வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

  hindutamil.in :  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறையில் கேத் லேப் சிகிச்சை மேற்கொண்டோர் எண்ணிக்கை 20 ஆயிரம் பேரைக் கடந்ததையடுத்து மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதயவியல் துறை கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 3 கேத்லேப் மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்ட்ரக்சுரல் இன்டடர்வென் சன்ஸ் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி ஆகியோரின் பேச்சால் அனல் பறந்த அரசியல் களம் இப்போது எப்படி மாறியுள்ளது?

 bbc.com - சாரதா வி  : தஞ்சாவூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம், அரசியல் பேச்சின் எல்லைகள் குறித்த பழைய விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில், தமிழ் மக்கள் அரசியலை வெறுமனே கேட்கவில்லை; இரவு நேரங்களில் அது நிகழ்த்திக் காட்டப்படுவதைப் பார்க்கவும், கேட்கவும் மக்கள் திரண்டனர்.
தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், யூடியூப் சேனல்கள், ரீல்ஸ் ஆகியவை அரசியலை சில விநாடிகளுக்கு உள்ளாகச் சுருக்குவதற்கு முன், "மேடைப் பேச்சு" என்ற தனிப்பட்ட அரசியல் வடிவம் இருந்தது. ஒரு மைக்கிரோஃபோன், தற்காலிக மேடை, வரிசையாக ஒளிரும் டியூப் லைட்டுகள், கூட்டத்தைத் தாண்டி குரலை எடுத்துச் செல்லும் ஒலிப்பெருக்கிகள், மேலும் மறுநாள் காலை குறித்த கவலை ஏதுமின்றி பல மணிநேரம் பேசும் பேச்சாளர்கள்.

சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக அரசியல் விவாதங்களுக்கு திராவிடர் கழகம் (திக) மேடையைப் பயன்படுத்தியது. அதிலிருந்து உருவான திமுக, அதே மேடையைத் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது.

மாண்டெக் சிங் அலுவாலியா-தமிழகத்துக்கு ஏன் ஆபத்து? மே 17 இயக்கம் எச்சரிக்கை!

 minnambalam.com - Mathi : தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மாண்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜிப் ஷா, எம். சுரேஷ் பாபு ஆகியோர் முதல்வர் விஜய்யை சென்னையில் நேற்று ஆகஸ்ட் 13-ந் தேதி சந்தித்தனர்.
இந்த குழுவின் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியாவால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்கிறது மே 17 இயக்கம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

இலங்கை விமானப்படையின் பெரும் பதவிக்கு தமிழ் பெண் வசந்தி முருகேசு தெரிவு

May be an image of text

 Rks Arulmolithevan ; இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண் வசந்தி முருகேசு.
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார் தமிழ் பெண் வசந்தி முருகேசு.
Airport & Aviation Services (Sri Lanka) நிறுவனத்தின் பாதுகாப்பு மார்ஷல் (Security Marshal) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள வசந்தி முருகேசு, இந்தப் பொறுப்பை வகிக்கும் இலங்கையின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புமிக்கதும், அதிக கவனம் மற்றும் தொழில்முறை திறன் தேவைப்படுவதுமான பணிகளாக கருதப்படுகின்றன.

காயங்களுடன் வீதி​யோரத்தில் விடப்பட்ட சிறுமி மீட்பு - வத்துகாமம்

 ilakkiyainfo.com : வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில், வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் வியாழக்கிழமை (13) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
காலை 6:15 மணியளவில் குறித்த பகுதிக்கு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சிறுமியை அங்கு இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அச்சிறுமியின் அழுகைக் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பிரதேசவாசிகள், உடனடியாகப் பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்திய அரசு கேதீஸ் லோகநாதனை புறந்தள்ளி ஒரு இந்தியரான வரதரராஜ பெருமாளை ஏன் முதலமைச்சராக்கியது?


 ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை  கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள்  இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

வைகோ என்றொரு பிணம் தின்னி

May be an image of one or more people and text that says "AMEN AM VAIKO MARI AMENT"

ராதா மனோகர் : வைகோ என்றொரு பிணம் தின்னி!
 வைகோவின் பாராளுமன்ற பேச்சுக்களை ராகுல் காந்தியை கொண்டு வெளியிட்டார் வைகோ என்கின்ற    வையாபுரி கோபாலசாமி நாயக்கர்!
இந்திய அரசியலில் இந்த மனிதனை (வைகோ) போன்ற கேவலமான ஐந்து கிடையவே கிடையாது.
தந்தை ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு அந்த வீர பிரதாபங்களை புத்தகமாக எழுதினார்.
பின்பு  அதையே ராஜீவின்  மகன் ராகுல் காந்தி மூலம்   வெளியிடும் எருமை தோல் வைகோவிற்கு மட்டுமே உண்டு.
ராகுல்காந்திக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது .
அது ஒரு வீண் பிறவி  என்பது இதன் மூலமும் தெரிகிறது.
வைகோ எப்படி ஒரு கோடாரி காம்பாக செயல்பாட்டார் என்பதை சற்று விபரமாக பார்ப்போம். 

