வியாழன், 21 மே, 2026

பி டி ஆர்களை திமுகவே தோற்கடித்தது அதன் விளைவுதான் தவேகவின் வெற்றி

 Aravindan Kannaiyan  : 2026 தமிழகத் தேர்தல் -  கேட்கப்பட வேண்டிய கேள்விகள் 
விஜயின் தேர்தல் வெற்றியை சமீபத்திய, நான் நேரில் அனுபவித்த, தேர்தல் அதிர்வுகளுடன் ஒப்பிட வேண்டுமென்றால் 2016-இல் டிரம்ப் ஜெயித்ததோடு ஒப்பிடலாம். இது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டின் படியான ஒப்பீடு தான், வேறு வகைகளிலல்ல. அந்த 2016 நவம்பர் அதிகாலையில் அமெரிக்காவும் உலகமும் அதிர்ந்தன என்றால் மிகையில்லை. ஜனநாயக கட்சியினர் பலர் வெளிப்படையாகவே அழுதனர், அதிர்ச்சியில் உறைந்து போயினர் என்றும் சொல்லலாம் ஆனால் கூடவே பலர் “நாம் நம் வாக்கு வங்கிகளை இழந்தோம், ஏன் உழைக்கும் வர்க்கம் நம்மை கைவிட்டதென்று ஆராய வேண்டும்” என்றும் பேசினர். 
1967-இல் காமராஜரே தோற்ற போது கண்ணதாசன் “அறம் பாடி அழித்து விடவா விருதுநகரை” என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இன்று கொளத்தூரில் ஒரு முதல்வரே தோற்ற அதிர்ச்சியில் இருந்து திமுக-வினர் பலர் மீளவேயில்லை, புரிந்துக் கொள்ளக் கூடியது தான். திமுக பல தோல்விகளை சந்தித்திருக்கிறது என்றாலும் இது மிக மிக பலமான அடி, கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய அடி.
திமுகவின் அதிகார நாளேடாகவே மாறிவிட்ட தி இந்து-வே தேர்தல் புள்ளி விவரங்களை தொகுத்தக் கட்டுரையில், “1967 முதல் மாநிலத்தில் கோலோச்சிய திராவிட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியலை மாற்றுகின்ற தேர்தலாக இது இருக்கக் கூடும்” என்று சொன்னது. 

உட்கட்சி மோதல்களால் சிதைந்து கொண்டிருக்கும் அதிமுக .. திரு செம்மலையின் கவலை

May be an image of one or more people and text that says "அங்குசம்"

 Giri Sundar  :   செம்மலை அஇஅதிமுகவிலிருந்து விலகும் முன் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்திவிட்டுத்தான் விலகியிருக்கிறார்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மூத்த தலைவர்கள் முக்கிய நிர்வாகிகளிடம் இல்லை.அதிமுக தலைவர்கள் மூத்த நிர்வாகிகளிடம் இருக்கும் ஈகோ கட்சியின் வளர்ச்சியை வேகத்தடை போல் தடுக்கிறது.
தன்னுடன் சக அமைச்சரவையில் அமைச்சராக பயணித்த ஒருவரை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது இயக்கத்தின் தலைமையாகவோ ஏற்றுக்கொள்ளும் எந்த எண்ணமும் இவர்களிடத்தில் இல்லை.
தங்கள் மாவட்டங்களில் மற்றும் தங்களது மாவட்டங்களை கடந்தும் தாங்கள் கட்சியில் செய்யும் குறுநில மன்னர் ஆட்சியை கண்டும் காணாது இருக்க தங்கள் விருப்பம் போல் செயல்பட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பொதுச்செயலாளரே இவர்களுக்கு தேவைப்பட்டார்.
அதற்காகவே இவர்கள் எடப்பாடியாரை முன்னிறுத்தினார்கள்.ஆனால் அவரோ தொண்டர்கள் விரும்பும்

புதன், 20 மே, 2026

தமிழர்கள் இவ்வளவு முட்டாள்களாக மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!

