சனி, 5 மே, 2012

மதுரை ஆதீனத்திலிருந்து கட்டுக்கட்டாக பணம், மூன்று பெட்டி தங்க நகைகளை அள்ளிச் சென்ற அதிகாரிகள்!

 மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா.

முக்கிய துப்பு கிடைத்தது ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும்

முக்கிய துப்பு கிடைத்தது :  மீண்டும் சூடு பிடித்த
ராமஜெயம் கொலை வழக்குமுன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 40 நாட்களாக நடந்த விசாரணையில் தற்போது கொலையாளிகள் பற்றி போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவர் கூலிப்படை மூலம் ராமஜெயத்தை தீர்த்து கட்டியிருப்பது தெரிய வந்தது உள்ளது. இந்த கூலிப்படைக்கு திருச்சி மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடிகள் சிலர் உதவியிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. 

மதுரை ஆதீனத்தில் Income raid! பின்னணியில் யார்?

viruvirupu.com கடந்த சில தினங்களாக மதுரை ஆதீனம் பற்றி வெளியான செய்திகளால் பலத்த சாச்சைகள் ஏற்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை ஆதீனத்துக்குள் அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர். அங்குள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், பண வரவுகள் ஆகியவை குறித்து மூத்த ஆதீனம் அருணகிரிநாதரிடம் விசாரணை நடத்தினர்.
இங்குதான் சமீபத்தில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். 2,5000 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாத சுவாமி 1980-ல் பொறுப்பேற்றார். 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அருணகிரிநாதர் அறிவித்தார். மதுரை ஆதீன மடாலயத்தில் கடந்த 29-ம் தேதி பட்டம் சூட்டும் விழா நடந்தது.
அந்தப் பதவியை பணம் கொடுத்து வாங்கியதை மறைமுகமாகவும் நித்தியானந்தா ஒப்புக்  கொண்டிருந்தார்.

மதுரை ஆதீனம் போதை ஊசி மயக்கத்தில் இருந்தால், அரசு தலையிடும்!

Viruvirupu “மதுரை ஆதீனம் விவகாரத்தில், தமிழக அரசு சட்ட ரீதியாக தலையிடுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது” என்று தமிழக அரசின் சிறப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் ஆட்கள் மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர் என்று தாக்கல் செய்யப்பட்ட புகார் தொடர்பான விசாரணையின்போது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தர்மபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, மற்றும், இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு ஆகியவை மதுரை ஹைகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆகியோர் வாதிடுகையில், “மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். மூத்த ஆதீனத்துக்கு மணிக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் பார்த்துக் கொள்கின்றனர்” என்று கூறி அதிர வைத்தனர்.
“மூத்த ஆதீனம் அருணகிரிநாத சுவாமி, தான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்று தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ளதுகூட அவரது கையெழுத்துதானா என்பது நிச்சயமில்லை” என்று கூறிய மனுதாரர்கள் தரப்பு, “இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா மீது பாலியல், வரி ஏய்ப்பு வழக்குகள் உள்ளன. இதனால், மதுரை ஆதீன நிர்வாகத்தை அரசு எடுத்து நடத்த வேண்டும்” என வாதிட்டனர்.
மதுரை ஹைகோர்ட் கிளையில் நீதிபதிகள் சத்யநாராயணன், ஹரி பரந்தாமன் ஆகியோர் முன்னிலையில் தமிழக அரசின் சிறப்பு வக்கீல் முகமது மைதீன், “மதுரை ஆதீனம் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட சட்டத்தில் இடமுள்ளது” என்றார்.

சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகும் வழக்கு எண் 18/9

Vazhakku Enn 18 9 Review
நடிகர்கள்: ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, முத்துராமன், சின்னசாமி
இசை: பிரசன்னா
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்
தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ் & ரோனி ஸ்க்ரூவாலா
எழுத்து - இயக்கம்: பாலாஜி சக்திவேல்
சம்பிரதாயமான ஒரு பாராட்டை முன்னுரையாகத் தருவது கூட, இந்தப் படைப்பின் இயல்புக்கு விரோதமாகிவிடுமோ என யோசிக்க வைக்கும் அளவு ஒரு நேர்மையான படம் வழக்கு எண் 18/9.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், சத்தமின்றி அந்த வேலையைச் செய்யும் மிகச் சில படைப்பாளிகளுள் ஒருவர் பாலாஜி சக்திவேல். படங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதில் நம்பிக்கையில்லாத, ஜீவனுள்ள படைப்புகளைத் தருவதை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இயக்குநர்.

மதுரை ஆதீனத்தில் Tax RAIDவிசாரணை நகைகள், பல கோடி ரொக்கத்துக்கு கணக்கு எங்கே?

 It Officials Grilled Madurai Aatheenam

. மதுரை ஆதீன மடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மடத்தில் உள்ள பல கோடி மதிப்புள்ள நகைகள், தங்க கிரீடங்கள், செங்கோல்கள் மற்றும் ரொக்கப் பணத்துக்கு கணக்கு தருமாறு மதுரை ஆதீனம் அருணகிரியிடம் விசாரணை நடந்து வருகிறது.
மண்டல இணைக் கமிஷனர் தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை.

1 கோடி நிலம்... உண்மையைக் கக்கிய ஐஜி பிரமோத்குமார்!

