மின்னம்பலம் - Mathi : திமுக- காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் எனபாஜக சதிசெய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக – காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என பாஜகவினர் கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க. அவங்களோட ஒரே நோக்கம் ‘இந்தியா’ கூட்டணியைச் சிதைக்கிறதுதான்.
தமிழகத்துல காங்கிரஸைத் தனியா பிரிச்சுவிட்டு, தலித் மக்களோட வாக்குகளையும் சிறுபான்மையின மக்களோட வாக்குகளையும் பிரிச்சுப் பார்க்கணும்னு ஒரு பெரிய சதித்திட்டம் போட்டு வேலை செய்றாங்க. ஆனா, அவங்க பருப்பு இங்க வேகாது.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026
திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக சதி: செல்வப்பெருந்தகை அதிரடி
டெல்லியில் - நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று ராகுல் முடிவு செய்வார் - பின்னணி
![]() |
tamil.oneindia.com- ஷியாம் சுந்தர் : டெல்லியில் கிளைமேக்ஸ்.. நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று டிக் அடிக்கும் ராகுல்? பின்னணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
டெல்லி விரைந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சனி, 7 பிப்ரவரி, 2026
80, 90களில் பிறந்தவர்களை விட 1997-2012 களில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் IQ வில் குறைந்துள்ளனர்
மாலை மலர் : 80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட 1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் மற்றும் IQ குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் IQ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்று, IQ அளவுகள் குறையத் தொடங்கியுள்ளது.
திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
minnambalam.com - Kavi : விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், இளைஞரணியினரும் கலந்துகொண்டுள்ளனர் .
முதலில் துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்மை செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளார்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி,திருச்சி சிவா, அந்தியூர் ப செல்வராஜ், மு.பெ.சாமிநாதன், கனிமொழி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசை வழங்கினார்.
ஆட்சியில் பங்கு? : ஒரே கல்லில் 2 மாங்காய்'? காங்கிரஸ் தானாகவே போகும் .. காத்திருக்கும் திமுக?
![]() |
தமிழகத்தில் நம்மை வைத்துத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி, நமது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே என்று வருத்தப்படுகிறதாம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழகத்தைப் போல் புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால்,
5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒன்றாக சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2-வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.
அதிருப்தியில் தி.மு.க.
உலக அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
![]() |
Mukinthan Thurairajasingham : வரலாறு என்பது ஒரு சுழற்சி. ஒரு பேரரசு உச்சத்தைத் தொடும்போது, அதன் வீழ்ச்சிக்கான விதைகளும் அங்கேயே தூவப்படுகின்றன.
இன்று நாம் காண்பது ஒரு சகாப்தத்தின் முடிவு.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இரட்டை ஆதிக்கம் (Bipolar World) கொண்ட உலகாக உருவானது. சோவியத் ஒன்றியம் உடைந்ததுடன்,
அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கம் (Unipolar World) நீண்ட காலம் நிலவியது.
இன்று அந்த ஆதிக்கம் மெதுவாக சிதைந்து, பல மையங்களைக் கொண்ட புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது.
வரலாற்றில் எந்தவொரு பேரரசும் நிரந்தரமாக இருந்ததில்லை.
ரோமானியப் பேரரசு முதல் பிரிட்டிஷ் காலனித்துவம் வரை அனைத்தும் ஒரு கட்டத்தில் வீழ்ந்தே தீர வேண்டும் என்பது காலத்தின் விதி.
உலகம் இனி ஒரு நாட்டின் பிடியில் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான அமெரிக்காவின் 'ஒற்றை முனை' (Unipolar) அதிகாரம் சிதைந்து, அதிகாரம் பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. இதையே நாம் 'பல்முனை உலக ஒழுங்கு' என்கிறோம்.
