ராதா மனோகர் : கலைஞர் எம்ஜியார் என்ற இரு தலைவர்களுக்கு இடையேயான பிரச்சனைதான் அதிமுக திமுக பிரச்சனை!
இவர்களின் பிரச்னை கொள்கை சார்ந்தது அல்ல.
விரும்பத்தகாத பல விடயங்கள் நடந்து முடிந்து போய்விட்டன.
இப்போது இருவரும் உயிரோடு இல்லை
ஆனால் இருவரின் கட்சிகளுக்கும் இருவரின் திரைப்படங்களும் இன்றும் உயிர்துடிப்போடு உள்ளன
எனவே இருவரும் தமிழக வாழ்வியலில் தொடர்ந்து இருப்பார்கள்
சுமார் 40 வருடங்கள் ஒன்றாக ஒரே கொள்கையில் பயணித்த இரு தலைவர்களின் இயக்கங்கள்,
இன்று வடவர் பேராபத்தை எதிர்கொண்டு நிற்கிறது
முன்னெப்போதையும் விட இப்போது வரலாற்று பகைவர்கள் பெரும் பலத்தோடு உள்ளார்கள் .
வாசல் படி வரை வந்துவிட்டார்கள்
வியாழன், 28 மே, 2026
திமுக அதிமுக இணைப்பு சாத்தியமா
“காவலர் மீது தவெக குண்டர்கள் தாக்குதல்... ” - அரசு மீது வானதி சீனிவாசன் காட்டம்
hindutamil.in - வெற்றி மயிலோன் : சென்னை: “கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறிய காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
காவலர்கள் மீதே தாக்குதல் நிகழ்த்தும் அளவிற்கு தவெகவில் குண்டர்கள் உருவாகி வருவது இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர் சாலையை மறித்து வைத்த பேனரை அகற்றுமாறு கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலரின் கையை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
மட்டக்களப்பில் hotel அறையில் தீப்பரவல் - மூச்சுத்திணறி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
hirunews.lk : மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர்.
பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது.
இச்சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தந்தை தங்கியிருந்த விடுதி அறையைப் பூட்டிவிட்டு, வெளியில் உணவு வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
Victim syndrome விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ராதா மனோகர் : ஒருவர் எப்போதும் நான் பாதிக்கப்பட்டேன் என்னை எல்லோரும் துன்புறுத்துகிறார்கள்
என்று பிறரின் கவனத்தை கவர்வதற்காக அல்லது பிறரின் அனுதாபத்தை பெறுவதற்காக ஓயாமல் கூவிக்கொண்டே இருப்பது ஒரு உளவியல் நோய்!
இது வெறும் நோய் மட்டுமல்ல .இது ஒரு வியாபாரம் .. முதல் இல்லாத வியாபாரம்
இதில் ருசி கண்டவர்கள் ஒரு போதும் இதை கைவிட மாட்டார்கள்
இந்த விக்டிம் சின்றோம் திருமாவளவனுக்கு நீண்ட நாளாக உண்டு
ருசி கண்ட பூனை அல்லவா . இலகுவில் விட்டு விடாது .
தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சாபக்கேடு இவர்
ஏன் திருமாவை இப்படி கூறுகிறேன் என்பதை முன்பே கொஞ்சம் விபரமாக எழுதியுள்ளேன்
திருமாவளவன் வைகோ விஜயகாந்த்
மீள்பதிவு 28 செப்டெம்பர் 2020 நாம் சம காலத்தில் கண்டு வியக்கும் நம் தமிழ்நாடு பெற்றெடுத்த மிகப் பெரிய அறிவுச்சொத்து என்று கட்டுக்கடங்காத தொண்டர்களையுடைய விசிக கட்சி தலைவர் திருமாவளவனை சிலர் குறிப்பிட்டுள்ளனர் .
ஆனால் வரலாறு அப்படி இல்லையே?
புதன், 27 மே, 2026
பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு - தமிழக அரசின் கோரிக்கைகள் மனு அளிப்பு
hindutamil.in : புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
பேருந்து அரசுடமை - ஏழை மக்களின் வாழ்வை திருப்பி போட்ட கலைஞர்
![]() |
Muralidharan Pb : கலைஞர் பக்கம் பதிவு 7! பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கியவர்
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானபோது திமுக 138 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையைக் காட்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டது.
சைதாப்பேட்டையில் பதினோரு லட்சம் (கலைஞர்) வெற்றிபெற்றிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு அபாரவெற்றி. 25 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது திமுக. தென் சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து பேரறிஞர் அண்ணா வெற்றி .
முக்தார் கைது ! பிரபல ஊடகவியலாளர் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார் பழிவாங்கும் நடவடிக்கை
நக்கீரன் -து. ராஜா : நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர். பத்திரிகை, மீடியாக் கள், சோசியல் மீடியாக்கள் வழியாக விமர்சித்தவர்களை முதலமைச்சர் என்கிற அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் பழிவாங்கும் படலத்தை துவங்கியுள்ளார் ஜோசப் விஜய்.
"மை இன்டியா 24/7' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்துகிறார் பத்திரிகையாளர் முக்தார் அஹமத். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவரு கிறார். கடந்த மே22ஆம் தேதி இரவு ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீட்டிலிருந்து காரில் தனது மனைவி, பிள்ளைகள், தனது மனைவியின் தங்கை, அவரின் இரண்டு குழந்தைகளோடு இரவு 11.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா விலகுகிறார்? சிவகுமாருக்கு விட்டுத்தர ஒருவழியாக ஒப்புதல்
dinamalar.com : பெங்களூரு: 'கர்நாடக முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்குகிறோம்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதை அடுத்து, முதல்வர் பதவியை சிவகுமாருக்கு விட்டுத்தர சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் சிவ குமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சி மேலிடம் இருவரையும் டில்லிக்கு அழைத்தது. நேற்று முன்தினம் இரவே, இருவரும் தனித்தனி விமானங்களில், தங்கள் ஆதரவாளர்களுடன் டில்லிக்கு பறந்தனர்.
விவசாயிகள் பெரும் ஏமாற்றம்- யார் யாருக்கு கடன் தள்ளுபடி? விவசாயிகள் கடும் எதிர்ப்பு
minnambalam.com - Mathi : முதல்வர் விஜய் அறிவித்த பயிர் கடன் தள்ளுபடியால் பெரும் ஏமாற்றம்- விவசாயிகள் போராட்டம்- தலைமை செயலகம் முற்றுகை- சிபிஐ, சிபிஎம் கண்டனம்!
முதல்வர் விஜய் (Vijay) வெளியிட்ட பயிர் கடன் தள்ளுபடி (Farm Loan) குறித்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
முதல்வர் விஜய் நேற்று விவசாயிகளின் பயிர் கடன் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில்,
ரூ.50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.
இடைத்தேர்தல்கள் ஆட்சியை காப்பாற்றுமா அல்லது காவு வாங்குமா? மில்லியன் டாலர் கேள்வி
tamil.oneindia.com சியாம் சுந்தர் ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 107 இடங்களைப் பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருந்தாலும், தவெக அரசுக்கான ஆபத்து இன்னும் விலகவில்லை என்பதை தற்போதைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.
செவ்வாய், 26 மே, 2026
அன்னா ஹாசாரேக்களும் மங்காத்தாக்களும் அடிமை வரலாற்று மிச்சம் மீதிகள்
![]() |
ராதா மனோகர் : நவம்பர் 2011 - சென்னை மெரீனா பீச்சில் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தமிழர்களை பற்றி கொண்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கமும் படித்தவர்களும் உணர்ச்சியோடு அங்கு கூடி முழக்கங்களை எழுப்பினார்கள். ஊழலை ஒழித்து விட்டுத்தான் இனி காலை உணவே உண்பார்கள் என்ற ரேஞ்சில் இருந்தது
அதற்கு அடுத்த நாளே அஜித் அர்ஜுன் நடித்த மங்காத்தா பிளாக் காமடி படம் வெளியானது
இந்த அன்னா ஹாசாரேயின் கூட்டத்திற்கு நிகரான கூட்டம் மங்காத்தா படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் தெருவெங்கும் மிரண்டு கொண்டிருந்தது
அன்னா ஹாசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை மங்காத்தா என்கவுண்டர் செய்து விட்டது என்று தோழர் மருதையன் குறிப்பிட்டிருந்தார்
மோசடியை ஊழலை அதுவும் நாட்டை காக்க வேண்டியே போலீஸ் திறமையாக கொலை கொள்ளைகளை செய்வதை அழகியலாக்கி படமாக்கினார்கள் .