May be an image of crowd

1984 இல் இந்திரா காந்தியின் உயிரிழப்புக்கு பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 404 தொகுதிகளில் வெற்றி பெற்றது 
பாஜக வெறும் 2 எம்பிகளை மட்டுமே பெற்றது 
1984 BJP Lok Sabha MembersDr. A. K. Patel – Mehsana constituency, Gujarat
Chandupatla Janga Reddy – Hanamkonda constituency, Andhra Pradesh
ராஜிவ் காந்தி பிரதமரானார் 
போபோர்ஸ் ஊழலில்  ராஜிவ் காந்திக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்பு நீதிமன்ற தீர்ப்பு வந்தது  

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

திமுக பாஜக நெருக்கம்? கனிமொழி சோமு எம்.பி அதிரடி : அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது:

 hindutamil.in :: ​பாஜக​வுடன் திமுக நெருக்​கம் காட்டி வரு​வ​தாக அரசி​யல் வட்​டாரத்​தில் பரவலாக பேசப்​பட்டு வரும் நிலை​யில், ‘‘அரசி​யலில் எதிரி, நண்​பர் என்று யாருமே கிடை​யாது’’ என்று திமுக எம்​.பி. கனி​மொழி சோமு தெரி​வித்​திருப்​பது, கூட்​டணி குறித்த யூகங்​களை அதி​கரித்​துள்​ளது.
தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது.
கூட்​ட​ணி​யில் இருந்து பிர​தான கட்​சிகள் அனைத்​தும் வில​கிய நிலை​யில், பாஜக​வுடன் திமுக திடீர் நெருக்​கம் காட்டி வரு​வ​தாக பேசப்​பட்டு வரு​கிறது.

புலிகள் இயக்க நிறுவனர் செட்டி தனபாலசிங்கத்தின் கதை இரண்டாம் பாகம் - காணொளி

ஈழப்போராட்டத்தின் முன்னோடி புலிகள் இயக்கத்தின் நிறுவனர் செட்டி தனபாலசிங்கத்தின் கதை முதலாம் பாகம் காணொளி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சமூக ஊடக களப்பணியாளர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத திமுக தலைமை ?

 Vasu Sumathi : இதுவரை கட்சி மூலமாக 5 பைசா கூட கைநீட்டி வாங்காமல், ஆயிரம் முறை 200 ரூபாய் உபி என்று பெயர் வாங்கிய ஒரு - உறுப்பினர் அட்டை கூட இல்லாத - உண்மை திராவிட சிந்தனையாளனின் குரல்..
​கழகத் தலைமை சற்றே நிஜ நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்!
​இன்றைய அரசியல் களம் தெருமுனைக் கூட்டங்களிலோ அல்லது மேடைப் பேச்சுகளிலிருந்து மக்களின் கைபேசிகளுக்குள் நகர்ந்துவிட்டது.
கொள்கையே இல்லாமல், எதிராளிகள் கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் அள்ளி வீசி, சமூக ஊடகப் பிம்பங்களை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அவலத்தை கண்கூடாக பார்க்கிறோம். நாமோ இன்னும் "பழைய பாணி" அரசியலை கொஞ்சம் மாற்றியமைக்க ஏனோ தயங்கி கொண்டிருக்கிறோம்.
இன்று ​இணையத்தில் நமக்காக ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் பலர் வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே களமாடுகிறார்கள். ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது, கூடாது.
​இது வேண்டுகோள், அறிவுரை அல்ல..

சனி, 8 ஆகஸ்ட், 2026

சங்கீதா விஜய் மீதான விவாகரத்து மனுவை மீளப்பெற்றார்

 மின்னம்பலம் - Kavi : விவாகரத்து மனுவை முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா வாபஸ் பெற்றிருக்கும் நிலையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் புதிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
1998ஆம் ஆண்டு முதல்வர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கீதா லண்டனில் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

'வில்லங்க’மான பி.ஆர். சுந்தர் கைது.. கடுப்பான நீதிமன்றம்.. ‘திருவிளையாடலின்’ பின்னணி?

