சனி, 27 மே, 2023

கர்நாடக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு - LIST

NAKKEERAN : கர்நாடகத்தில் இன்று அமைச்சர்களாக பதவியேற்ற 24 எம்.எல்.ஏ.க்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதுவரை அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கப்படவில்லை. மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 10 பேர் அமைச்சரானதால் மீதமுள்ள 24 இடங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பின் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருப்பவர்களின் இறுதிப்பட்டியல் தயாரானது. அவர்கள் இன்று காலை 11:45 மணியளவில் ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக பரமேஸ்வராவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மதுபங்காரப்பாவும், தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ள

உதயநிதி அறக்கட்டளை வங்கிக்கணக்கு முடக்கம்!

MINNAMBALAM : தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், நேற்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

இந்நிலையில், உதயநிதி அறக்கட்டளை வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்கியிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட ட்விட்டர் பதில், “ 25/5/2023 வரை தமிழ்நாடு முழுவதும் ரூ. 36.3 கோடி மதிப்பிலான பல்வேறு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கூடுதலாக தற்போது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் குழும வழக்கு விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பிரியா

நேபாளத்தை ஆள்வது கம்யூனிஸ்ட்களா அல்லது பிராமணர்களா?

நேபாளம்

   BBC News தமிழ் - குமார் : நேபாளத்தின் போக்ராவில் சுற்றியபோது ஒரு உணவகத்தைக் கண்டேன். ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் பெயர் ககாகோ சுலோ.

ககாகோ சுலோவுக்கு வெளியே மெனு பலகை போடப்பட்டுள்ளது.

இந்த மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள உணவு அல்லது தாலிகளின் (முழு சாப்பாடு) பெயர்கள் மிகவும் சுவாரசியமானவை.

மெனுவில் முதல் எண்ணில் பண்டிட் உணவு, இரண்டாவது எண்ணில் ஜனநாயக உணவு, மூன்றாவது எண்ணில் குடியரசு உணவு மற்றும் நான்காவது எண்ணில் ஒருமித்த கருத்து உணவு என்றும் எழுதப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் - சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

maalaimalar : சென்னை தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்  வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில் 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 26 மே, 2023

ஐ.டி. ரெய்டு: அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர்!


மின்னம்பலம் : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்டு காரை சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று(மே 26) காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அணையில் விழுந்த செல்போன் - 21 லட்சம் லிட்டர் நீரை வீணாக வெளியேற்றிய அதிகாரி.. சத்தீஸ்கர் மாநிலம்

 மாலை மலர்  :  ராய்ப்பூர்  சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போன் அணைக்கட்டில் விழுந்தது.
சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போனை எடுக்க அவர் முயசி மேற்கொண்டார். அணையில் இறங்கி செல்போனை தேடும்படி உத்தரவிட்டார். ஆனாலும் செல்போன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றி வந்தார். கடந்த 3 தினங்களில் சுமார் 21 லட்சம் நீரை வெளியேற்றினார். இறுதியில் செல்போன் கிடைத்தது. ஆனாலும் அது வேலை செய்யவில்லை.

தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம்... மறைக்கப் பார்க்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்!


மின்னம்பலம் -   Kavi  சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு பால்ய திருமணம் நடக்கவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கூறியிருக்கும் நிலையில், திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் மின்னம்பலத்துக்கு கிடைத்துள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த மே 4ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறியிருந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும்   குற்றம்சாட்டியிருந்தார்.

குழந்தை திருமணங்கள் நடக்காத போதிலும், அப்படி திருமணம் நடத்தி வைத்ததாக 8 பொய் வழக்குகள் தீட்சிதர்கள் மீது பதியப்பட்டதாகவும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணி உருவாகிறது ஆசிரியர் கி.வீரமணி

 tamil.samayam.com :  திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும் என திமுகவின் தாய் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 ‘‘சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது இன்று, நேற்று தோன்றியதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய காலத்தால் மூத்த நாகரிகம், பண்பால் பழுத்த நாகரிகம்! சில காவிகள் - சரியான ஆய்வறிவு இல்லா அறிவு சூன்யர்கள்,
'வெள்ளைக்கார கிறிஸ்துவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் போன்றவர்களால் திராவிடம் உருவாக்கப்பட்டது' என்று கூறியும் எழுதியும் தங்களது கட்டை அறிவை உலகத்தாருக்குப் பறைசாற்றுகிறார்கள்.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

 மாலை மலர் : புதுடெல்லி  தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இதனை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. ஆனால் ஜனநாயகத்தின் கோவிலாக திகழும் பாராளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. அரசு அழைப்பு விடுத்துள்ளன.

வியாழன், 25 மே, 2023

புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா.. புறக்கணிக்கும் கட்சிகள்- முழு லிஸ்ட்

tamil.oneindia.com - Shyamsundar  : டெல்லி: டெல்லியில் திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் பலவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது மக்கள் இடையே எதிர்ப்பு அலையை சந்தித்தது.
2019ல் இதற்கான பணிகள் தொடங்கின. 2021, 2022 கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்வது விமர்சனங்களை சந்தித்தது.  இந்த நிலையில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இலங்கை எம்பி அலி சபரி 3.5 கி.கி. (3.397kg) தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்டார்

ilakkiyainfo.com : அலி சப்ரி ரஹீம் எம்.பி. அபராதத்துடன் விடுவிப்பு; ரூ. 8 கோடி பொருட்களும் அரசுடமை
சுமார் 3.5 கி.கி. (3.397kg) தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் சுங்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அனைத்து ரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக, பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- ஒப்பந்தங்கள் கையெழுத்து

 மாலை மலர்  : சிங்கப்பூர்  தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர்.    

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி; உடலை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்

BBC  : சிறுமியின் உடலை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதி மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சிறுமியின் உடலை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா