
மனமில்லாத காரணத்தினால் முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையானதொன்றாக இருந்தது. தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் தலைவர் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய நிலை இல்லாததன் விளைவே தர்பா காட்டு வாழ்க்கையின் பக்கம் தலைவர் பிரபாகரனை அழைத்துச் சென்றது.
இலங்கையில் தமிழர் வாழ்க்கை இத்தனை நெருக்கடிகளைச் சந்திப்பதற்கும் யார்காரணம் ? இத்தனை அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடந்தது ? இதை எமது உலகத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும் ! தலைவர் பிரபாகரனுடன் 25 வருடங்கள் கருணா அம்மான் இருந்துள்ளார். இலங்கை, இந்திய ராணுவத்தினுடனான வெற்றிச் சண்டைகள் அனைத்தையும் கருணா அம்மானே முன்னின்று நடத்தியுமுள்ளார் மட்டக்களப்பு அம்பாரை பேராளிகளை ஒரு கட்டுக்கோப்பான உக்கிர படையணியாக கருணா அம்மான் வழிநடத்தியதன் விளைவாலேயே ஈழ விடுதலை போராட்டம் உலகத்த்தார்களால் அறியத் தொடங்கியது உலக அரசியலின் நவீன ஓட்டத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் அரசியலில் முதிர்ச்சி அடைய வேண்டியது காலத்தின் நியதியாகும். இதைத்தான் அன்று தலைவர் பிரபாகரனிடம் தனி ஒரு மனிதனாக இருந்து துணிந்து நின்று எடுத்துரைத்தார் கருணா அம்மான் அவர்கள்