எங்க மீது அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கும்.. திமுக பகிரங்க எச்சரிக்கை
மின்னம்பலம் - மதி : சமூக வலைதளங்களில் திமுக (DMK) மீது திட்டமிட்டு அவதூறு பரப்பினால் ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி எச்சரித்துள்ளது.
சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று மே 25-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட அந்த சம்பவத்தை திசைதிருப்புகிற வகையில் ஒரு பெண் சோஷியல் மீடியாவிலே பேட்டியளித்து, அது வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கொழும்பில் சினிமா பாணி கடத்தல்... தங்கம் கொள்ளை! சிக்கிய எஸ்.ஐ!
![]() |
Kanakanayakam Vijaypiragaash · சினிமா பாணி கடத்தல்... தங்கம் கொள்ளை! சிக்கிய எஸ்.ஐ – கொழும்பில் அதிரடி திருப்பம்!
மக்களைக் காக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே, பட்டப்பகலில் சினிமா பட பாணியில் கடத்தலில் ஈடுபட்டு 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! இந்த மெகா கொள்ளை வழக்கில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஒருவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் வெளிவந்துள்ள சுவாரசியமான பின்னணி இதோ...
பிளான் போட்ட ‘வடக்கு’ போலீஸ்!
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி, கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய போதுதான் இந்த "தங்க வேட்டை" அரங்கேறியுள்ளது. நபர் ஒருவரைக் கடத்தி, அவரிடமிருந்த 2 கிலோ தங்கத்தை இந்த அதிகாரி சத்தமில்லாமல் அள்ளியுள்ளார்.
மட்டக்களப்புக்கு எஸ்கேப்... ஆனால்?
திங்கள், 25 மே, 2026
இலங்கையில் JVP அதிகார மோதல் ... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் Episode
அரசியல் பேசலாம் ·ஒரு சிம்மாசனம்... இரண்டு ராஜாக்கள்: அனுர - டில்வின் எபிசோட்!
இலங்கை அரசியல் என்பது எப்போதுமே முடிவில்லாத ஒரு 'மெகா சீரியல்' தான். இதில் "கட்சி அதிகாரம் vs அரசாங்க அதிகாரம்" என்ற பழைய சீசன் இப்போது மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இம்முறை கதைக்களத்தில் இருப்பவர்கள்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா!
ஜே.ஆர். போட்ட 'மாஸ்டர் பிளான்'
"முடிவு எடுத்தாச்சு. ஒத்துவந்தா இருங்க, இல்லனா கதவு திறந்தே இருக்கு, தாராளமா வெளியேறலாம்!" - இதை ஏதோ கோபத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தன சொல்லவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போது நாடாளுமன்றக் குழுவை கூட்டி மிக 'கூல்' ஆகச் சொன்னார். இதைக் கேட்டதும் எம்.பிக்கள் எல்லாம் காற்றிறங்கிய பலூன்கள் போல கப்சிப் என உட்கார்ந்திருந்தார்கள்.
தமிழகத்தில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா ?
Gowtham Sham : கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையை கவனித்தால், முதலில் பலருக்கும் தோன்றுவது ௮ ஒரு visible political presence இல்லாத வெற்றிடம்.
சமூக பதற்றங்கள், சட்ட ஒழுங்கு விவாதங்கள், இணையத்தில் தீவிரமாக பேசப்படும் பிரச்சனைகள், அரசியல் சர்ச்சைகள் ௮ எல்லாமே ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நேரத்தில், “அரசியல் தலைமையே இப்போது எங்கே இருக்கிறது?” என்ற கேள்வி பொதுமக்களிடையே இயல்பாக எழ ஆரம்பிக்கிறது.
ஏனெனில் தமிழ்நாடு அரசியல், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில், ஒரு தொடர்ச்சியான public presence-க்கு பழகியிருந்தது.
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு
tamil.oneindia.com - Vishnupriya R :கோயமுத்தூர்: நானே குழந்தையை பறிகொடுத்துவிட்டு இருக்கும் நிலையில் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோவை சூலூர் சிறுமியின் தாய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது குழந்தையின் தாய்க்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும், குழந்தையை காணவில்லை என்பது கூட தெரியாமல் போதையில் படுத்திருந்ததாகவும் பெண் ஒருவர் வீடியோவில் கூறியிருக்கும் நிலையில் மறுத்துள்ளார்.
திமுக தலைவர்கள் மீது கடும் கோபத்தில் எகிறி பாயும் உடன்பிறப்புக்கள்
Kandasamy Mariyappan : அன்பின் திமுக மூத்த தலைவர்களே..வணக்கம்.! நீங்கள் நலமாக வாழ வாழ்த்துகள்.
உங்களில் பலரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைத்துள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) உள்ளீர்கள்.!
உங்கள் பலரின் பிள்ளைகளும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக (MLA, MP) அல்லது கட்சி பொறுப்புகளில் உள்ளார்கள்.!
உங்களில் பலர் அமைச்சர்களாக உள்ளீர்கள்.!
நீங்கள் அனைவரும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளீர்கள்.!
இந்த வசதிகள் எல்லாமே, கட்சியால் உங்களுக்கு கிடைத்தது.!
திரு. ஸ்டாலின் திமுகவை விட்டு விலகி புதிய கட்சி ஆரம்பித்து அதில் நீங்களெல்லாம் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும், 15-20% வாக்குகளை மட்டுமே பெற முடியும்.!
நாயகன் வெற்றி படத்தினால் எந்த இலாபமும் தயாரித்த முக்தா பிலிம்ஸுக்கு கிடைக்கவில்லை
ராதா மனோகர் : நாயகன் படத்தை தயாரித்தது முக்தா பிலிம்ஸ்
முக்தா வி ராமசாமி முக்தா வி சீனிவாசன் ஆகியோர்கள் தயாரித்தார்கள்
படத்தின் மொத்த நெகட்டிவ் உரிமையை ஜி வெங்கடேசனுக்கு விற்றுவிட்டார்
அந்த காலத்திலேயே சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் உருவான படம்
நாயகன் வரை இன்றுவரை மக்களால் பேசப்படும் ஒரு கல்ட் மூவி என்று கூறலாம்
ஜி வெங்கடேசனுக்கு பெரும் வசூலை அள்ளிக்கொடுத்த படம்
படத்தை வெளியிடும் போது பலரும் அது வெங்கடேசனின் ஜி வி பிலிம்ஸ் படம் என்றுதான் கருதினார்கள்
அந்த அளவுக்கு ஜிவி பிலிம்ஸ் விளம்பரம் இருந்தது
விசிகவுக்கு பனையூர் பாபு குட்பை.. ஸ்டாலினை சந்தித்த ஆளூர் ஷாநவாஸ்.. ராஜ்யசபா எம்.பி.
மின்னம்பலம் - Mathi : என்ன ப்ரோ.. யாரு எங்க தாவப் போறாங்களாம்?
நான் அப்படி சொல்லலையே ப்ரோ.. ஆனா அந்த மாதிரி சம்பவங்கள் நடக்குதே..
இன்னைக்கு விசிகவில இருந்து மாஜி எம்.எல்.ஏ. பனையூர் பாபு (Panaiyur Babu) விலகிட்டாரு.. அதே மாதிரி ஆளூர் ஷாநவாஸை (Aloor Shanavas) பத்தியும் பல தகவல்கள் பரவுது..
சட்டசபை தேர்தலில் விசிக ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் கொடுக்காததால ஏகப்பட்ட சர்ச்சைகள்.. யூகங்கள்.. எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி விசிகவின் முதன்மை செயலாளர் பதவியை கொடுத்தாரு திருமா..
