சனி, 23 ஜூலை, 2016

பியுஷ் மனீஷ் மீது ஏன் இந்த கொடூர தாக்குதல்? அக்னி பரீட்சை! Youtube

சமுக ஆர்வலர் பியுஷ் மனுஷின் கைது ஒரு சாதாரண சம்பவமாக தெரியவில்லை. இதன் பின்னணியில் வேதாந்தா போன்ற மிகப்பெரும் காபறேட்டுக்கள் உள்ளன. மத்திய அரசின் நேர்மையும் மிகவும் சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. பியுஷ் மனுஷ் கைதும் டார்ச்சரும் பாஜக தனது எதிர்ப்பாளர்களுக்கு கொடுக்கும் ஒரு செய்தியாக கருத மிகவும் தாராளமான காரணங்கள் உள்ளன .


திருவள்ளுவர் புனித தோமையர்.. ST.Thomas திருக்குறள் இயேசுவின் பொன்மொழிகள்.. கபாலியை மிஞ்சிய பருப்புடா

கேள்வி :- திருவள்ளுவர் ஒடுக்கப்பட்ட சமூகத்ததை சேர்ந்தவர் என்பதால் அவரின் சிலையை கங்கைக்கரையில் வைக்கக்கூடாது என்று இந்து சாதுக்கள் கலவரம் செய்கின்றனரே? பதில் :- திருவள்ளுவர் ஒடுக்கப்பட்டவர் இல்லை. யூதரும் இயேசு கிறிஸ்துதுவின் சீடருமான புனித தோமையார் (தாமஸ்) தான் திருவள்ளுவர். தமிழகத்தில் வள்ளுவராக மாறி கிறிஸ்துவின் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு திருக்குறள் எழுதினார் என்ற ஒரு குறிப்பு சமூக ஊடகங்களில் சில நாட்களாக உலவி வருகிறது. திருக்குறள் யூதநூல் என்று சாதுகளுக்கு தெரிந்தால் ஒருவேளை கலவரம் அடக்கப்படலாம். படிக்க சுவாரசியமாக இருப்பதால் இதோ நான் வாசித்த அந்த குறிப்பு இங்கே.

சென்னை: கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி பலி

பெரம்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த மூன்று பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரியக்கூடிய ஊழியர் ஒருவர், அந்த உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியுள்ளார். அப்போது விஷவாயுவால் தாக்கப்பட்ட அவர் மயக்க மடைந்துள்ளார் மயக்கத்தில் இருந்தவரை காப்பாற்றுவதற்காக சக ஊழியர்கள் இருவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் விஷவாயுவால் தாக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.

அம்மாயி படத்தில் மீண்டுவரும் பூர்ணா


திரை உலக ஆரம்பம் அட்டகாசமாக  சின்ன அசின் என்று விஜயாலேயே பாராட்டும் கிடைத்தது. பட்டம் கிடைத்ததே தவிர நல்ல படங்கள் அமையவில்லை. தமிழ் சினிமாவில் காணாமல் போனார் பூர்ணா. காண்பதெல்லாம் மறையும் என்றால் மறைந்த தெல்லாம் காண்போம் அல்லவா. பூர்ணாவையும் இப்போது படங்களில் காண முடிகிறது. வரலட்சுமி நடிக்கும் அம்மாயி படத்தில் பூர்ணாவும் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். இது தவிர சவரக்கத்தி, மணல் கயிறு 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனார்.சின்ன அசின் இந்தமுறை ஒரு ரவுண்ட் வருவார் போலிருக்கிறது  வெப்துனியா.காம்

பன்னீரு பட்ஜெட் : கனிவு , இரக்கம்,தியாகம், ஈகை தங்கமே மக்களுக்காக துடிக்கின்ற தெய்வமே....இதையெல்லாம் நம்புறாரே ஜெயலலிதா

2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை கவிதை வடிவில் புகழ்ந்துரைத்தார்.
“கனிவு , இரக்கம், ஈகை இலக்கணமாக , மக்களுக்காக துடிக்கின்ற மனித தெய்வமே, மக்களால் நான் , மக்களுக்காகவே நான் என்ற தியாகத்தில் வாழும் சொரூபமே, புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் 6-ம் முறை தமது ஆற்றல் கரங்களில் செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே , 10 கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பத்திரை மாத்து தங்கமே , வீரத்திருமகளே , திருப்புமுனை உருவாக்கிய சரித்திர புத்தகமே சாதனை பெட்டகமே என்னை நம்பி பல பொறுப்புகள் தந்துள்ள அம்மாவுக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

தமிழ் சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்: ’பசி’ திரையிடல்..தமிழ் ஸ்டுடியோவின்....இயக்குனர் துரையுடன் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 100 படங்களைத் திரையிடுகிறது. இதன் தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது.
இது குறித்து அருண். மோ :
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு தமிழ் திரைப்படங்களை திரையிட உள்ளது. பல்வேறு வகையான தமிழ் திரைப்படங்களை திரையிட உள்ளோம். தமிழ் சினிமாவின் பல்வேறு காலத்தில் வெளியான திரைப்படங்களை இந்த திரையிடலில் காணலாம். ஒவ்வொரு திரைப்படமும் ஏதோவொரு விதத்தில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். தமிழ் ஸ்டுடியோ கருத்தியலுக்கு மாறான திரைப்படமாக இருந்தாலும், அவற்றையும் திரையிட இருக்கிறோம்.
இதன் தொடக்க விழா நாளை சனி 23-07-2016 மாலை 05:30 மணிக்கு நடக்க இருக்கிறது.
சிறப்பு விருந்தினர்: பசி திரைப்பட இயக்குனர் துரை
இடம் : பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நேரம் : சனி மற்றும் ஞாயிறு – திரையிடல் மாலை 05:30 மணிக்கும் துவங்கும்.

ஏமாளிகள் இருக்கும் வரை கோமாளிகளுக்கு கொண்டாட்டம் தான்... பருப்புடா...

