புதன், 24 ஜூன், 2026

41 deaths கொலைகாரனை (vijay) கைது செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலின்

May be an image of text that says "SUN NEWS NE NEWS சிறப்பாக செயல்பட்டாலும். "அரசியல் என்பது மிகவும் இரக்கமற்றது. தமிழ்நாட்டில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதில் எங்களுடன் போட்டிபோட்டது. ஆனாலும் கடந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்தது நாம் நினைப்பதை விடவும் அரசியல் சிக்கலானது' -நாரா லோகேஷ், ஆந்திர அமைச்சர் DOOSUKMEWSTAMIL SUNNEWS 24JUN2026 2026 sunnewslive.in"

 Rebel Ravi : திமுக தோல்விக்கு விதை போட்ட நிகழ்வு.
அரசு அரசாகச் செயல் பட வேண்டும்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் தூக்கி உள்ளே வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, எந்தத் தலைவரும் அவர் கட்சித் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று மகாத்மா போல் பேசியது முதல் தவறு.
நள்ளிரவில் கரூர் போனது, செ பா போனது, அன்பில் அழுதது.. இதெல்லாம் அடுத்தடுத்த தவறுகள். தவெக  நிர்வாகி பத்து பேரை உடனே கைது செய்து, 

May be an image of ‎text that says "‎23 JUN 2026 SUN 41 DEATHS கொலைகாரனை EWS கைது செய்ய தவறியது நீங்கள்! معن TAMILNADU & DMKAINS PAYING THE PRICE கைது செய்ய முயற்சி GEN z DMK ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் கைது செய்ய முயன்ற போலீஸ். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் போலீசார் திரும்பியுள்ளனர். ராயக்கோட்டை போடம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அன்பானந்தத்தை அனுப்பி வையுங்கள் எனக் கூறி பெற்றோரிடம் வாக்குவாதம். எதிர்ப்பையும் மீறி வீட்டை சோதனையிட்டுள்ளர். imgfill SUSHENSTINE SUKEINS ® umratfAvie‎"‎

அந்த நிகழ்வை ஒரு கட்சியின் அலட்சியப் போக்காய்க் கருதி.. கருவிலேயே அழித்திருக்க வேண்டும். 
கைது செய்தால் தேர்தல் வெற்றி பாதிக்கும் ஆட்சி போய் விடும் என் அஞ்சிய ஸ்டாலின் அவர்களே…இப்ப மட்டும் என்ன வாழுது?
பில்லக்கா பையன  பெரியாளாக்கி அவனிடமே தோற்றீரே இது எவ்வளவு அசிங்கம்?
Devamathi Venkatesh 
அவர் இயல்பு அது தன் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்ட போது காட்டிய கரார் தனத்தை எதிரி கட்சி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்ட தற்குறி குடிகார ஜோம்பிஸ் தலைவன் விர்ச்சுவல் வாரியார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் தான் நமக்கு இந்த நிலைமை 
கட்சிக்காரர்களுக்கு பவர் இல்லை என்றால் கட்சிக்கு எப்படி பவர் இருக்கும் திமுகவின் வின் தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டது அதிகம் .நம் கூட்டணியில் இருந்த கட்டப் பஞ்சாயத்து கட்சிகளூக்கு இருந்த சுதந்திரம் மரியாதை அதிமுக பாஜக வுக்கு இருந்த மரியாதை கூட அரசு அலுவலகங்கள் காவல் நிலையத்தில் நம் கட்சிக்காரர்களுக்கு இல்லை. இந்த வீழ்ச்சிக்கு  இதுவும் ஒரு காரணம்

செவ்வாய், 23 ஜூன், 2026

த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்


 மின்னம்பலம்  கவி : முதல்வர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய் முதல்வரான பிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேசமயம் முதல்வரின் தோழியான த்ரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக விஜய்யுடன் எடுத்த புகைப்படத்துடன் எதாவது ஒரு கேப்ஷன் போட்டு வாழ்த்து பதிவு வெளியிடுவார்.
ஆனால் இந்த முறை ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். என்ன சொல்ல போகிறாரோ என்ற பதற்றமும் அவரது கட்சியினரிடம் இருந்தது.

