முனைவர் க செல்வம் · ஜேம்ஸ் வசந்தன் குபீர் கணக்கு.. விஜய்க்கு ஓட்டு போட்ட 35% பேரில் 20% அப்செட்? இப்பவே புலம்பல் ஆரம்பமா?
தவெகவுக்கு வாக்களித்த 35% மக்களில் 15% முதல் 20% வரை இப்போது ஏமாற்றமடைந்து புலம்பத் தொடங்கிவிட்டனர். மீதமுள்ள சில ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றாலும், மக்கள் உண்மையை உணர்ந்துவிட்டனர்.
இவர்கள் தகுதியவற்றவர்கள் என்பதையும் உணர ஆரம்பித்து விட்டனர். இது வரப்போகும் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்" என்று இசையமைப்பாளரும் அரசியல் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
The TN Voice சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜேம்ஸ் வசந்தன், "நீண்ட காலமாக சோஷியல் மீடியாவில் மோதிக்கொண்ட விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள், இப்போது இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் அஜித்தின் ஆதரவாளர்களை கவர விஜய் நட்புக் கரம் நீட்டுகிறார்.
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வெள்ளி, 18 செப்டம்பர், 2026
காணாமல் போன தவெக வாக்குகள் 35% மக்களில் 15% முதல் 20% வரை புலம்பல்
வியாழன், 17 செப்டம்பர், 2026
இந்திய இலங்கை தரைப்போக்கு வரத்து பாதை கடந்து வந்த பாதை
![]() |
![]() |
ராதா மனோகர் : ஆங்கில பத்திரிகைகளில் வெளியான இந்திய இலங்கை தரைப்போக்கு வரத்து பாதையை படித்து விட்டு தனது தீர்க்க தரிசனத்தில் ஞான திருஷ்டியில் கண்டதாக கதையளந்தார் பாரதியார்
அளவு கணக்கில்லாமல் ஊதி பெருபிக்கப்பட்ட பலூன் பிம்பம்தான் சுப்பிரமணியன் பாரதி.
வாலிக்கும் கண்ணதாசனுக்கும் மருதகாசிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் பாதி தூரம் கூட வரமாட்டார் சுப்பிரமணியன் பாரதி!
சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது
உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும் . தீர்க்க தரிசனம் அல்ல!
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்திய விஜய் - காங்கிரஸ் கடுப்பு - அண்ணாமலை வாழ்த்வில்லை
tamil.oneindia.com -Shyamsundar I : சென்னை: செப்டம்பர் 17, தந்தை பெரியாருக்கும், பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள்! பாஜகவை பாசிச சக்தி என கடுமையாக எதிர்த்து வரும் திமுக தலைவர் தான் மோடிக்கு முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். இதனை பார்த்ததும் முதல்வர் விஜய், மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னதுடன் மோடியின் ஆட்சியை புகழ்ந்தும் செய்தி அனுப்புகிறார்.
அதே சமயம், மோடிக்கு வாழ்த்து சொல்லாத அண்ணாமாலை, பெரியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்து செய்தியை வெளியிடுகிறார். இதில் சில நுண்ணரசியல் இருக்கிறது என்கிறார்கள்.
கோவையில் தங்கி பயங்கரவாத சதி? 19 வயது இளைஞர் கைதானதன் பின்னணி! - CAPTAIN M NETWORK” மூலம்
minnambalam.com - Pandeeswari Gurusamy : அல்கொய்தா சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்த மக்சூத் அலி (19) என்ற இளைஞரை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு அளித்த தகவலின் பேரில் கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து உ.பி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உபி காவ்லதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 12-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கைது செய்தனர்.
ஏமாற்றிய பாகிஸ்தான்! இஸ்ரேலிடம் உதவி கேட்ட சவுதி அரேபியா! ஹவுதிகளால் மாறும் நிலவரம்
புதன், 16 செப்டம்பர், 2026
அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது? அடுத்த ‘குறி’ துரைமுருகன்
minnambalam.com : அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டுக்கு போயிட்டாங்களே ப்ரோ.. இப்ப ரெய்டு நடத்துறது விஜிலென்ஸ் இல்லை.. சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ்.
