வியாழன், 30 ஜூன், 2016

காபரெட் மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !

தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் "டிசண்டிங் டையக்னசிஸ்"(Dissenting Diagnosis”). னியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”).  நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் 78  மருத்துவர்களை சந்தித்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடத்தை குறித்து கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மருத்துவர்கள் அருன் கேத்ரே மற்றும் அபய் சுக்லா ஆகியோர் இப்புத்தகத்தை  எழுதியுள்ளார்கள். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்” குறிப்பாக 1990-களுக்கு பிறகு மருத்துவம் எந்த அறமுமில்லாத தொழிலாக சீரழிந்திருக்கிறது, எப்படி வணிகமாக மாறியிருக்கிறது  என்பதை மருத்துவர்களின் தனிப்பட்ட அனுபவங்களினுடாக விவரிக்கிறார்கள்.

கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு சுவாதியை சந்தித்த இளைஞர்: நேரில் பார்த்த ரயில் பயணி

>சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார் ஐ.டி. ஊழியர் சுவாதி. இந்த சம்பவத்தில் குற்றவாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.>சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் சந்தித்துப் பேசியதாக தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் ;6.50 செங்கல்பட்டு ரயிலில் ஏற 6.40க்கு ரயில் நிலையத்தில் இருப்பேன். அப்போது டப் டப் என சத்தம் கேட்டது. நான் 4வது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். அந்தப் பெண் 5வது கம்பார்ட்மெண்ட்டில் பெண்களுக்கான பெட்டியில் ஏற நின்றார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 6, 7 பேர்தான் இருந்தார்கள். இரண்டு பெண்கள் அய்யோ, அய்யோ என கத்தினார்கள். ஒரு வாலிபர் இரண்டாவது நடைமேடையில் வேகமாக சென்றார். அவரை ஒருவர் துரத்தினார். அப்போது செங்கல்பட்டு ரெயில் வந்தவுடன் நான் ஏறிபோய்விட்டேன்

ஆங்கிலம் இனி தேவையில்லை : ஐரோப்பிய ஒன்றியம் முடிவு


லண்டன் :ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளதால் தங்களின் அலுவல் மொழிகளின் பட்டியலில் இருந்து ஆங்கிலத்தை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் உறுப்பு நாடுகளிலும் இனி ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்காது என கூறப்படுகிறது.
இது குறித்து ஐரோப்பிய பார்லி.,ன் அரசியலமைப்பு விவகார குழு கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் அவர்களின் மொழியான ஆங்கிலம் எங்களுக்கு தேவையில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் தங்களின் முதன்மை மொழியை தேர்வு செய்யும் உரிமை உண்டு. ஆனால் பிரிட்டனை மட்டுமே ஆங்கிலத்தை தங்களின் முதன்மை மொழியாக பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணங்கள் மற்றும் சட்ட பதிவுகள் 24 ஆட்சி மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதனால் ஆங்கிலம் தனது அந்தஸ்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தினமலர்.com

ஏன் யாரும் காப்பாற்ற வரவில்லை? சுவாதி 2 மணிநேரம் ரெயில் நிலையத்திலேயே....ஏன் யாரும்?


இந்நிலையில் சென்னையில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து விவாதித்து வருகின்றனர்.சுவாதி படுகொலை செய்யப்பட்டு 2 மணி நேரம் ரயில் நடைபாதையிலே கிடந்துள்ளார். அவருக்கு உதவவோ, கொலை செய்தவனை பிடிக்கவோ, சுவாதியை மருத்துவமனையில் சேர்க்கவோ யாரும் முன்வரவில்லை.

புனைவு ஆபாசப் படம் நம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா?

