சனி, 3 மே, 2025

புலம்பெயர் நாடுகளில் வெற்றி பெற்ற ஆறு தமிழ் நாடாளுமன்ற பெண் எம்பிக்கள்

May be an image of 1 person
May be an image of 2 people and text that says 'RATHIKA SITSABAIESAN SITSABAIESAN Scarborough- Houge Rier ON'
May be an image of 1 person, smiling and text

ராதா மனோகர் :  இலங்கை தமிழர்கள் புலர்ந்த நாடுகளில் இதுவரை ஆறு பெண்கள் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று உள்ளார்கள்
நிச்சயமாக இந்த வெற்றிகள் நாம் கொண்டாட கூடிய  விடயம்தான்.
புலம்பெயர் இலங்கை தமிழர் வாழும்  நாடுகளில்  ஆண்கள்தான் அதிகமான அளவில் அந்தந்த நாட்டு தேர்தல்களில் அதிகம் பங்கு போற்றுகிறார்கள்
ஆனால் அவர்கள் ஏன் பெண்களை போல வெற்றிகளை பெறுவதில்லை?
(ஒரே ஒரு ஹரி ஆனந்தசங்கரி மட்டுமே விதிவிலக்கு . அதுவும் அவரின் தந்தையின் செல்வாக்கு மற்றும் புலி மாபியாவின் பக்கபலம் என்றும் கூறப்படுகிறது)
தாங்கள் புலம் பெயர்ந்த நாட்டின் அரசியல் சமூக சிந்தனை மற்றும் அந்நாடுகளின் வரலாறு போன்றவற்றில் உள்ள புரிந்துணர்வுதான் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்

பஹல்காம் பயங்கரவாதிகள் இலங்கை தப்பினார்களா?

தினமலர் : கொழும்பு: சென்னையில் இருந்து சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலை தொடர்ந்து, கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை ! துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

May be an image of 1 person and text that says 'மர மரண ண அறிவித்தல் பிறப்பு 2009 11 12 இறப்பு 2025 04 29 டில்ஷி அம்ஷிகா அலுத்வத்தை, திகன, கணடியை பிறப்பிடமாகவும் கொழும்பு- 13 கொட்டாஞ்சேனை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சமிலாகுமாரி அவர்களின் செல்வப்புதல்வி டில்ஷி அம்ஷிகா (அம்ஷி) அவர்கள் 29.04.2025 செவ்வாய்கிழமை அன்று அகால மரணமானார் அன்னாரின் பூதவுடல் 01.05.2025 வியாழக்கழமை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் வைக்கப்பட்டு பகல் 2.00 மணியளவில் கெரவலபிடிய பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகிறோம் தகவல் தந்தை அமிர்தலிங்கம் -0773849389 சித்தப்பா ரமேஸ் -0777125082'

Mahan Siva கொழும்பு ராமநாதன் இந்து கல்லூரி   ஆசிரியர் சங்கரன்  பாடசாலையில் மாணவி  துஷ்பிரயோகம்!!
மாணவி மாடியிலிருந்து வீழ்ந்து தற்கொலை!
கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்று வந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞசேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவியின் தற்கொலைக்கு பின்னால் உள்ள விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக,மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த ஆசிரியரை காப்பாற்றியுள்ளது.

வெள்ளி, 2 மே, 2025

இஸ்ரேலில் காட்டுத்தீ – புகைமூட்டமாக காணப்படும் ஜெருசலேம்

 தினகரன் : ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீ காரணமாக பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன. ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில், 10 ஆண்டுகளில் மிக மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது. வீடுகள் மற்றும் வனப்பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

flash back கந்தகார் விமான கடத்தல் - கோட்டை விட்ட பாஜக அரசு inside story of IC-814 hijacking -

 Vimalaadhithan Mani  :  இதே பாஜக கட்சி ஆட்சியில 1999 ல ஏர் இந்தியா விமானம் நேபாளத்துல இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்படுது .
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பைலட்டை ஓட்டிட்டு போக சொல்ரானுங்க.
ஆனா நம்ம பைலட் கொஞ்சம் புத்திசாலி தனமா பெட்ரோல் இல்லைன்னு சொல்லி டெல்லியில தரையிறக்குறார்.
 நம்ம பாதுகாப்பு படை அந்த விமானத்தை சூழ்ந்து கொள்ளுது..
இந்திய தேசிய பாதுகாப்பு படையான NSG விமானத்தில் புகுந்து தாக்க அனுமதி கேட்குறாங்க.
இதே ஆளும் பாஜக கட்சி அனுமதி கொடுக்கல.
விமானம் அங்கிருந்து கிளம்பி பஞ்சாப் அமிர்தசரஸில் தரையிறங்குது.
அங்கேயும் NSG விமானத்துக்குள் புகுந்து தாக்குதல் நடந்த அனுமதி கேட்குது, ஆனா இவனுக கொடுக்கல.
பெட்ரோலை நிரப்பிட்டு துபாய்க்கு போயிட்டு,
விமானம் ஆப்கானிஸ்தான் கிளம்பிட்டு அங்கே போய் நிறுத்திடுறானுக.

