நக்கீரன் : டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுடெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
புதன், 22 ஜூலை, 2026
மு.க. ஸ்டாலின் : தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே
விஜய்யின் ‘ஜனநாயகன்’ நாளை ரிலீஸ்: பிளாக் டிக்கெட் விற்பனை - பகிரங்க ஏல விற்பனை? அதிர வைக்கும் தியேட்டர் நிலவரம்!
மின்னம்பல - Kavi : ஒருவழியாக ஜனநாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதேவேளை டிக்கெட் விலையும் தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக எடுக்கப்பட்ட படம் ஜனநாயகன். கடந்த 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம். அதன்படி படம் நாளை வெளியாகிறது. சுமார் 1000 திரையரங்குகளில் நாளை மட்டும் 5000 காட்சிகள் திரையிடப்படவுள்ளது.
ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ என மாற்றம்
hindutamil.in -தமிழினி : சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு மாற்றம் செய்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கைதான திமுக எம்எல்ஏக்களை நேரில் சென்று சந்திக்காத உதயநிதி: குமுறும் கட்சி நிர்வாகிகள்
dinamalar.com : திமுக எம்எல்ஏக்கள், அடுத்தடுத்து கைது செய்யப்படும் நிலையில், அவர்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் சென்று சந்திக்காதது, திமுக நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
முதல்வர் விஜயை, ஒருமையில் விமர்சித்ததாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்துார் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 'முதல்வர் விஜயின் எலும்பை உடைப்பேன்' என பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இரு கைது சம்பவங்களுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அறிக்கை வெளியிட்டதோடு, முடித்துக் கொண்டனர்.
2.4 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மோசடி! சிக்கபோகும் மகிந்தவின் புதல்வர்கள் - நாடாளுமன்றில் அம்பலம்
ilakkiyainfo.com : வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரங்கள்
குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாதஸ்வர இசையின் மென்மையை மழுங்கடித்து ஒப்பாரியாக மாற்றிய சைவ வைணவ மதவாதிகள்
ராதா மனோகர் : பல கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் உள்ளூர ஹிந்துஸ்தானி இசையை அதிகமாக விரும்புவார்கள்
ஒரு ரகசிய ரசனை போல ஹிந்துஸ்தானி ராகங்களையும் கஸல் போன்ற ஹிந்துஸ்தானி இசை வடிவங்களையும் உள்ளூர ரசிப்பார்கள்
ஆனாலும் பாடல் உருப்படிகள் கர்நாடாக இசையில்தான் அதிகமாக உள்ள காரணத்தால் கர்நாடக இசைக்கலைஞர்களாக தொடர்கிறார்கள்
தமிழ் நாதஸ்வர வித்வான்களிடம் அழகியலோடு வளர்ந்த இசையை சைவ வைணவ வழிபாட்டு கோஷ்டி கைப்பற்றி அந்த இசையையே ஒரு கர்நாடக வழிபாட்டு மந்திரமாக மடைமாற்றி விட்டார்கள்.
செவ்வாய், 21 ஜூலை, 2026
நீட் மாணவர் போராட்டம்.பெரிதாக வெடிக்கும் . 2வது நாளாக இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்றம்!
tamil.oneindia.com -Vigneshkumar : டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. நீட் உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. அவை தொடங்கும் முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மிக பெரிய சாதனைகளை படைத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல் MLA மகன் அக்ஷய் மார்க்கண்டேயனின் பேட்டி
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார்.
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திங்கள், 20 ஜூலை, 2026
dmk எம்எல்ஏ கைது விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்- “திமுகவில் இருந்து தவெகவுக்கு யாரும் போகாததால்...”
hindutamil.in - தமிழினி : சென்னை: “தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதில்தான் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. அதைத் தடுக்க காவல் துறைக்கு நேரமில்லை. திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழித்துவிடலாம் என நினைப்பது மடத்தன.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்!
minnambalam.com - Kavi ; விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார்.
