Yasmin Nihar : ஜெய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியில் கடந்த நவம்பர் 2025 ல் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா உயிரிழந்த சம்பவம் ஒவ்வொரு பெற்றோரின் மனதையும் உலுக்குகிறது.
கடந்த சில நாட்களாக வெளியான புதிய CCTV காட்சிகள், இந்த வழக்கில் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அமைராவின் பெற்றோர், தொடர்ச்சியான bullying, ஆசிரியர்களால் தனது மகளின் புகார்கள் புறக்கணிக்கப்பட்டது, மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் இவையெல்லாம் இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
அவள் தினமும் கதறி அழுது ஆசிரியையிடம் உதவி கேட்டபோது, ஆசிரியை மொபைலில் ஸ்க்ரோல் செய்தபடி அலட்சியமாக திருப்பி அனுப்பினாள்! இறந்த நாளிலும் அந்த குழந்தை பலமுறை ஓடி வந்து கெஞ்சியும், அந்த பயங்கர ஆசிரியை மொபைலை விட்டு தலையை தூக்கக்கூட இல்லை!
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 11 ஜூலை, 2026
ஜெய்ப்பூர் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா தற்கொலை ! பள்ளிக்கூட நிர்வாகமும் பெற்றோரும் செய்த தவறு
செந்தில் பாலாஜி தேர்தல் வழக்கு தள்ளுபடி
நக்கீரன் : தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி போட்டியிட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான செந்தில்குமாரை 2 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த வெற்றியை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்ற வாக்காளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
ராதா மனோகர் : சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள்
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால் எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள்
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள் ... வென்றார்கள்.
ப ஜீவா கூட இலங்கையில் சில காலம் இருந்து பிரசாரம் செய்திருந்தார்
வெள்ளி, 10 ஜூலை, 2026
ஈரான் மதவெறி அரசும் ஈரான் மக்களும்
ராதா மனோகர் : நான் புரட்சியை பேசும்போது புரட்சியை பற்றிய நூல்கள் பற்றி பேசவில்லை
நான் எனது நாட்டை இழந்தது பற்றி பேசுகிறேன்
என் பெற்றோர் வாழ்நாள் முழுவதும் கட்டி எழுப்பிய வீடு வாசல் கல்வி எல்லாவற்றையும் பறிகொடுத்து நாடு நாடாக அலையும் நிலையை உண்டாக்கிய அந்த புரட்சி பற்றி பேசுகிறேன்
ஈரான் என்ற ஒரு நல்ல நாட்டை சூறையாடிய இஸ்லாமிய புரட்சி பற்றி பேசுகிறேன்
உலகின் மிக பழமையான மனிதர்கள் உருவாக்கிய நாகரிக தேசத்தை உலகின் மோசமான ஒரு சிறைச்சாலையாக மாற்றிய இசுலாமிய புரட்சி பற்றி பேசுகிறேன்
அது பெண்களின் சிறைச்சாலை
அது மாற்று கருத்தாளர்களின் சித்திரவதை கூடம்
அது அரச பயங்கரவாதத்தின் தலைமை செயலகம்
நான் இங்கே கூறப்போவது உங்களில் சிலருக்கு சங்கடத்தை தரலாம்
இந்த பையாஸ்க்கோப்பை ஏற்கனவே நான் பார்த்துள்ளேன்
இது எப்படி முடியும் என்பதையும் நான் அறிவேன்
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
hindutamil.in - ஆர்.பாலசரவணக்குமார்: சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
நடிகன் விஜய்யை முதல்வர் ஸ்டாலின் ஏன் கைது செய்யவில்லை? வரலாற்று தவறு செய்துவிட்டார்?
Rebel Ravi : நான் ஸ்டாலின் மீது முதலில் மதிப்பே வைக்காதவன்.
கலைஞரின் கீழ் வளர்ந்தவன் என்பதால் ஸ்டாலின் எனக்கு ஆளுமையாய்த் தெரியவில்லை.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மதிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் கரூரில் அவர் வரலாற்றுப் பிழை செய்தார் என்று அன்றே சொன்னென்.
ஸ்டாலின் அப்படி மன்னிக்கக் கூடியவர் அல்ல.