சென்னை: திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் பணம் பறித்த ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் சி.பி.ஐ. கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறது.
பாசி நிதிநிறுவன மோசடி வழக்கை விசாரித்த ஐ.ஜி. பிரமோத்குமார், அதன் உரிமையாளர்களிடமிருந்து கோடிக் கணக்கில் லஞ்சப் பணம் பெற்றார் என்பது சி.பி.ஐ.யின் புகார். இதன் பேரில் டெல்லியில் தலைமறைவாக இருந்த பிரமோத்குமாரை சி.பி.ஐ. கைது செய்து கோவை கொண்டுவந்தது. கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரணை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

நித்தி வசியத்தில் ஆதீனம்! அம்பலமாகும் அந்தரங்கங்கள்'


மதுரை ஆதீனப் பரபரப்புகள் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் விசுவரூபம் எடுத்தபடியே இருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை காலை மதுரை ஆதீன கர்த்தராக நித்தி முடிசூட்டப்பட்டதையும் அப்போது நிகழ்ந்த களேபரங்களையும் "நித்தி வசியத்தில் ஆதீனம்! அம்பலமாகும் அந்தரங்கங்கள்' என்ற தலைப்பில் கடந்த நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்திருந்தோம்..
இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஆதீன கர்த்தர்களும் மடாதிபதிகளும் மயிலாடுதுறை தருமை ஆதீன மடத்தில் கூடி "விதிமுறைகளை மீறி மதுரை ஆதீனகர்த்தராக நித்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதை 10 நாட்களுக்குள் மதுரை ஆதீனம் வாபஸ் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'’ என ரெட் சிக்னல் கொடுத்தனர்.

Air India வுக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம் விதித்த அமெரிக்காமோசமான சேவை

வாஷிங்டன்: வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 80 ஆயிரம் டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க போக்குவரத்துத் துறை.
வாடிக்கையாளர் சேவையில் மெத்தனம் காட்டியது, விருப்பக் கட்டணங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்காதது, பயணத்தில் ஏற்படும் தாமதம், பயண ரத்து விவரங்களை தங்கள் இணையதளத்தில் வெளியிடாதது போன்ற குற்றங்களுக்காக ஏர் இந்தியாவுக்கு அமெரிக்க போக்குவத்து துறை, ரூ. 42 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை (80 ஆயிரம் அமெரிக்க டாலர்) அபராதமாக விதித்துள்ளது.

மதுரை ஆதீனம் வைஷ்ணவியுடன் வெளிநாட்டுக்கு தப்ப முயற்சி?

மதுரை ஆதினத்தின் தனி உதவியாளராக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி(திருமணமகாதவர்)
நியமிக்கப்பட்டார்.
கடந்த 6 மாதத்திற்கு மேலாக மதுரை ஆதினத்திற்கு உதவியாளராக இருந்த வைஷ்ணவி, கடந்த திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்கு ஆதின டத்தில் இருந்து காணவில்லை என்று ஆதினமும், நித்தியானந்தாவும் ரகசிய ஆலோசனை செய்து போலீசுக்கு போகாமல் தேடி வந்தார்கள்.

வெள்ளி, 4 மே, 2012

நாஞ்சில் சம்பத்:ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை

ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை : நாஞ்சில் சம்பத்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மே தின விழாவையொட்டி ம.தி.மு.க. கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராக்கியண்ணன் வரவேற் புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ம.தி.மு.க. கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, 
’’மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் வந்தால் எந்த கட்சி வேண்டுமானாலும் வெற்றிபெரும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆளும் கட்சி எது உள்ளதோ அந்த கட்சி வெற்றி பெருவது வாடிக்கையாகி விட்டது.
ஜெயலலிதா ஒன்றும் பெரிய சக்தி இல்லை வீழ்த்த முடியாது என்று சொல்வதற்கு.   ஜெயலலிதாவை கடந்த ஆட்சிக் காலத்தில் பர்கூர் தொகுதியில் நின்றபோது அவர் வீழ்த்தப்படவில்லையா. பால்விலை, பஸ் கட்டணம் பலமடங்கு உயர்ந்து விட்டது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் இந்தியா நாடகமாடுகிறது’’ என்று தெரிவித்தார்.

ராமஜெயம் கொலை வழக்கு கிணற்றில் போட்ட கல் WHY?

திருச்சி ராமஜெயம் கொலை செய்யப்படு ஒருமாதம் ஓடிவிட்ட நிலையிலும் கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து எந்த துப்பும் கிடைககாமல் போலீசார் தத்தளித்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீரங்கம் அருகே திருவளர்ச்சோலை பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியாக 5,49,442 ஓட்டுகள் தேவை.. காங்கிரசிடம் இருப்பது 4,46,345

Congress Ahead Presidential Sweepstakes Bjp Stuck 153404

Obama வின் இளம் வயது காதல் லீலை அம்பலம் புதிய புத்தகம்

 அமெரிக்க அதிபர் ஒபாமா மீது இதுவரை எந்தவிதமான செக்ஸ் புகாரும் எழுந்ததில்லை. அவர் மீது உலக மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆனால் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற பழமொழிக்கு ஏற்ப ஒபாமாவும் செக்ஸ் லீலையில் கைதேர்ந்தவராக இருந்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.
 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஜெனிவியூவ் குக். இவர் ஆஸ்திரேலிய தூதரின் மகள். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்த சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அது விரைவில் வெளிவர உள்ளது.