உதயநிதி ஸ்டாலின் : "பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்; முதுகில் குத்துவிட்டார்கள்!
தினமணி ஜீவகணேஷ்.ப : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டிக்கு ஆதரவு வழங்குவதாக, தவெக-வுடன் கூட்டணி சேர்ந்தது காங்கிரஸ் கட்சி.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் திமுக முதுகில் குத்திவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
ஞாயிறு, 24 மே, 2026
நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைந்திருந்தது
![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : காங்கிரஸ் கட்சிக்குள் நேரு காலத்திற்கு முன்பிருந்தே ஆர் எஸ் எஸ் சங்கிகளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருந்தது
இந்திய வாழ்வியலின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்துத்துவா கருத்துக்களை இந்த காங்கிரஸ் சங்கிகள் விதைத்து கொண்டே வந்துள்ளார்கள்
இதற்கு பல உதாரணங்கள் உண்டு
இந்திய ஒலிபரப்பு சேவைக்கு ஆகாஷ்வாணி என்று பெயர் சூட்டியது பாஜக அல்ல காங்கிரஸ்தான்
ராமாயணம் பாரதம் போன்ற இந்துத்துவா புராணங்களை அரசு செலவில் பிரமாண்ட தொலைக்காட்சி சீரியல்களாக தயாரித்து மக்களை சங்கிகளாக்கியது பாஜக அல்ல காங்கிரஸ்தான்
இதற்கெல்லாம் ஒரு ஆரம்பம் உண்டல்லவா!
சனி, 23 மே, 2026
எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை - திமுக இளைஞர் அணி கூட்டத்தில் வன்மையான கண்டனத் தீர்மானம்!
minnambalam.com - Kavi : திமுக இளைஞர் அணி மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாக்களர்களுக்கு நன்றி
1.நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், தலைவர் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
திமுக தலைவருக்கு நன்றி
நிதியமைச்சர் மரிய வில்சன் கையில் ஆயுதங்களோடு
புகச்சோவ் புகச்சோவ் : தேர்தலுக்கு முன்பே தற்போதைய தற்குறி நிதியமைச்சன் மரிய வில்சன்
கையில் ஆயுதங்களோடு ஒரு குடும்பத்தை வீடுபுகுந்து தாக்குகிற வீடியோ ஊடகங்கள் முழுக்க உலவுகிறது.
ஆனாலும்
அவனை கைதுபண்ணல
அவன்மீது போலீஸ் வழக்குபதியல
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கல
அவன் நிதியமைச்சரா பதிவியேற்கிறான்
தேர்தலாணையம் அவனை தகுதி நீக்கம் செய்யல...
நூற்றியெட்டு தவெக எம்எல்ஏக்களோட அஃபிடவிட்டும் தவறானது
இதில் பன்னிரண்டுபேர் கிரிமினல் குற்றவழக்குள்ளவர்கள்
ஒன்பதுபேர் போலி கல்விச்சான்றிதழ் கொடுத்தவர்கள்.
வெள்ளி, 22 மே, 2026
அபோர்ஷன் கிங் அனிருத் கலாநிதி மாறனின் காவியா மீது கண் வைக்கிறான் - சந்தியா கிருஷ்னன் அதிரடி
![]() |
![]() |
Sandhiya Krishnan : அனிரூத் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக என்னை லூசு, பைத்தியம் என்று கூறி என் வாழ்க்கை அழித்துள்ளனர் திமுகவினர். தொடர்ந்து 15 வருடத்திற்கு மேலாக சன் நெட்வொர்க் என் கதைகளை தான் சினிமா துறையில் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட எனக்கு எந்த உதவியும் இல்லை. நான் இன்னும் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்வதற்கு அனிரூத் மட்டுமே காரணம். ஏனா 10 வருடத்திற்கு மேலாக கிழவன்களை திருமணம் செய்து கொள்ள சொல்லியும், தொடர்ந்து போன் நம்பர் டிரேஸ் செய்தும் பல பிரச்சினைகள் ஏற்படுத்தி என் வாழ்க்கையை பாழாக்கியவன் அனிரூத். அனிரூத் மட்டும் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்; நான் பிச்சைகாரியாக வாழ வேண்டுமா? என்ன அநியாயம் இல்லையா?? அதுவும் SC, vanniyar ஜாதியை தொடர்பு படுத்தி அசிங்க படுத்தி இருக்கிறான் அனிரூத்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் ”Cockroach Janta Party”.. இந்தியாவிலும் Gen Z கிளர்ச்சிக்கு
minnambalam.com - Mathi : மத்தியில் ஆளும் பாஜக (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது “Cockroach Janta Party”.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 15-ந் தேதியன்று வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த், வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” (Cockroaches) மற்றும் “சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என்று ஒப்பிட்டுப் பேசியதாக விமர்சனம் எழுந்தது.
ஆனால் போலிப் பட்டப் படிப்புகளைக் கொண்டு முறைகேடு செய்பவர்களையே தாம் அவ்வாறு விமர்சித்ததாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் தந்தார்.
பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்திய விஜய்! தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு
hindutamil.in ; சென்னை: கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து திமுக, அதிமுக, தவெக வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளன.
கடந்த ஏப்.21-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பேசிய விஜய், தவெகவுக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கை செலுத்தியுள்ளார். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக செய்தி வெளியானது.
வியாழன், 21 மே, 2026
என் இனிய பொன் நிலாவே பாட்டிற்கு இளையராஜா உரிமை கோர முடியாது; இளையராஜாவின் மனு தள்ளுபடி
தினமலர் : ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் தொடர்பான வழக்கில், காப்பிரைட் சட்டப்படி ‛‛ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும், முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது'' எனக் கூறி இளையராஜாவின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
‛என் இனிய பொன் நிலாவே' பாடல், பதிப்புரிமை தொடர்பாக இளையராஜா டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மே 21) நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விஜய் அமைச்சரவையில் புதிதாக அமைச்சராகும் 23 பேர் பட்டியல்
மாலைமலர் : தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 23 பேர் அமைச்சராக இன்று பதவியேற்கிறார்கள்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. இந்நிகழ்வில், முதலில் வந்தே மாதரமும் பின்னர் தேசிய கீதமும் பாடப்பட்ட பின்னரே, மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதன் பின்னர், புதிய அமைச்சர்களாக ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேரும் பதவியேற்று வருகின்றனர். அவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பழம்பெரும் நடிகை .விஜயகுமாரி : திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு என்ன ஆகுமோ என்ற கவலை
Rebel Ravi : பிரபல பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தின் தற்போதைய புதிய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் ஆட்சி குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் வெற்றியை ஒரு அதிர்ஷ்டமாகப் பார்க்கும் அவர், அவரது தற்போதைய ஆட்சி ‘குருவி தலையில் பனங்காய்’ இருப்பது போல் உள்ளதாகவும், அரசியலில் பயணிப்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ஏற்கனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள் தான் என்றும், புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திமுகவைத் தனிமைப்படுத்தும் fast track அரசியல் நடந்துகொண்டிருக்கிறது.
Amudhan R P : திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.
கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.
சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.
இதற்கான எதிர்வினை தான் தோழமைக்கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதென்பது. திமுக மீண்டுவரக்கூடாது. மக்கள் மத்தியில் விஜய் தடுமாறுவது போன்ற செய்தி போகக்கூடாது என்பது தான் திட்டம். இது ஒரு பெர்ஷப்சன் வார் (perception war). நிஜத்தை விட தோற்றங்கள் தான் சக்தி மிக்கவை. பங்கு சந்தை போல, யார் மேலே, யார் கீழே என்கிற விளையாட்டு காட்சிப்பொருளாக நடக்கிறது.
இப்போதாவது தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டியது, இங்கு நடப்பது நீங்கள் வாக்களித்தது போல, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சனை அல்ல. அது வெறும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கற்கள்.