Louis Fathima Xavier S :ரஜனி என்கின்ற வியாபாரி....
கபாலி, எதிர்பார்த்த அளவுக்கு, பேசப் பட்ட அளவுக்கு, அதில் ஒன்றும் இல்லை, என்பது நெருங்கிய நண்பர்களின், மதிப்பீடு....தமிழர்கள், பொதுவாகவே, சமூக பிரஞை இல்லாதவர்கள், என்பது, வரலாறு....ஆட்டு மந்தை மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள், ஜாதி, மதத்திற்கு அதிக உணர்ச்சிவசப் படுபவர்கள்...ஒருவரை பிடித்துப் போய் விட்டால், அவரது, அனைத்து தவறுகளையும் , மறுத்து விட்டு, அடிமையாய், பாதங்களில் வீழ்ந்து கிடப்பார்கள்...மூளையை உபயோகப் படுத்தி சிந்திக்க வேண்டிய நேரங்களில், உணர்ச்சி வசப் பட்டு சிந்தித்து, சொதப்புவதில் மன்னர்கள்....அதனால் தான்....இப்பொழுது ஒரே ஒரு அமைச்சர் மத்திய மந்திரி சபையில், அதுவும் ஒரு கேபினட் அமைச்சர் கூட நமக்கு கிடையாது....50 எம் பிக்கள் இருந்தும், தமிழகத்திற்கு, உருப்படியான திட்டம் எதுவும் கிடையாது....
ரஜினி, இந்த மந்தி மனப்பான்மையை முற்றிலும் புரிந்து, அதை பணமாக மாற்றிக் கொள்கின்றார்...."

விஜயகாந்த் ; விமானங்கள் காணமல் போவதை மத்தய அரசு தடுக்கவேண்டும்

விஜயகாந்த் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம். விஜயகாந்த் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம்.
விமானங்கள் காணாமல் போவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற ராணுவ விமானம் நேற்று தீடீரென மாயமானது. இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விபத்து ஜூன் மாதம் 8ஆம் தேதி டோர்னியர் ரக விமானம் பயிற்சிக்காக புதுச்சேரி வரை சென்று விட்டு, சென்னை திரும்பும் போது மாயமானது. இதில் 3 பேர் பயணித்த விமானியும், துணை விமானியும் இறந்துள்ளனர்.  கப்டன் சார் இதையும் கோபாலசாமிகிட்டேயே சொல்லுங்க அவருதாய்ன் உங்களுக்கு எது தேவையோ அதை கச்சிமா செய்து முடிப்பாரு.. உங்களுக்கு ஒய்வு தேவைன்னு அவருக்குதாய்ன் ஏற்கனவே தெரிஞ்சு புரிஞ்சு ... இந்த நெலமை..  

கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்... மதிமாறன்

கபாலி: காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்கு புரியாது. (பெரியார் உடை?)
*
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு, காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.-2011 அக்டோபர்.
*
டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற தலைவர்களை சந்திக்கும் படங்களில் கம்பீரமும், அலட்சியமும் வெளிப்படும்.
எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கிற தொனியும், என்னை விட பெரிய அறிவாளி எவன் இருக்கான் இங்கே, என்கிற ஆயிரம் ஆண்டு கோபம் அவருடைய ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படும்.
கோட் சூட் அணிந்து, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிற அந்த கம்பீரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
‘காந்தி, நேரு, பட்டேல் இன்னும் அனைத்து ஆதிக்க ஜாதிக்காரர்கள் நீங்க எல்லோரும் ஒரு அணி. நான் தனி. மோதிப் பாக்கலாமா? தில்லு இருக்கா?’ என்று சவால் விட்டு கூப்பிடுவதுபோலவே இருக்கும் அவர் கம்பீரம்.
அந்த எதிர்ப்பு குறியீட்டின் வடிவமாகத்தான் அவருடைய உடையும் இருக்கும். அவருடைய உடல் மொழியும், அவரின் எழுத்துக்களைப்போல் கூர்மையானது.
காந்தி உடை அவருடைய சிந்தனைகளைப்போலவே செயற்கையாக இருக்கும். அது அவருக்கு தேவையான உடை என்பதை விடவும், அவர் போட்டுக் கொண்ட வேடத்திற்கு பொருத்தமான உடை என்கிற பாணியில்தான் இருக்கும்.

உள்ளாட்சி தேர்தல்களில் திமுக தனித்து போட்டி...

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. ' அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன
. அதேநேரம், அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, கட்சியின் சீனியர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அண்மையில் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம், இதுபற்றி நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார் கனிமொழி. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,

BBC :ஜெர்மன் ம்யூனிக் நகரில் தாக்குதல் நடத்தியவர் 18 வயதான ஈரானியர்

ஜெர்மனியில் ம்யூனிக் நகரில் வணிக வளாகத்தில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்ற நபர் ஒரு 18 வயது ஈரானிய-ஜெர்மானியர் என்றும் அவர் பல ஆண்டுகளாக ம்யூனிக் நகரில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது என்று ஜெர்மன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெல் ம்யுனிக் நகர காவல் துறை தலைமை அதிகாரி பேசுகையில், அந்த நபர் தனியாக செயல்பட்டு வந்ததாகவும், இதற்கு முன்பு அதிகாரிகளுக்கு தெரியாத நபர் என்றும் குறிப்பிட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் அவரை அதிகாரிகள் சுட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் மகனை சுட்டுக் கொல்லுங்கள்.. படுகொலை செய்யப்பட்ட பாக்.மாடல் அழகி குவான்டீலின் தந்தை ஆவேசம்!

 Qandeel's father wants son to be 'shot on sight'இஸ்லாமாபாத்: சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

KIckasstorrent அட்மின் போலந்தில் கைது.. KickassTorrents இணையத்தளம் முடங்கியது

U.S Arrests KickassTorrents Owner Artem Vaulin, and World's Biggest Piracy Site Goes Down!
இணையதள டோரண்ட் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருந்த, Kickasstorrents-ன் அட்மின், போலந்தில் கைது செய்யப்பட்டதால் அந்த இணையதளம் முடக்கப்பட்டுவிட்டது. நெட்டிசன்கள் எதிர்பார்த்துச் செல்வதை, முனியாண்டி விலாஸ் அன்லிமிடெட் சாப்பாடு மாதிரி வகைவகையாக வைத்து கொடுத்துக்கொண்டிருந்த இணையதளம் Kickasstorrents. படங்கள், கேம்கள், டி.வி. நிகழ்ச்சிகள், பாடல்கள், புத்தகங்கள், சாஃப்ட்வேர்கள் என அங்கு கிடைக்காத டிஜிட்டல் மீடியா ஐட்டமே இல்லை. அப்படியும் இல்லையா? எனக்கு இதுவேண்டும் என்று கேட்டால், ஒரு வாரத்துக்குள் எப்படிப்பட்ட செக்யூரிட்டி சாஃப்ட்வேரையும் உடைத்தெறிந்து, தன்னிடம் கேட்டதைக் கொடுக்கும் Kickasstorrentsன் அட்மின் எப்படிச் சிக்கினார் தெரியுமா?

தோழர் மாரியப்பனின் தலையை வெட்டிய இந்து முன்னணி விஸ்வநாத பாண்டியன்.. சாதி ஆதிக்கத்தை எதிர்த்ததால் ..

திருநெல்வேலியில் சாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சிபிஐ எம் எல் கட்சி தொண்டரை இந்து முன்னணி ஆதரவாளர் தலையை வெட்டி கொடூரமாகக் கொன்றுள்ளனர். இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
“2 4 வயதான தோழர் மாரியப்பன் சாதி வெறியர்களால் கடந்த 20 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் வண்ணார் சாதியைச் சேர்ந்தவர். அவரின் தலையை வெட்டியெறிந்திருக்கிறார்கள். தலையில்லா உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் மாரியப்பனுக்கு ஆதிக்க சாதி வெறியன் ஒருவன் கொலை மிரட்டல் விடுத்த அன்றைய மாலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். தோழர் மாரியப்பனின் உடலை வாங்க மறுத்து, அவரின் குடும்பத்தினர் உள்பட 600 பேர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

வெள்ளி, 22 ஜூலை, 2016

வேந்தர் மூவீஸ் மதன் உயிரோடு இருக்கும் சாத்தியம் குறைவு... மோடியின் அல்லக்கை பச்சமுத்து அப்படிப்பட்ட கேடி

வேந்தர் மூவீஸ் மதன் மீது 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி வழக்குகள் இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 28 ம் தேதி மாயமானார். அவரை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில், மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் மருத்துவ மாணவச் சேர்க்கைக்காக பல லட்சங்களை வாங்கி ஏமாற்றியதாக ஐ.ஜே.கே. நிர்வாகி பாபு, வேந்தர் மூவிஸ் சுதீர், மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி புகார்கள் வந்துள்ளன.

கபாலிடா.. ஜாஸ் சினிமாஸ்டா ... ஜெயலலிதா டா... உச்சகட்ட அருவருப்புடா.. மற்றொரு காண்டேயினர் கொள்ளைடா...

கபாலியின் கோமாளிகள்
Raja Rajendran< வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது
வெற்றி தியேட்டரில் காலை 4 மணி முதல் கபாலி படம் திரையிட தொடங்கியது டிக்கெட்டில் கட்டணம் இல்லை………………
இந்த கபாலிகர்கள் ஆடும் ஆட்டத்தைக் காண வேண்டுமே ? உச்சகட்ட அருவருப்பு.
அனைத்துக் கார்ப்பரேட் கம்பெனிகள், தகவல் தொழில்நுட்ப எம் என் சிக்கள்……..தங்கள் கைகளில் கபாலி வெளியாகும் மிகத் தரமான தியேட்டர்களின் டிக்கெட்டுகளை கைகளில் வைத்துக் கொண்டு, டிக்கெட் விலையைக் காட்டிலும் பல மடங்கு விலை உயர்த்தி, தம் தொழிலாளர்கள் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது, ஒரு சில தலையில் அடித்துக் கொண்டு விலையில்லாமல், விடுமுறையும் கொடுத்து தங்கள் ஊழியர்களை அப் படத்திற்கு அனுப்பி வைக்க இருக்கிறது.

தியேட்டர் கட்டணங்களில் ஊழல் அப்புறம் என்ன ‘திருட்டு டிவிடியில் படம் பார்க்காதீர்கள்? ஜெயா டிவி+ ஜாஸ் சினிமாஸ் = கபாலி !

jazz-companyகபாலியின் அலங்கோலங்களுக்கு யார் காரணம்..?
இந்த அலங்கோலங்களுக்கு முழு முதற் காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பெருமக்கள்தான். யார்தான் லஞ்சம் வாங்கலை.. யார்தான் ஊழல் செய்யலை என்று நமது மக்கள் என்றைக்கு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே இந்த சமூகம் அவலத்தை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. இன்றைய ‘கபாலி’ வெளியிட்டூு சூழலிலும் அதுதான் நடக்கிறது.
படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை பெற்றிருப்பது ஜெயா டிவி. தமிழக தியேட்டர் உரிமத்தை பெற்றிருப்பது ஊரை அடித்து உலையில் போடுவதில் கோபாலபுரத்தை மிஞ்சிய சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஜாஸ் நிறுவனம். பிறகென்ன கேட்கவா வேண்டும்..? அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அரசு நிர்வாகங்கள் வளைந்து கொடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

கபாலி விமர்சனம் : நாலு பேருக்கு நல்லது செய்யும் சினிமா ரவுடிக்கும் இதர சினிமா கெட்ட ரவுடிகளுக்கும்... பர்மா பஜாரில் உள்ள பழைய தெலுங்கு சிடிக்களை பார்க்க......