டி.ஆர்.பி.ராஜா : “தமிழகத்தின் முதலீடுகளை சீர்குலைக்கிறது ரீல்ஸ் கோஷ்டி அரசு”


  hindutamil.in  - வெற்றி மயிலோன்  : சென்னை: “தமிழகத்தின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என தமிழக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம்.
தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வீதி விபத்துக்கள்! தொடர் உயிரிழப்புக்கள்

 Murukaiya Thamilselvan :  கிளிநொச்சி வீதிகளில் மலியும் மரணங்கள்: சமூக வலைத்தளப் போராளிகளாகவே இருந்துவிடப் போகின்றோமா?
மற்றுமொரு வீதி விபத்து, மற்றும் ஒரு பெறுமதிமிக்க உயிர் பலி! கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த கல்வியளாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான பெருமாள் கணேசன் அவர்களை நாம் இழந்து நிற்கின்றோம். அதுவும் எங்கே?
 கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு நேர் முன்பாக உள்ள பாதசாரி கடவையில்! வீதியைக் கடக்க முயன்றவரை, அதிவேகமாக வந்த ஆடம்பர உந்துருளி மோதி இழுத்துச் சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரது மூச்சு அடங்கியிருக்கிறது. 

அம்மோனியா கசிவு.. பலி எண்ணிக்கை 8.. சிகிச்சையில் 70 பேர்- முழு விவரம்!

 மின்னம்பலம் - Mathi : திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு (Ammonia Gas Leak) விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட விரிவான அறிக்கை:
கடந்த ஜூன் 21-ம் தேதி மாலை, வழக்கமான தொழிற்சாலை செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அங்குள்ள குளிரூட்டல் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வெளியேறிய நச்சு வாயு தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியதால், பணியில் இருந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.

துரைமுருகன் பிடிவாதம் கோமாவில் இருந்தாலும் நான்தான் பொதுச்செயலாளர் ..

 tamil.oneindia.com/n  :ம்ஹும் முடியவே முடியாது.. விட்டுக் கொடுக்காத துரைமுருகன்! மாற்றி யோசித்த ஸ்டாலின்! திகுதிகு திமுக!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணமாக அவர் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சில தகவல் வெளியான நிலையில், "பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்ற உறுதியான நிலைப்பாட்டில் துரைமுருகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள், 22 ஜூன், 2026

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் - திசை திருப்பும் CPIM சண்முகமும் அன்புமணியும்

 புகச்சோவ் புகச்சோவ் :  மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் கொடுத்த திருத்தத்தை ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதை போல சித்தரித்து CPIM சண்முகம் அவர்களும், அன்புமணியும் அறிக்கையும், மேடையும் போட்டு பேசியுள்ளனர். 
இவர்கள் பரப்பியதோடு ஒரு விவசாய சங்கத்தையும் உதயநிதி அவர்கள் பெரிய குற்றத்தை செய்ததை போல அறிக்கை விட வைத்துள்ளனர். 
இதை உடனடியாக expose செய்ய வேண்டும் என்று 4 மணி நேரம் ஆய்வு செய்தேன். 
பலரிடம் பேசி குறிப்புகளை எடுத்தேன். அதில் உதயநிதி அவர்கள் சொன்ன திருத்தம் தான் சரி. 
அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிய வந்தது. அதை விரிவாக எழுதியுள்ளேன். அவசியம் படியுங்கள் பரப்புங்கள். 
தோழர் சண்முகம் exposed 

காருக்குள் சடலம்: திடுக்கிடும் பல தகவல்கள் அம்பலம்

 ilakkiyainfo.com : கண்டி தெல்தெனியவில் காருக்குள் இருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. 
 பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. 
உயிரிழந்த பெண் மருத்துவருடன் வாழ்ந்து வந்த நபர், அவரது சடலத்தைக் காரின் உள்ளேயே வைத்துக்கொண்டு, எவ்விதப் பதற்றமும் இன்றித் தனது வீட்டிற்குச் சென்றுள்ள அதிர்ச்சித் தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

திமுக தோல்விக்கு அழகிரியும் ஒரு காரணமா? ஒரு திமுக தொண்டனின் ஆதங்கம்

 Kalar Kasi Viswanathan :  2006 இல் இருந்து 2011 வரை திமுக ஆளுங்கட்சி கலைஞர் முதலமைச்சர்.
 2011 மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.
 கலைஞர் அவர்களுக்கும் வயது ஆகிவிட்டது.
 இந்த நேரத்தில் மதுரையில், 2014 ல், அண்ணன் அழகிரியார் அவர்களை ஏதோ ஒரு பொய் காரணத்திற்கு கட்சியை விட்டு நீக்கினார்கள்.
 2016 தேர்தலில் திமுக மீண்டும் தோல்வி..
 2017ல் கலைஞர் மறைந்தார்.
 அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி.
 2021 இல் திமுக ஆட்சி மலர்ந்தது 

ஞாயிறு, 21 ஜூன், 2026

புலிகளும் வைகோவும் ஒருவர் முதுகில் ஒருவர் குத்திய துரோக வரலாறு


 ராதா மனோகர் :
புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! 
வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை..
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்.
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி.
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார்.
அது ஓரளவு பயனளித்தது   ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை. அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு.. பாவம்.
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்.

