நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
வெள்ளி, 17 ஜூலை, 2026
தி.மு.க. - எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் : காங்கிரசுடன் சேர வேண்டாம்; மோடியை விமர்சிக்காதீங்க!
dinamalar.com : 'பார்லிமென்டில் எந்த விவகாரத்திலும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டாம்; பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை விமர்சிக்க வேண்டாம்' என, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி, தி.மு.க., - எம்.பி.,க்களுடன், லண்டனில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று முன்தினம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சுகிதா சாரங்கராஜ் : பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை மிரட்டல்
![]() |
![]() |
முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழா தொடங்கி தவெகவின் கட்சி விழாக்கள் வரை பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. இப்படி துளியும் பத்திரிகையாளர்களை மதிக்காத ஒரு அரசு தான் விஜயனை விசாரிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களாகிய நமக்கு மிரட்டல் விடுக்கிறது.
பட்டு வேட்டி சட்டையில் வந்தார், டிபன் பாக்ஸ் கொண்டு வந்தார் என்ற கணக்கில் தான் ஏற்கனவே ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட கேள்வி எழுப்பினால் நீ யார் , எந்த டிவி என்ற நோக்கில் தான் சில அரசியல் தலைவர்களின் பதில் இருக்கிறது. சம்மந்தப்பட்ட பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கான பதில் வருவதில்லை. ஊடக விவாதங்களில் பங்கு பெறும் பத்திரிகையாளர்கள் மீதும் இதே தாக்குதல். அதன் நீட்சி தான்
பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணை சம்பவம்.
பத்திரிகையாளர் என்பவர் பல்வேறு நபர்களிடம் பேசுவதும் செய்திகளை சேகரிப்பதும் அவர்களது தொழில் சார்ந்த விவகாரம். அதற்காக அந்த நபர்கள் செய்யும் குற்றங்களுக்கு எல்லாம் பத்திரிகையாளர்கள் பொறுப்பேற்க முடியுமா.?
புதிய தலைமுறை விஜயன் கைது -ரூ.35 கோடி பேரம்... 'மேகாலயா பிராஜக்ட்' சதி - விஜயனிடம் விசாரணை -
minnambalam.com - Kavi : புதிய தலைமுறை நெறியாளர் விஜயனை கைது செய்தது தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது,
தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் விஜயன், போலீசார் விசாரணைக்கு சென்ற நிலையில் அவர், கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை - நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்கும் நிலையில்
hindutamil.in : சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்பி.க்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய நியாயமான உரிமைகளைக் காக்கவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்ட மசோதாவாக இருந்தாலும், மாநில உரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி மாண்பினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு அமையும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனாவை அடிக்க பாய்ந்தாரா அமைச்சர் சந்திரசேகரன்?
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்த இக்கூட்டத்தில், திடீரென. கூட்டத்தின் நோக்கம் மற்றும் விவாதங்களின் போது ஏற்பட்ட கருத்து மோதல்கள், குறித்த நிகழ்வை ஒரு பதற்றமான சூழலுக்கு இட்டுச் சென்றது. இக்காணொளியில் பதிவாகியுள்ள சர்ச்சைக்குரிய கைகலப்பு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.
வியாழன், 16 ஜூலை, 2026
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணைக்கு அழைத்து செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறை!
![]() |
Uma Pa Se : பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை!
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
OCI card holders இந்திய குடியுரிமையோடு இலங்கை குடிமக்களாக இருந்து இந்திய சேவையை செய்வார்கள்
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு இந்திய அரசு தேடி தேடி வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வழங்குகிறது!
பூரண இலங்கை குடியுரிமை உள்ள இந்திய வம்சாவளி மக்களை மீண்டும் ஒரு அரை இந்தியர்களாக மாற்ற முயல்கிறது.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களை இந்த திட்டத்தில் உள்வாங்க முடியும்
ஒரு வேளை அகண்ட பாரத கனவு திட்டமோ?
ஏற்கனவே இலங்கை அமைச்சரவையியே இந்திய குடியுரிமையாளர்கள் உள்ளனர்
இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள்?
அடிக்கடி அஜித் தோவாலை ( முன்னாள் ரா அதிகாரி+ இந்நாள் பாதுகாப்பு ஆலோசகர்) பகிரங்கமாகவே சந்திக்கிறார்கள்
ஆனால் தமிழகத்தில் உள்ள முகாம் வாழ் மக்களை ( 90 வீதம் இந்திய வம்சாவளி) இன்னும் அகதிகளாகவே இந்திய அரசு வைத்திருக்கிறது
திரு அல்பிரட் துரைப்பா 100 பிறந்த நாள்! யாழ்நகர மக்கள் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீரிலும் இவரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது
ராதா மனோகர் : திரு அல்பிரட் துரைப்பா என்ற வாராது வந்த மாமணிக்கு இன்று 100 பிறந்த நாள்
இலங்கையின் மொத்த தமிழ் அரசியலும் அல்பிரட் துரைப்பா என்ற மனிதனின் முன்னால் நிரந்தர குற்றவாளியாக கூனி குறுகி நிற்கிறது.
