புதன், 11 பிப்ரவரி, 2026

கனடாவில் துப்பாக்கி சூடு 9 பேர் உயிரிழப்பு

 தந்தி டிவி :  பள்ளியில் துப்பாக்கி சூடு - 9 பேர் உயிரிழப்பு.. கனடாவில் கொத்தாக சரிந்த உயிர்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் உள்ளதாகவும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 
இது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், “இந்த துயரமான சம்பவத்தால் தான் மனமுடைந்து போனதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்... 
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சீமான் கைது! நடந்தது என்ன?

 மின்னம்பலம் -Kavi  : சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில்  வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (பிப்ரவரி 11) 10ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. 
அரசுத் துறைகளில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.  முறையான விடுப்பு வசதிகள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.

அவர்கிட்ட பேச முடியாது! தொடர்பு எல்லைக்கு வெளியே ராகுல்! திமுக காங்கிரஸ் பிரச்சனைக்கு காரணமே இதுதான்

 tamil.oneindia.com - Shyamsundar  ; சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் நீண்டகால கூட்டணிகளாக விளங்கும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுகவிடம் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு: காங்கிரஸின் பிடிவாதம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முக்கிய நிர்வாகிகள், வரும் தேர்தலில் தங்களுக்குக் குறைந்தபட்சம் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "வெறும் வாக்கு வங்கியாக மட்டும் செயல்பட நாங்கள் விரும்பவில்லை; அதிகார மையத்திலும் எங்களது பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ் - டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.

 tamil.oneindia.com : டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.. அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது. சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். திமுக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை (DMK Alliance issue) குழுவை அமைக்க வேண்டும் என்று நேற்று செல்வப்பெருந்தகை டோனை மாற்றியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ள நிலையில் செல்வப்பெருந்தகை ரியாக்ட் செய்துள்ளார்.

இலங்கை எம்பி அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!

 தமிழ் மிரர் : அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவந்த கொடவெல ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய விசேட அமர்வினால் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

காங்கிரஸ் (திமுக) காங்கிரஸ் (தவேக) காங்கிரஸ் (ஆர் எஸ் எஸ்)

 Krithika Tharan :  ஏன் கூட்டணியை உடைப்பவர்கள் பி டீம் என சொல்றீங்க?
இதை நீண்ட நாளாக எழுத வேண்டும் என நினைத்தேன்.
நான் முதலில் ஆர் எஸ் எஸ் க்கு எதிரான ஆள். அதன் பிறகுதான் காங்கிரஸ். அதை அடக்கி வைக்கவே அன்பை தேசமெங்கும் மீட்க ஒரு கை தரவே காங்கிரசில் இணைந்து உழைக்கிறேன்.  கிட்டத்தட்ட ஐந்து முறை ராகுல் காந்தியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. என் புத்தகம் அவரால்தான் வெளியிட வேண்டும் என ஒரு வருடம் காத்திருந்து வெளியிட்டேன். 
சாதிக்க வேண்டுமெனில் சாதித்தே தீரும் பிடிவாதம் என்னிடம் உண்டு.  தேர்தலில் இப்பொழுதைக்கு நிற்க போவதில்லை. காங்கிரசை கைக்காசு போட்டு பலப்படுத்தும் வேலையில் உள்ளேன். இந்தியாவில் அதிகளவு சக்தி கிள்ப்களை இணைக்கும் வேலையில் குழுவினர் துணையுடன்  செய்துள்ளேன் தொடர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் பணியிலும் உள்ளேன்.  இன்னும் பெரிய அளவில் சாதித்து இருக்கலாம். என் பொருளாதாரத்தில் முடிந்ததை செய்கிறேன். 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

இந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்க புள்ளி விபரம்

May be a black-and-white image

 தீரன் சாம்பவர்.சு : 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு  Google Chrome  india முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பனர்கள்  மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. 
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம்   4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள் 
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்  
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள் .. 
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்  
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.

