.jpg)
படங்களில்
சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தை அவசியம் கருதி இங்கே தனிப்பதிவாக வெளியிடுகிறோம். இவர் ஒரு பெண் பத்திரிகையாளர். பொறுக்கி ராஜாக்களால் ஊடகத்துறையில் வளர முடியாமல் மட்டுமல்ல, தொடர்ந்து செயல்பட முடியாமலேயே துரத்தப்பட்டவர்களில் ஒருவர். இன்றைக்கு அகிலா துணிந்து போராடி வருவதிற்கு பின்னே நியாயம் கிடைக்காத பல பெண் பத்திரிகையாளர்களின் கதை மறைந்திருக்கிறது.
வினவின் கட்டுரையை சில ஆயிரம் பேர் படித்திருக்கின்றனர். ஆனால் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர பத்திரிகையாளர்களிடமிருந்து திட்டமிட்ட மௌனத்தையே காண்கிறோம். பலர் முகநூலில் அமெரிக்கா முதல் ஈழம் வரை அனைத்தையும் விமரிசிக்கும் போராளிகளாக வலம் வருகின்றனர். வெள்ளியன்று ரிலீசாகும் படங்களுக்கு வியாழனன்றே விமரிசனங்கள் எழுதுகின்றனர். கட்சி சார்பாகவோ இல்லை கருத்து சார்ந்தோ பகிரங்கமாக விவாதிப்பவர்களாகவும் காட்டிக் கொள்கின்றனர். பத்திரிகையாளர்களே அகிலாவின் பிரச்சினைக்காக அமைதி காக்கிறார்கள் என்றால் இவர்கள் வேலை செய்யும் தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.