May be an image of text that says "முதல் ஐந்து கையெழுத்துகள்! -முதலைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. CHIEF MINISTER அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதமே ரூ.2000 வழங்கப்படும். -TNILK 16.5.2021 முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. சா சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம். 風 மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்படுகிறது. 5 கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். f mK Stalin mkstalin m.k.stalin mkstalin mkstalin 07-05-2021"

 Swaminathan Poornachandran  :  எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். 
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது,  தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. 
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. 

சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு

 hindutamil.in -மோகன் கணபதி : இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டம்) வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது.

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைகிறது

தினமலர் : புதுடில்லி; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இணைவர். நாளை அவர்கள் பதவியேற்கின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைகிறது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்து உள்ளது. அக்கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் உண்டு என்று கூறப்பட்டு வந்த நிலையில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்து வந்தன.

தவேகவின் கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....

May be an image of one or more people

 Dr.M.Wasim Raja : தோண்டத் தோண்ட கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....
அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு (4):
ஆதவ் அர்ஜுனாவிற்கு திலகவதி ஐபிஎஸ் (முன்னாள்) அவர்கள் பெரியம்மா முறை வேண்டுமாம். போலிஸும், குற்றவாளியும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மிகவும் பொருத்தமான முறையில் பொதுப் பணித்துறையின் கமிசன் அமைச்சராக்கப்பட்டுள்ளது அபாயகரமானது. 

செவ்வாய், 19 மே, 2026

ராமநாதபுரம் ராஜா சேதுபதியை 15,692 தோற்கடித்த குதிரை வண்டி தங்கப்பன் திமுக - 24,302

No photo description available.
No photo description available.

 Dr.M.Wasim Raja  : விஜய்யின் கார் ஓட்டுனர் மகனை எம்எல்ஏ ஆக்குனதை பக்கம் பக்கமாக பெருமை பேசிட்டு திரியறாங்க...
இராமநாதபுரம் தேர்தல் வரலாறு: 
மன்னரை வென்ற குதிரை வண்டி ஓட்டுநர்!
இன்று திமுக சார்பாகப் போட்டியிட வாய்ப்புக் கேட்கும் அறிவிப்பு வந்தால், ஒரு தொகுதிக்கு 1,000 பேர் வரை மனு செய்வார்கள். ஆனால்,
1967-ல் நடந்த மெட்ராஸ் மாநில சட்டமன்றத் தேர்தலில்
திமுகவிற்கு இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பாளரே கிடைக்கவில்லை என்று சொன்னால் அதுதான் நிஜம்.
காரணம், அங்கு 
இராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் இருந்த இராமநாதபுரம் ராஜவம்சத்து 
மன்னர் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியை வேட்பாளராக
நிறுத்தியது , அவர்தான் 
அவர் அந்தச் சமஸ்தானத்து அரசர் என்பதால், அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன்வரவில்லை. 

திங்கள், 18 மே, 2026

ஸ்டாலின் சறுக்கியது எங்கே? | திமுக தோற்ற கதை | DMK | MK Stalin

hindu tamil : திமுகவின் தோல்விக்​கான காரணத்தை தேடும் முன்​பாக கூட்​ட​ணிக் கட்​சிகளை ஜெயிக்க வைத்​து​விட்​டு, “நம்​மால் ஜெயித்​து​விட்டு இப்​படிப் போய்​விட்​டார்​களே...” என்று வேதனை​யில் இருக்​கும் திமுக-​வினரை முதலில் அழைத்து மு.க.ஸ்டாலின் ஆறு​தல்படுத்​துங்​கள். ஏனென்​றால், அவர்​களெல்​லாம் நீங்​கள் சொன்​ன​தால் கூட்​ட​ணிக்​காக உழைத்​து​விட்டு ‘கொளத்​தூர்​ வேதனைக்​கு’ நிக​ரான வலியில்​ உழன்​று கொண்​டுள்ளனர்​.
ஆக, வேர்​ப்​புழு​வுக்​கு வைத்​தி​யம்​ ​பார்​க்​​காமல்​ மேலோட்டமாக மகசூலுக்​கு மருந்​தடிப்​பது நீடித்​த பலனைத்​ த​ராது என்​ப​தை புரிந்​துகொண்​டு அப்​டேட்​ ஆக வேண்​டும்​

திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பொதுவாழ்வில் இருந்து ஒய்வு

May be an image of text that says "JAYA PLUS JAYA PLUS DIGITAL ΑγΑ PLUS JAYAPLUSDIGITAL_JUAYAPLUSDIC ी APLUS DIGITAL RLUSDIGITALLAVAPLUSDIGITAL JAYAPLUS JAYA PLUS DIGITAL பொதுவாழ்வில் இருந்து ஓய்வு மதுரை மத்திய தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் பி. பி.டி. டி.. ஆர்.பழனிவேல் ஆர். தியாகராஜன் அறிவித்தார் 18-05-2026 11:40 18-05-202611:40AM AM -JAYAPLUS"

 ராதா மனோகர் : அய்யா திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை மதுரை வாக்காளர்கள் தோற்கடிப்பதற்கு முன்பே பலர் தோற்கடித்துவிட்டனர் 
குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் அவரை தோற்கடித்து விட்டது 
அரசியல் அவரை தோற்கடித்து விட்டது 
மக்கள் அவரை தோற்கடித்து விட்டனர் 
திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அரசியல் ஓய்வென்பது தமிழகத்தின் அரசியல் ஒய்வு என்று எடுத்து கொள்ளலாம் 
இனி நடக்கப்போவது அரசியல் அல்ல.
வெறும் வியாபாரம் ... 
அதுவும் நேர்மை அற்ற வியாபாரம் 
இவரின் அரசியல் ஓய்வென்பது ஒரு நீண்ட இருளின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது 

நடிகர் விஜய் உண்மையில் தோற்று கொண்டிருக்கிறார்

May be an image of one or more people and people smiling விஜய் நீ தோற்றுக்கொண்டிருக்கிறாய்!
உன் தோல்வி உனக்கே இன்னும் புரியவில்லை என்கின்ற போது 
உன் தற்குறி கூட்டத்திற்கு எப்படி புரியும்?
நீ மிகவும் பலவீனமானவன் 
மனிதர்களின் உண்மையான பலம் என்பது நேர்மையில்தான் தங்கி உள்ளது 
உனக்குத்தான் அந்த அறம் என்னவென்றே தெரியாதே 
இன்று கும்பலில் கோவிந்தா போடும் உன் கூட்டம் வெறும் சந்தை கூட்டம்தான் 
அதுவும் கல்லாத மூடர்களின் தற்குறிச்சந்தைதான் 
சொந்த குடும்பங்களோடு எந்தவிதமான புரிதலோ அன்போ இல்லாத ஒரு மனிதனின் ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற நாடகம் உன் கும்பலுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம் 
ஆனால் சமூகத்திற்கு இது புதிதல்ல 
இது போன்ற நாடகங்களை மேடை ஏற்றிய பலரை உலகின் பல மனநல மருத்துவ மனைகள் ஏற்கனவே கண்டிருக்கிறது.
உனக்குதான் எந்த வரலாறும் தெரியாதே 
உன்னை சுற்றி உள்ள கும்பல் வெறும் தற்குறி கும்பல் என்பது உலகே அறிந்த உண்மை அல்லவா?

ஞாயிறு, 17 மே, 2026

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை

 தினமலர் : சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85.
1983ம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கே. ராஜன் அறிமுகம் ஆனார். நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் போன்ற படங்களை இயக்கியவர். அவள் பாவம், நினைக்காத நாளில்லை, டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். பாம்பு சட்டை, துணிவு, பரகாசுரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா விழாக்கள் மற்றும் சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் கே.ராஜன், திரைக்கலைஞர்களின் செயல்பாடுகளை விமர்சித்து பேசியவர். யூடியூப் சேனல்களிலும் பொது மேடைகளிலும் பலரையும் விமர்சித்து பேட்டியும் அளித்தவர்.

திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!

May be an image of one or more people and text that says "By yD.B.SJeyaraj D.B.S Jeyaraj"

 ராதா மனோகர் : இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகையாளர் திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகப்பெரும் ஆற்றலை கொண்ட எழுத்தாளர் 
மிகவும் சிக்கலான போர் சூழலில் மிக மிக நுட்பமாக செய்திகளை மோப்பம் பிடித்து எழுதுவதில் தனித்திறமையோடு செயல்பட்டார்.
ஈழ போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும்,
 பிரபாகரன் உட்பட ஏனைய தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையும் இவர் மூலம்தான் உலகம் அறிந்து கொண்டது. 
 இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் உயிராபத்து இருந்தும் துணிந்து பல இடங்களிலும் தொடர்புகளை பேணி அவற்றின் மூலம் பல செய்திகளை பொதுவெளிக்கு கொண்டுவந்தார் 
புலிகளால் கொலை அச்சுறுத்தல் அளவு கணக்கில்லாமல் இருந்த போதும் ஒரு கத்தி மேல் நடப்பது போல் நடந்து பணியாற்றினார் 
சமாதான ஒப்பந்த காலத்தில் இவர் ஆற்றிய எழுத்துப்பணி வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்கது 
இவரின் அந்த பணிக்கு பரிசாக கனடாவில் இவர் கொடூரமாக தாக்கப்பட்டார் 

பாகிஸ்தான் பெண் நடத்திவந்த மாபியா கேங் அன்மோல் எனும் பிங்கியின் கதை

 Neander Selvan  : இந்தியாவில், ஏன் அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ கூட முழுக்க பெண்களே நடத்தும் போதை மருந்து கார்ட்டல்களை காண்பது அரிது
ஆனால் பாகிஸ்தானில் அப்படி ஒரு கார்ட்டலை நடத்தி வரலாறு படைத்திருக்கிறார் அன்மோல் எனும் பிங்கி
துரந்தரில் காட்டப்பட்ட கராச்சி நகரின் சட்டவிரோத கடத்தல் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் அன்மோல். இவரது மூன்று சகோதரர்களும் போதைமருந்து பிசினஸில் இருந்தார்கள். அன்மோல் 14 வயதிலேயே மாடலிங் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மாடலிங் துறையில் பிங்கி எனும் பெயருடன் இறங்கினார். கராச்சி மற்றும் பின்னர் லாகூரில் மாடலிங் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தில் கலந்து கொண்டார். 

சனி, 16 மே, 2026

திமுவினரே ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது- ஒரு உடன்பிறப்பின் ஆலோசனை

May be an image of text that says "အမ ஒரு திமுக பூமரிடமிருந்து சக பூமருக்கு!"

 Thamira Aathi :  திமுக பூமர்களுக்காக, ஒரு சக பூமரின் கரண்ட் சினாரியோ அறிக்கை
1. நீங்கள் அப்படியே என்னவோ கோட்டையே சரிந்துபோனது போலவும், அவமானப்பட்டது போலவும் நினைத்துக்கொள்ள இதில் ஒன்றுமேயில்லை. திமுக போன்ற கட்சிக்கு ஜெயலலிதாவிடம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோற்றுக் கொண்டிருந்ததை விட அவமானம் வேறொன்று இருக்கவே முடியாது. ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது.
2. உலகத்துலயே இல்லாத ஆட்சியெல்லாம் நாம் பண்ணிவிட்டதாகக் கருத வேண்டாம். காங்கிரஸ், பிசேபி போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு உட்பட்டு, நம்மாலியன்ற அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கல்வி, உட்கட்டமைப்பு, பிற துறைகளில் சிறந்து விளங்குகிறோம். குறிப்பாக சமூகநீதியில் சற்று மேம்பட்டு நிற்கிறோம். அவ்வளவுதான். நாம ஜேம்ஸ்பாண்டுதான், ஜேம்ஸ்பாண்டுதான். அதுக்காக துப்பாக்கியை நீட்டி பிடிச்சமானிக்கே நிக்கத்தேவையில்லை.