ஜனநாயகன் இரண்டு? 41 உயிர்கள் ஜனநாயகன் வேற .. இப்போது உள்ள ஜனநாயகன் வேற

 புகச்சோவ் புகச்சோவ் :  1, நடிகன் விஜய் ஜனநாயகன்னு ஒரு சினிமா எடுத்தாப்ல!
2, அதோட காட்சிகளுக்காக, அவனோட கட்சி மீட்டிங்குகளை பயன்படுத்தினாப்ல!
3, அந்த ரோடு ஷோக்களில் தனது சினிமா ஷூட்டிங்கையும் 64 கேமராக்களை கேரவான் மற்றும் ட்ரோன்களில் வச்சி படம்புபிடிச்சிக்கிட்டாப்ல!
4, கரூர்ல அப்புடி ஷூட்டிங்கும், ரோடு ஷோவும் சேர்த்தே நடத்துனதுல 41 பேரை கொன்னுட்டாப்ல!
5, அந்த க்ளிப்பிங்குகளை தன்னோட சினிமால சேக்கலாம்னு விஜய் போட்டுபாத்தப்போ, அந்த க்ளிப்புகளே விஜய்தான் கரூர் படுகொலைக்கு காரணமான குற்றவாளிங்கறதை நிரூபிக்கிற மாதிரி இருந்ததால, அந்த ஸ்டோரி மற்றும் சினிமாவையே மூடிமறைச்சிட்டாப்ல!
6, அப்போ ஜனநாயகன் சினிமா என்னாச்சின்னு எல்லோரும் கேப்பாகளே என்பதற்காக, உடனடியா எச்சி.வினோத்தை புடிச்சி, ஹிட்டான தெலுங்கு படமொன்றை இரண்டே மாசத்துல அப்படியே காப்பி செஞ்சி வச்சதுதான், இப்போ சென்சார் போர்டுல சிக்கிட்டு நிக்கிற ஜனநாயகன்!

திரு ஜி ஜி பொன்னம்பலம் அமைச்சராக செய்த அபிவிருத்திப்பணியை வேறு எந்த தமிழ் தலைவரும் செய்யவில்லை


Varatharajan Mariampillai :
  ஜீ.ஜீ யின் நினைவு நாள் இன்று!
'கால் நூற்றாண்டுக்கு நான் தான்  தலைவன்!  என்னை அசைக்கேலாது!!'
-அசைந்த விமானத்தில் பதறாமல் சொன்ன ஜீ. ஜீ!
அமரர் கே.சிற்றம்பலம் அவர்கள் 'சுதந்திர' இலங்கையின் மூத்த அமைச்சர்களில் ஒருவர். அவர் மன்னாரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்று ஐ.தே.க வில் இணைந்து தபால் தொடர்புகள் அமைச்சராகவும் பின்னர் கடற்றொழில் அமைச்சராகவும் பணியாற்றியவர். 1947 முதல்  1956 இல் தமிழரசுக் கட்சியின் அழகக்கோனிடம் தோற்கும் வரை மன்னாரைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
இலங்கை வானொலி நிலையம் திறப்பு க்கான கல்லில் அவரது பெயர் உள்ளது.
( அடிக்கற்களில் பெயர்கள் இடப்படக்கூடாது என்பதற்கு ஆதரவான நம்மவரின் கவனத்துக்கு)
ஜீ. ஜீ பொன்னம்பலம் 1931 இல் மன்னாரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்து பின்னர் பருத்தித்துறையில் 1934 இல் இரு தேர்தல்களில்  இருதடவையும் 1947, 1952, 1956, 1960 (ஜூலை), 1965 இல் யாழ்ப்பாணத்திலும் வென்று மக்கள் பிரதிநிதியானார்.

ஜெப்ரி எப்ஸ்டான் விவகாரத்தில் நோம் சாம்ஸ்கியின் மனைவி வலேரியாவின் அறிக்கை

BBC tamil :  ஜெப்ரி எப்ஸ்டான்  விவகாரத்தில் நோம் சாம்ஸ்கியின் பெயரும் இருப்பது பலரையும் கொஞ்சம் அதிர வைத்திருக்கிறது.
இது பற்றி அவரின் மனைவி தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
வலேரியா சாம்ஸ்கி வழங்கிய அறிக்கை
பலருக்கும் தெரிந்ததுபோல், தற்போது 97 வயதாகும் என் கணவர் நோம் சாம்ஸ்கி, 2023 ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான பக்கவாதத்திற்குப் பிறகு, மிகப்பெரிய உடல்நல சவால்களை எதிர்கொண்டு வருகிறார்.
இப்போது அவர் 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்; பேசவும், பொதுவெளியில் உரையாடவும் முற்றிலும் இயலாத நிலையில் இருக்கிறார்.
இந்த உடல்நலச் சிக்கல் தொடங்கியதிலிருந்து, நான் முழுமையாக நோம் அவர்களின் சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளில் மூழ்கியிருக்கிறேன். அவருக்கும், அவரது மருத்துவ பராமரிப்புக்கும் முழுப் பொறுப்பு எனக்கு மட்டுமே.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

திமுக குழு அமைக்காமலேயே தொகுதி பங்கீடு! கட்சிகளின் பிடிவாதத்தால் அதிரடி..!