பி டி ஆர்களை திமுகவே தோற்கடித்தது அதன் விளைவுதான் தவேகவின் வெற்றி
Aravindan Kannaiyan : 2026 தமிழகத் தேர்தல் - கேட்கப்பட வேண்டிய கேள்விகள்
விஜயின் தேர்தல் வெற்றியை சமீபத்திய, நான் நேரில் அனுபவித்த, தேர்தல் அதிர்வுகளுடன் ஒப்பிட வேண்டுமென்றால் 2016-இல் டிரம்ப் ஜெயித்ததோடு ஒப்பிடலாம். இது ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டின் படியான ஒப்பீடு தான், வேறு வகைகளிலல்ல. அந்த 2016 நவம்பர் அதிகாலையில் அமெரிக்காவும் உலகமும் அதிர்ந்தன என்றால் மிகையில்லை. ஜனநாயக கட்சியினர் பலர் வெளிப்படையாகவே அழுதனர், அதிர்ச்சியில் உறைந்து போயினர் என்றும் சொல்லலாம் ஆனால் கூடவே பலர் “நாம் நம் வாக்கு வங்கிகளை இழந்தோம், ஏன் உழைக்கும் வர்க்கம் நம்மை கைவிட்டதென்று ஆராய வேண்டும்” என்றும் பேசினர்.
1967-இல் காமராஜரே தோற்ற போது கண்ணதாசன் “அறம் பாடி அழித்து விடவா விருதுநகரை” என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இன்று கொளத்தூரில் ஒரு முதல்வரே தோற்ற அதிர்ச்சியில் இருந்து திமுக-வினர் பலர் மீளவேயில்லை, புரிந்துக் கொள்ளக் கூடியது தான். திமுக பல தோல்விகளை சந்தித்திருக்கிறது என்றாலும் இது மிக மிக பலமான அடி, கட்சிக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டிய அடி.
திமுகவின் அதிகார நாளேடாகவே மாறிவிட்ட தி இந்து-வே தேர்தல் புள்ளி விவரங்களை தொகுத்தக் கட்டுரையில், “1967 முதல் மாநிலத்தில் கோலோச்சிய திராவிட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட அரசியலை மாற்றுகின்ற தேர்தலாக இது இருக்கக் கூடும்” என்று சொன்னது.
உட்கட்சி மோதல்களால் சிதைந்து கொண்டிருக்கும் அதிமுக .. திரு செம்மலையின் கவலை
![]() |
Giri Sundar : செம்மலை அஇஅதிமுகவிலிருந்து விலகும் முன் இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்திவிட்டுத்தான் விலகியிருக்கிறார்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மூத்த தலைவர்கள் முக்கிய நிர்வாகிகளிடம் இல்லை.அதிமுக தலைவர்கள் மூத்த நிர்வாகிகளிடம் இருக்கும் ஈகோ கட்சியின் வளர்ச்சியை வேகத்தடை போல் தடுக்கிறது.
தன்னுடன் சக அமைச்சரவையில் அமைச்சராக பயணித்த ஒருவரை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது இயக்கத்தின் தலைமையாகவோ ஏற்றுக்கொள்ளும் எந்த எண்ணமும் இவர்களிடத்தில் இல்லை.
தங்கள் மாவட்டங்களில் மற்றும் தங்களது மாவட்டங்களை கடந்தும் தாங்கள் கட்சியில் செய்யும் குறுநில மன்னர் ஆட்சியை கண்டும் காணாது இருக்க தங்கள் விருப்பம் போல் செயல்பட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பொதுச்செயலாளரே இவர்களுக்கு தேவைப்பட்டார்.
அதற்காகவே இவர்கள் எடப்பாடியாரை முன்னிறுத்தினார்கள்.ஆனால் அவரோ தொண்டர்கள் விரும்பும்
புதன், 20 மே, 2026
தமிழர்கள் இவ்வளவு முட்டாள்களாக மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!
![]() |
Swaminathan Poornachandran : எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன்.
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது, தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது.
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து - உடனடியாக விடுவிக்க அரசு உத்தரவு
hindutamil.in -மோகன் கணபதி : இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டம்) வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் முஸ்லிம் லீக் கட்சிகள் இணைகிறது
தினமலர் : புதுடில்லி; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இணைவர். நாளை அவர்கள் பதவியேற்கின்றனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இணைகிறது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு அளித்து உள்ளது. அக்கட்சிக்கு அமைச்சரவையில் நிச்சயம் இடம் உண்டு என்று கூறப்பட்டு வந்த நிலையில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்து வந்தன.
தவேகவின் கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....
![]() |
Dr.M.Wasim Raja : தோண்டத் தோண்ட கள்ள லாட்டரி குடும்பத்தின் ஆயிரம் ஊழல்கள் வெளி வருகிறதே....
அமாவசையிடம் மாட்டிக்கிச்சே தமிழ்நாடு (4):
ஆதவ் அர்ஜுனாவிற்கு திலகவதி ஐபிஎஸ் (முன்னாள்) அவர்கள் பெரியம்மா முறை வேண்டுமாம். போலிஸும், குற்றவாளியும் தொப்புள் கொடி உறவுகளாக இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மிகவும் பொருத்தமான முறையில் பொதுப் பணித்துறையின் கமிசன் அமைச்சராக்கப்பட்டுள்ளது அபாயகரமானது.
செவ்வாய், 19 மே, 2026
ராமநாதபுரம் ராஜா சேதுபதியை 15,692 தோற்கடித்த குதிரை வண்டி தங்கப்பன் திமுக - 24,302
![]() |
![]() |
Dr.M.Wasim Raja : விஜய்யின் கார் ஓட்டுனர் மகனை எம்எல்ஏ ஆக்குனதை பக்கம் பக்கமாக பெருமை பேசிட்டு திரியறாங்க...
இராமநாதபுரம் தேர்தல் வரலாறு:
மன்னரை வென்ற குதிரை வண்டி ஓட்டுநர்!
இன்று திமுக சார்பாகப் போட்டியிட வாய்ப்புக் கேட்கும் அறிவிப்பு வந்தால், ஒரு தொகுதிக்கு 1,000 பேர் வரை மனு செய்வார்கள். ஆனால்,
1967-ல் நடந்த மெட்ராஸ் மாநில சட்டமன்றத் தேர்தலில்
திமுகவிற்கு இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பாளரே கிடைக்கவில்லை என்று சொன்னால் அதுதான் நிஜம்.
காரணம், அங்கு
இராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் இருந்த இராமநாதபுரம் ராஜவம்சத்து
மன்னர் ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதியை வேட்பாளராக
நிறுத்தியது , அவர்தான்
அவர் அந்தச் சமஸ்தானத்து அரசர் என்பதால், அவரை எதிர்த்துப் போட்டியிட யாரும் முன்வரவில்லை.
திங்கள், 18 மே, 2026
ஸ்டாலின் சறுக்கியது எங்கே? | திமுக தோற்ற கதை | DMK | MK Stalin
ஆக, வேர்ப்புழுவுக்கு வைத்தியம் பார்க்காமல் மேலோட்டமாக மகசூலுக்கு மருந்தடிப்பது நீடித்த பலனைத் தராது என்பதை புரிந்துகொண்டு அப்டேட் ஆக வேண்டும்
திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பொதுவாழ்வில் இருந்து ஒய்வு
![]() |
ராதா மனோகர் : அய்யா திரு.PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை மதுரை வாக்காளர்கள் தோற்கடிப்பதற்கு முன்பே பலர் தோற்கடித்துவிட்டனர்
குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் அவரை தோற்கடித்து விட்டது
அரசியல் அவரை தோற்கடித்து விட்டது
மக்கள் அவரை தோற்கடித்து விட்டனர்
திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அரசியல் ஓய்வென்பது தமிழகத்தின் அரசியல் ஒய்வு என்று எடுத்து கொள்ளலாம்
இனி நடக்கப்போவது அரசியல் அல்ல.
வெறும் வியாபாரம் ...
