வியாழன், 10 செப்டம்பர், 2026

பணத்தை கொடுத்துட்டு போ..’ பிரசவ வலியில் துடித்த பெண்ணை தடுத்த நபர்.. தாய், சிசு உயிரிழப்பு

 மாலைமலர் :கடன் தொகையை காரணம் காட்டி கர்ப்பிணியை மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால் தாய் மற்றும் சிசு இருவரும் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்ல வாங்கியகடன் காரணமாக உரிமையாளர் தடை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

புதன், 9 செப்டம்பர், 2026

இந்துத்துவா ஆர் எஸ் எஸ் வருகை.. ( baps) புறக்கணிக்கப்பட்ட பெண்கள்.. மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!! - ila

 மாலைமலர் :பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் ஊழியர்களின் போராட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது.? பார்க்கலாம்..
பிரான்ஸில் நடைபெற்ற ஒரு கோவில் திறப்பு விழாவிற்காக சென்ற, இந்து மத அமைப்பான போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)-ஐ சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், கடந்த சனிக்கிழமை ஈபிள் டவரை பார்வையிட்டுள்ளனர். 

May be an image of text that says "LAWMAKERS UNDER LENS CMs with highest number of cases A Revanth Reddy (Telangana) 89 Suvendu Adhikari Bengal D K Shivakumar (Karnataka) 19 N Chandrababu Naidu (Andhra Pradesh) 19 V D Satheesan (Kerala) 18 29 States with highest share (%) of MLAs facing serious cases West Bengal 58 Kerala 57 Andhra Pradesh 56 Telangana 49 Jharkhand 45 Odisha 45 Parliament 170 Lok Sabha MPs (31%) face serious criminal cases 75 Rajya Sabha MPs (33%) have criminal cases. 40 (18%) face serious cases"
May be an image of one or more people

 திருமுருகன் காந்தி :நேற்று சட்டசபையில் முதல்வர் விஜயால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எவ்வகையானவை? 
இதுவரை எப்படியான அரசியல் இந்தியாவில் நடந்துள்ளது என்பதை கவனித்தால் இது புரியும். இந்தியாவின் விடுதலைக்குப் பின்பான அரசியல் என்பதே தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் நடக்கும் யுத்தம் என்பதே இந்திய தேர்தல் அரசியலின் வரலாறு. 
ஒன்றிய அரசுகள் நேரு காலம் முதல் மோடி காலம் வரை மாநில அரசுகளையும், மாநில கட்சியின் தலைவர்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். 
ஆட்சி கலைப்பு, அடக்குமுறை சட்டங்கள், ஊழல் வழக்குகள் என அனைத்தையும் மாநில தலைவர்கள் மீது ஏவினார்கள். 

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மிசா’வில் விஜய் ஜெயிலுக்கு போயிருந்தா அரை மணிநேரம் தாங்கி இருப்பாரா ? சிபிஎம் சரமாரி தாக்கு!

 minnambalam.com  - Mathi  மிசா கைதிகளை கொச்சைப்படுத்தி பேசுவது, சட்டசபையில் முதல்வர் விஜய்யின் உடல் மொழி உள்ளிட்டவைகளை முன்வைத்து சிபிஎம் கட்சி மிக கடுமையாக விமர்சித்துள்ளது.
முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 8) திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய தினம் மத்திய அரசாங்கத்தினுடைய போக்கு மிக மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். 2 நாட்களுக்கு முன்னால் பார்த்தீர்கள் என்றால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பயன்படக்கூடிய அந்த இஸ்ரோ அமைப்பையே இன்று தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது.

சிட்டி பாபுவின் மிசா சிறைக்கைதி - டயரி குறிப்பு

May be an image of ticket stub and text

 கி.வே.பொன்னையன்  ; 'மிசா' காலத்தில் சென்னை சிறைச்சாலையில் சிறைக் காவலர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அவர்களின் நாட்குறிப்பு கீழே.....
கொஞ்சம் நீளமான பதிவுதான் பொறுமையாக படியுங்கள்.  அதிகமாக ஷேர் செய்யுங்கள்.  எல்லோரையும் சென்றடையட்டும்.
இன்றைக்கு மிசாவை பற்றி நெருக்கடிநிலை காலத்தில் பிறக்காத முட்டாளெல்லாம் பேசுகிறான்.  மிசாவை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சிட்டிபாபுவின்_சிறை_டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. 
ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.2.2.1976 காலை கண்விழித்தேன்.

விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!