May be an image of one or more people and daistamil.asianetnews  : விசிக, காங்கிரஸுக்காக மெகா பிளானை இறக்கிய திமுக... குழு அமைக்காமலேயே ஸ்டாலின் அதிரடி..!
தொகுதி எண்ணிக்கை முடிவுக்கு வந்த பிறகு மூன்று நாட்களில் மொத்தமாக அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொங்குநாடு மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் அவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை இப்போது நடந்து வருகிறது. மொத்தமாக வெரும் தொகுதி எண்களை உறுதி செய்த பிறகு அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதி என்பது கூட்டணி பேச்சு வார்த்தை மூலம் தெரியவரும். 

“பிரபாகரன் ஒரு முட்டாள் பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” கடற்புலி புலனாய்வு அரியரத்தினம் பேட்டி

 “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கன
தேசம்நெட் -  arulmolivarman  : தேசம்குரல் யூரியூப் தளத்தில், இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா) தன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பதிவு வெளியிடப்பட்டு இருந்தது. (இணையத்தின் கீழே இப்பதிவுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.) இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காகுஸ்தன் அரியரத்தினம் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து தேசம்நெற்க்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை இங்கு வாசிக்கலாம்:

கனடாவில் அனுமதியின்றி வீடியோ எடுத்த இலங்கையர் கைது

 வீரகேசரி : கனடாவில் அனுமதியின்றி வீடியோ எடுத்த இலங்கையர் கைது
அனுமதியின்றி நபர்களைத் துன்புறுத்தி வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்றோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சந்தேகநபர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
45 வயதான சந்தேகநபர் மீது ரொறொன்றோ பொலிஸாரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபரை 45 வயதுடைய முகமது அஸ்கர் முகமது-ரசிக் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

திமுக நிதானம் - கொதிப்பில் கூட்டணி கட்சிகள்!

 hindutamil.in-  வே.கோபாலகிருஷ்ணன்  : தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அறிவாலயத்தின் மவுனம் மட்டும் கூட்டணிக் கட்சிகளின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. "கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுவை பிப்ரவரி இறுதியில் அமைத்துக் கொள்ளலாம்" என திமுக மேலிடம் எடுத்திருக்கும் முடிவை சற்றும் எதிர்பார்க்காத அதன் தோழமை கட்சிகள், இப்போது உச்சகட்ட கடுப்பில் இருக்கின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 173 இடங்களில் களம் கண்டது. மீதமுள்ள இடங்கள் காங்கிரஸ் 25, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம்-க்கு தலா 6, முஸ்லீம் லீக், கொமதேக-வுக்கு தலா 3, மநேமக 2, தவாக, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எனப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இந்த முறையும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி அதே பழைய கணக்கிலேயே வண்டியை ஓட்டிவிடலாம் என அறிவாலயம் கணக்குப் போட்டிருந்தது. ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.

பிரவீன் சக்ரவர்த்தி மாணிக்தாகூர், மோகன் குமாரமங்கலம் போன்றோர் ஆர் எஸ் எஸ் ஏவல் பேய்களா?

May be an image of text that says "புதிய தலைமுறை 1h• was live. #live NEWS BIG தமிழகத்தில் காங்கிரஸைத் தனிமைப்படுத்த பாஜக சதி USIVE USIVEDE シ一 น..86 CLUS தனை்பெர் குன ததல்ப்வர்கடன் L6 เยิ1 புதிய தலலைமுறை ၅/၁၀၇၉၇၉၆်၉၆၆၅၉၅၉၆၉ காங்கிரஸை திமுக கூட்டணியிலிருந்து பிரிக்க பாஜக சதி செயல்திட்டம் புதிப த த オ LIVE|10:39AM LIVE 10:39AM"

