ராதா மனோகர் : சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே!
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
திங்கள், 16 பிப்ரவரி, 2026
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! அது ஒரு coding மட்டுமே! ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு!
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026
நெடுந்தீவில் இனி மக்கள் வாழ மாட்டார்களா? வேறு இடங்களுக்கு குடிபெயர்வார்களா?
Thapes Vlogger is at Delft Island நெடுந்தீவு. : Jaffna, Sri Lanka
வருங்காலங்களில் நெடுந்தீவில் மக்கள் வாழ்வார்களா..??
நெடுந்தீவில் வருங்காலத்தில் மக்கள் வாழமுடியாமல் வேறு இடங்களுக்கு குடிபெயரலாம்…
எனது காணொளிகளில் நெடுந்தீவின் சுற்றுலா தொடர்பான ஒரு பக்கத்தை மட்டுமே காட்டினேன்..
ஆனால் அங்கு வாழும் மக்களின் நிலை என்ன..??
யாழின் பெருநிலப்பரப்போடு ஒப்பிடும் பொழுது அன்றாட வாழ்க்கை மிகக் கடினமானது..
1970-80 களில் இந்த தீவில் 20-25ஆயிரம் அளவிலான மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இங்கு வாழ்பவர்கள் வெறும் 3500 அளவிலான மக்களே..
மீண்டும் உடையும் காங்.,? TMC 2.0? மூப்பனாரும்.. ப.சிதம்பரமும் - வரலாறு திரும்புகிறது?
tamil.oneindia.com -Rajkumar R : சென்னை: தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர இருப்பதாக சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலாவி வருகின்றன.
ஆனால் திமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்தி வரும் முக்கிய தலைவர்களும் எம்எல்ஏக்களும் அதிருப்தியில் இருப்பதாகவும்,
புதிய கட்சியை தொடங்கலாமா என்ற திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக அரசியலில் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து புதிய அணிகள் உருவாவது ஒன்றும் புதிது அல்ல.
1996ல் ஜிகே மூப்பனாரும், 2001ல் ப.சிதம்பரமும் காங்கிரஸிலிருந்து புதிய கட்சிகளை ஆரம்பித்து மீண்டும் இணைந்து இருக்கின்றனர். இதனால் 20260 டிஎம்சி 2.0 உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
'ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வேண்டும்' - மதுரை காங். கூட்டத்தில் அதிரடி தீர்மானம்
hindutamil.in - கி.மகாராஜன் : மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கும் அதிக தொகுதிகளும் வழங்க வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும், உள்ளாட்சி இடங்களில் 30 சதவீத பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினர் அனைவரின் கோரிக்கையாகும். அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய தலைவர் கார்கேவை கேட்டுக்கொள்கிறோம்.
ஊரை அடிச்சு அம்பானிக்கும் அதானிக்கும் கொடுக்கலாம் - மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பதுதான் தப்பு?
M. S Rajagopal : என்ன அநியாயம் சார் ...யார் வீட்டு பணம் இப்படி வாரி விடுறாங்க?
5,000 எதுக்கு வந்து ஒருத்தருடைய அக்கவுண்ட்ல போடணும் !
அதுவும் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு ?
ஏற்கனவே 9 லட்சம் கடன்.... இதுல இன்னும் நிறைய வாரி விடுறாங்க...
இதுக்கெல்லாம் என்ன காரணம் நினைக்கிறீங்க ?
ஒண்ணு ஜெயிக்கணும்.. ஜெயிச்சு வந்தா நாம சம்பாதிக்கலாம் ... தோற்றுப் போனா வர்றவன் பாத்துக்கட்டும்.. அதானே !
நாமெல்லாம் உண்மையிலேயே இதையெல்லாம் எதுத்து கேட்கணும் சார் !
நான் : "இப்ப எண்ணூர் துறைமுகம் இருக்குல்ல.. அதை லீசுக்கு விட்டால் என்ன மதிப்பு வரும் ? அதானிக்கு எவ்வளவு ரூபாய்க்கு கொடுத்திருக்காங்க? பக்கத்தில் 300 ஏக்கர் நிலம் 99 வருஷம் லீசுக்கு கொடுத்திருக்காங்க !