அதுவும் நேர்மை அற்ற வியாபாரம்
இவரின் அரசியல் ஓய்வென்பது ஒரு நீண்ட இருளின் தொடக்கமாக இருக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது
நடிகர் விஜய் உண்மையில் தோற்று கொண்டிருக்கிறார்
விஜய் நீ தோற்றுக்கொண்டிருக்கிறாய்!
உன் தோல்வி உனக்கே இன்னும் புரியவில்லை என்கின்ற போது
உன் தற்குறி கூட்டத்திற்கு எப்படி புரியும்?
நீ மிகவும் பலவீனமானவன்
மனிதர்களின் உண்மையான பலம் என்பது நேர்மையில்தான் தங்கி உள்ளது
உனக்குத்தான் அந்த அறம் என்னவென்றே தெரியாதே
இன்று கும்பலில் கோவிந்தா போடும் உன் கூட்டம் வெறும் சந்தை கூட்டம்தான்
அதுவும் கல்லாத மூடர்களின் தற்குறிச்சந்தைதான்
சொந்த குடும்பங்களோடு எந்தவிதமான புரிதலோ அன்போ இல்லாத ஒரு மனிதனின் ஊருக்கு நல்லது செய்கிறேன் என்ற நாடகம் உன் கும்பலுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம்
ஆனால் சமூகத்திற்கு இது புதிதல்ல
இது போன்ற நாடகங்களை மேடை ஏற்றிய பலரை உலகின் பல மனநல மருத்துவ மனைகள் ஏற்கனவே கண்டிருக்கிறது.
உனக்குதான் எந்த வரலாறும் தெரியாதே
உன்னை சுற்றி உள்ள கும்பல் வெறும் தற்குறி கும்பல் என்பது உலகே அறிந்த உண்மை அல்லவா?
ஞாயிறு, 17 மே, 2026
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை
தினமலர் : சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85.
1983ம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கே. ராஜன் அறிமுகம் ஆனார். நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் போன்ற படங்களை இயக்கியவர். அவள் பாவம், நினைக்காத நாளில்லை, டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். பாம்பு சட்டை, துணிவு, பரகாசுரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா விழாக்கள் மற்றும் சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் கே.ராஜன், திரைக்கலைஞர்களின் செயல்பாடுகளை விமர்சித்து பேசியவர். யூடியூப் சேனல்களிலும் பொது மேடைகளிலும் பலரையும் விமர்சித்து பேட்டியும் அளித்தவர்.
திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
![]() |
ராதா மனோகர் : இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகையாளர் திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகப்பெரும் ஆற்றலை கொண்ட எழுத்தாளர்
மிகவும் சிக்கலான போர் சூழலில் மிக மிக நுட்பமாக செய்திகளை மோப்பம் பிடித்து எழுதுவதில் தனித்திறமையோடு செயல்பட்டார்.
ஈழ போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும்,
பிரபாகரன் உட்பட ஏனைய தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையும் இவர் மூலம்தான் உலகம் அறிந்து கொண்டது.
இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் உயிராபத்து இருந்தும் துணிந்து பல இடங்களிலும் தொடர்புகளை பேணி அவற்றின் மூலம் பல செய்திகளை பொதுவெளிக்கு கொண்டுவந்தார்
புலிகளால் கொலை அச்சுறுத்தல் அளவு கணக்கில்லாமல் இருந்த போதும் ஒரு கத்தி மேல் நடப்பது போல் நடந்து பணியாற்றினார்
சமாதான ஒப்பந்த காலத்தில் இவர் ஆற்றிய எழுத்துப்பணி வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்கது
இவரின் அந்த பணிக்கு பரிசாக கனடாவில் இவர் கொடூரமாக தாக்கப்பட்டார்
பாகிஸ்தான் பெண் நடத்திவந்த மாபியா கேங் அன்மோல் எனும் பிங்கியின் கதை
Neander Selvan : இந்தியாவில், ஏன் அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ கூட முழுக்க பெண்களே நடத்தும் போதை மருந்து கார்ட்டல்களை காண்பது அரிது
ஆனால் பாகிஸ்தானில் அப்படி ஒரு கார்ட்டலை நடத்தி வரலாறு படைத்திருக்கிறார் அன்மோல் எனும் பிங்கி
துரந்தரில் காட்டப்பட்ட கராச்சி நகரின் சட்டவிரோத கடத்தல் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் அன்மோல். இவரது மூன்று சகோதரர்களும் போதைமருந்து பிசினஸில் இருந்தார்கள். அன்மோல் 14 வயதிலேயே மாடலிங் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மாடலிங் துறையில் பிங்கி எனும் பெயருடன் இறங்கினார். கராச்சி மற்றும் பின்னர் லாகூரில் மாடலிங் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தில் கலந்து கொண்டார்.
சனி, 16 மே, 2026
திமுவினரே ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது- ஒரு உடன்பிறப்பின் ஆலோசனை
![]() |
Thamira Aathi : திமுக பூமர்களுக்காக, ஒரு சக பூமரின் கரண்ட் சினாரியோ அறிக்கை
1. நீங்கள் அப்படியே என்னவோ கோட்டையே சரிந்துபோனது போலவும், அவமானப்பட்டது போலவும் நினைத்துக்கொள்ள இதில் ஒன்றுமேயில்லை. திமுக போன்ற கட்சிக்கு ஜெயலலிதாவிடம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோற்றுக் கொண்டிருந்ததை விட அவமானம் வேறொன்று இருக்கவே முடியாது. ஓவரா பர்பாமன்ஸ் பண்ணாதீங்க, அது நமக்கு செட் ஆகாது.
2. உலகத்துலயே இல்லாத ஆட்சியெல்லாம் நாம் பண்ணிவிட்டதாகக் கருத வேண்டாம். காங்கிரஸ், பிசேபி போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு உட்பட்டு, நம்மாலியன்ற அளவில் இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு கல்வி, உட்கட்டமைப்பு, பிற துறைகளில் சிறந்து விளங்குகிறோம். குறிப்பாக சமூகநீதியில் சற்று மேம்பட்டு நிற்கிறோம். அவ்வளவுதான். நாம ஜேம்ஸ்பாண்டுதான், ஜேம்ஸ்பாண்டுதான். அதுக்காக துப்பாக்கியை நீட்டி பிடிச்சமானிக்கே நிக்கத்தேவையில்லை.
10 அமைச்சர் பதவி கொடுப்பதாக தவெக தரப்பில் பேரம் பேசினார்கள்.. போட்டு உடைத்த கேசி வீரமணி!
tamil.oneindia.com - Yogeshwaran Moorthi : சென்னை: தவெக தரப்பில் இருந்து 10 அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ கேசி வீரமணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டு எழுந்திருக்கும் சூழலில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ கேசி வீரமணி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏ-க்களும், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏ-க்களும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி தரப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார்.
வியாழன், 14 மே, 2026
புஷ்பாவின் சோபா ஆட்சி லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.
இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர் தெளிவாக்கவும்
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்)
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ் வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து எம்எல்ஏவும் எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!
ஸ்டாலின் கேள்வி : ரூ.2,500 அறிவித்துவிட்டு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-க்கே இழுத்தடிப்பதா?”
![]() |
இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்போது எதற்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு செய்யப் போகிறீர்கள்?
கடைசில லாமா ரோஸ், திரிஷாவோட டேர்டி ஆட்சியா இருக்கும் போல!
இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர்களை தெளிவாக்கவும்
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்)
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ் வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து எம்எல்ஏவும் எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!
சட்டமன்றத்தில் தயவு செய்து தனி நபர் தாக்குதலை முற்றாக தவிருங்கள்
![]() |
ராதா மனோகர் : நடிகர் விஜயின் அரசுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பதில் சிலர் அவசரம் காட்டுவது சரியல்ல என்று தோன்றுகிறது
பொதுவாகவே ஒரு புதிய அரசு பதவி ஏற்றால் மக்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்
அதிலும் விஜய் அரசியலுக்கு புதியவராக இருப்பதால் கொஞ்சம் அனுதாபமும் இருக்கும்
அவரும் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்
41 கொலைகளையே தனக்கு ஒன்றும் தெரியாது என்றும்,
அது தன்மீது ஏவிவிட்ட சதியென்று பலரையும் நம்பவைத்த காரிய களவாணி அது.