எந்த காலத்திலும் எந்த நியாயமும் கூற முடியாதவாறு குற்றவாளி பட்டத்தை சுமந்து கொண்டு நிற்கிறது இலங்கை தமிழ் அரசியல்
இனி வரும் சந்ததிகளுக்கும் கூட இந்த தமிழ் தேசிய அரசியலானது விட்டு சென்றது,
வெறும் துப்பாக்கி குண்டுகள் மட்டுமே
உலகின் எந்த இனத்திற்கும் இந்த கேவலம் வரக்கூடாது.
தமிழ் என்றால் என்னவென்று தெரியாது
தேசியம் என்றாலும் என்னவென்றும் தெரியாது
அரசியல் என்றாலும் என்னவென்றும் தெரியாது
தெரிந்தது எல்லாம் வெறும் துப்பாக்கிகளும் அதன் குண்டுகளும் மாத்திரமே.
புதன், 15 ஜூலை, 2026
இலங்கை நாடு எப்படி உருப்படும்? படாது
ராதா மனோகர் : இதுதான் இறக்குமதியாளர்கள் மாபியாவின் கைங்கரியம்
உள்ளூர் உற்பத்திக்கு போட்டியாக இறக்குமதியாகும் பொருட்களுக்கு அந்நிய செலாவணி எப்படி கிடைக்கிறது
அரபு வீடுகளில் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களும் உலகம் முழுவதும் குளிர் வெயில் கடும்பனிகளில் காய்ந்து சருகாகி போனவர்களும் இலங்கைக்கு கொண்டுவரும் பணம்தான் அந்நிய செலாவணி
Jaffna parents undermine their children's cognitive development through constant tuition, rote memorization and the obsession with coming first in class
![]() |
Thulasi Muttulingam : The more I see of how Jaffna parents undermine their children's cognitive development through constant tuition, rote memorization and the obsession with coming first in class, the more grateful I am that my father stepped in to ensure my siblings and I didn't grow up that way.
I hadn't appreciated the significance of that intervention when I was young. I only wish I'd had the opportunity to thank him for it.
My mother was the typical tiger mum who would happily have followed the community norm of beating us for anything less than perfect scores.
As I was telling another teacher recently, schools really need to stop publishing class rankings on report cards. First, second, third... all the way down to 30th out of 30.
It isn't the child who comes last that we should feel most sorry for. Usually, after a few beatings, parents resign themselves to the fact that the child simply isn't academic.
It's the poor child who consistently comes second who gets hammered every single time.
My father had been that poor sod.
He came second throughout much of his school life and was beaten for it. As a result, he developed a lifelong allergy to that particular parenting strategy.
It was one of the very few parenting decisions on which he drew a firm line with my mother.
செவ்வாய், 14 ஜூலை, 2026
திமுக: விசாரணை கைதி சபரிவர்மன் மரணத்துக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?’
hindutamil.in - தமிழினி : சென்னை: அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது ‘சாரி வேண்டாம் சார். எங்களுக்கு நீதி வேண்டும்' என விஜய் சொன்னார். இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர் என திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாகர்கோவிலில் விசாரணைக்கு சென்ற மாற்றுத்திறனாளி சபரிவர்மன் மரணமடைந்துள்ளார். நீதிமன்றக் காவலில் 10-ஆம் தேதி உடல் நலத்துடன் நன்றாக இருந்த சபரிவர்மனை நேரில் பார்த்த உறவினர்கள், 13-ஆம் தேதி இறந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுதந்திரத்தையும் விடுதலையையும் சிங்களவர்களை விட ஈழத்தமிழர்களே அனுபவிக்கின்றார்கள்
இன்றைய காலகட்டத்தில் புலிகளின் அழிவினால் உருவாகிய சுதந்திரத்தையும் விடுதலையையும் சிங்களவர்களை விட உச்சபட்சமாக ஈழத்தமிழர்களே அனுபவிக்கின்றார்கள் - அருண் சித்தார்த்
Arulanandam Arun : யாழ் பூப்புனித நீராட்டு விழா - 1- துப்பாக்கி முனையில் திணிக்கப்பட்ட ஒழுக்கம்
புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வடக்கு–கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, கடுமையான சமூக மற்றும் உடை ஒழுங்குகள் அன்றைய காலத்தில் விதிக்கப்பட்டிருந்தன.
உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட கேரள மருத்துவ மாணவி! மதம் மாற வற்புறுத்தி அடித்து கொலை
tamil.onindia.com : உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட கேரள மருத்துவ மாணவி... மரணத்திற்கு முன் என்ன நடந்தது?
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த 21 வயதான சாவரியா பசந்த், உஸ்பெகிஸ்தானில் உள்ள Bukhara State Medical University-யில் முதல் ஆண்டு MBBS படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த மலப்பുറം மாவட்டத்தைச் சேர்ந்த சதாருல் அனம் என்பவரும் அவரது வகுப்புத் தோழர்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது சாவரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப தகவல்களில், லேப்டாப்பால் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, சதாருல் அனம் கைது செய்யப்பட்டு தற்போது உஸ்பெகிஸ்தான் போலீஸ் காவலில் உள்ளார்.
திங்கள், 13 ஜூலை, 2026
புலிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு
![]() |
ராதா மனோகர் : திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்
அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை எல்லாம் கொன்றொழிப்பதில் குறியாக இருந்தார்கள்
அதில் ஒப்பமிட்ட ராஜீவ் காந்தியையே கொன்றார்கள்
அந்த ஒப்பந்தத்தில் மக்களுக்கு எதிரான ஏதாவது ஒரு ஒற்றை விடயமாவது இருக்கிறதா?
இல்லையே!
அந்த ஒப்பந்தம் சாதாரண மக்களுக்கு ஒரு ஜனநாயக வெளியை பெற்று தந்தது
இதுதான் புலிகளை அச்சுறுத்திய விடயம்
சாதாரண மக்கள் மகிழும்போதெல்லாம் பயந்து நடுங்குவார்கள் புலிகள்
அந்த பயத்தின் காரணமாக அந்த சாதாரண மனிதர்களை கொல்வார்கள்
சாதாரண மனிதர்களின் சுயசிந்தனை சுயமரியாதை எல்லாம் புலிகளுக்கு பெரும் பயத்தை கொடுத்தது
ஞாயிறு, 12 ஜூலை, 2026
தமிழக இடதுசாரிகளின் புதிய கள்ளக்காதலி தவேக
Amudhan R P : இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் தவெகவிற்கு தங்கள் கட்சிகள் கொடுக்கும் ஆதரவை நியாயப்படுத்த, திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி, அது மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே நம்பியிருந்தது, அதன் பாஜக எதிர்ப்பு உறுதியானதல்ல என்று பரப்பிவருகின்றனர்.
இதை அதிகாரப் பூர்வமாக சண்முகம் தான் தொடங்கிவைத்தார்.
திமுகவை முதலாளித்துவக்கட்சி என்று சொல்லி அதை வசையாகப் பயன்படுத்தி வருகிறார் அவர்.
அமெரிக்காவில் ‘கம்யூனிஸ்ட் ‘ என்பது எப்படி ஒரு வசைச்சொல்லோ, அந்தப் பொருளில் திட்டி வருகிறார்கள்.
திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி தான். இன்னும் சொல்லப் போனால் அது லிபரல் டெமாக்ரெடிக் கட்சி என்று தான் வகைப்படுத்தமுடியும்.
ஆனால் அது சண்முகம் போன்றோர் சொல்கிறபடி வெறும் நலத்திட்ட அரசை மட்டுமா நடத்தியது?
சனி, 11 ஜூலை, 2026
ஜெய்ப்பூர் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா தற்கொலை ! பள்ளிக்கூட நிர்வாகமும் பெற்றோரும் செய்த தவறு
Yasmin Nihar : ஜெய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியில் கடந்த நவம்பர் 2025 ல் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா உயிரிழந்த சம்பவம் ஒவ்வொரு பெற்றோரின் மனதையும் உலுக்குகிறது.
கடந்த சில நாட்களாக வெளியான புதிய CCTV காட்சிகள், இந்த வழக்கில் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அமைராவின் பெற்றோர், தொடர்ச்சியான bullying, ஆசிரியர்களால் தனது மகளின் புகார்கள் புறக்கணிக்கப்பட்டது, மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் இவையெல்லாம் இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
அவள் தினமும் கதறி அழுது ஆசிரியையிடம் உதவி கேட்டபோது, ஆசிரியை மொபைலில் ஸ்க்ரோல் செய்தபடி அலட்சியமாக திருப்பி அனுப்பினாள்! இறந்த நாளிலும் அந்த குழந்தை பலமுறை ஓடி வந்து கெஞ்சியும், அந்த பயங்கர ஆசிரியை மொபைலை விட்டு தலையை தூக்கக்கூட இல்லை!
செந்தில் பாலாஜி தேர்தல் வழக்கு தள்ளுபடி
நக்கீரன் : தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி போட்டியிட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான செந்தில்குமாரை 2 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த வெற்றியை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்ற வாக்காளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
ராதா மனோகர் : சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள்
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால் எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள்
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள் ... வென்றார்கள்.