MIG 21 பறக்கும் சவப்பெட்டி'!!40 ஆண்டுகளில் 171 பைலட்டுகளை உயிர்ப்பலி


 India Lost Half Its Mig Jets 40 Years 153411

டெல்லி: கடந்த 1980ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 872 மிக் போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதில் விபத்துக்களில் மட்டும் 482 விமானங்கள் நொறுங்கிப் போய் விட்டன. இந்த விபத்துக்களில் 171 விமானிகள் உயிரிழந்துள்ளனர். 39 பொதுமக்களும் இறந்துள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
மிக் போர் விமானங்கள் நொறுங்கியதை விட 171 விமானிகள் உயிரிழந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பாகும்.

பில்லா-2 VS விஸ்வரூபம் VS துப்பாக்கி


              2012-ம் ஆண்டின் கோடைகாலத்தில் எந்த முக்கிய ஹீரோக்களின் படமும் வெளிவரவில்லை என்றாலும் அவர்கள் படங்களின் போஸ்டர்களும், டிரெய்லர்களும் வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன
சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டரும் ஒரு கலக்கு கலக்கினாலும், பில்லா-2 படத்தின் பாடல்கள் வெளியானதும் பல ரசிகர்கள் ஒரே நேரத்தில் அவற்றை டவுன்லோடு செய்ய முற்பட்டதால் இணையதளங்கள் ஸ்தம்பித்துவிட்டன. இதே போல் 100 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் போஸ்டரும் 30 நொடி முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டரும் இதே சமயத்தில் வெளியாகி பல ரசிகர்களின் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வால்பேப்பராகவும் மாறிவிட்டன.

1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்

சென்னை: தமிழகத்தில், 1,000 மெகா வாட் உற்பத்தி செய்யும், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என, தொழில் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் தங்கமணி பேசியபோது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நம்புவோம் நம்புவோம்?? நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: மதுரை ஆதீனம் ஐகோர்ட்டில் பதில்

மதுரை ஆதீனத்தை ஆஜர்படுத்தக்கோரிய வழக்கில், "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை', என அவர் மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 
மதுரை தர்மபுரம் ஆதீன மடம் மேலாளர் குருசாமி தேசிகர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: நித்யானந்தா, மதுரை ஆதீனத்தை மிரட்டி, தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்கச் செய்துள்ளார். நித்யானந்தாவின் முழுக் கட்டுப்பாட்டில் மதுரை ஆதீனம் உள்ளார். மதுரை ஆதீனம் சுயமாக முடிவு எடுக்கவில்லை. அவரை சட்டவிரோத காவலில் நித்யானந்தா வைத்துள்ளார். மதுரை ஆதீனத்தை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 3 மே, 2012

என் பையன் கூட நடிச்ச பொண்ணு கூட நான் நடிக்க முடியாதே

150-வது ஜொள்ளு! 
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி படங்களில் நடிப்பதை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 149 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி தனது 150-வது படமாக ‘ஆதிக்க நாயுடு’ என்ற படத்தை துவங்கினார். அந்த சமயத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால் நின்று போன படம் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரன்

என்.டி. திவாரிக்கு DNA சோதனை உச்சநீதிமன்றம் உத்தரவு

மூத்த காங்கிரஸ் தலை வரும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங் களின் முன்னாள் முதல் அமைச்சருமான என்.டி. திவாரிதான் (வயது 86) தனது தந்தை என்று டில்லி வாலிபர் ரோகித் சேகர் கூறி வருகிறார்.
இதை என்.டி. திவாரி மறுத்துள்ளார். ஆனால் என்.டி.திவாரியை மர பணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் ரோகித், அவரது தாயார் உஜ்வாலா சர்மா வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், திவாரியை மரபணு பரிசோத னைக்கு கட்டாயப் படுத்தலாம், மரபணு பரிசோதனைக்கு அவர் மறுத்தால், காவல்துறை உதவியை நாடலாம் என சமீபத்தில் உத்தர விட்டது.

பெங்களூரு வழக்கு: சசிகலா விரைவில் ஹாஸ்பிடல் போகலாம்!

Viruvirupu,
பெங்களூருவில் நடைபெறும் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ஒரு ஸ்கூல் டீச்சர் போல அட்டென்டன்ஸ் எடுக்கும் நிலையில் உள்ளார். விசாரணைக்கு யார் இன்று வருவார்கள், யார் மட்டம் போடுவார்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்வதற்கே அவருக்கு நேரம் சரியாக போய்விடும் போலிருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன், மனு மேல் மனுப் போட்டு கேஸை தாமதமாக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியிருந்தார். இறுதியில் நீதிபதியும், அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யாவும் கடுமையான வார்த்தைகள் சிலவற்றைச் சொன்னதில், சசிகலா இப்போதெல்லாம் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு ‘பிட்’சப்ளை செய்த திருவண்ணாமலை மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளி, கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறது. கைகளில் ‘பிட்’டு காகிதமும், சட்டைப்பையில் ‘காந்தி’காகிதம் சகிதமாக பிடிபட்டிருக்கின்றனர், ஆசிரியர்கள்.
“….பிட்டுக்காக வாத்தியார்கள் பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனதை இப்பத்தான் கேள்விப்படுகிறோம். கலி முத்திப் போச்சு” என இச்சம்பவம் குறித்து தமிழக மக்கள் பேசிக்கொள்வதாகக் குறிப்பிடுகிறது,

திமுக புறக்கணிக்கும் புதுக்கோட்டை ADMK தனித்தவில்

புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

நக்சல்களிடமிருந்து மீண்டார் கலெக்டர் அலெக்ஸ்

ராய்ப்பூர்: மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு கடந்த 13 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அலெக்ஸ் பால் மேனன் இன்று பிற்பகலுக்கு மேல் விடுவிக்கப்பட்டார். ஜக்தல்பூருக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வரப்பட்ட அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிந்தல்நாரை வந்தடைந்தார்.

