சனி, 24 செப்டம்பர், 2022

காங்கிரஸ் தலைவர் ரேஸ்: யார் இந்த அசோக் கெலாட்?

minnambalam.com  -  monisha  : 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக தீவிரமாக வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். அதில் முக்கிய விஷயமாக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 17ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்த போட்டியில் முதலாவதாக அடியெடுத்து வைத்திருப்பவர் ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான அசோக் கெலாட்.
இந்திரா காந்தியை ஆச்சர்யப்படுத்தியவர்
அரசியல் பின்னணி இல்லாத ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் அசோக் கெலாட். அவரது தந்தை ஊர் ஊராக சென்று மேஜிக் செய்யும் தொழில் செய்து வந்தவர்.
அசோக் கெலாட் சட்டம் படித்தவர். பொருளாதாரத்திலும் முதுகலை பட்டம் வாங்கியிருக்கிறார். மகாத்மா காந்தியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட அவருக்கு, மாணவப் பருவத்திலேயே அரசியலிலும் ஈர்ப்பு வந்தது. இந்தியா- பாகிஸ்தான் சுதந்திரம் வாங்கிய பிறகு வங்காளம் இரண்டாக பிரிந்தது. கிழக்கு வங்காளத்தில் இருந்து அகதிகளாக வந்தவர்கள், முகாமில் தங்க வைப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்காக ஓடி ஓடி வேலை பார்த்தவர்தான் அசோக் கெலாட். முகாமிற்கு வந்த இந்திரா காந்தி, அசோக் கெலாட்டின் பணிகளை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

விபச்சாரத்திற்கு மறுத்த ரிசெப்ஷனிஸ்ட் அங்கீதவை கொலை செய்த பாஜக தலைவரின் ரிசார்டை இடித்து நொறுக்கிய மக்கள்

நக்கீரன் : விபச்சாரத்திற்கு சம்மதிக்க மறுத்த ரிசெப்ஷனிஸ்ட் அங்கீதவை கொலை செய்த பாஜக தலைவரின் ரிசார்டை இடித்து நொறுக்கிய மக்கள்
உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரித்துவார் பாஜக தலைவரின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு  சொந்தமான ரிசார்ட் இடிக்கப்பட்டது.
உத்தரகாண்டின் ரிஷிகேஷ் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அங்கீதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அந்த ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 இக்கொலை சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.

ஈரான் ஹிஜாப் போராட்டம்: 8 நாட்களில் 50 பேர் உயிரிழப்பு பெண்கள் மீதான வன்முறை...

hindutamil.in : தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாபுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள், “ ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள்,  இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களும் அடக்கம்.போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன

போராட்டத்தில் 22 வயதான, ஹனானேன் கியான், என்ற பெண்மணி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தி வருகின்றன.” என்று செய்திகள் வெளியிட்டுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தி

 மாலை மலர்  -  பெய்ஜிங்: வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

19 வயசு பெண்ணை கடத்தி கொன்ற ஹரித்துவார் பஜக தலைவரின் மகன் புல்கித் ஆர்யா கைது!

tamil.oneindia.com  - Shyamsundar  : ரிஷிகேஷ்: உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உட்பட 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
ரிஷிகேஷில் உள்ள வனந்தரா பகுதியில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
அந்த ரிசார்ட்டில் 19 வயது பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அந்த பெண் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க ராஜஸ்தான் அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு

தினத்தந்தி : பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்க ராஜஸ்தான் அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு
ராஜஸ்தான் அரசு பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி
ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து மம்தா பூபேஷ் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் 'நான் சக்தி உதான்' திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே இதுபோன்ற திட்டம் பெரிய அளவில் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் இலவச சானிட்டரி நாப்கின் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை போதைப்பொருள் பாவனை

தேசம் நெட்  : யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை போதைப்பொருள் பாவனை – தடுக்க நடவடிக்கை எடுக்குமா கல்வி கற்ற யாழ்.சமூகம் !\

இலங்கையின் பல பகுதிகளிலும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில்,
 அண்மித்த  மாதங்களில் மட்டுமே யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை  கடந்தகாலத்தை விடவும்  அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக நமது தேசம் இணையதளத்தில் இந்த மாதத்தில் மட்டும் – இதுவரை வெளியாகியுள்ள செய்திகளின் தொகுப்பு.  ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். ( https://thesamnet.co.uk/?p=89331)

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் 11 வயது சிறுமி – மீட்டெடுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ! ( https://thesamnet.co.uk/?p=89327 )

சாமி சிலையை தொட்ட சிறுவனின் குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம்... கர்நாடக தீண்டாமை கொடுமைகள்!

