கலைஞர் செய்திகள் :மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
”மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும்" : நிதி ஆயோக் கூட்டத்தில் CM MK Stalin வலியுறுத்தல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.
சனி, 24 மே, 2025
”மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும்" : நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மட்டக்களப்பு ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு!
![]() |
வீரகேசரி : மட்டக்களப்பு, அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் கனிமொழி தலைமையிலான குழு.. ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு..
tamil.oneindia.com -Chandru : பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆபரேஷன் சிந்தூர் மூலம் எப்படி வீழ்த்தினோம் என்பதை விளக்குவதற்காக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யா சென்றடைந்து ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்தனர்.
தற்போது இதுதொடர்பான புகைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
பஹல்காம் தீவிரவாத தாக்குத லை தொடர்ந்து இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்த
பயங்கரவாதிகளின் முகாம்களை அளித்தது. இதில் முக்கிய தீவிரவாதிகள் பலர்
அளிக்கப்பட்டனர்.
விழுப்புரம் திமுக செயற்குழு கூட்டம்... பொன்முடி புறக்கணிப்பு
மின்னம்பலம் -Selvam : விழுப்புரம் திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பெயர், புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான பொன்முடி, விழுப்புரத்தின் திமுக முகமாக அறியப்படுபவர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் பொன்முடி ஆபாசமாக பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து திமுகவில் அவரது துணை பொதுச்செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
வெள்ளி, 23 மே, 2025
10 மடங்கு லாபம்’ - வசூலில் சாதனை படைத்த டூரிஸ்ட் ஃபேமிலி! tourist family collecton 75 cr at world wide
மின்னம்பலம் - christopher : படத்தின் பட்ஜெட்டை விட 10 மடங்கு வசூலை எட்டி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளதாக பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். tourist family collecton reach 75 cr at world wide
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.
பொருளாதார நெருக்கடி காரணமாக சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் நுழையும் இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் எப்படி தங்களுக்கு வரும் நெருக்கடியை சமாளிக்கின்றனர் என்பதை பீல் குட் படமாக பதிவு செய்தது டூரிஸ்ட் பேமிலி.
வேடன்! உலகை கலக்கும் கேரளா ராப் பாடகர் .. தாய் தமிழ் தந்தை மலையாளம்
ராதா மனோகர் : கேரளாவில் ராப் பாடகர்களின் வரவு உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது
இந்திய இசை சந்தையில் வேகமாக முன்னேறுவதில் கேரளா முன்னணி வகிப்பதாக
ஒரு கருத்து இருக்கிறது ..
அதுவும் குறிப்பாக புதிய மலையாள ராப் பாட்டுக்கள்
இதில் புகழின் உச்சியை எட்டி பிடித்துக்கொண்டிருக்கும் பலரில் வேடன் எனக்கு முக்கியமாக தென்படுகிறார்.
இவரது குரலில் ஒரு ஆழம் இருக்கிறது!
இவரது ராப் பாட்டுக்களில் சில வரிகளை இங்கே தொகுத்து உள்ளேன்
மலையாள உச்சரிப்பு பல இடங்களில் எனக்கு புரியவில்லை
இருந்தாலும் ஒரு முயற்சியை செய்துள்ளேன் . தவறுகள் இருக்க கூடும்.
பூமி ஞான் வாழுமிடம்
அனுதினம் நரகமாய் மாறுமிடம்
ஆஷீபாவின் நரகம் போலும்
பகவான் காவல் இருந்து
அமேசான் வீரா நின்னுடே
மாரு துலைஞ்சதில் காடு கரைஞ்சது
வியாழன், 22 மே, 2025
டாஸ்மாக் வழக்கில் ED அமலாக்கத்துறை அரசியல் சாசன மீறல்.. அனைத்து வரம்புகளும் மீறல்! உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மின்னம்பலம் : அரசியல் சாசன மீறல்.. அனைத்து வரம்புகளும் மீறல்.. கூட்டாட்சியை சிதைக்கிறது- டாஸ்மாக் வழக்கில் ED அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
தமிழகத்தில் டாஸ்மாக் வழக்கு விசாரணையில், அரசியல் சாசனத்தை மீறுகிறது அமலாக்கத்துறை; நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே அமலாக்கத்துறை சிதைக்கிறது என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கடும் கண்டனம் தெரிவித்தார். Supreme Court Slams ED in TASMAC Case
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை சோதனைகள், விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆளுநர் அதிகாரமும் உயர்நீதிமன்றமும்! ஒலிபெருக்கியை அணைத்துவிட்டு உத்தரவு போடுவது......