வியாழன், 1 மே, 2025

டாடா விமான சேவைக்கு ரூ.5000 கோடி இழப்பு! பாகிஸ்தான் வான்வழி மூடல்

 tamil.goodreturns.i - Prasanna Venkatesh :
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான்வழியை மூடியது.
பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியதால், ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் (ரூ.5000 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிட்டு, இதற்கு ஈடுசெய்ய மத்திய அரசிடம் மானியம் கோரியுள்ளது.

குவைத்தில் கத்தி குத்து காயங்களுடன் கேரளா தம்பதி மர்ம மரணம்

 தினமலர் :குவைத்:குவைத்தில் கேரளாவைச் சேர்ந்த கணவன், மனைவி கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த சுராஜ் மற்றும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பின்ஸி ஆகியோர் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இருவரும் குவைத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தனர். குவைத் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ மையத்தில் சுராஜூம், பாதுகாப்புத்துறையில் செவிலியராக பின்ஸியும் வேலை செய்து வந்தனர்.

அடையாள அட்டை மசோதா - ஒப்பாரி கோச்சிக்கு ஆள் சேர்த்த டட்லி - செல்வா கூட்டணி அரசு!

May be an image of 1 person, measuring stick and text
May be an image of 1 person
V.Navarahinam

ராதா மனோகர்  :  அடையாள அட்டை மசோதா !
 1965 - 1969 ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியும் தமிழரசு கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தன!
அந்த ஆட்சியில்தான் முழு இலங்கை தமிழர்களையும் சந்தேக குடிமக்களாக்கும்  அடையாள அட்டை மசோதாவை நிறைவேறியது. .
குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் மீது இந்த டட்லி செல்வா ஆட்சி தூக்கி போட்ட அடையாள அட்டை மசோதா பற்றி பொதுவெளியில் பெரிதாக பேசாமல் பார்த்து கொள்வதில் தமிழ் தேசியர்கள் இன்றுவரை வெற்றி பெற்று கொண்டே இருக்கின்றனர்!
இவர்களின் இலங்கை குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை என்ற திட்டம் மேலெழுந்தவாரியாக நல்ல திட்டம் போல்தான் தென்படும்..அன்று பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்திய வம்சாவளி மக்கள் குடியுரிமை அற்றவர்கள்.

அவர்களுக்கு அடையாள அட்டை கிடையாது
அடையாள அட்டை இல்லாத எவரையும் போலீசார் உடனே கைது செய்யலாம்!
மறு புறத்தில் குடியுரிமை அற்றவர்களுக்கு அடையாள அட்டை பெற முடியாது.

மக்கள் தொகைக் + சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சரை வழிமொழிந்த ஒன்றிய அரசு!

 கலைஞர் செய்திகள் : மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்றும், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் எனவும் ஒன்றிய அரசை வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

புதன், 30 ஏப்ரல், 2025

பிரான்ஸ் ஸ்பெயின், போர்ச்சுகல் மின்சாரம் தடைப்பட்டது .. எல்லா துறைகளும் இயங்காத நிலை

 இலக்கியா : ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸில் வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மின் தடையைச் சந்தித்துள்ளன. அவற்றின் தலைநகரங்கள் உட்பட பல பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதித்துள்ளன. ஸ்பெயினின் தேசிய மின்சார கட்ட ஆபரேட்டரான ரெட் எலக்ட்ரிகா, இதை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த இடையூறு காரணமாக மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டுள்ளனர். தவிர, போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஜைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றம் : தேர்தலை எதிர்கொள்ள முக்கிய வியூகம்!

 tamil.samayam.com  - எழிலரசன்.டி  ; சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சி ரீதியாக முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது திமுக. அந்த வகையில் கட்சி அளவிலான ஒன்றியங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வியூக வகுப்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆளும் திமுக கூட்டணியில் எந்தவித சலசலப்பு இல்லாததால், இந்த கூட்டணி அப்படியே நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என அதிமுகவும் பாஜகவும் இப்போதே கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து வலுவான கூட்டணியாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி, தவெக ஆகியவை தனித்து களமிறங்குகின்றன. இதனால் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தஸ்வந்த் விடுதலை - சிறுமி - வன்புணர்வு - கொலை - . ஜாமினில் வந்து தாயை கொன்றவன்

 மாலை மலர் :2017ஆம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்-ஐ அவரது தந்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். அதோடு வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றினார்.
இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கனடா எம்பி அனிதா ஆனந்த் தமிழரா? டி என் ஏ டெஸ்ட் செய்யும் தமிழ் தேசிய தற்குறிகள்

May be an image of 1 person

கனடா நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆளும் லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ஆனந்த் தமிழர் என்ற வகையில் வரமாட்டார் என்று சில சீமான் விஷமிகள் பதிவிட்டுள்ளன.
அவரின் டி என் ஏ அசல் தமிழ் இல்லையாம் .

தற்குறிகளே அவரின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்
அவரின் தாய் பஞ்சாபியர்
அனிதா ஆனந்தின் தந்தை வழி பாட்டனார் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் திரு வி ஏ சுந்தரம் காந்தி மதன் மோகன் மாளவியா போன்றவர்களோடு பணியாற்றியவர்
கோயம்புத்தூரை சேர்ந்தவர்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி . ஆளும் லிபரல் கட்சி ஆட்சியை 4 முறையாக தக்கவைத்து கொண்டது

May be an image of 3 people and text that says 'AN Al L ANADA S'

2025 - நடந்த முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இலங்கை தமிழர்களும் ஒரு இந்திய வம்சாவளி தமிழரும் வெற்றி பெற்றுள்ளனர்
கரி ஆனந்த சங்கரி (முன்னாள் அமைச்சர்-  இலங்கை தமிழ் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களின் மகன்   )
ஜோனிதா நாதன் (முன்னாள் ஸ்கூல் போர்ட் அங்கத்தவர் -இலங்கை )
அனிதா ஆனந்த் (முன்னாள் அமைச்சர் தாய் தமிழகம் தந்தை பஞ்சாப்)

கனடா ஆளும் லிபரல் கட்சி ஆட்சியை தக்கவைத்து கொள்கிறது .. 4 தடவையாக வரலாற்று சாதனை Canada Election 2025

 தினமலர் : ஒட்டாவா; கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஆளும் லிபரல் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர்.
அண்மைக்காலமாக, கனடாவின் அரசியல் தட்பவெப்பங்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ சர்ச்சைகள், கடும் விமர்சனங்கள் இடையே தமது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் அவரது லிபரல் கட்சியில் இருந்து மார்க் கார்னி புதிய பிரதமரானார். இந்தாண்டு அக்டோபரில் நடக்க வேண்டிய பார்லி. தேர்தலை, கார்னி பார்லிமென்டை கலைத்து உடனடியாக தேர்தலை அறிவித்தார்.

ஈரான் அமெரிக்கா பேச்சு வார்த்தை! போரை தடுக்கும்?

வீரகேசரி : அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளன.
மத்திய கிழக்கு நாடான ஓமான் தலைநகர் மஸ்கட்டில் முதல் சுற்றுப் பேச்சுக்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்றுள்ளன. மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கள் ஓமானில் தொடரவுள்ளன.
இந்தப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு முன்னதாக இரண்டு தரப்பு நிபுணர்களும் கலந்து பேச உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ராணுவம் , போர், ஆயுதம் அனைத்தும் ஆணாதிக்கக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளே

No photo description available.

S T Nalini Ratnarajah   :  பாகிஸ்தான் இந்தியா முரண்பாடாகட்டும் இலங்கையில் உள்நாட்டு பிரச்சினை ஆகட்டும் வரலாறை சொல்லிச் சொல்லி வெறுப்பையும் வன்முறையும் எதிர்ப்பையும் ஊக்குவிக்கும் கருவிகளாகத்தான் ஆண்கள் பயன்படுகின்றீர்கள்.
 தற்போதைய சூழலில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் இருக்கும் பெண்கள் படம் துயரங்களை கஷ்டங்களை ஆண்கள் தன் கண்களின் ஊடாக பார்க்க தவறுகின்றீர்கள்
போர், பயங்கரவாதம் மற்றும் பெண்களின் மீது அதன் தாக்கம் எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள், "தேசிய பாதுகாப்பு" என்ற கொள்கையின் பெயரில், தொடர்ந்து போர்களிலும் பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த போரின் எதிர்வினை பெரும்பாலும் பேசப்படாத பரிதாபங்களை உருவாக்குகிறது — குறிப்பாக பெண்களின் மீது மற்றும் சிறுவர்களின் மீதும்.

