தினமலர் : சென்னை: சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 85.
1983ம் ஆண்டு பிரம்மச்சாரிகள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக கே. ராஜன் அறிமுகம் ஆனார். நம்ம ஊரு மாரியம்மா, உணர்ச்சிகள் போன்ற படங்களை இயக்கியவர். அவள் பாவம், நினைக்காத நாளில்லை, டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். பாம்பு சட்டை, துணிவு, பரகாசுரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா விழாக்கள் மற்றும் சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ளும் கே.ராஜன், திரைக்கலைஞர்களின் செயல்பாடுகளை விமர்சித்து பேசியவர். யூடியூப் சேனல்களிலும் பொது மேடைகளிலும் பலரையும் விமர்சித்து பேட்டியும் அளித்தவர்.
ஞாயிறு, 17 மே, 2026
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை
திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
![]() |
ராதா மனோகர் : இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகையாளர் திரு டி பி எஸ் ஜெயராஜ் அவர்கள் காலமானார்!
ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகப்பெரும் ஆற்றலை கொண்ட எழுத்தாளர்
மிகவும் சிக்கலான போர் சூழலில் மிக மிக நுட்பமாக செய்திகளை மோப்பம் பிடித்து எழுதுவதில் தனித்திறமையோடு செயல்பட்டார்.
ஈழ போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும்,
பிரபாகரன் உட்பட ஏனைய தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையும் இவர் மூலம்தான் உலகம் அறிந்து கொண்டது.
இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் உயிராபத்து இருந்தும் துணிந்து பல இடங்களிலும் தொடர்புகளை பேணி அவற்றின் மூலம் பல செய்திகளை பொதுவெளிக்கு கொண்டுவந்தார்
புலிகளால் கொலை அச்சுறுத்தல் அளவு கணக்கில்லாமல் இருந்த போதும் ஒரு கத்தி மேல் நடப்பது போல் நடந்து பணியாற்றினார்
சமாதான ஒப்பந்த காலத்தில் இவர் ஆற்றிய எழுத்துப்பணி வரலாற்றில் என்றும் நினைவு கூறத்தக்கது
இவரின் அந்த பணிக்கு பரிசாக கனடாவில் இவர் கொடூரமாக தாக்கப்பட்டார்
பாகிஸ்தான் பெண் நடத்திவந்த மாபியா கேங் அன்மோல் எனும் பிங்கியின் கதை
Neander Selvan : இந்தியாவில், ஏன் அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ கூட முழுக்க பெண்களே நடத்தும் போதை மருந்து கார்ட்டல்களை காண்பது அரிது
ஆனால் பாகிஸ்தானில் அப்படி ஒரு கார்ட்டலை நடத்தி வரலாறு படைத்திருக்கிறார் அன்மோல் எனும் பிங்கி
துரந்தரில் காட்டப்பட்ட கராச்சி நகரின் சட்டவிரோத கடத்தல் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் அன்மோல். இவரது மூன்று சகோதரர்களும் போதைமருந்து பிசினஸில் இருந்தார்கள். அன்மோல் 14 வயதிலேயே மாடலிங் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி மாடலிங் துறையில் பிங்கி எனும் பெயருடன் இறங்கினார். கராச்சி மற்றும் பின்னர் லாகூரில் மாடலிங் மற்றும் பார்ட்டி கலாச்சாரத்தில் கலந்து கொண்டார்.
