தினமலர் : கோவை: கோவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் சுற்றுப்பயண பட்டியலில், அந்தக் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் விடுபட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் காங்.கட்சிக்கு கோவையில் கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சூர்யபிரகாஷ், சிங்காநல்லூர் தொகுதிக்கு ஸ்ரீநிதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. கட்சிக்கு உழைத்தவர்களை விடுத்து, புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் வழங்கியதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வியாழன், 9 ஏப்ரல், 2026
காங்., வேட்பாளர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய மாட்டாரா சிதம்பரம்?
பொற்கொடியை வைத்து திருமா ஆடிய நாடகம் -விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி கேள்வி குறி
![]() |
Live Tamil News - : பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி
தமிழக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் அதன் முக்கிய கூட்டணி கட்சியான விசிகவிற்கும் இடையே புகைச்சல்கள் ஆரம்பமாகியுள்ளன.
மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்குத் தகவல்களைத் திரட்டுவது போல,
மாநில உளவுத்துறையும் கள நிலவரங்களை உடனுக்குடன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தாக்கல் செய்து வருகிறது.
புதன், 8 ஏப்ரல், 2026
பதுளை 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பௌசர் விபத்து: வாளி வாளியாக அள்ளிச் சென்ற மக்கள்
தமிழ் மிரர் : சுமார் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இச்சம்பவம் பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான பௌசரிலிருந்து பெருமளவில் எரிபொருள் வெளியேறிய நிலையில், அருகிலிருந்த பொதுமக்கள் வாளி, கேன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எரிபொருளை அள்ளிச் சென்றுள்ளனர்.
20 மதவெறி இயக்கங்களை வளர்த்துவிட்ட ஈரான் எதிர்காலத்தில் இந்தியாவிலும் அதுபோன்ற இயக்கங்களை வளர்த்து விடும்?
![]() |
பிரம்ம ரிஷியார் : தன் ஒரு நாள் கெடு முடிவடைந்த நிலையில் மிக உக்கிரமான தாக்குதலை அமெரிக்கா தொடுத்ததை அடுத்து,
ஈரான் இப்போதைக்கு ஹோர்ம்ஸ் நீரிணையினை நிபந்தனையின்றி கப்பல் போக்குவரத்துக்கு திறப்பதாக அறிவித்துள்ளது ,
இதை அடுத்து 15 நாட்களுக்கு டிரம்பர் போரை நிறுத்தியுள்ளார்
இது ஈரானின் சரணாகதியினை காட்டுகின்றது, 1980 முதல் 1988 வரை இதே போன்றதொரு போரை அரபுலகம் சந்தித்தது அப்போது ஈராக்கில் சதாமும் ஈரானில் பெரிய கொமேனியும் இருந்தார்கள் சண்டை உள்நாட்டில் பெரிதாக இல்லை மாறாக ஈராக்கிய எண்ணெய் கப்பல்களை ஹோர்ம்ஸ் பக்கம் அனுமதிக்கமாட்டோம் என ஈரான் கிளம்ப ஈராக் அதை எதிர்த்து தாக்க இந்த நீரிணைக்கு எதிராக வந்த முதல் சண்டை அதுதான்
தமிழக அமைச்சர்கள் சொத்துக்கணக்கு பட்டியல்
தினமலர் : தமிழக அமைச்சர்களின் சொத்துக்கணக்கு விவரம், அவர்கள் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திர தகவல் அடிப்படையில் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 111 கோடி ரூபாய் சொத்துக்களுடன் அமைச்சர் காந்தி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் துரைமுருகன், மூன்றாமிடத்தில் டி.ஆர்.பி.ராஜா உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில், வரும் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் சொத்து விவரங்கள், தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர்களது சொத்து, சார்ந்தோர் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி கணக்கில் ரூ.111 கோடி
வேட்பு மனுவுடன் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ள சொத்துக்கணக்கு விவரம்
2026 சட்டசபை தேர்தல்.மொத்தமாக அள்ளும் திமுக- மின்னம்பலம் மீடியாவின் மெகா சர்வே ரிசல்ட்
minnambalam.com - Mathi : தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் எப்படி இருக்கும்? தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் நமது மின்னம்பலம் மீடியா நடத்திய மெகா சர்வே முடிவுகள் மின்னம்பலம் யூ டியூப் சேனலில் இன்று முதல் வெளியாக இருக்கிறது.
