சனி, 17 ஏப்ரல், 2021

நடிகர் விவேக் தடுப்பூசியால் இறக்கவில்லை! இதய இரத்தக் குழாயில் ஏற்பட்ட 100% அடைப்பே காரணம்

May be an image of text that says 'Risk of Blood Clots AstraZeneca Vaccine Birth Control Pill Smoking AstraZeneca COVID Infection 4 cases in 1,000,000 Vaccines GO 500- 1200 cases in 1,000,000 women 0.0004% 1,763 cases in 1,000,000 Smokers 0.05% to 0.12% 165,000casesin 165,000 cases 1,000,000 Cases 0.18% Maria Leonor Ramos Hédica Interna de Hedicina Geral Familiar Fontes: Agêncla Europela Hedicamento: SuhYJ HongH Putmonary Embolism Beep Vein Thrombosis1 COVID-19 Andlysis. Radiolog 2021.; Cheng h-Hoo& (2013). Venous 16.5%'
-மரு. கதிரவன் :மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறவிங்க கொஞ்சம் அமைதியா இருங்க! கோவிட் 19 தொற்று என்பது உண்மை. அதன் தொற்று வேகம் முதல் அலையை விட இப்பொழுது பிறழ்ச்சி அடைந்து வந்திருக்கும் வைரசின் வகையில் அதிகம். கூட்டுநோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) எல்லாம் முழுமையை எட்ட, நம் கற்பனைக்கு எட்டாத அளவில் இழப்புகளை சந்தித்தாலே அந்த நிலையை அடைய முடியும். அது கள நிலவரப்படி மிக குகைவாழ்வித்தனமான அணுகுமுறை! இந்த தொற்றின் வீரியத்தை குறைக்க, பரவலின் சங்கிலியை உடைக்க நம்மிடம் உள்ள வழி, போதுமான விழிப்புணர்வு, தடுப்பூசி போட்டுக் கொள்வது. கண்மூடித்தனமான பொய் பரப்புரையில் இறங்கி தடுப்பூசிக்கு எதிரான நிலையை எடுக்க வைத்து, மக்களின் உயிர்களுடன் விளையாடதீர்கள்.
இப்போ சில ஃபாக்டுகளை தெரிந்து கொள்ளுங்கள்...
நடிகர் விவேக் அவர்களின் மாரடைப்பு மரணம் ஆழ்ந்த வருத்தத்துக்குறியது. எதிர்பாராதது. My respects to him!
🔸️🔸️🔸️🔸️🔸️🔸️
நடிகர் விவேக் அவர்களின் இறப்பு தமிழ் சினிமா உலகத்திற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. தன்னுடைய நகைச்சுவையின் மூலம் மக்களின் சிந்திக்கும் திறனை தூண்டிய 'ஜனங்களின் கலைஞன்' அவர்.
அவரது இறப்புக்கு காரணம் அவர் போட்டுக்கொண்ட தடுப்பூசி அல்ல. அவரது இதய இரத்தக் குழாயில் ஏற்பட்ட 100% அடைப்பே காரணம் என்று அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

விவேக்! முத்திரை குத்தப்படாத சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு கலைஞர்!

May be a cartoon of 1 person

விவேக் ஒரு நடிகன் என்று மட்டும் கடந்து போக முடியாத அளவு சமூக பொறுப்புடன் செயல்பட்டவர்!
முத்திரை குத்தப்படாத சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு கலைஞர்!
கட்சிகள் இயக்கங்கள் கோட்பாடுகளை தங்கள் அடையாளங்களாக வரித்து கொண்டவர்களை விட அதிகமாக மக்களிடையே அந்த கருத்துக்களை விதைத்து சென்றவர்.
மென்மையான நகைச்சுவையின் மேல் நின்று காரமான பெரியார் கருத்துக்களை முரசறைந்து முழங்கியவர்.
விவேக்கின் நகைச்சுவை காட்சிகளில் தவிர்க்கவே முடியாதவாறு சிந்தனையை தட்டி எழுப்பும் தீப்பொறிகள் பறக்கும் அது யாரையும் சுட்டுவிடாது
ஆனால் சுட்டி காட்டும்!  
ஒரு நடிகனின் ஓவியத்தை வரைபவர்கள்   பெரும்பாலும் கலையாத கேசம் அழகான மேக்கப் முகம் என்று வரைபவர்கள்  
 ஆனால் தோழர் ரவியோ இங்கே ஒரு சமூக போராளியின் தோற்றத்தில்  அதுவும் அசப்பில் ஒரு ஜார்ஜ் பெர்னாண்டஸ் போலல்லவா வரைந்திருக்கிறார்  தோழர்  Ravi Palette
  நன்றி   

தேர்தல் EVM இயந்திரங்களில் ஹேக் ? ஒட்டு இயந்திரங்கள் மாற்றப்படுகிறது? சென்னை கோயம்புத்தூர் திருவள்ளூர் மர்மங்கள் .. 31 மர்ம ஆசாமிகள் கைவரிசை?

May be an image of text

ஸ்டோரேஜ் அறைகளில் ஒரே மாதிரி நடக்கும் 'மர்ம' சம்பவம்.. ஹேக் செய்ய முயற்சி.. ஸ்டாலின் பகீர் புகார்
Vigneshkumar - tamil.oneindia.com :  சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் ரூம்களை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஐம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இது ஜனநாயகத்தைத் தூக்கில் தொங்க விடுவதற்குச் சமம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைத் தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்,

ஸ்டாலின் கடிதம் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6இல் நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை "சுவிட்ச் ஆஃப்" (பேட்டரிகளை எடுக்காமல்- செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

பாதுகாப்பு அறை அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. 7.4.2021 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள். இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்த பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது

பதிவான ஓட்டு விவரங்களில் குளறுபடி... மறு ஓட்டுப்பதிவு நடத்த தங்க தமிழ்ச்செல்வன் மனு!

nakkheeran.in - சக்தி ; போடி தொகுதியில், மூன்று ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு விவரங்களில் குளறுபடி நடந்துள்ளது, 17C படிவம் மூலம் தெரிய வந்தள்ளது. அதனால் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என போடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியான கிருஷ்ணன் உன்னியிடம் மனு அளித்துள்ளார்.... அந்த மனுவில் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது, “போடியில் 57ஏ சிசம் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் 602 ஓட்டுகள் பதிவானது. எனக்கு வழங்கிய 17C படிவத்தில் 583 ஓட்டுகள் என பதிவாகி உள்ளது. இதில் 19 ஓட்டுக்கள் வித்தியாசம் உள்ளது. 197 முத்தையன் செட்டிபட்டி அரசு கள்ளர் பள்ளியில் பதிவான ஓட்டுக்கள் 538. 17C படிவத்தில் 578 என பதிவாகி உள்ளது. இதில் 40 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

விவேக்கின் சொந்த வாழ்வில் ஏராளமான சோகங்கள் சுமைகள் நிம்மதி இழந்து தவித்தார்...

விவேக் வீட்டிலும் வாசப்படி!

minnambalam : விவேக்கின் இதயத்தில் 100% அடைப்பு, முதல் அட்டாக்கிலேயே மரணம் என்று மருத்துவ உலகமே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும்படியான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.   உலகமே புகழும் நகைச்சுவைக் கலைஞரின் இதயத்தில், வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று பலரது ஆரோக்கியத்தை பராமரித்த விவேக்கின் இதயத்தில் இப்படி ஒரு அடைப்பு எப்படி இத்தனை நாளாய் இருந்தது என்பதுதான் அவரது ரசிகர்களின், நண்பர்களின் ஆதங்கம்.    விவேக் என்னதான் வெளியே சிரிப்பின் அடையாளமாக திகழ்ந்தாலும் அவருக்குள்ளும் வாழ்க்கை சுமை மிகுந்த சோகங்களைக் கொடுத்திருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல விவேக்கின் குடும்பத்திலும் பிரச்சினைகள்.