தமிழன் டிவி 23 ஆண்டுகள் - ஒரு தலைமுறையின் நினைவுகளும், ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!
![]() |
Hemavandana : தமிழன் டிவி 24ம் ஆண்டில் நுழைகிறது..!
23 ஆண்டுகள் என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமல்ல.. அது ஒரு தலைமுறையின் நினைவுகளும், பலரின் ஆரம்ப கனவுகளும் சேர்ந்த கால அளவு..!
ஊடகத் துறையில் ஒரு நிறுவனம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமானதல்ல...!
இந்த நெடிய பயணத்தின் தொடக்கப் புள்ளியில், 24 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை, மறைந்த தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் முதன்மையானவராக இருந்து இதனைத் தோற்றுவித்தார் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும்..!
ஆரம்ப காலத்தில் தோழர் திருமாவளவன் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் வருகையும், உரையாடல்களும் இந்த மேடைக்கு ஒரு கருத்தியல் பரிமாணத்தை உருவாக்கி, அதன் அடித்தளத்தை வலுப்படுத்தியதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டி உள்ளது..!!
இசையமைப்பாளர் சலீல் சவுத்திரி வங்கத்தில் இருந்து வந்த இசைப்புயல்
ராதா மனோகர் : இசையமைப்பாளர் சலீல் சௌத்திரி இசையில் காலத்தை வென்ற பெங்காலி பாடல் இது.
இதை ஹிந்தியிலும் சலீல் சவுத்திரி அவர்களே இசையமைத்துள்ளார்.
பலருக்கு இது பெங்காலி பாடல் என்று கூட தெரியாது . அந்த அளவுக்கு இது ஹிந்தியில் பட்டிதொட்டி எல்லாம் ஊடுருவிய பாட்டு
ஒரு காதல் பிரிவு சோகத்தை இந்த பாடலில் அப்படியே வாழ்ந்து காட்டி உள்ளார் சலீல் சவுத்திரி அவர்கள்.
இந்துஸ்தானி பைரவ் ராகத்தில் அமைந்த பாடல் இது
நாற்பதுகளில் வங்காளத்தில் நிலவிய கொடுமையான பஞ்சத்தில் வாழ்ந்து அதில் இருந்து தப்பி பிழைத்த ஒரு மகான் இவர்.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை!
சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சனி, 14 பிப்ரவரி, 2026
தமிழக அரசு தர சான்றிதழும் - இந்திய ஒன்றிய தர சான்றிதழும்
ராதா மனோகர் : இந்திய அரசு தர சான்றிதழும் - தமிழக அரசு தர சான்றிதழும்
வட இந்திய சங்கிகளின் கலப்பட கலாச்சாரத்தால் இந்திய மளிகை பொருட்களை வாங்குவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள்
அந்த அளவுக்கு எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்.
உடலுக்கு மிக மோசமான விளைவுகளை உண்டாக்க கூடிய பல வேதிப்பொருட்களை கொஞ்சம் கூட குற்ற உணர்வோ சட்டத்தை பற்றிய பயமோ இன்றி கலக்கிறார்கள்.
என்னென்னெ பொருட்களில் எதை எதையெல்லாம் கலக்கிறார்கள் என்பதை விபரமாக எழுதினால் மக்கள் மேலும் பயந்து விடுவார்கள்.
இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்திய மளிகை பொருட்களை வாங்குவதை தவிர்க்கிறார்கள்
இதில் உண்மையிலேய மிக மோசமாக பாதிக்க படுபவர்கள் நேர்மையான முறையில் மளிகை பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள்தான்.
இவர்கள் பெரும்பாலும் தமிழக உற்பத்தியாளர்கள்தான்.