நக்கீரன் : கோவில் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் சாமி சிலையை தொட்டதாகக் கூறி சிறுவனின் குடும்பத்திற்கு கோவில் நிர்வாகம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலம் கோலாரில் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வந்தன. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்  8 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த கோலார் மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கட ராஜா அந்த சிறுவனையும், அச்சிறுவனின் குடும்பத்தினரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்து சாமி தரிசனம் செய்ய வைத்து அனுப்பி வைத்தார்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

லாலு பிரசாத் + நிதிஷ்குமார் சோனியா காந்தியை சந்திக்கிறார்கள்! வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம்

tamil.samayam.com  :  பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக டெல்லி சென்று சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் குறித்த முன் தயாரிப்புகளில் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருகின்றன.
இருமுறை தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. ஆனால் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பாஜகவை எதிர்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை யார் முன்னெடுப்பது என்ற கேள்வி எழுந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் அந்த பணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஈரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 31 பேர் உயிரிழப்பு. மேலும் போராட்டம் வலுக்கிறது

தினத்தந்தி  :  ஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாஷா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்! சபரீசன் வைக்கும் புது செக்!

 மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:வைஃபை ஆன் செய்ததும்  வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொக்கேஷன் அறிவாலயத்தைக் காட்டியது. கொஞ்ச நேரத்தில் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
 “திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று (செப்டம்பர் 22) முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் மாற்றப்பட மாட்டார்கள் என்றும் லியோனி தலைமையில் பட்டிமன்றம் வைக்காத குறைதான்.
ஏற்கனவே சபரீசன்  மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஆய்வில்  சுமார் 15 மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடு சரியில்லாத காரணத்துக்காக  ரெட் பட்டியலில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள்  மாற்றப்பட வேண்டும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய மக்கள்... 18-65 வயதுடைய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனையை நிறுத்திய ரஷிய.

dailythanthi : மாஸ்கோ:  உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கி கணக்குகள் முடக்கம்.. அமலாக்கத்துறை பரபரப்பு உத்தரவு!

tamil.oneindia.com  -  Shyamsundar  :  டெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை முடக்க வேண்டும், அதை தடை செய்ய வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள், அமைச்சர்கள், பல்வேறு மாநில ஆளுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். 2006ல் இந்த அமைப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது.
தற்போது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே 1993ல் கேரளாவில் தேசிய அபிவிருத்தி முன்னணி என்ற அமைப்பு இஸ்லாமியர்கள் மூலம் உருவாக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா
இந்த அமைப்பு மற்றும் மற்ற இஸ்லாமிய அமைப்புகள் சில இணைந்துதான் 2006ல் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட வேண்டுமா? ஒரு முன்னாள் முஸ்லிம் என்ன கூறுகிறார்?

May be an image of 6 people, people standing and text that says 'Dailythanthi 9h 9h பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது! #dailythanthi #PFI i DAILYTHANTHI.COM பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!'

Rishvin Ismath  :  மிகப் பொருத்தமான நடவடிக்கை, ஆனால் முழுமையான நடவடிக்கை அல்ல. ஜனநாயக விரோத கிலாபத் சிந்தனைக்கு எந்த தேசத்திலும் இடம் கொடுக்கக் கூடாது!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களை சோதனையிடுவதும், ஒரு சிலரை கைது செய்து தடுத்து வைப்பதும் போதுமான நடவடிக்கை அல்ல,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஜமாத்தே இஸ்லாமியின் துணை அமைப்புகள்,
பினாமி  அமைப்புக்கள், இரகசிய கிளை அமைப்புக்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
ஜமாத்தே இஸ்லாமியை தடை செய்யாமல் இலங்கை விட்ட தவறை இந்தியா செய்யக் கூடாது.
ஜமாத்தே இஸ்லாமி போன்ற, மெளதூதியக் கருத்துக்கள் கொண்ட, கிலாபத் கருத்துக் கொண்ட, யூஸுப் அல் கர்ளாவி போன்ற சர்வதேச பயங்கரவாத ஊக்குவிப்பளர்களுடன் தொடர்பில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தடை செய்யப் படுவதே முஸ்லிம்களும், மற்ற மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கான வழியாகும்.