காதலிக்க மறுத்ததால் தேவியானந்தல் சரஸ்வதி படுகொலை .. போலிக்காதல் அடாவடி? சமூகவலை கருத்து பரிமாற்றங்கள்

May be an illustration of 1 person and text

Kathiravan Mayavan : என் இந்த தொடர் கள்ளமௌனம் ?  எங்கே ஜனநாயக சக்திகள்?
சாதிய படுகொலையை கண்டிக்க யாரும் முன்வரவில்லையே என்?  
எங்கே சிபிஎம் பாலகிருஷ்ணன் ?

!எங்கே சிபிஐ முத்தரசன் ?
எங்கே அறிவுஜீவிகள்?  
எங்கே தீண்டாமை ஒழிப்பு முன்னணி?  
எங்கே தமுஏச ?
எங்கே சமூக அக்கறையாளர்கள் ?
எங்கே பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள்?
எங்கே ஊடங்கள்?
உளுந்தூர்பேட்டை, தேவியானந்தல் கிராமம்
வன்னியர் வகுப்பை சேர்ந்த
வீரமணி என்பவரது மகள் சரஸ்வதியை அதே பகுதியைச் சேர்ந்த   தலித் வகுப்பை சேர்ந்த
ரங்கசாமி, அவரது நண்பர்கள் இருவர் திருமணத்திற்குச் சம்மதிக்காததால் கொடூராமாகக் கொலை செய்துள்ளனர்.
குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்துள்ளனர்
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பாதுகாப்பும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். 

Sukirtha Rani  : தோழர், இது மிகக் கொடூரமான செயல்தான்..இதை யாரும் நியாயப்படுத்தப் போவதில்லை.. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் ,கொலைகள் எல்லாம் கண்டிக்கத்தக்கன..
அதில் மாற்றுக் கருத்து இல்லை..இதில் சாதிபார்த்துச் செய்வதில்லை..
ஆனால் இப்படி ஒன்று நிகழ்ந்தவுடன், முற்போக்காளர்களைப் பார்த்து நீங்கள் இதைக் கேட்டீர்களா? இதைச் செய்தீர்களா? எங்குப்போனீர்கள் என்று கேட்பது சரிதானா?

நடிகர் விவேக் மரணம் தடுப்பூசி தான் காரணம்? 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை !

நடிகர் விவேக்கின் உடல் நிலையை எந்த வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் தடுப்பூசி போட்டமையே இறப்புக்கு காரணம் என்று தெரியவருகிறது!

மேலும் தடுப்பூசியை முழு டோஸாக போடாமல் பகுதி பகுதியாக போட்டிருந்தால் கூட இந்த இறப்பு தவிர்த்திருக்க முடியும் என்று உறுதியாக தெரியவருகிறது .      மக்களை தடுப்பூசி போடுவதற்கு தூண்டுவதற்காக நடிகர் விவேக்கின் உதவியை நாடிய தமிழக அரசு அவரின் உடல் நிலைபற்றி விசேஷ கவனம் எடுக்கவும் தவறி விட்டது 

தடுப்பூசியை பகுதியாக செலுத்தப்படக்கூடிய வாய்ப்பை பற்றியும் ஆராயவில்லை தங்களின் பிரசாரம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இந்த அநியாயத்தை தமிழக அரசு செய்துள்ளது. maalaimalar :சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இளம்பெண் சரஸ்வதி கொடூரக் கொலை! கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ்

 Jeyalakshmi C - /tamil.oneindia.com : சென்னை: காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்;
அதுமட்டுமின்றி இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் அரணாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாடகக் காதல் கும்பலின் இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், அடங்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை;
இவை சமூக அமைதியை குலைக்கக்கூடியவை. உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் தம்மை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கர்ணன் 95 - மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)

May be an image of text that says 'Meenamma Kayal 1h. அவன்பாட்டுக்கு செவனேன்னு 97 முற்பகுதின்னு போட்டிருந்தான்.. சரியப்பா 95ன்றது 97க்கு முன்னதான வருதுன்னு போவானுகளா அதைவிட்டுட்டு அவனை டார்ச்சர் செஞ்சு இப்ப 90ன் பிற்பகுதின்னு தெளிவா போடவச்சிட்டானுக... இதுக்குதான்டா உங்களை தலையெடுக்க விடாம அடக்கி வச்சிருந்தது.. ஜாதி புத்திய காமிச்சிட்டானுக பரமா.. இவனுகளுக்கே இவ்ளோ திமிரு பாரேன்.. பகுத்தறிவு பல்லைக்காட்டிட்டு பொளந்து பப்பரப்பேன்னு படுத்துருச்சு ப்ரோ.. திமுக ஆதரவாளன் பூராம் என்னமோ தங்களை பெரிய நீதிப்புடுங்கியா கற்பனை செஞ்சுட்டு இருக்கானுங்க.. அப்பிடிலாம் இல்லடான்னு மூஞ்சித்திரைய கிழிச்சி விட்டுட்டான் மாரி.. ஒத்தாலக்க 232 19 Comments 4 Shares'

Kathir RS  : இதைப் படிச்சா எல்லா திமுககாரனும் தலித்தல்லாத ஓபிசி உயர்சாதிகள்னு மைன்ட்ல ஒரு எண்ணம் ஒடுதா?
அதுதான் இவர்கள் வெற்றி..மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)
எந்த திமுககாரனும் இந்த பதிவில் குறிப்பிட்டபடி மாரியை திட்டவில்லை.திட்டவும் மாட்டான்.திட்டியிருந்தால்,
அது PCR ஆக்ட் படி தண்டனைக்குரிய குற்றம்.
அதை யாரேனும் செய்திருந்தால் அவர்கள் மீது வழக்கு போடலாம்.
இவர்கள் யார் அப்படி பதிவிட்டார்கள் என்று சொல்லமாட்டார்கள் சொன்னாலும் பதிவு அங்கே இருக்காது.
இருந்தாலும் அந்த பதிவை எழுதியவர் அவர்கள் அமர்த்திய ஆளாகத்தான் இருப்பார்.
அந்த ஆளைக்காட்டினால் நாமே சைபர் க்ரைமில் புகார் செய்து உள்ளே தள்ளலாம்.
மாரியின் மீது கோபத்தை காட்டிய திமுகவினரில் தலித்துகளும் இருந்தார்கள் ஓபிசிகளும் இருந்தார்கள் எஃப்சிகளும் இருந்தார்கள்.
காரணம் மாரி செய்தது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இந்த ஐடியே சொல்வது போல மாரி திட்டமிட்டு அரேங்கேற்றிய சதி அது.
மாரிக்கும் அவனை இயக்கும் சங்கிகளுக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு விசயம் இணையத்துல மாரிக்கு வக்காலத்து வாங்கும் பல எலீட்டுகளுக்கு தெரியாது.
அது என்னவென்றால் களத்தில் பெரும்பான்மை தலித்  மக்கள் திமுக ஆதரவாளர்கள்.

மன்சூர் அலிகான் மக்களை வீணாக பயமுறுத்த கூடாது . கொரோனா வாக்சின் பற்றிய வாட்சப் வதந்திகளை பரப்பக்கூடாது

நடிகர் மன்சூர் அலிகான் அந்தர் பல்டி... தொண்டாமுத்தூரில் போட்டியிட உறுதி..  மன்சூர் மனதை மாற்றிய அந்த அறிவுரை..! | Actor Mansoor Alikhan committed to  compete in ...

Devi Somasundaram  : விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாசல்ல  திரு மன்சூர் அலிகான்  சத்தம் போடற வீடியோ ஒன்னு பார்த்தேன்.
விவேக் அவர்களுக்கு  கோவிட்  வேக்ஸின் போட்டதால  தான்  விவேக் உடல் நிலை  பாதிச்சது, கொரானா  டெஸ்ட் எல்லாம்  நிறுத்துங்கன்னு  பத்திரிக்கையாளர் முன்னாடி சத்தம்  போடறார் .
மன்சூல் அலிகான நான் குற்றம்  சொல்ல விரும்பவில்லை.அவருக்கு விவேக்  மீது  உள்ள பாசத்தில் வர  கோபம் இயல்பானது என்று எடுத்துக் கொள்வோம் .
விவேக் ஊசி  போட்டதால் தான் பாதிக்கப்பட்டாரா ?. கோவிட்  ரெஸ்பிரிரேட்டரி .அதாவது சுவாசப் பாதை  தொற்று .அதற்கும்  ஹார்ட் அட்டாக்கும்  சம்பந்தமில்லை .
ஹார்ட் அட்டாக் வர  நம் இதயத்துக்கு ரத்தம் போகும் அல்லது வரும்  பாதைகளில்  ஏற்படும்  அடைப்பு காரணம் .அந்த  அடைப்பு  ஒரே  நாளில் வராது .
கொஞ்ச கொஞ்சமா  ஏற்படும் டெபாஸிட்ல  நடப்பது....முதல் நாள்  ஊசிபோட்ட  உடனே அப்படி ஆக   99%  வாய்ப்பில்ல..ஆக  இது தடுப்பூசியால் நடந்தது  இல்லை

எங்கள் சின்ன கலைவாணருக்கு என்றும் அழிவில்லை .

 சின்ன கலைவாணரே  நீங்கள் மக்களை சிரிக்க வைத்தவர் இனியும் உங்கள் படைப்புக்கள் சிரிக்க வைத்து கொண்டே இருக்கும்  
வெறும் சிரிப்பு மட்டுமல்ல உங்களின் சிரிப்பிற்குள் சிப்பிக்குள் முத்துக்கள் போல கருத்துக்களும் புதைந்து  இருக்கும்.
அதனால்தான் நீங்கள் சின்ன கலைவாணர் என்ற பேறு பெற்றுள்ளீர்கள்
நீங்கள் என்றும் வாழும் சின்னக்கலைஞரே
கலைஞரை உங்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்திருக்கீறீர்கள்!
கலைஞருக்கு மட்டுமல்ல கலைவாணருக்கு மட்டுமல்ல எங்கள் சின்ன கலைவாணருக்கும் என்றும் அழிவில்லை .
என்றும் வாழ்கிறார்கள்

நடிகர் விவேக் காலமானார்

tamil.oneindia.com : சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார்.
அவருக்கு வயது 59. விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். வெள்ளிக்கிழமை காலையில் அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார்
விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

திடீரென மயங்கி விழுந்த விவேக்..சோர்வாய் இருந்ததால் காலையில் உடற்பயிற்சி செய்யவில்லை நடந்தது என்ன?

சோர்வாய் இருந்த விவேக்

Kalaimathi - /tamil.filmibeat.com: சென்னை: நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காலை நடந்தது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி, விஜய், அஜித், கார்த்தி, தனுஷ், என டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் விவேக்
தன்னுடைய கருத்து நிறைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்காக, சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்படுகிறார் நடிகர் விவேக். சினிமாவில் சமுதாய அக்கறை சார்ந்த நகைச்சுவை காட்சிகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்
திரைத்துறையில் அவருடைய சாதனையை பாராட்டி மத்திய அரசு, நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. மரம் நடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். 59 வயதான நடிகர் விவேக் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறமற்றவர்களுடன் அகிம்சை வழியில் பேசிதீர்ப்பதற்கான கால அவகாசம் நமக்கில்லை?

May be an image of 2 people and text that says 'தேர்தல் BREAKING SUN ராமநாதபுரததில் 31 லேப்டாப் உடன் நுழைந்த 31பேர் வாக்கு எண்ணிக்கை தேர்தல் ஆணையம் ஆலோ சனை கொரோனா உவது அலை வேகமாக பரவும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து, இந்திய தேர்தல் ஆணைய திகாரிகளுடன் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகரிகள் இன்று ஆலோசனை unnewslive.i APR 2021 வாக்குபெட்டி அறை அருகே பரப நடுராத்திரியில் மாற்றுகிறார்களா? பிடிபட்ட கண்டெய்னருக்குள் ஓட்டு மெஷின்! தமிழகத்தில்வலம் வரும வின கண்'
IdhayaAmuthan Adv : ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் போர்ன்னு சொல்லிட்டு
ஒட்டுமொத்த தமிழகமும் ( சில சங்கிகளையும் அதன் அடிமைகளையும் தவிர்த்து)  
ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிரான சமூகவிரோதிகளுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் திமுக மற்றும் அதன்கூட்டணிக்கு ஆதரவாக
இந்நிலையில் பொணத்தை எரிக்கலாமா  இல்ல புதைக்கலாமான்னு யோசிக்கிறமாதிரி...
மே - வாக்குகளை எண்னலாமா தள்ளிப்போட்டு எதாவது தில்லுமுல்லு பண்னலாமான்னு சதிதிட்டம் தீட்டுது சங்கிகூட்டம்.
அதற்கு முன்னோட்டமா வாக்குசாவடிக்குள் நுழைவதுபோல் ஆங்காங்கே பாவ்ல காட்டுவது..
தந்தை பெரியார் , பேரரிஞர் அண்னா , காமராசர் போன்றவர்களின் பெயர்களை நீக்குவது ...
இந்தியை திணிப்பது போன்று போக்குகாட்டி வருகிறார்கள்

கொரோனா - தமிழகம் குஜராத் மாதிரி ஆக வாய்ப்பு உள்ளது ! மருந்து, மருத்துவர்கள், மருத்துவ மனை, வாக்சின் தட்டுப்பாடு!

இன்னும் எட்டு வாரத்துல இப்ப உள்ள குஜராத் மாதிரி ஆக வாய்ப்பு உள்ளது அதற்கு 4 முக்கிய காரணங்கள்.. 1) மருந்து தட்டுப்பாடு 2)வாக்சின் தட்டுப்பாடு 3) இடம் பற்றாக்குறை 4) மருத்துவர்கள் பற்றாக்குறை Be safe னு சொல்லுறது பார்மாலிட்டி தான்
May be an image of 1 person and standing

வெங்கடேஷ் ஆறுமுகம்  : 5 நாட்கள் சிகிச்சைக்கு பின்னும் மீண்டும் எனது சிடி ஸ்கேனில் இன்று 20% கொரோனா தொற்று உறுதி!
தற்போது இந்தியாவில் பரவும் இரண்டாவது கொரோனா அலை Double mutant virus எனப்படுகிறது! ஒரு நாளில் இரண்டு லட்சம் கோவிட் நோயாளிகள் இந்தியாவில் உருவாவதற்கு இந்த புதிய கொரானா வைரஸ் B 1617 தான் காரணம். இந்த mutation உலகில் வேறெங்கும் இல்லை.
இது dangerous virus என்பதற்கான எல்லா தகுதியும் பெற்றது என கண்டறிந்துள்ளனர். இதில் இரண்டு mutationகள் இருக்கும். அதாவது இரண்டு இடங்களில் E 484 Q மற்றும் L 452 R, மரபணு மாற்றம் ஆகி இருக்கும்.
இந்த மரபணு மாற்றம் என்ன செய்யுமெனில் இந்த வைரஸ் சுற்றி இருக்கும் ஊசி போன்ற இடங்களை இன்னும் கூர்மையாக்கும். இதனால் இந்த வைரஸ் எளிதாக உடம்பில் உள்ள செல்களில் ஊடுருவி செல்லும் தன்மையை பெறுகிறது. ஏற்கனவே இந்த வைரஸ்க்கு எதிர்க்க நம் உடலில் உருவாகி இருக்கும் எதிர்ப்பு சக்தி உள்ள செல்களில் கூட ஊடுருவி அதுலேயே பல்கி பெருகி அதையும் அழிக்கும் வாய்ப்பு பெற்றது.

