ராதா மனோகர் 83 ஜூலை கலவரம் பற்றிய சோக நினைவுகளை இப்போதும் மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தி கொள்வதில்லை ஒரு ஆசுவாசம் அடைந்தால் இது ஒரு நோயின் அறிகுறிதான்
இதை ஒரு விக்டிம் சின்றோம் என்றும் கூறலாம்
நான் ஒரு விக்டிம் எனக்கு ஒரு அநியாயம் நடந்திருக்கிறது.
அல்லது நாம் தமிழர்கள் எமக்கு எப்போதும் அநியாயம் செய்கிறார்கள்
என்பது போன்ற எண்ணங்கள் உங்களை அறியாமலேயே உங்களை தாலாட்டுவது ஆரோக்கியமானது அல்ல
அந்த சம்பவங்களை நீங்கள் விரும்பாவிடினும்
அதை பற்றி மீண்டும் மீண்டும் உருப்போட்டு கொள்வதில் ஆர்வம் இருந்தால்
மறைமுகமாக அல்லது உங்கள் உள்ளுணர்வில் அதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றுதான் பொருள்
எதை நீங்கள் ஆழமாக ரசிக்கிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி வரும்!
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter
சனி, 25 ஜூலை, 2026
83 ஜூலை கலவரமும் விக்கியும் சின்றோமும்
கொமினியும் மதவெறியர்களும் தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.
![]() |
ஈரான் மன்னர் ரெசா பல்லவி ஷாவின் ஆட்சியை வீழ்த்துவதில் இடதுசாரி மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்தனர்.
இவர்களின் போராட்டம் வெற்றி பெற்று 1979-ல் கொமேனி நாடு திரும்பியபோது இடதுசாரிகள் மனித உரிமை பேசுபவர்கள் எல்லோரும் அதைக் கொண்டாடினர்.
முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தாங்கள் தோற்கடித்துவிட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர்
இவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
கொமினியும் அவரின் மதவெறியர்களும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின்,
தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.
திரிசூலம் - இன்றுவரை எந்த தமிழ் படமும் குவிக்காத வசூல் சாதனை
Senthilvel Sivaraj · தமிழ் சினிமாவுல ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி வசூல்னு இன்னைக்கு நாம ரொம்ப சாதாரணமாகப் பேசுறோமே... ஆனா, அன்னைக்கு வெறும் அஞ்சே ரூபா டிக்கெட் விலைக்கு, தியேட்டர்கள்ல திருவிழா கூட்டத்த கூட்டி, அரசாங்கத்துக்கே ஒரு கோடி ரூபாய் வரி கட்டுன ஒரு மாஸ் வரலாறைத்தான் இதுலே பாக்க போறோம். அதுதான் தமிழ் சினிமாவோட வசூல் வேட்டையை மாத்திப் போட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 200-ஆவது மெகா காவியமான 'திரிசூலம்' தியேட்டர்கள்ல பண்ணுன அந்த பாக்ஸ் ஆபீஸ் வேட்டைதான்!
வாய் வார்த்தையா இல்லாம, அப்போதைய செய்தித்தாள்கள்ல வெளியான அஞ்சு அசைக்க முடியாத வரலாற்று சான்றுகளை வெச்சு அந்த பிரம்மாண்ட பாக்ஸ் ஆபீஸ் பயணத்த இப்போ நாம பாக்கப்போறோம்.
செந்தில் பாலாஜி சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
hindutamil.in : சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நேற்று சரண் அடைந்து, முன்ஜாமீன் பெற்றார்.
தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ், தியாகராஜன், நரேஷ் உள்ளிட்ட 14 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளி, 24 ஜூலை, 2026
யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர்? Jaffna! Loaded with pride and prejudice?
ராதா மனோகர் : யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டும் நீங்கள் கருதினால் அதனுள்ளே மறைந்திருக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமலேயே போய்விடும்
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக செல்வா செழிப்போடு விளங்கியது யாழ்ப்பாணம்
தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு வியாபார சந்தையாக யாழ்ப்பாணம் இருந்ததுதான் அந்த பொருளாதார செழிப்புக்கு உரிய முக்கிய காரணம்
அடுத்ததாக போர்துக்கீச ஒல்லாந்து பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பனிகளின் ஒரு முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் யாழ்ப்பாணம் இருந்தது
மாலைதீவில் இருந்து ஏற்றுமதியாக வேண்டிய சிப்பி குறிப்பாக (கடல்) சோகி போன்ற பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டுவந்து சந்தை படுத்துவார்கள் . அங்கிருந்து ஐரோப்பியர்கள் அவற்றை வாங்கி உலகம் முழுவதும் குறிப்பாக கடல் சோகிக்கு ஜப்பானில் பெரும் சந்தை இருந்தது
பழ நெடுமாறன் .. பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் - புலிகளின் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டினார் நெடுமா
hindutamil.in: பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்: பழ.நெடுமாறன் தகவல
தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ம்
தேதி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
வியாழன், 23 ஜூலை, 2026
: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையிலும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுக்கிறது
மின்னம்பலம் -Pandeeswari Gurusamy : நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தற்போது கண்டனப் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், அருண் மாதேஸ்வரன், பாடகர் அறிவு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட தமிழ் திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டுள்ளனர்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி லாக்கப் மரணம் - கைதான இளைஞர் மரணம் - உறவினர்கள் போராட்டம்
hindutamil.in - ரெ.ஜாய்சன் : தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று (ஜூலை 23) உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவனும் பங்கேற்றார்.
வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைக்கும் டக்ளஸ் தேவானந்தா
ராதா மனோகர் : வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட்!
இலங்கைக்கு வந்து போகவும் நிரந்தரமாக தங்கவும் தொழில்களை அல்லது வியாபாரங்களை செய்யவதற்கும் உரிய வதிவிட அட்டை!
இது வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கைகள் விடுத்து கொண்டே வந்துள்ளார்கள்
எனக்கு தெரிந்த சிலர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள்
இவர்களின் இந்த முயற்சிக்கு அரசு தரப்பிலும் இதர அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
விரைவில் இது அமுலுக்கு வரும் என்றும் தெரிகிறது!
நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று திரு டக்ளஸ் தேவானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்!
இது வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் செயலாகும்.
இவரின் இந்த வாக்குரிமை கோரிக்கையானது வெளிநாட்டு இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட் வழங்கலை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. .
புதன், 22 ஜூலை, 2026
மு.க. ஸ்டாலின் : தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே
நக்கீரன் : டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுடெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ நாளை ரிலீஸ்: பிளாக் டிக்கெட் விற்பனை - பகிரங்க ஏல விற்பனை? அதிர வைக்கும் தியேட்டர் நிலவரம்!
மின்னம்பல - Kavi : ஒருவழியாக ஜனநாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதேவேளை டிக்கெட் விலையும் தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக எடுக்கப்பட்ட படம் ஜனநாயகன். கடந்த 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம். அதன்படி படம் நாளை வெளியாகிறது. சுமார் 1000 திரையரங்குகளில் நாளை மட்டும் 5000 காட்சிகள் திரையிடப்படவுள்ளது.
ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ என மாற்றம்
hindutamil.in -தமிழினி : சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு மாற்றம் செய்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கைதான திமுக எம்எல்ஏக்களை நேரில் சென்று சந்திக்காத உதயநிதி: குமுறும் கட்சி நிர்வாகிகள்
dinamalar.com : திமுக எம்எல்ஏக்கள், அடுத்தடுத்து கைது செய்யப்படும் நிலையில், அவர்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் சென்று சந்திக்காதது, திமுக நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
முதல்வர் விஜயை, ஒருமையில் விமர்சித்ததாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்துார் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 'முதல்வர் விஜயின் எலும்பை உடைப்பேன்' என பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இரு கைது சம்பவங்களுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அறிக்கை வெளியிட்டதோடு, முடித்துக் கொண்டனர்.
2.4 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மோசடி! சிக்கபோகும் மகிந்தவின் புதல்வர்கள் - நாடாளுமன்றில் அம்பலம்
ilakkiyainfo.com : வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரங்கள்
குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாதஸ்வர இசையின் மென்மையை மழுங்கடித்து ஒப்பாரியாக மாற்றிய சைவ வைணவ மதவாதிகள்
ராதா மனோகர் : பல கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் உள்ளூர ஹிந்துஸ்தானி இசையை அதிகமாக விரும்புவார்கள்
ஒரு ரகசிய ரசனை போல ஹிந்துஸ்தானி ராகங்களையும் கஸல் போன்ற ஹிந்துஸ்தானி இசை வடிவங்களையும் உள்ளூர ரசிப்பார்கள்
ஆனாலும் பாடல் உருப்படிகள் கர்நாடாக இசையில்தான் அதிகமாக உள்ள காரணத்தால் கர்நாடக இசைக்கலைஞர்களாக தொடர்கிறார்கள்
தமிழ் நாதஸ்வர வித்வான்களிடம் அழகியலோடு வளர்ந்த இசையை சைவ வைணவ வழிபாட்டு கோஷ்டி கைப்பற்றி அந்த இசையையே ஒரு கர்நாடக வழிபாட்டு மந்திரமாக மடைமாற்றி விட்டார்கள்.