10 அமைச்சர் பதவி கொடுப்பதாக தவெக தரப்பில் பேரம் பேசினார்கள்.. போட்டு உடைத்த கேசி வீரமணி!

 tamil.oneindia.com - Yogeshwaran Moorthi  :  சென்னை: தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏ-க்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்களும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தரப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார்.

வியாழன், 14 மே, 2026

புஷ்பாவின் சோபா ஆட்சி லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.

 இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர் தெளிவாக்கவும் 
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்) 
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ்  வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து  எம்எல்ஏவும்  எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!

ஸ்டாலின் கேள்வி : ரூ.2,500 அறிவித்துவிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-க்கே இழுத்தடிப்பதா?”

May be an image of ‎text that says "‎ماكه F TAMIL TAMILNADU NADU BREAKING NEWS SUN NEWS மறுசீரமைப்பு! "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும். மே மாதத்திற்கான உரிமைத்தொகை நாளை வரவு வைக்கப்படாது!" -விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் 1 4MA 4MAY2026 MAY 2026 f XSUNNEWSTAMIL © SUNNEWS sunnewslive.in‎"‎
hindutamil.in  - அனலி  : சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான தொகையை தங்கள் கட்சி அறிவித்தபடி ரூ.2,500 என்று உயர்த்தி வழங்க கால அவகாசம் தேவை என்றும், மே மாதத்துக்கான தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் கூறிய நிலையில், அதற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்போது எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்?

கடைசில லாமா ரோஸ், திரிஷாவோட டேர்டி ஆட்சியா இருக்கும் போல!

 இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர்களை தெளிவாக்கவும் 
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்) 
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ்  வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து  எம்எல்ஏவும்  எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!

சட்டமன்றத்தில் தயவு செய்து தனி நபர் தாக்குதலை முற்றாக தவிருங்கள்

May be an image of text that says "அனல் கக்கிய உதயநிதி! சலனமின்றி அடித்த விஜய் அதிர்ந்த சபை"

 ராதா மனோகர் : நடிகர் விஜயின் அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பதில் சிலர் அவசரம் காட்டுவது சரியல்ல என்று தோன்றுகிறது 
பொதுவாகவே ஒரு புதிய அரசு பதவி ஏற்றால் மக்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும் 
அதிலும் விஜய் அரசியலுக்கு புதியவராக இருப்பதால் கொஞ்சம் அனுதாபமும் இருக்கும் 
அவரும் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார் 
41 கொலைகளையே தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,
அது தன்மீது ஏவிவிட்ட சதியென்று பலரையும் நம்பவைத்த காரிய களவாணி அது.
ஆனாலும் ஆட்சிக்கும் அரசுக்கும் புதுசு 
அவரின் அப்பாவி முகத்தை கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணாமல் இருப்பது நல்லது 
கொஞ்சம் பொறுத்தால் அவரின் சுயரூபம் மக்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய விதத்தில் வெளிவரும் 
அதுவரை பொறுத்தல் நல்லது 

பிரபாகரனின் குருநாதர் செட்டி தனபாலசிங்கம் முதல் வெள்ளைக்கொடி சரணடைவு வரை

 ராதா மனோகர் : தமிழ் தேசிய கூட்டணியின் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் எம்பி திரு கனகேந்திரன் அவர்களின் பேட்டி!
புலிகள் இயக்கம் உருவானது கல்வியின் காட்டில்தான்!
வல்வெட்டி துறையில் அல்ல 
அதை உருவாக்கியது செட்டி தனபாலசிங்கம் 
செட்டி தனபாலசந்ததின்  சிஷ்யனாகத்தான் பிரபாகரன் போராட்டத்திற்கே வந்தார் 
புலிகள் இயக்கத்தின் முதல் பெரிய தாக்குதலை மேற்கொண்டவர் திரு செல்லக்கிளி 
இவர்  திரு  செட்டி தனபாலசிங்கத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகும்.
இந்த செல்லக்கிளியின் அண்ணன்தான் இந்த காணொளியில் பேட்டி வழங்கும் திரு கனகேந்திரன் அவர்கள்.
இவர் முல்லை தீவு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் 
இவரை தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளராக பிரபாகரன்தான் நியமித்தார் 