பெரியார் இயக்கப் பெண்களை வலுப்படுத்தும் கட்டமைப்பு உள்ள ஒன்னும் இல்ல..இனி செஞ்சாத்தான் உண்டு
Loganayaki Lona : இதே போல முன்னாடி ஒரு கதை.
அதர்மம் மனோஜ் இப்ப யூட்யூபரா இருக்குறார்..
அப்ப அவர் தான் தபெதிக கோவை மாவட்ட நிர்வாகி.
இயக்கத்தில சேர்க்குறேன்னு வாட்சப் க்ரூப்ல சேர்த்துட்டு அதுல தான் மீட்டிங்..டிஸ்கசன் எல்லாம்
ஆனைமுத்து அய்யாவுக்கு இரங்கல் தீர்மானம் கேட்க சொல்லி அந்த குழுவில் கோரிக்கை கேட்டேன்
அதப் பகிர்ந்ததும்..வேகமா அனுப்பி தபெதிகவின் வேண்டுகோளுக்கிணங்கன்னு நியூஸ்லலாம் இரங்கல் தெரிவித்த சட்டமன்ற தீர்மானம் வந்தது.
ஒகே இயக்கமா கேட்டா செயல்பாடு நடக்கும்னு நம்பிட்டேன்.
எனக்கு ஆனைமுத்து அய்யாவை அவர் இறந்த பின்னாடி தான் அப்டி ஒருத்தர் இருந்ததே தெரியும். பெரியாரிய மார்க்சியஅப்டின்னு ஒருத்தரான்னு அப்புறம் தான் அவர் புத்தகம் படிச்சேன்.
சரி ஒகே.. கொள்கை உறவு , உணர்வு இருந்ததால் தான் நாங்க அந்த கோரிக்கைய கேட்டோம்
இங்க ப்ரபாகரன் பாலிடிக்ஸ் இணையத்துல வைரலா போய்ட்டு இருந்த டைம் அது..
வெள்ளி, 6 பிப்ரவரி, 2026
சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் ..படையெடுக்கும் தலைவர்கள் தொண்டர்கள்
tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில அரசியல் களம் பல்வேறு ட்விஸ்ட்களை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இன்று திடீரெனத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிமுக- பாஜகவின் என்டிஏ கூட்டணி, சில மாதங்களாகவே பல்வேறு கூட்டணிக் கட்சிகளையும் உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதற்கேற்ப அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
எகிறும் ஸ்டாலின்..குழப்பத்தில் ராகுல்… டென்ஷனில் விஜய்.. அப்செட்டாக்கும் பிரேமலதா
மின்னம்பலம் :சென்னையில கார்ல் மார்க்ஸ் சிலையை இன்னைக்கு சிஎம் திறந்து வெச்சாரு பார்த்தீரா? அதுல சிஎம் கூட லெப்ட் லீடர்ஸ், காங்கிரஸ், விசிக, மதிமுகன்னு கூட்டணி கட்சி ‘தலை’கள் எல்லாம் அணிவகுத்து நின்னாங்களே..
ஆமாய்யா.. அப்ப ‘நீர் சொன்ன ”ஸ்டாலின் கணக்கு” டீலிங் ஒர்க் அவுட் ஆகிடுச்சா?
அதான்யா சிக்கலே.. வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘திமுக கூட்டணியில’தான் காங்கிரஸ் இருக்குதுன்னு நம்புறாங்க.. ஆனா உள்ளே நடக்கிற சம்பவங்களோ வேற மாதிரியா இருக்கே..
என்னய்யா நடந்துகிட்டு இருக்கு?
சிஎம் எஸ்டாலின், ‘கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை அமைக்க குழு அமைப்போம்’ன்னு சொல்லி இருந்தாரு.. காங்கிரஸ் சோடங்கரும் கூட, ”2,3 நாட்களில் திமுக குழு அமைச்சுரும்.. பேச்சுவார்த்தை தொடங்கிடும்”னு சொல்லி இருந்தாரு..
