கூட்டுறவுச் சங்க அதிகாரிகளின் மெத்தனத்தால், உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், 4 மாதங்களாக கூலி கிடைக்காமல் நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.