nurses-2  சில என்.ஜி.ஓ பேர்வழிகள் ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு போய்விடுகிறார்கள். ஊர் பெயர் தெரியாத அவர்களை இந்த செவிலியர்களும் மருத்துவர்களும் தான் கவனித்துக்கொள்கிறார்கள். சேர்த்து விட்ட என் ஜி வோக்களோ அதை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக போட்டுவிட்டு வள்ளல் இமேஜை உயர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்களுக்கு அதெல்லாம் கிடையாது.
சமயங்களில் தங்கள் சொந்த காசை கூட செலவழித்து அவர்களை பராமரிக்கிறார்கள். வழியற்ற நோயாளிகள், வயதானவர்களுக்கு உணவு, உடை, கிடைக்காத மருந்துகள் என்று அவ்வப்போது செய்கிறார்கள். எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இதை செய்வதில்லை.
ரசு மருத்துவமனை செவிலியர்களின் பணி குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற போது, அரசு செவிலியர்கள் என்றால் சரியான நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள், பொறுப்பாக வேலை செய்ய மாட்டார்கள் என்று பொதுப் புத்தியில் உறைந்திருப்பதற்கு மாறாக அனைவரும் சுறுசுறுப்புடன் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நின்று சில நிமிடங்களுக்கு மேல் பேசமுடியாத அளவுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடிக் கொண்டும், நோயாளிகளை பராமரிக்கும் வேலையிலும் மூழ்கியிருந்தார்கள்.