The Whistleblower (2010) திரை விமரிசனம்

லகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நா.வின் அமைதிப்படை செல்கின்றதே, அதன் வேலை என்ன? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? அப்படி ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்?
இந்தக் கேள்விகளுக்குச் சரியான, அதே நேரம் அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம் தான்Whistle Blower . ஐ.நா. அமைதிப்படையின் கோர முகத்தை உறைக்கக் கூறும் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
ஐ.நா.வின் அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல, வெள்ளைச் சமாதானப் புறாக்கள் அல்ல. பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்தப் படையின் அட்டூழியத்தை எதிர்த்துப் போராடிய ஒரு  சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி காதரின் போல்கோவாக்கின் துணிச்சலான பயணம்  தான் இந்தத் திரைப்படம்.

ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு

தான் ஒரு பார்லிமென்ட் எம்.பி., என்று கூறியும் தன்னை குஜராத் போலீசார் கடத்திச் சென்று சித்ரவதை செய்தனர் என்று காங்கிரசைச் சேர்ந்த ஆதிவாசி பெண் எம்.பி., ஒருவர் குற்றம் சாட்டி அழுததால், லோக்சபாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எம்.பி.,க்கள் பலரும் வலியுறுத்தினர்.
எம்.பி.,க்கே இந்த கதியா:லோக்சபாவில் நேற்று ஜீரோ நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி.,யான கிரிஜா வியாஸ் பேசினார். அப்போது, தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பிரதீபா என்ற பெண் எம்.பி.,யை சுட்டிக்காட்டி பேசினார். குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.,யான பிரதீபா, ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர். பிரதீபாவுக்கு நடந்ததை விளக்கி கிரிஜா வியாஸ் பேசினார்.

ஐ.ஜி., பிரமோத்குமார் நேற்று கைது கமலவள்ளியை கடத்தி, பணம் பறித்த வழக்கில்,

கோவை:முதலீட்டாளர்களிடம் 1,500 கோடி ரூபாய் மோசடி செய்த, திருப்பூர், "பாசி' நிறுவன பங்குதாரர் கமலவள்ளியை கடத்தி, பணம் பறித்த வழக்கில், ஐ.ஜி., பிரமோத்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். டில்லியில் அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருப்பூரில், "பாசி குரூப் ஆப் கம்பெனிஸ்' என்ற பெயரில், பல்வேறு முதலீட்டு நிறுவனங்களை, மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், சென்னையைச் சேர்ந்த கமலவள்ளி ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் மூவரும், கரன்சி வர்த்தகம் செய்வதாகக் கூறி, நாடு முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், முதலீடுகளை பெற்றனர்.

புதன், 2 மே, 2012

பாய்ந்து வரும் காற்றாலை மின்சாரம்-கரண்ட் 'கட்' வெகுவாக ரத்து!

tamilnadu wind power decreases power cut tamil nadu
 
சென்னை: தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில் மின் வெட்டு வெகுவாக குறைந்திருந்தது. சில இடங்களில் முழுமையாகவே மின்வெட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏன் இப்படி என்று மக்களுக்குப் பெரும் குழப்பம். ஆனால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாக வருவதால்தான் மின்வெட்டு பெருமளவில் குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்திலிருந்து கடும் மின்வெட்டு மக்களை வாட்டி வருகிறது. இதைச் சொல்லியே ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஆனால் அவர்கள் வந்த பிறகுதான் மின்வெட்டு மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - சென்னையைத் தவிர்த்து- பாதி நாட்கள் கரண்ட் கிடையாது என்ற நிலைதான்.

வழக்கு எண் 18/9! படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன்

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.
வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை... தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.
அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.

அத்தனை ஆதீனங்கள் மீதும் வழக்குப் போடுவோம்... நித்தியானந்தா மிரட்டல்!

tamilnadu we will sue the aadheenams tamil nadu says nithyanantha
 
மதுரை: தருமபுர ஆதீனம் உள்ளிட்ட எங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஆதீனங்கள் அனைவர் மீதும் மான நஷ்ட ஈடு கோரி பெங்களூர் பிடுதி பீட பக்தர்கள் வழக்குத் தொடருவார்கள் என்று நித்தியான்தா கூறியுள்ளார்.
மதுரையில் இன்று நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் சேர்ந்து பேட்டியளித்தனர். நித்தியானந்தாதான் பேசினார். மதுரை ஆதீனம் உடன் அமர்ந்திருந்தார்.
அப்போது நித்தியானந்தா பேசுகையில்,

Rahul...காங்கிரஸ் கப்பலை கானல் நீரில் இறக்கிய

இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக வேண்டும். அதற்கு முன்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் கர்நாடகா, குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றங்களின் தேர்தலைச் சந்திக்க வேண்டும். 

அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச சட்டமன்றங்களின் தேர்தலை எதிர்நோக்க வேண்டும். இந்த மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு ஓரளவு கட்சி அமைப்புகள் உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு அடை யாளங்கள் உண்டு. அண்மையில் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி ஓர் உண்மையை உணர்ந்தது. என்னதான் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்தாலும், பேரணிகளைக் கண்டாலும் கட்சிக்கு அமைப்புகள் இல்லையென்றால் வெற்றி பெற முடியாது என்பதனை ராகுல்காந்தியே தெரிவித்தார்.