 Bilal Aliyar :  மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா போன்றோரை சம்பந்தமே இல்லாமல் மோடியை தாக்கபோவதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிப்பதும்
இப்போது வரை யாரென்றே தெரியாத பிரவீன் சக்ரவர்த்தி என்ற நபரை ஊடகங்களில் உளற வைப்பதும்
மாணிக்தாகூர், மோகன் குமாரமங்கலம் போன்றோர் காங்கிரசை பெரிய சக்தியாக பேசி திமுகவினரை, திமுக தலைவர்களை தரக்குறைவாக பேசுவதும்
வேலுச்சாமி போன்ற புரோக்கர்கள் கலைஞர் குறித்து அருவருப்பான வார்த்தைகளை தெளிப்பதையும்
துக்ளக் மேடைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுவதையும்
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகள் அல்ல.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை உடைக்க, காங்கிரசை பெரிய சக்தியாக ஆர்எஸ்எஸ்சே கட்டமைக்கிறதோ என்ற சந்தேகம் நிரூபணமாகிறது! 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பாஜக சதி: செல்வப்பெருந்தகை அதிரடி

 மின்னம்பலம் - Mathi  :  திமுக- காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் எனபாஜக சதிசெய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக – காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என பாஜகவினர் கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்க. அவங்களோட ஒரே நோக்கம் ‘இந்தியா’ கூட்டணியைச் சிதைக்கிறதுதான்.
தமிழகத்துல காங்கிரஸைத் தனியா பிரிச்சுவிட்டு, தலித் மக்களோட வாக்குகளையும் சிறுபான்மையின மக்களோட வாக்குகளையும் பிரிச்சுப் பார்க்கணும்னு ஒரு பெரிய சதித்திட்டம் போட்டு வேலை செய்றாங்க. ஆனா, அவங்க பருப்பு இங்க வேகாது.

டெல்லியில் - நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று ராகுல் முடிவு செய்வார் - பின்னணி

May be an image of one or more people

 tamil.oneindia.com- ஷியாம் சுந்தர் :   டெல்லியில் கிளைமேக்ஸ்.. நண்பர் விஜய் or அண்ணன் ஸ்டாலின்.. இன்று டிக் அடிக்கும் ராகுல்? பின்னணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
டெல்லி விரைந்த செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை இந்த முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சனி, 7 பிப்ரவரி, 2026

80, 90களில் பிறந்தவர்களை விட 1997-2012 களில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் IQ வில் குறைந்துள்ளனர்

 மாலை மலர்  :  80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட 1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் மற்றும் IQ குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் IQ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்று, IQ அளவுகள் குறையத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 minnambalam.com  - Kavi : விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், இளைஞரணியினரும் கலந்துகொண்டுள்ளனர் . 
முதலில் துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்மை செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளார்கள்  ஐ.பெரியசாமி, பொன்முடி,திருச்சி சிவா, அந்தியூர் ப செல்வராஜ், மு.பெ.சாமிநாதன்,  கனிமொழி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசை வழங்கினார். 

ஆட்சியில் பங்கு? : ஒரே கல்லில் 2 மாங்காய்'? காங்கிரஸ் தானாகவே போகும் .. காத்திருக்கும் திமுக?

கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி  :  ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் அடம்: 'ஒரே கல்லில் 2 மாங்காய்' அடிக்க தி.மு.க. போடும் திட்டம்!
தமிழகத்தில் நம்மை வைத்துத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி, நமது வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே என்று வருத்தப்படுகிறதாம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 
எனவே, அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழகத்தைப் போல் புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால், 
5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒன்றாக சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2-வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.
அதிருப்தியில் தி.மு.க.

உலக அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

May be a graphic of text that says "DEDOLLARISATION And CIVIL IL WAR Makinthan"

 Mukinthan Thurairajasingham :  வரலாறு என்பது ஒரு சுழற்சி. ஒரு பேரரசு உச்சத்தைத் தொடும்போது, அதன் வீழ்ச்சிக்கான விதைகளும் அங்கேயே தூவப்படுகின்றன. 
இன்று நாம் காண்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் இரட்டை ஆதிக்கம் (Bipolar World) கொண்ட உலகாக உருவானது. சோவியத் ஒன்றியம் உடைந்ததுடன், 
அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கம் (Unipolar World) நீண்ட காலம் நிலவியது. 
இன்று அந்த ஆதிக்கம் மெதுவாக சிதைந்து, பல மையங்களைக் கொண்ட புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது.
வரலாற்றில் எந்தவொரு பேரரசும் நிரந்தரமாக இருந்ததில்லை. 
ரோமானியப் பேரரசு முதல் பிரிட்டிஷ் காலனித்துவம் வரை அனைத்தும் ஒரு கட்டத்தில் வீழ்ந்தே தீர வேண்டும் என்பது காலத்தின் விதி.
உலகம் இனி ஒரு நாட்டின் பிடியில் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான அமெரிக்காவின் 'ஒற்றை முனை' (Unipolar) அதிகாரம் சிதைந்து, அதிகாரம் பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. இதையே நாம் 'பல்முனை உலக ஒழுங்கு' என்கிறோம். 