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஞாயிறு, 19 ஜூலை, 2026
சனி, 18 ஜூலை, 2026
பாரதீய கரப்பான் பூச்சி உண்ணாவிரதம் சோனம் வாங்சுக் மருத்துவமனயைில் அனுமதி
Vijay Ramanathan - news18-tamil: : டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
NEET தேர்வு முறைகேடு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்-கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் போராட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி வினாத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சி.டி.விக்ரமரத்ன -சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்
ilakkiyainfo.com : இலஞ்ச ஊழல்குற்றச்சாட்டுகள், துஷ்பிரயோகங்கள் , நிதி மோசடிகள் உட்பட பாதாள உலக கோஷ்டியினர் உடனான தொடர்புகள், போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் என கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற சகல விதமான குற்றச் சம்பவங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மறுபக்கம் முக்கியமான சாட்சிகள் மர்ம மரணத்தை தழுவி வருகின்றமை நாட்டு மக்களுக்கும் ஏன் அரசாங்கத்துக்கும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக விளங்கிய சி.டி.விக்ரமரத்ன தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டமை தற்போது பரபரப்பான சம்பவமாக மாறியுள்ளது.
Delimitation மசோதா- ராகுல் காந்திதான் இந்தியாவின் லேட்டஸ்ட் சாபக்கேடு ! திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
Sowmian Vaidyanathan : Delimitation மசோதா... அதாவது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
இது தான் இன்றைய ஒட்டுமொத்த தவெக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே கேள்வி அல்லது பதற்றம் அல்லது பயம் என்றே கூட சொல்லலாம்.
காரணம் இந்த மசோதாவுக்கு திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அல்லது வெளிநடப்பு செய்தோ அல்லது நடுநிலை காத்தோ இருந்தால் தான் வெற்றிபெற்று சட்டமாகும் என்கிற நிலை.
ஈரானை தாக்க இஸ்ரேலில் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா.. பதற்றம்
tamil.oneindia.com -Nantha Kumar R : டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேலில் அமெரிக்கா தனது விமானங்களை குவித்து வருவது தான்.
விரைவில் ஈரான் மீது மீண்டும் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் Wait and See என்று ஈரான் கடும் வார்னிங்கை கொடுத்துள்ளது.
இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
OCI இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடிமக்களள் இந்தியாவுக்குள் கொண்டுவரும் பல பில்லியன் டாலர்கள்
![]() |
![]() |
இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடிமக்களின் கொண்டுவரும் பணமானது இந்தியாவுக்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை கொண்டுவரும் முக்கிய வருவாயாக இடம் பெறுகிறது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் அந்நிய செலாவணி மேலும் மேலும் அதிக அளவில் உயரும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது
அவுஸ்திரேலியாவில் இருந்து மட்டும் சென்ற ஆண்டு 10 பில்லியன் அவுஸ்திரேலிய டாலர்கள் இந்தியாவுக்கு சென்றிருக்கிறது என்று அவுஸ்திரேலிய பத்திரிக்கை செய்தி ஒன்று கூறுகிறது
இந்த வகையில் ஏனைய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது
உலகளவில் 'இந்திய வம்சாவளி வெளிநாட்டுக் குடிமகன்' (OCI) அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 55 லட்சமாக (5.5 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் 40 லட்சம் (4 மில்லியன்) என்ற அளவில் இருந்த இந்த எண்ணிக்கை தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது
இந்த ஓ சி ஐ கார்ட் வைத்திருப்பவர்களில் கணிசமானோர் கனடா, பிரிட்டன் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளனர்.
வெள்ளி, 17 ஜூலை, 2026
தி.மு.க. - எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் : காங்கிரசுடன் சேர வேண்டாம்; மோடியை விமர்சிக்காதீங்க!
dinamalar.com : 'பார்லிமென்டில் எந்த விவகாரத்திலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டாம்; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை விமர்சிக்க வேண்டாம்' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி, தி.மு.க., - எம்.பி.,க்களுடன், லண்டனில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று முன்தினம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சுகிதா சாரங்கராஜ் : பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை மிரட்டல்
![]() |
![]() |
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழா தொடங்கி தவெகவின் கட்சி விழாக்கள் வரை பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. இப்படி துளியும் பத்திரிகையாளர்களை மதிக்காத ஒரு அரசு தான் விஜயனை விசாரிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களாகிய நமக்கு மிரட்டல் விடுக்கிறது.
பட்டு வேட்டி சட்டையில் வந்தார், டிபன் பாக்ஸ் கொண்டு வந்தார் என்ற கணக்கில் தான் ஏற்கனவே ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட கேள்வி எழுப்பினால் நீ யார் , எந்த டிவி என்ற நோக்கில் தான் சில அரசியல் தலைவர்களின் பதில் இருக்கிறது. சம்மந்தப்பட்ட பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கான பதில் வருவதில்லை. ஊடக விவாதங்களில் பங்கு பெறும் பத்திரிகையாளர்கள் மீதும் இதே தாக்குதல். அதன் நீட்சி தான்
பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை சம்பவம்.
