ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

நிர்வாண பூஜை நடத்தி கிளி ஜோசியரிடம் மாட்டுப்பட்ட கனடா தமிழ் பெண்!

 நக்கீரன் :சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த கனடா வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம், மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார் ஒரு கிளி ஜோசியக்காரர்.. தோஷம் கழிப்பதாக சொல்லி, வீடியோ காலில் நிர்வாண பூஜையும் நடத்தி, அந்த வீடியோவை வைத்து பணமும் பறித்துள்ளார்.. இது தொடர்பாக போலீசார் விசாரிக்க சென்றால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
கனடாவில் வசித்து வருகிறார் அந்த 37 வயது இலங்கை தமிழ்ப் பெண்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார். இப்போது கனடாவில் தனியாக வசித்து வருகிறார்.

சனி, 5 செப்டம்பர், 2026

மஹிந்த ராஜபக்ஸ மகன் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டது ஏன்?

 தினகரன்  :  லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் நாமல் ராஜபக்ஸ செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானங்களின் கொள்வனவு நடவடிக்கைகளின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கச்சத்தீவு- கலைஞரின் கடைசி விளக்கம்

 மின்னம்பலம் ;  கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் விவாதிக்கப்பட்டது. வழக்கம் போல கச்சத்தீவை மத்திய அரசுதான் கொடுத்தது என்றாலும் அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, எதிர்க்கவில்லை; ஒத்துழைத்தது என்கிற வாதத்தையே ஆளும் தவெக அரசும் முன்வைத்தது.
 காலந்தோறும் சர்ச்சைக்குரிய விவகாரமாக நீடிக்கும் கச்சத்தீவின் வரலாறுதான் என்ன? 
கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? 
அன்றைய கலைஞர் அரசு செய்தது என்ன? 
இந்தியா–இலங்கை நடுவே இருக்கும் ஒரு சிறிய தீவு, தமிழக அரசியலில் அரை நூற்றாண்டாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகிறது. 
கச்சத்தீவின் முழு வரலாற்றையும் ஆதாரங்களுடன் அறிந்துகொள்வோம். கச்சத்தீவு எங்கே இருக்கிறது? தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதிக்கும் இடையிலுள்ள பாக் நீரிணையில் கச்சத்தீவு அமைந்துள்ளது. 
தற்போது இந்தத் தீவு இலங்கையின் எல்லைக்குள் இருக்கிறது. எவ்வளவு பெரிய தீவு?

அப்படிப்பட்ட காமராஜர் எப்படி தமிழின மொழிப்போர் வீரர்களுக்கு ஆதரவு தருவார்?

புகச்சோவ் புகச்சோவ் :  1965ல் மத்திய சட்ட அமைச்சர் 
அசோக் சென், ஆட்சிமொழி சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். 
அதில் ஹிந்திபேசாத மாநிலங்களில் நூற்றுக்கு எழுபது சதவீத மாநிலங்கள் என்றைக்கு ஆங்கிலம் தேவையில்லை.
 ஹிந்தி போதுமென சட்டசபைகளில் தீர்மானம் இயற்றுகிறார்களோ! 
அப்போது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலம் நீக்கப்பட்டு, 
முழுமையாக ஹிந்திமொழியே பயன்படுத்தப்படும் என்கிற ஷரத்தை கொண்டுவந்தார்.
இந்த ஷரத்தை ஒப்புக்கொள்ளும்படி அன்றைய கேரளா,தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில ஆளுநர்களுக்கு மனுவை அநுப்பியது, 

வியாழன், 3 செப்டம்பர், 2026

ஆந்திராவுக்கு பறக்கும் தமிழக தொழில்கள் - ரெட்டிகாரு தமிழகத்தை துவம்சம் செய்கிறார்

  tamil.oneindia.com  - Velmurugan P : விழித்துக்கொள், தமிழக அரசே! ஆந்திர அரசு சும்மா இல்லை.. தூத்துக்குடி ஹிண்டாய் பற்றி டிஆர்பி ராஜா ஷாக்
தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஹிண்டாய் நிறுவனம் கட்ட உள்ள 38000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளத்தை காக்கிடாநாடாவிற்கு மாற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று டிஆர்பி ராஜா எச்சரித்துள்ளார்.

வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்த வழக்கு : முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு!

 மின்னம்பலம் - Kavi :  கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் தோல்வியுற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். 

தமிழின் பெயரால் தமிழர்களை தமிழர்களே கொலை செய்ததுதான் தமிழ் ஈழ போராட்டம்

 Varatharasa Pasupathi : கொஞ்சக்காலம் பிளட்டும் ரெலோவும் தொடர்ச்சியாக கிரியும் பாம்புமாக இருந்ததற்கு காரணம்.அப்பன் யோக்கியவதி அதற்கு மகன் சித்தாத்தன்  
பிளட் அமைப்பை வைத்து  திட்டமிட்டு பழி தீர்தார். 
இன்றும் பலரிடம் அதைத்தான் செய்கின்றார் .பிளட் அமைப்பும் கிட்டத்தட்ட பறிமுதல்தான் செய்யப்பட்டுள்ளது .
தன் சுயநலனுக்காக தூண்டி விட்டு இரு பக்கமும் இறந்தது  அப்பாவி இளைஞர்கள்.   
சித்தாத்தனின் தந்தை துரோகியாக இருந்திருக்கலாம் ரெலோ சுட்டிருக்கலாம் . 
சொந்த பிரச்சனைக்கு பெரிய செந்தில் மிக நல்ல மனிதர் முதல் முதல் வவுனிய மாவட்டத்தில் ஆயுதம் தூக்கிய  முதல் போராளியாக போனவர் ரெலோ சுட்டு குளத்து கட்டில் போட்டிருந்தது 
அந்த படுகொலைகளுக்கு எல்லாம் யார் பொறுப்பேற்பது .
பிளட் சுட்டு பல ரெலோ போராளிகள் இறந்தார்கள் 
அதற்கு எல்லாம் யார் பொறுப்பு . 

மூன்றாவது அணியை கட்டமைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் - நாடாளுமன்ற தேர்தல்

 News4 Tamil  :  லெப்ட் ஹேண்டில் தவெகவை டீல் செய்யும் காங்கிரஸ்.. திமுக அடுத்த ரூட் இதுதான்.. வல்லம் பஷீர் பரபரப்பு
"காங்கிரஸ் என்கிற பொதி சுமக்கும் கழுதையைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமையும் சூழல் உள்ள நிலையில், அதில் திமுக ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். ப.சிதம்பரம் சொன்னது போல 3வது அணி உருவாகும்போது திமுக அதில் தனது பங்கைச் செய்யும்" என்று கருத்து கூறியருக்கிறார் திமுக மூத்த தலைவர் வல்லம் பஷீர்.

கச்சத்தீவு - ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!


 ராதா மனோகர்
: கச்சத்தீவு -  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க   - இந்திரா காந்தி -  Smiling  Buddha -- அணு குண்டு!
கச்சத்தீவு  ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு  சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.
குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும்  முக்கியமானதொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது 
குறிப்பாக  தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!   
இந்துமாக்கடல் பகுதியை  அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.

புதன், 2 செப்டம்பர், 2026

யாழ்பாணம் - ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகளும் நேபாளத்தில் காணவில்லை

 தினகரன் ; நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னி நகரில் வசித்து வந்த 47 வயதுடைய சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதுடைய ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் மகன்களான 14 வயதுடைய அஸ்வின், 11 வயதுடைய ஆருஷ் ஆகியோர் ஆவர்.
சந்திரசேகரன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர் ஆவார். இவர்களின் பிள்ளைகள் இருவரும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டு மக்களுக்கு அடிப்படை தேவை பெரிதும் நிறைவேறிவிட்டது! நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழர்கள் அதிகம்

 Amma Shagasraa : நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய மொத்த இந்தியர்களில் தமிழக யாத்திரகர்கள் மட்டும் மத்த 35  மாநில,யூனியன் பிரதேச  யாத்திரிகர்கள் விட அதிகம்..
🎯என்னதான் நாம் திராவிட கட்சிகளினால் இங்கே லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது..தமிழ்நாட்டு பின்னோக்கி போய்விட்டது என்று கூப்பாடு போட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை தேவை நிறைவேறிவிட்டது...
பொருளாதாரத்திலும் ஓரளவு தன்னிறைவு... அதனால்தான் அடுத்த கட்டத்திற்கு சுற்றுலா.. நாலு இடம் பார்க்க வேண்டும் என்று கிளம்புகிறார்கள்....

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய பணி

May be an image of dais, temple and text
May be an image of text that says "இலங்கை -இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு"

 ராதா மனோகர் : வெட்கம் இல்லை வெட்கம் இல்லை இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாவதில் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றிய  பணி சிறப்பானது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அவரின் அரசியல் வாழ்வில் உருப்படியான ஒரே ஒரு விடயமும் அதுதான்.
அந்த ஒப்பந்தம் உருவாவில் அவர் ஆற்றிய பணியையும் அதில் உள்ள சாதகமான விடயங்களை பற்றியும் விரிவாக ஒரு நூலை திரு அமிர்தலிங்கம் அவர்கள் எழுதியுள்ளார் 
புலிகள் அந்த ஒப்பந்தத்தை மூர்க்கமாக எதிர்த்து அதில் பங்காற்றியவர்களை எல்லாம் தேடி தேடி கொன்றொழித்தார்கள் 
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் அந்த நூலை தேடி தேடி தீயிட்டு கொளுத்தினார்கள் 
எந்த தமிழக இலங்கை பத்திரிகையிலும் அமிர்தலிங்கம் அவர்கள் இது பற்றி எழுதியது எதுவும் பிரசுரமாகவில்லை.
இந்த சூழ்நிலையில் அந்த ஒப்பந்தம் பற்றியும் அது உருவான புறசூழல் அகச்சூழல் பற்றி அறிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

சிறுமியரை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை தந்த தொழிலதிபர் வீரமணி :

 dinamalar.com  : சென்னை: வீட்டு வேலைக்கு என, சிறுமியரை சென்னைக்கு அழைத்து வந்து, தொழில் வர்த்தகர் வீரமணி, 85, பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 
அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

சனி, 29 ஆகஸ்ட், 2026

4 ஆவது உலக தமிழாராய்ச்சி மாநாடு - தமிழரசு கட்சியின் நரவேட்டை

May be an image of text that says "Speech by Mr. A. A.Amirthalingam during Dr. Era Janarthanan 's telicittion C4EИy Chennaiin 1987 டாக்டர் இரா. ஜனார்த்தனன் அவர்களின் பாராட்டு விழா கூட்டத்தில் தலைவர் திரு ત. அமிர்தலிங்கம் அவர்களின் பேச்சு 1987இல்." ராதா மனோகர் : 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது  உலக தமிழாராய்ச்சி மாநாடு!
இதை உண்மையில் ஒரு அகில உலக தில்லாலங்கடி மாநாடு என்று கூறலாம்.
அந்தளவுக்கு அதில்  பொய்யும் புரட்டும் கரை புரண்டு ஓடிய மாநாடு இது!.
இந்த தமிழாராய்ச்சி மாநாடு தமிழரசு கட்சியின் அரசியல் மாநாடகத்தான் நடக்கும் என்று ஸ்ரீமாவோ அம்மையாரும் உதவி பாதுகாப்பு அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியும் அன்று அழுத்தமாக நம்பினார்கள் 
இம்மாநாடு அரசியல் மாநாடாக இருக்காது என்ற தமிழராய்ச்சி பிரமுகர்களின் உறுதி மொழிகளை  பிரதமர் ஸ்ரீமாவோவும் அமைச்சர் லக்ஷ்மான் ஜெயக்கொடியும் துளியும் நம்பவில்லை.
இலங்கை தமிழாராய்ச்சி மன்றத்தில் ஏராளமான தமிழரசு கட்சி பிரமுகர்கள் ஊடுருவி இருந்தார்கள் 
இந்த விபரம் எல்லாம் அம்மையாருக்கு நன்றாக தெரியும் 
 இவர்களின் வாக்கு நாணயம் பற்றிய புரிதல் ஸ்ரீமாவோ அம்மையாருக்கு இருந்தது.
ஸ்ரீமாவோ அம்மையாரின் நெருங்கிய நண்பரான திரு கோபாலபிள்ளை மகாதேவாவை தமிழரசு கட்சி கூட்டம் வற்புறுத்தியது 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

 விகடன் :புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.
நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.

Boney M எழுபதுகளில் உலகை கலக்கிய போனி எம் இசைக்குழுவினர்

 Siva Ilango : "எழுபதுகளின் இசைக்காவியம்"
ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1974 ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனியில் நிறுவப்பட்ட ஒரு ரெக்கே, ஃபங்க் மற்றும் டிஸ்கோ (Reggae, Funk and Disco) இசைக் குழுதான் போனி எம் (Boney M). 'பாப்' (pop) இசையும், டிஸ்கோ (disco) நடனமும் உலகில் உச்சம் பெற்றிருந்த காலத்தில், அவற்றின் முடிசூடா மன்னர் என்ற முதல் இடத்தைப் பெற்றவர்கள் போனி எம் (Boney M) குழுவினர். 

தமிழக இலங்கை ஏதிலிகளை தந்திரமாக இலங்கைக்கு அனுப்ப புல்லுருவிகள் முயற்சி

May be an image of glasses and wingtip shoes

 சரவணன் நடராஜா::  மதிப்பிற்குரிய இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுக்கு,
முந்தைய ஆட்சியில் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், தங்களது தலைமையில் 21 நபர்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு 2008-ல் இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து, இலங்கைத் தமிழர்களில் யாரேனும் நாடற்றவர்களாக இருக்கிறார்களா என்ற ஆய்வை மேற்கொண்டு, 28,584 நபர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து, அவர்கள் ஒருவேளை இலங்கை திரும்பினால் அவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்தீர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். 
து தாங்கள் இலங்கையில் நாடற்றவர்கள் இருக்கக் கூடாது, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரு இந்திய வம்சாவளி, மலையகத் தமிழராக அந்த மக்கள் மீது இருந்த கரிசனத்தில் அதைச் செய்தீர்கள். அது வரை சரி.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி

No photo description available.

 தமிழ்க்கவி  :  கீழடி - வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வு
கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி   புதுமலர் - ஜூலை 2025 வெளியிடப்பட்டது: 30 ஜூன் 2026
அண்மையில் மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது கீழடி அகழாய்வு அறிக்கை. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்றியத் தொல்லியல் துறையால் முதலில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. 2014 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களால் 292 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் அக்கறையுடனும், தீவிரமாகவும் வினையாற்றி மிகச்சிறப்பாக அமர்நாத் அவர்கள் அப்பணியை மேற்கொண்டார்.keezhadi 511தான் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் குறித்த அறிக்கைகளையும் அவர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவ்விரண்டு அறிக்கைகளும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தலித்துகளும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திமுகவின் முதுகில் குத்தினார்களா

No photo description available.
Kandasamy Mariyappan : அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களி்ல் இருந்து வழங்கிய இசுலாமியர்களுக்கான 3.5% இட உரிமையை ரத்து செய்திட வேண்டும்.
ஏறத்தாழ 65% மக்கள் உள்ள வேளாளர்கள், உடையார்கள், அகமுடையர்கள், மறவர்கள், கோணார்கள், இடையர்கள், வலையர்கள்/ முத்திரையர்கள், நாடார்கள், நாயுடுகள், ஆசாரிகள், வண்ணார்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு 26.5% இட உரிமையை வழங்கி விட்டு...
4.5% உள்ள இசுலாமியர்களுக்கு 3.5% இட உரிமை வழங்கியது கலைஞர் திமுக.!
மேலும் CAA, வக்ஃப் மசோதா, முத்தலாக் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை தீவிரமாக எதிர்ப்பதை, திமுக கைவிட வேண்டும்.!
எப்போதுமே, 40% இசுலாமியர்கள் மட்டும் திமுகவை ஆதரித்து வந்தனர்.!

புதன், 26 ஆகஸ்ட், 2026

ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி - வாலாசா வல்லவன்.

 வாலாசா வல்லவன்  :   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
 இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
 எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன். 

திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி - கனிமொழி ஆதரவாளர்கள் போட்டி

Latest Tamil News

 தினமலர் :திமுகவில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலாளர்கள் சிலர், தலைமை நிலையச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். பதவிகளை கைப்பற்ற, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும், திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட எண்ணிக்கை 77ல் இருந்து, 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான, அதிகபட்ச வயது 70 எனவும், மூன்று முறை மட்டுமே, அப்பதவியில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூரில் சாவு மணி அடித்த தவேக அரசு!

 Muralidharan Pb : சென்னைக்கு எதற்காக இரண்டாவது விமான நிலையம் தேவை?
ஏறத்தாழ 2 கோடி மக்கள் புழங்கும் மிகப்பெரிய நகரமான சென்னை. விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஏனைய நகரங்கள் முதல் சிற்றூர்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2000 க்கு பிறகு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் வருவாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

திமுகவின் 110 மாவட்டங்கள்- பொறுப்பாளர்கள் அறிவிப்பு? கனிமொழி எதிர்பார்க்கும் ‘அந்த’ பதவி-

  minnambalam.com  :  திமுகவோட செயற்குழு ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு இல்லையா.. அதுலதான், ”திமுக 110 மாவட்டங்களாக பிரிக்கப்படும்; 2 தொகுதிக்கு 1 மா.செ. நியமனம்; தேவைப்படுகிற இடத்தில் 3 தொகுதிகளும் இருக்கும்.. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்தான் நடத்தப்படும். மா.செ.க்கள் உட்பட மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வயது வரம்புகள்”ன்னு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு..

பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரியாணி போல் வேக வைத்து! கதிகலங்கிப் போன கூடுவாஞ்சேரி!

tamil.oneindia.com :சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 அப்பெண்ணை இளைஞர், காதலி சேர்ந்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அதன் ஒரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழாராய்ச்சி மன்றத்தை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!

May be a doodle of monument
May be an image of one or more people, people smiling and text that says "PUNITHAM THERUCHELVAM gflip.com gflip com"

 ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக  வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர் 
 தமிழரசு கட்சியினர் நான்காவது உலக  தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர்  கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்) 
திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின்  சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.