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

அதிமுக அடிமட்டத்தொண்டன் ஜாதியை கடக்க முயலும் அரசியலுக்கு உங்களைவிட ஆக்கப்பூர்வ பங்களிப்பான்.

May be an image of 6 people, people standing and text that says 'AINA ஹிந்து மக்கள்... SAINA சங்கி... M SnINA & ஜீ... M'

LR Jagadheesan :  தமிழ்நாட்டு அரசியலில் புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜகனை தன் ஆதர்ஷமாக கொண்டாடும் பா ரஞ்சித்தும்,
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியனையும்,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமியையும்,
தன் அரசியல் ஆதர்ஷமாக கொண்டாடும் மாரி செல்வராஜும் தான்,
உங்களின் ஆனப்பெரிய தமிழ்நாட்டு  திரைத்துறை ஆதர்ஷங்கள் என்று கொண்டாடுவது உங்கள் உரிமை!. அதில் மற்றவர்கள் கேள்வி எழுப்ப ஒன்றும் இல்லை.
ஆனால் அவர்களை ஒருபக்கம் சினிமாவில் கொண்டாடிக்கொண்டே,
தமிழ்நாட்டு அரசியலில் ஜாதி ஒழிப்பு அல்லது ஜாதிகடந்த அரசியல் பற்றியெல்லாம் அடுத்தவர்களுக்கு வகுப்பெடுக்க முற்படாதீர்கள்.
உங்களைவிட அதிமுக கட்சியின் அடிமட்டத்தொண்டன் மேலதிகமாகவும் கூடுதலாகவும் ஜாதிகடந்த அல்லது ஜாதியை கடக்க முயலும் அரசியலுக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பான்.

அமைச்சர் பதவி- ஸ்டாலின் ஆலோசனை: துரைமுருகன் அதிர்ச்சி?

அமைச்சர் பதவி- ஸ்டாலின் ஆலோசனை: துரைமுருகன் ஷாக்!

minnambalma : திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துரைமுருகன் சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று (ஏப்ரல் 14) குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த துரைமுருகனுக்கு அவரது பங்களாவில் திருடர்கள் புகுந்த விஷயம் லேசான அதிர்ச்சியைதான் கொடுத்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் துரைமுருகனுக்கு சொகுசு பங்களா இருக்கிறது. அங்கேதான் அவ்வப்போது சென்று ஓய்வெடுப்பார் துரைமுருகன். சில நாட்களுக்கு முன் அந்த பங்களாவுக்குள் திருடர்கள் நுழைந்தனர். துரைமுருகன் பங்களா என ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் நுழைந்த அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காததால், கையில் கிடைத்த லிப்ஸ்டிக்கை எடுத்து சுவற்றில், ‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’ என்று துரைமுருகனுக்கே நக்கலாக எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

வாக்கு மையங்களில் காண்டெயினர் வண்டிகள்! தில்லுமுல்லுகள் நடக்கிறதா? சமூக வலைத்தளங்களில் .....

May be an image of one or more people and people standing
May be an image of 3 people, people standing, screen and indoor
உதயநிதி ஸ்டாலின் 
A Sivakumar : . கண்டெயினரில் பொறுத்தப்பட்ட மொபைல் டாயல்ட் வண்டிகள் குறித்து கழகத்தவருக்கு பல சந்தேகங்கள்... அவர்களுக்கான விரிவான விளக்கம்: வாக்குப்பெட்டிகள் ஒரு அறைக்குள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, அதன் முன்னே ஒரு கேமராவும் வைக்கப்பட்டு அதை வேட்பாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதியிருக்கிறது. இது போக வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதையும் தாண்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கழகத்தின் செயல்வீரர்கள் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள்.
கண்டெயினர்கள் பேரணியே வந்தாலும் வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்குள் போகாத வரை ஒன்றும் செய்ய முடியாது.
வாக்குபெட்டிகள் எல்லாம் battery ஆல் இயங்குபவை. அதை கழட்டிவிட்டு தான் store செய்வார்கள், செய்திருக்கிறார்கள். நம்மவர்கள் வெளியே காவலுக்கு இருக்கிறார்கள். 234 வேட்பாளர்களுக்கும் 24hr live feed வந்துட்டே இருக்கு. கொஞ்சம் கவனம் சிதறினாலும் ஆபத்து தான் என்பதையும், இந்த கண்டெயினர்களின் வருகை வேறு எதற்கோவான முன்னோட்டம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

நடிகர் விவேக் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

நடிகர் விவேக்குக்கு இன்று (16/04/2021) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'எக்மோ' கருவி மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். 

 இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ராஜு சிவசாமி மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

பெரியார் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் பெரியார் பெயரை பார்த்ததும் யாருக்கு வலிக்கிறது?

பெரியார் ஈவெரா சாலையை கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பெரியார் ஈ.வே.ரா. சாலை என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக பெரியார் ஈவெரா சாலை என பெயர் மாற்றம்: வலுக்கும் திமுக உள்ளிட்ட கட்சியினரின் கண்டனக் குரல்!

kalaignarseithigal.com - Janani : "உப்புக்கும் முத்துக்கும் இடமளிக்கும் கடல், உயிர் பறிக்கும் திமிங்கிலங்களுக்கும் இடமளிப்பது போல் - வல்லவர்க்கும் நல்லவர்க்கும் இடம்தரும் வரலாறு; வஞ்சகர்களுக்கும் கோழைகளுக்கும் இடமளிக்கத்தான் செய்கிறது" - என்று எழுதினார், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! எத்தனையோ பெரிய மனிதர்கள் குடியிருந்த கோட்டையில், பழனிசாமி போன்ற வஞ்சகர்களும் கோழைகளும் இடம்பெற்றுவிட்டதும் தமிழ்நாட்டின் வரலாறுதான். தகுதியற்றவரை அந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டால், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தகைய இழிசெயலையும் செய்வார். அத்தகைய இழிசெயல்களின் பட்டியல், பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் ஏராளம்! ஏராளம்!

கும்பமேளா நிகழ்ச்சியில் ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு.. நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவால் உயிரிழந்தார்

May be an image of 4 people, people standing and text that says 'oneindia tami 2.9M Followers பாலோயிங் கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு! 16 16Apr21. Apr 21 5:57 AM'

tamil.oneindia.com :உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவமாடுகிறது. கும்பமேளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவைவிட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனிதமான நாட்களில் ஹரித்வார் கங்கை நதியில் புனித நீராடினால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காகவே கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர் திரண்டு ஒரே நேரத்தில் கங்கை நதியில் புனித நீராடுவர்.
இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருந்த நிலையில் 3 மாதங்கள் நடைபெற வேண்டிய கும்பமேளா நிகழ்வுகள் 2 மாதங்களாக குறைக்கப்பட்டன. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஹரித்வார் நகரில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் அலை அலையாக அணி திரண்டனர்.

