செவ்வாய், 22 அக்டோபர், 2024

சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்- Cadillac.Sky blue with Navy blue top Automatic Left hand drive

May be an image of 2 people, car, hood ornament and text ராதா மனோகர் : சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது

திங்கள், 21 அக்டோபர், 2024

அந்தரங்கங்களை கூறுபோட்டு விற்கும் யூ டியூபர்கள் .. இர்பான் வகையறாக்கள்

May be an image of 5 people, hospital and text

 LR Jagadheesan :  ஒருபக்கம் உங்கள் அந்தரங்கத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்களே கூவிக்கூவி கூறுபோட்டு விற்று காசாக்குகிறீர்கள்.
மறுபக்கம் என் தனிப்பட்ட வாழ்வு பற்றி கருத்துசொல்லவோ விமர்சிக்கவோ அடுத்தவருக்கு உரிமை இல்லை என்கிறீர்கள். அது எப்படி எடுபடும்?
பொதுச்சந்தையில் உங்களை நீங்களே அதிக விலைக்கு விற்கத்தானே உங்கள் வாழ்வின் அந்தரங்கமான ஒவ்வொன்றையும் தினம் தினம் காட்சிப்படுத்துகிறீர்கள்?
உங்கள் வாழ்வை காட்சிச்சந்தையின் கடைச்சரக்காக்கி விற்றபின் அதன்மீது கருத்துசொல்லும்/விமர்சிக்கும் உரிமை உங்களுக்கேது?
அதை காட்சிச்சந்தையில் தம் கண்களால் வாங்கிய பார்வையாளர்கள் தானே அதன் உரிமையாளர்கள்? அவர்களை எப்படி நீங்கள் தடுக்கமுடியும்?

குவைத்தில் பாதிக்கும் மேல் திருமணம் ஆகாத இளம் பெண்கள்... தொடரும் விவாகரத்துகள்

 tamil.samayam.com - மகேஷ் பாபு  : சர்வதேச அளவில் பண மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது? என்றால் குவைத் என்று தான் பதில் கிடைக்கும்.
எண்ணெய் வளங்களால் செல்வம் கொழித்து காணப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து பெரிய அளவில் பொருள் ஈட்டி வருகிறது.
இந்நாட்டில் பிறப்புரிமை பெற்றிருந்தால் கல்வி, வேலை, திருமணம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
குவைத் நாட்டில் பெண்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

தேசம் நெட்  -arulmolivarman :        உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Canada நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இந்திய தூதர் சஞ்சய் வர்மா

மாலை மலர்  :  ஒட்டாவா கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.
மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா Vs சத்யன் மோக்கேரி Vs நவ்யா.

 மின்னம்பலம் -Selvam : வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக இன்று (அக்டோபர் 19) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி போட்டியிட்டார். மேலும், அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

உ.பி.யில் ரூ.500 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை கிழித்த தபால்காரர்-வீடியோ

மாலைமலர் : “உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக வி.கே.சிங் பெயர் தீவிரமாக பரிசீலனையில்

மின்னம்பலம் - Selvam :   தஞ்சை தமிழ் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அக்டோபர் 18 ஆம் தேதி  (நேற்று) சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இந்தி மொழி விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவில் இவ்வாறு நடந்ததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர்.’

ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை.. முன்னாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

 tamil.oneindia.com - Shyamsundar : கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. அதன்படி ஈஷா மீது உள்ள மற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.
இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இந்த வழக்கின் பரபரப்பு அடங்கும் முன்பே.. ஈஷா யோகா மையம் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

 மாலை மலர் :  ராஞ்சி ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.