விஸ்வானந்ததேவன்- பாசிஸ புலிகளால் கடலில் வைத்து கொல்லப்பட்ட நேர்மையான இடதுசாரி விடுதலை போராளி!

May be an illustration of text

 நல்லையா தயாபரன் : "வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்"
பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986  திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு,  முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன்.  

சென்னை 7 பேர் உயிரை குடித்த அம்மோனியா.. திருவள்ளூர் ஆலைக்கு சீல்

  Vignesh Selvaraj -  Oneindia Tamil :  திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை கன்னிகைப்பேர் பகுதியில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் அம்மோனியா வாயுக் கசிவு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. 
இந்த கோர விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 
70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அந்த ஆலை இயங்குவதற்குத் தமிழக அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. 

போர்துகீசியரிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது உயிர் பிழைத்த நல்லூர் அரசன் சங்கிலியன்

No photo description available.
Queen Catherine

 ராதா மனோகர் : 1544  ஆம் ஆண்டு மன்னாரில் சங்கிலியனும் அவனின் குண்டர்  படையும் 600 க்கு மேற்பட்ட தமிழ் கிறிஸ்தவர்களை சகோதர படுகொலை சம்பவம் போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பனியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது The massacre of about 600 to 700 Christians in Mannar in 1544 by Cankili
போர்த்துகீசிய அரசி  Queen Catherine இந்த படுபாதக செயலுக்கு காரணமான சங்கிலியனையும் அவன் பரிவாரங்களையும் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் 

No photo description available.
Viceroy Dom Constantino de Bragança

இந்த பணியை நிறைவேற்றுவதற்கு போர்த்துகீசிய வைஸ்ரோய்   Viceroy Dom Constantino de Bragança  தலைமையில்  from Goa to Jaffna with 20 galleys, 10 galiots, and 70 ships. The forces consisted of 1,200 soldiers; September 1560 கோவாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர் 
இவர்களை (யாழ்ப்பாணம் )கொழும்பு துறையில் எதிர்கொண்ட சங்கிலியன் படைகள்  சண்டையில் தோற்று கோப்பாய் பற்றை காடுகளை நோக்கி ஓடி தப்பினார்கள்.
அங்கும் போர்த்துகீசிய படைகள் சென்று அவர்களின் இருப்பிடங்களை தீவைத்து கொளுத்தியது 
கோப்பையிலும் பாதுகாப்பு கேள்வி குறியானதும் சங்கிலியன் படை வன்னி காட்டுக்கு தப்பி ஓடிச்சென்றது.
பின்பு அங்கிருந்து கொண்டே போர்த்துகீசிய வைஸ்ரோய்க்கு ஒரு சமாதான தூது அனுப்பினான் 
கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவனின் குணம் 
இவனின் தூதை போர்துகீசிய அரசி ஏற்றுக்கொள்ளவில்லை 
ஆனால் வைஸ்ரோய் வேறு விதமாக கணக்கு போட்டார் 
இவனை கொல்வதிலும் பார்க்க இவனை கொண்டு பல காரியங்களை செய்து கொள்ளலாம் என்று கருதினார். 

சனி, 20 ஜூன், 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் முழு விவரம்!

 Kalaignar Seithigal - Manoj : தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தவெக ஆட்சியமைத்த பின்பு சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. தினமும் விடியும் பொழுது குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெறாதா நாள் இருக்குமா? என்ற பயமே பொதுமக்களிடம் நிலவுகிறது. அந்தளவுக்கு தறிகெட்டுப் போய் உள்ளது மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை.

ப.சிதம்பரம் -திருமா சந்திப்பின் பின்னணி - கூட்டணியை வலுப்படுத்த திட்டம்?'

 நக்கீரன் : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகான முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவருடைய அலுவலகத்தில் வைத்து சந்திப்பு மேற்கொண்டார். 

லெனின் 2,000 முதல் 4,000 வரையிலான பாட்டாளிகளை சுட்டு படுகொலை செய்தார் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாம்

May be an image of text

 Chandru R  :  பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் பாட்டாளிகளையே படுகொலை செய்த லெனின்.
என்னாலும் நம்ப முடியவில்லைதான்  ஆனால் உண்மை சுடுகிறதே.
அஸ்திரகான் ஒடுக்குமுறை (Astrakhan Strikes - 1919): மார்ச் 1919-ல் அஸ்திரகான் நகரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் உணவு வேண்டிப் போராடினர்.
 லெனினின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான செர்ஜி கிரோவ் தலைமையிலான படைகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2,000 முதல் 4,000 வரையிலான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது வோல்கா நதியில் மூழ்கடிக்கப்பட்டனர்.