மதுரை ஆதீனத்தின்Sex scandal நித்தி கும்பல் Black Mail


தமிழகம் முழுதிலும் இருந்தும் நம்மைத் தொடர்பு கொண்ட பலரும்...
""மதுரை ஆதீன மடத்தை நித்யானந்தா கைப்பற்றப்போகிறார் என்பதை, மதுரை ஆதீனத்தின் புதிய நட்பு என்ற கட்டுரை மூலம் கடந்த இதழிலேயே எச்ச ரிக்கை மணியடித்தது நக்கீரன்தான். நக்கீரன் சொன்னது போலவே, அதிரடியாக எல்லாம் நடந்துவிட்டதே'' -என தங்கள் ஆதங்கம் கலந்த குமுறலைக் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் 28-ந்தேதி நள்ளிரவு நித்தி டீமோடு, மதுரைக்கு வந்தார் மதுரை ஆதீனம். 29-ந்தேதி காலை லோக்கல் பிர முகர்கள் யாரையும் அழைக்காமல் இர வோடு இரவாகக் கொண்டுவந்து குவிக்கப் பட்ட நித்யானந்தா ஆட்கள் முன்னிலையில் அவசர அவசரமாக, நித்திக்கு ஆதீனகர்த் தர் என்ற மகுடத்தை சூட்டினார் ஆதீனம்.
இதன்பின் நித்தியோடு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மதுரை ஆதீனம் சென்றார். நித்தியும் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட தர்மகர்த்தா கருமுத்து, கோயில் பணியாளர்கள் யாரும் இருக்கவேண்டாம் என்று குருக்கள்கள் உட்பட எல்லோரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டார். இதனால் தாங்களாகவே வழிபாடு நடத்திவிட்டு அவர்கள் கிளம்பி னர். இதற்கிடையே இந்து மக்கள் கட்சி யினர், அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆதீன மடத்தின் முன்பு பெருந்திரளாக் கூடினர். ஆதீனத்தின் வரவுக் காகக் கொந்தளிப்போடு கா

Miss Koovaham அழகியாக ஹரினி தேர்வு!

Miss Koovagam 2012
விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் 2012 அரவாணிகள் அழகிப் போட்டியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரினி கூவாகம் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் திருக்கோவிலில் சித்திரை விழா ஏப்ரல் 17ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இன்று முக்கிய நிகழ்ச்சியான அரவாணிகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை தேரோட்டம் நடைபெறவுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான அரவாணிகள் கூவாகத்தில் குவிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மாவட்ட அரவாணிகள் நலச் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2012 அழகிப் போட்டி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சம்பத் போட்டியைத் தொடங்கி வைத்தார். மாநில சமூக நல வாரிய தலைவி நடிகை சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?


தமிழகத்தில் வட இந்தியர்கள் வேலை தேடி வந்த வண்ணம் இருக்கிறார்களே இதற்கு என்னதான் தீர்வு?  
தமிழகத்திற்கு வட நாட்டில் இருந்து தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்க வரலாம்;   தொழிலாளர்கள் வேலைத் தேடி வாழ்க்கை நடத்த வரக்கூடாதா? 
இது தமிழர்களோடு உறவாடி நல்லபடியா உள்ள போயிகிட்டுதானே இருக்கு...; 

வந்தேறி இந்திக்காரனுக்கு வால் பிடிக்கும் நீ தமிழனா? உன்னை போன்ற துரோகிகளுக்கு தக்க பதிலடி தருவோம்?
-தமிழ்மறவன்.
சென்னை சவுக்கார்பேட்டில் உள்ள சேட்டுகளும் மற்ற வட இந்திய ‘உயர்’ ஜாதி வட்டிக்கடைக்காரர்களும் அகர்வால் பவன் வைத்து தமிழர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கலாம்.
ஆனால், வட இந்திய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்கு தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தா… அவர்களுக்கு எதிரா மட்டும் உன் தமிழ் உணர்வு பொத்துக்கிட்டு பீறிட்டுக் கிளம்பும்….
என்ன உன் பிரச்சினை?
உனக்குத் தேவை அல்வாவா?
போ.. சவுக்கார்பேட் உள்ளபோய் அகர்வால் பவன்  முன்னாடி நின்னுக்கிட்டு உரிமையோடு சொல்லு….
‘தமிழ்நாடு தமிழனுக்குத்தான் சொந்தம்… வந்தேறிகளுக்கு இடமில்லை..’ என்று.
சேட்டு நல்லா குடுப்பான்..
அல்வா..
அவுங்க அடியாள வைச்சி.. அதான் புரட்சித்தலைவியின் போர்படையான காவல்துறை மூலமா..
வாங்கி சாப்ட்டு.. முடிஞ்சா வா…
உள்ள இருக்கறது எல்லாம் பிதுக்கி வெளியே வந்துடும்..
ஆனால், face fresh ஆயிடும்.

கேலிக்கூத்து கொலை வழக்கில் சமரசம் நீதிமன்றத்துக்கு வெளியே

ஒரு கொலைக் குற்றத்துக்காக நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காணும் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளையே கேலிக்கூத்தாக்கும் நடைமுறை. இந்த விஷயத்தில் கேரள நீதிமன்றத்தின் தவறான நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.  இத்தாலி நாட்டுக் கொடி தாங்கிய என்ரிகா லெக்ஸி கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதி தங்கள் அருகில் வந்த மீனவர்களைக் கடல்கொள்ளையர் என்று கருதி, துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மீனவர்கள் இருவர் - பிங்கி, ஜெலஸ்டின் - இறந்தனர். இது தொடர்பாக இத்தாலியக் கப்பல் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரை கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது.  இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர்.