IMG_20160722_062559கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் கபாலி டிக்கெட்டுகள், சாதா ரேட்டுகளான ரசிகர்களுக்கு இல்லை! கோபத்தில் பேனரைக் கிழிக்கும் ரசிகர்கள்!
விளம்பர வருமானங்களுக்காக கபாலி காய்ச்சலை உருவாக்கும் ஊடகங்கள்! கொள்ளையில் பங்காளிகள்!
 இதுதாண்டா கபாலி கதை : மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள். 
கபாலி படத்தின் கதை என்ற வஸ்து கோடம்பாக்கத்து சிற்பிகளால் கொத்தி கைமா போடப்பட்ட பாலிதீன் போன்றோதொரு அயிட்டம் என்பதால் அதை எந்த பழையை பொருள் கடைக்காரரும் பத்துரூபாய்க்கு கூட வாங்க மாட்டார். ஒரு ஊருல ஒரு நல்ல ரவடியாம். ஊருக்கு நல்லது செய்யிற அந்த நல்ல ரவுடியை குடும்பம் குட்டியா வாழ விடாம கெட்ட ரவுடிங்க சேந்து பிரச்சினை பண்றாங்களாம். பிறகு நல்ல ரவுடி கெட்டவுங்களை அழிக்கிறாராம்.
இந்த பாட்டி வடை சுட்ட கதையை மலேசியாவில் எடுத்தால் என்ன, மணிப்பூரில் எடுத்தால் என்ன? கபாலியை பார்ப்பதற்காக பணம் பறிக்கப்படுபவர்கள் தமிழ் என்பால் மலேசியா, தோட்டத் தொழிலாளிகள், குடும்பம், காதல், பாசம், பிரிவு, ஏக்கம் என்று வடபழனி சிக்னலில் கிடைக்கும் இத்துப் போன சினிமா காஸ்ட்யூமால் போர்த்தியிருக்கிறார்கள்.

அரசு பள்ளிகளின் தலித் விடுதிகள்.. உலக மகா கேவலம் நேரடி விசிட் காட்சிகள் .. நக்கீரன்

அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக, தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1,324 விடுதிகள் உள்ளன.
பள்ளிகளுக்கான விடுதிகளில் மாதத்துக்கு ஒரு மாணவரின் உணவுக்காக ரூ. 755 ஒதுக்கப்படுகிறது.  கல்லூரிகளுக்கான விடுதிகள் என்றால் ரூ.875. இதில்... வாரத்துக்கு கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, ஐந்து நாட்கள் முட்டை உட்பட முறையான மெனுவின்படி உணவு வழங்கப்படவேண்டும். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல, தலைநகர் சென்னை விடுதிகளின் நில வரத்தை நேரில் கண்டுவர... ஜூலை 7-ஆம் தேதியன்று ஒரு சுற்று வந்தோம்.  முதலில் நாம் சென்றது, கோடம்பாக்கம் விடுதி. பெயர், முகத்தை வெளியிடவிரும்பாமல் நம்மிடம் பேசமுன்வந்தனர், விடுதி மாணவர்கள். ""உணவு வெந்தும் வேகாமலும், கல்லும் புழுவுமாக இருப்பது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. குளிக்கப் பயன்படுத்தும் நீரைத்தான் சமைக்கவும் பயன்படுத்துகிறார் கள். சோறுடன் சாம்பார் மட்டும்தான்... வேறு எந்தக் குழம்பும் செய்வதில்லை. அதிலும் சாம்பாரில் சோறு வடித்த கஞ்சித் தண்ணீரை அதிகமாகக் கலந்து தருகிறார்கள்.

அந்தமான் பயணித்த விமானபடை விமானத்தை கானவில்லை.. 29 பயணிகளுடன் Indian Air Force's AN-32 Plane With 29 Missing After 'Rapid Loss of Altitude'

Indian Air Force AN-32 aircraft missing சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாயமான விமானம் வங்கக் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

கபாலி டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்க வற்புறுத்தினார்கள் .. காசி தியேட்டர் புகார்

இந்நிலையில் கபாலி டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்யுமாறு அந்த படத்தின் படத்தின் தயாரிப்பாளர் தாணு வறுபுறுத்தியதாக சென்னை காசி தியேட்டரின் உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது.சென்னை காசி தியேட்டரில், கபாலி படத்தின் டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்கப்பட்டதாக கூறி பிளாக்கில் ரூ.2000-க்கு விற்பனை செய்வதாக சர்ச்சை எழுந்தது.";இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காசி தியேட்டர் உரிமையாளர் கூறும்போது, கபாலி பட தயாரிப்பாளரின் வற்புறுத்தலால், கபாலி படத்திற்கான மூன்று நாட்கள் டிக்கெட் விற்று தீர்ந்து விட்டன. இனி டிக்கெட் கிடையாது என்று கூறி, பிளாக்கில் ரூ.2000க்கு விற்பனை செய்தோம் என கூறியுள்ளார்.கபாலி திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்ட், அதற்கு அரசின் 30 சதவீதம் வரிவிலக்கும் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் திரைப்படங்களுக்கு அரசு அளிக்கும் 30 சதவீத வரி விலக்கின் பயன் படம் பார்க்கும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் கெடு விதித்தது... அண்ணா நூற்றாண்டு நூலக சீரமைப்பு பணி அக்டோபர் 31 க்குள் முடிக்கவேண்டும்

அண்ணா நூற்றாண்டு நூலகம்... தமிழக அரசுக்கு அக். 31 வரை கெடு ...
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகச் சீரமைக்கும் பணிகளை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென இறுதிக் கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போதுமான பராமரிப்பின்றி இருப்பதால் அதனைச் சீரமைக்க வேண்டுமென ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

மாணவர் லெனின் கொல்லப்பட்டதைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – படங்கள்


பத்திரிகை செய்தி பொறியியல் பட்டதாரி லெனின் மரணம் தற்கொலையல்ல – கொலையே!
கொலைக்கு பாரத ஸ்டேட் வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு!