ஆனாலும் ஆட்சிக்கும் அரசுக்கும் புதுசு
அவரின் அப்பாவி முகத்தை கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணாமல் இருப்பது நல்லது
கொஞ்சம் பொறுத்தால் அவரின் சுயரூபம் மக்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய விதத்தில் வெளிவரும்
அதுவரை பொறுத்தல் நல்லது
பிரபாகரனின் குருநாதர் செட்டி தனபாலசிங்கம் முதல் வெள்ளைக்கொடி சரணடைவு வரை
ராதா மனோகர் : தமிழ் தேசிய கூட்டணியின் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் எம்பி திரு கனகேந்திரன் அவர்களின் பேட்டி!
புலிகள் இயக்கம் உருவானது கல்வியின் காட்டில்தான்!
வல்வெட்டி துறையில் அல்ல
அதை உருவாக்கியது செட்டி தனபாலசிங்கம்
செட்டி தனபாலசந்ததின் சிஷ்யனாகத்தான் பிரபாகரன் போராட்டத்திற்கே வந்தார்
புலிகள் இயக்கத்தின் முதல் பெரிய தாக்குதலை மேற்கொண்டவர் திரு செல்லக்கிளி
இவர் திரு செட்டி தனபாலசிங்கத்தின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகும்.
இந்த செல்லக்கிளியின் அண்ணன்தான் இந்த காணொளியில் பேட்டி வழங்கும் திரு கனகேந்திரன் அவர்கள்.
இவர் முல்லை தீவு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்
இவரை தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளராக பிரபாகரன்தான் நியமித்தார்
புதன், 13 மே, 2026
TVK அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு- வெளிநடப்பு செய்யும் திமுக
மின்னம்பலம் - Mathi : முதல்வர் விஜய் அரசு மீது இன்று மே 13-ந் தேதி சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ய கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றது தமிழக வெற்றிக் கழகம். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் உடனே ஆட்சி அமைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக அறிவித்தனர்.
செவ்வாய், 12 மே, 2026
ஆசிரியை கர்ப்பம்: மாணவனுடன் உடலுறவு: 3 ஆண்டுகள் கழித்து கிடைத்த சடலம்
மாலைமலர் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடசாலை மாணவன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியது. எங்கு தேடியும் கிடைக்காத அந்த மர்மத்தின் முடிச்சு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய செல்போன் பழுது நீக்கும் கடையிலிருந்து அவிழ்ந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் கொல்கத்தா மாநகரம் இன்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
யார் இந்த அருண் முகர்ஜி?
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ‘ஸ்டார் உயர்நிலைப்பள்ளி’யில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் அருண் முகர்ஜி. படிப்பில் கெட்டிக்காரன், அமைதியான குணம் என எல்லோராலும் நேசிக்கப்பட்டவன். 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள், பள்ளிக்குச் சென்ற அருண் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர் ராஜேஷ் மற்றும் மாலதி முகர்ஜி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. காலப்போக்கில் அந்த வழக்கு ‘கிடப்பில்’ போடப்பட்டது.
ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
![]() |
Guna Pdkgobi : கோட்டை விட்ட விஜய்.. ஆளுநரின் பிடியில் சிக்கிய 'ஆதரவு கடிதம்' - நீதிமன்றம் சென்றாலும் பலன் இல்லை?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு சட்டச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். "தனிப்பெரும் கட்சிக்குத்தான் முதல் முன்னுரிமை" என்ற ஜனநாயக மரபு, விஜய்யின் ஒரே ஒரு 'நிர்வாகத் தவறால்' தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஆளுநர் ஆர்லேகரின் பிடிவாதம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய் செய்த அந்த விபரீத 'பிளண்டர்'!
சட்டசபைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக நின்றபோது, விஜய் அமைதியாக இருந்திருக்கலாம். ஆளுநர் அழைக்கும் வரை காத்திருந்து, பிறகு சட்டசபையில் தனது பலத்தை நிரூபித்திருக்கலாம். அல்லது நான்தான் பெரிய கட்சி என்று சொல்லி இருக்கலாம். ஆனால், கிண்டி ஆளுநர் மாளிகையில் அவர் சமர்ப்பித்த அந்த ஆதரவுக் கடிதம்தான் இப்போது அவருக்குப் பெரும் வினையாக முடிந்துள்ளது.
தெற்காசியாவில் இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே
![]() |
தெற்காசியாவில் திராவிட மாடல் அரசுக்கு நிகராக ஒரு அரசு இல்லை
இந்த அளவு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அரசு திமுக அரசு மட்டுமே
எதிரிகளும் மறுக்க முடியாத வளர்ச்சி புள்ளி விபரங்கள்
திராவிட ஒவ்வாமையாளர்களே கண்களை அகல திறந்து உண்மையை பாருங்கள்
1.மகளிர் உரிமைத் தொகை ரூ.1000
2.மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்
3.காலை உணவுத் திட்டம்
4.புதுமைப்பெண் திட்டம் ரூ.1000
5.தமிழ்ப்புதல்வன் திட்டம் ரூ.1000
6.நான் முதல்வன் திட்டம்
7.கல்லூரிக் கனவு திட்டம்
8.சிகரம் தொடு திட்டம்
9.உயர்வுக்குப் படி திட்டம்
10.பெண்கள் புத்தொழில் தொடங்கிட மானியம்
11.வெற்றி நிச்சயம் திட்டம்
12.தோழி விடுதிகள்
13.மகளிருக்கான இட ஒதுக்கீடு 40%
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் விடயத்தில் டேமேஜான விஜய்யின் இமேஜ் ரிப்பேர் ஸ்டண்ட்தான் ஸ்டாலின் வீட்டு விசிட்
மின்னம்பலம் - மதி : , “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகின்றான்”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்ன ப்ரோ.. சிச்சுவேஷன் ஷாங்கா?
இல்லை ப்ரோ.. இன்னைக்கு மாஜி சிஎம் ஸ்டாலினை சிஎம் விஜய் சந்திச்சு பேசுனார் இல்லையா.. அதுக்கு இந்த பாட்டை வெச்சுதான் ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க.. உங்க இன்ஸ்டாவை திறந்து பாருங்க..
ஸ்டாலினை விஜய் சந்திச்சதுல என்ன விஷேசம் இருக்கு ப்ரோ?
விஜய் நேத்து சிஎம்மா பதவியேற்ற பங்ஷன்ல தமிழ்த் தாய் வாழ்த்தை 3-வதாக பாடுனது, சம்பந்தமே இல்லாம வந்தே மாதரம் பாட்டை முதலில் பாடுனது எல்லாமே பிரச்சனையாகிடுச்சு..
2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்
hindutamil.in : சென்னை: சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. குழுத் தலைவர் பதவி கோரி இரு தரப்பினரும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தனித்தனியே சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், விசிகவின் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 10-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றார். சட்டப்பேரவையில் 13-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிறு, 10 மே, 2026
விஜய் முதல்வராக பதவி ஏற்றார் 9 அமைச்சர்களும் பதவி ஏற்பு
தினமலர் : தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆதவ் அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்தது; அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். தற்போது, தமிழக அமைச்சரவை இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:
1. விஜய்
2. ஆனந்த்
3. ஆதவ் அர்ஜூனா
4. அருண் ராஜ்
5. செங்கோட்டையன்
6. வெங்கட்ரமணன்
7. நிர்மல்குமார்
8. ராஜ்மோகன்,
9. பிரபு
10. கீர்த்தனா
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழாவில் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஆண்டவன் மேல் ஆணையிட்டு என உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஆனால் ஆதவ்அர்ஜூனா மட்டும் ஆண்டவனை தவிர்த்து உளமாற என்று கூறினார்.
சங்கீதாவுக்கும் மகன் ஜேசனுக்கும் மகள் ஷாஷாவுக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும்
![]() |
ராதா மனோகர் : இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?
