ஞாயிறு, 12 ஜூலை, 2026

தமிழக இடதுசாரிகளின் புதிய கள்ளக்காதலி தவேக

 Amudhan R P : இடதுசாரி ஆதரவாளர்கள் சிலர் தவெகவிற்கு தங்கள் கட்சிகள் கொடுக்கும் ஆதரவை நியாயப்படுத்த, திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி, அது மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே நம்பியிருந்தது, அதன் பாஜக எதிர்ப்பு உறுதியானதல்ல என்று பரப்பிவருகின்றனர்.
இதை அதிகாரப் பூர்வமாக சண்முகம் தான் தொடங்கிவைத்தார்.
திமுகவை முதலாளித்துவக்கட்சி என்று சொல்லி அதை வசையாகப் பயன்படுத்தி வருகிறார் அவர்.
அமெரிக்காவில் ‘கம்யூனிஸ்ட் ‘ என்பது எப்படி ஒரு வசைச்சொல்லோ, அந்தப் பொருளில்  திட்டி வருகிறார்கள்.
திமுக ஒரு முதலாளித்துவக் கட்சி தான். இன்னும் சொல்லப் போனால் அது லிபரல் டெமாக்ரெடிக் கட்சி என்று தான் வகைப்படுத்தமுடியும்.
ஆனால் அது சண்முகம் போன்றோர் சொல்கிறபடி வெறும் நலத்திட்ட அரசை மட்டுமா நடத்தியது?

சனி, 11 ஜூலை, 2026

ஜெய்ப்பூர் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா தற்கொலை ! பள்ளிக்கூட நிர்வாகமும் பெற்றோரும் செய்த தவறு

 Yasmin Nihar : ஜெய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி பள்ளியில் கடந்த நவம்பர் 2025 ல் 9 வயது 4-ஆம் வகுப்பு மாணவி அமைரா உயிரிழந்த சம்பவம் ஒவ்வொரு பெற்றோரின் மனதையும் உலுக்குகிறது.
கடந்த சில நாட்களாக வெளியான புதிய CCTV காட்சிகள், இந்த வழக்கில் மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அமைராவின் பெற்றோர், தொடர்ச்சியான bullying, ஆசிரியர்களால் தனது மகளின் புகார்கள் புறக்கணிக்கப்பட்டது, மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் இவையெல்லாம் இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
அவள் தினமும் கதறி அழுது ஆசிரியையிடம் உதவி கேட்டபோது, ஆசிரியை மொபைலில் ஸ்க்ரோல் செய்தபடி அலட்சியமாக திருப்பி அனுப்பினாள்! இறந்த நாளிலும் அந்த குழந்தை பலமுறை ஓடி வந்து கெஞ்சியும், அந்த பயங்கர ஆசிரியை மொபைலை விட்டு தலையை தூக்கக்கூட இல்லை!

செந்தில் பாலாஜி தேர்தல் வழக்கு தள்ளுபடி

 நக்கீரன் :  தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக, முன்னாள்  அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி போட்டியிட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான செந்தில்குமாரை 2 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனையடுத்து இந்த வெற்றியை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்ற வாக்காளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?

May be an image of text that says "INDIANS MORE EIndian population 60,000in vear. Vilal Statisties gistrar-General, General, and published June 27th ( 1029) ylon on December 31st.1946. shipping population) 606,000 on December 31st. 1945. xceeded the N number of Kotte: Mr. emigrants 56.790. OCCASION FOR A TAMASHA" Maturata: Kotagala: and E (open" ராதா மனோகர் : சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள் 
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால்   எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது 
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள் 
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள்   ... வென்றார்கள். 
ப ஜீவா கூட இலங்கையில் சில காலம் இருந்து  பிரசாரம் செய்திருந்தார் 

வெள்ளி, 10 ஜூலை, 2026

ஈரான் மதவெறி அரசும் ஈரான் மக்களும்

 ராதா மனோகர் : நான் புரட்சியை பேசும்போது புரட்சியை பற்றிய நூல்கள் பற்றி பேசவில்லை 
நான் எனது நாட்டை இழந்தது பற்றி பேசுகிறேன் 
என் பெற்றோர் வாழ்நாள் முழுவதும் கட்டி எழுப்பிய வீடு வாசல் கல்வி எல்லாவற்றையும் பறிகொடுத்து நாடு நாடாக அலையும் நிலையை உண்டாக்கிய அந்த புரட்சி பற்றி பேசுகிறேன் 
ஈரான் என்ற ஒரு நல்ல நாட்டை சூறையாடிய இஸ்லாமிய  புரட்சி பற்றி பேசுகிறேன் 
உலகின் மிக பழமையான மனிதர்கள் உருவாக்கிய நாகரிக தேசத்தை உலகின் மோசமான ஒரு சிறைச்சாலையாக மாற்றிய இசுலாமிய புரட்சி பற்றி பேசுகிறேன் 
அது பெண்களின் சிறைச்சாலை 
அது மாற்று கருத்தாளர்களின் சித்திரவதை கூடம் 
அது அரச பயங்கரவாதத்தின் தலைமை செயலகம் 
நான் இங்கே கூறப்போவது உங்களில் சிலருக்கு சங்கடத்தை தரலாம் 
இந்த பையாஸ்க்கோப்பை ஏற்கனவே நான் பார்த்துள்ளேன் 
இது எப்படி முடியும் என்பதையும் நான் அறிவேன் 

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

 hindutamil.in  - ஆர்.பாலசரவணக்குமார்:  சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

நடிகன் விஜய்யை முதல்வர் ஸ்டாலின் ஏன் கைது செய்யவில்லை? வரலாற்று தவறு செய்துவிட்டார்?

 Rebel Ravi :   நான் ஸ்டாலின் மீது முதலில் மதிப்பே வைக்காதவன்.
கலைஞரின் கீழ் வளர்ந்தவன் என்பதால் ஸ்டாலின் எனக்கு ஆளுமையாய்த் தெரியவில்லை.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மதிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் கரூரில் அவர் வரலாற்றுப் பிழை செய்தார் என்று அன்றே சொன்னென்.
ஸ்டாலின் அப்படி மன்னிக்கக் கூடியவர் அல்ல.
அவரை பல ஆண்டுகளாய்ப் பார்த்து வருகிறேன்.
அவர் ஜெ பாணியைப் பின் பற்றியவர்.
ஆட்சிக்கு வந்த பின் பென் மீடியா அவரை ஒரு மென்மையான மனிதராக அடையாளம் காட்டியது.
அவரது இயல்பு அது அல்ல.
கரூரில் விஜயை ஏர்போர்ட்டுலேயே கைது செய்து சிறையில் அடைத்து இருக்க வேண்டும்.
அன்பில் அழுகை செந்தில் வருகை முதல்வர் நள்ளிரவு வருகை எல்லாம் அபத்தத்தின் உச்சம்.
கூட்டத்தை நடத்தியவனே ஓடுகிறான்.
நீங்கள் ஏன் போனீர்?
அது அரசு நிகழ்வில் நடந்த மரணம் அல்ல.
இவ்வளவு ஓவர் ரியாக்சன் ஏன்?
150 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 40 மரணம் பெரிய டிராஜடி அல்ல.
வரலாற்றுப் பிழை புரிந்து இன்று தமிழ்நாடு அழியக் காரணம் ஆகி விட்டார் ஸ்டாலின்.

தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி செல்வாக்கு செலுத்திய சர்ச்சைக்குரிய சாமியார்.

No photo description available.

 Paranji Sankar   : இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சர்ச்சைக்குரிய சாமியார்....
சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள்.
நீல நிற டொயோட்டா காரை அவர் தானே ஓட்டிச்செல்வார். இது மட்டுமின்றி, அவரிடம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா, 19 இருக்கைகள் கொண்ட டோர்னியர் மற்றும் மால்-5 விமானங்கள் உள்ளிட்ட பல தனியார் ஜெட் விமானங்கள் இருந்தன. பிரம்மச்சாரியே அவற்றையும் இயக்குவார்.
கோபம் வந்தால் எந்த அதிகாரியையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மற்றும் அமைச்சர்களின் துறைகளை கூட மாற்றக்கூடிய அளவிற்கு அவரது அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்தது.

எப்படி இருந்த தமிழ்நாடு ? கேவலம் இப்படி சிக்கிக்கொண்டதே!

 மு.ரா. விவேக் :  1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை 
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம் 
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம் 
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம் 
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம் 
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் 
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!