ஓர் அநியாய மரணத்துக்குப் பின்பான போராட்டங்கள் என்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. அதேநேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போவச் செய்வது என்பது அதிகார மையங்களுக்கு ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொனி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்து விரட்டியும் கூட போராட்டம் ஒடுக்கப்படும்.
இதில் சேலம் வினுபிரியா தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு பிரச்சினையை தற்காலிகமான முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

சுப.வீரபாண்டியன் : ஒசந்த சாதி மகேந்திரனின் சாதி வெறி...

சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது! நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது.  இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும் ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
அந்தப் பதிவைத் தான் உருவாக்கவில்லை என்றும், தனக்கு வந்த ஒரு செய்தியை, அதில் நியாயம் இருப்பதாகத் தானும் அந்த நேரத்தில் கருதியதால், பிறருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் தமிழ் எழுத்துகளே இல்லை என்றும், ஆங்கிலம்தான்   உள்ளதென்றும்  கூறியுள்ளார். (ஒருவேளை சமற்கிருத எழுத்துகளையும்  வைத்திருக்கக்கலாம். தமிழ் எழுத்து இருக்க வாய்ப்பில்லைதான்.)
அவர் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் அவர் நேர்காணல் வெளியிட்டுள்ள பல சாதிய நஞ்சினை நம்மால் ஏற்க முடியவில்லை.

24 மணிநேரமும் திறப்பு ! தியேட்டர், ஹோட்டல், கடை மற்றும் வங்கிகள் மணி நேரமும் open

24 hours malls, theatres, restaurants could be a reality soonடெல்லி: தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வங்கிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
'The clearance of the Model Shops and Establishments (Regulation of Employment and Conditions of Services) Act 2015' என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம், 24 மணி நேர சேவை சாத்தியப்படும்.

தற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், ஐடி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வினுப்பிரியவின் கொலையாளி : காதலை ஏற்காததால் ஆபாசமாக மாப்பிங் செய்தேன்

சேலம்,:'பேஸ்புக்'கில் வினுபிரியாவின் புகைப்படத்தை, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவன் கைது செய்யப்பட்டான். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மோட்டூர் புவனகிரி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 46. அவரது மகள் வினுபிரியா, 21. கடந்த, 16ம் தேதி, பேஸ்புக்கில், வினுபிரியாவின், 'மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச புகைப்படம், பரவியது. இது குறித்து, புகார் அளித்த வினுபிரியாவின் பெற்றோர் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.மார்பிங் ஆபாச படம் தொடர்ந்து, பரவி வந்ததால், மனமுடைந்த வினுபிரியா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   அம்மா, அக்கா, தங்கச்சி யாரேனும் இருந்து இவன் சொன்னதைக் கேக்கலேன்னா அவங்க படத்தையும் மார்பிங் செய்து போடுவானா ????

Y.G.மகேந்திரனின் மகள் மதுவந்தி தமிழக பாஜகவில் உயர் பதவி... பிலால் மாலிக் உபயம்..

தமிழக பாஜகவில் YG மகேந்திரனின் புதல்வி  மதுவந்தி உயர் பதவியில் ! அதுவும் கல்வி அமைச்சர் ரேஞ்சுக்கு . அவிங்க குடும்பம்தான் அவாள் கல்விக்கு அதாரிட்டி. விரைவில் சமஸ்கிருத கிருமி பரவும். பத்மா சேஷாத்ரி குடும்பமா கொக்கா? ஒய். ஜி.பார்த்தசாரதி பேத்திக்கு   வாழ்த்துக்கள் ..... நேத்து ஒய் .ஜி மகேந்திரன் ஓவரா அலப்பறை பண்ணியது ஏனென்று இப்போ தெரிகிறது .அவர்கள் ஓவரா பொங்கல் வச்சப்பவே நினச்சேன் ... எதுக்குமே பொங்கல் பொங்காதவர் இதுக்கு நுரைத்தல்ல பொங்கும்போதே யோசிச்சு இருக்கணும் நாம் ... பொங்கல் நல்லா பொங்கிட்டது ...அப்புறம் நெம்போ பொங்கி அடுப்பு அணைஞ்சிருச்சாம் ( பதிவு அழிக்கப்பட்டது)... உயிர்னா எல்லோருடைய உயிரும் ஒன்னுதான்.... அது எந்த ஜாதியா இருந்தா என்ன .... மனிதாபிமானம் மட்டும் இருந்தாபோதும்... சாவுல கூட ஜாதி.தம்பி கடந்த 10 ஆண்டுகள் சொறிஞ்சி இருந்த ஆயா . 3 நாளில் 6 கொலை . இதற்காக ஒரு வருத்தம் அல்லது நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட நேரம் இல்லையா முதுகு இல்ல எடுபட்ட அமைச்சர் நாய்களுக்கு ? 3 நாளில் 6 கொலை . இதற்காக ஒரு வருத்தம் அல்லது நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட நேரம் இல்லையா முதுகு இல்ல எடுபட்ட அமைச்சர் நாய்களுக்கு ? பெருசா பேசக்கூடாது அரசியல் நாகரீகம் இல்லாத கொல்லை கூட்டம்தானே.?முகநூல் உபயம்