எந்த குழந்தைகளுக்கும் தந்தை தாயன்பு என்பது அடிப்படை உரிமை!
அடிப்படை ஆதாரம்!
அதிலும் தந்தை நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்!
இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல எங்கோ ஒரு தூரத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்
இத்தனைக்கும் காரணமான அப்பன்காரன் நாட்டுக்கே எழுச்சியும் உயர்ச்சியும் வழங்க போகிறேன் என்று ஊரை கூட்டி கதை அளந்து கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே 41 உயிர்களை கொன்றுவிட்டு . அதை பற்றி எந்த கவலையும் அற்று அதைப்பற்றி ஏதோதோ கதைகள் எல்லாம் கூறிவிட்டு,
![]() |
அந்த அப்பாவி உயிர்களின் குடும்பத்தினரை தன்வீட்டிற்கே அழைத்து ரொம்ப சாரிங்க என்று கூறிவிட்டு அலட்சியமாக கடந்து விடுகிறார்!
இவர்தான் நாட்டை காக்கப்போகிறேன் நாகரிக கோமாளி வந்தேன்ங்க என்று கூறுகிறார்
ஒரு மனிதன் தன்குடும்பத்தினரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பது முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டிய விடயம்தான்
முதல்வர் விஜய்யுடன் நாளை பதவியேற்கும் அமைச்சர்கள்!- பார்ப்பனர் வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை
minnambalam.com -Mathi : முதல்வர் விஜய்யுடன் பதவியேற்கும் அமைச்சர்கள்- உத்தேச பட்டியல்- காங்-க்கு 1 இடம்- ராகுல் காந்தி வருகை!
தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் நாளை பதவியேற்கின்றனர். விஜய் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
பதவியேற்போர் விவரம் (உத்தேச பட்டியல்)
விஜய்- முதலமைச்சர் -பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
அமைச்சர்கள்
1) புஸ்ஸி ஆனந்த்- நகராட்சி நிர்வாகத்துறை
2) செங்கோட்டையன் – பொதுப்பணித்துறை –
3) ஆதவ் அர்ஜூனா – விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை
4) அருண்ராஜ் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
5) வெங்கட்ராமன் – பள்ளி கல்வித்துறை
6) ஜேசிடி பிரபாகர்
7) ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி, காங்கிரஸ்)
8) நிர்மல்குமார்- மின்சாரத்துறை
9) ராஜ்மோகன் – ஆதிதிராவிடர் நலத்துறை
ஜோசியர் ஆலோசனைப்படி..
முதல்வராகும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி நாளை விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்கின்றனர்.
ராகுல் காந்தி வருகை
தமிழகத்தில் 1967-க்குப் பின்னர் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இடம் பெறுகிறது. இதனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை விஜய் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருகிறார்.
EVM மோடி மோசடியால் திமுக தோற்கடிக்கப்பட்டது!
![]() |
Giri Sundar : திமுக எங்கேயும் தோற்கவில்லை! EVM மோசடியால்! மோடியால்! தோற்கடிக்கப்பட்டது!
திமுக மக்களால் புறக்கணித்து தோற்கவில்லை!
புதுச்சேரியில் தவெக தடந்தெறியவில்லை! காரணமே அங்கே பாஜக கூட்டணியாட்சி! EVM மோசடியை நிகழ்த்தவில்லை!
EVMல் சந்தேகம் வலுக்கிறது VVPADஐ எண்ண வைத்தால் ஞானேஷ்குமார் மோசடி அம்பலமாகிவிடும்! 48Hours கடந்ததும் Automatic program Zonal zip டையோடு மூலமாக VOTE TRANSFER ஆகிவிடும் என்று பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் நிபுணர்கள் கூறுவதை நாம் புறந்தள்ள முடியாது!
மக்கள் வாக்களித்தது திமுகவுக்கு என்பதும் முழு உண்மைதான்!
திமுக கூட்டணியின் உள்ளடி துரோகத்தால் வீழ்ந்ததா? என்றால்! ஆம்! வீழ்த்தப்பட்டது! உண்மைதான்!
வேறென்ன? திமுக கட்சிக்குள்ளும் உள்ளடி வேலையைச் செய்தார்களா? ஆம் செய்தார்கள்தான்! தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற உட்புற ஆதங்கவேட்டையுணர்வும் வேட்டுவைத்தது என்பதும் உண்மைதான்!
சனி, 9 மே, 2026
யாழ்ப்பாணத்து மடைப்பள்ளிகளும் தெலுங்கு மடுகா நடிகர் விஜய்யும்
![]() |
ராதா மனோகர் யாழ்ப்பாணத்தில் 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் காலத்தில் ஒரு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற்றது
அதில் மூன்றாவது பெரிய ஜாதியாக மடைப்பள்ளி என்ற ஜாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது
இன்றும் கூட கோயில்களில் உள்ள சமையல் அறையை மடப்பள்ளி என்றுதான் அழைக்கிறார்கள்
சமைப்பவரை மடைப்பள்ளி என்றும் முன்பு அழைத்தார்கள்
இது பற்றிய செய்திகளை சைமன் காசி செட்டி simon kasi chetty அவர்களின் வரலாற்று ஆவண குறிப்புக்களில் காணலாம்
இப்போதும் அந்த வழக்கம் அற்று போய்விட்டது.
மொத்த யாழ்ப்பாண மக்கள் தொகையில் இந்த மடைப்பள்ளி என்ற ஜாதி ஐந்தில் ஒரு பகுதியாக உள்ளது
பின்பு காலப்போக்கில் இந்த ஜாதி காணாமல் போய்விட்டது
இவர்களும் ஏனைய பல ஜாதிகளை போலவே வெள்ளாள ஜோதியில் கலந்திருக்க வாய்ப்புள்ளது
குறிப்பாக இசைவேளாளர் தேவேந்திர குல வெள்ளாளர் போன்று பல ஜாதிகள் தங்கள் ஜாதிப்பெயர்களோடு வெள்ளாளர்கள் லேபிளை ஒட்டி கொள்ளுதல் ஒரு மரபு
அந்த வகையில் விஜய்யின் பெற்றோரும் வெள்ளார் ஜாதி லேபிளை ஒட்டியிருக்க கூடும்.
புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் ஸ்டாலின்
hindutamil.in - அனலி சென்னை: “மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வார். இதனால், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் முதலில் ஆதரவு தந்தது. பின்னர், சிபிஐ, சிபிஎம் தனது ஆதரவை அளித்தன. இதனையடுத்து தவெகவுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது.
இந்தச் சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது.
பாஜக பாலியல் கொடூரன்களை பாதுக்காக்கும் பாஜக ஐ டி விங் கொடூரன் சிடிஆர். நிர்மல் குமார்
![]() |
Parama Cpim · நிர்மல் குமார் யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
யார் இந்த நிர்மல் குமார்..,?
தவெக வின் நிர்மல்குமார் பற்றி தெரிய இதை படிக்க வேண்டியது அவசியம்...!!
* 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி, உபியில் ஹத்ரஸ் என்கிற கிராமத்தில் 19 வயதான ஒரு தலித் பெண், ஒரு பண்ணைக்கு வழக்கம்போல சாணி அள்ளச் சென்றார்.
* அப்போது ஆதிக்க தாகூர் சாதியைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுசா, ராவி ஆகிய நால்வரும் அந்தப் பெண்ணைப் பிடித்து, அவளது துப்பாட்டாவையே எடுத்து அவள் கழுத்தில் சுற்றி மாட்டி, அதைப்பிடித்துக்கொண்டே, ஒரு ஒதுக்குப்புறமாக தரதரவென்று தரையில் இழுத்துக்கொண்டு சென்றனர்.
* அங்கே, அந்த நான்கு கொடூர மிருகங்களும் அவளைக் கூட்டுப் பாலியல் வன்புணர் செய்தனர். இறுதியாக அவளைக் கொன்று வீசுவதற்காக அவளது கழுத்தில் துப்பாட்டாவை இறுக்கி மரத்தில் தொங்கவிட முயற்சி செய்தனர். அப்போது கழுத்தை நெருக்கியபோது, துடித்ததில் அவளது நாக்கு பாதி துண்டானது. அவள் துடித்துப்போய் கத்தினாள்.