சனி, 19 அக்டோபர், 2024

ஆர் எஸ் எஸ் தடை - பொருளாதார தடை - கனடாவில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள்

May be an image of 1 person and text

ராதா மனோகர் : ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடைசெய்யவேண்டும்  
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
இது  போன்ற கடுமையான முழக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக  கனடாவில் எழுவது சாதாரண நிகழ்வுகள் அல்ல!
இவை  வெறும் கனடா மட்டும் தொடர்புடைய நிகழ்வுகள் மட்டுமல்ல.
அமெரிக்காவும் கனடாவும் பல வழிகளில் நெருங்கிய  சகோதர நாடுகள்தான்
அமெரிக்காவின் கருத்துக்களும் கனடாவின் கருத்துக்களும் பல விடயங்களில் வேறு வேறு அல்ல.
இந்திய மதவாத அரசியலை உலக நாடுகள் எப்படி நோக்குகின்றன என்பதற்கு தற்போதைய கனடாவின் இந்துத்வாவுக்கு எதிரான கருத்துக்கள் கவனத்திற்கு உரியன.
இந்திய மதவாத அரசியல் வெறும் தெற்காசிய பிரச்சனை என்ற கட்டத்தை தாண்டி இது ஒரு அமெரிக்க கனடா மற்றும் உலக நாடுகளின் முக்கிய பிரச்சனையாக மாறிக்கொண்டு வருகிறது.
இதற்கான அறிகுறிதான் கனடாவில் எழுந்துள்ள ஆர் எஸ் எஸ் தடை என்ற முழக்கம்.

உக்ரைன் - ’ரஷ்யாவுக்காக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்

 புதிய தலைமுறை : உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திராவிட நல்திருநாடும் .. ஆளுநரின் தமிழ் மொழி விரோதம்

வெள்ளி, 18 அக்டோபர், 2024

முதலமைச்சர் மு.கஸ்டாலின் : இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்

 மாலை மலர் :  சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் 'இந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

‘ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்’: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

BBC Tamil  :  கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேலிய படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர்.
ஹமாஸ் தலைவரான, 61 வயதான சின்வார், காஸா முனையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைகளில் மெய்க்காப்பாளர்கள் மற்றும் இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தி பெருமளவு காலத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.

கோவை இஷா - போலீசார் 23 பக்க விரிவான அறிக்கை தாக்கல்- பலர் காணாமல் போயுள்ளனர் - உள்ளேயே தகனமேடை - காலாவதியான மருந்துகள்

 tamil.oneindia.com -Mathivanan Maran: தமிழக போலீஸ் பகீர் பதில்- கோவை ஈஷா மைய வழக்கை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
டெல்லி: கோவையில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் இருந்து பலரும் காணாமல் போயிருக்கின்றனர்; ஈஷா யோகா மையத்துக்குள்ளேயே தனியாக தகன மேடையும் அமைக்கப்பட்டுள்ளது; ஈஷா யோகா மையத்தில் காலவதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்று உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்களை தமிழ்நாடு போலீசார் தெரிவித்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

சசிகலா : அ.தி.மு.க.வை பலப்படுத்தி 2026-ம் ஆண்டில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்:

 மாலை மலர் :   சென்னையில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அ.தி.மு.க. தற்போது சரியாக இல்லை. அ.தி.மு.க.வில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன.
கட்சியை வலுப்படுத்தி 2026-ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம். சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தைப் பிரித்துள்ளார்கள்.
பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டி பிள்ளைக்கு இது என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொத்து பிரிப்பார்கள். அதேபோல் தான் தற்போது இவர்கள் அரசாங்கத்தைப் பிரித்து வைத்துள்ளார்கள்.

வியாழன், 17 அக்டோபர், 2024

11 நிமிடங்கள்.. உலகில் முதல்முறையாக சொர்க்கத்துக்கு போய் வந்த பெண்?

tamil.oneindia.com - Hemavandhana   :  நியூயார்க்: சொர்க்கத்தில் தன்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்து விட்டு வந்ததாக ஒரு பெண் கூறி, மொத்த உலக மக்களுக்கும் ஆச்சரியத்தை கிளப்பிவிட்டுள்ளார்.. இந்த அதிசய சம்பவம்தான் பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆன்மாவுக்கும் என்றும் அழியவே அழியாது கிடையாது என்று ஆன்மீகம் காலம் காலமாக சொல்லி வரும்நிலையில், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? என்பதை பற்றின ஆய்வுகள் இன்னமும் உலக அளவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..
மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் எல்லாமே.. மூளை செயலிழந்துவிட்டால், உடலும், நினைவுகளும் அழிந்துவிடும் அழிந்துவிடுவதால், மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இல்லை என்கிறார்கள் பெரும்பாலானோர்.