புதன், 29 ஜூன், 2016

சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!

கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதிசுவாதியை விடாது கொல்லும் பார்ப்பன வெறியர்கள் ! ஆவணத் தொகுப்பு
சுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால். ஒரு வேட்டை நாயைப் போல பெண்களை துரத்தி பாடுபடுத்தி அடக்குவதே ஒரு இளைஞனின் நவீன மஞ்சு விரட்டு வீரம் என்பதாக சினிமா பயிற்றுவித்திருக்கிறது. தனக்கு அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு விலங்கு எப்படி மறுப்பு தெரிவிக்கலாம் என்பதே இவ்வெறியர்களின் நிலை. இதில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும் கூட ஒரு பெண்ணுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்பதை இக்கயவர்கள் விதியக வைத்துள்ளார்கள்.
மேலும் சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம்.

விஜயகாந்த்: உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் கிடையாது! கட்சிக்கு செலவழித்தவர்கள் தலையில் துண்டு

கட்டம் கட்டப்படுகிறார் விஜயகாந்த்: 'உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது' என, விஜயகாந்த் கைவிரித்ததால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் நிறைய செலவு செய்தும், இவர்கள் படுதோல்வி அடைந்தனர். இதனால், இவர்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.  கருப்பு எம்ஜியார் கப்டன் விஜயகாந்த்  டப்பு லேது என்று கூறி விட்டார் , தமிழ்நாட்டுக்கு  சேவை செய்த கண்மணிகளே போய் வேலை வெட்டி யை பாருங்க...அரசியலுக்கு வரவில்லையென்றால் அது ரஜினிகாந்த்...அரசியலே வரவில்லையென்றால் அது விஜயகாந்த்...  ஆனா ரெண்டு பேருமே கல்லா கட்டுறதுல கில்லாடிங்க .  ஜனங்க ? புண்ணாக்குங்க .

ஜெகன்மோகன் ரெட்டியின் 749 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. YSR காங்கிரஸ் தலைவரின்...

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் மறைந்த முன்னாள் ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன். ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பெங்களூரூ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஜப்தி செய்தது.தினமலர்.காம் ஏனுங்க வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றம் அல்ல என்று ஜெயலலிதாவின் நீதிபதிகள் சொல்றாங்களே?

வைகோ :நான் அதிமுகவின் பீ டீம் புரோக்கர்தான் ! ஒரு அரசியல் விபச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் !

திருச்சி: எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசினார். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ''என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை  மறுக்க முடியாது.

திராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவாக மாறுகிறதா? காலில் விழுதல்- துதி பாடல் -?