கும்ப மேளாவுக்காக குவியும் பக்தர்கள் கொரோனாவால் திணறும் ஹரித்வார்

tamil.samayam.com : கும்ப மேளாவுக்காக ஹரித்வாரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 1000 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இன்று ஒரே நாளில் 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஹரித்வாரில் 2,812 பேர் கொரோனாவால் (Active cases) பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நாளை இரவு முதல் பொது முடக்கம்: அரசு அதிரடி உத்தரவு!
கும்ப மேளா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஏராளமான யாத்ரீகர்கள் ஹரித்வாருக்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். கூட்டம் மிகுதியின் விளைவாக ஹரித்வாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உணவு பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்.. பல பொருட்கள் அவுட் ஆப் ஸ்டாக்..!

 உணவு பொருட்கள் தட்டுப்பாடு

Prasanna வெங்கடேஷ் tamil.goodreturns.i : இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் இது கடுமையாகி வருகிறது.
இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை 2020 மார்ச் மாதத்திற்குப் பின்பு மீண்டும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மக்கள் உணவுப் பொருட்களை மிகப்பெரிய அளவில் வாங்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் ஷாப்பிங் மால், மளிகை கடைகள், ஈகாமர்ஸ் தளத்தில் பொருட்களுக்குத் திடீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
கொரோனா 2வது அலை கொரோனா 2வது அலை கொரோனாவின் 2வது அலையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது.

இப்போதே வாக்குகளை எண்ணுங்கள் .தாமதம் சந்தேகமளிக்கிறது! மக்கள் கோரிக்கை!

 tamil.oneindia.  : சென்னை: தமிழகத்தில் மக்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்..
உடனடியாக நடந்து முடிந்த தேர்தலின் பதிவான வாக்குகளை எண்ண சொல்லுகிறார்கள்.
கடந்த 6-,ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது...
அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இப்படி ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தபோதே, பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.. 6ம் தேதி நடக்கும் தேர்தலுக்கு ஒரு மாசம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.
பலவாறாக ஐயமும், வதந்தியும் பரவி வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, டிவியில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒரு மாதம் கழித்து தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது, ஒரு மாநில தேர்தல் முடிவு பிறமாநில தேர்தலை பாதிக்காமல் இருக்கவே 5 மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது" என்றும் விளக்கம் தந்திருந்தார்.

ஆனாலும், ஒரு மாசம் கேப் என்பது மிகப்பெரிய இடைவெளியாகவே கருதப்படுகிறது..
இப்போது வாக்கு பெட்டிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. சிசிடிவி கேமரா முன்பாக இரவும் பகலும் வேட்பாளர்கள் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றனர்.

குஜராத்தில் நோயாளிகளுக்கு போதிய கட்டில் இல்லை போதிய மருந்து இல்லை போதிய அம்புலன்ஸ் இல்லை போதிய இடுகாடு கூட இல்லை

May be an image of one or more people, people standing and text that says 'unbhakt Gujarat has run out of BEDS Gujarat has run out of AMBULANCES StOCk Gujarat has run out of Gujarat has run out of VACCINES CREMATORIES BUT WORLD'S TALLEST STATUE, WORLD'S LARGEST STADIUM ARE IN GUJARAT BUBBLE OF GUJARAT MODEL IS EXPLODING'
May be an image of 1 person, outdoors and text that says 'Damodaranprakash Prakash 4h. மோடியின் நவீன இந்துத்துவ குஜராத்தில் திறந்த வெளியில் கொரோனா பிணங்களை எரிக்கிறார்கள். 3000 கோடியில் பட்டேலுக்கு சிலை அமைத்தார்கள் சுடுகாடுகளை கட்ட மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு சிலைகள் கோவில்கள் முக்கியம் மனிதர்கள் முக்கியமல்ல... 2021/4/12'

 Swaminathan V வைத்திலிங்கம்  :  குஜராத் - உண்மை நிலைமையை மூடி மறைத்தாலும், தவறான தரவுகள் தந்து , முதன்மை மாநிலம், முன்னேறிய மாநிலம் என்று மூச்சு முட்ட ஊதிப் பெருக்கி பொய்யுரை பகன்றாலும் என்றாவது ஒருநாள் மாய பிம்பம் உடைந்து,  உண்மை நிலவரம்  வெட்ட வெளிச்ச மாகிவிடும்.
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கொரோணா நோயினால் உயிர் நீத்த பிணங்கள் குவிந்து கிடக்கும் மோசமான நிலை.
தான் ஆளும் மாநிலத்தையே சீர்திருத்த முடியாத பாஜக, திறமையுடன் பரிபாலனம் செய்து தமிழ்நாட்டை முன்னேறிய முதன்மை மாநிலமாக கட்டமைத்த கழக ஆட்சிகளை அகற்ற திட்டமிடுவது வெட்கக் கேடான செயல்.
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் மெத்தப் படித்த துக்ளக் மேதாவிகள் உண்மை நிலவரத்தை உணர்ந்து இனியாவது கழக ஆட்சியில் தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவராகிவிட்டது என்று ஒப்பாரி வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கவிதா சொர்ணவல்லி : ரஞ்சித் சங்கிகள் - நாய் டம்பளர்கள் - அதிமுக அடிமைகள் & நடுநிலை நக்கீஸ்.

May be an image of 2 people and text that says 'John Thomas Elumalai'

கவிதா சொர்ணவல்லி : 90-களின் பிற்பகுதில காஞ்சிபுரத்துல உள்ள தலித் மக்கள்,  
அங்க பிற சாதி ஆட்களால் பயபடுத்தபட்டுட்டு இருந்த பஞ்சமி நிலங்களை மீட்கிறதுக்காக போராட்டம் நடத்துறாங்க.
போராட்டத்தின் ஒரு பகுதியா நாலரை ஏக்கர் நிலத்தை மீட்டு, அங்க விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறாங்க தலித் மக்கள்.
ஆட்சியாளர்கள் உடனே, அந்த மக்களை அடிச்சு விரட்டுறாங்க.
இதைக் கண்டிச்சு ஆட்சியர் அலுவலகம் முன்னாடி  போராட்டம் நடத்துறாங்க. உடனே போலீஸ் துப்பாக்கி சூடு நடத்துது. அதுல இரண்டு தலித் இளைஞர்கள் பலியாகுறாங்க.
துப்பாக்கிச் சூட்டுல பலியான ஏழுமலைக்கு வெறும் 21 வயது தான். திருமணம் ஆகலை. பலியான இன்னொருத்தர், 25 வயதான ஜான் தாமஸுக்கு திருமணமாகி ஒன்பது மாதக் கைக்குழந்தை இருந்தது.
சரி.. இந்தப் படுகொலைகள் எந்த ஆட்சியில நடந்த்துசுன்னு தெளிவா தெரியனுமா ?
1994-வருடம். ஜெயா ஆட்சியில. அதிமுக ஆட்சியில.
இறந்தது பறையர்கள்.
இதப் பத்தி இங்க உள்ளவனுங்க என்னைக்காத்து பேசி பாத்திருக்கீங்களா? பாத்துருக்க மாட்டீங்க ?

கோவை.. வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தில் நள்ளிரவில் உள்ளே வந்த கன்டெய்னர்!

May be an image of 2 people and people standing

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 89,937 வாக்கு சாவடிகளுக்கு 1,55,102 இவிஎம் மெசின் வந்ததாக தகவல். பழுதானால் மாற்றி கொள்ள பத்து சதவிகிதம் மெசின்கள் போதுமே இவ்வளவு மெசின்கள் ஏன் வந்தது? சந்தேகம் வராதா

Neela Megam : · 😡சேலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த கண்டெய்னர்கள் சிறை பிடிப்பு. 

