
கொச்சி: கேரள செக்ஸ் கோல்மால் புது கட்டத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. அம்மாநிலத்தின் விபச்சார புரோக்கர் ஒருவன் கொடுத்துள்ள வாக்குமூலம், அவன், கஸ்டமர்களின் வயிற்றில் புளிகரைப்பதாக உள்ளது.
ஆன்லைனில் விபச்சாரம் செய்து வந்த மாடல் அழகி அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் செக்ஸ் கும்பல்களுக்கு போலீசார் வலைவீச தொடங்கினர். அப்படி சிக்கியவன்தான், ஜோஷி அகா அச்சயன்.
கோழிக்கோட்டை சேர்ந்த அச்சயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது.
எய்ட்ஸ் பரிமாற்றம் இதுகுறித்து கூறப்படுவதாவது: பெண்களை கடத்திவரும் அச்சயன், அந்த பெண்கள் தப்பியோடிவிடுவர் என்ற சந்தேகத்தின்பேரில், முதலில் ஒரு எய்ட்ஸ் பாதித்த நோயாளியுடன் உறவு கொள்ளச் செய்வானாம்.