வியாழன், 27 ஆகஸ்ட், 2026

தலித்துகளும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் திமுகவின் முதுகில் குத்தினார்களா

No photo description available.
Kandasamy Mariyappan : அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்களி்ல் இருந்து வழங்கிய இசுலாமியர்களுக்கான 3.5% இட உரிமையை ரத்து செய்திட வேண்டும்.
ஏறத்தாழ 65% மக்கள் உள்ள வேளாளர்கள், உடையார்கள், அகமுடையர்கள், மறவர்கள், கோணார்கள், இடையர்கள், வலையர்கள்/ முத்திரையர்கள், நாடார்கள், நாயுடுகள், ஆசாரிகள், வண்ணார்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு 26.5% இட உரிமையை வழங்கி விட்டு...
4.5% உள்ள இசுலாமியர்களுக்கு 3.5% இட உரிமை வழங்கியது கலைஞர் திமுக.!
மேலும் CAA, வக்ஃப் மசோதா, முத்தலாக் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை தீவிரமாக எதிர்ப்பதை, திமுக கைவிட வேண்டும்.!
எப்போதுமே, 40% இசுலாமியர்கள் மட்டும் திமுகவை ஆதரித்து வந்தனர்.!

புதன், 26 ஆகஸ்ட், 2026

ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி - வாலாசா வல்லவன்.

 வாலாசா வல்லவன்  :   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
 இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.
 எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்து விட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன். 

திமுகவில் அதிகார பதவிகளை கைப்பற்ற உதயநிதி - கனிமொழி ஆதரவாளர்கள் போட்டி

Latest Tamil News

 தினமலர் :திமுகவில் பதவி பறிபோகும் நிலையில் உள்ள, மாவட்ட செயலாளர்கள் சிலர், தலைமை நிலையச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர். பதவிகளை கைப்பற்ற, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தவும், இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும், திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமையகமான அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்ட எண்ணிக்கை 77ல் இருந்து, 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்களுக்கான, அதிகபட்ச வயது 70 எனவும், மூன்று முறை மட்டுமே, அப்பதவியில் இருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூரில் சாவு மணி அடித்த தவேக அரசு!

 Muralidharan Pb : சென்னைக்கு எதற்காக இரண்டாவது விமான நிலையம் தேவை?
ஏறத்தாழ 2 கோடி மக்கள் புழங்கும் மிகப்பெரிய நகரமான சென்னை. விமான நிலையம் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் மூலம் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஏனைய நகரங்கள் முதல் சிற்றூர்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
2000 க்கு பிறகு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் வருவாய் மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

திமுகவின் 110 மாவட்டங்கள்- பொறுப்பாளர்கள் அறிவிப்பு? கனிமொழி எதிர்பார்க்கும் ‘அந்த’ பதவி-

  minnambalam.com  :  திமுகவோட செயற்குழு ஆகஸ்ட் 22-ந் தேதி நடந்துச்சு இல்லையா.. அதுலதான், ”திமுக 110 மாவட்டங்களாக பிரிக்கப்படும்; 2 தொகுதிக்கு 1 மா.செ. நியமனம்; தேவைப்படுகிற இடத்தில் 3 தொகுதிகளும் இருக்கும்.. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல்தான் நடத்தப்படும். மா.செ.க்கள் உட்பட மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வயது வரம்புகள்”ன்னு அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச்சு..

பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி.. பிரியாணி போல் வேக வைத்து! கதிகலங்கிப் போன கூடுவாஞ்சேரி!

tamil.oneindia.com :சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூடுவாஞ்சேரியில் கொலை செய்யப்பட்ட 45 வயது பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 அப்பெண்ணை இளைஞர், காதலி சேர்ந்து கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பெண்ணைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி, அதன் ஒரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் அனுப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழாராய்ச்சி மன்றத்தை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!

May be a doodle of monument
May be an image of one or more people, people smiling and text that says "PUNITHAM THERUCHELVAM gflip.com gflip com"

 ராதா மனோகர் :உலக தமிழாராய்ச்சி மன்றத்தை இலங்கை தமிழரசு கட்சியின் கிளை நிறுவனமாக மாற்றிய கதை!
இதற்காக அமைச்சர் திருச்செல்வத்தின் மனைவி திருமதி.புனிதம் திருச்செல்வம் தந்திரமாக  வண தனிநாயகம் அடிகளின் இடத்தை கைப்பற்றினர் 
 தமிழரசு கட்சியினர் நான்காவது உலக  தமிழாராய்ச்சி மாநாட்டை தமிழரசு கட்சி மாநாடாகவே உருமாற்றினார்கள்.
முழு தமிழரசு கட்சியும் அதன் தொண்டர் குண்டர் படைகளும் புனிதம் திருச்செல்வத்தின் ஏவல் பேய்களாக செயலாற்றினார்கள். ( இந்த தொண்டர் குண்டர்  கூட்டத்தில் சிவகுமாரும் ஒருவர்) 
திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின்  சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

PTR : பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Dr PTR.Palanivel Thiaga Rajan - Former Minister for Information Technology & Digital Services, Tamil Nadu | Home

 hindutamil.in : தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறு​வனங்​கள் சரி​யான தலை​மைப் பண்பு இல்​லாத​தால் நஷ்டத்​தில் இயங்​கு​கின்றன என முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார்.
தஞ்​சாவூர் தொழில், வர்த்தக சங்​கம் சார்​பில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற சிறப்பு கருத்​தரங்​கில் பங்​கேற்​று, “வணி​கத்​தில் நெருக்​கடி​யான சூழலில் தலை​மைப்​பண்​பு” என்​கிற தலைப்​பில் முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் பேசி​யது: சிஏஜி தணிக்கை அறிக்​கை​யில் தமிழக அரசின் நிறு​வனங்​களுக்​கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்​றும், சராசரி மூலதனத்​தின் மீதான வரு​வாய் 0.8 சதவீதம் மட்​டுமே என்​றும் கூறப்​பட்​டுள்​ளது.

திமுக மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?

 மின்னம்பலம் - மதி :திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.

சனி, 22 ஆகஸ்ட், 2026

பிரகாஷ் ராஜ் : 3,000 ஆண்டுகளாக இந்தியா மாதிரி அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை!

 tamil.oneindia.com - Nantha Kumar R  : சென்னை: ''அரசியலமைப்பை திருத்தணும்னு இருக்காங்களே திருட்டு பசங்க.. இவங்க மூன்றாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். இந்த திருட்டு பசங்க சொல்வாங்க எங்களுடைய நாடு அற்புதமாக இருந்தது. பொன் இருந்தது என்று பொய்யாக சொல்வார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் வருடங்களாக இந்தியா மாதிரியான அசிங்கமான கலாசாரம் உலகத்திலேயே இருந்தது இல்லை. அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார்'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

இலங்கை: யாழ் கோவில் திருவிழாவில் விபரீதம்- 385 பேருக்கு கண் பாதிப்பு

 மின்னம்பலம் - மதி :இலங்கை யாழ்ப்பாணத்தில் ( Jaffna) கோவில் திருவிழாவில் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் 385 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் ஆகஸ்ட் 20-ந் தேதி இரவு பெருமளவில் வாண வேடிக்கைகள் மற்றும் அதீத சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாக அடுத்தடுத்து பொதுமக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 385 பேர் யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ‘கண்’ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி முதல்வரை கொன்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் - தெலங்கானாவில்

 தினமணி : பாபு' - இந்த ஒற்றை வார்த்தைதான், ஒரு கொடூரக் கொலை வழக்கில் சந்தேக நபர்களைக் கண்டறியவும், விசாரணையை முன்னெடுத்துச் செல்லவும் உதவியதாக போலீசார் கூறுகின்றனர்.
நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர்.
"ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிய அவர்கள், பணத்திற்காகவே முதல்வரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். திருடுவதற்காகச் சென்றபோது, ​​முதல்வர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதால் அவரைக் கொன்றுவிட்டனர்," என்று காவல் கண்காணிப்பாளர் சரத் சந்திர பவார் தெரிவித்தார்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

எம்.எல்.ஏ.,க்களுக்கு சொகுசு கார் தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்

Image 1611226

 தினமலர் :சென்னை: தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு, எந்த வகை கார் வழங்கலாம் என தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
'அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் இலவசமாக கார் வழங்கப்படும்; தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, சட்டசபையில் 110 விதியின் கீழ் நேற்று முன்தினம் முதல்வர் விஜய் அறிவித்தார்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

அமித்ஷா கூட்டத்தில் விஜய் பேச்சு - தமிழ்நாட்டின் நலன் என்று வந்துவிட்டால் திமுகவின் நிலைப்பாட்டுக்கு தான் வந்தாக வேண்டும்

 minnambalam.com -Mathi : தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மண்டல கவுன்சில் கூட்டதில் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன.
சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார், கேரளா முதல்வர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்குத் தண்டனை

 dinamalar.com : திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலஇலந்தகுளத்தில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் ஆபிரகாம், 47, என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம், மதபோதகராக ஊழியம் செய்து வந்தார். பல்வேறு மாவட்டங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார்.