சென்னையில் நாய்கள் - பதிவு தடுப்பூசி! அமலுக்கு வந்த புதிய விதி... வீடு வீடாக சோதனை - தவறினால் ரூ.5000 அபராதம்...
tamil.news18.com : இதுவரை 74 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே உரிமம், தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பூசி, கருத்தடை மற்றும் உரிமம் பெறுதல் போன்ற செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் மேலாண்மை மற்றும் ரேபீஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளி, 13 பிப்ரவரி, 2026
நடிகர் விஜய் தனித்து போட்டி .. கூட்டணி கிடையாது இந்தியா டுடேக்கு பேட்டி
சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்ரவரி 13) சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் சூரஜ் உயிரிழந்தார். இதுதொடர்பான கேள்விக்கு சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
இந்தநிலையில், செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்கள் வாகனத்தின் மீது ஏறியும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தவெகவினரின் வாகனத்தை செய்தியாளார்கள் முற்றுகையிட்டனர்.
“மகளிருக்கு ரூ.5,000 ‘இன்ப அதிர்ச்சி’ ஏன்?” - அமைச்சர் ரகுபதி விளக்கம்
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கி முதல்வர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நாங்கள் இந்தத் திட்டத்தை அறிவித்துவிட்டு செய்தோம் என்றால், உடனே நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு வாங்கி விடுவார்கள். இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் அதற்கு முன்னதாகவே காலையிலேயே முதல்வர் இதை அறிவித்தார்.
பீஹார் 72 பார்ப்பன RSS ரவுடிகள் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல்
சித்தி ரஹ்மான் கனி : 72.பார்பன்ன ரவுடிகள்!
சனாதன முறைப்படி பாஜக ஆட்சி செய்யும் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் ஹரி நகர் கிராமத்தில் வசித்து வருபவர் அபர்ப்வீ பாஸ்வான்...!!
இவருடைய மகன் விக்ரம் பாசுவான், ஹேம்கன்ட் என்ற பார்ப்பனரிடம் கூலி வேலை செய்து வந்தார்...!!
கடந்த ஐந்து வருடங்களாக ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தொகுதி செயலாளர் பார்ப்பனர் ஹேம்கண்ட் தலித் தொழிலாளர்கள் யாருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை...!!
இது பற்றி கேள்வி எழுப்பியதற்கு.. தலித் பன்றிகளுக்கு எதற்கு சம்பளம் என்பது போன்ற தரைக்குறைவான வார்த்தைகளை கூறி அவமானப்படுத்தினார்...!!
இதில் கோபமடைந்த ஹரிநகர் கிராம தலித் மக்கள் அவரிடம் வேலை பார்க்க மறுத்துவிட்டனர். ..!!
வியாழன், 12 பிப்ரவரி, 2026
2500 கோடி ரூபாய் 'Alliance Orchid springs' ஊழல் - படித்த முட்டாள்களா? இல்லை திட்டமிட்ட கொள்ளையா?
Vasu Sumathi : படித்த முட்டாள்களா? இல்லை திட்டமிட்ட கொள்ளையா? 2500 கோடி ரூபாய் 'Alliance Orchid springs' ஊழல் - ஒரு பகீர் சம்பவம்
சென்னை கொரட்டூரில் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் 2036 வீடுகள்.. இன்று அதன் மதிப்பு இன்று வெறும் 'பூஜ்ஜியம்'!
மெத்தப் படித்தவர்கள் கூட எப்படி இவ்வளவு பெரிய மோசடியில் சிக்கினார்கள் என்பதுதான் புரியவில்லை. 2018-லிருந்து வழக்கு நடப்பதே தெரியாமல் வீடுகளை வாங்கியது எவ்வளவு பெரிய அபத்தம்?
இந்த அவலத்திற்குப் பின்னால் 2011-2016 அதிமுக ஆட்சியின் நிழல் ஆழமாகப் படிந்துள்ளது.
இந்த ஊழலின் வேர்கள் நாம் நினைப்பதை விட மிக ஆழமானவை. தீர்ப்பு நகல்களின் படி, 2005-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியிலேயே இந்த நில விவகாரம் வித்திடப்பட்டுள்ளது. அப்போதுதான் 'அலையன்ஸ்' நிறுவனம் தனது "ஆர்க்கிட் ஸ்பிரிங்ஸ்" திட்டத்திற்காக முதற்கட்டமாக 95 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளது.
பிடிவாத’ ராகுல்.. கோபப்பட்ட ஸ்டாலின்.. சீரியஸ் டிஸ்கஷன்.. நடப்பது என்ன?
minnambalam.com - Mathi : “அடம் பிடிக்கலாம்.. இது ரொம்ப ஓவரா பிடிவாதமா இருக்கே”ன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ தொகுதி பங்கீட்டு சிக்கலா?