Annamalai Arulmozhi : ஆளுநர் அதிகாரமும் உயர்நீதிமன்றமும் ..
மனுதாரர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அதனால் பொதுநல வழக்கை மதுரை நீதிமன்றத்தில்தான் பதிவு செய்ய முடியும். மதுரையிலும் விடுமுறைக்கால உயர்நீதிமன்றம் செயல்படுகிறது.
ஆகவே வேறு எந்த வழக்காக இருந்தாலும் மனுதாரர் திருநெல்வேலிக்காரராக இருந்தால் சென்னை உயர்நீதி மன்றப் பதிவு அலுவலகம் வழக்கை பதிவு செய்து வழக்கு எண் கொடுத்திருக்காது .
ஆளுநர் அதிகார வழக்கு மட்டும் எப்படி பதிவு செய்யப்பட்டது?
ஏப்ரல் மாதம் முழுவதும் மனுதாரருக்கு கால
அவகாசம் இருந்தது. அதைப் பயன்படுத்தாமல் ஏன் விடுமுறை நீதிமன்றத்தில் வழக்கு பதிய வேண்டும் ?
மாநில அரசுக்கு துணைவேந்தர் நியமன அதிகாரம் : இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்!
tamil.samayam.com -எழிலரசன்.டி : தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக பிரச்னை நிலவி வருகிறது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட நிலையில்,
பொறுத்து பொறுத்து பார்த்து உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தமிழக அரசு. இவ்வழக்கில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்துடன், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.
நகைக்கடன் விதிகளை திரும்ப பெற வலியுறுத்தல் - கந்துவட்டி காட்டில் இனி அடைமழை
Hindu Tamil : சென்னை: ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் நகைக்கடன் பெறுவதற்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
புதன், 21 மே, 2025
கொலை செய்த உடல்களை முதலைக்கு தீனியாக போட்ட ராஜஸ்தான் டாக்டர் கைது! ‘டாக்டர் டெத்’.. ஆசிரமத்தில் மறைந்திருந்தார்
தினமணி : “‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் சீரியல் கில்லர் கொலையாளி பெரும் தேடலுக்கு பின் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 67 வயதான தேவேந்தர் சர்மா ஆவார்.
அவரை ராஜஸ்தானின் தௌசாவில் டெல்லி போலீசார் கைது செய்தனர். திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர் ஆகஸ்ட் 2023 இல் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின் தலைமறைவான அவர் பாதிரியார் போல் மாறுவேடமிட்டு ஒரு ஆசிரமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தார்.
உண்மையில் தேவேந்தர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். 1998 மற்றும் 2004 க்கு இடையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடிகளை அரங்கேற்றினார்.
செவ்வாய், 20 மே, 2025
அகதிகள் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: மார்க்சிஸ்ட்
hindutamil.in : அகதிகள் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: மார்க்சிஸ்ட் | Judges' Approach to Refugee Issue is Inhumane!: Marxist Communist Criticism - hindutamil.in
சென்னை: “தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்துக்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கை தமிழர் ஒருவர் தன் குடும்பத்தினர் நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும், இலங்கைக்கு சென்றால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்த வழக்கில் நீதிமன்றத்தின் வார்த்தைகள் மனிதாபிமானமற்ற தன்மையுடன் சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கவலையோடு பார்க்கிறது.
பஞ்சாபில் பாகிஸ்தான் உளவாளிகளின் 'ஸ்லீப்பர் செல்கள்'- 50 பேரிடம் விசாரிக்கும் பஞ்சாப் போலீஸ்!
மின்னம்பலம் : பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட 6 பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருந்த 50 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உளவாளிகள் பலரும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 6 பாகிஸ்தான் உளவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி செலவு
துல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிா்களைக்கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் எதிா்வினையாக அறிவிக்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ இன்னமும் தொடா்கிறது என்கிறது இந்திய பாதுகாப்புத்துறை. மறுபுறம் மே7-ஆம் தேதி பன்யன்-அல்-மா்சூஸ் (திடமான மற்றும் உறுதியான கட்டமைப்பு) என்ற பெயரிலான தங்களின் ‘திருப்பித்தாக்கும் நடவடிக்கை தொடரும்’ என்று கூறியிருக்கிறது பாகிஸ்தான்.
பொன்முடி வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா? அதிமுகவில் இருந்து வந்தவர்களும், - போய் வந்தவர்களும் வலம் வரும் போது ...
![]() |
Kalidasan Swaminathan : அண்ணன் பொன்முடி வீழ்ந்தாரா? வீழ்த்தப்பட்டாரா?
பொது வெளியில் பேசிய சில சர்ச்சையான கருத்துக்களால்
அவர் துணை செயலாளர் பதவியையும் இழந்து மந்திரி பதவியையும் இழந்தார்.
அமைச்சராக இருப்பவர் எந்த ஜாதியையோ, எந்த மதத்தையோ சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்பதற்காகத்தான் பதவியேற்பின் சத்தியப்பிரமாணம் எடுப்பது.
பொன்முடி அடிப்படை தி.க காரர் என்பதால் சில கருத்துக்கள் அவரை மீறி வந்திருக்கலாம். அதற்கு தான் அமைச்சர் பதவி எடுக்கப்பட்டது.
ஆனால் பொதுச்செயலாளர் பதவி பறிக்கும் அளவுக்கு அவர் செயல் இருந்தது என்றால், கட்சிக்கும் துரோகம் செய்த பலர் இன்னும் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்களே!
கஞ்சா சங்கருக்கும், ஆட்டுக்குட்டிக்கும்,
ஆமையனுக்கும் பணம் கொடுத்தவர்களும் இன்னும் பதவியில் இருக்கிறார்களே!
அதிமுக வெற்றிக்கு துணை போனவர்களும் கட்சியில் இருக்கிறார்களே!
காதலுக்கு கொலைகளை பரிசளித்த பிரபாகரன் பின்பு தானே காதலித்தான் கல்யாணமும் செய்தான் பிள்ளைகளையும் பெற்றான்
Suhan Kanagasabai : பிரபாகரனின் அதி நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலனாக இருந்த தியாகுவிற்கும்(கந்தையா கிருபாகரன்) முல்லைத்தீவு மாவட்ட நித்திகைக்குளம் 'விடியல்'எனும் பெண்கள் முகாமிலிருந்த யூலியாவிற்கும் இடையிலான காதல் உறவு கண்டறியப்பட்டபின்,
அவர்கள் இருவருக்கும் மரணதண்டனையே வழங்கப்படவேண்டும் என்று அன்று ஒரே மனதாக ஓங்கிக் குரலெழுப்பிய,
முக்கிய பெண்போராளி ஒருவரின் போருக்குப்பிந்திய வாக்குமூலம் இது):
”இயக்கத்தின் சுவர்களுக்குள் , எங்கள் கண்கள் குருடாகிக்கிடந்தன; நாம் செய்கின்ற அதர்மக் கொடூரங்களையும் அப்பட்டமான தவறுகளையும் எங்களால் கண்டுணர முடியவில்லை. இன்று, வெளியில் வந்து நின்று, கண்களைத் திறந்து பின்னோக்கிப் பார்க்கும்போது, நாம் விட்ட பயங்கரமான இமாலயத் தவறுகளின் பிரமாண்டம் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல அக் கொடூரங்களை நிறைவேற்றும் உடந்தையாளிகளாகவும் இருந்திருக்கின்றோம்.
திங்கள், 19 மே, 2025
கழிவறையில் Lufthansa விமானி, மயக்கத்தில் துணை விமானி… 10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்”,
தினத்தந்தி “கழிவறையில் விமானி, மயக்கத்தில் துணை விமானி… 10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்”,
“செவில்லே,ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து ஸ்பெயினின் செவில்லே நகர் நோக்கி லுப்தான்ஸா ஏர்பஸ் ஏ321 விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.
அதில், 199 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.இந்நிலையில், விமானி அறையில் இருந்து வெளியேறிய விமானி அவசரத்திற்காக கழிவறைக்கு சென்றுள்ளார்.
ஞாயிறு, 18 மே, 2025
கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று அறியப்பட்ட காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு! 1963 உருத்திரபுரம் இலங்கை
![]() |
ராதா மனோகர் உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று அறியப்பட்ட காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு!
இந்த வழக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது!
இந்த வழக்கு அந்த காலத்தில் மக்களின் அன்றாட பேசுபொருளாக இருந்தது..
அன்றைய ஈழநாடு நாளிதழ் தினசரி காலை மாலை என இரு பதிப்புக்களை வெளியிட்டது.
ஒரு கோயில் குருக்களையே அவரது மனைவி தீர்த்து கட்டியது அதுவரை கேள்விப்படாத ஒரு விடயமாக இருந்தது.
கொலையுண்ட திரு காசிலிங்க அய்யரும் சரி அவரது மனைவி கோகிலாம்பாளும் சரி தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்தான்
இவர்களது ஒரு மகன் தற்போது கனடாவில் மிகப்பிரபலமான ஒரு கோயிலில் பெரிய குருக்களாக கோலோச்சி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஈழத்திலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சாரகலாம் ? குன்றக்குடி அடிகளாரின் வரலாற்று செய்தி
![]() |
ராதா மனோகர் : 4-1-1971 ஆம் தேதி ஈழநாடு பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டில் சகல சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ள முன்மாதிரியை யாழ்ப்பாண சைவ மக்களும் பின்பற்றுவார்களா என்று நல்லூர் ஞானசம்பந்த ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி நாத தம்பிரானிடம் தமிழ்நாடு தெய்வீக பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கேட்டார்.
இத்தகவலை சுவாமிநாத தம்பிரானே தெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் நாவலர் காலந்தொட்டு வைதீக சைவம் வளர்ச்சீ பெற்று வருவதனால் இத்தகைய நடைமுறைகள் யாழ்ப்பாண மக்கள் ஒருபோதும் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்றும் அரசாங்கம் இது விடயத்தில் தலையிட மாட்டாதென்றும் தாம் அவரிடம் கூறியதாகவும் சொன்னார்.
ஜெயந்தி ராஜன் இந்திய - முஸ்லிம் லீக் துணைச் செயலாளராக தேர்வு! கேரளாவை சேர்ந்தவர்!
![]() |
jaffnamuslim.com : முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினராக இணைந்து பல ஆண்டு காலம் மகளிர் அணி மாநில மற்றும் தேசிய பொருப்புகளை வகித்து சிறப்பான பணியாற்றியவர் ஜெயந்தி ராஜன்.
கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜெயந்தி ராஜன் அவர்கள் இன்று (17) சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் சகோதரி ஜெயந்தி ராஜன் அவர்கள் தேசிய துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? தைலாபுரத்தில் ராமதாஸ் ஆலோசனை!
மின்னம்பலம் : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இன்று கட்சியின் இளைஞரணி, மகளிர் அணி சார்பாக மாநில- மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், சேலம் எம்.எல்.ஏ. அருள், மகளிர் அணியின் தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, செயலாளர் வழக்கறிஞர் தேவிகுரு செந்தில், செயலாளர் தமிழ்ச்செல்வி வரதராஜன், செயலாளர் காஞ்சிபுரம் சரளா ராஜ். கடலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் கௌரி வீரராகவன் ஆகியோரும் மாணவர் அணி சார்பாக மாணவர் சங்க செயலாளர் முரளிசங்கர், மாணவரணி தலைவர் கடலூர் கோபிநாத், மாணவரணி செயலாளர் ஆளவந்தார், சேலம் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ஆத்தூர் செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி மற்றும் அவரது கணவர் பரசுராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: தேசிய தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Hindu Tamil : மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4-ம் தேதி மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆவடியில் உள்ள ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.