கிழக்கு பல்கலை கழக விடுதியில் மாணவியின் சடலம் மீட்பு: இரு மாணவிகள் மயங்கினர்

  ilakkiyainfo.com  : கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில், மாணவி ஒருவர் புதன்கிழமை (19) பிற்பகல் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 84 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய கே. யாழினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எதையுமே விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் தவேக + காங்கிரஸ் கல்வி அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு

No photo description available.

 சாவித்திரி கண்ணன் :  விளக்கெண்ணை போல ஒரு விளக்கம்!
கடைந்தெடுத்த ஒரு மூடரா, அமைச்சரென கல்வித் துறையை நிர்வகிக்கிறார் ! 
நம்ப முடியவில்லை!
அனுப்பப்பட்ட அறிக்கை கல்வி வளாகத்தின் ஒழுங்கமைவு சம்பந்தப்பட்டதாம்! 
அதில் தவறுதலாக சில வாசகங்கள் இடம் பெற்றுவிட்டதாம்…! 
அதை அவர்களே உணர்ந்து வாபஸ் வாங்கிவிட்டார்களாம்..!
அதிகாரிகள் தந்த விளக்கத்தை அப்படியே எடுத்து வந்து அவையில் வாசிக்கிறார், அமைச்சர்!
ஆக, இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்ட அதிகாரியிடம் அமைச்சர் விசாரணை கூட மேற்கொள்ளவில்லை. 

புதன், 19 ஆகஸ்ட், 2026

இம்ரான் கான்9 மாதங்களுக்கு பின் மனைவி சகோதரியை சந்தித்தார் - உச்சநீதிமன்ற தீர்ப்பு

 தினமலர் : இஸ்லாமாபாத்: உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 9 மாதங்களுக்கு பின்னர் இம்ரான் கான் அவரது மனைவி, சகோதரியை சிறையில் சந்தித்து பேசினர்.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனால் சிறையில் அவர் மரண படுக்கையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுபோன்ற தொடர்ச்சியான செய்திகளை தொடர்ந்து இம்ரானை இஸ்லாமாபாதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை குடும்பத்தினர் வாரம்தோறும் சந்திக்க, மகன்களிடம் தொலைபேசியில் பேசவும் அனுமதி அளித்தது.

இலங்கை விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் : நடந்தது என்ன?

 ilakkiyainfo.com : திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விகாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு- 125 தீர்மானங்கள்- கட்டுக் கடங்காத கூட்டம்

 மின்னம்பலம் - மதி : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமாவளவன் பிறந்த நாளான நேற்று ஆகஸ்ட் 17-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு காலை முதலே சாரை சாரையாக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் விசிக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர்.

அனிருத் - காவ்யா மாறன் ( கலாநிதி மாறன் மகள்) திருமணம் கிரீஸில் நடக்கப் போகிறது

 தினமலர் : சென்னை: ராக் ஸ்டார் அனிருத் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. 
இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே ஒய்ஜி மகேந்திரன் பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்திய நிலையில், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவது உறுதியானது. 

கொழும்பு சிவசுப்பிரமணியர் ஆலய நகைகள் திருட்டு - குருக்கள் கைது

 ilakkiyainfo.com  :குருக்களை கைதுசெய்து ஆஜர்படுத்த கோட்டை நீதிவான் உத்தரவு.
கொம்பனித்தெரு  சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த  தங்க நகைகளை திருடி அடகு வைத்த அவ்வாலயத்தின் பிரதான குருவான சதீஸ்குமாரகுருக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் முன்னிலையான கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விளக்கமளிக்கையில், கொம்பனித்தெரு ஸ்ரீசிவசுப்பிரமணியர் சிவசுப்பிரமணியர் ஆலயத்திலிருந்த நகை திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் முறைபாடளிக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பாக்கெட் சப்பாத்தியில் 100% கோதுமையா? ஃப்ரோசன் பரோட்டா? பிளேட்டை திருப்பிப் போடும் திடுக் உண்மை

tamil.oneindia.com -Hema Vandhana : சென்னை: பாக்கெட் தோசை மாவு எந்த அளவுக்கு பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டுமோ, அதே போல தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும் பாக்கெட் பரோட்டா, சப்பாத்தி எனலாம்.. அவசர சமையலுக்காக இதை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறார்கள்.. அதேசமயம், அதில் கலக்கப்படும் பொருட்களை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இன்றைய அவசர உலகத்தில் சமையல் நேரத்தை குறைக்க கடைகளில் விற்கப்படும் "ரெடிமேட் சப்பாத்தி". ஃப்ரோசன் பரோட்டா பாக்கெட்டுகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் பல குடும்பங்களில் அதிகரித்துவிட்டது.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை! பாரபட்சமற்ற நீதி விசாரணை தேவை” - மு.க.ஸ்டாலின்

 hindutamil.in -அனலி  : சென்னை: “கர்நாடகாவில் நிகழ்ந்த 3 தமிழர்கள் கொலையில் வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்திக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

கல்முனை வைத்தியசாலையில் ஹிஜாப்!

 Satha Thambirajah : கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் அண்மையில் சுகாதார சிற்றூழியர் அனுமதிபெற்று போன 9 பேரில் ஐந்துபேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
@என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நஜீம் எனப்படும் security service incharge ன் மனைவி மனைவியின் தங்கை நஜீமின் தங்கை என ஐவர் அம்பாறையில் இடம்பெற்ற ஒரு மாதகால பயிற்சிக்கே செல்லாமல் அனுமதி பெற்று வந்திருக்கிறார்கள்.
இவர்கள் இவ்வாறு அனுமதிபெற்று போனது எப்படி?  
இதுபற்றி வைத்தியசாலையின் பணிப்பாளர் கவனத்தில் எடுத்தாரா?
இந்த புள்ளியில் நடந்தது மத அனுமதியா?  அரச 
 அனுமதியா?
இவர்களே முக்கிய குழப்பவாதிகளாகும்.

ஸ்டாலினை கவிழ்க்க ராகுலின் திட்டம்! நொறுக்கிய உதயநிதி! வாயடைத்து நின்ற விஜய்!