திமுகவில் காலில் விழும் கலாச்சாரம்..கொத்தடிமை புத்தி படு வேகமாக வளர்கிறது.... திமுக அம்மாதிமுகவாக மாறக்கூடாது... இன்று மு.க ஸ்டாப்களின் மருமகளுக்கு பிறந்தநாளாம்..அவருக்கு திமுகவினர் அண்ணி என்று விளித்து வாழ்த்துகிறார்கள் ? எதற்காக ? வருங்கால திமுகவின் வாரிசு விடம் இப்போதே விசுவாசத்தை காட்டுகிறார்களா?... திமுகவினர் பலர் என் முகநூல் பக்கத்தை டேக் இணைத்துள்ளார்கள். வாரிசு அரசியலையும்...துதிபாடும் அரசியலையும் தனிநபர் வழிபாடும் அரசியலையும்... கலைஞரும் தளபதியும் வன்மையாக கண்டிக்க வேண்டும்..அப்படிப் பட்டவர்களை தங்கள் அருகில் சேர்க்கக்கூடாது இப்போதே களை எடுக்கத் தவறினால் பின்பு திமுக இருக்காது. திமுக ஒரு லட்சிய இயக்கம்...மக்கள் இயக்கம் என்று சொன்னால் போதாது. செயல்படுத்தியும் காட்டவேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது. தாமோதரன் முகநூல்

Istanbul துருக்கி விமான நிலைய குண்டு வெடிப்பு 28 பேர் இறப்பு 60 பேர் படுகாயம்


துருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 28 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் பன்னாட்டு வருகையிலுள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறையை ஒட்டிய பகுதியில் குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஜெயலலிதா ஒருபோதும் விடுதலை செய்யவே மாட்டார் !

"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார், அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.
இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அன்பை பகிருங்கள் என்று வேண்டிகொண்ட கன்னியாஸ்திரி.. கடவுளை கும்பிடுங்கள் என்று கூறவில்லை

இந்த கன்னியாஸ்திரி  மிகவும் ஆனந்த நிலையில் தனது இறுதி யாத்திரையை ஆரம்பிதார். இவரது புன்னகை  சமுக வலைதளங்களில்...  ஆஜெண்டினாவை சேர்ந்த பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்பும் கனிவும் நிறைந்த மரியா,நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை தொண்டாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து போனார். அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இறக்கும் தருவாயில் சிஸ்டர் மரியா கூறியவாறே உயிரிழந்தார். முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் புகைப்படங்கள்தான் இவை.விகடன்.காம்

இளங்கோவன் ராஜினாமா...இனி தமிழக காங்கிரஸ் மெல்ல காணாமல் போகும் ?

யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக துணிச்சலாக பேசுவது, கூடவே நக்கலும், நையாண்டியும். தனக்கு எதிராக பேசுபவர் யாராக இருந்தாலும், கட்சியில் இருந்து அதிரடியாக தூக்குவது, பலருடன் மோதல் போக்கை கடைபிடிப்பது என தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியேற்றதில் இருந்து சர்ச்சைகளுடனே வலம் வந்தார் இளங்கோவன்.இதனால் அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டார், அதுவே அவருக்கு பலமாகவும் இருந்தது. ஆனால் இந்த சர்ச்சைகளே அவரது பதவி பறிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்யுமாறு மேலிடம் அழுத்தம் கொடுத்ததாலயே அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் பேசப்படுகிறது.

செவ்வாய், 28 ஜூன், 2016

திருநெல்வேலி : அண்ணன் தங்கை மாலாவை வெட்டி கொன்றான்.. ஆணவ கொலை

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள மேலமூன்றடைப்பைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன். அரசுப் பேருந்து நடத்துநர். இவரது மகன்கள் கிருஷ்ணராஜா, செல்வக்குமார், மகள் மாலா. இதில், கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றுகிறார். மாலா, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தபோது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வேலை செய்துவந்த சார்லஸ் என்பவருக்கும் மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சார்லஸுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனராம். இந்த விவரம் தெரியவந்ததும், மாலாவை பெற்றோர் கண்டித்ததால் அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மாலா காணாமல் போயிருக்கிறார்.