ஆமாய்யா.. திமுக- காங்கிரஸ் விவகாரம்தான்.. டெல்லியில 10-ந் தேதியன்னைக்கு புதிய மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை ராகுல் காந்தி, கார்கே நடத்தியிருந்தாங்க இல்லையா? அன்னைக்கே திமுகவோட பேச்சுவார்த்தை நடத்துறதுக்கான ஐவர் குழுவும் ராகுல் காந்தி- கார்கேவுடன் ஆலோசனை நடத்துச்சு..
கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு இல்லையா?
இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில பிரஸ்ஸை பார்த்த செல்வப்பெருந்தகை, “பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கலைங்கிறதுல்ல காங்கிரஸ் தலைமைக்கு வருத்தம்தான்.. சென்னைக்கு போய் முதல்வரை சந்திப்பேன்.. அப்ப எங்க தலைமை சொல்லியிருக்கிற விஷயங்களை முதல்வர்கிட்ட சொல்வேன்னு” பேட்டி கொடுத்தாரு..
கோபண்ணா : தவேகவுக்கு என்ன கொள்கை? பாஜகவை எதிர்க்க தயங்கும் தவேகாவோடு நாங்கள் கூட்டணி சேரவே முடியாது
Showketh Hussain : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ. கோபண்ணா அவர்கள் மின்னம்பலம் இணையதள “அறச்சீற்றம்” செய்திப் பிரிவில் பேட்டி கொடுத்திருந்தார், முழுமையாக பார்த்தேன். இணை ஆசிரியர் கலைச்செல்வி சரவணன் நல்லதொரு கேள்விகளை கேட்டு, அதற்கான தெளிவான பதிலை கோபண்ணா அவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார். காங்கிரஸாருக்கு இது தேவையான நேரத்தில் அவசியமான அறிவுரை…!
பாஜகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தோழர்கள்
அவரது பேட்டியை அவசியம் பார்க்கவும்.
அந்த நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முதன்மை நோக்கம் என்ன…?
தேசிய நலன். பாஜகவை வீழ்த்துவது அதற்கான கூட்டணி.
கூட்டணியின் நோக்கம் என்ன…?
புதன், 11 பிப்ரவரி, 2026
கனடாவில் துப்பாக்கி சூடு 9 பேர் உயிரிழப்பு
தந்தி டிவி : பள்ளியில் துப்பாக்கி சூடு - 9 பேர் உயிரிழப்பு.. கனடாவில் கொத்தாக சரிந்த உயிர்கள்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்திய நபரும் உள்ளதாகவும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகையில், “இந்த துயரமான சம்பவத்தால் தான் மனமுடைந்து போனதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறினார்...
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சீமான் கைது! நடந்தது என்ன?
மின்னம்பலம் -Kavi : சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (பிப்ரவரி 11) 10ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது.
அரசுத் துறைகளில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். முறையான விடுப்பு வசதிகள், மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்.
அவர்கிட்ட பேச முடியாது! தொடர்பு எல்லைக்கு வெளியே ராகுல்! திமுக காங்கிரஸ் பிரச்சனைக்கு காரணமே இதுதான்
tamil.oneindia.com - Shyamsundar ; சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் நீண்டகால கூட்டணிகளாக விளங்கும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுகவிடம் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு: காங்கிரஸின் பிடிவாதம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முக்கிய நிர்வாகிகள், வரும் தேர்தலில் தங்களுக்குக் குறைந்தபட்சம் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "வெறும் வாக்கு வங்கியாக மட்டும் செயல்பட நாங்கள் விரும்பவில்லை; அதிகார மையத்திலும் எங்களது பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.
அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ் - டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.
tamil.oneindia.com : டோனை மாற்றிய ஸ்டாலின்.. சரண்டரான செல்வப்பெருந்தகை.. அதிர்ச்சியில் டெல்லி காங்கிரஸ்
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தனி டிராக்கில் பயணித்து வருகிறது. சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். திமுக விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை (DMK Alliance issue) குழுவை அமைக்க வேண்டும் என்று நேற்று செல்வப்பெருந்தகை டோனை மாற்றியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ள நிலையில் செல்வப்பெருந்தகை ரியாக்ட் செய்துள்ளார்.