மார்ச் 20 முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் என
234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப
நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை நீங்கள் மின்னம்பலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
தென் சென்னை சர்வே முடிவுகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…
செவ்வாய், 7 ஏப்ரல், 2026
திமுகவுக்கு எதிராக ”திருமா” திருவிளையாடல்..திருவிக நகரில்! கூட்டணி’ சேர்ந்த ஆதவ் அர்ஜூனா, Kavi
minnambalam.com- Kavi : வைஃபை ஆன் செய்ததும், “எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. இமயமலைக்கு போறீரா?
நாம எதுக்கு போகப் போறோம்.. எஃப்.எம். ல் பாட்டு கேட்க சுகமா இருந்துச்சு.. அதான் ஹம்மிங்.. நான் சொல்ல வந்த சங்கதியை முதல்ல சொல்லிடுறேன்..
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அதிமுக வேட்பாளரா நிற்கிறாங்க.. திமுக வேட்பாளரா கே.எஸ்.ரவிச்சந்திரன் நிற்கிறாரு..
திருவிக நகர் தொகுதியில திடீர்னு திமுக கூட்டணியில இருக்கிற விசிக நிர்வாகிகள், பொற்கொடிக்கு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க..
டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது.
KR Athiyaman : அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு பெரும் தவறுகளையும், மீறல்களையும், குற்றங்களையும் புரிந்தவர், புரிந்து வருபவர் தான். மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் வெனிசுலா விவகாரத்தில் மிக உருப்படியான காரியத்தை செய்திருக்கிறார் என்பது தற்போது தெளிவாகிறது.
வெனிசுலா அதிபர் மடேரோவை நள்ளிரவில் கடத்தி வந்து, அமெரிக்காவில் வீட்டுச் சிறையில் வைத்துள்ளார். இது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு முரணானது, அநீதியானது என்பதெல்லாம் உண்மை தான்.
சாத்தான் குளம் லாக்கப் கொலை- முழு விபரம்
![]() |
நிலவன் மாணிக்கம் : சாத்தான் குளம் லாக்கப் கொலை!
எடபாடுவின் பித்தலாட்டம் அம்பலம்!
சாத்தான்குளம் 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கிய சாட்சியமே ஒரு பெண்! மனசாட்சியுள்ள ஒரு பெண்! அதுவும், சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டு மனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு பெண் தலைமைக் காவலர் ரேவதி இந்த விவகாரம் வலுவாக வெளிவந்துள்ளது!.
இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய தலைமைக் காவலர் ரேவதி வருகிறார்... "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த அனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்... நான் இரண்டு பெண் குழந்தைகளின் தாய்... என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம் அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதம் அளித்ததும், அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார்...
TVK BJP திரிஷா அமித்ஷா டெல்லியில் பேச்சு வார்த்தை அம்பலமாகிய ரகசிய டீல்
நிலவன் மாணிக்கம் : TVKவின் முதல்வர் வேட்பாளர் திரிஷாவின் மும்பை டீல் வெட்ட வெளிச்சமானது..
விஜய்யுடன் மோடி போட்ட கூட்டணி ஒப்பந்தம்!*
* மும்பையில் விஜய், த்ரிஷாவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதி செய்திருக்கிறார் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும், மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே.*
*▪️. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா. மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார். அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.*
காட்டுமன்னார்கோவில் ஜோதிமணி : நான் காங்கிரஸ்தான். விசிக வேட்பாளராக அறிவித்த திருமாவுக்கு நன்றி
minnambalam - Mathi : காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி, தாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; தமக்கு வாய்ப்பு கொடுத்த திருமாவளவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் தாமே வேட்பாளராக போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
மக்களவை எம்.பி.யாக உள்ள திருமாவளவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜி : என் பெயரில் 100 பேர் வந்தாலும் பரவாயில்லை
dinamalar.com : தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க., சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தான் எங்கள் இலக்கு. கோவைக்கு கடந்த 5 வருடங்களில் அரசு நிறைவேற்றிய திட்டங்களையும், செய்ய போகும் திட்டங்களையும் வாக்காளர்களிடம் சொல்லி வாக்கு கேட்போம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை பட்டியலிடுகிறோம்.
அ.தி.மு.க., ஆட்சியில் அப்படி செய்திருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல சொல்லுங்கள்.