சினிமாவும் டிவியும் பெண்களை படுக்கை பொருளாக... ஆணாதிக்க - காம வெறியை தூண்டுகின்றன

சுகந்தி நாச்சியாள்சுகந்தி நாச்சியாள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது நத்தை வேகத்தில்.

இந்தியர்களின் அமெரிக்க மோகம்... சீனா நக்கல்?

புதுடில்லி:  சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ்:  இந்தியர்களுக்கு தேசியம் என்றால் என்ன என தெரியவில்லை. நீதிநெறி முறை பற்றி தெரியவில்லை. மேற்கத்திய நடைமுறையை பின்பற்றி தங்களை பாழ்படுத்தி கொள்கின்றனர். மேகத்திய நாடுகளை பின்பற்றுகிறது.
இந்தியாவின் பெரிய நோக்கத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் முழு உலகம் மட்டுமல்ல. அமெரிக்காவின் ஒப்புதல் பெற்று விட்டால் மட்டும் உலக நாடுகளின் ஒப்புதல் பெற்றது போலாகி விடாது. இது தான் அடிப்படை உண்மை. ஆனால், இதனை இந்தியா புரிந்து கொள்ள மறுக்கிறது.
இந்தியா பெரிய நாடாக விளங்க வேண்டும் என நினைக்கின்றனர். பெரிய நாடுகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்எஸ்ஜியில் நாடுகள் உறுப்பினராவதற்கான விதிகளை இதியா கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா இன்னும் அணுசக்தி பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்எஸ்ஜியில் இந்தியா விண்ணப்பித்தவுடன் இந்திய பத்திரிகைகள், சீனா தவிர 47 நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டன. என கூறியுள்ளது.தினமலர்.com

பார்பனர்கள் கொல்லப்பட்டால் அரசு துறைகள் படு வேகமாக செயல்படும்? தலித் கொல்லப்பட்டால்....?

மிஸ்டர் ஒய்.ஜி. மகேந்திரன்,
உங்கள் ஆட்கள் யாராவது கொல்லப்பட்டால் அரசுத்துறைகள் விரைந்து செயல்பட்டுவிடும். அல்லது நீங்கள் யாரையாவது காலிசெய்தாலோ அத்துறை செயல்படாமலே இருந்துவிடும் (உங்கள் பள்ளியின் அலட்சியத்தால் கொல்லப்பட்ட மாணவனின் வழக்கில் நீங்கள் ஒரு ரோமத்தைக் கூட இழக்கவில்லை இல்லையா...)
இங்கே ஒரு தலித்துக்காக அரசுத்துறை தன் கடமையை செய்யவே நாங்கள் கும்பல்கூடி ஃபேஸ்புக்கில் அழவேண்டியிருக்கிறது, சாலைகளில் ஆர்பாட்டம் செய்ய வேண்டியிருக்கிறது.
நாங்கள் பலவீனமானவர்களின் குரல் சமூகத்திற்கு கேட்பதற்காக பேசுகிறோம். உங்களைப்போல சாவுக்கு அழ செத்தவனிடம் முப்புரி நூல் தட்டுப்படுகிறதா என தேடுவல்திலை.
போட்டது பெரியவா என்பதால் கொல்லப்பட்ட சங்ககரராமன் விவகாரத்தில் நீங்கள் எல்லோரும் பொத்திக்கொண்டிருந்தீர்கள்.