minnambalam.com : நாமும் என்னான்னு விசாரிச்சப்ப, பி.ஆர். சுந்தர் கேஸ் விவகாரமும், அதையொட்டின சம்பவங்களும் செம்ம பரபரப்பா இருக்குங்க ப்ரோ.. பி.ஆர். சுந்தர் விவகாரத்தை அவருக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப ஏகப்பட்ட பகீர் தகவல்களை கொட்டுறாங்க.. அதாவது, “பி.ஆர்.சுந்தர் கேஸ்ல சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான நபர் அன்புச்செழியன்.. இவர் கன்பெர்ட் ஐபிஎஸ் அதிகாரி. இவரு இப்போ தமிழ்நாடு டெக்னிக்கல் சர்வீஸ்ல இருக்காரு. இவரு மேல ஏற்கனவே 2015-19 காலகட்டத்துல வாக்கி டாக்கி ஊழல் வழக்கு இருக்கு, அதுல இவர்தான் ஏ-1 குற்றவாளி.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

பாஜ கூட்டணியில் மீண்டும் தேமுதிக? மோடி, அமித் ஷாவுடன் சுதீஷ் 'திடீர்' சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு #AmitShah #LKSudhish  #PolimerNews

 dinamalar.com :  சென்னை : டில்லியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேமுதிக பொருளாளரும், அக்கட்சி எம்பியுமான சுதீஷ், சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலங்களில், பாஜ மற்றும் அதிமுக கூட்டணியில், தேமுதிக இடம் பெற்று, தேர்தல்களை சந்தித்தது. இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக- பாஜ கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
திமுக வழங்கிய ஒரு ராஜ்யசபா 'சீட்' வாயிலாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், எம்பியானார். சட்டசபை தேர்தலில் பத்து தொகுதிகள் ஒதுக்கியதில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றார்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஸ்டாலினை சந்தித்த 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்! வைகோ மீது குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் - Mathi  : மதிமுக எம்.எல்.ஏ.க்களான திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர், “அமைச்சர் பதவி தருவதாக சொன்ன ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திமுக எம்.எல்.ஏ.க்களாகவே தொடருகிறோம்”g என்று அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரை மாய்த்து கொண்டார் - நடந்தது என்ன?

 தினமலர் : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Savukku Shankar Son : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன், விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்தில், 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில், யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சவுக்கு சங்கருக்கும், அவரது மனைவி ஆர்த்தியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தியோ ஆழிசை என்கிற மகன் இருக்கிறார். இவர், தன்னுடைய தாத்தா-பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர், மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

புதன், 5 ஆகஸ்ட், 2026

முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்- யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கருத்து

May be an image of one or more people, people performing martial arts and text
May be an illustration of text

 ராதா மனோகர் : யாழ்ப்பாணத்தில் பல்கலை கழகம் அமைய கூடாது என்று எஸ் ஜெ வி செல்வநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடினர். அவரின் கைங்கரியத்தால் அவர் ஆக்டிவாக இருக்கும் வரையில் அது அமையவில்லை.
1970 தேர்தலில் ஸ்ரீ மாவோ அம்மையார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும்தான் இவரின் கொட்டம் அடங்கியது.
செல்வநாயகத்தின் கடிதங்களுக்கு பதில் கூட ஸ்ரீ மாவோ அம்மையார் போடுவதில்லை 
அந்தளவு செல்வநாயகத்தின் கபட அரசியலை அவர் புரிந்து கொண்டிருந்தார் 
ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு உறுதி அளித்த படி 
1974 இல் யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தை நிறுவினார் 
அப்போது கூட இது வெறும் வளாகம்தானே இதிலென்ன இருக்கிறது என்று இதை மலின படுத்தும் முயற்சியில் தமிழரசு கட்சியினர் விஷ பிரசாரம் செய்தவண்ணம் இருந்தனர் 
அவர்களுக்கு  திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் கொடுத்த பதிலடிதான் இந்த பேட்டி
ஈழநாடு 26 - 6 - 1974 யாழ்ப்பாணம் 
திரு அல்பிரட் துரையப்பா :   
முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம் 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

சூடானில் அரங்­கேறி வரும் இனப்படு­கொ­லைகள் - ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் நிதி, ஆயுத உத­வி­க­ளோடு

 ilakkiyainfo.com : தற்­போது ஈரா­னுக்கு எதி­ரான இஸ்­ரே­ லி­ய-­-அ­மெ­ரிக்க காட்­டு­மி­ராண்டி   போரின் மீது உலகக் கவனம் திசை திரும்­பி­யுள்ள நிலையில், ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் நிதி மற்றும் ஆயுத உத­வி­க­ளோடு சூடானில் அரங்­கேறி வரும் இனப் படு­கொ­லைகள் கார­ண­மாக சூடான் மக்கள் அனு­ப­வித்து வரும் துன்­பங்­ளும் தொடர்ந்த வண்ணம் உள்­ளன.
ஏப்ரல் 2023 இல் மோதல்கள் மூண்­டதில் இருந்து 12 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் தங்கள் வீடு­களை விட்டு வெளி­யேற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. இதில் ஒன்­பது மில்­லி­ய­னுக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­நாட்டில் இடம்பெயர்ந்­த­வர்கள். அண்டை நாடான சாட், எகிப்து மற்றும் தெற்கு சூடா­னுக்கு தப்பிச் சென்­ற­வர்­களின் எண்­ணிக்கை மூன்று மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மாகும்.  