வியாழன், 9 ஜூலை, 2026

13 வயது ராஜஸ்தான் சிறுமி மரணம் - 32 குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் மக்கள் தூக்கு தண்டனை?

 ilakkiyainfo.com : ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: கடந்த ஜூன் 18-ஆம் தேதி, வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறிய சிறுமியை, ஓட்டுநர் கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார். 
ஜூன் 22-ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்படும் வரை, அந்த ஐந்து நாட்களுக்குள் நான்கு வெவ்வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு, சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

கீர்த்தனா : நெக்ஸ்ட் குவெஸ்ட்சன் :வாட் இஸ் யுவர் காஸ்ட்


 ராதா மனோகர்
: நெக்ஸ்ட் குவெஸ்ட்சன் :வாட் இஸ் யுவர் காஸ்ட்  
அந்த தற்குறி பெண் அமைச்சர் கீர்த்தனா  பள்ளிக்கூட குழந்தையிடம் உன் அப்பா என்ன வேலை செய்கிறார் என்று கேட்ட கேள்விக்குள் ஒரு திமிர் தொக்கி நிற்கிறது 
ஒரு சமூக அநீதி தொக்கி நிற்கிறது 
ஒரு குழந்தையின் குடும்ப பின்னணியை அறியும் நோக்கம்தான் அந்த கேள்வியின் உள்நோக்கம் 
அந்த குழந்தையின் தந்தை ஒரு வேளை ஒரு சில குறிப்பிட்ட ஜாதிகளே செய்யக்கூடிய தொழிலாக இருந்தால் அதை அறிவதுதான் இவரின் நோக்கம்! 
இதை இந்த மந்திரியால் மறுக்க முடியுமா? 
ஆங்கில அறிவை சோதித்து பார்க்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் 
காலகாலமாக தமிழர்களிடையே  ஊறிப்போயிருந்தா ஜாதிய மனோநிலையை வாந்தி எடுத்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா என்கின்ற தற்குறி. 

; ELLIS . R . DUNGAN - தமிழ் சினிமாவின் உண்மையான தந்தை எல்லிஸ் ஆர் டங்கன்

May be an image of one or more people and text that says "MEERA VEERAMAHADHIWRITEUP MAHADHI WRITEUP"

 Meera Mahadhi   ; ELLIS . R . DUNGAN - MGR நடிச்ச முதல் படம் ஒரு Hollywood படமா 🙄..சிங்கம் புலின்னு சண்ட போட்டு மாஸ் காட்டுன MGR சைக்கிள் ஓட்ட தெரியாம தெனருண கத
.தமிழ் சினிமா தலையெழுத்த மாத்துன இயக்குனர் யாருன்னு கேட்டா சில இயக்குனர்கள் உங்க mind ல வந்தா அவங்க எல்லாரையும் தூக்கி ஓரமா வச்சுடுங்க ஏன்னா இப்போ நான் சொல்லபோற real OG க்கு முன்னாடி இவங்க எல்லாம் கத்துக்குட்டிங்க…எல்லாரும் இவர் போட்ட வெதைல copy அடிச்சவங்க..
மேடை நாடகமா இருந்த நடிப்பு கலை சினிமா கேமரா கண்டுபுடிச்சு இந்தியாவுக்கு வந்து 1935 வாக்குல ஒரு 200 படங்கள் Release ஆச்சு..அதெல்லாம் என்ன படங்கள் தெரியுமா

செவ்வாய், 7 ஜூலை, 2026

பலஸ்தீன் காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு

 அதிரடி : காஸாவில் தங்களின் அரசைக் கலைப்பதாகவும், ஆட்சி அதிகாரங்களை ஐ.நா. ஆதரவு பெற்ற தேசிய நிா்வாகக் குழுவிடம் (என்சிஏஜி) ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு திங்கள்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து காஸா அரசு ஊடகத் துறை இயக்குநா் இஸ்மாயில் அல்-தவாப்தா கூறுகையில், ‘காஸாவின் அன்றாட நிா்வாகத்தைக் கவனிக்க தேவையான பணியாளா்கள் மட்டுமே தங்களின் பதவிகளில் நீடிப்பா். தேசிய நிா்வாகக் குழுவின்கீழ் பணியாற்ற அவா்கள் முழுத் தயாராக உள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

லெனின் 1918ல் கட்டாய பறிமுதலில் ஆரம்பித்து குலாக் முகாம்களையும் கேள்வியே கேட்காமல் சுட்டுக்கொல்லும் செக்கா போலிசையும்தான் உருவாக்கினார்

May be an image of map and text Chandru R :  பண்ணையடிமைகளுக்கு 1,இடம்பெயரும் உரிமை இல்லை ,நிலத்துடன் பிணைக்கபட்டவர்கள், 2உயிர்வாழ மட்டுமே உணவு, 3குடிசையை சுற்றி தோட்டம் இவைதான்  கூட்டுப்பண்ணை விவசாயிகளுக்கு ரசியாவிலும் சீனாவிலும் வழங்கப்பட்ட உரிமைகள்.
இதுதான்  நிலவுடமை உற்பத்திமுறையிலும் பண்ணையடிமைகளுக்கு  கொடுக்கபட்ட  உரிமைகள் ஆகும்.
நிலபிரபு சில நேரங்களில் கோபபட்டாலும் சிலநேரம் கருணை காட்டுவான் ,ஆனால் சீனாவிலும் ரசியாவிலும் எப்போதும் உளவு போலிசின் கண்காணிப்பில்  சுதந்திரமாக மூச்சுக்கூட விடமுடியாது விட்டால் மரணம் அல்லது குலாக் முகாம்,
ஆனால் ஒன்று மருத்துவமும் கல்வியும் இலவசமாக  கிடைத்தன மருத்துவம் இலவசமாகவே கொடுத்தாக வேண்டும் ஏனெனில் பணம் கொடுத்த அவர்களால் வாங்க முடியாது, நோய் தாக்கினால் உற்பத்தி தேங்கி கம்யூனிச எஜமான்கள் சொகுசாக வாழமுடியாது.

பிரபாகரன் ராஜீவ்காந்தியை படுகொலை செய்யச் சொன்ன ஒலிப்பதிவை நானே இந்தியவுக்கு வழங்கினேன் ! முன்னாள் கடற்புலி காகுஸ்தன் அரியரத்தினம்

 தேசம் நெட் - arulmolivarman : தேசம்குரல் யூரியூப் தளத்தில், இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா) தன்னுடைய போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.
 (இணையத்தின் கீழே இப்பதிவுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.) இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் காகுஸ்தன் அரியரத்தினம் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து தேசம்நெற்க்கு அனுப்பி வைத்துள்ளார். 

26 பேர் உயிரிழப்பு -நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு காரணம் போதைவஸ்து மாபியாக்கள்

 Jathu Edit : மலையக குரல் ; சிறைச்சாலைக்குள் இரகசியமாக இயங்கி வந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலமானதே இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாகும். 
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம்: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த கொடூர வன்முறைச் சம்பவங்களில், ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இக்கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் வாலிபர்கள், இளம்பெண்கள் பைக் ஓட்டி அராஜகம் - வாகன ஓட்டிகள் பீதி

 dinamalar.com  : தலைநகர் சென்னையில், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர். பைக் ரேஸில் பெண்களையும் ஊக்கப்படுத்தி, அட்டூழியத்திற்கு வழிவகுப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் சில நாட்களாக, விலை உயர்ந்த பைக்குகளில் வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகின்றனர்.

திமுக பாஜக கூட்டணியா? Progressive Alliance for State Autonomy

 KULITALAI MANO: Truth is a Pathless Land.
*Progressive Alliance for State Autonomy*
என்ற பெயரில் 
இவர்களுடன்
 MK.Stalin - Convenor 
Akhilesh Yadav
Supriya Sule
Uthav Thakrey
Tejaswi Yadav
TRS Rama Rao
Hemanth Shoren
Aravind Kejriwal
Umar Abdullah
 பாஜக விற்கு ஆதரவு தரலாம்
Umar Abdullah or Mufti Muhamad Saeed, whoever is willing to join
Step 1 - create a forum to discuss state autonomy under general common banner
Step 2 - conduct seminars in each of these states and invite those party leader in that state
Step 3 - Continue doing this for 6 - 9 months
Step 4 - Analyse the data and facts collected in those forums and prepare a common minimum program draft

திங்கள், 6 ஜூலை, 2026

இந்தியாவின் தண்ணீரை குடிக்க மறுத்த ஜப்பானிய பிரதமர்

 Maniam Shanmugam : இந்தியாவின்  தண்ணீரை  தவிர்த்த ஜப்பானிய பிரதமர்!
ஜப்பானிய பிரதமர் சனாய் டகாயிச்சி அண்மையில் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அந்த வருகையின் போது சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக சீனாவில் இருந்து வெளியாகும் 'குளொபல் ரைம்ஸ்' ஏடு சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்து ஏடு கூறியதாவது:
"இந்தியப் பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை புன்னகையுடன் வாழ்த்தி, அவரைத் தனது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். இருப்பினும், உள்ளூர் குழாய் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்ட பின்னர், ஜப்பானிய தூதுக்குழு அரசு விமானத்தில் பாட்டில் தண்ணீரை எடுத்து வந்ததாக ஜப்பானிய ஊடக நிறுவனம் ஒன்று பின்னர் செய்தி வெளியிட்டது. சில பார்வையாளர்களின் பார்வையில், இந்த முரண்பாடான நடத்தை இந்தியாவின் மீதான ஜப்பானின் உணர்வற்ற, முறையான மற்றும் அவமதிக்கும் மனப்பான்மையைக் காட்டுகிறது," என குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை 25 பேர் உயிரிழப்பு! என்ன நடக்கிறது?

 ilakkiyainfo.com :  நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

: "கீழடிக்குச் சவுக்கடி"கீழடி நாகரீக காலம் 2000 க்குக் கீழே இறக்கப்படும். தமிழ் மொழி, தமிழ் எழுத்துருவின் (தமிழி) காலமும் 2600 லிருந்து குறைக்கப்பட்டு விடும்.

 Siva Ilango  : "கீழடிக்குச் சவுக்கடி"
கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிறுவிடும் கீழடியின் தொல்லியல் ஆய்வறிக்கையை, இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. 
அவ்வறிக்கை "முழுமையற்றது" என்று தொல்லியல் துறையின் 'மதிப்பீட்டுக் குழு' கருத்துக் கூறியதை அடுத்து, 
அதில் திருத்தம் செய்யுமாறு, கீழடி, தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணனை ஒன்றியத் தொல்லியல் துறை வற்புறுத்தி வந்தது. 
அதற்குப் பதிலளித்த திரு அமர்நாத், "மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையில், ஏற்புடைய காரணங்களும் இல்லை; தகுந்த நியாயமும் இல்லை" என்று கூறியிருந்தார். 
இதனை அடுத்து இந்தியத் தொல்லியல் துறையின் ஐவர் கொண்ட உள்நிலைக் குழு, கீழடிக் களத்திற்கே சென்று மறு ஆய்வு செய்யும் முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர், ஒன்றிய அரசின் கருத்துப் படி, அறிவித்துள்ளார். 

கொக்கி குமார் ஆட்சியை பிடித்த கதை

 கொக்கி குமார் + திரிஷா அணில்களின் கவனத்திற்கு ! 
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் கொக்கி குமார்  வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார். 
அடுத்தாக கொக்கி குமாரின்  
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது. 
கொக்கி குமார்  - அமித்ஷா சந்திப்பு.*
கொக்கி குமாரின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின் 'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் கொக்கி குமார்  கட்சியில் சேர்ந்தார். 
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார். 
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். 
கொக்கி குமார்  கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம்  இருந்து. 
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார். 

திடீரென கைகோர்த்த திமுக-அதிமுக: தவெக அரசுக்கு குவியும் நெருக்கடி

"ராஜினாமா செய்ய வைப்போம்னு மிரட்டுறாங்க” : தவெக மீது திமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

 minnambalam.com  -  Kavi : அனிதா ராதாகிருஷ்ணனை போலவே எனக்கும் மிரட்டல் விடுக்கின்றனர் என்று தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது திமுக எம்எல்ஏ கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதல்வருமான விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ”எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்கள். கோவில்பட்டி திமுக எம்எல்ஏ கருணாநிதி 30 கோடி ரூபாய் செலவு செய்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சனி, 4 ஜூலை, 2026

ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர்கள் கொதித்தெழும்புகிறார்கள்!

May be an image of one or more people and people smiling

 Sharmila Seyyid :    இத்தனை ஆண்கள் கேள்வி எழுப்பியபோது கொந்தளித்தபோது றிழா மர்சூக் பதட்டமடையவில்லை. நிதானமாக இருந்தார். ஆனால் ஸர்மிளா ஸெய்யித் கேள்வி கேட்டதும் அவர் கொதித்தெழும்புகிறார். 
அப்போது , ஸர்மிளா ஸெய்யித்திற்கு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவள்; முர்தத் என்று பத்வா அளித்தவர். இவள் கொல்லப்படவேண்டியவள் என்றவர்.  
இப்போது, பெட்டை நாய்; சமூகத்தை நிர்வாணப்படுத்தியவள் என்ற பத்வாக்களை அளித்திருக்கிறார். நிர்வாணமானால் திரும்பவும் ஆடையை உடுத்திக்கொள்ள முடியும்.  குண்டு வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றால், போன உயிர்களைத் திரும்ப பெற முடியா.
ஆக மொத்தமாக அவர் பத்வா பெக்டரியை இன்னமும் மூடவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
ஆனால் என் கேள்விகள் அவர் என்னைத் தனிப்பட்ட ரீதியாக அச்சுறுத்தியதைப் பற்றியதோ, தற்போது என்னை நடத்தைக் கொலை செய்வதைப் பற்றியதோ அல்ல. 

எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!

 


ராதா மனோகர்
: தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வைரத்தூண்களுக்கு நிகரான தொண்டர்கள் கிடைத்தது கலைஞருக்குதான்!
இது எப்படி நிகழ்ந்தது என்பது மிக பெரிய ஆய்வுக்கு உரியது.
ஏற்றங்களும் இறக்கங்களும் கணக்கு வழக்கில்லாமல் கலைஞரை புரட்டி போட்ட அளவு வேறெந்த தலைவரையும் புரட்டி போடவில்லை. 
இவ்வளவு ஏற்ற இறக்கங்களை சந்தித்தும் ஏதோவொரு விடயம் கலைஞரின் அத்திவாரமாக நின்றிருக்கிறது.
எந்த புயலிலும் அடித்து கொண்டு போகாத ஒரு உறுதியான பண்பு கலைஞரை காப்பாற்றி கொண்டே வந்திருக்கிறது.
அந்த பண்புதான், இன்று கூட கலைஞர் என்று சொன்னதுமே கண்கலங்கும் தொண்டர்களை கலைஞருக்குக் பெற்று தந்திருக்கிறது.
மனிதர்கள் அடிப்படையில் அன்பானவர்கள்தான் 
சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கம் எல்லோருக்கும் உண்டு 

எந்தப் பையனும் நீ என்ன உடை உடுக்கவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு வகுப்பெடுக்க மாட்டான்.

May be an image of swimming and pool

   Sharmila Seyyid  : இந்தக் குழந்தைகள் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. 
இன்னும் பத்தாண்டுகளில் இவர்கள் பதினெட்டு வயதையடைவார்கள். 
இதே உடையில் இன்னும் மகிழ்ச்சியாக உட்கார்ந்து கதைபேசுவார்கள். 
நீச்சலடிப்பார்கள். எந்தப் பையனும் நீ என்ன உடை உடுக்கவேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று பெண்ணுக்கு வகுப்பெடுக்க மாட்டான். 
தொடை தெரிய உடை இருக்கிறதே அப்போ அவள் அந்த மாதிரிப் பெண் என்ற எண்ண ஓட்டம் கூட வராது. 
இந்தக் கலாசாரத்தில் ஆசியப் பண்பாட்டிலிருந்து வந்தவர்களுக்குப் பல ஒவ்வாமைகள் இருக்கலாம். இருப்பினும் என் இரு ஆண் பிள்ளைகளும் பெண்களை மதிக்கிறவர்களாக நீச்சலுடையில் கூட அவர்களோடு கண்ணியமாக அருகே அமர்ந்து உண்டு களிக்கும் 'மனிதர்களாக' வளர்வதைக் கண்டு உண்மையில் பெருமிதம் கொள்கிறேன். 

எ.வ.வேலு மருத்துவமனையில் அனுமதி.. விசாரணைக்கு ஆஜராகாமல் சிங்கப்பூர் பறந்தார்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு இன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகாத நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2021 முதல் 2026 வரை நடந்து முடிந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார் எ.வ.வேலு. தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில், சாலை அமைக்காமலேயே அரசின் பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 minnambalam.com - Kavi  : கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூரில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய்யை பற்றி அவதூறாக பேசி இருந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் நகர தமிழக வெற்றிக் கழக செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஒரு முன்னாள் அமைச்சர் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இப்படி பேசலாமா என்று கூறி அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெள்ளி, 3 ஜூலை, 2026

தலைமைக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக தொண்டர்கள்

ராதா மனோகர்  திமுகவின் உண்மையான ஆதரவாளர்கள்  இன்றைய அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்து பல கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கிறார்கள் 
இன்னும் சரியாக  சொல்லப்போனால் இவை  தமிழ்நாட்டு  நலன் சார்ந்தவை!
தமிழ்நாட்டு நலனும் திமுக நலனும் வேறு வேறு என்று கருதாத தொண்டர்கள் இவர்கள்.  
ஒரு காரசாரமான கருத்து மோதல்கள் நடக்கும் போது பலருக்கும் விருப்பம் இல்லாத விடயங்கள் வெளியே வருவது இயல்புதான் 
அதுதான் சரியான ஜனநாயக பொதுவெளியுமாகும் 
இப்படி வெளிப்படையாக கருத்து கூறுவோர்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவோர்கள் பெரும்பாலும் தலைமையை குளிர்விக்க வேண்டும் என்ற ஜால்ரா மனநிலை கொண்டவர்கள்தான்.
எல்லா அரசியல் கட்சிகளின் வீழ்ச்சிக்கும் ஜால்ராக்கங்களின் பங்கே பிரதானமாக இருந்தது என்பது வரலாறு.
இதில் கருத்து கூறும் எல்லோரும் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள்தான் 
திமுக ஆதரவாளர்கள்தான்!
இன்னும் சரியாக சொல்லப்போனால் இவர்கள் பலரும் நடுநிலைமையாளர்கள் கூட கிடையாது 
இவர்கள் திமுக ஆதரவாளர்கள் பெரும்பாலும் தன்னார்வலர்கள்

ஆர்.எஸ் பாரதி : கரூர் பெருந்துயரம்: ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி!

 minnambalam.com  -Pandeeswari Gurusamy  : கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

நிதியமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் - தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு - ஆஜராக உத்தரவு

 hindutamil.in - செ.ஞானபிரகாஷ் : இது தொடர்பான கொலை முயற்சி வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மரிய வில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து, அந்தத் தாக்குதல் சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை சேகரித்து, தேர்தலுக்குப் பிறகு குற்றப்பத்திரிகையை லாஸ்பேட்டை போலீஸார் தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

செந்தில் பாலாஜி Vs விஜய் . போலீஸ் தீவிர ‘வேட்டை’

 மின்னம்பலம் ”சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் ஆபரேஷனை செந்தில் பாலாஜி டீம் தொடங்கிச்சு.. தவெக எம்.எல்.ஏக்கள்கிட்ட பேசுச்சு.. ஆனா உளவுத்துறை காதுக்கு போனது ஆபரேஷன் ஸ்டாப்”ன்னு நாமதான் போன ஜூன் 23-ந் தேதியே சொன்னோம்..
அதோட பாலோ அஃப்தான் இந்த கேஸ் ஓபனா வெட்டவெளிச்சமாகிடுச்சு.. இந்த கேஸில இன்னைக்கு வரைக்கும் 9 பேரை அரெஸ்ட் செஞ்சுட்டாங்க.. இவங்க எல்லாமே திமுக மாஜி செந்திலபாலாஜிக்கு வலது இடதுமா இருந்த சோ கால்ட் ‘கரூர் கம்பெனி’ ஆட்கள்தானாம்..

திமுக தோத்தது திமுகவிற்கு தெரியும்.. -ஈழப்போராட்டத்தை காண்பித்துதான் இயக்கங்களை வளர்த்து கொண்டிருந்தோம் - தோழர் மனோஜ்

 ராதா மனோகர் : இன்றைய தமிழர்கள் பெரிதும் இனவாதிகள்தான் 
இதை கூறினால் பலருக்கும் கோபம் வரும் 
நாம்தானே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உலக மானுடவியல் பேசியவர்கள் என்று ஒரு பதில் சொல்வார்கள்.
தமிழர்களிடையே எவ்வளவு மோசமான நோயிருந்திருந்தால்,
 இப்படி ஒரு ஸ்ட்ராங்கான மருந்தை முன்னோர்கக்ள் கண்டு பிடித்திருப்பார்கள்,
என்று நாம் பதிலடி கொடுக்கலாம்?
நாம் தமிழர்கள் ரேசிஸ்ட் தான்!   
ஆனால் இதுதான் உண்மை .
திராவிட சித்தாந்தம் இனவாதத்திற்கு நேரெதிரான கோட்பாடு 
தமிழர்களின் இனவாத சிந்தனைக்கு தீனி போட்டு வளர்த்தது தமிழ் தேசியம் என்ற  முகமூடியை போட்டுகொண்டு வந்த வெறுப்பு அரசியல் வியாபாரிகள்தான்.
இன்று இந்த வெறுப்பு அரசியலின் பக்க விளைவுகள் மிக மோசமானது 
இவர்களின் முதல் குறி சுயசிந்தனை 
தமிழ் தேசியர்களிடம் இது சுத்தமாக இல்லை 
இவர்கள் ஒரு வெறுப்பு அரசியல் பஜனையே கோஷ்டிதான் 
அடுத்ததாக இந்த தமிழ் அரசியல் வியாபாரிகள் குறிவைத்தது  சுயமரியாதை கோட்பாட்டைதான் 

திமுகவின் தோல்வி பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதி அமைச்சில் இருந்து தூக்கியதில் இருந்துதான் தொடங்கியது

 ராதா மனோகர் :திமுகவை அதிகமாக அல்லது மிக மோசமாக விமர்சிக்கும் பலரும் ஏதோவொரு காலத்தில் திமுகவை ஆதரித்தவர்களாகவே இருப்பது வழக்கம் 
எம்ஜியாரின் பிரிவினைக்கு  முன்பிருந்தே  இந்த லிஸ்ட் வளர்ந்தது 
விலகி போனவர்கள் ஏதோவொரு சுயநலம் சார்ந்த விடயத்தின் காரணமாகவே விலகி போனார்கள் என்று கூறுவதும் வழக்கம்தான் 
அநேகமாக அதுவும்  உண்மைதான். 
ஆனாலும் கூட சில சமயங்களில்  விலகலுக்கு நியாயமான காரணங்களும் இருந்தது உண்டு
இன்னும் சிலரை திமுகவே கொஞ்சம் தள்ளி வைப்பதுவும் அல்லது ஒதுக்கி வைப்பதுவும் கூட எல்லா கட்சிகளிலும் நடக்கும் அரசியல் வித்தைகள்தான்.

வியாழன், 2 ஜூலை, 2026

உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம்

 உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் முழு வீச்சில் நடக்கிறது 
குறிப்பாக அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில்தான் இந்த இந்தியா கோ ஹோம் முழக்கம் மையம் கொண்டுள்ளது 
இதற்க்கு முழு பொறுப்பையும் வடஇந்தியர்கள்   குறிப்பாக சங்கிகள் பொறுப்பேற்க வேண்டும் 
இந்தியர்கள் உலகின் ஏனைய மனித குழுமங்களை மதிப்பதில்லை 
எப்போதும் பிறரை தன்னை விட அல்லது தான் சார்ந்த இனக்குழுமத்தை விட கீழானதாகவே கருதும் இந்த இந்திய பண்பு முழுவதுமாக வெளிப்பட்டு விட்டது 
முன்பு சிறிய அளவில் இருக்கும் போது கொஞ்சம் அடக்கி வாசித்த இந்த சங்கித்தனம் இப்போது அதிக அளவில் இருப்பதால் கொஞ்சம் குளிர் விட்டு போய் பொதுவெளியிலேயே தங்களின் பொது இடங்களில் குப்பை போடுதல் மற்றும் சிறுநீர் எச்சில் எக்சிபிஷன்களை அரங்கேற்றுகிறார்கள்.

இஸ்லாமிய தஜிகிஸ்தான் ஹிஜாப் தடை ! பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் banned

 95 வீதம் இஸ்லாமிய மக்களை கொண்ட தஜிகிஸ்தான் குடியரசு பள்ளிக்கூடங்கள் மருத்துவ மனைகள் மால்கள் போன்ற பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ளது 
மேலும் அந்த நாட்டு அதிபர் இமமோலி ராக்மோன் 1560 மசூதிகளை மூட உத்தரவு. அவைகள் படிக்கும் வசதி, கிளினிக், விளையாட்டு கற்கும் இடங்களாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார் . 
18 வயதுக்குள்ளான குழந்தைகள் மத பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க படமாட்டார்கள் என்றும் அறிவிக்க பட்டுள்ளது 
இந்த அறிவித்தலை மீறி செயல்படும் கட்டிடங்கள் பறிமுதல்  செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது 
அநேகமான சட்டவிரோத மசூதிகள் மக்களை  ISIS. பயங்கரவாத இயக்கத்தில் கொண்டு சேர்க்கின்றன என சொல்கிறார் அவர்.

புதன், 1 ஜூலை, 2026

ஸ்டாலினை சிக்கலில் மாட்டிவிட்ட செந்தில் பாலாஜி.. குறுமும் திமுக நிர்வாகிகள்!

 மின்னம்பலம் : போன ஜூன் 23-ந் தேதி நாம பேசுன, ”தவெக எம்.எல்.ஏக்களை தூக்கிய செந்தில் பாலாஜி” விவகாரம்தான் இப்ப தீ பிடிச்சு எரியுது.. இந்த கேஸில 3 பேரை அரெஸ்ட் செஞ்சிருக்கு போலீஸ். செந்தில் பாலாஜிக்கும் அவரோட தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பிருக்குன்னு போலீஸ் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கு..
இந்த அறிக்கையை அடுத்து பிரஸ் மீட்ல அமைச்சர் நிர்மல்குமார், மு.க.ஸ்டாலினை ரொம்பவே கடுமையாக பேசினார்..
இந்த சம்பவங்கள்தான் திமுகவில இப்ப பேசுபொருளா மட்டுமில்ல ‘குமுறலா’ இருக்குதுன்னு சொல்றாங்க.. அப்படி என்ன குமுறல்னு சில மா.செ.க்களை தொடர்பு கொண்டு பேசுனப்ப, “செந்தில் பாலாஜியோட ஒவ்வொரு ஆக்‌ஷனுமே நம்ம பாலிட்டிக்ஸ்ல கான்ட்ரவர்சியாகத்தான் இருக்குது..

ஜெர்மனியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு

 இளவேனில் : வடக்கு ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில்  இன்று (29) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 
ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சாந்தனு நன்றி- “நன்றி சொல்ல வார்த்தைகள் தேடி எழுதுகிறேன்...”

p> tamil.news18.com  : சாந்தனு, தந்தை பாக்யராஜ் மறைவுக்கு ஆறுதல் கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்
“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது” என பாக்யராஜ் மகன் சாந்தனு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மீது எங்கள் குடும்பத்திற்கு உள்ள மரியாதை உள்ளத்தின் உட்பகுதியிலும் உயர்வாய் உள்ளது” என பாக்யராஜ் மகன் சாந்தனு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

காலை வாரப்போகும் கம்யூனிஸ்டுகள்? தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் தோழர்கள்! என்னாச்சு?

  tamil.oneindia.com -Rajkumar R  ; வேலையைக் காட்டிய தோழர்கள்.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் கம்யூனிஸ்ட்கள்! என்னாச்சு?
சென்னை: தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தோழமைக் கட்சிகளுக்கான முதல் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் அழைப்பு விடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் மனித உரிமையாளர் மஹ்ரங் பலூச்சிற்கு ஆயுள் தண்டனை! குவெட்டா நீதிமன்றம் தீர்ப்பு

 பிபிசி தமிழ் : "பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் மஹ்ரங் பலூச்சிற்கு ஆயுள் தண்டனை! குவெட்டா நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் கொந்தளிப்பு!"
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த முக்கிய சமூக ஆர்வலரான மஹ்ரங் பலூச் (Mahrang Baloch) மற்றும் அவரது கூட்டாளி சிப்கத்துல்லா (Sibghatullah) ஆகிய இருவருக்கும், ஒரு துணை ராணுவ வீரரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து குவெட்டாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஜூலை 2024-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது, கடமையில் இருந்த துணை ராணுவ வீரர் ஷபீர் பலூச் (Shabbir Baloch) கொல்லப்பட்டார்.

செவ்வாய், 30 ஜூன், 2026

ரஷ்ய சீன புரட்சிகளின் தோல்விகளும் உண்மையும்! ,பதிவு 8

No photo description available.

 Chandru R    · : 1935 முதல் 1941 வரையிலான காலகட்டத்தில், சோவியத் ரசியாவில் (USSR) ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்றைய வடகொரியாவின் நிலையைப் போன்றே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடனும், மிகக் குறைந்த சுதந்திரத்துடனும் தான் இருந்தது.
சொல்லப்போனால், கம்யூனிசக் கொள்கைகளின்படி அது "தொழிலாளர்களின் அரசு" என்று அழைக்கப்பட்டாலும், நடைமுறையில் தொழிலாளர்கள் கடுமையான சட்டங்களால் ஒடுக்கப்பட்டனர்.
:1. வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமின்மை (இன்றைய வடகொரியா போல)1938 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொழிலாளர்களின் சுதந்திரத்தை முழுமையாகப் பறித்தன:வேலையை மாற்ற தடை:
 ஒரு தொழிலாளி தனது தொழிற்சாலையை விட்டுத் தன்னிச்சையாக விலகவோ அல்லது வேறு வேலைக்கு மாறவோ சட்டப்படி அனுமதியில்லை.

முதல்வர் விஜயும் கோக்கையின் கலாச்சாரமும்! முதல்வரே கோகைன் பயனாளியா ? சுசித்ரா பேட்டி

 Abilash Chandran : அமைச்சர் கில்லி சரத் கொக்கெய்ன் விவகாரம் தந்த நன்மை
தவெகவினர் போதை இல்லா தமிழகம் மராத்தான் நடத்தும்போது திமுக தரப்பு இந்த கொக்கெய்ன் காணொளியை வெளிவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 
தவறில்லை. அரசியலில் இப்படியான எதிர்ப்பிரச்சாரமும் வேண்டும். 
அதேநேரம் என்னுடைய பார்வையில் ஒரு அமைச்சர் கொக்கெய்ன் பயன்படுத்துவது பிரச்சினை அல்ல. முதல்வர் மீதே இத்தகைய குற்றச்சாட்டுகள் உண்டு. 
அதாவது அவர் முன்பு தன் வீட்டில் நடத்திய சினிமா பார்ட்டிகளில் இது வெள்ளமாக ஓடுவதாகச் சொல்வார்கள். 
அவர்தான் என்றில்லை இந்தியாவில் கணிசமான மேற்தட்டு இளைஞர்களின் விருந்துகளில் கொக்கெய்ன் உள்ளிட்ட போதை வஸ்துகள் புழங்குவது சாதாரணமாகி விட்டது. 

திங்கள், 29 ஜூன், 2026

தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

 tamil.oneindia.com - Vignesh Selvaraj   :  சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மனைவியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்திலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

உதயநிதி : தமிழகம் தற்போது பெரிய பேரிடரில் சிக்கிக் கொண்டுள்ளது!

 hindutamil.in  : தஞ்சாவூர்: தமிழகம் தற்​போது பெரிய பேரிடரில் சிக்​கிக் கொண்​டுள்​ளது என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் குற்​றம்​சாட்டி உள்​ளார்.
தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​தநாட்​டில் நேற்று நடை​பெற்ற திமுக நிர்​வாகி இல்​லத் திருமண விழா​வில் அவர் பேசி​யது: தமிழகத்​தில் அமைந்​துள்ள சோஃபா மாடல் ஆட்​சி​யின் போலி பிம்​பம் கடந்த ஒரு மாதத்​தில் நொறுங்கி உள்​ளது. ஒவ்​வொரு நாளும் இந்த ஆட்​சி​யின் அவலங்​களை மக்​கள் புரிந்து வரு​கின்​றனர். அரசின் தவறுகளை இளைஞர்​கள் தட்​டிக்​கேட்​கத் தொடங்​கி​யுள்​ளனர். தட்​டிக்​கேட்​கும் இளைஞர்​களை​யும், திமுக​வினரை​யும் கைது செய்​யும் வேலையை தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது. எனவே, இதுபோன்ற அடக்​கு​ முறை​களை எதிர்​கொள்ள திமுக​வுக்கு அதிக வழக்​கறிஞர்​கள் தேவைப்​படு​கின்​றனர்.

ஞாயிறு, 28 ஜூன், 2026

பிரபாகரன் ஊரான் வீட்டு பிள்ளைகளுக்கு சயனைட் கட்டிவிட்டு தன் பிள்ளைகளை டாக்டர்களாக்க கனவு கண்டார்!

 போர்க்காலங்களில் வன்னியில் இருந்து ஆங்கில இலக்கியம் படித்தது இரண்டே இரண்டு மாணவர்கள் மட்டுமே 
அந்த இரண்டு மாணவர்களின் பெயர்கள் 
துவாரகா பிரபாகரன் ( பிரபாகரனின் மகள்)
சார்ள்ஸ் பிரபாகரன் (பிரபாகரனின் மகன்) 

கிரிக்கெட் மாணவிகளை வன்புணர்ந்த கேரளா பயிற்சியாளருக்கு 99 ஆண்டுகள் சிறை

ilakkiyainfo.com  :கிரிக்கெட் பயிற்சி பெற வந்த இளம் வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பயிற்சியாளர் மனு (40) என்பவருக்குத் தொடர்ச்சியாகக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த மனு, கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு, பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில், திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் பொலிஸார் அவர் மீது 6 போக்சோ (POCSO) வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

சனி, 27 ஜூன், 2026

ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் அமெரிக்க தம்பதி கடத்தலும்

May be an image of one or more people and people smiling

 ராதா மனோகர் : ஈ பி ஆர் எல் எப் இயக்கம் 1984 மேமாதம் ஸ்டான்லி மெரி ஆலன் தம்பதிகளை கடத்தியது ஒரு பாரதூரமான விடயம்! 
இதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றிய எந்த புரிதலும் அற்று வெறும் விளம்பர ஸ்டன்டாகதான் இந்த அமெரிக்க தம்பதிகளை கடத்தி இருந்தார்கள் என்றெண்ணுகிறேன் 
விளம்பரம் என்னவோ கிடைத்தது ஆனால் அது ஒரு விடுதலைக்கானதாக இருக்கவில்லை ,
மாறாக ஒரு ஆட்டோ சங்கர் அல்லது சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்றவர்களுக்கு கிடைத்த விளம்பரத்திற்கு ஒப்பானதாகத்தான் இருந்தது 

திரு கே பாக்யராஜ் காலமானார் - தமிழ் திரையுலகின் இறுதி Feel good moive maker பீல் குட் மூவியே மேக்கர்

 

ராதா மனோகர் : திரு கே பாக்யராஜ்தான் தமிழ் திரையுலகின் இறுதி Feel good movie maker! 
இவரை திரைக்கதை மன்னன் என்று கூறுகிறார்கள் 
அது ஓரளவு சரிதான் 
ஆனால் அதைவிட இவரை எனக்கு பிடித்திருப்பது இவரின் feel good movie பீல் குட் மூவிகளுக்காகத்தான் 
எம்ஜியார் படங்களும் இந்த வகையில் ஓரளவு வரும் 
சமூக நியதிகளுக்குள் கொஞ்சம் கட்டுப்பட்டுதான் எம்ஜியார் படங்களின் பீல் குட் தன்மை இருக்கும் 
அந்த நியதிகளை உடைத்து எறிந்ததில் பாக்யராஜின் பங்கு  அதிகம்தான் 
இவரின் படங்களில் இடம் பெற்ற பல சிறு சிறு காட்சிகள் 
பல  சமூக அவலங்களை மிக எளிதாக எள்ளிநகை ஆடியிருக்கிறது 
உதாரணமாக தூறல் நின்று போச்சு படத்தில் பெண் பார்க்க வரும் காட்சியில் சுலோக்சனா பயந்து பயந்து நடுங்கும் போது  பாக்யராஜ் 
ஆளாளுக்கு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் இது பயத்தில டீயை கீயை கொட்டிடப்போகுது என்று கூறிக்கொண்டே அவரின் தட்டை வாங்கி தானே எல்லோருக்கும் கொடுப்பார் 

வெங்கட நாராயணா நியமனத்துக்கு ஆ.ராசா கடும் விமர்சனம்!- வாழ்க ஜனநாயக ‘ன்’ (ம்) :

 
minnambalam.com - Kavi  :  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இந்த சூழலில் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான இந்த பதவியை ஒரு பட நிறுவனத்தின் தயாரிப்பாளருக்கு எப்படி கொடுக்க முடியும், முதல்வர் விஜய்க்கு தெரிந்தவர் என்பதால் கொடுக்கப்பட்டதா என பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி, 26 ஜூன், 2026

கரூர் 41 கொலைகள் - ஜனநாயகன் தயாரிப்பாளர் தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநிதியாக நியமனம்!

 மின்னம்பலம் -  Kavi :   தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமைச்சருக்கு இணையான பதவியாகும்.
ஆளுநரின் உத்தரவுப்படி தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ”புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கான ‘சிறப்புப் பிரதிநிதி’ என்ற தற்காலிகப் பணியிடத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

எ.வ.வேலு பேட்டி : ”என் வீட்டிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை”

 மின்னம்பலம் - Kavi : திமுகவின் முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூன் 25) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் சோதனை நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

”திமுக- அதிமுக” திருமணம்! ஸ்டாலின் நடத்தி வாய்த்த தங்கமணி - மதிவாணன் வீட்டு திருமணம்

 மின்னம்பலம் - Mathi : திருவாரூரில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin), முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் இல்ல திருமணத்தை ஜூன் 25-ந் தேதி நடத்தி வைத்தார்.
உ.மதிவாணனின் இளைய மகன் கதிரவன்- மெளனிகா ஆகியோரது திருமணம் திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசிய தகவல் பகிரப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் இளம்தவில் வித்துவான் பிரசாந்த் சச்சின் தற்கொலை

 இலக்கியா : இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த கலைஞர் புதன்கிழமை (24) புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.
அதன்பின்னர் புதன்கிழமை (24) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

வியாழன், 25 ஜூன், 2026

வெனிசுலாவில் 7.5 ரிச்டர் நில நடுக்கம் இதுவரை 167 உயிரிழப்புகள் 971 பேர் காயம் ஏராளமான கட்டிடங்கள் தரை மட்டம்

ரஷிய சீன புரட்சிகளின் காட்டுமிராண்டித்தனம்! கொலைவெறியாட்டம் தவிர வேறில்லை

May be an image of text

 Chandru R : ரசிய சீனபுரட்சி தோல்வியும் உண்மையும் பதிவு 4
1. கட்டாய கூட்டுப்பண்ணையின் பின்னணி (1928)லெனின் கொண்டு வந்த 'புதிய பொருளாதாரக் கொள்கை'
 (NEP)-க்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின், 1928-ல் தனது முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
 இதன் முக்கிய நோக்கம்:தனிநபர் விவசாய நிலங்களை ஒன்றிணைத்து 'கோல்கோஸ்' (Kolkhoz - கூட்டுப்பண்ணைகள்) மற்றும் 'சோவ்கோஸ்' (Sovkhoz - அரசு பண்ணைகள்) ஆக மாற்றுவது.தானிய உற்பத்தியை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அதை ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் நகரங்களில் கனரகத் தொழில்துறையை (Industrialization) வளர்ப்பது

செந்தில் பாலாஜி : மின்துறை வெள்ளை அறிக்கையில் தவெக அரசு மறைத்த உண்மைகள்!

 hindutamil.in - தமிழினி  : சென்னை: தவெக அரசு வெளியிட்டுள்ள மின்துறை வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்வினையாற்றியுள்ளார். மேலும், ‘தவெக அரசு பல தகவல்களை மறைத்து, அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதியை, மின்வாரியத்துக்கு வழங்காமல் இருந்திருந்தால், நிச்சயமாக மின்வாரியம் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கும். சீரான மின்சாரத்துக்கு வித்திட்டவர் ஸ்டாலின்.

இவனை ஆதரிக்கும் பெண்களையும் ஆண்களையும் தப்பி தவறியும் நம்பி விடாதீர்கள்!

May be an image of one or more people, people smiling and text that says "んか付しチるた REPEENS cceBce 國 0림이 TAMILFUN rOK EXPRESS முதலமைச்சர் விஜய் தன் 26வருட அன்பு மனைவி மகன் மகளுடன்"
May be an image of ‎text that says "‎மனைவியை குழந்தையூமி மிழ் மறந்து திரிந்தவனை imgflip. com لبه வாழ்த்துதல் ஆகாதடி மன்னிக்க கூடாதடி‎"‎

 ராதா மனோகர் : சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும்  நேர்மையற்ற மனிதன்!
41 அப்பாவிகளின் உயிரிழப்புக்கு காரணமானவன் 
மனைவி குழந்தைகளை துரத்தி விட்டவன் 
மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல்,
கூடவே வேறு பல பெண்களோடு தொடர்புகளை 
இன்று வரை தொடர்பவன்  
இவனின் குடும்ப ஒழுக்கம் பற்றி கேட்டால்,
ஒருவரின் சொந்த வாழ்க்கையை நாம் விமர்சிக்க கூடாது என்று வகுப்பு எடுக்கிறார்கள்  
என் ரசிகர்களிடமே பிளாக் டிக்கெட் வித்து சம்பாதித்தவன் என்று மேடையில் பெருமையாக வேறு கூறுகிறான் 
 ஒழுக்கமோ நேர்மையோ குடும்ப பாசமோ கொஞ்சம் கூட இல்லாத ஒருவனை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன சொல்வது ?
இவனின் வளர்ந்த பிள்ளைகளின் மனோநிலையை கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தானா?

போக்ஸோ வழக்கில் சிக்கிய அமைச்சர் விஸ்வநாதன்.. மாணவிகளின் காலில் கை! உளவுத்துறை 2 வீடியோ ஆதாரம்! கிரிஸ் சோடங்கர் ஆக்‌ஷன்

 tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சூழலில், ஒரு புது சர்ச்சை குபீரென கிளம்பி டெல்லி மேலிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிராக, அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்தே புகார்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளனவாம்.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

மு க ஸ்டாலின் விரைவில் சட்டமன்றத்துக்குள் வருவார் : முதல்வர் விஜய்க்கு கே.என்.நேரு பதில்

 மின்னம்பலம் -  Kavi ;விரைவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் வருவார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய், ஆளுநர் உரைக்கு பதிலுரை ஆற்றினார்.  அப்போது, ’உங்க அப்பாவை காணம்”  என கூறி குட்டி ஸ்டோரி ஒன்று சொன்னார். இது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தந்தையும்,  முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்தது. 
அதோடு 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர் காணாமல் போய்விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். 

புதன், 24 ஜூன், 2026

41 deaths கொலைகாரனை (vijay) கைது செய்ய தவறிய முதல்வர் ஸ்டாலின்

May be an image of text that says "SUN NEWS NE NEWS சிறப்பாக செயல்பட்டாலும். "அரசியல் என்பது மிகவும் இரக்கமற்றது. தமிழ்நாட்டில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. முதலீடுகளை ஈர்ப்பதில் எங்களுடன் போட்டிபோட்டது. ஆனாலும் கடந்த தேர்தலில் திமுக தோல்வியடைந்தது நாம் நினைப்பதை விடவும் அரசியல் சிக்கலானது' -நாரா லோகேஷ், ஆந்திர அமைச்சர் DOOSUKMEWSTAMIL SUNNEWS 24JUN2026 2026 sunnewslive.in"

 Rebel Ravi : திமுக தோல்விக்கு விதை போட்ட நிகழ்வு.
அரசு அரசாகச் செயல் பட வேண்டும்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் தூக்கி உள்ளே வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, எந்தத் தலைவரும் அவர் கட்சித் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்கள் என்று மகாத்மா போல் பேசியது முதல் தவறு.
நள்ளிரவில் கரூர் போனது, செ பா போனது, அன்பில் அழுதது.. இதெல்லாம் அடுத்தடுத்த தவறுகள். தவெக  நிர்வாகி பத்து பேரை உடனே கைது செய்து, 

May be an image of ‎text that says "‎23 JUN 2026 SUN 41 DEATHS கொலைகாரனை EWS கைது செய்ய தவறியது நீங்கள்! معن TAMILNADU & DMKAINS PAYING THE PRICE கைது செய்ய முயற்சி GEN z DMK ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த அன்பானந்தம் என்பவரை நள்ளிரவில் கைது செய்ய முயன்ற போலீஸ். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் போலீசார் திரும்பியுள்ளனர். ராயக்கோட்டை போடம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அன்பானந்தத்தை அனுப்பி வையுங்கள் எனக் கூறி பெற்றோரிடம் வாக்குவாதம். எதிர்ப்பையும் மீறி வீட்டை சோதனையிட்டுள்ளர். imgfill SUSHENSTINE SUKEINS ® umratfAvie‎"‎

அந்த நிகழ்வை ஒரு கட்சியின் அலட்சியப் போக்காய்க் கருதி.. கருவிலேயே அழித்திருக்க வேண்டும். 
கைது செய்தால் தேர்தல் வெற்றி பாதிக்கும் ஆட்சி போய் விடும் என் அஞ்சிய ஸ்டாலின் அவர்களே…இப்ப மட்டும் என்ன வாழுது?
பில்லக்கா பையன  பெரியாளாக்கி அவனிடமே தோற்றீரே இது எவ்வளவு அசிங்கம்?
Devamathi Venkatesh 
அவர் இயல்பு அது தன் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தலைவர்கள் தவறான செயல்களில் ஈடுபட்ட போது காட்டிய கரார் தனத்தை எதிரி கட்சி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்ட தற்குறி குடிகார ஜோம்பிஸ் தலைவன் விர்ச்சுவல் வாரியார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் தான் நமக்கு இந்த நிலைமை 
கட்சிக்காரர்களுக்கு பவர் இல்லை என்றால் கட்சிக்கு எப்படி பவர் இருக்கும் திமுகவின் வின் தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒடுக்கப்பட்டது அதிகம் .நம் கூட்டணியில் இருந்த கட்டப் பஞ்சாயத்து கட்சிகளூக்கு இருந்த சுதந்திரம் மரியாதை அதிமுக பாஜக வுக்கு இருந்த மரியாதை கூட அரசு அலுவலகங்கள் காவல் நிலையத்தில் நம் கட்சிக்காரர்களுக்கு இல்லை. இந்த வீழ்ச்சிக்கு  இதுவும் ஒரு காரணம்

செவ்வாய், 23 ஜூன், 2026

த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் விஜய்


 மின்னம்பலம்  கவி : முதல்வர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய் முதல்வரான பிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேசமயம் முதல்வரின் தோழியான த்ரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக விஜய்யுடன் எடுத்த புகைப்படத்துடன் எதாவது ஒரு கேப்ஷன் போட்டு வாழ்த்து பதிவு வெளியிடுவார்.
ஆனால் இந்த முறை ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். என்ன சொல்ல போகிறாரோ என்ற பதற்றமும் அவரது கட்சியினரிடம் இருந்தது.

டி.ஆர்.பி.ராஜா : “தமிழகத்தின் முதலீடுகளை சீர்குலைக்கிறது ரீல்ஸ் கோஷ்டி அரசு”


  hindutamil.in  - வெற்றி மயிலோன்  : சென்னை: “தமிழகத்தின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என தமிழக முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம்.
தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி வீதி விபத்துக்கள்! தொடர் உயிரிழப்புக்கள்

 Murukaiya Thamilselvan :  கிளிநொச்சி வீதிகளில் மலியும் மரணங்கள்: சமூக வலைத்தளப் போராளிகளாகவே இருந்துவிடப் போகின்றோமா?
மற்றுமொரு வீதி விபத்து, மற்றும் ஒரு பெறுமதிமிக்க உயிர் பலி! கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த கல்வியளாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான பெருமாள் கணேசன் அவர்களை நாம் இழந்து நிற்கின்றோம். அதுவும் எங்கே?
 கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு நேர் முன்பாக உள்ள பாதசாரி கடவையில்! வீதியைக் கடக்க முயன்றவரை, அதிவேகமாக வந்த ஆடம்பர உந்துருளி மோதி இழுத்துச் சென்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரது மூச்சு அடங்கியிருக்கிறது. 

அம்மோனியா கசிவு.. பலி எண்ணிக்கை 8.. சிகிச்சையில் 70 பேர்- முழு விவரம்!

 மின்னம்பலம் - Mathi : திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு (Ammonia Gas Leak) விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட விரிவான அறிக்கை:
கடந்த ஜூன் 21-ம் தேதி மாலை, வழக்கமான தொழிற்சாலை செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அங்குள்ள குளிரூட்டல் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வெளியேறிய நச்சு வாயு தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியதால், பணியில் இருந்த தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.

துரைமுருகன் பிடிவாதம் கோமாவில் இருந்தாலும் நான்தான் பொதுச்செயலாளர் ..

 tamil.oneindia.com/n  :ம்ஹும் முடியவே முடியாது.. விட்டுக் கொடுக்காத துரைமுருகன்! மாற்றி யோசித்த ஸ்டாலின்! திகுதிகு திமுக!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் பணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின், தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகனைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உடல்நிலை காரணமாக அவர் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சில தகவல் வெளியான நிலையில், "பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்" என்ற உறுதியான நிலைப்பாட்டில் துரைமுருகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள், 22 ஜூன், 2026

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம் - திசை திருப்பும் CPIM சண்முகமும் அன்புமணியும்

 புகச்சோவ் புகச்சோவ் :  மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவர்கள் கொடுத்த திருத்தத்தை ஏதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதை போல சித்தரித்து CPIM சண்முகம் அவர்களும், அன்புமணியும் அறிக்கையும், மேடையும் போட்டு பேசியுள்ளனர். 
இவர்கள் பரப்பியதோடு ஒரு விவசாய சங்கத்தையும் உதயநிதி அவர்கள் பெரிய குற்றத்தை செய்ததை போல அறிக்கை விட வைத்துள்ளனர். 
இதை உடனடியாக expose செய்ய வேண்டும் என்று 4 மணி நேரம் ஆய்வு செய்தேன். 
பலரிடம் பேசி குறிப்புகளை எடுத்தேன். அதில் உதயநிதி அவர்கள் சொன்ன திருத்தம் தான் சரி. 
அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்று தெரிய வந்தது. அதை விரிவாக எழுதியுள்ளேன். அவசியம் படியுங்கள் பரப்புங்கள். 
தோழர் சண்முகம் exposed 

காருக்குள் சடலம்: திடுக்கிடும் பல தகவல்கள் அம்பலம்

 ilakkiyainfo.com : கண்டி தெல்தெனியவில் காருக்குள் இருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. 
 பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. 
உயிரிழந்த பெண் மருத்துவருடன் வாழ்ந்து வந்த நபர், அவரது சடலத்தைக் காரின் உள்ளேயே வைத்துக்கொண்டு, எவ்விதப் பதற்றமும் இன்றித் தனது வீட்டிற்குச் சென்றுள்ள அதிர்ச்சித் தகவல் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

திமுக தோல்விக்கு அழகிரியும் ஒரு காரணமா? ஒரு திமுக தொண்டனின் ஆதங்கம்

 Kalar Kasi Viswanathan :  2006 இல் இருந்து 2011 வரை திமுக ஆளுங்கட்சி கலைஞர் முதலமைச்சர்.
 2011 மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.
 கலைஞர் அவர்களுக்கும் வயது ஆகிவிட்டது.
 இந்த நேரத்தில் மதுரையில், 2014 ல், அண்ணன் அழகிரியார் அவர்களை ஏதோ ஒரு பொய் காரணத்திற்கு கட்சியை விட்டு நீக்கினார்கள்.
 2016 தேர்தலில் திமுக மீண்டும் தோல்வி..
 2017ல் கலைஞர் மறைந்தார்.
 அதன் பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி.
 2021 இல் திமுக ஆட்சி மலர்ந்தது 

ஞாயிறு, 21 ஜூன், 2026

புலிகளும் வைகோவும் ஒருவர் முதுகில் ஒருவர் குத்திய துரோக வரலாறு


 ராதா மனோகர் :
புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! 
வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை..
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்.
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி.
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார்.
அது ஓரளவு பயனளித்தது   ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை. அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு.. பாவம்.
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்.

விஸ்வானந்ததேவன்- பாசிஸ புலிகளால் கடலில் வைத்து கொல்லப்பட்ட நேர்மையான இடதுசாரி விடுதலை போராளி!

May be an illustration of text

 நல்லையா தயாபரன் : "வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்"
பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986  திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு,  முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன்.  

சென்னை 7 பேர் உயிரை குடித்த அம்மோனியா.. திருவள்ளூர் ஆலைக்கு சீல்

  Vignesh Selvaraj -  Oneindia Tamil :  திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை கன்னிகைப்பேர் பகுதியில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் அம்மோனியா வாயுக் கசிவு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. 
இந்த கோர விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 
70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அந்த ஆலை இயங்குவதற்குத் தமிழக அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. 

போர்துகீசியரிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்தது உயிர் பிழைத்த நல்லூர் அரசன் சங்கிலியன்

No photo description available.
Queen Catherine

 ராதா மனோகர் : 1544  ஆம் ஆண்டு மன்னாரில் சங்கிலியனும் அவனின் குண்டர்  படையும் 600 க்கு மேற்பட்ட தமிழ் கிறிஸ்தவர்களை சகோதர படுகொலை சம்பவம் போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பனியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருந்தது The massacre of about 600 to 700 Christians in Mannar in 1544 by Cankili
போர்த்துகீசிய அரசி  Queen Catherine இந்த படுபாதக செயலுக்கு காரணமான சங்கிலியனையும் அவன் பரிவாரங்களையும் கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் 

No photo description available.
Viceroy Dom Constantino de Bragança

இந்த பணியை நிறைவேற்றுவதற்கு போர்த்துகீசிய வைஸ்ரோய்   Viceroy Dom Constantino de Bragança  தலைமையில்  from Goa to Jaffna with 20 galleys, 10 galiots, and 70 ships. The forces consisted of 1,200 soldiers; September 1560 கோவாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர் 
இவர்களை (யாழ்ப்பாணம் )கொழும்பு துறையில் எதிர்கொண்ட சங்கிலியன் படைகள்  சண்டையில் தோற்று கோப்பாய் பற்றை காடுகளை நோக்கி ஓடி தப்பினார்கள்.
அங்கும் போர்த்துகீசிய படைகள் சென்று அவர்களின் இருப்பிடங்களை தீவைத்து கொளுத்தியது 
கோப்பையிலும் பாதுகாப்பு கேள்வி குறியானதும் சங்கிலியன் படை வன்னி காட்டுக்கு தப்பி ஓடிச்சென்றது.
பின்பு அங்கிருந்து கொண்டே போர்த்துகீசிய வைஸ்ரோய்க்கு ஒரு சமாதான தூது அனுப்பினான் 
கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவனின் குணம் 
இவனின் தூதை போர்துகீசிய அரசி ஏற்றுக்கொள்ளவில்லை 
ஆனால் வைஸ்ரோய் வேறு விதமாக கணக்கு போட்டார் 
இவனை கொல்வதிலும் பார்க்க இவனை கொண்டு பல காரியங்களை செய்து கொள்ளலாம் என்று கருதினார். 

சனி, 20 ஜூன், 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் முழு விவரம்!

 Kalaignar Seithigal - Manoj : தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தவெக ஆட்சியமைத்த பின்பு சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. தினமும் விடியும் பொழுது குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெறாதா நாள் இருக்குமா? என்ற பயமே பொதுமக்களிடம் நிலவுகிறது. அந்தளவுக்கு தறிகெட்டுப் போய் உள்ளது மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை.

ப.சிதம்பரம் -திருமா சந்திப்பின் பின்னணி - கூட்டணியை வலுப்படுத்த திட்டம்?'

 நக்கீரன் : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகான முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவருடைய அலுவலகத்தில் வைத்து சந்திப்பு மேற்கொண்டார். 

லெனின் 2,000 முதல் 4,000 வரையிலான பாட்டாளிகளை சுட்டு படுகொலை செய்தார் - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாம்

May be an image of text

 Chandru R  :  பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் பாட்டாளிகளையே படுகொலை செய்த லெனின்.
என்னாலும் நம்ப முடியவில்லைதான்  ஆனால் உண்மை சுடுகிறதே.
அஸ்திரகான் ஒடுக்குமுறை (Astrakhan Strikes - 1919): மார்ச் 1919-ல் அஸ்திரகான் நகரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் உணவு வேண்டிப் போராடினர்.
 லெனினின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான செர்ஜி கிரோவ் தலைமையிலான படைகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2,000 முதல் 4,000 வரையிலான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது வோல்கா நதியில் மூழ்கடிக்கப்பட்டனர்.

வெள்ளி, 19 ஜூன், 2026

அம்பாறை பெண் வைத்தியர் இறப்பு - காதலனை தேடும் போலீஸ் - காதலனைத் தேடும் போலீஸ் - ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் கடன்

ilakkiyainfo.com  : அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) ஒருவர், தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றின் உள்ளே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை வியாழக்கிழமை (18) நடைபெற்றது. அதில், அவரது மரணம் குறித்து 'திறந்த தீர்ப்பு' (Open Verdict) வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தவேக பாஜகவின் பீ டீம்? ஆளுநர் உரையில் அம்பலமான கள்ளக்கூட்டு

 tamil.oneindia.com  - Velmurugan P : சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வுகள் எல்லாமே சாதாரணமாக கடந்து போகக்கூடிய நிகழ்வு கிடையாது. ஏனெனில் வழக்கமாக திமுக ஆட்சியில் ஆளுநர் ரவி இருக்கும் போது சட்டசபை கூடினாலோ போர்க்களம் போல் பிரச்சனை வெடிக்கும்.. தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் வாசிப்பார்கள். தேசிய கீதம் வாசிக்க சொல்வார் ஆளுநர். ஆனால் அதனை ஏற்க சபாநாயகர் மறுப்பார். இதனால் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்வார். அதேபோல் அப்படியே வாசித்தாலும், பல வார்த்தைகளை பேச மாட்டார். ஆனால் இன்றுதவெக அரசின் நடவடிக்கையும், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரின் நடவடிக்கையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று(ஜூன் 18) தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் இன்று (ஜூன் 18) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான,

புதன், 17 ஜூன், 2026

தத்தளிக்கும் விஜயபாஸ்கர்.. கதவுகளை மூடும் திமுக, தவெக? கைமாறும் டிவி சேனல்கள்

 மின்னம்பலம் : வாங்க ப்ரோ.. அங்கிட்டும் இங்கிட்டும் தத்தித் தாவுற கேரக்டர் யாராம்?
வேற யாரு.. விராலிமலை விஜயபாஸ்கர்தான்.. அவரோட ஒவ்வொரு மூவ் பத்தியும் நாம டிஜிட்டல் திண்ணையில பேசிகிட்டு இருக்கிறோம்..
விஜயபாஸ்கர் நேத்து திடீர்னு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்திச்சு தான் கைப்பட எழுதுன ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரு.. சபாநாயகரும் அதை ஏத்துகிட்டாரு..
அதோட நிற்காத விஜயபாஸ்கர், ”தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

துரை வைகோ : “தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.

  hindutamil.in - க.ராதாகிருஷ்ணன்:  கரூர்: “தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) நடந்த கிருஷ்ணராயபரம் மதிமுக பேரூர் செயலாளர் வெங்கடாசலம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

1995 இல் யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பிய சந்திரிகா பண்டாரநாயக்க

May be an image of one or more people

 ராதா மனோகர் : 1995 இல் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெரும் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று கொண்டே இருந்தது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முடிவோடு யாழ்ப்பாணத்தை பல முனைகளிலும் முற்றுகை இட்டு நகர்ந்த ராணுவம் பல இழப்புக்களின் மத்தியில் 1995 ஆக்டொபர் மாதம் யாழ்ப்பாணத்தை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது
தென்னிலங்கையிலும் பலவிதமான பங்கரவாத செயல்கள் இடம்பெற்ற வண்ணமே இருந்தது 
எளிதில் விளங்க வைக்க முடியாத அளவு மிக பயங்கரமான சூழல் எங்கும் நிலவியது.
சந்திரிகா அம்மையாரின் நிலைமையும் படுமோசமாக இருந்தது 
ஆளும் கட்சியிலும் பலர் அதிருப்தியோடு இருந்தார்கள் 
நாட்டின் நிச்சயமற்ற தன்மையும் பாதுகாப்பு தளம்பல்களும் சேர்ந்து பல அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஆட்டி படைத்தன.

மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக

 tamil.oneindia.com - Velmurugan P : சென்னை: அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் "வெள்ளை அறிக்கை" என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் . தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது.

2 மாதங்களுக்கு பின்னர் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்: ரூ.10 கோடி மதிப்புள்ள மீன்களை அள்ளி வந்தனர்

 hindutamil.in -எஸ்.முஹம்மது ராஃபி :  ராமேசுவரம்: மீன்​பிடித் தடைக்​காலம் முடிந்து கடலுக்​குச் சென்ற ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்​கள் அதிக மீன்​கள் கிடைத்​த​தால் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.
தமிழகத்​தில் மீன்பிடி தடைக்​காலம் ஜுன் 14 அன்​றுடன் முடிவடைந்​த​ நிலையில் விசைப்​படகு மீனவர்​கள் தற்​போது கடலுக்​குச் சென்று வரு​கின்​றனர். ஞாயிற்​றுக்கிழமை மாலை​யி​லிருந்து சுமார் 700-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் சுமார் 3,500 மீனவர்​கள் ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து மீன் பிடிக்​கச் சென்​றனர்.