தவெக வெற்றி வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி
Surya Xavier : ஊடகங்கள் வெளிப்படுத்தாத ஒரு முக்கிய தகவலைப் பகிர்கிறேன்.
தபால் வாக்குகளில் திமுக 163 தொகுதிகளிலும்
அதிமுக 46 தொகுதிகளிலும்
தவெக 25 தொகுதிகளிலும்
முன்னிலை பெற்றுள்ளது.
பதிவான தபால் வாக்குகளில்
திமுக 47 முதல் 52 சதமும்
அதிமுக 30 முதல் 35 சதமும்
தவெக 12 முதல் 17 சதமும்
பெற்றுள்ளது.
மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.
தேர்தல் ஆணையம் முழுமையாக இதை வெளியிடவில்லை.
ஆனால் மேற்கண்ட முன்னிலை வகிக்கும் தொகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் திமுக பின்னோக்கி செல்வதாக உள்ளது.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில்
முதலமைச்சர் 982 வாக்குகளும்
அதிமுக 215 வாக்குகளும்
தவெக 383 வாக்குகளும்
நாதக 34 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உடல் மீட்பு!
hirunews.lk : சந்தேகத்திற்குரிய வகையில் மரணமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் ஊழல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
தவெகவுக்கு ஆதரவு இல்லை: ஐயூஎம்எல் கே.எம். காதர் மொகிதீன்விளக்கம்
hindutamil.in - வெற்றி மயிலோன் : சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு ஆதரவு இல்லை என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் சமூக வலைதளப் பதிவில், ‘தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது என காதர் மொகிதீன் கூறினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற புதுச்சேரி கொடூரனுக்கு துாக்கு
dinamalar.com : புதுச்சேரி: புதுச்சேரியில், 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த, 5ம் வகுப்பு படித்த, 9 வயது சிறுமி, 2024 மார்ச் 2ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிய போது மாயமானார்.
முத்தியால்பேட்டை போலீசார் தேடிய நிலையில், மார்ச் 5ம் தேதி, வீட்டில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில், கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
அமமுக எம்.எல்.ஏ. பெயரில் விஜய்க்கு போலி ஆதரவு கடிதம்.. விசாரித்த ஆளுநர்.. ஆட்சியை பிடிக்க தவெக மோசடி..
minnambalam.com - Mathi : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு என ஆளுநர் அர்லேகரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க இருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
வெள்ளி, 8 மே, 2026
திமுகவின் கல்வி புரட்சியை கண்டு மிரண்ட தனியார் கல்வி கொள்ளையர்கள் உருவாக்கிய ரோபோதான் நடிகன் விஜய்
Giri Sundar : இந்த ஐந்தாண்டு பள்ளி கல்வித்துறை, உயர் கல்வி கல்லூரித்துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் மிரண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து திமுகவுக்கு எதிராக தற்குறி நடிகனை உருவாக்கி
திமுகவை தோற்கடித்தது.
இதன் பிண்ணனியில் வி●ஐ●டி வி●ஸ்வநாதன் இருக்கிறார்.
எண்பதுகளில் எம்ஜிஆர் கட்சியில் ஜெயலலிதா இணைந்த உடன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக எம்ஜிஆர் கட்டுப்பாட்டை இழந்து ஜெயலலிதாவிடம் செல்ல ஆரம்பித்தது.இது அன்றைய வலம்புரி ஜான் பேட்டிகளில் தெரியும்.
எம்ஜிஆர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னுடைய தீவிர ஆதரவாளர்களான ஜேப்பியார், முனிரத்னம், ஏசி சண்முகம், ஜெகத்ரட்சகன், பச்சை முத்து, ஜிவிஸ்வநாதன், இன்னும் பலர
பணம் கொடுத்து கல்லூரி ஆரம்பிச்சி அரசியலை விட்டு ஒதுங்க சொல்லி விட்டார்.
காங்கிரசோடு திமுக கொண்டிருந்த 22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது! ஆசீர்வாதம் ஆசாரியின் வாக்குமூலம் :
எரியும் சூரியனே திராவிடம் தோற்காது
காங்கிரசோடு திமுக கொண்டிருந்த 22 வருட உறவு இன்றோடு முடிவடைந்தது!
ஆசீர்வாதம் ஆசாரியின் வாக்குமூலம் :
அப்பொழுது 2004 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம். டெல்லியில் எனது இல்லத்தில் அமர்ந்து சன் டிவியில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். எனது கைப்பேசியில் அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் (@dmk_raja) அழைத்தார். அப்போது அவர் சென்னையில் தலைவருடன் அறிவாலயத்தில் இருந்தார். அதற்கு முந்தைய மாதம் அவர் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார். அவருக்கு கூடவே இருந்து பணி செய்யும் பொருட்டு எனது அரசுப் பணியில் இருந்து 6 மாதம் விடுமுறை எடுத்து இருந்த காலம் அது.
அலைபேசியில் பேசிய அமைச்சர் ராஜா, டெல்லியில் இருந்து ஒரு முக்கியமான VVIP சென்னை வர வேண்டி இருப்பதாகவும், அந்தப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் எனக்கு உத்தரவிட்டார். யார் அந்த VVIP ? என்று நான் கேட்டேன்.
வியாழன், 7 மே, 2026
முன்னாள் போலீஸ் கமிஷனர் Ravi Muthusamy Ipsயின் மோசடி கருத்து திணிப்பு வியாபாரம்
![]() |
![]() |
Arul Doss Borntowin · 2240 ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளை வைத்து 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.44 லட்சம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினேன். அதில் 41 சதவீதம் வாக்குகள் த.வெ.கவிற்கு செல்லும் என முன்னாள் போலீஸ் கமிஷனர் Ravi Muthusamy Ips ஊடகங்களில் சொல்லி இருந்தார். அவர் சொன்ன கருத்து தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏறக்குறைய உண்மை ஆயிருக்கிறது.
ஏறக்குறைய 35 சதவீதம் வாக்குகளை
த.வெ.க வாங்கி ஆட்சி அமைக்கவிருக்கிறது.. அவர் சொன்ன படி நடந்திருக்கு. அவரின் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள் ரவி அவர்களே ! அதில் ஒரு வார்த்தையை இன்று உங்களின் முகநூல் பக்க வீடியோவில் பார்க்க நேர்ந்தது. அதில் உங்கள் தந்தை சமூக நீதியை சொல்லிக் கொடுத்தார் என்றும் , அதன் அடிப்படையில் மக்கள் பணியையும் , காவல் பணியையும் செய்ததாக சொல்லி உள்ளீர்கள். மகிழ்ச்சி.
நேர்மைக்கு பெயர் போன நீங்கள் நேர்மையாக பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன். 2.44 லட்சம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த உங்களுக்கு எவ்வளவு தொகை செலவானது?
ராகுல் - பிரியங்காவின் ப்ரெயின் சைல்ட் தான் விஜய். அவருக்கான நிதி ஆதாரத்திற்கு பின் துணை பிரியங்கா வகையறா
![]() |
குமரிக் கிழவனார் : நான் தேர்தலில் நாதக சார்புநிலை எடுத்திருந்தேன்.
நான்கு நாதக வேட்பாளர்களை ஆதரித்து பதிவுகள் எழுதியிருக்கிறேன்.
மூன்று நாதக வேட்பாளர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தேன்.
இரண்டு வேட்பாளர்களின் களப்பணிக்கு பின் துணையிருந்தேன்.
கிட்டத்தட்ட அவர்களின் எல்லா தேர்தல் நடவடிக்கைகளையும் ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமான தொடர்பில் இருந்தேன்..........
தேர்தல் கணிப்புகளில் இதுவரையில்லாத ஒரு வகையில் நான் மிக தவறாக கணித்திருந்தேன்.
அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
விசில் நோயால் இத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் முன் உணரவில்லை.






