திங்கள், 6 ஏப்ரல், 2026
சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ் (தந்தை, மகன்) கொலை வழக்கு! 9 போலீசாருக்கும் மரண தண்டனை
தினமலர் :மதுரை: சாத்தான்குளத்தில் போலீஸ் ஸ்டேசனில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2026
கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் தில்லாலங்கடி
கூட்டணி தொகுதி பகிர்வு பேச்சு வார்த்தையின் போது திருமாவளவன் எப்படி எப்படி எல்லாம் குளறுபடி செய்தார் என்பதை நடுநிலைமையோடு இவர் கூறுகிறார்
ஏற்கனவே உள்ள எம் எல் ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற உள்நோக்கத்தில் திமுக அந்த தொகுதியை தரவில்லை இந்த தொகுதியை தரவில்லை என்று செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்லை
மேலும் 28 தொகுதிகளை ஏற்கனவே பெற்றுவிட்ட காங்கிரசுகு மேலும் அடிஷனல் தொகுதியாக விசிகாவுக்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார் கோயில் தொகுதியை தன்னிச்சயாக தாரை வார்த்தார்
இவரது கட்சியில் இவர் நினைத்தபடி எல்லாம் நடக்க முடியும் என்றால் இவரது கட்சிக்கென்று ஜனநாயக அமைப்புக்கள் கிடையாதா?
கலைஞர் இறந்த அன்று நடந்தவைகள் - பத்திரிகையாளர் உமா மகேஸ்வரன் பார்வையில்
![]() |
Uma Pa Se : கலைஞர் இறந்த அன்று நான் பணியாற்றிய தொலைக்காட்சியில் அன்று முழுவதும் கலைஞர் கலைஞர் கலைஞர்.
அங்கு மட்டுமல்ல எங்கெங்கும் கலைஞரே நிறைந்திருந்தார்.
ராஜாஜி ஹாலில் கலைஞருக்கு சட்டப்போராட்டம் வெற்றியடைந்த செய்தி வந்த நொடி அங்கிருந்தேன்.
அந்த தருணத்தை அனுபவித்தவனுக்கு தான் ஒரு மகத்தான தலைவனுக்கு எப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்தார்கள் என்று தெரியும்.
பொதுவாய் கலைஞரை adore செய்து காலம் முழுவதும் வளர்ந்ததால் எனக்கு ஸ்டாலின் அதுகாறும் அவ்வளவாய் பிடிக்காது. சொல்லப்போனால் கலைஞரின் பெருமையில் கால்வாசி இல்லை. இவரை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும் என்று ஒரு எரிச்சல். (அது பற்றி பின்னர் வேறு பதிவில் )
விளவங்கோட்டில் பச்சை துரோகம்! அன்றைய சமஸ்தான காங்கிரஸ்தான் இன்றைய கேரள காங்கிரஸ்
![]() |
குமரிக் கிழவனார் : காங்கிரஸ் பேரியக்கம் மாபெரும் வரலாற்று பிழையை விளவங்கோட்டில் நிகழ்த்தியிருக்கிறது.......
வயனாட்டு மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் இஸ்லாமிய மதமேற்றவர்களுக்கும் சொந்தமான தொகுதியில் ராகுலை கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாமியர்களுக்கும் பூர்வகுடிகளுக்குமான பிரிதிநித்துவத்தை புடுங்கி பின்னர் அதில் பிரியங்காவை நிறுத்தி தொடர்ந்த இஸ்லாமியர் நீக்க அரசியலை செய்து கொண்டிருப்பது போல் இதோ தமிழ்நாட்டில் தமிழர் நீக்க அரசியலை செய்து கொண்டிருக்கிறது........
விளவங்கோட்டில் கை சின்னம் தொடர்ந்து வெற்றி பெற காரணம் தமிழர் மலையாள மொழி ஆதிக்கத்திர்க்கும் மலையாளிகளின் நில அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக கிளர்ந்து எழுந்து தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராட்ட களத்தை கண்டு அதை வென்றெடுத்ததுதான். குமரி தமிழர்கள் அன்று போராடியது திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் திருகொச்சி மாநில ஆரசுக்கு எதிராக என்றாலும் அன்று அவர்கள் களத்திவ் நேரடியாத எதிர்த்தது சம்ஸ்த்தான காங்கிரஸைதான்.
கேரள சட்டமன்ற தேர்தலில் "மும்முனைப்" போட்டி: வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ன?
bbc.com - சேவியர் செல்வக்குமார் : காலம் காலமாக இரு முனைப் போட்டியை மட்டுமே எதிர்கொண்டு வந்த கேரள மாநிலம், இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக வலுவான "மும்முனைப் போட்டியைச் சந்திக்கக் கூடும்" என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கேரளத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு அணிகளைத் தவிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தத் தேர்தலில் தீவிரமாக களமாடி வருகிறது.
சனி, 4 ஏப்ரல், 2026
ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்- புதுச்சேரியில் ஏப்.6-ல்
minnambalam.com -Mathi : புதுச்சேரியில் ஏப்ரல் 6-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் 14 இடங்களிலும் போட்டியிட முடிவு எட்டப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ததை திரும்பப் பெற மறுத்ததால் குழப்பம் நீடிக்கிறது.