வெள்ளி, 19 ஜூன், 2026

அம்பாறை பெண் வைத்தியர் இறப்பு - காதலனை தேடும் போலீஸ் - காதலனைத் தேடும் போலீஸ் - ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் கடன்

ilakkiyainfo.com  : அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவர், தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றின் உள்ளே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை வியாழக்கிழமை (18) நடைபெற்றது. அதில், அவரது மரணம் குறித்து 'திறந்த தீர்ப்பு' (Open Verdict) வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தவேக பாஜகவின் பீ டீம்? ஆளுநர் உரையில் அம்பலமான கள்ளக்கூட்டு

 tamil.oneindia.com  - Velmurugan P : சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாமே சாதாரணமாக கடந்து போகக்கூடிய நிகழ்வு கிடையாது. ஏனெனில் வழக்கமாக திமுக ஆட்சியில் ஆளுநர் ரவி இருக்கும் போது சட்டசபை கூடினாலோ போர்க்களம் போல் பிரச்சனை வெடிக்கும்.. தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிப்பார்கள். தேசிய கீதம் வாசிக்க சொல்வார் ஆளுநர். ஆனால் அதனை ஏற்க சபாநாயகர் மறுப்பார். இதனால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வார். அதேபோல் அப்படியே வாசித்தாலும், பல வார்த்தைகளை பேச மாட்டார். ஆனால் இன்றுதவெக அரசின் நடவடிக்கையும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் நடவடிக்கையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று(ஜூன் 18) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று (ஜூன் 18) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான,

புதன், 17 ஜூன், 2026

தத்தளிக்கும் விஜயபாஸ்கர்.. கதவுகளை மூடும் திமுக, தவெக? கைமாறும் டிவி சேனல்கள்

 மின்னம்பலம் : வாங்க ப்ரோ.. அங்கிட்டும் இங்கிட்டும் தத்தித் தாவுற கேரக்டர் யாராம்?
வேற யாரு.. விராலிமலை விஜயபாஸ்கர்தான்.. அவரோட ஒவ்வொரு மூவ் பத்தியும் நாம டிஜிட்டல் திண்ணையில பேசிகிட்டு இருக்கிறோம்..
விஜயபாஸ்கர் நேத்து திடீர்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்திச்சு தான் கைப்பட எழுதுன ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரு.. சபாநாயகரும் அதை ஏத்துகிட்டாரு..
அதோட நிற்காத விஜயபாஸ்கர், ”தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

துரை வைகோ : “தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.

  hindutamil.in - க.ராதாகிருஷ்ணன்:  கரூர்: “தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) நடந்த கிருஷ்ணராயபரம் மதிமுக பேரூர் செயலாளர் வெங்கடாசலம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

1995 இல் யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பிய சந்திரிகா பண்டாரநாயக்க

May be an image of one or more people

 ராதா மனோகர் : 1995 இல் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று கொண்டே இருந்தது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முடிவோடு யாழ்ப்பாணத்தை பல முனைகளிலும் முற்றுகை இட்டு நகர்ந்த ராணுவம் பல இழப்புக்களின் மத்தியில் 1995 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணத்தை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது
தென்னிலங்கையிலும் பலவிதமான பங்கரவாத செயல்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தது 
எளிதில் விளங்க வைக்க முடியாத அளவு மிக பயங்கரமான சூழல் எங்கும் நிலவியது.
சந்திரிகா அம்மையாரின் நிலைமையும் படுமோசமாக இருந்தது 
ஆளும் கட்சியிலும் பலர் அதிருப்தியோடு இருந்தார்கள் 
நாட்டின் நிச்சயமற்ற தன்மையும் பாதுகாப்பு தளம்பல்களும் சேர்ந்து பல அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்டி படைத்தன.

மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக

 tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் "வெள்ளை அறிக்கை" என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் . தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.

2 மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்: ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளி வந்தனர்

 hindutamil.in -எஸ்.முஹம்மது ராஃபி :  ராமேசுவரம்: மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து கடலுக்​குச் சென்ற ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் அதிக மீன்​கள் கிடைத்​த​தால் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.
தமிழகத்​தில் மீன்பிடி தடைக்​காலம் ஜுன் 14 அன்​றுடன் முடிவடைந்​த​ நிலையில் விசைப்​படகு மீனவர்​கள் தற்​போது கடலுக்​குச் சென்று வரு​கின்​றனர். ஞாயிற்​றுக்கிழமை மாலை​யி​லிருந்து சுமார் 700-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் சுமார் 3,500 மீனவர்​கள் ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீன் பிடிக்​கச் சென்​றனர்.

செவ்வாய், 16 ஜூன், 2026

கும்மிடிப்பூண்டியில் 3 குழந்தையை வன்புணர்வு சென்ற பிகாரி கைது

 நக்கீரன் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த சம்பவத்திற்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வெறும் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கி, பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.