சுவாதி கொலையும் YG மகேந்திரனின் ஜாதி அபிமானமும்

ஸ்வாதி கொலை தொடர்பாக, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பதிவை படிக்க நேர்ந்தது. பிராமண பெண் இறந்ததனால்தான் யாரும் இது பற்றி சரியாக கண்டுகொள்ளவில்லை. தலித் இயக்கங்கள் போராட இல்லை, திராவிட பொறுக்கிகள் எங்கே சென்றார்கள் என்கிற ரீதியில் எழுதி இருக்கிறார். தலித் மக்கள் மீது பெரும் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது, குஜராத்தில் இனக்கலவரத்தில் பலரும் உயிர் இழந்து, உடமை இழந்து இன்னமும் அந்த கொடுமையால் தவித்து வருகிறார்கள். அப்போதெல்லாம் பல ஒய்.ஜி. மகேந்திரன்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
இறந்தது ஒரு உயிர், அது பிராமண சாதி என்றாலும், வேறு என்ன சாதி என்றாலும், அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது, கொலைகாரனை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவது நிச்சயம் நடந்தே ஆகவேண்டும். ஆனால் திடீரென இந்த பிராமணர்கள் பொங்குவது ஏன் என்று தெரியவில்லை.

விஜயகாந்த் : எப்போதும் திமுகவுடன் கூட்டணி இல்லை... அம்மான்னா அம்மாதான்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. அதன் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் டெபாசிட் இழந்தார். இந்த நிலையில் தமது கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்து கேட்டு வருகிறார் விஜயகாந்த்.
நேற்று ஜூன் 27 அன்று கட்சியில் உள்ள அணியின் மாவட்ட நிர்வாகிகளையும், கட்சியின் மாவட்ட துனை செயலாளர், துனை பொருளாளர், துனை தலைவர்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளார். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது?
தேர்தல் தோல்வியால் பல லட்சங்களை இழந்த ஓர் தேமுதிக வேட்பாளர் கூட்டத்தில் நடந்ததை விவரிக்கிறார்.‘தேர்தலால் பல லட்சங்களில் கடன் சுமை ஏறிவிட்டது. வட்டி கட்டமுடியவில்லை. மிகவும் நொடிந்து இருக்கிறோம்’ என்று பலர் தெரிவித்தனர். அதை கூர்ந்து கவனித்தவர் தொடர்ந்து அதேபோல கருத்துக்கள் வந்தபோது கோபத்தில் எழுந்து அருகில் இருந்த அறைக்கு சென்றார்.  அரசியலில் ஈடுபட்டு குறுகிய காலத்திலேயே  மிகபெரும் வெற்றியை அடைந்தவர்களில்  நடிகர் விஜகாந்து தான் முதன்மையானவர் .. கரன்சி... கரன்சி.... கரன்சி .. அள்ளிட்டார்ல?

அரசினர் மருத்துவ மனையில் 18 பேரின் கண்பார்வை பறிபோனது.. மேட்டூரில் அக்கிரமம்


மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் கண்பார்வை திரும்பும் என்று சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெப்துனியா.கம 

அந்த 700 கோடி ரூபாய் விஜயகாந்துக்கு கிடைத்தது எப்படி ?ரகசியத்தை போட்டுடைத்த மக்கள் தேமுதிக சந்திரகுமார்

எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு விஜயகாந்த் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார் என்று மக்கள் தேமுதிக கட்சி நிர்வாகி சந்திரகுமார் புதிய புகாரை கிளப்பியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி 'மக்கள் தேமுதிக' என்ற புதிய கட்சியை தொடங்கியதோடு, திமுகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மரணத்திலும் ஜாதி : சுவாதி கொலை குறித்து ஒய்.ஜி.மகேந்திரன்

(டி.என்.எஸ்) சென்னை நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், இதுவரை குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்காமல் திணறிக்கொண்டிருக்க, அவரை கொலை செய்தது ஒரு இஸ்லாமியர் என்றும், சுவாதி பிராமணப் பெண் என்பதால், அவரது மரணத்திற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை, என்றும் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சுவாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார்.