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

உலகின் முதல் பாசிச அரசை நிறுவிய விளாடிமிர் லெனின் - இதைத்தான் முசோலினியும் ஹிட்லரும் பின்பற்றினார்கள்

 Santhirapalan Saminathar :1918/01/18 உலகில் முதலாவது பாசிச அரசு சோசலிச அரசு என்னும் பெயரில்  லெனினால் பிரகடனப்படுத்திய நாள். தாமே முதல்முதலாக நடத்திய பொதுத் தேர்தலில் தாம் படு தோல்வி  அடைந்ததும்    ஆயுத முனையில் தள்ளுபடி செய்து  பாசிச சர்வாதிகாரத்தை அரங்கேற்றியநாள்.  மற்ற கட்சிகளை தடைசெய்து துரோகிகள்,எதிர்புரட்சியாளர், முதலாளித்துவ வாதிகள் என கொன்று ஒழிக்க தொடங்கிய நாள். லெனினிடம்  இருந்து கற்றுக்கொண்ட இந்த பாசிச சர்வாதிகாரத்தையே முசோலினி கையில் எடுத்தார். அதில் இருந்து பின்னர் கிட்லர் கையில் எடுத்தார்.  உலகம் முழுவதும் பாசிச சர்வாதிகாரத்தின் முன்னோடி லெனின் ட்ரொஸ்கி என்றால் மிகை ஆகாது. அதை பின்தொடர்ந்து ஸ்டாலின் மிகத் தீவிரமாக பாசிசத்தை அமுல் படுத்தினார். ஸ்டாலின் கை ஓங்கியதும் லெனின் ட்ரொஸ்கியின், ஜனநாயக குரல் சந்தர்ப்பவாதம் ஆகும். அவர்கள் ஏற்படுத்திய பாசிச சர்வாதிகாரத்துக்கு கட்சிக்குள் முதல் பலியானவர்கள் லெனினும் ட்ரோஸ்கியும் தான்.
பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களில் மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களில் ஒருவர். அவர் 1964 முதல் 1982 வரை நாட்டை வழிநடத்தினார்.

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ அதிரடி குற்றச்சாட்டு

 thentamil.com -Su.tha Arivalagan  : சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் கொளத்தூர் தொகுதி எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அத்தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எந்திரங்களின் செயல்பாடு குறித்து திமுக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்பெயினின் எல்லையை உடைத்துக்கொண்டு அடாவடியாக நுழையும் மொரோக்கோ முஸ்லிம்கள்

 hindutamil.in -போத்தி ராஜ்.க : வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. 
இதனால், எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படைகளை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.

தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிகள்! கப்பல்ல வேலைனு சொன்னதை நம்பி.. திமுக மூவ்.. விஜய்க்கு சிக்கல்!

 tamil.oneindia.com -Rajkumar R   :சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. ஆளும் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். விஜயை பார்க்க முடியவில்லை, உள்ளூர் நிர்வாகிகளும் மதிக்கவில்லை என பெரும்பாலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் பற்றி அவதூறு பேசினால்..’ அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக பரந்தாமன் கடும் எச்சரிக்கை!

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழ்நாட்டை, காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய், இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய். விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி என திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 

சனி, 1 ஆகஸ்ட், 2026

பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய். சூர்யா சேவியர்

May be an image of text that says "BREAKING NEWS SUN NEWS வின்னு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு சென்னை மாவட்டம் 保本品名品量 S ANI தேர்தல் முறைகேடு கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் என். ஆர். ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டு. நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் EVM சரிபார்ப்பு பணியில் 2 VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிப்பு. வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. முறையாக பாதுகாக்கப்படவில்ல வில்லை. ஆதாரங்களுடன் ன் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனப் பேட்டி 0 AUG2026 AUG 2026 f SUNNEWSTAMIL SUNNEWS + sunnewslive.in"

 Surya Xavier  :  நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,

ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! – ஷோபாசக்தி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல் வெளியீடு, 'இருவண்ணக் கொடிக்கு வயது 75' - இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தகக் காட்சி ...
Warscapes in conversation with Shobasakthi | Warscapes

 shobasakthi.com  : ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! – ஷோபாசக்தி
இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன.