ஞாயிறு, 29 மார்ச், 2026

அரசியலில் நடிகர்கள் - இடஒதுக்கீடு -இலவசங்கள் - மகளிர் மேம்பாடு! தஞ்சை மாணவர்களின் காரசாரமான கருத்துக்கள்

 

அண்ணா அறிவாலயத்தில் நின்று வீரலட்சுமி

‘தனி ஆவர்த்தனம்’ செய்யும் செல்வப்பெருந்தகை: கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் செய்திப்பிரிவு

 hindutamil.in  : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்" என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் தொடக்கம் முதலே முரண்பாடுகள் தலைதூக்கின. 
இறுதிக் கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 35 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும் என்பதில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால், அதற்கு ஸ்டாலின் உடன்படவில்லை. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் உதவியுடன் 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு ஒத்துக்கொண்டு காங்கிரஸை கையெழுத்திட வைத்தார் செல்வப்பெருந்தகை. அவரது இந்த தடாலடி முடிவு, ஒட்டுமொத்த காங்கிரஸ் சீனியர்களையும் அதிரவைத்தது.

திமுக வேட்பாளர்கள்: 4 முஸ்லிம்கள், 18 பெண்களுக்கு வாய்ப்பு!

 minnambalam.com  - Mathi  : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 5 பேர் முஸ்லிம்கள்.
1) ஆவடி- சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
3) ராமநாதபுரம்- காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
4) செஞ்சி- கே.எஸ். மஸ்தான்.
5) டாக்டர் சுபேர் கான்- ராயபுரம்
ஆனால் அதிமுக அறிவித்த 150 வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில்
முஸ்லிம் லீக்- 2