுத கூகுள் சிஇஓ சந்தர் பிச்சையின் அப்பா
அது குறித்து மணிகண்டன் கூறியதாவது, சென்னையில் வீடு வாங்க வேண்டும் என தேடிக் கொண்டிருந்தேன். அந்த வீடி வழியாக பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் அது சுந்தர் பிச்சையின் வீடு என எனக்கு தெரியாது.
3 அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த 3 கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துவக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.
3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் இந்த கல்லூரிகளில் மருத்துவ இருக்கைகளை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சனி, 27 மே, 2023
கர்நாடக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - LIST
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதுவரை அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கப்படவில்லை. மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 10 பேர் அமைச்சரானதால் மீதமுள்ள 24 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருப்பவர்களின் இறுதிப்பட்டியல் தயாரானது. அவர்கள் இன்று காலை 11:45 மணியளவில் ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக பரமேஸ்வராவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மதுபங்காரப்பாவும், தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ள
உதயநிதி அறக்கட்டளை வங்கிக்கணக்கு முடக்கம்!
இந்நிலையில், உதயநிதி அறக்கட்டளை வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்கியிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட ட்விட்டர் பதில், “ 25/5/2023 வரை
தமிழ்நாடு முழுவதும் ரூ. 36.3 கோடி மதிப்பிலான பல்வேறு அசையா சொத்துகளை
அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கூடுதலாக தற்போது உதயநிதி ஸ்டாலின்
அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.
கல்லல் குழும வழக்கு விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”
என்று தெரிவித்துள்ளது.
பிரியா
நேபாளத்தை ஆள்வது கம்யூனிஸ்ட்களா அல்லது பிராமணர்களா?
![]() |
ககாகோ சுலோவுக்கு வெளியே மெனு பலகை போடப்பட்டுள்ளது.
இந்த மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள உணவு அல்லது தாலிகளின் (முழு சாப்பாடு) பெயர்கள் மிகவும் சுவாரசியமானவை.
மெனுவில் முதல் எண்ணில் பண்டிட் உணவு, இரண்டாவது எண்ணில் ஜனநாயக உணவு, மூன்றாவது எண்ணில் குடியரசு உணவு மற்றும் நான்காவது எண்ணில் ஒருமித்த கருத்து உணவு என்றும் எழுதப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் - சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு
அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில் 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளி, 26 மே, 2023
ஐ.டி. ரெய்டு: அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!
![]() |
மின்னம்பலம் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்டு காரை சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று(மே 26) காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அணையில் விழுந்த செல்போன் - 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக வெளியேற்றிய அதிகாரி.. சத்தீஸ்கர் மாநிலம்
மாலை மலர் : ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.
சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுக்க அவர் முயசி மேற்கொண்டார். அணையில் இறங்கி செல்போனை தேடும்படி உத்தரவிட்டார். ஆனாலும் செல்போன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி வந்தார். கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை வெளியேற்றினார். இறுதியில் செல்போன் கிடைத்தது. ஆனாலும் அது வேலை செய்யவில்லை.