அவரை பல ஆண்டுகளாய்ப் பார்த்து வருகிறேன்.
அவர் ஜெ பாணியைப் பின் பற்றியவர்.
ஆட்சிக்கு வந்த பின் பென் மீடியா அவரை ஒரு மென்மையான மனிதராக அடையாளம் காட்டியது.
அவரது இயல்பு அது அல்ல.
கரூரில் விஜயை ஏர்போர்ட்டுலேயே கைது செய்து சிறையில் அடைத்து இருக்க வேண்டும்.
அன்பில் அழுகை செந்தில் வருகை முதல்வர் நள்ளிரவு வருகை எல்லாம் அபத்தத்தின் உச்சம்.
கூட்டத்தை நடத்தியவனே ஓடுகிறான்.
நீங்கள் ஏன் போனீர்?
அது அரசு நிகழ்வில் நடந்த மரணம் அல்ல.
இவ்வளவு ஓவர் ரியாக்சன் ஏன்?
150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 40 மரணம் பெரிய டிராஜடி அல்ல.
வரலாற்றுப் பிழை புரிந்து இன்று தமிழ்நாடு அழியக் காரணம் ஆகி விட்டார் ஸ்டாலின்.
தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி செல்வாக்கு செலுத்திய சர்ச்சைக்குரிய சாமியார்.
![]() |
Paranji Sankar : இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சர்ச்சைக்குரிய சாமியார்....
சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள்.
நீல நிற டொயோட்டா காரை அவர் தானே ஓட்டிச்செல்வார். இது மட்டுமின்றி, அவரிடம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா, 19 இருக்கைகள் கொண்ட டோர்னியர் மற்றும் மால்-5 விமானங்கள் உள்ளிட்ட பல தனியார் ஜெட் விமானங்கள் இருந்தன. பிரம்மச்சாரியே அவற்றையும் இயக்குவார்.
கோபம் வந்தால் எந்த அதிகாரியையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மற்றும் அமைச்சர்களின் துறைகளை கூட மாற்றக்கூடிய அளவிற்கு அவரது அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
எப்படி இருந்த தமிழ்நாடு ? கேவலம் இப்படி சிக்கிக்கொண்டதே!
மு.ரா. விவேக் : 1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம்
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம்
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம்
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம்
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!
வியாழன், 9 ஜூலை, 2026
13 வயது ராஜஸ்தான் சிறுமி மரணம் - 32 குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் மக்கள் தூக்கு தண்டனை?
ilakkiyainfo.com : ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: கடந்த ஜூன் 18-ஆம் தேதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சிறுமியை, ஓட்டுநர் கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார்.
ஜூன் 22-ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்படும் வரை, அந்த ஐந்து நாட்களுக்குள் நான்கு வெவ்வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு, சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கீர்த்தனா : நெக்ஸ்ட் குவெஸ்ட்சன் :வாட் இஸ் யுவர் காஸ்ட்
ராதா மனோகர் : நெக்ஸ்ட் குவெஸ்ட்சன் :வாட் இஸ் யுவர் காஸ்ட்
அந்த தற்குறி பெண் அமைச்சர் கீர்த்தனா பள்ளிக்கூட குழந்தையிடம் உன் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்ட கேள்விக்குள் ஒரு திமிர் தொக்கி நிற்கிறது
ஒரு சமூக அநீதி தொக்கி நிற்கிறது
ஒரு குழந்தையின் குடும்ப பின்னணியை அறியும் நோக்கம்தான் அந்த கேள்வியின் உள்நோக்கம்
அந்த குழந்தையின் தந்தை ஒரு வேளை ஒரு சில குறிப்பிட்ட ஜாதிகளே செய்யக்கூடிய தொழிலாக இருந்தால் அதை அறிவதுதான் இவரின் நோக்கம்!
இதை இந்த மந்திரியால் மறுக்க முடியுமா?
ஆங்கில அறிவை சோதித்து பார்க்கிறேன் பேர்வழி என்ற போர்வையில்
காலகாலமாக தமிழர்களிடையே ஊறிப்போயிருந்தா ஜாதிய மனோநிலையை வாந்தி எடுத்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா என்கின்ற தற்குறி.