 May be an image of text that says "인두 ေပ "கூத்தாடி கையில் நாட்டை கொடுங்கள், அவன் கூத்தியாள் கையில் நாட்டை கொண்டு கொடுப்பான்" -முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர்"

சனி, 15 ஆகஸ்ட், 2026

றீச்சா பாஸ்கரனின் அட்சய பாத்திர மோசடி

 Arun Ambalavanar : றீச்சா பாஸ்கரனின் அட்சய பாத்திர மோசடி
உண்மைகளை சுய தணிக்கை செய்யும் தமிழ் அச்சுப்பத்திரிகைகள்
கடந்த வாரம் சனிக்கிழமை றீச்சா உணவுத்திருவிழாவில் 2500 மக்களுக்குரிய உணவு மட்டுமே  கையிருப்பில் இருந்ததை நன்கு அறிந்த பாஸ்கரன் அதைவிட மூன்றுமடங்கு மக்களுக்கு ரிக்கற் கிழித்து உள்ளே அனுமதித்த அநியாயம் நடந்தது. அதனால்  பாதிக்கப்பட்ட மக்கள் அதனை  உடனேயே சமூக வைத்தளங்களில் வெளிப்படுத்தினார்கள்.  அந்த நியாயயக் குரல்கள் வைரலாகின. றெண்டிங் ஆகின.  
ஆனால் ஈழத் தமிழ் அச்சுப் பத்திரிகைகள்(பாரம்பரிய ஊடகங்கள் – Traditional Media)  எவையுமே இதனைச் செய்தியாக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அவை இன்றுவரையும் சுயதணிக்கை செய்து அழிச்சாட்டியம் பண்ணுகின்றன.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20,000 பேருக்கு வெற்றிகரமாக இதய சிகிச்சை!

  hindutamil.in :  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறையில் கேத் லேப் சிகிச்சை மேற்கொண்டோர் எண்ணிக்கை 20 ஆயிரம் பேரைக் கடந்ததையடுத்து மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதயவியல் துறை கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 3 கேத்லேப் மூலம் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்ட்ரக்சுரல் இன்டடர்வென் சன்ஸ் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தீப்பொறி ஆறுமுகம், விடுதலை விரும்பி ஆகியோரின் பேச்சால் அனல் பறந்த அரசியல் களம் இப்போது எப்படி மாறியுள்ளது?

 bbc.com - சாரதா வி  : தஞ்சாவூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம், அரசியல் பேச்சின் எல்லைகள் குறித்த பழைய விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில், தமிழ் மக்கள் அரசியலை வெறுமனே கேட்கவில்லை; இரவு நேரங்களில் அது நிகழ்த்திக் காட்டப்படுவதைப் பார்க்கவும், கேட்கவும் மக்கள் திரண்டனர்.
தொலைக்காட்சி ஸ்டூடியோக்கள், யூடியூப் சேனல்கள், ரீல்ஸ் ஆகியவை அரசியலை சில விநாடிகளுக்கு உள்ளாகச் சுருக்குவதற்கு முன், "மேடைப் பேச்சு" என்ற தனிப்பட்ட அரசியல் வடிவம் இருந்தது. ஒரு மைக்கிரோஃபோன், தற்காலிக மேடை, வரிசையாக ஒளிரும் டியூப் லைட்டுகள், கூட்டத்தைத் தாண்டி குரலை எடுத்துச் செல்லும் ஒலிப்பெருக்கிகள், மேலும் மறுநாள் காலை குறித்த கவலை ஏதுமின்றி பல மணிநேரம் பேசும் பேச்சாளர்கள்.

சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக அரசியல் விவாதங்களுக்கு திராவிடர் கழகம் (திக) மேடையைப் பயன்படுத்தியது. அதிலிருந்து உருவான திமுக, அதே மேடையைத் தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது.

மாண்டெக் சிங் அலுவாலியா-தமிழகத்துக்கு ஏன் ஆபத்து? மே 17 இயக்கம் எச்சரிக்கை!

 minnambalam.com - Mathi : தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மாண்டேக் சிங் அலுவாலியா (Montek Singh Ahluwalia) மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் கே.பி. கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜிப் ஷா, எம். சுரேஷ் பாபு ஆகியோர் முதல்வர் விஜய்யை சென்னையில் நேற்று ஆகஸ்ட் 13-ந் தேதி சந்தித்தனர்.
இந்த குழுவின் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியாவால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்கிறது மே 17 இயக்கம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

இலங்கை விமானப்படையின் பெரும் பதவிக்கு தமிழ் பெண் வசந்தி முருகேசு தெரிவு

May be an image of text

 Rks Arulmolithevan ; இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண் வசந்தி முருகேசு.
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார் தமிழ் பெண் வசந்தி முருகேசு.
Airport & Aviation Services (Sri Lanka) நிறுவனத்தின் பாதுகாப்பு மார்ஷல் (Security Marshal) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள வசந்தி முருகேசு, இந்தப் பொறுப்பை வகிக்கும் இலங்கையின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
விமான நிலையங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புமிக்கதும், அதிக கவனம் மற்றும் தொழில்முறை திறன் தேவைப்படுவதுமான பணிகளாக கருதப்படுகின்றன.

காயங்களுடன் வீதி​யோரத்தில் விடப்பட்ட சிறுமி மீட்பு - வத்துகாமம்

 ilakkiyainfo.com : வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில், வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் வியாழக்கிழமை (13) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
காலை 6:15 மணியளவில் குறித்த பகுதிக்கு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சிறுமியை அங்கு இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அச்சிறுமியின் அழுகைக் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பிரதேசவாசிகள், உடனடியாகப் பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்திய அரசு கேதீஸ் லோகநாதனை புறந்தள்ளி ஒரு இந்தியரான வரதரராஜ பெருமாளை ஏன் முதலமைச்சராக்கியது?


 ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை  கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள்  இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

புதன், 12 ஆகஸ்ட், 2026

வைகோ என்றொரு பிணம் தின்னி

May be an image of one or more people and text that says "AMEN AM VAIKO MARI AMENT"

ராதா மனோகர் : வைகோ என்றொரு பிணம் தின்னி!
 வைகோவின் பாராளுமன்ற பேச்சுக்களை ராகுல் காந்தியை கொண்டு வெளியிட்டார் வைகோ என்கின்ற    வையாபுரி கோபாலசாமி நாயக்கர்!
இந்திய அரசியலில் இந்த மனிதனை (வைகோ) போன்ற கேவலமான ஐந்து கிடையவே கிடையாது.
தந்தை ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டு அந்த வீர பிரதாபங்களை புத்தகமாக எழுதினார்.
பின்பு  அதையே ராஜீவின்  மகன் ராகுல் காந்தி மூலம்   வெளியிடும் எருமை தோல் வைகோவிற்கு மட்டுமே உண்டு.
ராகுல்காந்திக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது .
அது ஒரு வீண் பிறவி  என்பது இதன் மூலமும் தெரிகிறது.
வைகோ எப்படி ஒரு கோடாரி காம்பாக செயல்பாட்டார் என்பதை சற்று விபரமாக பார்ப்போம். 

May be an image of crowd

1984 இல் இந்திரா காந்தியின் உயிரிழப்புக்கு பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 404 தொகுதிகளில் வெற்றி பெற்றது 
பாஜக வெறும் 2 எம்பிகளை மட்டுமே பெற்றது 
1984 BJP Lok Sabha MembersDr. A. K. Patel – Mehsana constituency, Gujarat
Chandupatla Janga Reddy – Hanamkonda constituency, Andhra Pradesh
ராஜிவ் காந்தி பிரதமரானார் 
போபோர்ஸ் ஊழலில்  ராஜிவ் காந்திக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்பு நீதிமன்ற தீர்ப்பு வந்தது  

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

திமுக பாஜக நெருக்கம்? கனிமொழி சோமு எம்.பி அதிரடி : அரசியலில் எதிரி, நண்பர் என்று யாருமே கிடையாது:

 hindutamil.in :: ​பாஜக​வுடன் திமுக நெருக்​கம் காட்டி வரு​வ​தாக அரசி​யல் வட்​டாரத்​தில் பரவலாக பேசப்​பட்டு வரும் நிலை​யில், ‘‘அரசி​யலில் எதிரி, நண்​பர் என்று யாருமே கிடை​யாது’’ என்று திமுக எம்​.பி. கனி​மொழி சோமு தெரி​வித்​திருப்​பது, கூட்​டணி குறித்த யூகங்​களை அதி​கரித்​துள்​ளது.
தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்​கிரஸ், விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது.
கூட்​ட​ணி​யில் இருந்து பிர​தான கட்​சிகள் அனைத்​தும் வில​கிய நிலை​யில், பாஜக​வுடன் திமுக திடீர் நெருக்​கம் காட்டி வரு​வ​தாக பேசப்​பட்டு வரு​கிறது.

புலிகள் இயக்க நிறுவனர் செட்டி தனபாலசிங்கத்தின் கதை இரண்டாம் பாகம் - காணொளி

ஈழப்போராட்டத்தின் முன்னோடி புலிகள் இயக்கத்தின் நிறுவனர் செட்டி தனபாலசிங்கத்தின் கதை முதலாம் பாகம் காணொளி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சமூக ஊடக களப்பணியாளர்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத திமுக தலைமை ?