பெரியார் இயக்கப் பெண்களை வலுப்படுத்தும் கட்டமைப்பு உள்ள ஒன்னும் இல்ல..இனி செஞ்சாத்தான் உண்டு

 Loganayaki Lona  :  இதே போல முன்னாடி ஒரு கதை.
அதர்மம் மனோஜ் இப்ப யூட்யூபரா இருக்குறார்..
அப்ப அவர் தான் தபெதிக கோவை மாவட்ட நிர்வாகி.
இயக்கத்தில சேர்க்குறேன்னு வாட்சப் க்ரூப்ல சேர்த்துட்டு அதுல தான் மீட்டிங்..டிஸ்கசன் எல்லாம்
ஆனைமுத்து அய்யாவுக்கு இரங்கல் தீர்மானம் கேட்க சொல்லி அந்த குழுவில் கோரிக்கை கேட்டேன்
அதப் பகிர்ந்ததும்..வேகமா அனுப்பி தபெதிகவின் வேண்டுகோளுக்கிணங்கன்னு நியூஸ்லலாம் இரங்கல் தெரிவித்த சட்டமன்ற தீர்மானம்   வந்தது.
ஒகே இயக்கமா கேட்டா செயல்பாடு நடக்கும்னு நம்பிட்டேன்.
எனக்கு ஆனைமுத்து அய்யாவை அவர் இறந்த பின்னாடி தான் அப்டி ஒருத்தர் இருந்ததே  தெரியும். பெரியாரிய மார்க்சியஅப்டின்னு  ஒருத்தரான்னு அப்புறம் தான் அவர் புத்தகம் படிச்சேன்.
சரி ஒகே.. கொள்கை உறவு , உணர்வு இருந்ததால்   தான் நாங்க அந்த கோரிக்கைய  கேட்டோம்
 இங்க ப்ரபாகரன் பாலிடிக்ஸ் இணையத்துல வைரலா போய்ட்டு இருந்த டைம் அது..

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் ..படையெடுக்கும் தலைவர்கள் தொண்டர்கள்

 tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில அரசியல் களம் பல்வேறு ட்விஸ்ட்களை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இன்று திடீரெனத் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிமுக- பாஜகவின் என்டிஏ கூட்டணி, சில மாதங்களாகவே பல்வேறு கூட்டணிக் கட்சிகளையும் உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதற்கேற்ப அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.

எகிறும் ஸ்டாலின்..குழப்பத்தில் ராகுல்… டென்ஷனில் விஜய்.. அப்செட்டாக்கும் பிரேமலதா

 மின்னம்பலம் :சென்னையில கார்ல் மார்க்ஸ் சிலையை இன்னைக்கு சிஎம் திறந்து வெச்சாரு பார்த்தீரா? அதுல சிஎம் கூட லெப்ட் லீடர்ஸ், காங்கிரஸ், விசிக, மதிமுகன்னு கூட்டணி கட்சி ‘தலை’கள் எல்லாம் அணிவகுத்து நின்னாங்களே..
ஆமாய்யா.. அப்ப ‘நீர் சொன்ன ”ஸ்டாலின் கணக்கு” டீலிங் ஒர்க் அவுட் ஆகிடுச்சா?
அதான்யா சிக்கலே.. வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘திமுக கூட்டணியில’தான் காங்கிரஸ் இருக்குதுன்னு நம்புறாங்க.. ஆனா உள்ளே நடக்கிற சம்பவங்களோ வேற மாதிரியா இருக்கே..
என்னய்யா நடந்துகிட்டு இருக்கு?
சிஎம் எஸ்டாலின், ‘கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை அமைக்க குழு அமைப்போம்’ன்னு சொல்லி இருந்தாரு.. காங்கிரஸ் சோடங்கரும் கூட, ”2,3 நாட்களில் திமுக குழு அமைச்சுரும்.. பேச்சுவார்த்தை தொடங்கிடும்”னு சொல்லி இருந்தாரு..
ஆனா இன்னமும் திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்கலைங்கிறதை கவனித்தீரா? அதே மாதிரி காங்கிரஸ் வேணுகோபால் பிப்ரவரி 5-ந் தேதி வர்றதா இருந்ததும் கேன்சலாகிடுச்சு பார்த்தீரா?