ஒபாமாவை படுகொலை செய்ய உத்தரவிட்டார் பின்லேடன்'

வாஷிங்டன்: பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைப் படுகொலை செய்ய உத்தரவிட்டிருந்தார் பின்லேடன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் என்பிசி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தியில் கூறுகையில், அபோத்தாபாத் வீட்டில் பின்லேடன் பதுங்கியிருந்தபோதும் தனது தீவிரவாத செயலில் தீவிரமாகவே இருந்துள்ளார். தொடர்ந்து தனது கூட்டாளிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார். குறிப்பாக அதிபர் ஒபாமா, ராணுவத் தளபதி டேவிட் பெட்ரிஷியஸ் ஆகியோரைப் படுகொலை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்ததாக அந்த செய்தியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

தேர் கவிழ்ந்ததில் 6 பேர் பலியானார்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தேர் கவிழ்ந்ததில் பக்தர்கள் 6 பேர் பலியானார்கள்.  இவர்களின் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சு ரூபாய் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்

மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் ஸ்டாலின் கூட்டம் தள்ளிவைப்பு

நெல்லை மாவட்ட தி.மு.க.,விலும், "சகோதரர்கள்' மத்தியில் வெடித்துள்ள மோதலால், வரும் 8ம் தேதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த, "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற கண்டன பொதுக்கூட்டம், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தடபுடல் வரவேற்பு: மதுரையில் நடந்த மோதல் விவகாரமே இன்னும் சுமுகமான முடிவுக்கு வராத நிலையில், அடுத்ததாக நெல்லை மாவட்ட தி.மு.க.,விலும், கோஷ்டி மோதல் உருவாகியுள்ளது. அம்மாவட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் ஆகிய நான்கு பேர், முக்கிய பிரமுகர்களாக உள்ளனர்.இதில், கருப்பசாமி பாண்டியன் மட்டும் ஸ்டாலின் ஆதரவாளர். மற்ற மூவரும், தற்போது அழகிரியின் ஆதரவார்களாக உள்ளனர். வரும் 8ம் தேதி நெல்லையில், "சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில், கண்டன பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. அக்கூட்டத்தில், ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஸ்டாலினுக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கவும், அழகிரியின் படம், பெயரை புறக்கணித்து விட்டு, பெரிய அளவில் பேனர்கள், போஸ்டர்கள் வைத்து அமர்க்களப்படுத்தவும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

செவ்வாய், 1 மே, 2012

வைஷ்ணவியை மடத்தில் காணவில்லை மதுரை ஆதீனத்தின் இளம்பெண் மாயம்

மதுரை ஆதீனத்தின் இளம்பெண் உதவியாளர் மாயம் :
போலீசுக்கு தெரிவிக்காமல் தேடுதல் வேட்டைதஞ்சாவூர் மாவட்டம் கச்சனத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி( திருமணமகாதவர்).  இவர் கடந்த 6 மாதங்களாக மதுரை ஆதீனம் மடத்தில் தங்கி ஆதீனத்தின் உதவியாளராக இருந்து வந்தார்.    அவருடன் அவரது தங்கையும் கஸ்தூரியும் (திருமணமாகாதவர்) மடத்தில் தங்கியிருந்தார். நித்தியானந்தா மதுரை வந்தபோது சகோதரிகள் உடன் இருந்தனர்.  பின்னர் கடந்த வாரம் நித்தியானந்தாவின் பெங்களூர் மடத்திற்கு ஆதீனம் சென்றபோது, வைஷ்ணவி மற்றும் அவரது தங்கை கஸ்தூரியும் சென்றிருந்தனர்.
ஆதீனம் ,நித்தியானந்தாவுடன் இவர்கள் நேற்று முன் தினம் மதுரை திரும்பினர்.   நித்தியானந்தா பதவியேற் றபோது சகோதரிகள் இருவரும் அருகிலேயே இருந்தனர். 

May Day குழந்தை தொழிலாளர்களை போயஸ் காடனிலும் கோடை நாட்டிலும் வைத்திருக்கும்

முதலமைச்சர் ஜெயலலிதா மே தின வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மே தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும் நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெரிந்து தங்கள் உரிமைகளை மீட்டு எடுத்த திருநாள் மே தின திரு நாளாகும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி

விஜய் ஏற்படுத்திய நஷ்டம்! கை கொடுப்பாரா அஜித்!


அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார். 
அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் ‘காவலன்’ விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை ‘தல’ காப்பாத்துமா?

பிரதமரின் ஆலோசகர் டி.கே.நாயரின் விதிமுறை மீறி வீட்டு மனை

TKA Nair
 
பெங்களூர்: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எம்.எல். நிறுவன ஊழியர்களுக்கான வீட்டு மனை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசகர் டி.கே.நாயரின் உறவினருக்கும் குடும்ப நண்பருக்கும் விதிமுறைகளை மீறி வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லையே என்று நாயர் மழுப்பலாக விளக்கமளித்துள்ளார்.
பி.இ.எம்.எல். என்றும் பெமல் என்றும் அழைக்கப்படும் அரசுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கம் பெங்களூரில் 2008-ல் விற்ற வீட்டு மனைகளில் டி.கே.ஏ. நாயரின் சகோதரி மகள் ஏ. பிரீத்தி பிரபா, குடும்ப நண்பர் உமாதேவி நம்பியார் ஆகியோருக்கு விற்கப்பட்டன.

திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆச்சார உயர்வு’, ‘பார்ப்பன மேன்மை’ என்பதும், ‘தீண்டாமை’ யும்

ச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்.
ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை.
“எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு பெண் சொன்னால்,
“எங்க பாட்டிதான் ரொம்ப ஒழுக்கம். நாங்க ஒழுக்கம் பாக்கறதில்ல” என்று அதை மிக நேரடியாக யாரும் அர்ததப்படுத்திக் கொள்ளமுடியாது.
அப்படி எனில் ‘ஆச்சாரம்’ என்பது சுத்தமா?
ஒரு நாளைக்கு நாற்பது வேளை குளித்தாலும், அசைவ உணவை உண்ணாதவராக இருந்தாலும், மிகத் தீவிரமான பக்திமானாக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்டவரை ‘ஆச்சாரமானவராக’, ‘பிராமணராக’  சமூகம் கருதாது.

நந்தினி: வேறுமொழிப் பட காட்சியை இனி யாரும் சுட முடியாது!'

 

அழகிரி, ஸ்டாலின் பிரச்சனை திசை திருப்ப காங். கூட்டணியிலிருந்து விலக திட்டம்?

அழகிரி, ஸ்டாலின் இடையிலான மோதலை திசை திருப்பவே இலங்கையில் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் கூற ஆரம்பித்துள்ளதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளேடு கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக மீதான கறையைப் போக்கவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவுமே இலங்கை விவகாரத்தை கருணாநிதி கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.
ஆனால், அழகிரி- ஸ்டாலின் இடையிலான பிரச்சனையை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்படும் உத்தி தான் இது என்று “தி டெலிகிராப்” தெரிவித்துள்ளது.



ஆருஷி கொலை வழக்கு: நுபுர் தல்வார் சிறையில் அடைப்பு

Nupur Talwar
ஆருஷி தல்வார் மற்றும் ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் நுபுர் தல்வார் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று காசியாபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அவர் தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு ஆருஷி தல்வார் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஹேம்ராஜ் என்னும் வாலிபர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் மதுரை ஆதீனம்- திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி பரபரப்புத் தகவல்!

மதுரை ஆதீனம் சூழ்நிலைக் கைதியாக உள்ளார். அவரையும், மடத்தையும் மீட்க தமிழகத்தில் உள்ள அத்தனை மடாதிபதிகளையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூர் திருப்பனந்தாள் மடாதிபதியின் பிரதிநிதி சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நி்த்தியானந்தாவை நியமித்ததற்கு சகல தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நேற்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் பெரும் திரளாக மதுரை ஆதீனத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மதுரை ஆதீனத்தை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் பேரூர் திருப்பனந்தாள் மடாதிபதியின் தூதராக வந்திருந்த சுரேஷ் பாபுவை மட்டும் அனுமதித்தனர். ஆதீனத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை ஆதீனம் சூழ்நிலை கைதியாக உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மடாதிபதிகளை ஆலோசனை செய்து ஆதீனத்தையும், மடத்தையும் மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கலைஞர் பிரணாப் முகர்ஜியையும் அன்சாரியையும் ஜனாதிபதி தேர்தலுக்கு சிபார்சு

அன்சாரி மற்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளதாக

சென்னை : அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய ‌அமைச்சர் ஏ.கே.அந்தோணி சென்னையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை ஜனாதிபதி பதவிக்கு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக ஏற்கனவே சரத் பவாரை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா, மே 4ம் ‌தேதி டில்லிக்கு வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியையும் சோனியா சந்திக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ஹமீது அன்சாரி, பிரணாப் முகர்ஜி மற்றும் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி

மதுரை:""நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல், ரஞ்சிதா வந்து செல்கிறார்,'' என மதுரையில் சாமியார் நித்யானந்தா கூறினார்.
மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய 1,250 ஏக்கரை அந்த ஓட்டல் நிர்வாகிக்கு குத்தகைக்கு வழங்கினேன்மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக முடிசூட்டிய பின், முதன்முறையாக நேற்று மடத்திற்கு வந்த சாமியார் நித்யானந்தா, ஆதீனத்திற்கு தங்க கிரீடம் அணிவித்தார். நித்யானந்தாவுக்கும் அணிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

வி்த்யா பாலன் செம போல்ட்... புகழும் அனுஷ்கா!

Anushka and Vidya Balan
வித்யா பாலன் புகழ் பாட ஆரம்பித்துள்ளார் அனுஷ்கா. யாரும் செய்யத் தயங்குவதை வித்யா பாலன் படு போல்டாக செய்கிறார்.அவரது அந்த போக்கு என்னைக் கவர்ந்து விட்டது என்று அதற்குக் காரணம் கூறுகிறார் அனுஷ்கா.
வித்யா பாலன் ரொம்பவே வித்தியாசமான நடிகை. சாதாரண கேரக்டர்களில் நடிப்பதை விட வித்தியாசமான, யாரும் செய்யத் தயங்கும் வேடங்களாக தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார் அவர். இதனால் அவருக்கு செம பேராகியுள்ளது.
அவரது டர்ட்டி பிக்சர்ஸும், கஹானியும் பெரிய அளவில்

நடராஜன் மீதான புகார் திடீர் வாபஸ் ஏன்...

Karunanidhi
சென்னை: சசிகலா மீது புகார் கூறிய ஜெயலலிதா தனது புகாரினை திரும்ப பெற்றுக்கொண்டு சசிகலாவை மீண்டும் வீட்டிற்குள் அனுமதித்த பிறகு, யாரோ ரங்கராஜன் என்பவர் தஞ்சையில் நடராஜன் மீது கொடுத்த புகாரை வாங்குவதா ஆச்சர்யம்? ஆனால் பொய்ப்புகார் கொடுத்து அதன்மீது காவல்துறை வழக்கு தொடுத்து, நடராஜன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்காமல் இத்தனை நாட்கள் அவர் சிறையில் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் யார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என்று கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி- கலைவாணர் அரங்கம் புனரமைப்புக்காக இடிக்கப்பட்ட அந்த இடத்தில் விரைவில் கலையரங்கம் கட்டப் போவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

குரங்கின் கையில் மதுரை ஆதீனம் வீணாய் போன Niththi GANG

Madurai Adheenamநம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!

மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒரு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் தொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.

Facebook வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்

வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருபவர் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை தேடி பக்ரைனின் உள்ள பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பக்ரைனில் வேலை செய்து வரும் அனீஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் இணையதள பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனார்.வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.

எம்.பி. பதவி என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

Sachin Tendulkar
 
டெல்லி: சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...
ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.
எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.
வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும்.

தி.மு.க. பிரமுகர் அயூப்கான் சிறுமியை நரபலி கொடுத்ததாக

மதுரை வாடிப்பட்டி அருகே சிறுமியை நரபலி கொடுத்ததாக 3 பேர் 16 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் என்ன?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சைக்கட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தொத்தன். இவரது 2 குழந்தைகளில் இளைய மகள் ராஜலட்சுமி. வயது 5. கச்சைகட்டி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். திடீரென சிறுமி ராஜலட்சுமி 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி காணாமல் போனார். சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரது மாட்டுத் தொழுவத்தில் ராஜலட்சுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அன்புமணி ராமதாஸ், சி.பி.ஐ.-யிடம் வசமாக சிக்கியது எப்படி?


Viruvirupuபா.ம.க. ‘சின்ன ஐயா’ அன்புமணி ராமதாஸ், சி.பி.ஐ. வலையில் சிக்கியிருக்கிறார். இந்தோர் மெடிகல் காலேஜ் அனுமதி தொடர்பாக டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள சார்ஜ் ஷீட்டில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பட்டியலில் அன்புமணியின் பெயரும் உள்ளது.
போதிய வசதிகள் அற்ற நிலையில் இருந்த கல்லூரிக்கு ‘எப்படியோ’ அனுமதி கொடுத்ததுதான் குற்றச்சாட்டு.
‘சில காரணங்களுக்காக’ இந்த விவகாரம் தமிழக மீடியாக்களில் அடக்கி வாசிக்கப்படுகிறது. ஆ.ராசா மீதோ, கனிமொழி மீதோ சிறியதாக ஒரு விசாரணை என்றாலும் விலாவாரியாக வெளியிட்ட மீடியாக்கள் சில, அன்புமணி விவகாரத்தை ‘சிறிய விஷயமாக’ காட்டுவதற்காக பெட்டிச் செய்தி அளவுக்கே வெளியிட்டுள்ளன.

Narendra Modi:பார்ப்பனர்தான் இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றி வளர்த்தார்கள்

சூரத், ஏப்.28- இந் தியக் கலாச்சாரத்தை யும், சாஸ்திரங்களையும் காப்பாற்றி வளர்த்தவர் கள் பார்ப்பனர்கள்தான் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறி னார். சூரத் நகரில் பிரம்ம சமாஜ அமைப்பு ஏற் பாடு செய்து நடத்திய பார்ப்பன சம்மேளனத் தில்  24 ஆம் தேதி பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியக் கலாச் சாரத்தைக் கட்டிக் காக்க பார்ப்பன சமூகம் உதவியது. நமது கலாச் சாரம் இன்னமும் அழி யாமல் இருக்கிறதென் றால், அதற்குக் காரணம் பார்ப்பனர்கள்தான். பல நூற்றாண்டு காலமாக அவர்கள் ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலை முறைக்கு அறிவைத் தொடர்ந்து அளித்து வந்துள்ளனர். இது அவர்கள் சமூகத் திற்குச் செய்த மாபெரும் சேவையாகும் என்று அவர் கூறினார்.
ஒரு வழியில் துப் பாக்கியின் மூலமாகவும்; மற்றொரு வழியில் சாஸ் திரங்கள் (அறிவு) மூல மாகவும் சமூக நடை முறை உருவாக்கப்பட லாம்.

வைஷ்ணவியையும் கஸ்தூரியையும் மதுரை ஆதீனத்திற்கே அழைத்து தங்கச் செய்து???

""மதுரை ஆதீனம், அந்த நித்யானந்தா வால் மாறிவிட்டார். அவரது கூடா சகவாசத்தால் ஆதீனத்திற்குள் பெண்கள் நடமாட்டமும் நிர்வாகக் குளறுபடிகளும் மோசடிகளும் தொடங்கிவிட்டது''’ என்ற குமுறல் மதுரையில் இருந்து வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இது குறித்த தனது மனக் குமுறலை மதுரை ஆதீனத்திடமே கடிதம் மூலம் கொட்டியிருக்கும் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் நம்மிடம், விரிவாகப் பேச ஆரம்பித்தார்....
""தமிழ்நாட்டில் இருக்கும் ஆதீனத்திலேயே மிகப்பெரிய ஆதீனம் மதுரை ஆதீனம்தான்.