![]() |
Sharmila Seyyid : அன்பார்ந்த மக்களே, என் முக்காட்டை 2001 ஆம் ஆண்டு ஏறாவூரிலேயே கழைந்துவிட்டேன்! என்னம்மோ அமெரிக்கா வந்த பிறகு தான் முக்காட்டைக் கழற்றினாற் போலவும்,
எனக்கு சுதந்திர தாகம் வந்தது போலவும்,
இங்குவந்த பிறகுதான் பிறந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும் முஸ்லிம் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பேசும் ஞானதோயம் வந்ததென்றும் உங்கள் பாட்டுக்குப் பிதற்றாதீர்கள்.
நான் அமெரிக்கா வந்து நான்கரை ஆண்டுகள் தான் ஆகிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண் உடல் மீது நிகழும் பல வித வன்முறைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அமெரிக்கா வருவதற்கு முன்பு இஸ்தான்புல்லில் வசித்தபோதும் பள்ளிவாசல்களில் பெண்களுக்கு இருக்கும் புழங்கு வெளிகளை சிலாகித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன்.





