நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
ஞாயிறு, 28 ஜூன், 2026
கிரிக்கெட் மாணவிகளை வன்புணர்ந்த கேரளா பயிற்சியாளருக்கு 99 ஆண்டுகள் சிறை
வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த மனு, கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு, பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பொலிஸார் அவர் மீது 6 போக்சோ (POCSO) வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.
சனி, 27 ஜூன், 2026
ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் அமெரிக்க தம்பதி கடத்தலும்
![]() |
ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்!
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன்
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது
திரு கே பாக்யராஜ் காலமானார் - தமிழ் திரையுலகின் இறுதி Feel good moive maker பீல் குட் மூவியே மேக்கர்
ராதா மனோகர் : திரு கே பாக்யராஜ்தான் தமிழ் திரையுலகின் இறுதி Feel good movie maker!
இவரை திரைக்கதை மன்னன் என்று கூறுகிறார்கள்
அது ஓரளவு சரிதான்
ஆனால் அதைவிட இவரை எனக்கு பிடித்திருப்பது இவரின் feel good movie பீல் குட் மூவிகளுக்காகத்தான்
எம்ஜியார் படங்களும் இந்த வகையில் ஓரளவு வரும்
சமூக நியதிகளுக்குள் கொஞ்சம் கட்டுப்பட்டுதான் எம்ஜியார் படங்களின் பீல் குட் தன்மை இருக்கும்
அந்த நியதிகளை உடைத்து எறிந்ததில் பாக்யராஜின் பங்கு அதிகம்தான்
இவரின் படங்களில் இடம் பெற்ற பல சிறு சிறு காட்சிகள்
பல சமூக அவலங்களை மிக எளிதாக எள்ளிநகை ஆடியிருக்கிறது
உதாரணமாக தூறல் நின்று போச்சு படத்தில் பெண் பார்க்க வரும் காட்சியில் சுலோக்சனா பயந்து பயந்து நடுங்கும் போது பாக்யராஜ்
ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இது பயத்தில டீயை கீயை கொட்டிடப்போகுது என்று கூறிக்கொண்டே அவரின் தட்டை வாங்கி தானே எல்லோருக்கும் கொடுப்பார்
வெங்கட நாராயணா நியமனத்துக்கு ஆ.ராசா கடும் விமர்சனம்!- வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) :
minnambalam.com - Kavi : தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான இந்த பதவியை ஒரு பட நிறுவனத்தின் தயாரிப்பாளருக்கு எப்படி கொடுக்க முடியும், முதல்வர் விஜய்க்கு தெரிந்தவர் என்பதால் கொடுக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெள்ளி, 26 ஜூன், 2026
கரூர் 41 கொலைகள் - ஜனநாயகன் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதியாக நியமனம்!
மின்னம்பலம் - Kavi : தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமைச்சருக்கு இணையான பதவியாகும்.
ஆளுநரின் உத்தரவுப்படி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ”புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கான ‘சிறப்புப் பிரதிநிதி’ என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
எ.வ.வேலு பேட்டி : ”என் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை”
மின்னம்பலம் - Kavi : திமுகவின் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூன் 25) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் சோதனை நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
”திமுக- அதிமுக” திருமணம்! ஸ்டாலின் நடத்தி வாய்த்த தங்கமணி - மதிவாணன் வீட்டு திருமணம்
மின்னம்பலம் - Mathi : திருவாரூரில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin), முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் இல்ல திருமணத்தை ஜூன் 25-ந் தேதி நடத்தி வைத்தார்.
உ.மதிவாணனின் இளைய மகன் கதிரவன்- மெளனிகா ஆகியோரது திருமணம் திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசிய தகவல் பகிரப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் இளம்தவில் வித்துவான் பிரசாந்த் சச்சின் தற்கொலை
இலக்கியா : இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த கலைஞர் புதன்கிழமை (24) புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.
அதன்பின்னர் புதன்கிழமை (24) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
வியாழன், 25 ஜூன், 2026
ரஷிய சீன புரட்சிகளின் காட்டுமிராண்டித்தனம்! கொலைவெறியாட்டம் தவிர வேறில்லை
![]() |
Chandru R : ரசிய சீனபுரட்சி தோல்வியும் உண்மையும் பதிவு 4
1. கட்டாய கூட்டுப்பண்ணையின் பின்னணி (1928)லெனின் கொண்டு வந்த 'புதிய பொருளாதாரக் கொள்கை'
(NEP)-க்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின், 1928-ல் தனது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன் முக்கிய நோக்கம்:தனிநபர் விவசாய நிலங்களை ஒன்றிணைத்து 'கோல்கோஸ்' (Kolkhoz - கூட்டுப்பண்ணைகள்) மற்றும் 'சோவ்கோஸ்' (Sovkhoz - அரசு பண்ணைகள்) ஆக மாற்றுவது.தானிய உற்பத்தியை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதை ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் நகரங்களில் கனரகத் தொழில்துறையை (Industrialization) வளர்ப்பது
செந்தில் பாலாஜி : மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்!
hindutamil.in - தமிழினி : சென்னை: தவெக அரசு வெளியிட்டுள்ள மின்துறை வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார். மேலும், ‘தவெக அரசு பல தகவல்களை மறைத்து, அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதியை, மின்வாரியத்துக்கு வழங்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக மின்வாரியம் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கும். சீரான மின்சாரத்துக்கு வித்திட்டவர் ஸ்டாலின்.
இவனை ஆதரிக்கும் பெண்களையும் ஆண்களையும் தப்பி தவறியும் நம்பி விடாதீர்கள்!
![]() |
![]() |
ராதா மனோகர் : சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நேர்மையற்ற மனிதன்!
41 அப்பாவிகளின் உயிரிழப்புக்கு காரணமானவன்
மனைவி குழந்தைகளை துரத்தி விட்டவன்
மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல்,
கூடவே வேறு பல பெண்களோடு தொடர்புகளை
இன்று வரை தொடர்பவன்
இவனின் குடும்ப ஒழுக்கம் பற்றி கேட்டால்,
ஒருவரின் சொந்த வாழ்க்கையை நாம் விமர்சிக்க கூடாது என்று வகுப்பு எடுக்கிறார்கள்
என் ரசிகர்களிடமே பிளாக் டிக்கெட் வித்து சம்பாதித்தவன் என்று மேடையில் பெருமையாக வேறு கூறுகிறான்
ஒழுக்கமோ நேர்மையோ குடும்ப பாசமோ கொஞ்சம் கூட இல்லாத ஒருவனை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன சொல்வது ?
இவனின் வளர்ந்த பிள்ளைகளின் மனோநிலையை கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தானா?
போக்ஸோ வழக்கில் சிக்கிய அமைச்சர் விஸ்வநாதன்.. மாணவிகளின் காலில் கை! உளவுத்துறை 2 வீடியோ ஆதாரம்! கிரிஸ் சோடங்கர் ஆக்ஷன்
tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சூழலில், ஒரு புது சர்ச்சை குபீரென கிளம்பி டெல்லி மேலிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிராக, அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்தே புகார்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளனவாம்.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
மு க ஸ்டாலின் விரைவில் சட்டமன்றத்துக்குள் வருவார் : முதல்வர் விஜய்க்கு கே.என்.நேரு பதில்
மின்னம்பலம் - Kavi ;விரைவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் வருவார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய், ஆளுநர் உரைக்கு பதிலுரை ஆற்றினார். அப்போது, ’உங்க அப்பாவை காணம்” என கூறி குட்டி ஸ்டோரி ஒன்று சொன்னார். இது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்தது.
அதோடு 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர் காணாமல் போய்விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புதன், 24 ஜூன், 2026
41 deaths கொலைகாரனை (vijay) கைது செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலின்
![]() |
Rebel Ravi : திமுக தோல்விக்கு விதை போட்ட நிகழ்வு.