ப ஜீவா கூட இலங்கையில் சில காலம் இருந்து பிரசாரம் செய்திருந்தார்
வெள்ளி, 10 ஜூலை, 2026
ஈரான் மதவெறி அரசும் ஈரான் மக்களும்
ராதா மனோகர் : நான் புரட்சியை பேசும்போது புரட்சியை பற்றிய நூல்கள் பற்றி பேசவில்லை
நான் எனது நாட்டை இழந்தது பற்றி பேசுகிறேன்
என் பெற்றோர் வாழ்நாள் முழுவதும் கட்டி எழுப்பிய வீடு வாசல் கல்வி எல்லாவற்றையும் பறிகொடுத்து நாடு நாடாக அலையும் நிலையை உண்டாக்கிய அந்த புரட்சி பற்றி பேசுகிறேன்
ஈரான் என்ற ஒரு நல்ல நாட்டை சூறையாடிய இஸ்லாமிய புரட்சி பற்றி பேசுகிறேன்
உலகின் மிக பழமையான மனிதர்கள் உருவாக்கிய நாகரிக தேசத்தை உலகின் மோசமான ஒரு சிறைச்சாலையாக மாற்றிய இசுலாமிய புரட்சி பற்றி பேசுகிறேன்
அது பெண்களின் சிறைச்சாலை
அது மாற்று கருத்தாளர்களின் சித்திரவதை கூடம்
அது அரச பயங்கரவாதத்தின் தலைமை செயலகம்
நான் இங்கே கூறப்போவது உங்களில் சிலருக்கு சங்கடத்தை தரலாம்
இந்த பையாஸ்க்கோப்பை ஏற்கனவே நான் பார்த்துள்ளேன்
இது எப்படி முடியும் என்பதையும் நான் அறிவேன்
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
hindutamil.in - ஆர்.பாலசரவணக்குமார்: சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
நடிகன் விஜய்யை முதல்வர் ஸ்டாலின் ஏன் கைது செய்யவில்லை? வரலாற்று தவறு செய்துவிட்டார்?
Rebel Ravi : நான் ஸ்டாலின் மீது முதலில் மதிப்பே வைக்காதவன்.
கலைஞரின் கீழ் வளர்ந்தவன் என்பதால் ஸ்டாலின் எனக்கு ஆளுமையாய்த் தெரியவில்லை.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மதிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் கரூரில் அவர் வரலாற்றுப் பிழை செய்தார் என்று அன்றே சொன்னென்.
ஸ்டாலின் அப்படி மன்னிக்கக் கூடியவர் அல்ல.
அவரை பல ஆண்டுகளாய்ப் பார்த்து வருகிறேன்.
அவர் ஜெ பாணியைப் பின் பற்றியவர்.
ஆட்சிக்கு வந்த பின் பென் மீடியா அவரை ஒரு மென்மையான மனிதராக அடையாளம் காட்டியது.
அவரது இயல்பு அது அல்ல.
கரூரில் விஜயை ஏர்போர்ட்டுலேயே கைது செய்து சிறையில் அடைத்து இருக்க வேண்டும்.
அன்பில் அழுகை செந்தில் வருகை முதல்வர் நள்ளிரவு வருகை எல்லாம் அபத்தத்தின் உச்சம்.
கூட்டத்தை நடத்தியவனே ஓடுகிறான்.
நீங்கள் ஏன் போனீர்?
அது அரசு நிகழ்வில் நடந்த மரணம் அல்ல.
இவ்வளவு ஓவர் ரியாக்சன் ஏன்?
150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 40 மரணம் பெரிய டிராஜடி அல்ல.
வரலாற்றுப் பிழை புரிந்து இன்று தமிழ்நாடு அழியக் காரணம் ஆகி விட்டார் ஸ்டாலின்.
தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி செல்வாக்கு செலுத்திய சர்ச்சைக்குரிய சாமியார்.
![]() |
Paranji Sankar : இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சர்ச்சைக்குரிய சாமியார்....
சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள்.
நீல நிற டொயோட்டா காரை அவர் தானே ஓட்டிச்செல்வார். இது மட்டுமின்றி, அவரிடம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா, 19 இருக்கைகள் கொண்ட டோர்னியர் மற்றும் மால்-5 விமானங்கள் உள்ளிட்ட பல தனியார் ஜெட் விமானங்கள் இருந்தன. பிரம்மச்சாரியே அவற்றையும் இயக்குவார்.
கோபம் வந்தால் எந்த அதிகாரியையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மற்றும் அமைச்சர்களின் துறைகளை கூட மாற்றக்கூடிய அளவிற்கு அவரது அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
எப்படி இருந்த தமிழ்நாடு ? கேவலம் இப்படி சிக்கிக்கொண்டதே!
மு.ரா. விவேக் : 1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம்
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம்
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம்
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம்
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!






