பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே, விலைவாசி உயர்வுக்கு
எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில்
ஈடுபட்டன. இதனால், நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட்
கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று கூடியது. சபை துவங்கியதும்,
ஆந்திரா எரிவாயு கசிவு விபத்து, சென்னை அடுக்குமாடி குடியிருப்பு விபத்து
ஆகியவற்றில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து,
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், கேள்வி நேர அலுவல்களை துவங்க முயற்சித்தார்.
ஆனால், காங்., உள்ளிட்ட, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆவேசமாக
எழுந்தனர்.'விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டு
உள்ளது. அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அதன்பின், மற்ற அலுவல்களை
தொடரலாம்' என, அவர்கள் சபாநாயகரை வலியுறுத்தினர்.அவர்களின் கோரிக்கையை
பொருட்படுத்தாமல், சபாநாயகர் கேள்வி நேரத்தை துவங்க முயன்றார். இதையடுத்து,
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையை துவங்கினர். காங்கிரசை சேர்ந்த ஜோதிர்
ஆதித்யா சிந்தியா தலைமையில், இளம் எம்.பி.,க்கள் திரண்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த எதிர்கட்சிகள் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதை ஒப்பிட்டால் இது வெறும் ஜுஜுப்பீ