 Vasu Sumathi : இதுவரை கட்சி மூலமாக 5 பைசா கூட கைநீட்டி வாங்காமல், ஆயிரம் முறை 200 ரூபாய் உபி என்று பெயர் வாங்கிய ஒரு - உறுப்பினர் அட்டை கூட இல்லாத - உண்மை திராவிட சிந்தனையாளனின் குரல்..
​கழகத் தலைமை சற்றே நிஜ நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்!
​இன்றைய அரசியல் களம் தெருமுனைக் கூட்டங்களிலோ அல்லது மேடைப் பேச்சுகளிலிருந்து மக்களின் கைபேசிகளுக்குள் நகர்ந்துவிட்டது.
கொள்கையே இல்லாமல், எதிராளிகள் கோடிக்கணக்கில் பணத்தை மட்டும் அள்ளி வீசி, சமூக ஊடகப் பிம்பங்களை மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அவலத்தை கண்கூடாக பார்க்கிறோம். நாமோ இன்னும் "பழைய பாணி" அரசியலை கொஞ்சம் மாற்றியமைக்க ஏனோ தயங்கி கொண்டிருக்கிறோம்.
இன்று ​இணையத்தில் நமக்காக ஆதரவுக் குரல் கொடுப்பவர்கள் பலர் வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே களமாடுகிறார்கள். ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட முடியாது, கூடாது.
​இது வேண்டுகோள், அறிவுரை அல்ல..

சனி, 8 ஆகஸ்ட், 2026

சங்கீதா விஜய் மீதான விவாகரத்து மனுவை மீளப்பெற்றார்

 மின்னம்பலம் - Kavi : விவாகரத்து மனுவை முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா வாபஸ் பெற்றிருக்கும் நிலையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேவைப்பட்டால் எதிர்காலத்தில் புதிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
1998ஆம் ஆண்டு முதல்வர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சங்கீதா லண்டனில் வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

'வில்லங்க’மான பி.ஆர். சுந்தர் கைது.. கடுப்பான நீதிமன்றம்.. ‘திருவிளையாடலின்’ பின்னணி?

minnambalam.com : நாமும் என்னான்னு விசாரிச்சப்ப, பி.ஆர். சுந்தர் கேஸ் விவகாரமும், அதையொட்டின சம்பவங்களும் செம்ம பரபரப்பா இருக்குங்க ப்ரோ.. பி.ஆர். சுந்தர் விவகாரத்தை அவருக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப ஏகப்பட்ட பகீர் தகவல்களை கொட்டுறாங்க.. அதாவது, “பி.ஆர்.சுந்தர் கேஸ்ல சம்பந்தப்பட்ட இன்னொரு முக்கியமான நபர் அன்புச்செழியன்.. இவர் கன்பெர்ட் ஐபிஎஸ் அதிகாரி. இவரு இப்போ தமிழ்நாடு டெக்னிக்கல் சர்வீஸ்ல இருக்காரு. இவரு மேல ஏற்கனவே 2015-19 காலகட்டத்துல வாக்கி டாக்கி ஊழல் வழக்கு இருக்கு, அதுல இவர்தான் ஏ-1 குற்றவாளி.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

பாஜ கூட்டணியில் மீண்டும் தேமுதிக? மோடி, அமித் ஷாவுடன் சுதீஷ் 'திடீர்' சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு #AmitShah #LKSudhish  #PolimerNews

 dinamalar.com :  சென்னை : டில்லியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை, தேமுதிக பொருளாளரும், அக்கட்சி எம்பியுமான சுதீஷ், சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலங்களில், பாஜ மற்றும் அதிமுக கூட்டணியில், தேமுதிக இடம் பெற்று, தேர்தல்களை சந்தித்தது. இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக- பாஜ கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
திமுக வழங்கிய ஒரு ராஜ்யசபா 'சீட்' வாயிலாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், எம்பியானார். சட்டசபை தேர்தலில் பத்து தொகுதிகள் ஒதுக்கியதில், தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா மட்டும் வெற்றி பெற்றார்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ஸ்டாலினை சந்தித்த 2 மதிமுக எம்.எல்.ஏ.க்கள்! வைகோ மீது குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் - Mathi  : மதிமுக எம்.எல்.ஏ.க்களான திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர், “அமைச்சர் பதவி தருவதாக சொன்ன ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திமுக எம்.எல்.ஏ.க்களாகவே தொடருகிறோம்”g என்று அறிவித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமு ராசேந்திரன், சீர்காழி செந்தில்செல்வன் ஆகியோர் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரை மாய்த்து கொண்டார் - நடந்தது என்ன?

 தினமலர் : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Savukku Shankar Son : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன், விழுப்புரத்தில் உள்ள மரக்காணத்தில், 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், இவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில், யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். சவுக்கு சங்கருக்கும், அவரது மனைவி ஆர்த்தியும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தியோ ஆழிசை என்கிற மகன் இருக்கிறார். இவர், தன்னுடைய தாத்தா-பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இவர், மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

புதன், 5 ஆகஸ்ட், 2026

முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம்- யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கருத்து

May be an image of one or more people, people performing martial arts and text
May be an illustration of text

 ராதா மனோகர் : யாழ்ப்பாணத்தில் பல்கலை கழகம் அமைய கூடாது என்று எஸ் ஜெ வி செல்வநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடினர். அவரின் கைங்கரியத்தால் அவர் ஆக்டிவாக இருக்கும் வரையில் அது அமையவில்லை.
1970 தேர்தலில் ஸ்ரீ மாவோ அம்மையார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும்தான் இவரின் கொட்டம் அடங்கியது.
செல்வநாயகத்தின் கடிதங்களுக்கு பதில் கூட ஸ்ரீ மாவோ அம்மையார் போடுவதில்லை 
அந்தளவு செல்வநாயகத்தின் கபட அரசியலை அவர் புரிந்து கொண்டிருந்தார் 
ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு உறுதி அளித்த படி 
1974 இல் யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தை நிறுவினார் 
அப்போது கூட இது வெறும் வளாகம்தானே இதிலென்ன இருக்கிறது என்று இதை மலின படுத்தும் முயற்சியில் தமிழரசு கட்சியினர் விஷ பிரசாரம் செய்தவண்ணம் இருந்தனர் 
அவர்களுக்கு  திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் கொடுத்த பதிலடிதான் இந்த பேட்டி
ஈழநாடு 26 - 6 - 1974 யாழ்ப்பாணம் 
திரு அல்பிரட் துரையப்பா :   
முதலில் வளாகமாவது வரட்டும் ஒத்துழைக்காவிடினும் இடையூறு வேண்டாம் 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

சூடானில் அரங்­கேறி வரும் இனப்படு­கொ­லைகள் - ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் நிதி, ஆயுத உத­வி­க­ளோடு

 ilakkiyainfo.com : தற்­போது ஈரா­னுக்கு எதி­ரான இஸ்­ரே­ லி­ய-­-அ­மெ­ரிக்க காட்­டு­மி­ராண்டி   போரின் மீது உலகக் கவனம் திசை திரும்­பி­யுள்ள நிலையில், ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் நிதி மற்றும் ஆயுத உத­வி­க­ளோடு சூடானில் அரங்­கேறி வரும் இனப் படு­கொ­லைகள் கார­ண­மாக சூடான் மக்கள் அனு­ப­வித்து வரும் துன்­பங்­ளும் தொடர்ந்த வண்ணம் உள்­ளன.
ஏப்ரல் 2023 இல் மோதல்கள் மூண்­டதில் இருந்து 12 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் தங்கள் வீடு­களை விட்டு வெளி­யேற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. இதில் ஒன்­பது மில்­லி­ய­னுக்கும் அதி­க­மா­ன­வர்கள் உள்­நாட்டில் இடம்பெயர்ந்­த­வர்கள். அண்டை நாடான சாட், எகிப்து மற்றும் தெற்கு சூடா­னுக்கு தப்பிச் சென்­ற­வர்­களின் எண்­ணிக்கை மூன்று மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மாகும்.  

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

உலகின் முதல் பாசிச அரசை நிறுவிய விளாடிமிர் லெனின் - இதைத்தான் முசோலினியும் ஹிட்லரும் பின்பற்றினார்கள்

 Santhirapalan Saminathar :1918/01/18 உலகில் முதலாவது பாசிச அரசு சோசலிச அரசு என்னும் பெயரில்  லெனினால் பிரகடனப்படுத்திய நாள். தாமே முதல்முதலாக நடத்திய பொதுத் தேர்தலில் தாம் படு தோல்வி  அடைந்ததும்    ஆயுத முனையில் தள்ளுபடி செய்து  பாசிச சர்வாதிகாரத்தை அரங்கேற்றியநாள்.  மற்ற கட்சிகளை தடைசெய்து துரோகிகள்,எதிர்புரட்சியாளர், முதலாளித்துவ வாதிகள் என கொன்று ஒழிக்க தொடங்கிய நாள். லெனினிடம்  இருந்து கற்றுக்கொண்ட இந்த பாசிச சர்வாதிகாரத்தையே முசோலினி கையில் எடுத்தார். அதில் இருந்து பின்னர் கிட்லர் கையில் எடுத்தார்.  உலகம் முழுவதும் பாசிச சர்வாதிகாரத்தின் முன்னோடி லெனின் ட்ரொஸ்கி என்றால் மிகை ஆகாது. அதை பின்தொடர்ந்து ஸ்டாலின் மிகத் தீவிரமாக பாசிசத்தை அமுல் படுத்தினார். ஸ்டாலின் கை ஓங்கியதும் லெனின் ட்ரொஸ்கியின், ஜனநாயக குரல் சந்தர்ப்பவாதம் ஆகும். அவர்கள் ஏற்படுத்திய பாசிச சர்வாதிகாரத்துக்கு கட்சிக்குள் முதல் பலியானவர்கள் லெனினும் ட்ரோஸ்கியும் தான்.
பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களில் மிகவும் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களில் ஒருவர். அவர் 1964 முதல் 1982 வரை நாட்டை வழிநடத்தினார்.

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ அதிரடி குற்றச்சாட்டு

 thentamil.com -Su.tha Arivalagan  : சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் கொளத்தூர் தொகுதி எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அத்தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எந்திரங்களின் செயல்பாடு குறித்து திமுக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஸ்பெயினின் எல்லையை உடைத்துக்கொண்டு அடாவடியாக நுழையும் மொரோக்கோ முஸ்லிம்கள்

 hindutamil.in -போத்தி ராஜ்.க : வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. 
இதனால், எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படைகளை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.

தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிகள்! கப்பல்ல வேலைனு சொன்னதை நம்பி.. திமுக மூவ்.. விஜய்க்கு சிக்கல்!

 tamil.oneindia.com -Rajkumar R   :சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. ஆளும் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். விஜயை பார்க்க முடியவில்லை, உள்ளூர் நிர்வாகிகளும் மதிக்கவில்லை என பெரும்பாலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் பற்றி அவதூறு பேசினால்..’ அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக பரந்தாமன் கடும் எச்சரிக்கை!

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழ்நாட்டை, காவிரி டெல்டா விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார் விஜய், இன்னும் சொல்லப்போனால் விவசாயிகளின் துரோகி விஜய். விவசாயிகளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி என திமுக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்திலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 

சனி, 1 ஆகஸ்ட், 2026

பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய். சூர்யா சேவியர்

May be an image of text that says "BREAKING NEWS SUN NEWS வின்னு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு சென்னை மாவட்டம் 保本品名品量 S ANI தேர்தல் முறைகேடு கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் என். ஆர். ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டு. நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் EVM சரிபார்ப்பு பணியில் 2 VVPAT இயந்திரங்களில் பழுது கண்டுபிடிப்பு. வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளன. முறையாக பாதுகாக்கப்படவில்ல வில்லை. ஆதாரங்களுடன் ன் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனப் பேட்டி 0 AUG2026 AUG 2026 f SUNNEWSTAMIL SUNNEWS + sunnewslive.in"

 Surya Xavier  :  நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,

ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! – ஷோபாசக்தி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல் வெளியீடு, 'இருவண்ணக் கொடிக்கு வயது 75' - இருநாள் கருத்தரங்கம், முற்போக்கு புத்தகக் காட்சி ...
Warscapes in conversation with Shobasakthi | Warscapes

 shobasakthi.com  : ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! – ஷோபாசக்தி
இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன.

வெள்ளி, 31 ஜூலை, 2026

ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு.. இனி போர் வேண்டாம் - இஸ்ரேலுக்கு குட்நியூஸ் சொன்ன டிரம்ப்

 tamil.oneindia.com  -Nantha Kumar R : வாஷிங்டன்: இஸ்ரேல் - காசா இடையே இனி போர் வருவதை தடுக்கும் வகையில் காசா அமைதி வாரியம் சார்பில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் உள்பட பிற ஆயுத குழுவினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும், அதன்பிறகு படிப்படியாக காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 
இதன்மூலம் இனி இஸ்ரேல் - காசா மோதலுக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 மின்னம்பலம் -Pandeeswari Gurusamy : தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

16 வயது மலையக சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் - பாலியல் வன்முறை - கொலை!

May be an image of text Shabeena Somasuntharam :  16 வயதான இஷாலினி ஜூட் குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அண்மையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய சாட்சியம், அவரது மரணத்திற்கு முந்தைய இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்ற கேள்வியை மீண்டும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
மலையகத்தின் டயகம தோட்டப் பகுதியில் மிகவும் வறுமையான குடும்பம் ஒன்றை சேர்ந்த இஷாலினி, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக வேலைசெய்து கொண்டிருந்த போது, கடந்த 2021 ஜூலை 15-ஆம் திகதி கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்தார். 
இந்த சம்பவம் ஒரு சாதாரண மரண விசாரணையாக இல்லாமல், "சிறுவர் தொழிலாளர் சுரண்டல், மனிதக் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், அலட்சியம் மற்றும் இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் குறைபாடுகள்" தொடர்பான முக்கிய வழக்காக மாறியது.

வியாழன், 30 ஜூலை, 2026

செட்டி தனபாலசிங்கம் புலிகள் இயக்கத்தின் நிறுவனர் பிரபாகரனின் குருநாதர்


ராதா மனோகர்
: இவர்தான் செல்லையா தனபாலசிங்கம் இவரது இயக்க பெயர் மாதவன் 
இவரது செல்லப்பெயர் செட்டி 
இலங்கை போராட்ட வரலாற்றை எழுதும் எவரும் தப்பி தவறியும் மறந்து விட கூடாத பெயர்தான் செட்டி தனபாலசிங்கம்!
அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் சரி இலங்கை அரசுக்கு எதிரான கொரில்லா போர் முறைக்கும் சரி வழிகாட்டி இவர்தான் முன்னோடியும் இவர்தான்.
இலங்கை தமிழர்களின் அரசியல் ஆயுத போராட்டமாக உருமாறிய போது அதன் முதல் அடியை எடுத்து வைத்தவர் திரு செட்டி தனபாலசிங்கம் அவர்கள்தான் 
மிக இளமையில் தவறான வழியில் சென்று சிறு சிறு குற்றங்களுக்காக பிடிபட்டு சிறுவர் நன்னடத்தை பள்ளிக்கூடங்களில் இளமை காலத்தை கழித்தார் 
அதன் காரணமாகவோ என்னவோ ஊரில் ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்தார்.
இவரது ஊர் கல்வியங்காடு!
பிற்காலத்தில் பெரும் போராட்ட நகர்வுகளாக கருதப்பட்ட பல வீர தீர செயல்கள் எல்லாம் இவரின் காலத்தில் சட்டவிரோத நடவடிக்ககைகளாக கருதப்பட்டன.