பத்திரிகையாளர் என்பவர் பல்வேறு நபர்களிடம் பேசுவதும் செய்திகளை சேகரிப்பதும் அவர்களது தொழில் சார்ந்த விவகாரம். அதற்காக அந்த நபர்கள் செய்யும் குற்றங்களுக்கு எல்லாம் பத்திரிகையாளர்கள் பொறுப்பேற்க முடியுமா.?
புதிய தலைமுறை விஜயன் கைது -ரூ.35 கோடி பேரம்... 'மேகாலயா பிராஜக்ட்' சதி - விஜயனிடம் விசாரணை -
minnambalam.com - Kavi : புதிய தலைமுறை நெறியாளர் விஜயனை கைது செய்தது தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது,
தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் விஜயன், போலீசார் விசாரணைக்கு சென்ற நிலையில் அவர், கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை - நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கும் நிலையில்
hindutamil.in : சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்பி.க்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய நியாயமான உரிமைகளைக் காக்கவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்ட மசோதாவாக இருந்தாலும், மாநில உரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி மாண்பினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு அமையும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனாவை அடிக்க பாய்ந்தாரா அமைச்சர் சந்திரசேகரன்?
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த இக்கூட்டத்தில், திடீரென. கூட்டத்தின் நோக்கம் மற்றும் விவாதங்களின் போது ஏற்பட்ட கருத்து மோதல்கள், குறித்த நிகழ்வை ஒரு பதற்றமான சூழலுக்கு இட்டுச் சென்றது. இக்காணொளியில் பதிவாகியுள்ள சர்ச்சைக்குரிய கைகலப்பு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.
வியாழன், 16 ஜூலை, 2026
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணைக்கு அழைத்து செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறை!
![]() |
Uma Pa Se : பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை!
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
OCI card holders இந்திய குடியுரிமையோடு இலங்கை குடிமக்களாக இருந்து இந்திய சேவையை செய்வார்கள்
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசு தேடி தேடி வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வழங்குகிறது!
பூரண இலங்கை குடியுரிமை உள்ள இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் ஒரு அரை இந்தியர்களாக மாற்ற முயல்கிறது.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களை இந்த திட்டத்தில் உள்வாங்க முடியும்
ஒரு வேளை அகண்ட பாரத கனவு திட்டமோ?
ஏற்கனவே இலங்கை அமைச்சரவையியே இந்திய குடியுரிமையாளர்கள் உள்ளனர்
இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்?
அடிக்கடி அஜித் தோவாலை ( முன்னாள் ரா அதிகாரி+ இந்நாள் பாதுகாப்பு ஆலோசகர்) பகிரங்கமாகவே சந்திக்கிறார்கள்
ஆனால் தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் மக்களை ( 90 வீதம் இந்திய வம்சாவளி) இன்னும் அகதிகளாகவே இந்திய அரசு வைத்திருக்கிறது
திரு அல்பிரட் துரைப்பா 100 பிறந்த நாள்! யாழ்நகர மக்கள் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரிலும் இவரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது
ராதா மனோகர் : திரு அல்பிரட் துரைப்பா என்ற வாராது வந்த மாமணிக்கு இன்று 100 பிறந்த நாள்
இலங்கையின் மொத்த தமிழ் அரசியலும் அல்பிரட் துரைப்பா என்ற மனிதனின் முன்னால் நிரந்தர குற்றவாளியாக கூனி குறுகி நிற்கிறது.
எந்த காலத்திலும் எந்த நியாயமும் கூற முடியாதவாறு குற்றவாளி பட்டத்தை சுமந்து கொண்டு நிற்கிறது இலங்கை தமிழ் அரசியல்
இனி வரும் சந்ததிகளுக்கும் கூட இந்த தமிழ் தேசிய அரசியலானது விட்டு சென்றது,
வெறும் துப்பாக்கி குண்டுகள் மட்டுமே
உலகின் எந்த இனத்திற்கும் இந்த கேவலம் வரக்கூடாது.
தமிழ் என்றால் என்னவென்று தெரியாது
தேசியம் என்றாலும் என்னவென்றும் தெரியாது
அரசியல் என்றாலும் என்னவென்றும் தெரியாது
தெரிந்தது எல்லாம் வெறும் துப்பாக்கிகளும் அதன் குண்டுகளும் மாத்திரமே.