பு:மா.இ.மு கண்டன ஆர்ப்பாட்டம்:  நாள் – 217.16 நேரம் – காலை 11.30 மணி, இடம் – s8, மண்டல அலுவலகம், பாரிமுனை, சென்னை-1.
துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், 100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்
இந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்புமோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு?

பார்ப்பனியத்திற்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போர்க்கோலம் !

திவ்ய பாஸ்கர் என்ற குஜராத் பத்திரிக்கையில் வெளியான செய்திமாட்டுக்கறிக்கு தடை, பசு புனிதம் என தனது பார்ப்பன இந்துமத பாசிச நடவடிக்கைகளை மக்களிடம் திணித்து வந்த ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மத வெறி அமைப்புகளுக்கு குஜராத் தலித்துகள் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திவ்ய பாஸ்கர் என்ற குஜராத் பத்திரிக்கையில் வெளியான செய்தி
கடந்த வாரத்தில் குஜராத் மாநிலத்தின் உனா பகுதியில் மாட்டுத்தோலை உரித்ததற்காக சிவசேனா மற்றும் பசு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பார்ப்பன இந்துமத வெறி அமைப்பினரால் தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டனர். பின்னர் ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். இளைஞர்கள் மாட்டை கொன்றார்களா இல்லையா என்பதை தான் போலீசாரும் விசாரித்து வந்தனர். இது பற்றிய செய்தியை வினவில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இக்காட்டுமிராண்டிதனத்தை கண்டித்து குஜராத் மாநிலத்தில் தலித்துக்கள் ஆரம்பித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ரஜினி +மோகன்லால் +k.பாலாஜி + YG மகேந்திரன்+ அனிருத்+தனுஷ்+ சாவித்த்திரி ஜெமினி ஆகியோர் உறவினர்களே


மலையாள ஆக்டர் மோகன்லால் ...
அவரோட மாமனார் நடிகர் பாலாஜி.
பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி.
இவர் Y.gee. மகேந்திரனோட அம்மா.
Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கை தான் லதா ரஜினிகாந்த்.
லதாரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா.
அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினி தம்பி ரவி.
இவர் மகன் அனிருத்.
Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண்.
அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி.
விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி,
அப்பா நடிகர் ஜெமினி கணேசன்.
நடிகர்ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா.
*******************************
இப்போ மோகன்லாலுக்கு இந்தி நடிகை ரேகா என்ன உறவு முறை?...
பாலாஜிக்கு ஜெமினி என்ன உறவு முறை?.

முகநூல் உபயம்   Jayant Prabhakar

இணையத்தில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க முடியுமா? கபாலியோ காலியோ எவராலும் முடியாது!

கபாலி திரைப்படம் டார்க் வெப் எனப்படும் இருண்ட வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் டார்க் வெப் அல்லது இருண்ட வலைத்தளங்கள் என்றால் என்ன ? பொதுவாக நீங்களும் நானும் www எனப்படும் world wide web என்ற முறையை பயன்படுத்தி தான் இணையத்தில் வலம் வருவது வழக்கம். இந்த முறையை பயன்படுத்துவது, நெருக்கம் மிகுந்த தெருவில் நீங்கள் நடந்து செல்லும் போது, யாரேனும் ஒருவர் உங்களை அடையாளம் கண்டுகொள்வதை போன்றது. அதாவது, நீங்கள் பார்வையிடும் வெப்சைட் உங்கள் ஐபி முகவரி மூலம் உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனால், உங்களை எவருமே அடையாளம் கண்டுகொள்ளாமல் இணையத்தில் வலம் வரவும் ஒருமுறை உள்ளது. அதனை நீங்கள் டார்க் நெட், டார்க் வெப் அல்லது ஹிட்டன் வெப் என ஆங்கிலத்திலோ அல்லது இருண்ட வலை என தமிழிலோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இது அந்த நெருக்கடியான தெருவில் நீங்கள் நடந்து செல்லும் போது எவருமே உங்களை அடையாளம் காணாமல் இருக்க உதவுகிறது.   www.torproject .org

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி

மகாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரான மும்பையில் அமைந்துள்ள அம்பேத்கர் பவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கான பிரம்மாண்டமான பேரணி மும்பையில் நடைபெற்றது.
பேரணி இறுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சத்திரபதி சிவாஜி ரயில்வே நிலையத்திலிருந்து சீத்தாராம் யெச்சூரி உட்பட இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் இதயப் பகுதியாக விளங்கும் மத்திய மும்பை பகுதியில் உள்ள தாதர் என்னுமிடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பேத்கர் பவனும், புத்தபூஷன் அச்சகமும் அமைந்துள்ளது. இவை இரண்டும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் 1930களில் கட்டப்பட்டவையாகும்.

தமிழக முதல்வரின் உடல்நிலை ரிவேஸ் கியரில்.. பட்ஜெட் கூட்டத்தொடரில் சோர்வு?

ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?
வாட்ஸ் அப், கோட்டையில் இருந்தபடி பட்ஜெட் கூட்ட செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்தது.
”பட்ஜெட் பற்றிய செய்திகளை எல்லாம் டி.வி.யில் பார்த்தபடிதான் இருப்பீர்கள்… உள்ளே நடந்த சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் சொல்றேன்!’’ என்று வந்து விழுந்தது முதல் மெசேஜ்.
ஃபேஸ்புக், ஓ.கே. சொல்ல… அடுத்த அப்டேட் ஆரம்பமானது. “காலையில் சரியாக 11 மணிக்கு பேரவை கூடியது. 10.55 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்துவிட்டார். ஆனால், பேரவைக்குள் நுழைந்தபோதே அவரது முகத்தில் உற்சாகம் இல்லை. ரொம்பவும் சோர்ந்துபோய்தான் வந்தார். பேரவைத் தலைவர் நிகழ்வுகளை தொடங்கிவைத்ததும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதற்கு எழுந்தார். முதல் ஐந்து நிமிடங்கள் ஜெயலலிதா புகழ் பாடினார். அப்போது மட்டும் பன்னீரை பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜெயலலிதா. அவர் புகழ்பாடி முடிக்கும்போது முதல்வரைப் பார்த்து வணக்கம் சொல்ல… ஜெயலலிதாவும் பதில் வணக்கம் சொன்னார். அதன்பிறகு, பன்னீர் படிக்க…படிக்க… ஜெயலலிதா எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் குனிந்தபடியே இந்தார்.

