ராதா மனோகர் : இவர்தான் செல்லையா தனபாலசிங்கம் இவரது இயக்க பெயர் மாதவன்
இவரது செல்லப்பெயர் செட்டி
இலங்கை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் தப்பி தவறியும் மறந்து விட கூடாத பெயர்தான் செட்டி தனபாலசிங்கம்!
அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் சரி இலங்கை அரசுக்கு எதிரான கொரில்லா போர் முறைக்கும் சரி வழிகாட்டி இவர்தான் முன்னோடியும் இவர்தான்.
இலங்கை தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டமாக உருமாறிய போது அதன் முதல் அடியை எடுத்து வைத்தவர் திரு செட்டி தனபாலசிங்கம் அவர்கள்தான்
மிக இளமையில் தவறான வழியில் சென்று சிறு சிறு குற்றங்களுக்காக பிடிபட்டு சிறுவர் நன்னடத்தை பள்ளிக்கூடங்களில் இளமை காலத்தை கழித்தார்
அதன் காரணமாகவோ என்னவோ ஊரில் ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்தார்.
இவரது ஊர் கல்வியங்காடு!
பிற்காலத்தில் பெரும் போராட்ட நகர்வுகளாக கருதப்பட்ட பல வீர தீர செயல்கள் எல்லாம் இவரின் காலத்தில் சட்டவிரோத நடவடிக்ககைகளாக கருதப்பட்டன.






அதிபராக பணியாற்றி உள்ளார் 