வியாழன், 22 செப்டம்பர், 2022

உலகை மாற்றவல்ல ஒரே பயிர் ஹெம்ப்... ஒரு விரிவான விளக்கம்

   

  ராதா மனோகர் :        ஹெம்ப் செடியை பற்றிய புரிதல்  புரிதல் இல்லாமல் இதை கஞ்சா செடி என்று கூறி மலின படுத்துகிறார்கள்  
எனவே இது பற்றிய சில உண்மைகளை இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்
ஹெம்ப் செடியின் வகைகளில் ஒன்றுதான் கஞ்சா செடி . ஆனால் இரண்டும் ஒன்றல்ல
பெட்ரோலிய உற்பத்திக்கு ஒரு சரியான மாற்றாக விளங்குவது ஹெம்ப் செடியின் மூலம் பெறப்படும் பயோ டீசல்தான் . இது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை
இதனால்தான் பெட்ரோலிய கம்பனிகள் நீண்ட காலமாக ஹெம்ப் கஞ்சாவின் தன்மை கொண்டது என்ற பிரசாரத்தை தங்களின் போலி ஆராய்ச்சியாளர்கள் மூலம் பரப்புரை செய்து பல தசாப்தங்களாக தடுத்து வைத்திருந்தார்கள் . தற்போது அந்த தடை மேற்கு நாடுகளில் இல்லை .
இலங்கை இந்தியா போன்ற வறுமையான நாடுகளில் இன்றும் அந்த பெட்ரோலிய லாபி ஹெம்பிற்கு எதிராக வேலை செய்கிறது  
ஹெம்பை கஞ்சா என்று கூறுவோர்களின் பின்னணிகளை கொஞ்சம் ஆராய்வது நல்லது . இவர்களின் வால் எங்கே போய் நிற்கிறது என்பதை ஆர்வலர்கள் தேடி கண்டுபிடிக்க வேண்டும்
ஹெம்ப செடியின் வரலாறு

சிதம்பரம் தீட்சதர் கைது! தனது 14 வயது மகளுக்கு திருமணம் ..உடந்தையாக இருந்த 3 தீட்சிதர்கள் உட்பட ...

 kalaignarseithigal.com  - KL Reshma  :  தமிழ்நாடு  குழந்தை திருமணம் - சிறுமியை தீட்சிதருக்கு மணமுடித்து வைத்த சிதம்பரம் கோயில் தீட்சிதர்: 3பேர் அதிரடி கைது!
14 வயது மகளுக்கு குழந்தை திருமணம் செய்துவைத்துள்ள சிதம்பரம் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வடக்கு வீதியை சேர்ந்தவர் சோமசேகர். இவர் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் தீட்சிதராக உள்ளார். இவர் தனது 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ரகசிய குழந்தை திருமணம் செய்து வைத்ததாக அண்மையில் புகார் எழுந்தது.

ஈரான் ஹிஜாப் எரிப்பு போராட்டம் தொடர்கிறது

தினத்தந்தி  :   இஸ்லாமிய சட்டத்தை  பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது 1979-ம் ஆண்டு முதல் ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது.
இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.  அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

1,725 கோடி மதிப்புள்ள 22 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்! மும்பை நவசேவா துறைமுகத்தில்

நக்கீரன் : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நவசேவா துறைமுகத்தில் 22 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிக அளவில் புகார் எழுந்து வந்த நிலையில் இந்தியா முழுவதும் பல இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தது. கப்பல் மற்றும் இரயில் நிலையங்களில் இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவில் மும்பை நவசேதா துறைமுகத்தில் 22 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1,725 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா மீது வழக்கு.. கை, கால்களை உடைச்சிடுவேன்.. கார் நிறுவனத்தில்

tamil.oneindia.com  -   Vishnupriya R  :   சென்னை: தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டில் சிங்கபெருமாள் கோயில் அருகே மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் கை, கால்களை உடைத்து விடுவேன் என ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள் ... தினமணி கட்டுரை -2007

 Gowra Rajasekaran  :  தினமணி கட்டுரை -2007 பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,
சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,
வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,
சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை, கிருஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,
1773 ஆம் ஆண்டு முதல் கிருஸ்தவ பிரிட்டிஷ் அரசு, பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,

புதன், 21 செப்டம்பர், 2022

சிங்கள தீவினுக்கோர் பாலம் 1912 இல் ஆங்கிலேயர் செய்தி அது! பாரதியார் தீர்க்க தரிசனம் அல்ல! அவர் காலமானது 1921 ஆண்டு!

 ராதா மனோகர் : சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் அல்லது  உயர்ந்த தொலைநோக்கு சிந்தனை என்று அவ்வப்போது கூறப்படுகிறது.
உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும்  .
தீர்க்க தரிசனமோ சிந்தனையோ அல்ல!
அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம்
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது   அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
இலங்கை இந்திய புகையிரத பாதை
இப்பாதை வேலையை இலங்கை அரசாட்சியார் தீவிரமாய் முடித்து வருகின்றர்.

திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “சாதிவெறி” பின்னணி

திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி”
tamil.oneindia.com : தென்காசி: தந்தை பெரியார் பிறந்தநாளன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் தலித் சிறுவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம், பூதாகரம் எடுத்துள்ள நிலையில் எவிடன்ஸ் அமைப்பை சேர்ந்த கதிர் அப்பகுதிக்கு நேரில் சென்று நடந்த விபரங்களை விசாரித்து விரிவான விளக்கத்தை அளித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட சிறிய பெட்டிகடை. ஆறு தலித் சிறுவர்கள் பள்ளி சீருடையுடன் சென்று தின்பண்டங்கள் கேட்கிறார்கள். அந்த கடையின் உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டங்கள் கிடையாது. உங்களுக்கு பொருட்கள் கொடுக்கக்கூடாது ஊர் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது என்று கூறுகிறார் அந்த குழந்தைகள் கட்டுப்பாடா? அப்படி என்றால் என்ன? என்று கேட்க உங்களுக்கு எந்த பொருட்களும் கொடுக்கக்கூடாது என்றும் உங்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூற, ஏமாற்றத்துடன் எதுவும் புரியாமல் அந்த குழந்தைகள் அங்கிருந்து திரும்புகிறார்கள்.

அதானியின் சொத்து கொரோனா காலத்தில் 2000 மடங்கு உயர்ந்து. எப்படி? .

May be a Twitter screenshot of 1 person and text that says 'Subramanian Swamy @Swamy39 Trapeze Artist Adani now owes Rs. 4.5 lakh crores as NPA to banks. Correct me if I am wrong. Yet his wealth is doubling every two years since 2016. Why can't he repay the banks? May be like with the six airports he has bought he might soon buy out all the banks he owes money.'
May be an image of 2 people and text that says '34 26, U 26, ama Jeff Bezos VS Gautam Adani Net Worth: $146 Bn Net Worth: $152 Bn amazon $13.4Bn Net-Profit $4.4 Bn $486 Bn Revenue $29.2Bn adani'

Venkat Ramanujam  :  கீதா உபதேசம்  - கொடுமையான ஒன்றை ஆண்டு கொரோனா காலத்தில் 2000 மடங்கு பங்கு வர்த்தனையில் மதிப்பு உயர்ந்து..
12.16 லட்சம் கோடிகள் மதிப்பு ஆனால் 4.5 லட்சம் கோடிகள் கடன் என படத்தில் உள்ள கணக்கு பார்த்தால் தலை சுற்றி மயக்கம் வருகிறது..
நயமான  தூய  கொள்ளை என்றால் என்ன சற்று புரியும் படி விளக்க முடியுமா விஸ்வரூபம் காட்டும் மாயக் கண்ணா ..
பெண்களின் மனம் கவர்ந்த அர்ஜுனா.. சொல்கிறேன் கவனமுடன் கேள்அதானி   நிறுவனங்களில் ஒன்றே ஒன்று கூட உலகத்திலே  டாப் 100  இல் இல்லை ..
ஆனால் அவர் உலகத்திலே  2 ஆம் இடத்திலே உள்ளார்.
அமேசான் வருவாய் 3888000 கோடிகள் அவர் 3ஆம் இடத்தில் ஆனால் அதானி வருவாய் 233600 கோடிகள் மட்டுமே  இரண்டாம் இடத்தில் ..
அதாவது  அமேசான் வருவாயை விட 17 மடங்கு குறைவான அதானி இரண்டாம் இடம் ..
அமேசான் நிகர லாபம்   107200  கோடிகள் அவர் 3ஆம் இடத்தில் ஆனால் அதானி நிகர லாபம்  35200  கோடிகள் மட்டுமே  இரண்டாம் இடத்தில் ..
அதாவது  அமேசான் லாபத்தை  விட 3  மடங்கு குறைவான அதானி இரண்டாம் இடம் ..
6 மாதத்திலே  27000 கோடிகள் மதிப்புள்ள போதை வாஸ்துகள்  அதானி துறைமுகத்திலே பிடிபட்டும் ஒரு கைதும் செய்ய துணிவில்லா ஒன்றிய அரசை அரசரை பாராட்டி ..