நாதஸ்வர வித்வான் அளவெட்டி என் கே பத்மநாதன் தவில் வித்வான் இணுவில் வி . தட்சணாமூர்த்தி

May be an image of flute

May be an image of musical instrument

ராதா மனோகர் :   யாழ்ப்பாணம் மருதனாமடம் ராமநாதன் இசைக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதி!
நாதஸ்வர வித்வான் அளவெட்டி என் கே பத்மநாதன் 
தவில் வித்வான்  இணுவில். வி.தட்சணாமூர்த்தி 
அளவெட்டி பத்மநாதனுக்கு முன்னாள் ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்த்தன அவர்கள் கலாசூரி பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளார் 
நல்லூர் திருவிழாவின் 24 நாளும் அவரின் நாத மழையை சிறுவயதில் தினசரி கேட்டுள்ளேன் 
அவரின் கற்பனா ஸ்வரங்களில் வந்து விழும் பல விடயங்களை உற்று கவனித்தால் அதில் உள்ள இசைத்துணுக்குகளை  பொறுக்கி எடுத்து பல பாடல்களை இசையமைக்கலாம்.
இலங்கை நாதஸ்வர உலகில் இவர் பெற்ற புகழை வேறு எவரும் பெறவில்லை என்றே கூறலாம் 
பலநாடுகளுக்கும் சென்று ஏராளமான மேடைகளில் வாசித்துள்ளார் 
இவர் தன்னை போலவே தன்மகனையும் ஒரு சிறந்த வித்வானாக பயிற்சி கொடுத்து வந்த காலம் இந்திய ராணுவத்தின் வெறியாட்டத்தில் மகனின் உயிரை பறிகொடுத்தார் 
இதனால் மனமுடைந்த திரு பத்மநாதன் சில ஆண்டுகளுக்கு பின் மீளாத்துயில் கொண்டார் 

புதன், 29 ஜூலை, 2026

கொளத்தூரில் நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு! ஸ்டாலினின் அதிரடி மூவ்!

 tamil.oneindia.com - Rajkumar R :  சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க .ஸ்டாலின் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனது சொந்த தொகுதியான குளத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 
இந்த நிலையில் அந்த தொகுதியில் உள்ள 14 வார்டுகளில் பதிவான வாக்குகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை வாக்குகள் சரிபார்ப்பு பணியும், பின்னர் மாதிரி வாக்கு பதிவும் நடைபெற இருக்கிறது. 
ஒருவேளை வாக்குகள் மாறுபட்டதாகவோ அல்லது வாக்குப்பதிவு முறையாக செயல்படவில்லை என ஸ்டாலின் நிரூபித்தால் அங்கு மறு தேர்தல் நடத்தப்படக்கூட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர் திமுகவினர்.

அரசு ஊழியரை அறைந்த அழகிரி மகள் கைது… ஆனால் பிணையில் விடுவித்தனர்.

 minnambalam.com -  Kavi : எஸ்.பி.ஐ வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் முக அழகிரி மகள் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழிக்கு அடையாறில் சொந்தமாக ஒரு கட்டிட வளாகம் உள்ளது. இதில் எஸ்பிஐ -என்.ஆர்.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் லிஃப்ட் பழுதானதால் இதுகுறித்து எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் தெரிவித்திருக்கிறார். 

அவதூறு வழக்குகளில் போலீஸார் பாரபட்சம்: சீமான் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிருப்தி

 hindutamil.in : மதுரை: அவதூறு வழக்​கு​களில் பாரபட்​ச​மான நடவடிக்​கையை வேடிக்கை பார்க்​க​மாட்​டோம் என உயர் நீதி​மன்​றம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.
மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்​வாகி தீரன் திரு​முரு​கன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: யூ டியூபரும், சினிமா விமர்​சகரு​மான பிஸ்​மி, தனி​யார் யூடியூப்​ சேனலுக்கு ஜூலை 3-ல் அளித்த பேட்​டி​யில் நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், திமுக தலை​வர் ஸ்டா​லினிடம் ரூ.100 கோடி பெற்​ற​தாக ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்டை தெரி​வித்​துள்​ளார். தமிழன் கோகுல் தனது முகநூல் பக்​கத்​தில் மார்ஃபிங் செய்​யப்​பட்ட புகைப்​படங்​களை பதி​விட்​டு, சீமான் மீது தனி​நபர் தாக்​குதலை செய்கிறார்.

செவ்வாய், 28 ஜூலை, 2026

நீட் கோச்சிங் சென்டரில் இரகசியாக முதலீடு செய்துள்ள CM.விஜய்

May be an image of one or more people, beard, people smiling and text that says "Home TamilNadu 2026 CHENNAI PERAMBUR c. JOSEPH VIJAY Criminal & Asset Declaration) TamilNadu 2026 C. .JOSEPHVIJA JOSEPH VIJAY"
May be an image of text that says "Nil ) SS, Postal avings etc Nil Nil (b) LIC or other insurance Policies Nil ersonal ans/advance ven Sunil Raj 1,50,00,000 1 Crore+ Nil N.Anand 3,00,00,000 3 Crore+ ۷ Ravichandran 5,00,00,000 5 Crore+ A ALP Antonius Britto 20,00,00,000 20 Crore+ Kokilambal Educational Foundation 20,00,00,000 20 Crore+ Green Leap Infotech 2,34,00,000 2 Crore+ Jaya Nagar Property B Lit 94,00,000 94 Lacs+ Chandrasekhar"

 நீட் கோச்சிங் சென்டரில் இரகசியாக முதலீடு செய்துள்ள விஜய் 
Giri Sundar :  "NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே  ஒழிக்க  முடியும். 
அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று  நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய்  இன்வெஸ்ட் செய்து,  
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா"  வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு  நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ

யாழ்ப்பாணம் மருதனார் மடம் லட்சுமி நாராயண அய்யர் வீதி - இது ஒரு RSS அரசியல்

May be an image of text that says "வயலின் வித்துவான் லசைஷ்மிநாராயணா பணா வீதி -d වයලින විශාරද ලක්ෂ්මිනාරයන මාවත আব DS0 VIOLIN MAESTRO LAKSHMINARAYANA ROAD a Pradnutiya Sabia ITERNATIDNN EPO PIOIAE"ராதா மனோகர் :  யாழ்ப்பாணம் மருதனார் மடம் லட்சுமி நாராயண அய்யர் வீதி 
அண்மையில் ராமநாதன் கல்லூரிக்கு அண்மையில் உள்ள ஒரு வீதிக்கு திரு லக்ஸ்மி நாராயணன் அய்யர் என்று பெயர் சூட்டி உள்ளார்கள் 
இவர் 30 40 களில்  பகுதி நேர இசை பேராசிரியராக அங்கு பணியாற்றி உள்ளார்.
இவரது மகன்கள் எல் வைத்யநாதன் எல் சுப்பிரமணியம் எல் ஷங்கர் ஆகியோர்  உலக  புகழ் பெற்ற வயலின் வித்வான்களாகும், 
யாழ் பல்கலை கழக ராமநாதன் கல்லூரிக்கு லட்சுமி நாராயண அய்யரை விட பல மடங்கு தகுதியானவர் காலஞ்சென்ற இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் அவர்கள்  பல ஆண்டுகள் அங்கு May be an image of one or more peopleஅதிபராக பணியாற்றி உள்ளார்  
இலங்கை வானொலியில் நீண்ட காலமாக பணியாற்றி உள்ளார் 
அவரது பணிகாலங்களில் அங்குள்ள மக்களோடு மிக நெருங்கிய தொடர்புகளை பேணியவராகும் .

திங்கள், 27 ஜூலை, 2026

காமராஜை வீழ்த்திய தேவிகுளம் பீர்மேடு கம்யூனிஸ்ட்டுகள் - கொன்று தீர்த்து பழிவாங்கிய காமராஜர் ...