போலீஸ் விளக்கம் என்ன?
இதை பத்தி ரெய்டு நடக்கும் போதே மத்திய குற்றப் பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டிருக்காங்க.. அதுல என்ன சொல்றாங்கன்னா, “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார் 27.06.2026 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
அன்பில் மகேசை கைது செய்ய வேண்டாம்.. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்? என்ன காரணம்?
tamil.oneindia.com- Shyamsundar : சென்னை: லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் தவெக அரசின் காவல்துறை உயரதிகாரிகள். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதற்காக நடந்துள்ள மோசடி புகார்கள் குறித்து மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அன்பில் மகேஷ் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி மாறினீர்கள்?”: திருமாவை நோக்கி கேள்வி எழுப்பிய பிரேமலதா!
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy :தேமுதிகவிற்கு 10 தொகுதி ஒதுக்கியதால் தான் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது உண்மைக்கு புறம்பானது என ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அண்ணன் திருமாவளவன் மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதையை வைத்திருக்கிறது.
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக - அழைப்பாணையை அறிந்திருந்தும்
ilakkiyainfo.com " நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அறிந்திருந்தும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்ஷ குடும்பத்தினர் முற்றுமுழுதாக மறுத்துள்ளனர்.
விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடமிருந்து ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ அழைப்பாணையும் கிடைக்கவில்லை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திங்கள், 14 செப்டம்பர், 2026
வரலாறு மறைத்த கிட்டுவின் கொடூர முகம்! கிட்டுவின் அதிகார வெறி, துரோகம் மற்றும் சுயநல ஒழுக்க நாடகம்
![]() |
வெற்றி மாறன் : வரலாறு மறைத்த கிட்டுவின் கொடூர முகம்.
கர்னல் கிட்டு ஒருபுறம் “வீரத் தளபதி” எனப் போற்றப்பட்டவர். மறுபுறம், 1980களின் யாழ்ப்பாணத்தில் மாற்றுக் குரல்களையும் சக தமிழர்களையும் ஆயுத பலத்தால் ஒடுக்கிய
எல்.டி.டி.இ.யின் முக்கியத் தளபதி.
அந்த அதிகாரத்தின் பின்னால் நடந்தது என்ன? யார் கொல்லப்பட்டார்கள்? யார் மௌனமாக்கப்பட்டார்கள்?
ஆதாரங்களுடன் அந்த மறைக்கப்பட்ட அத்தியாயத்தைத் தேடும் ஒரு வரலாற்றுப் பதிவு இது.
யாழ்ப்பாணத்தின் கருப்புச் சர்வாதிகாரி கர்னல் கிட்டுவின் அதிகார வெறி, துரோகம் மற்றும் சுயநல ஒழுக்க நாடகம்
(இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களுக்கும் சான்றாக விளங்கும் சர்வதேச மனித உரிமை ஆவணங்கள், அதிகாரப்பூர்வ வரலாற்றுப் பக்கங்கள் மற்றும் புத்தகங்களின் விவரங்கள் அனைத்தும் வாசகர்களின் சரிபார்ப்பிற்காக இப்பதிவின் முதலாவது பின்னூட்டத்தில் (First Comment) ஆதாரக் குறிப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.)
JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு! 1987-1989
நித்தியானந்தன் உங்கள் தோழன் : JVP கலவரம்: மலையகத்தின் மறக்க முடியாத கருப்பு வரலாறு!
1987-1989
JVP கலவரத்தை பார்க்கும் முன் இன்றைய விமர்சனம் பற்றிய சிறிய பதிவை பார்த்துவிட்டு செல்வோம்...
இன்று JVP பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு மலையகத்தின் எதிர்காலம் பற்றி பேசுகிறது. தொண்டமான் தலைமையிலான *இ.தொ.கா* வை விமர்சிக்கிறது.