வியாழன், 2 ஏப்ரல், 2026
RSS இல் கடந்த 100 ஆண்டுகளில் எந்த அறிவியல் வளர்ச்சியும் ஏற்படவில்லை
Sridhar Subramaniam : ஐஐடியில் ஒரு அறிவீனம்!
. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 250ஆவது நிகழ்ச்சி ஐஐடி மெட்ராஸில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆடிட்டர் எஸ் குருமூர்த்தி பேசி இருக்கிறார். அந்த உரையைக் கேட்டேன்.
'நியூட்டனின் அறிவியல் பார்வை' எழுத்தறிவற்ற பார்வை என்றுதான் ஆரம்பிக்கிறார். ஃபர்ஸ்ட் பாலே சிக்சர்! அடுத்ததாக ஐன்ஸ்டைனின் ரிலேடிவிடி தியரியை எடுத்துக் கொள்கிறார். அந்த ஃபார்முலாவில் ஐன்ஸ்டைன் ஒரு மாபெரும் தவறு செய்திருக்கிறார். காரணம், இந்தப் பிரபஞ்சத்தை ஐன்ஸ்டைன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, என்கிறார்.
புதன், 1 ஏப்ரல், 2026
காங். தேர்தல் குழு பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்
தினமலர் : புதுடில்லி: காங்கிரசின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியை அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்த உடனடியாக பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.
காங். வேட்பாளர் பட்டியல் எப்போது; ராகுல் வரணும் என்கிறார் செல்வப்பெருந்தகை
திமுக, அதிமுக, தவெக – லோக்பால் அமைப்பின் கருத்து கணிப்பு
minnambalam.com -Pandeeswari Gurusamy : தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என லோக்பால் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
திருமாவின் ஜாதிப்பாசம் - பொற்கொடிக்கு ஆதரவு
மதுரம் சந்திரசேகர் ; பொற்கொடிக்கு பிரதிநிதித்துவம் அளித்த அதிமுக அளித்துள்ளதால் அண்ணன் திருமாவளவன் அவருக்கு ஆதரவா இரட்டை இலைச்சின்னத்தில் வாக்கு கேட்பார் போல..
ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு பேசிவிட்டார் என்கிறீர்கள்..
பூவை மூர்த்தி பாஜகவுடன் கூட்டு.ரஞ்சித் சங்கிகளுடன் கைகோர்த்திருக்கிறார்..
இவர்களெல்லாம் அவர்களது சாதியவர்கள் பிரதிநிதித்துவம் பெற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிர் சித்தாந்தாந்தத்தை ஆதரிக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக அண்ணன் சனாதன எதிர்ப்புக்குரல் எழுப்புவதில்லை.
அதிமுக இவருக்கு எதிர் கூட்டணி..
திங்கள், 30 மார்ச், 2026
நடிகர் கருணாஸ் சிவகங்கை அதிருப்தியாளர்களை சமரசப்படுத்த முயற்சி!
hindutamil.in : சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிருப்தியாளர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் நடிகர் கருணாஸ் ஈடுபட்டுள்ளார்.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியை இந்த முறை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களது தலைமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
திமுகவில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் உள்ளிட்டோரும், காங்கிரஸில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன், மாநிலப் பொதுச்செயலாளர் சி.ஆர்.சுந்தர்ராஜன், மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம் உள்ளிட்டோரும் சீட் பெற முயற்சித்தனர்.
திருமாவளவன் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்; சீமான் கேள்வி
தினமலர் : காரைக்குடி: காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள திருமாவளவன் அதில் வெற்றி பெற்றால் சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் அளித்த பேட்டி;
சிதம்பரம் எம்பியாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் சட்டசபை வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறார்? அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என்பது எனக்கு தெரியாது. ஒருவர் இரு தொகுதிகளில் போட்டி போடுவதை நான் எதிர்த்தேன். வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த போது, கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்றார்.
திருமாவளவன் அமைச்சர் பதவிக்காக சட்டமன்ற தேர்தலில் போட்டி! பேராசை பெரும் வினையாகும்
மின்னம்பலம் -Mathi : அமைச்சர் பதவிக்காகவா சட்டசபை தேர்தலில் போட்டி? திருமா சொன்ன பதில் என்ன? முழுமையாக!
தமிழக சட்டசபை தேர்தலில், மக்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் தாம் போட்டியிடுவது அமைச்சர் பதவிக்காக அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று மார்ச் 30-ந் தேதி மாலை நடைபெற்றது.