Hemp கஞ்சா சணல் செடிகளின் இனத்தை சார்ந்த ஒரு மூலிகை .. பணம் கொழிக்கும் வர்த்தகம் . அனுமதிக்க கோரி இலங்கை எம்பி டயானா கமகே

Hemp  என்று கூறப்படும் ஒரு வகை கஞ்சா செடியின் இனத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியை பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி டயானா கமகே அவர்கள் அதிக கவனம் எடுத்து வருகிறார்
அவர் இது பற்றி கூறுவதாவது :
இதனை Hemp  சட்டப்பூர்வமாக்குவதற்கும் வெளிநாட்டு செலாவணியை பெறுவதற்கும்  விரைவில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
முன்பே இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டிருந்தால், பொருளாதார ரீதியாக இவ்வளவு ஒரு மோசமான நிலைக்கு நாம் ஆளாகி இருக்க மாட்டோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தற்போது இந்த திட்டத்திற்காக அடுத்த ஆண்டுக்குள் (2024) 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளேன். மேலும் இது மிகவும் சாதகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்
இது உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர் வணிகமாக உள்ளது. \
இயற்கையால் நமக்கு வழங்கப்பட்ட ஒரு மதிப்பு மிக்க தாவரத்தின் பெறுமதியை சிலர் புரிந்து கொள்ளாதது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது. இயற்கையே இந்த நாட்டை ஆசீர்வதித்த பல சொத்துக்கள் உள்ளன, ஆனால் மற்ற நாடுகளைச் சார்ந்து, அறியாமையால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா?

After subbulakshmi Jagatheesan resign post contesting Kanimozhi or Udhayanidhi stalin

tamil.asianetnews.com  - Raghupati R  :ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாக தற்போது  அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். சட்டமன்றத் தேர்தலினுடைய தோல்விக்கு பிறகு தனக்கு ராஜசபா எம்பி வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த பதவியானது வழங்கப்படவில்லை.

இலங்கையின் 2500 வருட பௌத்த கலாசாரம் இலங்கையை திவால்நிலை நோக்கி இழுத்துச் சென்றுள்ளது - திருமதி .டயானா கமகே MP

>இலங்கையின் 2500 வருட பௌத்த கலாசாரம் இலங்கையை திவால்நிலை நோக்கி இழுத்துச் சென்றுள்ளது - சமாகி ஜன பலவேகய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி .டயானா கமகே
இவர் அண்மைக்காலமாக செய்திகளில் பலமாக வலம் வருகிறார்.
குறிப்பாக கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது போன்ற பல முற்போக்கு கருத்துக்களை பேசுகிறார்
மேலும் பெண்ணுரிமை விடயங்களிலும் ஊடகங்களின் வெளிச்சம் இவர்மீது அதிகமாக விழுகிறது
எல்லாவற்றையும் விட இவர் தற்போது பௌத்த கலாச்சாரம் பற்றி தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவையாகும்.
இது போன்ற பல விடயங்களை டெய்லி மிரர் பத்திரிகைக்காக இவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார் . அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தமிழில் வாசிக்கலாம்
முழு பேட்டி ஆங்கிலத்தில் உள்ளது  
கேள்வி , கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்த உங்கள் அறிக்கை தலைப்புச் செய்தியாகியுள்ளது.
இது பௌத்த நாடாக இருப்பதால் உங்களது பிரேரணை நாட்டின் விழுமியங்களுக்கு எதிரானது என்ற வாதம் உள்ளது. கஞ்சா எவ்வாறு நாட்டிற்கு டாலர்களை ஈர்க்கும் என்பதை விளக்க முடியுமா?

திமுக மாவட்ட செயலாளர் தேர்தல்! க்ளைமாக்ஸை அடைந்துள்ள உட்கட்சி ..

மின்னம்பலம்  திமுகவின் உட்கட்சித் தேர்தல் க்ளைமாக்ஸை அடைந்துள்ளது. உச்சகட்டமான மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பற்றிய அறிவிப்பை தலைமைக் கழகம் வெளியிட்ட அதேநேரம் அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளராக யாரை நியமிப்பது, யாரை நீக்குவது என்ற பஞ்சாயத்துகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
எம்பி தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின்.
அதன்படியே ஒவ்வொரு மாவட்டச் செயலாளரை பற்றிய செயல்பாட்டு மதிப்பீட்டு ஆய்வை ரகசியமாக நடத்தினார். சபரீசனின் மேற்பார்வையில் நடந்த இந்த ஆய்வில் திமுகவின் மொத்த மாவட்டச் செயலாளர்களையும் பச்சை. மஞ்சள், சிகப்பு என்ற தரவரிசைப்படி பட்டியலிட்டனர்.

