திங்கள், 3 ஆகஸ்ட், 2026

உலகின் முதல் பாசிச அரசை நிறுவிய விளாடிமிர் லெனின் - இதைத்தான் முசோலினியும் ஹிட்லரும் பின்பற்றினார்கள்

 Santhirapalan Saminathar :1918/01/18 உலகில் முதலாவது பாசிச அரசு சோசலிச அரசு என்னும் பெயரில்  லெனினால் பிரகடனப்படுத்திய நாள். தாமே முதல்முதலாக நடத்திய பொதுத் தேர்தலில் தாம் படு தோல்வி  அடைந்ததும்    ஆயுத முனையில் தள்ளுபடி செய்து  பாசிச சர்வாதிகாரத்தை அரங்கேற்றியநாள்.  மற்ற கட்சிகளை தடைசெய்து துரோகிகள்,எதிர்புரட்சியாளர், முதலாளித்துவ வாதிகள் என கொன்று ஒழிக்க தொடங்கிய நாள். லெனினிடம்  இருந்து கற்றுக்கொண்ட இந்த பாசிச சர்வாதிகாரத்தையே முசோலினி கையில் எடுத்தார். அதில் இருந்து பின்னர் கிட்லர் கையில் எடுத்தார்.  உலகம் முழுவதும் பாசிச சர்வாதிகாரத்தின் முன்னோடி லெனின் ட்ரொஸ்கி என்றால் மிகை ஆகாது. அதை பின்தொடர்ந்து ஸ்டாலின் மிகத் தீவிரமாக பாசிசத்தை அமுல் படுத்தினார். ஸ்டாலின் கை ஓங்கியதும் லெனின் ட்ரொஸ்கியின், ஜனநாயக குரல் சந்தர்ப்பவாதம் ஆகும். அவர்கள் ஏற்படுத்திய பாசிச சர்வாதிகாரத்துக்கு கட்சிக்குள் முதல் பலியானவர்கள் லெனினும் ட்ரோஸ்கியும் தான்.
பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களில் மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களில் ஒருவர். அவர் 1964 முதல் 1982 வரை நாட்டை வழிநடத்தினார்.

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ அதிரடி குற்றச்சாட்டு

 thentamil.com -Su.tha Arivalagan  : சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் கொளத்தூர் தொகுதி எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அத்தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எந்திரங்களின் செயல்பாடு குறித்து திமுக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்பெயினின் எல்லையை உடைத்துக்கொண்டு அடாவடியாக நுழையும் மொரோக்கோ முஸ்லிம்கள்

 hindutamil.in -போத்தி ராஜ்.க : வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. 
இதனால், எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படைகளை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.

தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிகள்! கப்பல்ல வேலைனு சொன்னதை நம்பி.. திமுக மூவ்.. விஜய்க்கு சிக்கல்!

 tamil.oneindia.com -Rajkumar R   :சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. ஆளும் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். விஜயை பார்க்க முடியவில்லை, உள்ளூர் நிர்வாகிகளும் மதிக்கவில்லை என பெரும்பாலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் பற்றி அவதூறு பேசினால்..’ அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக பரந்தாமன் கடும் எச்சரிக்கை!

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழ்நாட்டை, காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய், இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய். விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி என திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 

சனி, 1 ஆகஸ்ட், 2026

பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய். சூர்யா சேவியர்

May be an image of text that says "BREAKING NEWS SUN NEWS வின்னு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு சென்னை மாவட்டம் 保本品名品量 S ANI தேர்தல் முறைகேடு கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் என். ஆர். ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டு. நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் EVM சரிபார்ப்பு பணியில் 2 VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிப்பு. வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. முறையாக பாதுகாக்கப்படவில்ல வில்லை. ஆதாரங்களுடன் ன் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனப் பேட்டி 0 AUG2026 AUG 2026 f SUNNEWSTAMIL SUNNEWS + sunnewslive.in"

 Surya Xavier  :  நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,

ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! – ஷோபாசக்தி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல் வெளியீடு, 'இருவண்ணக் கொடிக்கு வயது 75' - இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தகக் காட்சி ...
Warscapes in conversation with Shobasakthi | Warscapes

 shobasakthi.com  : ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! – ஷோபாசக்தி
இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன.

வெள்ளி, 31 ஜூலை, 2026

ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு.. இனி போர் வேண்டாம் - இஸ்ரேலுக்கு குட்நியூஸ் சொன்ன டிரம்ப்

 tamil.oneindia.com  -Nantha Kumar R : வாஷிங்டன்: இஸ்ரேல் - காசா இடையே இனி போர் வருவதை தடுக்கும் வகையில் காசா அமைதி வாரியம் சார்பில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் உள்பட பிற ஆயுத குழுவினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும், அதன்பிறகு படிப்படியாக காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 
இதன்மூலம் இனி இஸ்ரேல் - காசா மோதலுக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 மின்னம்பலம் -Pandeeswari Gurusamy : தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

16 வயது மலையக சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் - பாலியல் வன்முறை - கொலை!

May be an image of text Shabeena Somasuntharam :  16 வயதான இஷாலினி ஜூட் குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அண்மையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சாட்சியம், அவரது மரணத்திற்கு முந்தைய இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்ற கேள்வியை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
மலையகத்தின் டயகம தோட்டப் பகுதியில் மிகவும் வறுமையான குடும்பம் ஒன்றை சேர்ந்த இஷாலினி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த போது, கடந்த 2021 ஜூலை 15-ஆம் திகதி கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தார். 
இந்த சம்பவம் ஒரு சாதாரண மரண விசாரணையாக இல்லாமல், "சிறுவர் தொழிலாளர் சுரண்டல், மனிதக் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், அலட்சியம் மற்றும் இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் குறைபாடுகள்" தொடர்பான முக்கிய வழக்காக மாறியது.

வியாழன், 30 ஜூலை, 2026

செட்டி தனபாலசிங்கம் புலிகள் இயக்கத்தின் நிறுவனர் பிரபாகரனின் குருநாதர்


ராதா மனோகர்
: இவர்தான் செல்லையா தனபாலசிங்கம் இவரது இயக்க பெயர் மாதவன் 
இவரது செல்லப்பெயர் செட்டி 
இலங்கை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் தப்பி தவறியும் மறந்து விட கூடாத பெயர்தான் செட்டி தனபாலசிங்கம்!
அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் சரி இலங்கை அரசுக்கு எதிரான கொரில்லா போர் முறைக்கும் சரி வழிகாட்டி இவர்தான் முன்னோடியும் இவர்தான்.
இலங்கை தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டமாக உருமாறிய போது அதன் முதல் அடியை எடுத்து வைத்தவர் திரு செட்டி தனபாலசிங்கம் அவர்கள்தான் 
மிக இளமையில் தவறான வழியில் சென்று சிறு சிறு குற்றங்களுக்காக பிடிபட்டு சிறுவர் நன்னடத்தை பள்ளிக்கூடங்களில் இளமை காலத்தை கழித்தார் 
அதன் காரணமாகவோ என்னவோ ஊரில் ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்தார்.
இவரது ஊர் கல்வியங்காடு!
பிற்காலத்தில் பெரும் போராட்ட நகர்வுகளாக கருதப்பட்ட பல வீர தீர செயல்கள் எல்லாம் இவரின் காலத்தில் சட்டவிரோத நடவடிக்ககைகளாக கருதப்பட்டன.

நாதஸ்வர வித்வான் அளவெட்டி என் கே பத்மநாதன் தவில் வித்வான் இணுவில் வி . தட்சணாமூர்த்தி

May be an image of flute

May be an image of musical instrument

ராதா மனோகர் :   யாழ்ப்பாணம் மருதனாமடம் ராமநாதன் இசைக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதி!
நாதஸ்வர வித்வான் அளவெட்டி என் கே பத்மநாதன் 
தவில் வித்வான்  இணுவில். வி.தட்சணாமூர்த்தி 
அளவெட்டி பத்மநாதனுக்கு முன்னாள் ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்த்தன அவர்கள் கலாசூரி பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளார் 
நல்லூர் திருவிழாவின் 24 நாளும் அவரின் நாத மழையை சிறுவயதில் தினசரி கேட்டுள்ளேன் 
அவரின் கற்பனா ஸ்வரங்களில் வந்து விழும் பல விடயங்களை உற்று கவனித்தால் அதில் உள்ள இசைத்துணுக்குகளை  பொறுக்கி எடுத்து பல பாடல்களை இசையமைக்கலாம்.
இலங்கை நாதஸ்வர உலகில் இவர் பெற்ற புகழை வேறு எவரும் பெறவில்லை என்றே கூறலாம் 
பலநாடுகளுக்கும் சென்று ஏராளமான மேடைகளில் வாசித்துள்ளார் 
இவர் தன்னை போலவே தன்மகனையும் ஒரு சிறந்த வித்வானாக பயிற்சி கொடுத்து வந்த காலம் இந்திய ராணுவத்தின் வெறியாட்டத்தில் மகனின் உயிரை பறிகொடுத்தார் 
இதனால் மனமுடைந்த திரு பத்மநாதன் சில ஆண்டுகளுக்கு பின் மீளாத்துயில் கொண்டார் 

புதன், 29 ஜூலை, 2026

கொளத்தூரில் நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு! ஸ்டாலினின் அதிரடி மூவ்!

 tamil.oneindia.com - Rajkumar R :  சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனது சொந்த தொகுதியான குளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 
இந்த நிலையில் அந்த தொகுதியில் உள்ள 14 வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை வாக்குகள் சரிபார்ப்பு பணியும், பின்னர் மாதிரி வாக்கு பதிவும் நடைபெற இருக்கிறது. 
ஒருவேளை வாக்குகள் மாறுபட்டதாகவோ அல்லது வாக்குப்பதிவு முறையாக செயல்படவில்லை என ஸ்டாலின் நிரூபித்தால் அங்கு மறு தேர்தல் நடத்தப்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர் திமுகவினர்.

அரசு ஊழியரை அறைந்த அழகிரி மகள் கைது… ஆனால் பிணையில் விடுவித்தனர்.

 minnambalam.com -  Kavi : எஸ்.பி.ஐ வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் முக அழகிரி மகள் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ -என்.ஆர்.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் லிஃப்ட் பழுதானதால் இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் தெரிவித்திருக்கிறார். 

அவதூறு வழக்குகளில் போலீஸார் பாரபட்சம்: சீமான் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிருப்தி

 hindutamil.in : மதுரை: அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை வேடிக்கை பார்க்​க​மாட்​டோம் என உயர் நீதி​மன்​றம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.
மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்​வாகி தீரன் திரு​முரு​கன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்​சகரு​மான பிஸ்​மி, தனி​யார் யூடியூப்​ சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்​டி​யில் நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், திமுக தலை​வர் ஸ்டா​லினிடம் ரூ.100 கோடி பெற்​ற​தாக ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்டை தெரி​வித்​துள்​ளார். தமிழன் கோகுல் தனது முகநூல் பக்​கத்​தில் மார்ஃபிங் செய்​யப்​பட்ட புகைப்​படங்​களை பதி​விட்​டு, சீமான் மீது தனி​நபர் தாக்​குதலை செய்கிறார்.

செவ்வாய், 28 ஜூலை, 2026

நீட் கோச்சிங் சென்டரில் இரகசியாக முதலீடு செய்துள்ள CM.விஜய்

May be an image of one or more people, beard, people smiling and text that says "Home TamilNadu 2026 CHENNAI PERAMBUR c. JOSEPH VIJAY Criminal & Asset Declaration) TamilNadu 2026 C. .JOSEPHVIJA JOSEPH VIJAY"
May be an image of text that says "Nil ) SS, Postal avings etc Nil Nil (b) LIC or other insurance Policies Nil ersonal ans/advance ven Sunil Raj 1,50,00,000 1 Crore+ Nil N.Anand 3,00,00,000 3 Crore+ ۷ Ravichandran 5,00,00,000 5 Crore+ A ALP Antonius Britto 20,00,00,000 20 Crore+ Kokilambal Educational Foundation 20,00,00,000 20 Crore+ Green Leap Infotech 2,34,00,000 2 Crore+ Jaya Nagar Property B Lit 94,00,000 94 Lacs+ Chandrasekhar"

 நீட் கோச்சிங் சென்டரில் இரகசியாக முதலீடு செய்துள்ள விஜய் 
Giri Sundar :  "NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே  ஒழிக்க  முடியும். 
அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று  நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய்  இன்வெஸ்ட் செய்து,  
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா"  வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு  நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ

யாழ்ப்பாணம் மருதனார் மடம் லட்சுமி நாராயண அய்யர் வீதி - இது ஒரு RSS அரசியல்

May be an image of text that says "வயலின் வித்துவான் லசைஷ்மிநாராயணா பணா வீதி -d වයලින විශාරද ලක්ෂ්මිනාරයන මාවත আব DS0 VIOLIN MAESTRO LAKSHMINARAYANA ROAD a Pradnutiya Sabia ITERNATIDNN EPO PIOIAE"ராதா மனோகர் :  யாழ்ப்பாணம் மருதனார் மடம் லட்சுமி நாராயண அய்யர் வீதி 
அண்மையில் ராமநாதன் கல்லூரிக்கு அண்மையில் உள்ள ஒரு வீதிக்கு திரு லக்ஸ்மி நாராயணன் அய்யர் என்று பெயர் சூட்டி உள்ளார்கள் 
இவர் 30 40 களில்  பகுதி நேர இசை பேராசிரியராக அங்கு பணியாற்றி உள்ளார்.
இவரது மகன்கள் எல் வைத்யநாதன் எல் சுப்பிரமணியம் எல் ஷங்கர் ஆகியோர்  உலக  புகழ் பெற்ற வயலின் வித்வான்களாகும், 
யாழ் பல்கலை கழக ராமநாதன் கல்லூரிக்கு லட்சுமி நாராயண அய்யரை விட பல மடங்கு தகுதியானவர் காலஞ்சென்ற இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்  பல ஆண்டுகள் அங்கு May be an image of one or more peopleஅதிபராக பணியாற்றி உள்ளார்  
இலங்கை வானொலியில் நீண்ட காலமாக பணியாற்றி உள்ளார் 
அவரது பணிகாலங்களில் அங்குள்ள மக்களோடு மிக நெருங்கிய தொடர்புகளை பேணியவராகும் .

திங்கள், 27 ஜூலை, 2026

காமராஜை வீழ்த்திய தேவிகுளம் பீர்மேடு கம்யூனிஸ்ட்டுகள் - கொன்று தீர்த்து பழிவாங்கிய காமராஜர் ...

 புகச்சோவ் புகச்சோவ்  : காமராஜை வீழ்த்திய தேவிகுளம் பீர்மேடு கம்யூனிஸ்ட்டுகள்.....! (மீள்பதிவு)
1957 கம்யூனிஸ்ட் அரசின் தேவிகுளம் பீர்மேடு இடைத்தேர்தல்.
1957 ல் காங்கிரஸால் டீப்ரொமோட் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரோசம்மா பொன்னூசையே மீண்டும் இடைத்தேர்தலில் நிற்கவைத்தது கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ் வேட்பாளர் பிகே.நாயர் செல்வாக்கு மிகுந்தவர். மொத்த உறுப்பினர்களில் 63 பேர் காங்கிரஸார். மீதம் 63 பேர் கம்யூனிஸ்ட்டுகள். சபாநாயகர் ஓட்டில் கம்யூனிஸ்ட் அரசாங்கள் நிலைத்துக்கொண்டிருந்தது.
ஒன்றியத்தில் அதிகாரத்திலிருந்த காங்கிரஸார், எலக்சன் கமிஷனை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேவிகுளம் பீர்மேடு ரிசர்வ் ஃபாரஸ்டில் பிரச்சார கூட்டங்களையும், அதிக ஒலியையும் காரணங்காட்டி, பெரியளவில் எலக்சன் கேம்பெய்னில் கம்யூனிஸ்ட்டுகளை ஈடுபடவிடாமல் பார்த்துக்கொண்டது. முதல்வர் ஈஎம்எஸ்.நம்பூதிரி, அதிக ஆட்களை அநுப்பமுடியாததால், சகாவு விஎஸ்.அச்சும்மாமனை மட்டும் களத்திலிறக்கி, ரோசம்மா பொன்னூசின் தேர்தல் செயலாளராக நியமித்தார். அசாதாரணமான உடல்வாகுகொண்ட விஎஸ், தேவிகுளம் பீர்மேட்டின் மலைக்காடுகள் முழுக்க ஏறியிறங்கினார். அவரது தொழிலாளர்களை முதலாளியத்திற்கு எதிராக திருப்புகிற திறமையான பேச்சு அந்தக்காடுகளெங்கும் எதிரொலித்தது.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

கொழும்பில் சீன குழுக்களிடையே மோதல் ஒரு சீன கோடீஸ்வரர் உயிரிழப்பு

 jaffnamuslim.com : கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
இதன்படி கொல்லப்பட்டவன் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவான்.
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரகுபதி :சட்டப்பேரவை கதவுகளை மூடுவதாக முதல்வர் கூறியது குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும்

  hindutamil.in  : பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தவெக ஆட்​சி​யில் பேச்​சுரிமை பறிக்​கப்​பட்​டுள்​ளது. வெள்​ளை​யர் ஆட்​சி​யில்​கூட இருந்த பேச்​சுரிமை விஜய் ஆட்​சி​யில் இல்​லை. அரசை விமர்​சித்து சாதாரண பேச்​சு​வாக்​கில் பேசுபவர்​கள் மீதெல்​லாம் பொய் வழக்கு பதிவு செய்​யப்​படு​கிறது. 
மேலும், சட்​டம் ஒழுங்கை காரணம் காட்டி வழக்​கு​களை முடுக்​கி​விட டிஎஸ்​பிக்​கள் மூலம் நீதிப​தி​களுக்கே சட்டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் அழுத்​தம் கொடுத்து வரு​கிறார்.

நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில் உள்ள பொது மலசலகூடத்தின் நிலைமை

 Murugesu Kanagalingam  :   நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில்  உள்ள பொது  மலசலகூடத்தின் நிலைமை என்று தலைப்பிட்டு  ஒரு அன்பர்  படங்களுடன் பதிவு  ஒன்றைப் போட்டிருந்தார்.
இங்கிருந்து படத்தைப் பார்க் கும்போதே,குமட்டலோடு,வாந்தி வருமாற் போல இருக்கிறது. 
இவற்றைப் பார்க்க  நேரி டுவது பாவம் செய்த கண்களுக்கே நேரும். 
அந்தப்  பதிவாளர் மாநகர மேயரையும் சாடி யுள்ளார். உண்மையில்,நிர்வாகங்கள் இவற்றைக் கவனிக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் என்பதில்  மாற்றுக்  கருத்து இல்லை, கிடையாது. 
மறுபுறம்,எமது மக்கள் எப்போதும்  வெறும் காட்டான்களாகவே இருக்கிறார்கள். 

சனி, 25 ஜூலை, 2026

83 ஜூலை கலவரமும் விக்கியும் சின்றோமும்

May be an image of one or more people, temple and text that says "தமிழ் አ தேசிய தசியஅரசியல அரசியல் போராளி குழுக்கள் imgflip.com imgflip com" ராதா மனோகர்   83 ஜூலை கலவரம் பற்றிய சோக நினைவுகளை இப்போதும் மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தி கொள்வதில்லை ஒரு ஆசுவாசம் அடைந்தால் இது ஒரு நோயின் அறிகுறிதான் 
இதை ஒரு விக்டிம் சின்றோம் என்றும் கூறலாம் 
நான் ஒரு விக்டிம் எனக்கு ஒரு அநியாயம் நடந்திருக்கிறது.
அல்லது நாம் தமிழர்கள் எமக்கு எப்போதும் அநியாயம் செய்கிறார்கள்  
என்பது போன்ற எண்ணங்கள் உங்களை அறியாமலேயே உங்களை தாலாட்டுவது ஆரோக்கியமானது அல்ல 
அந்த சம்பவங்களை நீங்கள் விரும்பாவிடினும் 
அதை பற்றி மீண்டும் மீண்டும் உருப்போட்டு கொள்வதில் ஆர்வம் இருந்தால் 
மறைமுகமாக அல்லது உங்கள் உள்ளுணர்வில் அதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றுதான் பொருள் 
எதை நீங்கள் ஆழமாக ரசிக்கிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி வரும்!

கொமினியும் மதவெறியர்களும் தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.

May be a black-and-white image of one or more people

 ஈரான் மன்னர்  ரெசா பல்லவி ​​ஷாவின் ஆட்சியை வீழ்த்துவதில் இடதுசாரி மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்தனர்.
இவர்களின் போராட்டம் வெற்றி பெற்று 1979-ல் கொமேனி நாடு திரும்பியபோது இடதுசாரிகள் மனித உரிமை பேசுபவர்கள் எல்லோரும் அதைக் கொண்டாடினர்.
முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தாங்கள் தோற்கடித்துவிட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர் 
இவர்களின் மகிழ்ச்சி  நீடிக்கவில்லை.
கொமினியும் அவரின் மதவெறியர்களும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின்,
தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.

திரிசூலம் - இன்றுவரை எந்த தமிழ் படமும் குவிக்காத வசூல் சாதனை

May be an image of text that says "5 ரூபாய் டிக்கெட்டில் 2 உகோடி வசூலா? திரிசூலம் 50 நாள் 60 லட்சம் வசூல்! 75 நாள் 666 காட்சி! 100 நாள் 1 கோடி வசூல்!" Senthilvel Sivaraj  · தமிழ் சினிமாவுல ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி வசூல்னு இன்னைக்கு நாம ரொம்ப சாதாரணமாகப் பேசுறோமே... ஆனா, அன்னைக்கு வெறும் அஞ்சே ரூபா டிக்கெட் விலைக்கு, தியேட்டர்கள்ல திருவிழா கூட்டத்த கூட்டி, அரசாங்கத்துக்கே ஒரு கோடி ரூபாய் வரி கட்டுன ஒரு மாஸ் வரலாறைத்தான் இதுலே பாக்க போறோம். அதுதான் தமிழ் சினிமாவோட வசூல்  வேட்டையை மாத்திப் போட்ட  நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 200-ஆவது மெகா காவியமான 'திரிசூலம்' தியேட்டர்கள்ல பண்ணுன அந்த பாக்ஸ் ஆபீஸ் வேட்டைதான்! 
வாய் வார்த்தையா இல்லாம, அப்போதைய செய்தித்தாள்கள்ல வெளியான அஞ்சு அசைக்க முடியாத வரலாற்று சான்றுகளை வெச்சு அந்த பிரம்மாண்ட பாக்ஸ் ஆபீஸ் பயணத்த இப்போ நாம பாக்கப்போறோம்.

செந்தில் பாலாஜி சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு

 hindutamil.in  : சென்னை: தவெக எம்​எல்​ஏ-​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாகத் தொடரப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதி​ மன்​றத்​தில் நேற்று சரண் அடைந்​து, முன்​ஜாமீன் பெற்​றார்.
தவெக ஆட்​சியை கவிழ்க்​கும் நோக்​கில் ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக திரு​நாவுக்​கரசு, கார்த்​திக், ரமேஷ், தியாக​ராஜன், நரேஷ் உள்​ளிட்ட 14 பேரை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் கைது செய்​துள்ளனர்.