சென்னை உயர்நீதிமன்றம் பாஜக கொள்கை பிரச்சார மன்றமாக செயல்படுகிறதா?

 Kulitalai Mano : சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றமாக செயல்படுகிறதா? இல்லே பாஜக கொள்கை பிரச்சார அமுல்படுத்தும் மன்றமாக செயல்படுகிறதா?
மோடியும்! அமித்ஷாவும்! ஆணையிட்டால்! சென்னை உயர்நீதிமன்றம் கரகாட்டம் ஆடும்!
திமுக அமைச்சர்களை குறிவைத்து வேட்டையாடும் சென்னை உயர்நீதிமன்றம்! முழுக்க! முழுக்க! பாஜக சங்கு ஊதும் பிரச்சாரக்கூடமாகவே ஆகிவிட்டது!
அதென்ன! திமுக அரசை மட்டுமே இலக்காக வைத்து காய் நகர்த்துவது? இது நீதிமன்றமா? இல்லை பாஜக கூட்டணியின் இன்னொரு அங்கமா?
சென்னை உயர்நீதிமன்றம் மதவாத இனவாத அடிப்படையில்! மற்றும் ஒருசார்பு கட்சி அரசியலை எடுத்தும் செயல்படுவது எந்தவகை நியாயமோ.?
இன்று திமுக அமைச்சர்களை பதவியில் இருந்து இறங்க  நெருக்கடி கொடுத்து வரும் சென்னை உயர்நீதிமன்றம்! நாளை முதல்வரையும் கட்டுக்கதைகளை புனைந்து பதவி விலகச்சொல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

திங்கள், 28 ஏப்ரல், 2025

கனடா பிலிப்பைன் மக்களின் விழாவில் கார் மோதி 11 பேர் உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம்

 canadamirror.com - Sahana :  கனடாவின் வன்கூவரில் நடைபெற்ற ஒரு தெரு விழாவில் மக்கள் மீது ஓட்டுநர் ஒருவர் மகிழுந்தைச் செலுத்தி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர் என காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கனடா நேர்ந்த பயங்கர சம்பவம் ; மோதி 9 பேர் பலி! | 9 Killed Car Crash At Vancouver Street Festival

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

தமிழக அமைச்சரவை மாற்றம் ! பொன்முடி செந்தில் பாலாஜி பதவி விலகல்

மின்னம்பலம் - Kavi : தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத் துறையும்,
வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும்
பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதிதுறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான டி.மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார்.

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை: புதிய மசோதா

 hindutamil.in கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா வரும் 29-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

நீதிக்கட்சியின் நிறுவனர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் , 27, ஏப்ரல் (1852)

May be an image of 1 person and text that says 'நீதிக் கட்சியின் தந்தை சர் சர்.பிட்டி.தி தியாகராயர் (27 (27-4 (27-4-1852/28-4-19251 4-1852/28- 1852/28-4-1925) 925)'

May be an image of monument and text

Thulakol Soma Natarajan :  நீதிக்கட்சியின் நிறுவனர் வெள்ளுடை  வேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்த நாள் , 27, ஏப்ரல் (1852) அவர் நினைவாக..
நீதிக்கட்சியின் தந்தை சர். பிட்டி தியாகராயர் ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்
௮ளவுக்கு தன் குடும்பச் சொத்தை நீதிக்கட்சிக்காகச் செலவளித்த வள்ளல்,
நாற்பது ஆண்டுகாலம் சென்னை மாநகராட்சியின் ௨றுப்பினராக இருந்ததோடு
௮தன் முதலாவது  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவராகவும் (மேயர்) ஆனார்.
இந்தியக் குடியரசு வரலாற்றில் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் தனது ௨யிரினும் மேலாக
நேசித்த நீதிக்கட்சி வெற்றி வாகைசூடியதற்கு  முழு முதற்காரணம் சர்.பிட்டி தியாகராயர்!
நீதிக்கட்சியின் வெற்றி பெற்றதைக் கண்டு பூரித்துப் போனார்.
தனக்கெனவாழாப் பிறர்க்குரியாரான சர். பிட்டி.தியாகராயர் தாம் முதல்வராக விரும்பவில்லை என அறிவித்தார்.