 புகச்சோவ் புகச்சோவ்  : காமராஜை வீழ்த்திய தேவிகுளம் பீர்மேடு கம்யூனிஸ்ட்டுகள்.....! (மீள்பதிவு)
1957 கம்யூனிஸ்ட் அரசின் தேவிகுளம் பீர்மேடு இடைத்தேர்தல்.
1957 ல் காங்கிரஸால் டீப்ரொமோட் செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரோசம்மா பொன்னூசையே மீண்டும் இடைத்தேர்தலில் நிற்கவைத்தது கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ் வேட்பாளர் பிகே.நாயர் செல்வாக்கு மிகுந்தவர். மொத்த உறுப்பினர்களில் 63 பேர் காங்கிரஸார். மீதம் 63 பேர் கம்யூனிஸ்ட்டுகள். சபாநாயகர் ஓட்டில் கம்யூனிஸ்ட் அரசாங்கள் நிலைத்துக்கொண்டிருந்தது.
ஒன்றியத்தில் அதிகாரத்திலிருந்த காங்கிரஸார், எலக்சன் கமிஷனை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேவிகுளம் பீர்மேடு ரிசர்வ் ஃபாரஸ்டில் பிரச்சார கூட்டங்களையும், அதிக ஒலியையும் காரணங்காட்டி, பெரியளவில் எலக்சன் கேம்பெய்னில் கம்யூனிஸ்ட்டுகளை ஈடுபடவிடாமல் பார்த்துக்கொண்டது. முதல்வர் ஈஎம்எஸ்.நம்பூதிரி, அதிக ஆட்களை அநுப்பமுடியாததால், சகாவு விஎஸ்.அச்சும்மாமனை மட்டும் களத்திலிறக்கி, ரோசம்மா பொன்னூசின் தேர்தல் செயலாளராக நியமித்தார். அசாதாரணமான உடல்வாகுகொண்ட விஎஸ், தேவிகுளம் பீர்மேட்டின் மலைக்காடுகள் முழுக்க ஏறியிறங்கினார். அவரது தொழிலாளர்களை முதலாளியத்திற்கு எதிராக திருப்புகிற திறமையான பேச்சு அந்தக்காடுகளெங்கும் எதிரொலித்தது.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

கொழும்பில் சீன குழுக்களிடையே மோதல் ஒரு சீன கோடீஸ்வரர் உயிரிழப்பு

 jaffnamuslim.com : கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
இதன்படி கொல்லப்பட்டவன் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவான்.
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரகுபதி :சட்டப்பேரவை கதவுகளை மூடுவதாக முதல்வர் கூறியது குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும்

  hindutamil.in  : பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தவெக ஆட்​சி​யில் பேச்​சுரிமை பறிக்​கப்​பட்​டுள்​ளது. வெள்​ளை​யர் ஆட்​சி​யில்​கூட இருந்த பேச்​சுரிமை விஜய் ஆட்​சி​யில் இல்​லை. அரசை விமர்​சித்து சாதாரண பேச்​சு​வாக்​கில் பேசுபவர்​கள் மீதெல்​லாம் பொய் வழக்கு பதிவு செய்​யப்​படு​கிறது. 
மேலும், சட்​டம் ஒழுங்கை காரணம் காட்டி வழக்​கு​களை முடுக்​கி​விட டிஎஸ்​பிக்​கள் மூலம் நீதிப​தி​களுக்கே சட்டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் அழுத்​தம் கொடுத்து வரு​கிறார்.

நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில் உள்ள பொது மலசலகூடத்தின் நிலைமை

 Murugesu Kanagalingam  :   நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில்  உள்ள பொது  மலசலகூடத்தின் நிலைமை என்று தலைப்பிட்டு  ஒரு அன்பர்  படங்களுடன் பதிவு  ஒன்றைப் போட்டிருந்தார்.
இங்கிருந்து படத்தைப் பார்க் கும்போதே,குமட்டலோடு,வாந்தி வருமாற் போல இருக்கிறது. 
இவற்றைப் பார்க்க  நேரி டுவது பாவம் செய்த கண்களுக்கே நேரும். 
அந்தப்  பதிவாளர் மாநகர மேயரையும் சாடி யுள்ளார். உண்மையில்,நிர்வாகங்கள் இவற்றைக் கவனிக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் என்பதில்  மாற்றுக்  கருத்து இல்லை, கிடையாது. 
மறுபுறம்,எமது மக்கள் எப்போதும்  வெறும் காட்டான்களாகவே இருக்கிறார்கள். 

சனி, 25 ஜூலை, 2026

83 ஜூலை கலவரமும் விக்கியும் சின்றோமும்

May be an image of one or more people, temple and text that says "தமிழ் አ தேசிய தசியஅரசியல அரசியல் போராளி குழுக்கள் imgflip.com imgflip com" ராதா மனோகர்   83 ஜூலை கலவரம் பற்றிய சோக நினைவுகளை இப்போதும் மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தி கொள்வதில்லை ஒரு ஆசுவாசம் அடைந்தால் இது ஒரு நோயின் அறிகுறிதான் 
இதை ஒரு விக்டிம் சின்றோம் என்றும் கூறலாம் 
நான் ஒரு விக்டிம் எனக்கு ஒரு அநியாயம் நடந்திருக்கிறது.
அல்லது நாம் தமிழர்கள் எமக்கு எப்போதும் அநியாயம் செய்கிறார்கள்  
என்பது போன்ற எண்ணங்கள் உங்களை அறியாமலேயே உங்களை தாலாட்டுவது ஆரோக்கியமானது அல்ல 
அந்த சம்பவங்களை நீங்கள் விரும்பாவிடினும் 
அதை பற்றி மீண்டும் மீண்டும் உருப்போட்டு கொள்வதில் ஆர்வம் இருந்தால் 
மறைமுகமாக அல்லது உங்கள் உள்ளுணர்வில் அதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றுதான் பொருள் 
எதை நீங்கள் ஆழமாக ரசிக்கிறீர்களோ அது மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி வரும்!

கொமினியும் மதவெறியர்களும் தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.

May be a black-and-white image of one or more people

 ஈரான் மன்னர்  ரெசா பல்லவி ​​ஷாவின் ஆட்சியை வீழ்த்துவதில் இடதுசாரி மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருந்தனர்.
இவர்களின் போராட்டம் வெற்றி பெற்று 1979-ல் கொமேனி நாடு திரும்பியபோது இடதுசாரிகள் மனித உரிமை பேசுபவர்கள் எல்லோரும் அதைக் கொண்டாடினர்.
முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தாங்கள் தோற்கடித்துவிட்டதாக அவர்கள் கூறிக்கொண்டனர் 
இவர்களின் மகிழ்ச்சி  நீடிக்கவில்லை.
கொமினியும் அவரின் மதவெறியர்களும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின்,
தங்களின் இஸ்லாமிய புரட்சிக்கு உதவிய 30,000-க்கும் மேற்பட்ட இடதுசாரிகளை கொன்றனர்.

திரிசூலம் - இன்றுவரை எந்த தமிழ் படமும் குவிக்காத வசூல் சாதனை

May be an image of text that says "5 ரூபாய் டிக்கெட்டில் 2 உகோடி வசூலா? திரிசூலம் 50 நாள் 60 லட்சம் வசூல்! 75 நாள் 666 காட்சி! 100 நாள் 1 கோடி வசூல்!" Senthilvel Sivaraj  · தமிழ் சினிமாவுல ஆயிரம் கோடி, ரெண்டாயிரம் கோடி வசூல்னு இன்னைக்கு நாம ரொம்ப சாதாரணமாகப் பேசுறோமே... ஆனா, அன்னைக்கு வெறும் அஞ்சே ரூபா டிக்கெட் விலைக்கு, தியேட்டர்கள்ல திருவிழா கூட்டத்த கூட்டி, அரசாங்கத்துக்கே ஒரு கோடி ரூபாய் வரி கட்டுன ஒரு மாஸ் வரலாறைத்தான் இதுலே பாக்க போறோம். அதுதான் தமிழ் சினிமாவோட வசூல்  வேட்டையை மாத்திப் போட்ட  நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 200-ஆவது மெகா காவியமான 'திரிசூலம்' தியேட்டர்கள்ல பண்ணுன அந்த பாக்ஸ் ஆபீஸ் வேட்டைதான்! 
வாய் வார்த்தையா இல்லாம, அப்போதைய செய்தித்தாள்கள்ல வெளியான அஞ்சு அசைக்க முடியாத வரலாற்று சான்றுகளை வெச்சு அந்த பிரம்மாண்ட பாக்ஸ் ஆபீஸ் பயணத்த இப்போ நாம பாக்கப்போறோம்.

செந்தில் பாலாஜி சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு

 hindutamil.in  : சென்னை: தவெக எம்​எல்​ஏ-​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாகத் தொடரப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதி​ மன்​றத்​தில் நேற்று சரண் அடைந்​து, முன்​ஜாமீன் பெற்​றார்.
தவெக ஆட்​சியை கவிழ்க்​கும் நோக்​கில் ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக திரு​நாவுக்​கரசு, கார்த்​திக், ரமேஷ், தியாக​ராஜன், நரேஷ் உள்​ளிட்ட 14 பேரை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் கைது செய்​துள்ளனர்.

வெள்ளி, 24 ஜூலை, 2026

யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர்? Jaffna! Loaded with pride and prejudice?


 ராதா மனோகர்
: யாழ்ப்பாணம் என்பது வெறும் ஒரு ஊரின் பெயர் என்று மட்டும் நீங்கள் கருதினால் அதனுள்ளே மறைந்திருக்கும் பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமலேயே போய்விடும் 
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக செல்வா செழிப்போடு விளங்கியது யாழ்ப்பாணம் 
தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு வியாபார சந்தையாக யாழ்ப்பாணம் இருந்ததுதான் அந்த பொருளாதார செழிப்புக்கு உரிய முக்கிய காரணம் 
அடுத்ததாக போர்துக்கீச ஒல்லாந்து பிரித்தானியர்களின் கிழக்கிந்திய கம்பனிகளின் ஒரு முக்கிய வர்த்தக கேந்திரமாகவும் யாழ்ப்பாணம் இருந்தது 
மாலைதீவில் இருந்து ஏற்றுமதியாக வேண்டிய சிப்பி குறிப்பாக (கடல்) சோகி போன்ற பொருட்களை  யாழ்ப்பாணம் கொண்டுவந்து சந்தை படுத்துவார்கள் . அங்கிருந்து ஐரோப்பியர்கள் அவற்றை வாங்கி உலகம் முழுவதும் குறிப்பாக கடல் சோகிக்கு ஜப்பானில் பெரும் சந்தை இருந்தது 

பழ நெடுமாறன் .. பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் - புலிகளின் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டினார் நெடுமா

 hindutamil.in: பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்: பழ.நெடுமாறன் தகவல
தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் அமைப்​பின் தலை​வர் பிர​பாகரன் உரிய நேரத்​தில் பொது​வெளிக்கு வரு​வார் என உலகத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார்.
தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் முற்​றத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் நினைவு முற்​றத்​தில் வரும் 26-ம்
​தே​தி, தஞ்​சாவூர் தமிழ்ப் பல்​கலைக்​கழகத்​தின் முதல் துணைவேந்​த​ரான முது​முனை​வர் வ.அய்​.சுப்பி​ரமணி​யம் நூற்​றாண்டு விழா நடை​பெற உள்​ளது.

வியாழன், 23 ஜூலை, 2026

: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையிலும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுக்கிறது

 மின்னம்பலம் -Pandeeswari Gurusamy : நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தற்போது கண்டனப் போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், அருண் மாதேஸ்வரன், பாடகர் அறிவு, இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட தமிழ் திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டுள்ளனர்.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடி லாக்கப் மரணம் - கைதான இளைஞர் மரணம் - உறவினர்கள் போராட்டம்

   hindutamil.in  - ரெ.ஜாய்சன்  :   தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் இன்று (ஜூலை 23) உயிரிழந்தார். காவல் துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவனும் பங்கேற்றார்.

வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைக்கும் டக்ளஸ் தேவானந்தா


ராதா மனோகர்
:  வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட்!
இலங்கைக்கு வந்து போகவும் நிரந்தரமாக தங்கவும் தொழில்களை அல்லது வியாபாரங்களை செய்யவதற்கும் உரிய வதிவிட அட்டை! 
இது வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பலரும் கோரிக்கைகள் விடுத்து கொண்டே வந்துள்ளார்கள் 
எனக்கு தெரிந்த சிலர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள் 
இவர்களின் இந்த முயற்சிக்கு அரசு தரப்பிலும் இதர அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து   சாதகமான பதில் கிடைத்துள்ளது. 
விரைவில் இது அமுலுக்கு வரும் என்றும்  தெரிகிறது!
நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று திரு டக்ளஸ் தேவானந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்!
இது வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கும் செயலாகும்.  
இவரின் இந்த வாக்குரிமை கோரிக்கையானது வெளிநாட்டு இலங்கையர்களுக்கான ரெசிடெண்ட் கார்ட் வழங்கலை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. .

புதன், 22 ஜூலை, 2026

மு.க. ஸ்டாலின் : தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே

 நக்கீரன் :  டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க இளைஞர்களின் கூட்டம் குவிந்த வண்ணம்  உள்ளனர். இந்த  போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுடெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் தற்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ நாளை ரிலீஸ்: பிளாக் டிக்கெட் விற்பனை - பகிரங்க ஏல விற்பனை? அதிர வைக்கும் தியேட்டர் நிலவரம்!

 மின்னம்பல - Kavi : ஒருவழியாக ஜனநாயகன் திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதேவேளை டிக்கெட் விலையும் தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
முதல்வர் விஜய் நடிப்பில் கடைசியாக எடுக்கப்பட்ட படம் ஜனநாயகன். கடந்த 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம். அதன்படி படம் நாளை வெளியாகிறது. சுமார் 1000 திரையரங்குகளில் நாளை மட்டும் 5000 காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ என மாற்றம்

 hindutamil.in -தமிழினி : சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தவெக அரசு மாற்றம் செய்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கைதான திமுக எம்எல்ஏக்களை நேரில் சென்று சந்திக்காத உதயநிதி: குமுறும் கட்சி நிர்வாகிகள்

dinamalar.com  : திமுக எம்எல்ஏக்கள், அடுத்தடுத்து கைது செய்யப்படும் நிலையில், அவர்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் சென்று சந்திக்காதது, திமுக நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் கூறியதாவது:
முதல்வர் விஜயை, ஒருமையில் விமர்சித்ததாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்துார் திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், 'முதல்வர் விஜயின் எலும்பை உடைப்பேன்' என பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இரு கைது சம்பவங்களுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் அறிக்கை வெளியிட்டதோடு, முடித்துக் கொண்டனர்.

2.4 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மோசடி! சிக்கபோகும் மகிந்தவின் புதல்வர்கள் - நாடாளுமன்றில் அம்பலம்

 ilakkiyainfo.com : வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரங்கள்
குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாதஸ்வர இசையின் மென்மையை மழுங்கடித்து ஒப்பாரியாக மாற்றிய சைவ வைணவ மதவாதிகள்

 ராதா மனோகர் : பல கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் உள்ளூர ஹிந்துஸ்தானி இசையை அதிகமாக விரும்புவார்கள் 
ஒரு ரகசிய ரசனை போல ஹிந்துஸ்தானி ராகங்களையும்  கஸல் போன்ற ஹிந்துஸ்தானி இசை வடிவங்களையும் உள்ளூர ரசிப்பார்கள் 
ஆனாலும் பாடல் உருப்படிகள் கர்நாடாக இசையில்தான் அதிகமாக உள்ள காரணத்தால்   கர்நாடக இசைக்கலைஞர்களாக தொடர்கிறார்கள் 
தமிழ் நாதஸ்வர வித்வான்களிடம் அழகியலோடு வளர்ந்த  இசையை சைவ வைணவ  வழிபாட்டு கோஷ்டி கைப்பற்றி அந்த இசையையே ஒரு கர்நாடக வழிபாட்டு மந்திரமாக  மடைமாற்றி விட்டார்கள்.

செவ்வாய், 21 ஜூலை, 2026

நீட் மாணவர் போராட்டம்.பெரிதாக வெடிக்கும் . 2வது நாளாக இன்று மீண்டும் கூடும் நாடாளுமன்றம்!

  tamil.oneindia.com -Vigneshkumar : டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் எந்தவொரு விவாதமும் நடைபெறாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. நீட் உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. அவை தொடங்கும் முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தியா மிக பெரிய சாதனைகளை படைத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல் MLA மகன் அக்‌ஷய் மார்க்கண்டேயனின் பேட்டி

minnambalamமின்னம்பலம் -  Kavi : விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார். 
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார். 
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

திங்கள், 20 ஜூலை, 2026

dmk எம்எல்ஏ கைது விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்- “திமுகவில் இருந்து தவெகவுக்கு யாரும் போகாததால்...”

 hindutamil.in - தமிழினி : சென்னை: “தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதில்தான் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. அதைத் தடுக்க காவல் துறைக்கு நேரமில்லை. திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழித்துவிடலாம் என நினைப்பது மடத்தன.

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்!

 minnambalam.com - Kavi ;  விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டார். 
பின்னர் எஸ்.பி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக மார்கண்டேயன் குற்றம்சாட்டியிருந்தார். 
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.