மகாராஷ்டிரா - அகிலேஷ் யாதவ்: இந்தியா கூட்டணியில் கூடுதல் இடங்கள் ...

 மாலை மலர் : மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 288 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நாளை மகாராஷ்டிரா செல்கிறார்.

இலங்கை வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு - 2027ஆம் ஆண்டுக்குள்.. அரசு வருமானம் 15% ஆக உயர்த்தப்படவேண்டும்!

 இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு  - 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானம் 15% ஆக உயர்த்தப்படவேண்டும்!
ரணில் இன்று ஆற்றிய, உரையின் முழு விபரம்
இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீது கனடா பொருளாதார தடை விதிக்க ஆலோசனை

 

 மாலைமலர் : ஒட்டாவா - கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.
நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 140 பேர் உயிரிழப்பு

 மாலை மலர் : அபுஜா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

புதன், 16 அக்டோபர், 2024

கடல் அலைகளை அலையாத்தி காடுகள் எப்படி எதிர்கொள்கின்றன

சுனாமி போன்ற பாரிய கடல் அலைகளை அலையாத்தி காடுகள் எப்படி எதிர்கொள்கின்றன
என்பதை இந்த காணொளியில் தெளிவாக காணலாம்  
அலையாத்தி மரங்கள்
விக்கிபீடியா   :    அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (mangrove) எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அம்மா உணவகங்களில் இலவச உணவு'- முதல்வர் உத்தரவு

 நக்கீரன் : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் மலையக தலைவர்களை பார்த்து......

 ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களை பார்த்து நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் கேட்டபொழுது
நாங்கள் இலங்கையில் இடதுசாரி சோஷலிச அரசை நிறுவுவோம்  அங்கு சிங்களவர் தமிழர் பிரச்சனையே இருக்காது
எனவே இதைக்காட்டி நீங்கள் (பிரிட்டிஷ்) இங்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள் இடதுசாரிகள்.
அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாக்குவங்கி மூலம் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ்காரன் தரவந்த பாதுகாப்பு விடயங்களை உதாசீனம் செய்து . நீ போ நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்றார்கள் இந்த இடதுசாரிகள்
சிங்கள மக்கள் மத்தியில் பெறமுடியாத செல்வாக்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளால் ஈடு கட்ட முடியும் என்று நம்பி ஒரே கல்லில் பிரிட்டிசாரையும் பகைத்து சிங்கள மக்களையும் பகைத்து தங்களை நம்பிய இந்திய வம்சாவளி (மலையகம்) மக்களின் வாழ்வை சூறையாடிய வரலாற்று குற்றவாளிகள் இந்த இடது சாரிகள்.
சிங்கள மக்கள் ஒருபோதும் இடதுசாரிகள் பக்கம் பெரிதாக செய்யவில்லை  அவர்கள் பௌத்த சாசனத்தையே பின்பற்றுபவர்கள்
இந்திய வம்சாவளி மக்கள் இந்த இடது சாரிகள் பின்னால் போனதன் விளைவு இவர்களை கம்யூனிஸ்டுகள் என்று  கருதி பயந்தார்கள் சிங்கள மக்கள்
இதனால்தான் முதல் அடியிலேயே வாக்குரிமை குடியுரிமைகளை அவர்கள் பறித்தார்கள்.
இன்று வரை இந்த பெரிய மோசடியை எல்லோரும் சேர்ந்து திறமையாக மறைத்து விட்டார்கள்