ஆனா இன்னமும் திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்கலைங்கிறதை கவனித்தீரா? அதே மாதிரி காங்கிரஸ் வேணுகோபால் பிப்ரவரி 5-ந் தேதி வர்றதா இருந்ததும் கேன்சலாகிடுச்சு பார்த்தீரா?
தோழர் லோகநாயகி லோகன் : திவிகவிலிருந்து விடுதலை பெற்றேன்
![]() |
Loganayaki Lona : திவிகவிலிருந்து விடுதலை பெற்றேன்
2020 தேர்தலில் திமுக ஆதரவு நிலைப்பாடு திவிக தபெதிக மற்றும் பல முற்போக்கு இயக்கங்கள் இயக்கம் சாராத தோழர்களின் புற அழுத்த கலந்துரையாடல்களின் நீட்சியாக எடுத்தனர்..
அந்த புற அழுத்தத்துக்கு அடிப்படையாக தோழர் மதிமாறன் அவர்களின் உரைகள் இருந்தன.எந்த இயக்கமும் சாராத பலர்க்கு அந்த புற அழுத்தம் தந்ததில் அவர் பேச்சுக்கும்,விவாதங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
அதன் பின் அமைப்பு செயற்குழுக்கள் பேசி அமைப்பு அந்த நல்லதொரு. முடிவெடுத்திருக்கலாம்.அமைப்புக்குள் போய் தோழர் அந்த முடிவை எடுக்க வைத்ததாக எங்கும் எழுதப்படவில்லை.
புற அழுத்தமே இல்லாமல் அந்த முடிவு இயக்களுக்கு தானாகவே வந்தது என்பது பொய்.
அதுக்கு பின்னால் பல தனி பெரியாரிஸ்டுகள் உண்டு.நானே நேரடியான சாட்சி.அந்த தனி பெரியாரிஸ்டுகள் மதிமாறன் தோழர் பேச்சு மூலம் உள்ள வந்தவங்க தான் .அதுக்கு பிறகு அவங்க களத்தில் செயல்பாட்டில் விரிவாகியிருக்கலாம்.
வாய்ப்பிருந்த இணைய மீட்டிங்க் எல்லாவற்றிலும் முற்போக்கு இயக்கங்கள் அனைத்தின் மீதும் எதிர்ப்புகளை பதிவு செய்ததில் நானும் தான் பங்கெடுத்து இருந்தேன்.
அதில் புகழ்ச்சியும் இல்லை.இகழ்ச்சியும் இல்லை.தனி மனித ஆதாயமும் இல்லை.
வியாழன், 5 பிப்ரவரி, 2026
அஜித் உயிரிழப்பு -பொய்ப் புகாரளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்: அஜித்குமார் தாயார்
![]() |
hindutamil.in - இ.ஜெகநாதன் : திருப்புவனம்: “என் மகன் மீது தவறாக திருட்டு புகார் கொடுத்த நிகிதாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” என போலீஸார் விசாரணையில் மரணமடைந்த மடப்புரம் காவலாளி அஜித்குமார் தாயார் மாலதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். அந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு ஜுன் 27-ம் தேதி சாமி கும்பிட வந்த மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா தனது தங்கச் சங்கிலி திருடு போனதாக புகார் கொடுத்தார்.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்| ’சிறுமிகள் பாலியல் to மனித மாமிச விருந்து..?’ A to Z முழு விவரம்! owner
vikatan : மறைந்த அமெரிக்க செல்வந்தர் மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்க செல்வந்தர் மற்றும் நிதியாளர், 2019ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்தி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரது மரணம் பல மர்மங்களை எழுப்பியது. நீதித்துறை விசாரணையில் பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தரவுகளில் சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் தினமும் 54 பேர் காணாமல் போகிறார்கள்! பத்தாண்டுகளில் டெல்லியில் 2, 32, 737 காணாமல் போனர்.
Giri Sundar : ஒன்றிய அரசின் நேரடி கட்டு பாட்டில் இருக்கும் தலைநகர் டெல்லியில் நடக்கும் மர்மம் தான் என்ன ..?
டெல்லி போலீஸாரிடமிருந்து கிடைத்த ஆவணங்கள் மூலமாக வெளியாகியிருக்கும். தகவல் உண்மையிலேயே அதிர வைக்கும் தகவல்தான்..!!
டெல்லியில் தினமும் 54 பேர் காணாமல் போகிறார்களாம்...!!
ஜனவரி 1முதல் 15ஆம் தேதிக்குள்
509 பெண்களும் குழந்தைகளும் 298 ஆண்களும் காணாமல் போய் உள்ளனர்..!!
அதாவது 2 வாரத்தில்
807 பேர் காணாமல் போய் உள்ளனராம்..!!
காணாமல் போகும் பெண்களில் குழந்தைகளைவிட பெரும்பாலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அதிகமாம்..!!
கடந்த ஓர் ஆண்டு மட்டும் 24,508பேர் காணவில்லையாம்...!! இதில் 60% பெண்கள்.. 15426 பேர். கண்டு பிடிக்கப்பட்டு விட்டனர்..!!
இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் 9087பேர் தேடப்படுகின்றனர்..!!
2025 ல் 5,081டீன் ஏஜ்ஜர்ஸ் காணவில்லையாம்..அதில் 3970பேர் இளம் பெண்கள்..
விஜய் கட்சிக்கு போறேன்னு உதார் விட்டாலும் போக மாட்டாங்க.
Giri Sundar : திமுக காங்கிரசு சண்டை புருஷன் பொண்டாட்டி சண்டை மாதிரி.காலையில சண்டை போட்டா நைட்டு ஒண்ணு சேர்ந்துடுவாங்க.
புருஷன் கிட்ட பிகு பண்ணா தான் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.
அவனுங்களும் தேர்தல் நேரத்தில தான் கேட்க முடியும்.இப்ப விட்டா அடுத்த தேர்தல் வரைக்கும் தலைகீழ நின்னாலும் திமுக
கண்டுக்காது.
என்ன தான் விஜய் கட்சிக்கு போறேன்னு உதார் விட்டாலும் போக மாட்டாங்க.அப்படி போறதா இருந்தா கடந்த பார்லிமெண்ட் தேர்தல்ல அதிமுக கூப்பிட்டப்பவே போயிருப்பாங்களே!ஏன் போகல?
அடிமைங்கலாம் கள்ளக் காதலன் மாதிரி, மேட்டர் முடிச்சோமா, தொடைச்சிட்டு பாஜகவுக்கு ஆதரவு தெரிவிச்சோமா, அமைச்சர் பதவி வாங்கினோமான்னு போயினேயிருப்பானுங்க.
Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks 23- !2 1940 The Hindu organ
![]() |
D. S. Senanayake – The Father of the .- Prime Minister
Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks
Congress camp saturday ;
Details about abortive indo ceylon talks at delhi reveals for the first time Mr.D.S.Senanayaka, one of ceylon delegates to delhi. When he spoke as chairman of the reception committee at today's session the Ceylon National Congress at Mirigama Mr.EAP Wijyearatna president elect occupied the chair.
Remarking that the vast number of Indians in ceylon regarded India as their home and
Ceylon only as their place of occupation, Mr.Senanayak specifically mention the tentative proposals which were laid before the Delhi conference as embodying conditions under which the status of indian in ceylon should be determine.