😡கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் கல்லூரி வளாகத்தில் 3 கண்டெய்னர்கள் சிறைபிடிப்பு 

😡பண்ருட்டியில் லேப்டாப் உடன் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை அருகே இருந்த மூவரை பிடித்தல். 

😡இராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கல்லூரி வளாகத்தில் 30 க்கும் மேற்பட்ட நபர்கள் லேப்டாப் உடன் சிறைபிடிப்பு. 4,5 அணிகள் களத்தில் நின்றிருந்தாலும் இந்த நான்கு சம்பவங்களிலும் திமுகவினராலே எதிரிகளின் நோக்கம் தடுக்கப்பட்டிருக்கின்றது. என்ன நடக்கிறது...? evm fraud

பாகிஸ்தானில் வசித்துவரும் பிரான்ஸ் குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தல்

daylithanthi : இஸ்லாமாபாத், பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கைக்கு ஆதராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது. அதன் பின்னர் அந்த விவகாரம் சற்று தணிந்திருந்தது. இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் - இ - லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சாத் ரிஸ்வி என்பவர் செயல்பட்டு வருகிறார். 

வியாழன், 15 ஏப்ரல், 2021

திமுக கண்டுகொள்ளாமல் விட்ட கதைகளின் வரலாறு! திமுகவுக்கு எதிராக urban legendகள் உலா?

Sridhar Subramaniam : நான் இன்னமும் 'கர்ணன்' படம் பார்க்காததால் படத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த சம்பவம் பற்றித் தெரியாது. படம் பார்த்தவர்களிடமும் அது குறித்து எதுவும் சொல்ல வேண்டாம்; படம் ஓடிடியில் வெளியானதும் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லி விட்டேன். (எனவே யாரும் தயவு செய்து கமெண்ட்டில் படத்தின் spoilerகளை விளக்க முயல வேண்டாம்.) நான் புரிந்து கொண்ட வரையில் அதிமுக ஆட்சி நேரத்தில் நடந்த ஒரு சாதிக் கலவர சம்பவத்தை திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக காட்டி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதற்கான வலுவான ஆதாரங்களை கொடுத்த பின்னரும் அதனை மாற்ற முனையவும் இல்லை என்றும் தெரிகிறது அப்படி மாற்ற மறுப்பது இயக்குனரின் தனிப்பட்ட முடிவு. தனது படைப்புரிமையில் அடுத்தவர் தலையிடக் கூடாது என்று அவர் நினைக்கலாம். ஆனால் இதே இயக்குனர் இதே படத்தில் உள்ள 'பண்டாரத்தி புராணம்' பாடல் முன்பு சர்ச்சையான பொழுது அதனை 'மஞ்சனத்தி புராணம்' என்று மாற்றினார் என்பது கவனிக்கத்தக்கது. தனக்கு சௌகரியமாக இருக்கும் பொழுது தனது படைப்புரிமையில் குறுக்கீடுகளை ஏற்றுக் கொள்கிறவர் இந்த விஷயத்தில் வலுவான ஆதாரம் இருந்தும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.
அதுவுமின்றி, இணைய திமுகவினர் இந்த சர்ச்சையை ஆக்ரோஷமாக அணுகுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'இதை சும்மா கண்டுக்காமலே விட்டிருக்கலாம்,' என்று நிறைய பேர் சொல்கிறார்கள். நானும் வழக்கமாக இந்தக் 'கண்டுக்காம விடுவதின்' ஆதரவாளன்தான். அது கற்பனை விஷயங்கள் பற்றியது.

திராவிடம் எங்குவரை இருக்கு!? பார்பனீயத்தின் அகண்ட பாரதத்தையும் தாண்டியிருக்கு!

The Legacy Of The Dravidian Stalwarts Periyar, Annadurai And Karunanidhi
Suresh Kumar Sundaram : நமக்கு சுய தம்பட்டம் அதிகம் ... தமிழ் பேர்ரசுகள் ஏன் வீழ்ந்தது என்று ஒருத்தரும் பேசமாட்டார்கள்... சங்க இலக்கியத்தில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கிறதா என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்... பதிலுக்கு சங்க இலக்கியத்தில் ‘இட்லி’ என்ற வார்த்தை இருக்கிறதா என்றேன்!வந்தேறி என்றார்கள்! அதுவும் ஒரு அவுஸ்திரேலிய சிங்கள தமிழ் ஒரவு..இத்தனை இலக்கியங்கள் , இருந்தும் கல்விக்காக இன்றும் போராட வேண்டியுள்ளது என்பது ‘திராவிடம்’ 100 ஆண்டுகளில் என்ன செய்தது என்பது கேட்கும் மூளையற்ற உறவுகளுக்கு தெரிய வருவதில்லை!
பார்பனீயம் அல்லது சனாதனம் என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் இருக்கின்றதா? தமிழ் என்ற வார்த்தை திருகுறளில் இல்லை என்பதால் தமிழ் இல்லாமலா போச்சி?
சீமானை சென்னையில் ‘எச்சை’ என்பது போல் ‘ஈ’ 🪰 ஐ குமரி மாவட்டத்தில் ‘ஈச்ச’ என்பார்கள் ... அதற்காக எச்சை, ஈச்ச என்ற வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்று கேட்பார்களா!?

வன்னி விவசாயிகள் இயக்க வரலாறு – பகுதி – 16

May be an image of tree and outdoors

Maniam Shanmugam : வன்னி விவசாயிகள் இயக்க வரலாறு – பகுதி – 16    : பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் செல்லும்போது 9ஆம் மைல் கல்லில் வருவது தருமபுரம் குடியேற்றத் திட்டம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல அன்றைய காலகட்டத்தில் இங்கே வாழ்ந்தவர்கள் அனைவரும் கூலி விவசாயிகள். அனுராதபுரம், மதவாச்சி போன்ற இடங்களில் சொந்தக் காணிபூமியுடன் வாழ்ந்த இவர்கள் 1958 இனவன்செயலில் பாதிக்கப்பட்டதால் அகதிகளாகி இங்கு கொண்டுவரப்பட்டு, தலா அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு இருத்தப்பட்டவர்கள். இவர்களுக்கு மற்றைய குடியேற்றத்திட்டங்களில் வழங்கப்பட்டது போல எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. இந்தத் தருமபுரத்தின் கிழக்கு எல்லையில் நெத்தலியாறு என்ற பெயரில் ஒரு சிற்றாறு ஓடுகின்றது. அதன் நீரைத்தான் தருமபுரம் மக்கள் தமது அனைத்துவிதமான அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தினர். அந்த ஆற்றில் ஓடும் நீர் தருமபுரத்துக்கு தென்மேற்காக உள்ள கல்மடுக்குளத்திலிருந்து வரும் உபரி நீர் என அறிந்தேன். 