தனுஷ்கோடியில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கையர் மீட்பு

மாலைமலர் : இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு மூலம் அகதிகளாக தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று (20) செவ்வாய்க்கிழமை காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்தியா கடும் கண்டனம்! கனடாவில் சுதந்திர காலிஸ்தான் அமைவதற்கான வாக்கெடுப்பு Khalistan Referendum in Canada

.livemint.com :  கனேடிய சீக்கியர்கள் ஒன்டாறியோ மாகாணத்தின் பிராம்ப்டனில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்புக்கு வாக்களித்ததில் கலந்து கொண்டனர், சுமார் 100,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பங்கு பற்றியதாக தெரிகிறது.
இந்த பொது மக்கள் வாக்கெடுப்பு  காலிஸ்தானி சார்பு குழுவான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வாக்கெடுப்புக்கு வாக்களிக்க ஏராளமான ஆண்கள், பெண்கள் வரிசையில் நிற்பதை சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக  இருக்கிறது
2019 இல் இந்தியாவில் SFJ சட்டவிரோத சங்கமாக தடை செய்யப்பட்டது. \
காலிஸ்தான் என்ற புதிய ஒரு நாட்டை  உருவாக்குவதற்காக பஞ்சாப் சுதந்திர வாக்கெடுப்புக்கு SJF என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, நாட்டில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவருக்கு எச்சரிக்கைக் கடிதம்: டி.கே.எஸ். இளங்கோவன் தகவல்!

minnambalam.com  -  Prakash  : “சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் திமுக உணர்வுடன்தான் இருக்கிறார்” என திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தான் திமுகவில் இருந்தும் அரசியலில் இருந்துமே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 20) திமுக செய்தித் தொடர்புத் துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஏற்கனவே திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் கடந்த சில வாரங்களாக தனது ஃபேஸ்புக் பதிவில் திமுக தலைமையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.

நாமகிரிப்பேட்டை பட்டியல் சமூகத்தை சேர்ந்த காவலாளி பரமசிவம் கொலை . சந்தேக மரணம் என்று பதிவு செய்த காவல்துறை

நாமகிரிப்பேட்டை   பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி கொலை  தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

 
முனைவர். மு. சித்தார்த் ஆபிரகாம் :  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த காவலாளி பரமசிவம்,
 இந்த நிலையில் (இடுப்பு கட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்டு) நிலையில் சடலத்தை பார்த்து  கொலைக்கான அனைத்து முகாந்திரமும் தெளிவாக இருந்தும்,
 இது கொலை (302) கிடையாது இது சந்தேக மரணம் (174) தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது..\

 தினத்தந்தி :நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி கொலை தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

உக்கிரேனில் அகப்பட்ட இலங்கை மாணவர்களின் நகங்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய ரஷிய படையினர் .. அதிர்ச்சி செய்தி

நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலுஜன் பத்தினஜகன்.

BBC Tamil :  யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே.
நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர்.
ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி அதை நோக்கிய நெடிய நடை பயணத்தை இந்த இலங்கையர்கள் தொடங்க ஆயத்தமாகினர்.

பெங்களூரு காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டாக்டர் அடித்து கொலை

மாலாமலர் : பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் விகாஸ் ராஜன்(வயது 27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், \சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார்.
பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன், வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.
இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமுக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அரசு சார்பில் விளக்கம்
tamil.oneindia.com - Mohan S :  தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018-ம் ஆண்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் மீது போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

நக்கீரன் குழுவினரைத் தாக்கிய 10 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது

நக்கீரன்  : கள்ளக்குறிச்சி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் இயங்கி வருகிறது சக்தி தனியார் பள்ளி. இந்த பள்ளியில், கடந்த ஜூலை 13ம் தேதி, மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

 நக்கீரன்  : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.
இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

பிரிட்டன் இந்து - முஸ்லிம் மோதல்.. கலவர பகுதிகளில் பிரிட்டன் போலீஸ் கடும் நடவடிக்கை

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali  லண்டன்: பிரிட்டனில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்து மத அடையாளங்கள் தாக்கப்பட்டதற்கும் இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லெய்செஸ்டர் நகரத்தில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா?: 4 முக்கிய காரணங்கள்!

மின்னம்பலம் -Prakash   : திமுகவில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதற்கு 4 காரணங்கள் சொல்லப்படுகின்றன.
திமுகவின் தலைமைக் கழக நிர்வாகியாகக் கருதப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவி என்பது கெளரவமான பதவி மட்டுமல்ல, தலைமைக் கழகத்துக்கான உயர்பொறுப்புகளுக்குச் செல்வதற்கான நுழைவாயிலும்கூட.
அப்படிப் பார்க்கையில் திமுகவில் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.

ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி ஈரான் பெண்கள் போராட்டம்.. இஸ்லாமிய போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம்

மாலை மலர்  டெஹ்ரான்:  ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.

திங்கள், 19 செப்டம்பர், 2022

இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப மறுப்பு! இலங்கை தமிழ் கட்சிகளின் வாக்குவேட்டைக்காக அமைப்பு' (OFERR) ?

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு  நியமனம் | Kuruvi

பிரபுராவ் ஆனந்தன் -     பிபிசி தமிழுக்காக  :  இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் இலங்கை அழைத்து வர வேண்டும் என 'ஈழ அகதிகள் புனர் வாழ்விற்கான அமைப்பு' (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இது குறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
அப்போது இலங்கை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து அதில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அதிகாரி, வெளிவிவகார அமைச்சரக உயர் அதிகாரிகள், மற்றும் நீதி அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமித்தார்.

நயன்தாரா நடிப்பில் இருந்து விலக தீர்மானம் .. திரைப்பட தயாரிப்பில் ஈடுபடுவாராம்

nakkheeran.in  நடிப்பிலிருந்து விலகும் நயன்தாரா?  தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில் தற்போது இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'கோல்ட்', தெலுங்கில் 'காட்ஃபாதர்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மேலும் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும், இதனையடுத்து தனது 75-வது படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனிடையே தனது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

சண்டிகர் மாணவிகளை ஆபாச வீடியோ - சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

மாலை மலர்  ; சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்த விவகாரம்- சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை
மொகாலி:
பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இதில் படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்

நிலம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டிய மிக முக்கிய விடயங்கள் ..

 பஷீர் அஹமது  :  ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*
1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.*
Zero value நிலம் EC யில் *நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.*
2.Double Document நிலம்.
Power of attorney(POA) double document
அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.
POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் *Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள்* POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.
அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது *power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா* என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.
3.உயில் பத்திர நில double document.

தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால்...! அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தினத்தந்தி : தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8ஆயிரத்து 688 கோடி) மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

1962 தேர்தலில் திமுகவின் வளர்ச்சி . வரலாற்று செய்தி... யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை

 ஈழநாடு  யாழ்ப்பாணம்  - 7 -3 -1962
தமிழ்நாட்டை பொறுத்தவரை கிராம நகர பகுதிகள் பலமாக வாக்களிப்பு நடந்திருக்கிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் 44 வீத வாக்குகளை பெற்றது.
இம்முறை 46 சதவீத வாக்குகளை பெற்றும் அதன் பலம்  138 ஆக குறைந்திருக்கிறது.
 இதற்கு மாறாக 1957ஆம் ஆண்டு 14 சதவீத வாக்குகளை பெற்ற திமுக  இம்முறை 27 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதாவது 100 சதவீத அதிகரிப்பு .
1957 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 117 அபேட்சகர்களை நிறுத்தியதால் 15 ஸ்தானங்கள் அதற்கு கிடைத்தது
இம்முறை அது நிறுத்திய 142 அபேட்சகர்களில் 50 பேர் வெற்றி பெற்றதனால் கட்சியின் பலம் வெகுவாக அதிகரித்துள்ளது .
கருணாநிதி ஒருவரை தவிர அத்தனை அங்கத்தவர்களுக்கும் புதிதாக சட்டசபைக்கு வந்தவர்கள் .

மில்லியன் ஆப்கானிய பெண்களின் கல்வியை பறித்த தாலிபான்கள் !

தேசம் நெட் - அருண்மொழி  :  ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வியை இழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு தெரிவித்துள்ளது.

காலில் விழும் கலாசாரத்தை ஆதரிக்க தொடங்குகிறதா திமுக? என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? - BBC News

ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின்

  பிரமிளா கிருஷ்ணன் - -     பிபிசி தமிழ் : சமீபத்தில் திமுகவின் சில மூத்த நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரின் திருமண நாளின்போது, அவர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்திய காட்சிகள் வெளியாகின. முன்னதாக, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் காலில், தஞ்சாவூர் மேயர் இராமநாதன், மேயர் அங்கி உடையில் இருந்தபோது, விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இந்த இரண்டு காணொளிகளை தாண்டி சில நிகழ்வுகளில் திமுக தலைவர்கள் காலில் பிற தொண்டர்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

துணை நடிகை தீபா தற்கொலை: டைரியில் எழுதிவைத்த காதலன் யார்?

Divakar M | Samayam Tamil :  சென்னை, விருகம்பாக்கத்தில், சினிமா துணை நடிகை திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.
அவர் எழுதி வைத்த டைரியில், தன் காதலன் குறித்து எழுதி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் அமல நாதன். இவரது மகள் தீபா (எ)பவுவின் (29). இவர் வாழ்க்கை, துப்பறிவாளன், வாய்தா ஆகிய தமிழ் படங்களில், துணை நடிகையாக நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்காக, சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை அவின்யூ,, செல்வரத்தினம் அடுக்குமாடி குடியிருப்பு, ஏ பிளாக்கில் தீபா வசித்து வந்தார்.இந்த நிலையில். இன்று காலை வீட்டில் தீபா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து அருகில் வசிக்கும். நண்பர் பிரபாகரன் விரைந்து வந்தார். பின். சித்தூரில் உள்ள தீபா சகோதரர் ரமேஷ் மற்றும் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தந்தார்.

எலிசபெத் மகாராணி இறுதி நிகழ்வில் இந்திய இலங்கை ஜனாதிபதிகள் பங்கேற்பு . ரணில் விக்கிரமசிங்க -திரவுபதி முர்மு!

தினகரன்  : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பதவியேற்றபின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம்
கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி காலமான, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை விமானம் மூலம் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த விமானம் துபாய் செல்வதோடு, அங்கிருந்து அவர்கள் லண்டனுக்கு பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

நேற்று பஞ்சான்குளம்... இன்று நாயக்கனூர். வீடு வாடகைக்கு கொடுத்தால் குலதெய்வம் கோபிக்குமாம் .. வைரலாகும் வீடியோ!

Yesterday Panchankulam... Today Naikkanur... Video going viral!

நக்கீரன்  : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் எனும் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறி பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தீண்டாமை விதிக்கப்பட்டிருந்தது அனைத்து தரப்புகளிடமிருந்து கண்டனத்தை பெற்றது.
இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீடு வாடகைக்கு தர முடியாது என பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று இதேபோல் மீண்டும் வைரலாகி வருகிறது.

ஈரானில் ஹிஜாப் அணியவில்லை என்று 22 வயது பெண்ணைஅடித்தே கொன்ற போலீஸ் ஹிஜாபிற்கு எதிராக ஈரான் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஈரானில் ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று  கூறி 22 வயதே நிரம்பிய  மஹ்சா அமினியை மதப் பொலிசார் அழைத்து கொண்டுபோய் அடித்தே கொன்றுவிட்டனர்
ஈரானின் மதவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் பொதுவெளியில் தங்கள் ஹிஜாப்பை அகற்றி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஈரானிய  “சர்வாதிகாரிக்கு மரணம்” என்றும் கோஷமிடுகிறார்கள்

தமிழ் மிரர் : ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார்  அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பெண்களுக்கான இஸ்லாமிய உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சங்கரன்கோவில் சிறுவர்களுக்கு இனிப்பு விற்க மறுத்தவர் கைது.. தீண்டாமை - கடைக்கு சீல்! | Sankarankovil

மின்னம்பலம் - monisha :  சங்கரன் கோவில் தீண்டாமை பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்விற்கு இன்று (செப்டம்பர் 17) விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின பள்ளி குழந்தைகளுக்குத் தின்பண்டம் அளிக்க கடைக்காரர் ஒருவர் மறுத்தார். ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் கடைக்காரர் குழந்தைகளுடன் கூறினார்.
கட்டுப்பாடு என்றாலே என்னவென்று தெரியாமல் குழந்தைகள் “கட்டுப்பாடுன்னா என்ன?’ என்று கேட்க, ’ஊர் கூடி முடிவெடுத்துள்ளது. அதனால் உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்கள் வீட்டிலேயும் சென்று சொல்லுங்க” என்று குழந்தைகளிடம் கூறினார்.

திருப்பத்தூர் - 5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் இளைஞர் தற்கொலை

5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் கேரளாவில்  இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?
5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் கேரளாவில்  இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?

  கலைஞர் செய்திகளை : திருப்பத்தூர் - 5 கோடி கேட்டு பள்ளிச் சிறுவன் கடத்தல்.. போலிஸார் நெருங்கியதால் இளைஞர் தற்கொலை: நடந்தது என்ன?
திருப்பூர் அனுப்பர்பாளையம் சொர்ணபுரி அவென்யூ மகாலட்சுமி கார்டன் 2வது வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு அஜய் பிரணவ் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும் , சிவக்குமார் பெருமாநல்லூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளராகக் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கான்ட்ராக்டர் ராகேஷ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.