அரசு அரசாகச் செயல் பட வேண்டும்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் தூக்கி உள்ளே வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, எந்தத் தலைவரும் அவர் கட்சித் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று மகாத்மா போல் பேசியது முதல் தவறு.
நள்ளிரவில் கரூர் போனது, செ பா போனது, அன்பில் அழுதது.. இதெல்லாம் அடுத்தடுத்த தவறுகள். தவெக நிர்வாகி பத்து பேரை உடனே கைது செய்து,
![]() |
அந்த நிகழ்வை ஒரு கட்சியின் அலட்சியப் போக்காய்க் கருதி.. கருவிலேயே அழித்திருக்க வேண்டும்.
கைது செய்தால் தேர்தல் வெற்றி பாதிக்கும் ஆட்சி போய் விடும் என் அஞ்சிய ஸ்டாலின் அவர்களே…இப்ப மட்டும் என்ன வாழுது?
பில்லக்கா பையன பெரியாளாக்கி அவனிடமே தோற்றீரே இது எவ்வளவு அசிங்கம்?
Devamathi Venkatesh
அவர் இயல்பு அது தன் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்ட போது காட்டிய கரார் தனத்தை எதிரி கட்சி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்ட தற்குறி குடிகார ஜோம்பிஸ் தலைவன் விர்ச்சுவல் வாரியார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் தான் நமக்கு இந்த நிலைமை
கட்சிக்காரர்களுக்கு பவர் இல்லை என்றால் கட்சிக்கு எப்படி பவர் இருக்கும் திமுகவின் வின் தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டது அதிகம் .நம் கூட்டணியில் இருந்த கட்டப் பஞ்சாயத்து கட்சிகளூக்கு இருந்த சுதந்திரம் மரியாதை அதிமுக பாஜக வுக்கு இருந்த மரியாதை கூட அரசு அலுவலகங்கள் காவல் நிலையத்தில் நம் கட்சிக்காரர்களுக்கு இல்லை. இந்த வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்
செவ்வாய், 23 ஜூன், 2026
த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்
மின்னம்பலம் கவி : முதல்வர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய் முதல்வரான பிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேசமயம் முதல்வரின் தோழியான த்ரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக விஜய்யுடன் எடுத்த புகைப்படத்துடன் எதாவது ஒரு கேப்ஷன் போட்டு வாழ்த்து பதிவு வெளியிடுவார்.
ஆனால் இந்த முறை ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். என்ன சொல்ல போகிறாரோ என்ற பதற்றமும் அவரது கட்சியினரிடம் இருந்தது.
டி.ஆர்.பி.ராஜா : “தமிழகத்தின் முதலீடுகளை சீர்குலைக்கிறது ரீல்ஸ் கோஷ்டி அரசு”
hindutamil.in - வெற்றி மயிலோன் : சென்னை: “தமிழகத்தின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என தமிழக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம்.
தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி வீதி விபத்துக்கள்! தொடர் உயிரிழப்புக்கள்
Murukaiya Thamilselvan : கிளிநொச்சி வீதிகளில் மலியும் மரணங்கள்: சமூக வலைத்தளப் போராளிகளாகவே இருந்துவிடப் போகின்றோமா?
மற்றுமொரு வீதி விபத்து, மற்றும் ஒரு பெறுமதிமிக்க உயிர் பலி! கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த கல்வியளாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான பெருமாள் கணேசன் அவர்களை நாம் இழந்து நிற்கின்றோம். அதுவும் எங்கே?
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு நேர் முன்பாக உள்ள பாதசாரி கடவையில்! வீதியைக் கடக்க முயன்றவரை, அதிவேகமாக வந்த ஆடம்பர உந்துருளி மோதி இழுத்துச் சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரது மூச்சு அடங்கியிருக்கிறது.
அம்மோனியா கசிவு.. பலி எண்ணிக்கை 8.. சிகிச்சையில் 70 பேர்- முழு விவரம்!