; ELLIS . R . DUNGAN - தமிழ் சினிமாவின் உண்மையான தந்தை எல்லிஸ் ஆர் டங்கன்
![]() |
Meera Mahadhi ; ELLIS . R . DUNGAN - MGR நடிச்ச முதல் படம் ஒரு Hollywood படமா 🙄..சிங்கம் புலின்னு சண்ட போட்டு மாஸ் காட்டுன MGR சைக்கிள் ஓட்ட தெரியாம தெனருண கத
.தமிழ் சினிமா தலையெழுத்த மாத்துன இயக்குனர் யாருன்னு கேட்டா சில இயக்குனர்கள் உங்க mind ல வந்தா அவங்க எல்லாரையும் தூக்கி ஓரமா வச்சுடுங்க ஏன்னா இப்போ நான் சொல்லபோற real OG க்கு முன்னாடி இவங்க எல்லாம் கத்துக்குட்டிங்க…எல்லாரும் இவர் போட்ட வெதைல copy அடிச்சவங்க..
மேடை நாடகமா இருந்த நடிப்பு கலை சினிமா கேமரா கண்டுபுடிச்சு இந்தியாவுக்கு வந்து 1935 வாக்குல ஒரு 200 படங்கள் Release ஆச்சு..அதெல்லாம் என்ன படங்கள் தெரியுமா
செவ்வாய், 7 ஜூலை, 2026
பலஸ்தீன் காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு
அதிரடி : காஸாவில் தங்களின் அரசைக் கலைப்பதாகவும், ஆட்சி அதிகாரங்களை ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய நிா்வாகக் குழுவிடம் (என்சிஏஜி) ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து காஸா அரசு ஊடகத் துறை இயக்குநா் இஸ்மாயில் அல்-தவாப்தா கூறுகையில், ‘காஸாவின் அன்றாட நிா்வாகத்தைக் கவனிக்க தேவையான பணியாளா்கள் மட்டுமே தங்களின் பதவிகளில் நீடிப்பா். தேசிய நிா்வாகக் குழுவின்கீழ் பணியாற்ற அவா்கள் முழுத் தயாராக உள்ளனா்’ என்று தெரிவித்தாா்.
லெனின் 1918ல் கட்டாய பறிமுதலில் ஆரம்பித்து குலாக் முகாம்களையும் கேள்வியே கேட்காமல் சுட்டுக்கொல்லும் செக்கா போலிசையும்தான் உருவாக்கினார்
Chandru R : பண்ணையடிமைகளுக்கு 1,இடம்பெயரும் உரிமை இல்லை ,நிலத்துடன் பிணைக்கபட்டவர்கள், 2உயிர்வாழ மட்டுமே உணவு, 3குடிசையை சுற்றி தோட்டம் இவைதான் கூட்டுப்பண்ணை விவசாயிகளுக்கு ரசியாவிலும் சீனாவிலும் வழங்கப்பட்ட உரிமைகள்.
இதுதான் நிலவுடமை உற்பத்திமுறையிலும் பண்ணையடிமைகளுக்கு கொடுக்கபட்ட உரிமைகள் ஆகும்.
நிலபிரபு சில நேரங்களில் கோபபட்டாலும் சிலநேரம் கருணை காட்டுவான் ,ஆனால் சீனாவிலும் ரசியாவிலும் எப்போதும் உளவு போலிசின் கண்காணிப்பில் சுதந்திரமாக மூச்சுக்கூட விடமுடியாது விட்டால் மரணம் அல்லது குலாக் முகாம்,
ஆனால் ஒன்று மருத்துவமும் கல்வியும் இலவசமாக கிடைத்தன மருத்துவம் இலவசமாகவே கொடுத்தாக வேண்டும் ஏனெனில் பணம் கொடுத்த அவர்களால் வாங்க முடியாது, நோய் தாக்கினால் உற்பத்தி தேங்கி கம்யூனிச எஜமான்கள் சொகுசாக வாழமுடியாது.