ஆனால் 1987-1989ல் ஒரு முழு சமூகத்தின் எழுச்சியை ஆயுதம் ஏந்தி நாசமாக்கியது யார்?
தேயிலை தொழிற்சாலைகளை எரித்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பசியிலும் பயத்திலும் தள்ளியது யார்?
ஒரு பக்கம் நாசம். மறுபக்கம் *அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்* அவர்கள் உருவாக்கிய *இ.தொ.கா* மலையக மக்களுக்கு கல்வி, வீடு, குடியுரிமை, அரசியல் அங்கீகாரம் என ஒரு சமூகத்திற்கே விடிவை தந்தது.
நேற்று எங்கள் வாழ்வை குழிதோண்டி புதைத்தவர்கள், இன்று எங்கள் தலைமையை பார்து குறை சொல்கிறார்கள்.
மலையகத்தை பற்றி பேச JVP-யின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஞாயிறு, 13 செப்டம்பர், 2026
கமல் ரஜனி சுமன் ஆகியோரை பந்தாடி துரத்திய எம்ஜியார்
Giri Sundar : மிசா காலத்தில் முக முத்து சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
முக அழகிரி அரசியலில் இல்லை.
தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மதுரையில் முரசொலி பதிப்பகம் தொடங்க வேண்டும் என கலைஞர் முடிவெடுத்தபோது அதனை கவனித்துக்கொள்ள ஒருவர் இருக்க வேண்டும் என முக அழகிரி 1980ல் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு மதுரை சென்று இன்று வரை அங்கு தான் இருக்கிறார்.
அப்போ மிசா காலத்துல அரசு ஊழியராக பணியாற்றியவர் எப்படி அரசியலில் ஈடுபட்டிருக்க முடியும்???
முக ஸ்டாலின் 80ல்திமுகவின் இளைஞரணித் தலைவர்.60களில் இருந்தே அரசியலில் இருக்கிறார்.75ல் எமர்ஜென்சிக்கு எதிராக பொது மேடைகளில் பேசிவந்தார்.
கலைஞரை கைதுசெய்தால் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று பயந்த ஒன்றிய அரசு கலைஞருக்கு நெருக்கமான அவரது மகன் ஸ்டாலினை கைது செய்து அவரை தாக்கிக் கொடுமைப் படுத்தி, கலைஞருக்கு எதிராக வாக்குமூலம் கேட்டது. அவர் மறுத்ததால் அவரது தாடை உடைக்கப்பட்டது.
சனி, 12 செப்டம்பர், 2026
திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.!
Kandasamy Mariyappan : 8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு...
EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.!
திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.!
பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்...
பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக கொண்டு வருகிறார் திருமா என்று, அன்றே எச்சரித்தேன்.!
திருமாதான், உண்மையான RSSன் கள்ளக் குழந்தை.!
நாம்தான் தவறாக புரிந்துகொண்டு, புள்ள பூச்சிகளான திரு. பழனிச்சாமி, திரு. பன்னீர்செல்வங்களை அடித்துக் கொண்டிருந்தோம்.!
திராவிட அரசியலின் விளைவால், கிராமங்களில் தலித்திய மக்கள் குடியான மக்களோடு சகஜமாக பழக ஆரம்பித்தனர். 2000க்கு பிறகு தலித்திய இளைஞர்கள், குடியானவர்களை அண்ணா, அக்கா, மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா என்று உறவுகளை சொல்லி அழைத்து வந்தனர். எங்கள் கிராமமே உதாரணம்.
கலைஞரின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர் கைது
ராதா மனோகர் : முரசொலி ஏட்டின் ஆசிரியரும் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான திரு மாறன் விடுதலை ஏட்டின் ஆசிரியர் கி வீரமணி காண்டீபம் ஏட்டின் ஆசிரியர் மாரிசாமி பா உ நீட்டோலை அடியார் டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் மு க அவர்களின் இரண்டாவது மகன் ஸ்டாலின் ஆகியோர் உட்பட முன்னணி தலைவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட சில திமுக கழக பிரமுகர்கள் பின்வருமாறு ;
நீலநாராயணன் , சிட்டி பாபு , ஆற்காடு வீராசாமி . வை பாலசுந்தரம் .கோவிந்தராசன் , தோப்பூர் வேங்கடம் . பொன் முத்துராளமலிங்கம். கு திருப்பதி .
" மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக! -வே. மதிமாறன்
மதிமாறன் " மிரட்டும் ஊடகங்கள் மிரளும் திமுக!
ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் எனக் கலைஞரை குறித்து மிகக் கேவலமான கட்டுரை வெளியிட்ட இந்துதான், அதுகுறித்த எந்த வருத்தமும் தெரிவிக்காமல், கூச்சமே இல்லாமல் தெற்கிலிருநது ஒரு சூரியன் என கலைஞரை வர்ணித்து புத்தகம் வெளியிட்டது.
இந்துவிடம் குறைந்தபட்ச அறிவு நாணயம்கூடக் கிடையாது. அவர்கள் சங்கியாக இருக்கக்கூட லாயக்கற்றவர்கள். சங்கிகளிடம் கூட அவதூறில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.
வெள்ளி, 11 செப்டம்பர், 2026
கேரளா கள்ளுக் கடைகளின் ரகசியம்: ஏன் அங்கே மட்டும் அனுமதி? விநியோகிக்கப்படும் விசித்திர தொழில்நுட்பம்
Maha Laxmi : கேரளா கள்ளுக் கடைகளின் ரகசியம்: ஏன் அங்கே மட்டும் அனுமதி? விநியோகிக்கப்படும் விசித்திர தொழில்நுட்பம்!
நாம கேரளாவுக்கு (God's Own Country) டூர் போனா... சாலையோரங்கள்ல தென்னை மரங்களுக்கு நடுவே கறாரான போர்டுகளோடு 'Toddy Shop' (ஷாப்) அப்படின்னு எழுதியிருக்கிறதைப் பார்ப்போம். நம்ம தமிழ்நாட்டுல கள்ளுக்குத் தடை இருக்கும்போது, கேரளால மட்டும் ஏன் இதுக்கு இவ்வளவு மவுசு? இதோட கொள்முதல் மற்றும் விநியோக ரகசியங்கள் இதோ!
1. கேரளாவில் மட்டும் ஏன் கள்ளுக்கு அனுமதி?
Neander Selvan : உங்கள் அமெரிக்க விசா யாரால் வழங்கப்படுகிறது என கேட்டால் "அமெரிக்க தூதரகம்" (American Embassy) என சொன்னால் தவறு. உலகம் முழுக்க அமெரிக்க விசாக்களை வழங்குபவர் ஒரு இந்தியர், அதிலும் பார்ஸி, அவரது பெயர் ஜுபின் கார்காரியா (Zubin Karkaria).
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஜுபின் கார்காரியா என்பவர் 'கூனி டிராவல்' (Kuoni Travel) என்ற சுற்றுலா நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனது தொழிலின் காரணமாக தூதரகங்கள் விசா வழங்கும் முறையை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க பொதுமக்கள் தூதரகங்களின் வெளியே நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. தூதரக அதிகாரிகளுக்கும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, வரிசையை நிர்வாகிப்பது போன்ற நிர்வாகப் பணிகள் பெரும் சுமையாக இருந்தன.
வியாழன், 10 செப்டம்பர், 2026
பணத்தை கொடுத்துட்டு போ..’ பிரசவ வலியில் துடித்த பெண்ணை தடுத்த நபர்.. தாய், சிசு உயிரிழப்பு
மாலைமலர் :கடன் தொகையை காரணம் காட்டி கர்ப்பிணியை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால் தாய் மற்றும் சிசு இருவரும் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல வாங்கியகடன் காரணமாக உரிமையாளர் தடை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதன், 9 செப்டம்பர், 2026
இந்துத்துவா ஆர் எஸ் எஸ் வருகை.. ( baps) புறக்கணிக்கப்பட்ட பெண்கள்.. மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!! - ila
மாலைமலர் :பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் ஊழியர்களின் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது.? பார்க்கலாம்..