வேலூர் அதிமுக மணல் கடத்தல் பிரமுகர் ஜி.ஜி.ரவியை உள்ளே போட்ட இன்ஸ்பெக்டர் பாண்டி..


(இன்ஸ்பெக்டர் பாண்டி)
அரசியல்வாதிகள், காவல்துறையினர், குற்றவாளிகள் இவர்களுக்கு இடையிலான கூட்டு தொடர்பாக, மத்திய அரசு அமைத்த ஓரா கமிட்டி பல உண்மைகளைப் போட்டு உடைத்தது. சட்டவிரோத தொழில் புரிகிறவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்குமிடையிலான கூட்டைத் துண்டிக்காமல் மக்களுக்கு விடிவில்லை என்பது, இன்றும் ஒரு விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த கருத்துக்கு வலுச்சேர்க்கும்வகையில் வேலூர் மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் பிரமுகரை உயரதிகாரிகளின் அழுத்தங்களையும், அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி சிறையில் தள்ளி ஹீரோவாகியிருக்கிறார்.
என்னதான் நடந்தது வேலூரில்?

கபாலி டிக்கெட்டுக்காக மந்திரி பி.ஏ. சிபாரிசுக் கடிதம்

ஜூலை 22, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் உலகமெங்கும் ரிலீசாகிறது. நீண்ட நாட்களுக்குப்பிறகு தங்கள் மானசீகமான நாயகனின் படம் வெளியாகும் ‘மகிழ்ச்சி’யில் உள்ளனர் ரஜினியின் ரசிகர்கள். முன்னூறில் தொடங்கி ஆயிரம், ரெண்டாயிரம் சில இடங்களில் பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு டிக்கெட் விலை கள்ளச்சந்தையில் கூட்டப்பட்டுள்ளது. அவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கத் துடித்தாலும், பலருக்கு டிக்கெட் கிடைப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. ரஜினி படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்க்கவேண்டும் என்ற ஜூரம் பரவி விரவியிருக்க, வாட்ஸ் அப்பில் வந்த ஒரு சிபாரிசு கடிதத்தின் இமேஜ் வைரலாகப் பரவிவருகிறது. அது, அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் பேடு.   பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

யாழ்ப்பாணத்தில் ஜாதி சண்டையால் நின்று போன தேரை இழுத்த இராணுவம்

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது.
மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு காமடி : இலங்கை  அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!"

வியாழன், 21 ஜூலை, 2016

காவலர்கள் சிறையில் பியுஷ் மனுஷை நிர்வாணமாக்கி அடி... உதை ..சித்ரவதை! நாட்டுக்கு நல்லது செய்தால் இதுதான் நடக்கும் !

சிறையில் காவலர்கள் தன்னை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததாக பியூஸ் மனுஷ் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். சேலம் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியான பியூஸ் மனுஷ் சிறை வளாகத்தில் கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் மனுஷ், காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரும் கண்மூடித்தனமாக தன்னை தாக்கியதாக பியூஸ் மனுஷ் புகார் தெரிவித்துள்ளார். ”20க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறையில் என்னை நிர்வாணமாக்கி காலணி அணிந்திருந்த காலால் மிதித்து சித்ரவதை செய்ததுடன், அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி நீக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். காதில் தாக்கினர். இருட்டறையில் தங்க வைத்ததுடன், போர்வை கூட வழங்கவில்லை” என்று பியூஸ் மனுஷ் தெரிவித்தார்.

குஜராத்தில் தலித்கள் படுமோசமாக தாக்கப்படுகிறார்கள்.. புதிய விடியோ ஆதாரங்கள்


தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது குஜராத்தில், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம், பார்லி.,யின் இரு சபைகளிலும், நேற்று கடும் அமளியை ஏற்படுத்தியது. ராஜ்யசபாவில், இந்த பிரச்னையை யார் கிளப்புவது என்பதில், எதிர்க்கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்த ஒத்திவைப்புகளை, ராஜ்யசபா சந்திக்க நேரிட்டது. நேற்று ராஜ்யசபா கூடியதும், குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை கிளப்ப, காங்., - எம்.பி.,க்கள் தயாராயினர். அவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில், திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓ பிரெய்ன், முதல் ஆளாக எழுந்தார்.
''குஜராத்தில் நடந்திருப்பது, திட்டமிட்ட வன்முறை. எனவே, அந்த பிரச்னை குறித்து விவாதிக்காமல், சபையை நடத்துவதை ஏற்க முடியாது,'' என்றார். கூடவே, திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் குரல்களை எழுப்ப, காங்., -எம்.பி.,க்கள் உஷாராயினர்.   ஆயிரம் ஆண்டுகளாக தலித் மக்களை நசுக்கி சுகத்தை அனுபவித்து விட்டு, இன்று வந்து கொண்டு இட ஒதுக்கீடு கூடாது, சலுகை கூடாது, சக்கரை பொங்கல் கூடாது என்று சொன்னால் எப்படி ஏற்பது?

ராம்குமாரின் சட்டையில் உள்ள இரத்தம் சுவாதியின் இரத்தம் அல்ல.. போலீஸ் தகவல்! ஆணையர் சங்கர்...

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளிவந்தவாறு உள்ளது சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நுங்கம்பாக்கம் போலீசார் ராம்குமாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, கொலை செய்த விதத்தை நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்துக்காட்டியதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர் மேன்சனில் இருந்து கைப்பற்றப்பட்ட ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையையும், சுவாதியின் ரத்த மாதிரியையும் காவல்துறை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியிருந்தது.