பிரபாகரன் ராஜீவ்காந்தியை படுகொலை செய்யச் சொன்ன ஒலிப்பதிவை நானே இந்தியவுக்கு வழங்கினேன் ! முன்னாள் கடற்புலி காகுஸ்தன் அரியரத்தினம்
தேசம் நெட் - arulmolivarman : தேசம்குரல் யூரியூப் தளத்தில், இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா) தன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.
(இணையத்தின் கீழே இப்பதிவுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.) இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காகுஸ்தன் அரியரத்தினம் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து தேசம்நெற்க்கு அனுப்பி வைத்துள்ளார்.
26 பேர் உயிரிழப்பு -நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு காரணம் போதைவஸ்து மாபியாக்கள்
Jathu Edit : மலையக குரல் ; சிறைச்சாலைக்குள் இரகசியமாக இயங்கி வந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலமானதே இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாகும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம்: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த கொடூர வன்முறைச் சம்பவங்களில், ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இக்கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வாலிபர்கள், இளம்பெண்கள் பைக் ஓட்டி அராஜகம் - வாகன ஓட்டிகள் பீதி
dinamalar.com : தலைநகர் சென்னையில், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர். பைக் ரேஸில் பெண்களையும் ஊக்கப்படுத்தி, அட்டூழியத்திற்கு வழிவகுப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில நாட்களாக, விலை உயர்ந்த பைக்குகளில் வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகின்றனர்.
திமுக பாஜக கூட்டணியா? Progressive Alliance for State Autonomy
KULITALAI MANO: Truth is a Pathless Land.
*Progressive Alliance for State Autonomy*
என்ற பெயரில்
இவர்களுடன்
MK.Stalin - Convenor
Akhilesh Yadav
Supriya Sule
Uthav Thakrey
Tejaswi Yadav
TRS Rama Rao
Hemanth Shoren
Aravind Kejriwal
Umar Abdullah
பாஜக விற்கு ஆதரவு தரலாம்
Umar Abdullah or Mufti Muhamad Saeed, whoever is willing to join
Step 1 - create a forum to discuss state autonomy under general common banner
Step 2 - conduct seminars in each of these states and invite those party leader in that state
Step 3 - Continue doing this for 6 - 9 months
Step 4 - Analyse the data and facts collected in those forums and prepare a common minimum program draft
திங்கள், 6 ஜூலை, 2026
இந்தியாவின் தண்ணீரை குடிக்க மறுத்த ஜப்பானிய பிரதமர்
Maniam Shanmugam : இந்தியாவின் தண்ணீரை தவிர்த்த ஜப்பானிய பிரதமர்!
ஜப்பானிய பிரதமர் சனாய் டகாயிச்சி அண்மையில் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அந்த வருகையின் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக சீனாவில் இருந்து வெளியாகும் 'குளொபல் ரைம்ஸ்' ஏடு சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்து ஏடு கூறியதாவது:
"இந்தியப் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை புன்னகையுடன் வாழ்த்தி, அவரைத் தனது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். இருப்பினும், உள்ளூர் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்ட பின்னர், ஜப்பானிய தூதுக்குழு அரசு விமானத்தில் பாட்டில் தண்ணீரை எடுத்து வந்ததாக ஜப்பானிய ஊடக நிறுவனம் ஒன்று பின்னர் செய்தி வெளியிட்டது. சில பார்வையாளர்களின் பார்வையில், இந்த முரண்பாடான நடத்தை இந்தியாவின் மீதான ஜப்பானின் உணர்வற்ற, முறையான மற்றும் அவமதிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை 25 பேர் உயிரிழப்பு! என்ன நடக்கிறது?
ilakkiyainfo.com : நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஞாயிறு, 5 ஜூலை, 2026
: "கீழடிக்குச் சவுக்கடி"கீழடி நாகரீக காலம் 2000 க்குக் கீழே இறக்கப்படும். தமிழ் மொழி, தமிழ் எழுத்துருவின் (தமிழி) காலமும் 2600 லிருந்து குறைக்கப்பட்டு விடும்.
Siva Ilango : "கீழடிக்குச் சவுக்கடி"
கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவிடும் கீழடியின் தொல்லியல் ஆய்வறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை.