மின்னம்பலம் - Mathi : திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு (Ammonia Gas Leak) விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட விரிவான அறிக்கை:
கடந்த ஜூன் 21-ம் தேதி மாலை, வழக்கமான தொழிற்சாலை செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அங்குள்ள குளிரூட்டல் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வெளியேறிய நச்சு வாயு தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியதால், பணியில் இருந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
துரைமுருகன் பிடிவாதம் கோமாவில் இருந்தாலும் நான்தான் பொதுச்செயலாளர் ..
tamil.oneindia.com/n :ம்ஹும் முடியவே முடியாது.. விட்டுக் கொடுக்காத துரைமுருகன்! மாற்றி யோசித்த ஸ்டாலின்! திகுதிகு திமுக!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணமாக அவர் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சில தகவல் வெளியான நிலையில், "பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்ற உறுதியான நிலைப்பாட்டில் துரைமுருகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கள், 22 ஜூன், 2026
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் - திசை திருப்பும் CPIM சண்முகமும் அன்புமணியும்
புகச்சோவ் புகச்சோவ் : மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் கொடுத்த திருத்தத்தை ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதை போல சித்தரித்து CPIM சண்முகம் அவர்களும், அன்புமணியும் அறிக்கையும், மேடையும் போட்டு பேசியுள்ளனர்.
இவர்கள் பரப்பியதோடு ஒரு விவசாய சங்கத்தையும் உதயநிதி அவர்கள் பெரிய குற்றத்தை செய்ததை போல அறிக்கை விட வைத்துள்ளனர்.
இதை உடனடியாக expose செய்ய வேண்டும் என்று 4 மணி நேரம் ஆய்வு செய்தேன்.
பலரிடம் பேசி குறிப்புகளை எடுத்தேன். அதில் உதயநிதி அவர்கள் சொன்ன திருத்தம் தான் சரி.
அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிய வந்தது. அதை விரிவாக எழுதியுள்ளேன். அவசியம் படியுங்கள் பரப்புங்கள்.
தோழர் சண்முகம் exposed
காருக்குள் சடலம்: திடுக்கிடும் பல தகவல்கள் அம்பலம்
ilakkiyainfo.com : கண்டி தெல்தெனியவில் காருக்குள் இருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
உயிரிழந்த பெண் மருத்துவருடன் வாழ்ந்து வந்த நபர், அவரது சடலத்தைக் காரின் உள்ளேயே வைத்துக்கொண்டு, எவ்விதப் பதற்றமும் இன்றித் தனது வீட்டிற்குச் சென்றுள்ள அதிர்ச்சித் தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
திமுக தோல்விக்கு அழகிரியும் ஒரு காரணமா? ஒரு திமுக தொண்டனின் ஆதங்கம்
Kalar Kasi Viswanathan : 2006 இல் இருந்து 2011 வரை திமுக ஆளுங்கட்சி கலைஞர் முதலமைச்சர்.
2011 மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.
கலைஞர் அவர்களுக்கும் வயது ஆகிவிட்டது.
இந்த நேரத்தில் மதுரையில், 2014 ல், அண்ணன் அழகிரியார் அவர்களை ஏதோ ஒரு பொய் காரணத்திற்கு கட்சியை விட்டு நீக்கினார்கள்.
2016 தேர்தலில் திமுக மீண்டும் தோல்வி..
2017ல் கலைஞர் மறைந்தார்.
அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி.
2021 இல் திமுக ஆட்சி மலர்ந்தது
ஞாயிறு, 21 ஜூன், 2026
புலிகளும் வைகோவும் ஒருவர் முதுகில் ஒருவர் குத்திய துரோக வரலாறு
ராதா மனோகர் : புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை!
வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை..
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்.
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி.
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார்.
அது ஓரளவு பயனளித்தது ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை. அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு.. பாவம்.
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்.
விஸ்வானந்ததேவன்- பாசிஸ புலிகளால் கடலில் வைத்து கொல்லப்பட்ட நேர்மையான இடதுசாரி விடுதலை போராளி!
![]() |
நல்லையா தயாபரன் : "வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்"
பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986 திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு, முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன்.