மெஜாரிட்டியை நிரூபித்தது அருணாச்சலப்பிரதேச காங்கிரஸ் அரசு

உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அருணாச்சலப்பிரதேச அரசை பாதுகாத்தப் போதிலும், தன் பெரும்பான்மையை நிரூபிக்க படாதபாடுபட்டு நிரூபித்திருக்கிறார் அருணாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முதல்வரான நபம் துகி.
அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. நபம் துகி முதல்வராக இருந்துவந்த நிலையில் நபம் துகி மீது அதிருப்தியடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 18 பேரும் சில சுயேட்சைகளும் இணைந்து பாஜக ஆதரவோடு கலிகோபுலை முதல்வராக்க, நபம் துகி இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் ராஜ்கோவா, கலிகோபுலுவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை ரத்து செய்தது. அருணாச்சலப்பிரதேசத்தில் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

சீமான் காஷ்மீர் பற்றி : இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன.

சென்னை: காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழும் வகையிலான சூழலை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் நிலப்பரப்பில் நிகழ்ந்து வருகிற மனித மாண்புகளுக்கு எதிரான கொலைகள், வன்புணர்ச்சி நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தினந்தோறும் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நாம் நாகரீகம் பெற்ற சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்கின்ற கேள்வியை எழுப்பி வருகிறது.

டெல்லி விமான நிலையத்தில் 59 கிலோ தங்கம் அதிகாரிகள் திருடி விட்டனர்! இன்னும் பல மோசடிகள்...

புது தில்லி:தில்லி விமான நிலையத்தின்  சுங்கத் துறை வசம் இருக்கும் தங்கக் கட்டிகளில் 'மின்னும் பொருள் எல்லாம் பொன் அல்ல' என்பது திடீர் ஆய்வின் மூலம் உறுதியாகியிருக்கிறது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த கிடங்கில் சீல் வைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படும்.
இப்பகுதியில் நடந்த திடீர் ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 59 கிலோ கிராம் எடையுள்ள தங்கம் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 18.3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் எப்படி சென்றது என்றே தெரியாமல் மாயமாகியுள்ளது.

ராம்குமாரின் கழுத்தை அறுத்தது போலீஸ் ஆய்வாளர் பாலமுருகன்! கொலை செய்ய முயற்சி !தந்தை புகார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர் தான் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் புகார் அளித்துள்ளா
ராம்குமாரை காவல்துறை கைது செய்ய முயன்றபோது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமார் கழுத்தை அறுக்கவில்லை காவல்துறையுடன் வந்தவர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தார்கள் என ராம்குமாரின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் குற்றாம் சாட்டினர். இதனையடுத்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் தனது மகன் ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர்தான் என பரபரப்பு புகார் ஒன்றை செங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அவரது புகாரில், எனது மகன் கைது செய்யப்பட்டபோது எனது வீட்டிற்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் உனது மகன் பின்புறத்தில் கழுத்தை அறுத்து கொண்டு கிடக்கிறான் என்று கூறினார்கள். நாங்கள் சென்று பார்த்தபோது ராம்குமார் கழுத்து அறுபட்டு கிடந்தான் அவன் அருகில் நின்றிருந்த ஒரு காவலர் கையில் ரத்தம் படிந்திருந்தது. மேலும் தனது மகன் ராம்குமாரை கொலை செய்ய முயற்சி செய்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் மீதும், அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் வெப்துனியா.காம்

புதன், 20 ஜூலை, 2016

பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சேலம் நீதிமன்றம்

சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் முயற்சியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய சேலம் குடிமக்கள் அமைப்பைச் சேர்ந்த பியூஷ் மனுஷ், கார்த்திக், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக், முத்து ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பியூஷ் மனுஷுக்கு மட்டும் ஜாமீன் வழங்கவில்லை. அவரை சிறையில் காவலர்கள் அடித்து உதைத்ததாக அவரது மனைவி மோனிகா குற்றம் சாட்டினார். இந்நிலையில், பியூஷ் மனுஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சேலம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பியூஷ் சார்பில் அவரது மனைவி மோனிகா வாதாடினார்.

கரூர் - நடுரோட்டில் ரூபாய் 1600 கோடியுடன் நின்ற கண்டெய்னர் லாரிகள் 1600 crores found in Karur | Another containers with Bundle Of Money !


கரூர் நெடுஞ்சாலையில் கரூர் - அரவக்குறிச்சி இடையே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு லாரிகளிலும் ரூபாய் 1600 கோடி ரொக்கப்பணம் இருப்பதாக செய்தி பரவியதால் மக்கள் அதனை வேடிக்கை பார்க்க கூடினர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கூட்டம் கூடாமல் அப்புறப்படுத்தினர்.>இரண்டு லாரிகளும் மைசூரில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு, திருவனந்தபுரம் நோக்கி சென்றது. கரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில், தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் என்ற இடத்தில் வரும்போது லாரியின் ஆக்சிஸ் கட்டாகிவிட்டது. இதையடுத்து அந்த லாரிகள் அப்படியே நின்றன. இன்று காலை முதல் போலீசாரும், வங்கி அதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விசாரணை நடத்துவம், பார்வையிடுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் என்னவென்று விசாரிக்கும்போது, அந்த லாரிகளில் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரிகளை சுற்றி பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது

பணத்தால் நான் …! பணத்துக்காகவே நான் …! வைகோவின் தலைவி !