அவ்வறிக்கை "முழுமையற்றது" என்று தொல்லியல் துறையின் 'மதிப்பீட்டுக் குழு' கருத்துக் கூறியதை அடுத்து,
அதில் திருத்தம் செய்யுமாறு, கீழடி, தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றியத் தொல்லியல் துறை வற்புறுத்தி வந்தது.
அதற்குப் பதிலளித்த திரு அமர்நாத், "மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில், ஏற்புடைய காரணங்களும் இல்லை; தகுந்த நியாயமும் இல்லை" என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து இந்தியத் தொல்லியல் துறையின் ஐவர் கொண்ட உள்நிலைக் குழு, கீழடிக் களத்திற்கே சென்று மறு ஆய்வு செய்யும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர், ஒன்றிய அரசின் கருத்துப் படி, அறிவித்துள்ளார்.
கொக்கி குமார் ஆட்சியை பிடித்த கதை
கொக்கி குமார் + திரிஷா அணில்களின் கவனத்திற்கு !
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் கொக்கி குமார் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
அடுத்தாக கொக்கி குமாரின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
கொக்கி குமார் - அமித்ஷா சந்திப்பு.*
கொக்கி குமாரின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின் 'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் கொக்கி குமார் கட்சியில் சேர்ந்தார்.
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
கொக்கி குமார் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம் இருந்து.
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
"ராஜினாமா செய்ய வைப்போம்னு மிரட்டுறாங்க” : தவெக மீது திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
minnambalam.com - Kavi : அனிதா ராதாகிருஷ்ணனை போலவே எனக்கும் மிரட்டல் விடுக்கின்றனர் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது திமுக எம்எல்ஏ கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ”எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்கள். கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி 30 கோடி ரூபாய் செலவு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சனி, 4 ஜூலை, 2026
ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர்கள் கொதித்தெழும்புகிறார்கள்!
![]() |
Sharmila Seyyid : இத்தனை ஆண்கள் கேள்வி எழுப்பியபோது கொந்தளித்தபோது றிழா மர்சூக் பதட்டமடையவில்லை. நிதானமாக இருந்தார். ஆனால் ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர் கொதித்தெழும்புகிறார்.
அப்போது , ஸர்மிளா ஸெய்யித்திற்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவள்; முர்தத் என்று பத்வா அளித்தவர். இவள் கொல்லப்படவேண்டியவள் என்றவர்.
இப்போது, பெட்டை நாய்; சமூகத்தை நிர்வாணப்படுத்தியவள் என்ற பத்வாக்களை அளித்திருக்கிறார். நிர்வாணமானால் திரும்பவும் ஆடையை உடுத்திக்கொள்ள முடியும். குண்டு வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றால், போன உயிர்களைத் திரும்ப பெற முடியா.
ஆக மொத்தமாக அவர் பத்வா பெக்டரியை இன்னமும் மூடவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
ஆனால் என் கேள்விகள் அவர் என்னைத் தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தியதைப் பற்றியதோ, தற்போது என்னை நடத்தைக் கொலை செய்வதைப் பற்றியதோ அல்ல.
எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!
ராதா மனோகர் : தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!
இது எப்படி நிகழ்ந்தது என்பது மிக பெரிய ஆய்வுக்கு உரியது.
ஏற்றங்களும் இறக்கங்களும் கணக்கு வழக்கில்லாமல் கலைஞரை புரட்டி போட்ட அளவு வேறெந்த தலைவரையும் புரட்டி போடவில்லை.
இவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்தும் ஏதோவொரு விடயம் கலைஞரின் அத்திவாரமாக நின்றிருக்கிறது.
எந்த புயலிலும் அடித்து கொண்டு போகாத ஒரு உறுதியான பண்பு கலைஞரை காப்பாற்றி கொண்டே வந்திருக்கிறது.
அந்த பண்புதான், இன்று கூட கலைஞர் என்று சொன்னதுமே கண்கலங்கும் தொண்டர்களை கலைஞருக்குக் பெற்று தந்திருக்கிறது.
மனிதர்கள் அடிப்படையில் அன்பானவர்கள்தான்
சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கம் எல்லோருக்கும் உண்டு