I make bold to say declared Mr.Senanayaake ' that the chief reason why our confrence with the representatives of the Indian Government failed was because fo the poisonous atmosphere already crated by so called indian leaders from Ceylon who are betraying this country"
தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
கலைஞர் செய்திகள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (4.02.2026) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை பின்வருமாறு,
ஒரு காலத்தில், திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டதுதான் இன்றைய தினம் திண்டிவனம். திந்திரி என்றால் புளி. புளியமரங்கள் அதிகம் இருந்த பகுதி என்ற காரணத்தால், அதைக் காரணப் பெயராக வந்தது. சோழர்கள் காலத்திலும், பல்லவர் காலத்திலும், நாயக்கமன்னர்கள் காலத்திலும், வர்த்தக நகராக இருந்த இந்த திண்டிவனம், செஞ்சி கோட்டை, மயிலம் முருகன் கோயில், மேல்மலையனூர் அங்காலம்மன் கோயில் என்று பல சிறப்புக்களைக்
புதன், 4 பிப்ரவரி, 2026
இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை மீனவர்களை தாக்கியதாகக் குற்றச்சாட்டு!
பிபிசி சிங்கள சேவை : ''இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்''
''எமது நாடு... எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா'' என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது.
செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
காங்கிரசுக்கு 70 தொகுதிகள்.. 6 அமைச்சர் பதவிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள்9 தவேக அள்ளிக்கோ அள்ளிக்கோ

News4 Tamil Digital : 70 தொகுதிகள்.. 6 அமைச்சர் பதவிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகள்.. உள்ளாட்சி தேர்தலில் 8 மேயர் பதவிகள்.. காங்கிரசுக்கு விஜய் கொடுத்த ஆஃபர்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. இனி ரகசிய பேச்சு கிடையாது.. தவெகவுடன் கூட்டணி என அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.. விஜய்யை நேரில் வந்து ராகுல் காந்தி சந்திக்க வேண்டும்.. நடக்குமா தவெக - காங்கிரஸ் கூட்டணி?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், ஆளும் திமுக கூட்டணிக்கு இணையாக ஒரு பலமான மாற்று அணியை உருவாக்க துடிக்கும் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸை வளைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில், த.வெ.க தரப்பிலிருந்து காங்கிரஸுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படும் ‘ஆஃபர்கள்’ அரசியல் வட்டாரத்தை அதிர செய்துள்ளன.
Ranil Relaunches UNP with ‘Starlink’ Digital Revolution!
![]() |
infosrilanka.lk : As the current JVP-led government remains mired in traditional political rhetoric and repressive tactics,
dragging the country backwards, the United National Party (UNP) under the leadership of former President Ranil Wickremesinghe is gearing up for a major technological revolution. In line with Mr. Wickremesinghe’s consistent vision that the country’s future must be based on digitalisation, the UNP has made all arrangements to launch the biggest technological operation in Sri Lanka’s political history, centred around the Sirikotha party headquarters, coinciding with Independence Day on February 4th.
ஸ்டாலின் கணக்கு’ என்ன? கண்ணாமூச்சி’ காங்கிரஸ்… ‘கபடி ஆடும்’ தேமுதிக.. ‘இக்கட்டில்’ கூட்டணி கட்சிகள்.
மின்னம்பலம் : என்னய்யா.. தொகுதிப் பங்கீட்டு கணக்குக்கு வந்தாச்சா? எந்த கூட்டணி?
சென்னையில இன்னைக்கு சிஎம் ஸ்டாலின், “கூட்டணி கட்சிகளுடன் பேச விரைவில் திமுக குழு அமைக்கப்படும்”என சொல்லி இருக்காரே பார்த்தீரா?
ஆமாய்யா.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை திமுக தொடங்க போகுதுன்னா தொகுதிகளுக்கான கணக்கும் போட்டு வெச்சிருப்பாங்களே?
எக்ஸாக்ட்லி சரியா சொல்லிட்டீரு.. சென்னைக்கு வந்த காங்கிரஸ் கிரிஷ் சோடங்கரும் கூட, “அடுத்த 2,3 நாட்களில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும்.. பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கிறதுக்கு 5 நிமிஷம் போதும்”ன்னு சொல்லி இருந்தாரு.. இப்ப சிஎம்-ம் பேச்சுவார்த்தை குழுவை பத்தி பேசியிருக்காரு..
கனடா 3 பஞ்சாபி இளைஞர்கள் கப்பம் கொள்ளை துரத்தி பிடித்த போலீஸ்
இந்தியன் எக்ஸ்பிரஸ் : சினிமா பாணி சேஸிங்: கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு டாக்ஸியில் தப்ப முயன்ற 3 இந்திய இளைஞர்கள் கைது
சினிமா பாணி சேஸிங்: கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு டாக்ஸியில் தப்ப முயன்ற 3 இந்திய இளைஞர்கள் கைது!
சர்ரே நகரில் சமீபகாலமாக தெற்காசிய சமூகத்தினரைக் குறிவைத்து ‘மிரட்டிப் பணம் பறிக்கும்’ (Extortion) சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026-ம் ஆண்டு தொடங்கிய முதல் ஒரு மாதத்திலேயே சுமார் 46 மிரட்டல் புகார்கள் பதிவாகியுள்ளன.
திங்கள், 2 பிப்ரவரி, 2026
காங்கிரசோடு பேசுவதற்கான குழுவை ஸ்டாலின் அமைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன் · கூட்டணிக் கட்சிகளை டீல் செய்வதில் கலைஞரை விட பல படிகள் ஸ்டாலின் அட்வான்ஸாக உள்ளார்!
ஸ்டாலின் நிதானம் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது…என்பதை நான் சொல்லித் தானாக வேண்டும்!
ஸ்டாலின் ஆட்சி நிர்வாகத்தில் எனக்கு பல முரண்கள் இருந்தாலும், கூட்டணி கட்சிகளை கையாளுவதில் அவரது தலை சிறந்த நிர்வாக ஆளுமைக்கு,
காங்கிரசை அவர் கையாளும் விதமே சான்றாகும்.
நவம்பர் 23- ல் காங்கிரஸ் தலைமை திமுகவோடு தேர்தல் தொடர்பாக பேசுவதற்கு அகில இந்திய காங்., செயலர் கிரிஷ் சோடங்கர்,
அகில இந்திய காங்கிரசின் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேரை நியமித்தது.
டிசம்பர் -3 அன்று காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க அண்ணா அறிவாலயத்தில், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அத்துமீறிய டிரம்ப்.. அந்தரங்க உறுப்பில் கடித்த சிறுமி.. அதிர வைக்கும் எப்ஸ்டீன் ரிப்போர்ட்
tamil.oneindia.com வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் வகையிலான சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
அதில் சிறுமி ஒருவரிடம் டிரம்ப் அத்துமீறியதாகவும் அப்போது அந்தச் சிறுமி டிரம்பின் அந்தரங்க உறுப்பைக் கடித்துவிட்டதாகவும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தகவல்கள் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன். அவரது விசாரணை குறித்த எப்ஸ்டீன் பைலிஸில் இருந்து இப்போது சில புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் அதிபர் டிரம்ப் குறித்து சில அதிர வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது டிரம்பிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அமெரிக்காவை எதிர்த்து ஈரான் ராணுவம் போராடுவது, ஈரானுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும்.
Giri Sundar : அமெரிக்கா மிகப்பெரிய சிலந்தி வலைக்குள் மாட்டிக் கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தகவலின் அடிப்படையில் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது
ஆரம்பகட்ட பேச்சு தோல்வி, ஈரான் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்ததும் இறுதி கட்டத்தில் டிரம்ப். ஈரான் மீது ஒரு புதிய பிரம்மாண்டத் தாக்குதலை நடத்த ஆலோசித்து வருகிறார்.
ஈரானை நோக்கி, அமெரிக்க கடற்படையின் மிகவும் பிரமாண்டமான, சக்தி வாய்ந்த போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் சுத்தி வளைத்து நிற்கிறது. இது ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஈரானும் சும்மா இருக்கவில்லை. முடிந்த அளவு ஆயுதங்களை குவித்து வருகிறது. அது என்னவென்று பார்ப்போம்