 பணத்தால் நான் ...! பணத்துக்காகவே நான் ...!ர்மபுரியில் தே.மு.தி.க கூட்டமொன்றில் முதலமைச்சர் ஜெயாவைப் பற்றி விமரிசித்தார் என்று விஜயகாந்த் மீது அம்மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் இது புதிதல்ல. எனினும் இந்த அவதூறு வழக்குகள் எங்கு சென்றாலும் விமரிசித்தவர்களை துரத்துவதோடு எல்லா நீதிமன்றங்களிலும் வாய்தாவுக்காக அலைய வேண்டிய அவஸ்தைகளும் ஏராளம். அதுதான் அம்மாவின் பழிவாங்கல். மற்றபடி சட்டப்படியோ இல்லை தீர்ப்புப் படியோ இவ்வழக்குகள் ஒன்றும் பிடுங்கிவிட முடியாது.இந்நிலையில் இந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் 2015 நவம்பரில் விஜயகாந்த் மனுத் தாக்கல் செய்தார். 

பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு

முகேஷ் அம்பானிமல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்
கொலைக்கு பாரத ஸ்டேட் வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு! 
துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
privatization-of-education-cards-09மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், ‘100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு’ என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
இந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு? படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு? இதனை செய்யாமல் மாணவர்களை கல்விக்கடன் என்ற புதைகுழியில் தள்ளுகிறது அரசு – வங்கி – தனியார் கல்லூரிகள் என்ற இந்த முக்கூட்டு களவாணிகளின் லாபவெறிக்கு உருவாக்கப்பட்ட இந்த மாயவலையில் சிக்கிய லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை கிடைக்காமலும், கல்விக்கடனைக் கட்ட முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.

570 கோடி கன்டெய்னர்களின் பதிவு எண்கள் போலியானவை !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது கோவையிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவால் மூன்று கன்டெய்னரில் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ரூ 570 கோடி பணம்குறித்து சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு சில முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க.வின் செயதித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சிறப்பு காவல்படையால் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட ரூ 570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனையேற்று சென்னை நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்தவத்தில் Basement strong ..Building week .. இந்து மதத்தில் Building strong ..Basement week?

Siva subramanian; இந்து மதம் இரக்கமில்லாத அரக்க குணம் கொண்ட சுய நல வாதிகளை உருவாக்குகிறது. இந்த பிணம் போடுகிற பழக்கம் எங்கு இருந்து வந்தது. இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்கள் யார். ஆரிய குல கடவுள்கள் தானே. இதனை இந்துக்களின் பழக்கம் என்று பொதுவான பழக்கம் ஆக்கியது யார்.
இந்து மதம் பற்றி எனது நண்பர் சொன்னது எப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இந்து மதம் இதை செய் அது கிடைக்கும். அதை செய் இது கிடைக்கும் என்கிறது. உதரணமாக மந்திரம் சொன்னால் அது கிடைக்கும். அந்த கடவுளை தரிசித்தால் இந்த கடவுளை சுத்தி வந்தால் எதோ கிடைக்கும் என்று மனிதனின் சுயநலன்களை மற்றுமே போதிக்கிறது.அது கிடைக்கவும் கூட செய்யலாம். அதனால் ஒரு தனி மனிதன் மட்டுமே மேன்மை பெறுகிறான். ஒரு கூட்டமாக நாம் வளர முடியாது. கூட்டமாக வளர வேண்டும் என்றால் ஒரு மதம் இரக்கம் மற்றும் மனித நேயத்தை போதிக்க வேண்டும்.

பர்வேஷ் முஷராப்பின் சொத்துக்கள் பறிமுதல் கணக்குகள் முடக்கம்.. நீதிமன்றம் உத்தரவு

Pervez Musharraf's bank accounts to be frozen in Pakistan.. Court orders seizure of Pervez Musharraf's assets
இஸ்லாமாபாத் தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், முஷரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், வங்கிக்கணக்குகளை முடக்கவும் பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தேசத்துரோக வழக்கு பாகிஸ்தானில் 2001–2008 காலகட்டத்தில் அதிபராக இருந்து கொடி கட்டிப்பறந்தவர், பர்வேஸ் முஷரப் (வயது 72). இவர் தனது ஆட்சிக்காலத்தில் 2007–ம் ஆண்டு, நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் சாசனத்தை இடைநீக்கம் செய்தார். தற்போது ஜனநாயக ரீதியிலான ஆட்சி வந்தபிறகு, அவர் மீது கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கிலும் முஷரப் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம், அவர் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் துபாய்க்கு சென்றார். சிகிச்சை முடிந்து அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் நாடு திரும்புவேன் என அப்போது கூறினார். ஆனால் அவர் இன்னும் துபாயில்தான் உள்ளார்.   அடப்போங்கையா நாம காண்டேயினர் கரன்சிகளையே கண்டுக்க மாட்டோம்.

கபாலி அடிக்கிராய்ங் கொள்ளை 5 x 300=1500 பார்க்கிங் பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் என மேலும் 500 = 2000 ரூபாய்

அஞ்சு பேர் குடும்பம் படம் பாக்கணும்னா 5 x 300=1500 அதன்பின்னர் பார்க்கிங் பாப்கார்ன் கூல்டிரிங்ஸ் என மேலும் 500 ரூபாய் பாக்கெட்டை பழுக்க வைத்து விடுவார்கள். மொத்தம் 2000 ரூபாய்கள். இது ஒரு ஏழை தொழிலாளியின் மாத வருவாயில் பாதி.
ரஜினி படம் பார்ப்பதை நான் குற்றம் சொல்ல வரவில்லை. சின்ன வயதிலிருந்து நம்மை சினிமாவை ஊட்டி ஊட்டியே வளர்த்து விட்டார்கள். ஆனால் எவனோ சினிமாக்காரன் கோடிக்கணக்கா சம்பாரிக்கிறதுக்கு நீங்க ஏன் உழைச்சு கொட்டணும்?
படம் ரிலீசாகி ஒருவாரம் பொறுத்திருங்க நல்ல பிரின்டு வரட்டும். நானே இந்த பேஜ்ல லிங்க் போடுறேன். தயவுசெஞ்சு கஷ்டப்பட்டு உழைச்ச காசை வீணாக்காம உங்கள் மனைவி குழந்தைகள் அம்மா அப்பாவிற்காக செலவழியுங்கள்..  உபயம் .அமாவாச - Naga Raja Chozhan M.A