பிரான்ஸில் நடைபெற்ற ஒரு கோவில் திறப்பு விழாவிற்காக சென்ற, இந்து மத அமைப்பான போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)-ஐ சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரை பார்வையிட்டுள்ளனர்.
![]() |
![]() |
திருமுருகன் காந்தி :நேற்று சட்டசபையில் முதல்வர் விஜயால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எவ்வகையானவை?
இதுவரை எப்படியான அரசியல் இந்தியாவில் நடந்துள்ளது என்பதை கவனித்தால் இது புரியும். இந்தியாவின் விடுதலைக்குப் பின்பான அரசியல் என்பதே தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் நடக்கும் யுத்தம் என்பதே இந்திய தேர்தல் அரசியலின் வரலாறு.
ஒன்றிய அரசுகள் நேரு காலம் முதல் மோடி காலம் வரை மாநில அரசுகளையும், மாநில கட்சியின் தலைவர்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
ஆட்சி கலைப்பு, அடக்குமுறை சட்டங்கள், ஊழல் வழக்குகள் என அனைத்தையும் மாநில தலைவர்கள் மீது ஏவினார்கள்.
செவ்வாய், 8 செப்டம்பர், 2026
மிசா’வில் விஜய் ஜெயிலுக்கு போயிருந்தா அரை மணிநேரம் தாங்கி இருப்பாரா ? சிபிஎம் சரமாரி தாக்கு!
minnambalam.com - Mathi மிசா கைதிகளை கொச்சைப்படுத்தி பேசுவது, சட்டசபையில் முதல்வர் விஜய்யின் உடல் மொழி உள்ளிட்டவைகளை முன்வைத்து சிபிஎம் கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது.
முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 8) திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். 2 நாட்களுக்கு முன்னால் பார்த்தீர்கள் என்றால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பயன்படக்கூடிய அந்த இஸ்ரோ அமைப்பையே இன்று தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது.
சிட்டி பாபுவின் மிசா சிறைக்கைதி - டயரி குறிப்பு
![]() |
கி.வே.பொன்னையன் ; 'மிசா' காலத்தில் சென்னை சிறைச்சாலையில் சிறைக் காவலர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அவர்களின் நாட்குறிப்பு கீழே.....
கொஞ்சம் நீளமான பதிவுதான் பொறுமையாக படியுங்கள். அதிகமாக ஷேர் செய்யுங்கள். எல்லோரையும் சென்றடையட்டும்.
இன்றைக்கு மிசாவை பற்றி நெருக்கடிநிலை காலத்தில் பிறக்காத முட்டாளெல்லாம் பேசுகிறான். மிசாவை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சிட்டிபாபுவின்_சிறை_டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி.
ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.2.2.1976 காலை கண்விழித்தேன்.
விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!
![]() |
மின்னம்பலம் விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!
தமிழக சட்டமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கையை முன்வைத்து கலைஞரையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.
விஜய் பேசியது என்ன?
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 1970-களில் செயல்படுத்தப்பட்ட வீராணம் குடிநீர்த் திட்டத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.40 லட்சம் கமிஷன் கோரப்பட்டதாகவும், ரூ.29 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி முரசொலி கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக விஜய் குற்றம் சாட்டினார்.
கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்
ராதா மனோகர் : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2026
‘2 பெட்டிகளில் பணம்.. அமைச்சர் பதவி’ பகீர் கிளப்பும் ஐயூஎம்எல் எம்எல்ஏ சையது ஃபாருக் பாஷா
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : “சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு 2 பெட்டிகளில் கோடி கோடியாக பணத்தை கொண்டு வந்து உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்?
என எங்களிடம் கேட்டனர்” என ஐயூஎம்எல் கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். கட்சிக் கூட்டத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இங்கு சோபா பற்றி விமர்சித்தனர். ஆனால், என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்து போடுங்கள் என்றார்கள். நாங்கள் கோடிக்குச் சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொள்கையோடுதான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.