செவ்வாய், 21 ஜூலை, 2026
நீட் மாணவர் போராட்டம்.பெரிதாக வெடிக்கும் . 2வது நாளாக இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்றம்!
tamil.oneindia.com -Vigneshkumar : டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. நீட் உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. அவை தொடங்கும் முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மிக பெரிய சாதனைகளை படைத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல் MLA மகன் அக்ஷய் மார்க்கண்டேயனின் பேட்டி
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார்.
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திங்கள், 20 ஜூலை, 2026
dmk எம்எல்ஏ கைது விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்- “திமுகவில் இருந்து தவெகவுக்கு யாரும் போகாததால்...”
hindutamil.in - தமிழினி : சென்னை: “தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதில்தான் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. அதைத் தடுக்க காவல் துறைக்கு நேரமில்லை. திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழித்துவிடலாம் என நினைப்பது மடத்தன.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்!
minnambalam.com - Kavi ; விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார்.
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஞாயிறு, 19 ஜூலை, 2026
சனி, 18 ஜூலை, 2026
பாரதீய கரப்பான் பூச்சி உண்ணாவிரதம் சோனம் வாங்சுக் மருத்துவமனயைில் அனுமதி
Vijay Ramanathan - news18-tamil: : டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சோனம் வாங்சுக் மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
NEET தேர்வு முறைகேடு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சோனம் வாங்சுக்-கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் போராட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடி, யுஜிசி குளறுபடி, சிபிஎஸ்சி வினாத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சி.டி.விக்ரமரத்ன -சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்
ilakkiyainfo.com : இலஞ்ச ஊழல்குற்றச்சாட்டுகள், துஷ்பிரயோகங்கள் , நிதி மோசடிகள் உட்பட பாதாள உலக கோஷ்டியினர் உடனான தொடர்புகள், போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் என கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற சகல விதமான குற்றச் சம்பவங்கள் குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மறுபக்கம் முக்கியமான சாட்சிகள் மர்ம மரணத்தை தழுவி வருகின்றமை நாட்டு மக்களுக்கும் ஏன் அரசாங்கத்துக்கும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக விளங்கிய சி.டி.விக்ரமரத்ன தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டமை தற்போது பரபரப்பான சம்பவமாக மாறியுள்ளது.
Delimitation மசோதா- ராகுல் காந்திதான் இந்தியாவின் லேட்டஸ்ட் சாபக்கேடு ! திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
Sowmian Vaidyanathan : Delimitation மசோதா... அதாவது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
இது தான் இன்றைய ஒட்டுமொத்த தவெக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே கேள்வி அல்லது பதற்றம் அல்லது பயம் என்றே கூட சொல்லலாம்.
காரணம் இந்த மசோதாவுக்கு திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அல்லது வெளிநடப்பு செய்தோ அல்லது நடுநிலை காத்தோ இருந்தால் தான் வெற்றிபெற்று சட்டமாகும் என்கிற நிலை.
ஈரானை தாக்க இஸ்ரேலில் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா.. பதற்றம்
tamil.oneindia.com -Nantha Kumar R : டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேலில் அமெரிக்கா தனது விமானங்களை குவித்து வருவது தான்.
விரைவில் ஈரான் மீது மீண்டும் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் Wait and See என்று ஈரான் கடும் வார்னிங்கை கொடுத்துள்ளது.
இதனால் மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
OCI இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடிமக்களள் இந்தியாவுக்குள் கொண்டுவரும் பல பில்லியன் டாலர்கள்
![]() |
![]() |
இந்திய வம்சாவளி வெளிநாட்டு குடிமக்களின் கொண்டுவரும் பணமானது இந்தியாவுக்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை கொண்டுவரும் முக்கிய வருவாயாக இடம் பெறுகிறது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் அந்நிய செலாவணி மேலும் மேலும் அதிக அளவில் உயரும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது
அவுஸ்திரேலியாவில் இருந்து மட்டும் சென்ற ஆண்டு 10 பில்லியன் அவுஸ்திரேலிய டாலர்கள் இந்தியாவுக்கு சென்றிருக்கிறது என்று அவுஸ்திரேலிய பத்திரிக்கை செய்தி ஒன்று கூறுகிறது
இந்த வகையில் ஏனைய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது
உலகளவில் 'இந்திய வம்சாவளி வெளிநாட்டுக் குடிமகன்' (OCI) அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 55 லட்சமாக (5.5 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் 40 லட்சம் (4 மில்லியன்) என்ற அளவில் இருந்த இந்த எண்ணிக்கை தற்போது தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது
இந்த ஓ சி ஐ கார்ட் வைத்திருப்பவர்களில் கணிசமானோர் கனடா, பிரிட்டன் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளனர்.