கோவை ஈஷா நிலத்தில் வைரசுரங்கம்! 100 ஆண்டு பழமையான ஆங்கிலேயே ஆட்சியின் ஆவணங்கள் காட்டிய அதிர்ச்சி தகவல்

May be an image of 1 person and text that says 'NEWS AR JUSTIN ஜக்கி வாசுதேவ் உரை! "காட்டுவாசிகளின் நிலத்தையோ, காடுகளின் நிலத்தையோ ஒரு இன்ச் நான் எடுத்து இருந்தேன் என்று நீங்கள் நிரூபித்தால் நான் நாட்டை விட்டே சென்று விடுவேன்"'
Venkat Ramanujam நோட் பண்ணிக்கோங்க .. மே க்கு பின்னர் நடைமுறைக்கு வரலாம்.. படக்குறிப்பு : RafaleScam புரோக்கர் குப்தாவின் #ஊழல் பார்ட்னர் மிஸ்டர் ஜக்கி C/o ishafoundation

  John Justus  வைரச் சுரங்கத் திருட்டு..! கோவையில் 20,00,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை வைரச் சுரங்கம் உள்ளது. கோவையில் உள்ள ஈஷா அருகில் உள்ள பூமியை வாங்க அதன் 100 வருட பழமையான கையெழுத்து ஆங்கிலேயர்கள் கால பத்திரங்களை பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல் இது.! ஈஷா மற்றும் அதன் உள்ளே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்துமே வைரச் சுரங்கம் என 100 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர் கால பத்திரப்பதிவுகள் காட்டியுள்ளன இந்த ஈஷா நடுவில் உள்ள இந்த இயற்கையான மிகப் பழமையான வைர சுரங்கம் 2000 வருடங்களாக சேரமன்னர் "கொல்லிரும்பொறை மாக்கோதை" காலத்திலிருந்து செயல் பட்டுள்ளது. இந்த இயற்கை வைரச் சுரங்கம் மற்ற வைரச் சுரங்கம் போல் பல நூறு மீட்டர்கள் தோண்டி பூமியை பிளந்து கிடைக்கும் சுரங்கம் இல்லை. இயல்பாக சில அடிகளில் கற்கள் போன்று பல நூறு வைரக் கற்கள் கைகளாலேயே எடுக்கலாம்.

ஈஷா நடுவில் உள்ள இந்த வைரச் சுரங்கம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய " இயற்கை வைரச் சுரங்கம்"

கர்ணன்95 ! சங்கிகளும் மாரிசெல்வராஜும் கூட்டாக அரங்கேற்றிய நாடகம்!

Kathir RS  : இதைப் படிச்சா எல்லா திமுககாரனும் தலித்தல்லாத ஓபிசி


உயர்சாதிகள்னு மைன்ட்ல ஒரு எண்ணம் ஒடுதா?
அதுதான் இவர்கள் வெற்றி..மிகத் துல்லியமான திட்டமிடப்பட்ட சாதிய துருவப்படுத்துதல்.(Caste Polarization)
எந்த திமுககாரனும் இந்த பதிவில் குறிப்பிட்டபடி மாரியை திட்டவில்லை.திட்டவும் மாட்டான்.திட்டியிருந்தால் அது PCR ஆக்ட் படி தண்டனைக்குரிய குற்றம்.
அதை யாரேனும் செய்திருந்தால் அவர்கள் மீது வழக்கு போடலாம்.
இவர்கள் யார் அப்படி பதிவிட்டார்கள் என்று சொல்லமாட்டார்கள் சொன்னாலும் பதிவு அங்கே இருக்காது.
இருந்தாலும் அந்த பதிவை எழுதியவர் அவர்கள் அமர்த்திய ஆளாகத்தான் இருப்பார்.
அந்த ஆளைக்காட்டினால் நாமே சைபர் க்ரைமில் புகார் செய்து உள்ளே தள்ளலாம்.
மாரியின் மீது கோபத்தை காட்டிய திமுகவினரில் தலித்துகளும் இருந்தார்கள் ஓபிசிகளும் இருந்தார்கள் எஃப்சிகளும் இருந்தார்கள்.
காரணம் மாரி செய்தது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த ஐடியே சொல்வது போல மாரி திட்டமிட்டு அரேங்கேற்றிய சதி அது.

கக்கன் எம்ஜியார் ஜெயலலிதா பன்னீர்செல்வம் எடப்பாடிகளின் ஆட்சிகளில் நடந்த கொடூரகொலைகள் எல்லாம் திரைத்துறையின் கண்களில் ...?

Devi Somasundaram : 1965 மொழிப்போர் .மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது . மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப் பட்டனர் .அப்பொழுது முதல்வர் பக்தவச்சலம் ..சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி திரு கக்கன் ( .இந்த போராட்டத்தை மையப்படுத்தி கக்கன் வேடத்தில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜும் படம் எடுக்கப் போவதில்லை..உதய நிதியும் எடுக்கப் போவதில்லை ) . இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு. .இது சாதி போராட்டம் இல்லை.
1978 விவசாயிகள் போராட்டம்.
எற்றப்பட்ட மின் கட்டணத்தை எதிர்த்து 77 ல் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் . அப்பொழுது எம் ஜி ஆர் முதல்வர் .
1987 வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்.
இந்தித் திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்னியர் சங்கம் 1987 ஆம் ஆண்டு முன்னெடுத்த தனி இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம்..அப்பொழுது முதல்வர் எம் ஜி ஆர் .18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் .70 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1999 மாஞ்சோலை.
ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளிகள் நடத்திய போராட்டத்தில் விஷமிகள் கல் வீசி ( அந்த முதல் கல் என்று ஆவணப்படம் உள்ளது) தாக்க , போலிஸ் தடியடி நடத்த பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 17 தொழிலாளிகள் நீரில் மூழ்கி இறந்தனர்
.எதிர்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், போலீஸ் கற்களை கொண்டு தொழிலாளர்கள் மீது தாக்குதல்
நடத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார் . தோட்ட வேலைக்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் போகவில்லை..அதில் பல சாதி, மதத்தினர் கலந்து கொண்டனர் ..இறந்தவர்களில் எல்லா சாதியினர் உண்டு ..இதுவும் சாதி பிரச்சனை இல்லை

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு
maalaimalar : சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 14 லட்சத்து 11 ஆயிரத்து 194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13 லட்சத்து 93 ஆயிரத்து 811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.... இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டனர். நாளையும் இந்த பணி தொடர்கிறது.

இந்த நிலையில் அடுத்த 10 நாளில் வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

கர்ணனில் செய்யப்பட்ட மாற்றம்.. எழும் அதிருப்தி குரல்கள்.. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டிவிட்!

Udhayanidhi Stalin Speaks About Dynasty Politics, Chepauk Seat & AIADMK-BJP  Alliance | EXCLUSIVE - YouTube

Bahanya  tamil.filmibeat.com :சென்னை: கர்ணன் படம் குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டிவிட்டியுள்ளார்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் கர்ணன். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இசை, பாடல்கள், கதாபாத்திரங்களின் நடிப்பு என அனைத்தும் பாராட்டை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசிலும் கர்ணன் திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது

தொடரும் சர்ச்சை அதேநேரத்தில் படம் குறித்த சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. கொடியன்குளம் வன்முறையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், எந்த ஆண்டு இந்த வன்முறை அரங்கேறியது என்பது குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சை எழுந்து வருகிறது.

இனி மார்வாடிக்குத்தான் வீடு... தமிழனுக்கு சுடுகாடு!-எச்சரிக்கும் JEEVA TODAY

மம்தா பானர்ஜி : பாஜக 70 இடங்களில் கூட வெற்றி பெறாது மேற்குவங்க தேர்தலில் ...

tamil.samayam.com :தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்டத் தேர்தல்கள் முடிவுற்றுள்ளன. ஐந்தாம் கட்டத் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் அனல்பறந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டத்தின் தப்கிராம் - ஃபுல்பரியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நடந்து முடிந்த 135 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 100 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
நான் சொல்கிறேன். தேர்தல் முழுவதுமாக நடந்து முடிந்த பிறகு 294 தொகுதிகளில் 70 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது.
ஒரே விஷயத்தை வெவ்வேறு இடங்களில் பாஜக மாற்றி மாற்றி கூறி வருகிறது.
டார்ஜிலிங்கில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய போது NRC அமல்படுத்தப்படாது என்றார்.

அம்பேத்கர் வழி நின்று சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் !