இலங்கை எம்பி அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!
தமிழ் மிரர் : அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (11) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவந்த கொடவெல ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய விசேட அமர்வினால் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
காங்கிரஸ் (திமுக) காங்கிரஸ் (தவேக) காங்கிரஸ் (ஆர் எஸ் எஸ்)
Krithika Tharan : ஏன் கூட்டணியை உடைப்பவர்கள் பி டீம் என சொல்றீங்க?
இதை நீண்ட நாளாக எழுத வேண்டும் என நினைத்தேன்.
நான் முதலில் ஆர் எஸ் எஸ் க்கு எதிரான ஆள். அதன் பிறகுதான் காங்கிரஸ். அதை அடக்கி வைக்கவே அன்பை தேசமெங்கும் மீட்க ஒரு கை தரவே காங்கிரசில் இணைந்து உழைக்கிறேன். கிட்டத்தட்ட ஐந்து முறை ராகுல் காந்தியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. என் புத்தகம் அவரால்தான் வெளியிட வேண்டும் என ஒரு வருடம் காத்திருந்து வெளியிட்டேன்.
சாதிக்க வேண்டுமெனில் சாதித்தே தீரும் பிடிவாதம் என்னிடம் உண்டு. தேர்தலில் இப்பொழுதைக்கு நிற்க போவதில்லை. காங்கிரசை கைக்காசு போட்டு பலப்படுத்தும் வேலையில் உள்ளேன். இந்தியாவில் அதிகளவு சக்தி கிள்ப்களை இணைக்கும் வேலையில் குழுவினர் துணையுடன் செய்துள்ளேன் தொடர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கும் பணியிலும் உள்ளேன். இன்னும் பெரிய அளவில் சாதித்து இருக்கலாம். என் பொருளாதாரத்தில் முடிந்ததை செய்கிறேன்.
செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
இந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்க புள்ளி விபரம்
![]() |
தீரன் சாம்பவர்.சு : 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு Google Chrome india முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பனர்கள் மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள் ..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
ஜனநாயகன் இரண்டு? 41 உயிர்கள் ஜனநாயகன் வேற .. இப்போது உள்ள ஜனநாயகன் வேற
புகச்சோவ் புகச்சோவ் : 1, நடிகன் விஜய் ஜனநாயகன்னு ஒரு சினிமா எடுத்தாப்ல!
2, அதோட காட்சிகளுக்காக, அவனோட கட்சி மீட்டிங்குகளை பயன்படுத்தினாப்ல!
3, அந்த ரோடு ஷோக்களில் தனது சினிமா ஷூட்டிங்கையும் 64 கேமராக்களை கேரவான் மற்றும் ட்ரோன்களில் வச்சி படம்புபிடிச்சிக்கிட்டாப்ல!
4, கரூர்ல அப்புடி ஷூட்டிங்கும், ரோடு ஷோவும் சேர்த்தே நடத்துனதுல 41 பேரை கொன்னுட்டாப்ல!
5, அந்த க்ளிப்பிங்குகளை தன்னோட சினிமால சேக்கலாம்னு விஜய் போட்டுபாத்தப்போ, அந்த க்ளிப்புகளே விஜய்தான் கரூர் படுகொலைக்கு காரணமான குற்றவாளிங்கறதை நிரூபிக்கிற மாதிரி இருந்ததால, அந்த ஸ்டோரி மற்றும் சினிமாவையே மூடிமறைச்சிட்டாப்ல!
6, அப்போ ஜனநாயகன் சினிமா என்னாச்சின்னு எல்லோரும் கேப்பாகளே என்பதற்காக, உடனடியா எச்சி.வினோத்தை புடிச்சி, ஹிட்டான தெலுங்கு படமொன்றை இரண்டே மாசத்துல அப்படியே காப்பி செஞ்சி வச்சதுதான், இப்போ சென்சார் போர்டுல சிக்கிட்டு நிக்கிற ஜனநாயகன்!