குஷ்பூ :சுவாதியின் கொலையே இறுதியானதாக இருக்க வேண்டும்

மென்பொறியாளர் சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதியின் குடும்பத்தினரை இன்று குஷ்பு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழ்நாட்டில் கடைசியாக இந்த சம்பவம் இருக்கட்டும். இந்த கொலையை பார்க்கும்போது, சுவாதியின் பெற்றோர் மட்டும் ஒரு குழந்தையை இழக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை நாம் இழந்திருக்கிறோம். சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் நக்கீரன்.in

நளினியை விடுதலை செய்ய முடியாது! ஜெயா அரசு

நெடுமாறன் சைமன் செபாஸ்டியன் சீமான் மற்றும் அவரது குஞ்சுகள்.. வைக்கோ. கொளத்தூர் மணி விடுதலை ராஜேந்திரன் கோவை இராமகிருஷ்ணன் மே 17 முத்துக்குமாரனா ? ( பெயர் தெரியல)... பண்ருட்டி வேல்முருகன் பெண் சிங்கம் தாமரை.. ஐயநாதன் மற்றும் பல சில்லறை ஈழ போராளிகள் இன்னும் வாய் திறக்காதது ஏன் ? ஏன் ? ஏன் ?????? கம்பி என்னிகிட்டு கழித்திங்க வைப்பாங்க என்ற பயமா ? கம்மிசன் தொகை கிடைக்காது என்ற கவலையா ? தேர்தல் பரப்புரைக்கு பயன்படும் அற்புதம்மாவும் கருத்து சொல்ல வில்லையே ?..திருடனை தேள்கொட்டிய கதையாக ஆயிடுச்சா ? இதுவே கருணாநிதி சொல்லி இருந்தால் தமிழ்நாடே தீ பற்றி எரிந்திருக்குமே ..நீங்கள் பேயாட்டம் ஆடி இருப்பீர்களெ ?.... என்னங்கய்யா உங்க ஈய பற்று...ஈய பாசம் ??

Damodaran Chennai

சுவாதி கொலையும் பார்ப்பன மாலன் நாராயணன் Sumanth Raman ஞாநி சங்கரன் Badri Seshadri Rangaraj Pandey

சூர்ப்பனகை போல வெட்டப்பட்டதா H Raja ‪#‎BJP‬ யின் மூக்கு ...
அவரின் விரும்பி திணிக்க பார்த்த லவ்ஜிஹாத் கோணத்தை ஸ்வாதி வீட்டினர் ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டதை சொல்ல வருகிறீர்கள் போல .
அது மட்டுமா ., இங்கு பிராமணர் சங்கம் , மூன்று மருத்துவ மாணவிகள் மரணத்தை தற்கொலை என்று செய்த அதிகாரத்தை கண்டிக்காமல், எழுச்சி கொண்டு ஸ்வாதிக்கு மட்டுமே போஸ்டர் ஓட்டுவதை மட்டுமே காணும் போது ஆச்சிரியம் வருகிறது ...
பிரகாசமான ராமசாமிகளும் சேஷாத்திரிகளும் மற்ற சமூகத்து கொலையில் மனித நேயத்துடன் எழுதியவர்களை வீணர்கள் "போராளீஸ்" என்றே சிலாகித்தும், கிண்டல் செய்ததையும் மறந்து இன்று FB Twiter இல் அவர்களே ஸ்வாதிக்கு மட்டுமே போராளி கோலம் போர் பரணி பாடும் கட்சியை காணும் போது மலைப்பும் வருகிறது ...

யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த சத்குரு ஜாக்கி வாசுதேவ் என்கின்ற அயோக்கியன்

மனித செயல்களால் யானைகள் இறப்பதும், யானைகள் காரணமாக மனிதர்கள் இறப்பதும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை கோவை மாவட்டத்தில் இத்தகைய சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது.
இதற்கு முக்கிய காரணம், யானைகள் வழித்தடங்களான வனப்பகுதிகள் அனைத்தும் மத /ஆன்மீக குரு நிறுவனங்களாலும், கல்வி நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான்.
யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. ஒரு யானையை இந்த ஆண்டு ஓரிடத்தில் பார்த்தால் அடுத்த ஆண்டும் அதே யானையை அதே இடத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு யானைகள் துல்லியமாக தனது வழித்தடத்தைப் பேணுவதுண்டு. ஆகவே யானைகள் பயன்படுத்தும் பாதைகளும், அவற்றை ஒட்டிய பகுதிகளும் யானைகள் வழித்தடம் என்று அழைக்கப்படுகின்றன.

மக்கள் பணம் 500 கோடியை சுருட்டிய விஜயகாந்த்... ஊரை அடிச்சு உலையில் போட்ட பிரேமலதா குடும்பம்

திமுக நம்மால் தோற்று விட்டதல்லவா, திமுகவால் ஜெயிக்க முடிஞ்சுதா? என்று திமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள்  போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளனர்.

பார்ப்பனர்களால் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை

பேராசிரியர் குரு
மைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்டமிட்டே புதைத்தனர் என்கிறார் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும்என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:
பேராசிரியர் குரு மகிஷ மண்டலா மைசூரு, கர்நாடகத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கிமு 245ல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாதி :என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்”

மொதல்ல நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னோட லைஃப் போனதுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன். எனக்கு வாழப் புடிக்கல்ல, என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னைப் பற்றி கேவலமா பேசுறாங்க, சத்தியமா சொல்றேன் நான் என் போட்டோவை யாருக்கும் அனுப்பல, நான் எந்த தப்பும் பண்ணல்ல.”தனது இறுதிக் கடிதத்தில் வினுப்ரியா எழுதியவை… சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய படத்தை ஆபாசமாக ‘மார்ஃபிங்’ செய்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக கூறி கடந்த 23-ஆம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இட்லி – தோசை – ரஜினிதான் தருண் விஜயின் தமிழ்ப் பற்று !

MP-Tarun-Vijay
வழக்கமாக நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிங்கப்பூர் டால்ஃபின் சர்க்கஸுக்கோ, டோக்கியோ வாண வேடிக்கைக்கோ, அமெரிக்காவில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கோ சென்று வந்தால் என்ன நடக்கும்? மீனம்பாக்கத்திலிருந்து கார்டன் அல்லது தோட்டம் அல்லது தாயகம் அல்லது பவன் செல்லும் வழிகளில் “டால்ஃபின் கண்டு களித்த தங்கத் தாரகை, டோக்கியோ வென்று வந்த புரட்சிப் புயல், அமெரிக்காவில் ஆரோக்கியத்தை மீட்டெடுத்த தளபதி” இன்னபிற லித்தோ சுவரொட்டிகள் கண்ணைக் குத்தும்! தமிழகத்தைப் பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் வானரப்படை அனைத்தும் தமிழின விரோத கூரூப்பாகவே மக்களால் மதிப்பிடப்படுகிறது. என்ன செண்ட் போட்டாலும், என்ன சாயம் பூசினாலும் அவர்களை அவாள் கட்சியாகவும், ஹிந்தி வாலாக்களாகவும்தான் நமது மக்கள் ஃபீல் பண்ணுகின்றனர்.

EVKS.இளங்கோவன் ராஜினமா....

அடுத்தடுத்த திருப்பங்களுடன் அரங்கேறிவருகிறது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமாவுக்கு பிறகான காட்சிகள். டில்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு திரும்பினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இதில் அதிர்ச்சியடைந்த அவரின் ஆதரவாளர்கள் அவர் வீட்டில் திரண்டனர். அதில் இரண்டு தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது
இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களான ரங்கபாஷ்யம் (மத்திய சென்னை), வி.ஆர். சிவராமன் (காஞ்சி வடக்கு) உள்பட 38 மாவட்ட தலைவர்கள் தங்களது மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். “நானாகத்தான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். மேலிடம் என்னை திருப்பி அழைத்தாலும் தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.