“அம்பேத்கர் வழி நின்று சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் !
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும் - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் - இருந்து இன்றும் வழிகாட்டி வரும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவரது நினைவைப் போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.
May be an image of one or more people and people standing

Shahjahan R  : பம்பாய் சட்டமன்றத்தில் 4-8-1923 அன்று எஸ்.கே. போலே ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதன்படி ஆறு, குளம், கிணறு  நீர்த்தேக்கம் முதலிய தண்ணீர் கிடைக்கக்கூடிய பொது இடங்களிலும், பள்ளிக்கூடம், மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற பொது இடங்களிலும் தீண்டப்படாதோர் நுழை தடையும் கூடாது என்று முடிவு  செய்யப்பட்டது. எல்லாத் துறைகளும் இந்தத் தீர்மானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பம்பாய் அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், உண்மையில் அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொது இடத்துத் தண்ணீர் குடிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று என்பதையும், அதற்குப் பின்பலமாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டது என்பதையும் நிரூபிக்க அம்பேத்கர், மஹாட் என்ற ஊரில் செளதார் என்ற பொதுக்குளத்தின் நீரைப் பருகித் தனது மனித உரிமையை நிலைநாட்டிக் கொள்ள நிச்சயித்தார். அப்போதுதான் மற்றவர்களுக்கு இந்த உரிமை சரியாகப் புரியவரும் என்று அவர் கருதினார்.

திருமாவளவனின் அத்தனை முயற்சிகளையும் எள்ளி நகையாடும் மாரிசெல்வராஜின் கர்ணன் 95

Vallaththarasu Ramasamy: : கர்ணன் (2021) வன்முறைப் படம் இல்லை என்கிறார்கள். எனில் அதில் காட்டப்படும் கொலை மற்றும் அடிதடி யாருக்கான செய்தி?
1) தலித்களுக்கா? 2) ஆதிக்க சாதியினருக்கா? 3) காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரத்துக்கா? இதில் யாருக்கானது என்றாலும் அது ஓர் அர்த்தமற்ற, உணர்ச்சிவசப்பட்ட செய்தி மட்டுமே. ஒரு வகையில் ஆபத்தான செய்தியும் கூட.
நிஜத்தில் ஒரு காவல்துறை உயரதிகாரியை (ஆதிக்க சாதிக்காரன்) கர்ணன் மாதிரி ஒரு தலித் இந்தப் படத்தில் காட்டியது போல் கழுத்தறுத்துக் கொன்றிருந்தால் அந்த மொத்த கிராமத்தையும் அழித்திருப்பார்கள். கர்ணனையும் கொன்றிருப்பார்கள். அதுதான் இந்தக் கேடுகெட்ட சாதி வெறி சமூகத்தின் நிதர்சனம். அதிகாரம், பணம், ஆள் பலம் இந்த மூன்றுமே ஆதிக்க சாதிகளின் கையில் குவிந்து கிடக்கும் போது வேறென்ன நடக்கும்?
ஆனால் படத்தில் பத்தாண்டுகள் கழித்து நாயகன் விடுதலையாகி வருகிறாராம், அங்கே ஊரில் பேருந்து ஓடுகிறதாம். ஆக, கத்தி எடுத்தால்தான் வேலை நடக்கும் என தலித் இளைஞர்களைக் கொம்பு சீவி விடும் செய்திதானே இதில் விடுக்கப்படுகிறது?
அம்பேத்கர் ஏன் ஆயுதம் ஏந்தவில்லை? அவருக்கு இல்லாத மஹர் செல்வாக்கா? இத்தனைக்கும் ராணுவத்தில் பணிபுரிந்த பரம்பரையில் வந்தவர்கள் அவர்கள்.  

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்படுவர் - ஜோ பைடன் அறிவிப்பு

dailythanthi.com :வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுப்படைகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க படையினர் 2,500 பேரும், நோட்டோ படையினர் சுமார் 7,000 பேரும் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.ஆனாலும், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்தபோது முயற்சி எடுக்கப்பட்டது. அந்த முயற்சியில் தலீபான்கள்-ஆப்கானிஸ்தான் அரசு படையினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டுள்ளது. 

புதன், 14 ஏப்ரல், 2021

அரக்கோணம் இரட்டை கொலையில் பாமக தொடர்பில்லை! உண்மை கண்டறியும் குழு அறிக்கை

ddd

நக்கீரன் :பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது. உண்மைகளைப் புதைப்பதால் மறைத்துவிட முடியாது என்பதை உறுதிசெய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையேதான் பாட்டாளி மக்கள் கட்சியும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.

அண்ணல் அம்பேத்கார் பெயரை வெறும் பிராண்டாக சுயநல அரசியலுக்கு பயன்படுத்துகிறார்களா?

May be an image of 3 people and text that says 'APRIL14TH 4TH EQUALITY W DAY SUN NEWS கற்றவை.. பற்றவை.. தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பின் மொழியாகவும் ருந்திருக்கிறது. அது காஷ்மீர் முதல் வரை பேசப்பட்ட மொழி இன்னும் சொல்லப்போனால், அது நாகர்களின் மொழி. வட இந்திய நாகர்கள் தமிழை கைவிட்டு அதனிடத்தில் சமஸ்கிருதத்தை கைகொண்டுவிட்டனர். தென்னிந்தியர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை கைவிடவில்லை. இந்த மனதிற் கொ ண்டால், தென்னிந்தியர்களுக்கு மட்டும் ஏன் திராவிடம் என்னும் பெயர் சுட்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆக, நாகர்கள் என்பது இனத்தை சுட்டும் பெயர், திராவிடம் என்பது மொழியியல் பெயர். தாசர்கள் என்பவர்கள்தான் நாகர்கள், நாகர்கள்தான் திராவிடர்கள். இந்தியா வை பொறுத்தவரை இரண்டே இனங்கள்தான் ஒன்று ஆரியர்கள் மற்றொன்று திராவிடர்கள். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் Ph.D L.L.D D.Sc, D.Litt, Barrister-at-Law SUNNEWSTAMIL SUNNEWS • sunnewslive.in'
அண்ணல் அம்பேத்காரை படிப்பதற்கோ பின்பற்றுவதற்கோ முயல்பவர்களை விட அவரது பெயரை ஒரு பயன்படுத்தி அவரின் நோக்கத்தை மடைமாற்றம் வேலையை செய்பவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கிறது. .
எப்படி பார்ப்பனர்கள் எல்லாவற்றையும் விழுங்கி (புத்தரை விநாயகர் - விஷ்ணுபெருமாள்) என்று) ஏப்பமிட்டார்களோ,
அதே பணியில்  அண்மைக்கால பெரியார்களையும் விழுங்க முயல்கிறார்கள்.
திருவள்ளுவரையே  விழுங்கும் முயற்சியில் காலத்திற்கு காலம் ஈடுபடுகிறார்கள்  
வள்ளுவரும் கூட ஒரு சனாதன இந்து தர்மத்தின் வழிதான் போதித்தவர் என்று கூற முயல்கிறார்கள்.
அய்யன் திரு வள்ளுவருக்கே இந்த கதி என்றால் அம்பேத்கார் போன்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும்?
இங்கே முக்கியாமாக நான் குறிப்பிடும் விடயம் ஏதோ வடஇந்திய பார்ப்பனர்களையோ ஆர் எஸ் எஸ் பற்றியதோ அல்ல!
தற்போது தமிழ்நாட்டில் பலரும்  அம்பேத்காரை படித்து அவரது கொள்கைகளை உள்வாங்குவதை விட அவரை ஒரு பிராண்ட் ஆக பயன்படுத்தி தங்கள் அரசியல் சுயலாபத்திற்கு பயன்படுத்துவே முயல்கிறார்கள்.