![]() |
Rks Arulmolithevan ; இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண் வசந்தி முருகேசு.
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார் தமிழ் பெண் வசந்தி முருகேசு.
Airport & Aviation Services (Sri Lanka) நிறுவனத்தின் பாதுகாப்பு மார்ஷல் (Security Marshal) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள வசந்தி முருகேசு, இந்தப் பொறுப்பை வகிக்கும் இலங்கையின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புமிக்கதும், அதிக கவனம் மற்றும் தொழில்முறை திறன் தேவைப்படுவதுமான பணிகளாக கருதப்படுகின்றன.








