
அரசியல்வாதி. தன்னுடைய 18ஆவது வயதில், தான் சார்ந்த பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர் வேர்பாளராக நிறுத்தப்பட்டது குறித்த தன்னுடைய அதிருப்தியை நேராக அண்ணாவிடம் போய் விவாதிக்கும் அளவுக்கு துணிச்சலானவர்.
55 ஆண்டுகாலம் ஒரே கட்சி , ஒரே தலைமை, ஒரே கொடி, ஒரே கொள்கை என்று உறுதியாக நிற்பவர், இத்தனைக்கும் 50 ஆண்டுகாலம் அவர் உழைப்புக்கு ஏற்ற எந்த பதவியையும் அனுபவித்திராதவர். முழுநேர கட்சிக்காரராக இல்லாமல், மற்றவர்களைப் போல சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இன்றைக்கு சென்னையில் ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக பெரிய வசதி வாய்ப்புகளோடு வாழ்ந்திருக்கக்கூடும்.
கட்சியினர் மத்தியில் ஆர்.எஸ்.பாரதி என்றால் கண்டிப்பானவர், கடும்கோபக்காரர் என்கிற பெயர் உண்டு. யாரும் எளிதில் குறை சொல்லிவிடமுடியாத நேர்மையும் துணிச்சலும்தான் அவருடைய பலம்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு அவதூறு பிரச்சாரத்தை சட்டரீதியாக முறியடிக்கும் பணியை கட்சி அவருக்கு கொடுத்தது. இடைத்தேர்தல் காலத்தில் , திமுகமீது இந்த அவதூறை முன்னெடுத்தது பாமக. தேர்தலிலும் இதன் தாக்கம் கொஞ்சம் இருக்கவே செய்தது.