புதன், 13 மே, 2026

TVK அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு- வெளிநடப்பு செய்யும் திமுக

 மின்னம்பலம் -  Mathi : முதல்வர் விஜய் அரசு மீது இன்று மே 13-ந் தேதி சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ய கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றது தமிழக வெற்றிக் கழகம். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் உடனே ஆட்சி அமைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக அறிவித்தனர்.

செவ்வாய், 12 மே, 2026

ஆசிரியை கர்ப்பம்: மாணவனுடன் உடலுறவு: 3 ஆண்டுகள் கழித்து கிடைத்த சடலம்

 மாலைமலர் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடசாலை மாணவன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியது. எங்கு தேடியும் கிடைக்காத அந்த மர்மத்தின் முடிச்சு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய செல்போன் பழுது நீக்கும் கடையிலிருந்து அவிழ்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் கொல்கத்தா மாநகரம் இன்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
யார் இந்த அருண் முகர்ஜி?
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ‘ஸ்டார் உயர்நிலைப்பள்ளி’யில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் அருண் முகர்ஜி. படிப்பில் கெட்டிக்காரன், அமைதியான குணம் என எல்லோராலும் நேசிக்கப்பட்டவன். 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள், பள்ளிக்குச் சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர் ராஜேஷ் மற்றும் மாலதி முகர்ஜி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. காலப்போக்கில் அந்த வழக்கு ‘கிடப்பில்’ போடப்பட்டது.

ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?

May be an image of dais and text that says "நமது வெற்றிச் சின்ளம் விசில்"

 Guna Pdkgobi :  கோட்டை விட்ட விஜய்.. ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். "தனிப்பெரும் கட்சிக்குத்தான் முதல் முன்னுரிமை" என்ற ஜனநாயக மரபு, விஜய்யின் ஒரே ஒரு 'நிர்வாகத் தவறால்' தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஆளுநர் ஆர்லேகரின் பிடிவாதம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் செய்த அந்த விபரீத 'பிளண்டர்'!
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், கிண்டி ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.

தெற்காசியாவில் இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே

May be an image of text that says "SALUTING STALIN தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகைம் ONE OF THE LAST FEW STATESMENAROUND STATESMEN AROUND"

 தெற்காசியாவில் திராவிட மாடல் அரசுக்கு நிகராக ஒரு அரசு இல்லை 
இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே
எதிரிகளும் மறுக்க முடியாத வளர்ச்சி புள்ளி விபரங்கள் 
திராவிட ஒவ்வாமையாளர்களே கண்களை அகல திறந்து உண்மையை பாருங்கள் 
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்  
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் விடயத்தில் டேமேஜான விஜய்யின் இமேஜ் ரிப்பேர் ஸ்டண்ட்தான் ஸ்டாலின் வீட்டு விசிட்

 மின்னம்பலம் - மதி : , “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்ன ப்ரோ.. சிச்சுவேஷன் ஷாங்கா?
இல்லை ப்ரோ.. இன்னைக்கு மாஜி சிஎம் ஸ்டாலினை சிஎம் விஜய் சந்திச்சு பேசுனார் இல்லையா.. அதுக்கு இந்த பாட்டை வெச்சுதான் ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க.. உங்க இன்ஸ்டாவை திறந்து பாருங்க..
ஸ்டாலினை விஜய் சந்திச்சதுல என்ன விஷேசம் இருக்கு ப்ரோ?
விஜய் நேத்து சிஎம்மா பதவியேற்ற பங்ஷன்ல தமிழ்த் தாய் வாழ்த்தை 3-வதாக பாடுனது, சம்பந்தமே இல்லாம வந்தே மாதரம் பாட்டை முதலில் பாடுனது எல்லாமே பிரச்சனையாகிடுச்சு..