மின்னம்பலம்  விஜய் மீண்டும் எழுப்பிய ‘சர்க்காரியா கமிஷன்’: அன்றே ‘இதே’ சட்டமன்றத்தில் கலைஞர் தந்த பதிலடி!
தமிழக சட்டமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 7) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் அறிக்கையை முன்வைத்து கலைஞரையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.
விஜய் பேசியது என்ன?
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 1970-களில் செயல்படுத்தப்பட்ட வீராணம் குடிநீர்த் திட்டத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.40 லட்சம் கமிஷன் கோரப்பட்டதாகவும், ரூ.29 லட்சம் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி முரசொலி கட்டிடத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக விஜய் குற்றம்  சாட்டினார்.

கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்

 ராதா மனோகர் :   அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு  கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

‘2 பெட்டிகளில் பணம்.. அமைச்சர் பதவி’ பகீர் கிளப்பும் ஐயூஎம்எல் எம்எல்ஏ சையது ஃபாருக் பாஷா

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : “சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு 2 பெட்டிகளில் கோடி கோடியாக பணத்தை கொண்டு வந்து உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும்?
 என எங்களிடம் கேட்டனர்” என ஐயூஎம்எல் கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். கட்சிக் கூட்டத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர், “இங்கு சோபா பற்றி விமர்சித்தனர். ஆனால், என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்து போடுங்கள் என்றார்கள். நாங்கள் கோடிக்குச் சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொள்கையோடுதான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.

நிர்வாண பூஜை நடத்தி கிளி ஜோசியரிடம் மாட்டுப்பட்ட கனடா தமிழ் பெண்!

 நக்கீரன் :சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த கனடா வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம், மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார் ஒரு கிளி ஜோசியக்காரர்.. தோஷம் கழிப்பதாக சொல்லி, வீடியோ காலில் நிர்வாண பூஜையும் நடத்தி, அந்த வீடியோவை வைத்து பணமும் பறித்துள்ளார்.. இது தொடர்பாக போலீசார் விசாரிக்க சென்றால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
கனடாவில் வசித்து வருகிறார் அந்த 37 வயது இலங்கை தமிழ்ப் பெண்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இப்போது கனடாவில் தனியாக வசித்து வருகிறார்.

சனி, 5 செப்டம்பர், 2026

மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்?

 தினகரன்  :  லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் நாமல் ராஜபக்ஸ செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானங்களின் கொள்வனவு நடவடிக்கைகளின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கச்சத்தீவு- கலைஞரின் கடைசி விளக்கம்

 மின்னம்பலம் ;  கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் விவாதிக்கப்பட்டது. வழக்கம் போல கச்சத்தீவை மத்திய அரசுதான் கொடுத்தது என்றாலும் அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, எதிர்க்கவில்லை; ஒத்துழைத்தது என்கிற வாதத்தையே ஆளும் தவெக அரசும் முன்வைத்தது.
 காலந்தோறும் சர்ச்சைக்குரிய விவகாரமாக நீடிக்கும் கச்சத்தீவின் வரலாறுதான் என்ன? 
கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? 
அன்றைய கலைஞர் அரசு செய்தது என்ன? 
இந்தியா–இலங்கை நடுவே இருக்கும் ஒரு சிறிய தீவு, தமிழக அரசியலில் அரை நூற்றாண்டாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகிறது. 
கச்சத்தீவின் முழு வரலாற்றையும் ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம். கச்சத்தீவு எங்கே இருக்கிறது? தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையிலுள்ள பாக் நீரிணையில் கச்சத்தீவு அமைந்துள்ளது. 
தற்போது இந்தத் தீவு இலங்கையின் எல்லைக்குள் இருக்கிறது. எவ்வளவு பெரிய தீவு?

அப்படிப்பட்ட காமராஜர் எப்படி தமிழின மொழிப்போர் வீரர்களுக்கு ஆதரவு தருவார்?

புகச்சோவ் புகச்சோவ் :  1965ல் மத்திய சட்ட அமைச்சர் 
அசோக் சென், ஆட்சிமொழி சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். 
அதில் ஹிந்திபேசாத மாநிலங்களில் நூற்றுக்கு எழுபது சதவீத மாநிலங்கள் என்றைக்கு ஆங்கிலம் தேவையில்லை.
 ஹிந்தி போதுமென சட்டசபைகளில் தீர்மானம் இயற்றுகிறார்களோ! 
அப்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் நீக்கப்பட்டு, 
முழுமையாக ஹிந்திமொழியே பயன்படுத்தப்படும் என்கிற ஷரத்தை கொண்டுவந்தார்.
இந்த ஷரத்தை ஒப்புக்கொள்ளும்படி அன்றைய கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில ஆளுநர்களுக்கு மனுவை அநுப்பியது, 

வியாழன், 3 செப்டம்பர், 2026

ஆந்திராவுக்கு பறக்கும் தமிழக தொழில்கள் - ரெட்டிகாரு தமிழகத்தை துவம்சம் செய்கிறார்

  tamil.oneindia.com  - Velmurugan P : விழித்துக்கொள், தமிழக அரசே! ஆந்திர அரசு சும்மா இல்லை.. தூத்துக்குடி ஹிண்டாய் பற்றி டிஆர்பி ராஜா ஷாக்
தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஹிண்டாய் நிறுவனம் கட்ட உள்ள 38000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளத்தை காக்கிடாநாடாவிற்கு மாற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று டிஆர்பி ராஜா எச்சரித்துள்ளார்.

வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்த வழக்கு : முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு!

 மின்னம்பலம் - Kavi :  கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தோல்வியுற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். 

தமிழின் பெயரால் தமிழர்களை தமிழர்களே கொலை செய்ததுதான் தமிழ் ஈழ போராட்டம்

 Varatharasa Pasupathi : கொஞ்சக்காலம் பிளட்டும் ரெலோவும் தொடர்ச்சியாக கிரியும் பாம்புமாக இருந்ததற்கு காரணம்.அப்பன் யோக்கியவதி அதற்கு மகன் சித்தாத்தன்  
பிளட் அமைப்பை வைத்து  திட்டமிட்டு பழி தீர்தார். 
இன்றும் பலரிடம் அதைத்தான் செய்கின்றார் .பிளட் அமைப்பும் கிட்டத்தட்ட பறிமுதல்தான் செய்யப்பட்டுள்ளது .
தன் சுயநலனுக்காக தூண்டி விட்டு இரு பக்கமும் இறந்தது  அப்பாவி இளைஞர்கள்.   
சித்தாத்தனின் தந்தை துரோகியாக இருந்திருக்கலாம் ரெலோ சுட்டிருக்கலாம் . 
சொந்த பிரச்சனைக்கு பெரிய செந்தில் மிக நல்ல மனிதர் முதல் முதல் வவுனிய மாவட்டத்தில் ஆயுதம் தூக்கிய  முதல் போராளியாக போனவர் ரெலோ சுட்டு குளத்து கட்டில் போட்டிருந்தது 
அந்த படுகொலைகளுக்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது .
பிளட் சுட்டு பல ரெலோ போராளிகள் இறந்தார்கள் 
அதற்கு எல்லாம் யார் பொறுப்பு . 

மூன்றாவது அணியை கட்டமைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் - நாடாளுமன்ற தேர்தல்

 News4 Tamil  :  லெப்ட் ஹேண்டில் தவெகவை டீல் செய்யும் காங்கிரஸ்.. திமுக அடுத்த ரூட் இதுதான்.. வல்லம் பஷீர் பரபரப்பு
"காங்கிரஸ் என்கிற பொதி சுமக்கும் கழுதையைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமையும் சூழல் உள்ள நிலையில், அதில் திமுக ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ப.சிதம்பரம் சொன்னது போல 3வது அணி உருவாகும்போது திமுக அதில் தனது பங்கைச் செய்யும்" என்று கருத்து கூறியருக்கிறார் திமுக மூத்த தலைவர் வல்லம் பஷீர்.

கச்சத்தீவு - ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!


 ராதா மனோகர்
: கச்சத்தீவு -  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   - இந்திரா காந்தி -  Smiling  Buddha -- அணு குண்டு!
கச்சத்தீவு  ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு  சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும்  முக்கியமானதொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது 
குறிப்பாக  தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!   
இந்துமாக்கடல் பகுதியை  அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2026

யாழ்பாணம் - ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகளும் நேபாளத்தில் காணவில்லை

 தினகரன் ; நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில் வசித்து வந்த 47 வயதுடைய சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதுடைய ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் மகன்களான 14 வயதுடைய அஸ்வின், 11 வயதுடைய ஆருஷ் ஆகியோர் ஆவர்.
சந்திரசேகரன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர் ஆவார். இவர்களின் பிள்ளைகள் இருவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவை பெரிதும் நிறைவேறிவிட்டது! நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழர்கள் அதிகம்

 Amma Shagasraa : நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழக யாத்திரகர்கள் மட்டும் மத்த 35  மாநில,யூனியன் பிரதேச  யாத்திரிகர்கள் விட அதிகம்..
🎯என்னதான் நாம் திராவிட கட்சிகளினால் இங்கே லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது..தமிழ்நாட்டு பின்னோக்கி போய்விட்டது என்று கூப்பாடு போட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை தேவை நிறைவேறிவிட்டது...
பொருளாதாரத்திலும் ஓரளவு தன்னிறைவு... அதனால்தான் அடுத்த கட்டத்திற்கு சுற்றுலா.. நாலு இடம் பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார்கள்....

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய பணி

May be an image of dais, temple and text
May be an image of text that says "இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு"

 ராதா மனோகர் : வெட்கம் இல்லை வெட்கம் இல்லை இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய  பணி சிறப்பானது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அவரின் அரசியல் வாழ்வில் உருப்படியான ஒரே ஒரு விடயமும் அதுதான்.
அந்த ஒப்பந்தம் உருவாவில் அவர் ஆற்றிய பணியையும் அதில் உள்ள சாதகமான விடயங்களை பற்றியும் விரிவாக ஒரு நூலை திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் 
புலிகள் அந்த ஒப்பந்தத்தை மூர்க்கமாக எதிர்த்து அதில் பங்காற்றியவர்களை எல்லாம் தேடி தேடி கொன்றொழித்தார்கள் 
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அந்த நூலை தேடி தேடி தீயிட்டு கொளுத்தினார்கள் 
எந்த தமிழக இலங்கை பத்திரிகையிலும் அமிர்தலிங்கம் அவர்கள் இது பற்றி எழுதியது எதுவும் பிரசுரமாகவில்லை.
இந்த சூழ்நிலையில் அந்த ஒப்பந்தம் பற்றியும் அது உருவான புறசூழல் அகச்சூழல் பற்றி அறிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

சிறுமியரை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை தந்த தொழிலதிபர் வீரமணி :

 dinamalar.com  : சென்னை: வீட்டு வேலைக்கு என, சிறுமியரை சென்னைக்கு அழைத்து வந்து, தொழில் வர்த்தகர் வீரமணி, 85, பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

சனி, 29 ஆகஸ்ட், 2026

4 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு - தமிழரசு கட்சியின் நரவேட்டை

May be an image of text that says "Speech by Mr. A. A.Amirthalingam during Dr. Era Janarthanan 's telicittion C4EИy Chennaiin 1987 டாக்டர் இரா. ஜனார்த்தனன் அவர்களின் பாராட்டு விழா கூட்டத்தில் தலைவர் திரு ત. அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சு 1987இல்." ராதா மனோகர் : 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது  உலக தமிழாராய்ச்சி மாநாடு!
இதை உண்மையில் ஒரு அகில உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம்.
அந்தளவுக்கு அதில்  பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடிய மாநாடு இது!.
இந்த தமிழாராய்ச்சி மாநாடு தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் 
இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி மொழிகளை  பிரதமர் ஸ்ரீமாவோவும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியும் துளியும் நம்பவில்லை.
இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏராளமான தமிழரசு கட்சி பிரமுகர்கள் ஊடுருவி இருந்தார்கள் 
இந்த விபரம் எல்லாம் அம்மையாருக்கு நன்றாக தெரியும் 
 இவர்களின் வாக்கு நாணயம் பற்றிய புரிதல் ஸ்ரீமாவோ அம்மையாருக்கு இருந்தது.
ஸ்ரீமாவோ அம்மையாரின் நெருங்கிய நண்பரான திரு கோபாலபிள்ளை மகாதேவாவை தமிழரசு கட்சி கூட்டம் வற்புறுத்தியது 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

 விகடன் :புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.
நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.

Boney M எழுபதுகளில் உலகை கலக்கிய போனி எம் இசைக்குழுவினர்

 Siva Ilango : "எழுபதுகளின் இசைக்காவியம்"
ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1974 ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனியில் நிறுவப்பட்ட ஒரு ரெக்கே, ஃபங்க் மற்றும் டிஸ்கோ (Reggae, Funk and Disco) இசைக் குழுதான் போனி எம் (Boney M). 'பாப்' (pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் (Boney M) குழுவினர். 

தமிழக இலங்கை ஏதிலிகளை தந்திரமாக இலங்கைக்கு அனுப்ப புல்லுருவிகள் முயற்சி

May be an image of glasses and wingtip shoes

 சரவணன் நடராஜா::  மதிப்பிற்குரிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுக்கு,
முந்தைய ஆட்சியில் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், தங்களது தலைமையில் 21 நபர்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு 2008-ல் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து, இலங்கைத் தமிழர்களில் யாரேனும் நாடற்றவர்களாக இருக்கிறார்களா என்ற ஆய்வை மேற்கொண்டு, 28,584 நபர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அவர்கள் ஒருவேளை இலங்கை திரும்பினால் அவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்தீர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். 
து தாங்கள் இலங்கையில் நாடற்றவர்கள் இருக்கக் கூடாது, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரு இந்திய வம்சாவளி, மலையகத் தமிழராக அந்த மக்கள் மீது இருந்த கரிசனத்தில் அதைச் செய்தீர்கள். அது வரை சரி.