வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஆர் எஸ் எஸ் கோல்வால்கரின் நூலில் உள்ளதை அப்படியே நிறைவேற்றிய பாஜக அரசு!

Dhinakaran Chelliah : 2017 ஏப்ரல் மாதத்தில் எழுதிய முகநூல்
பதிவு இது. மிக்க துயரத்துடனும், மன வலியுடனும் மீள் பதிவு செய்கிறேன்.கோல்வால்கரின் நூலில் உள்ளதை அப்படியே குடியேற்ற சட்ட திருத்தமாக இப்போதைய ஆளுங்கட்சி பாரளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள் உண்மையில் மனிதர்களா?எனும் ஐயம் சாதாரண மக்களுக்கும் எழத் தொடங்கியுள்ளது.எது நடக்கக் கூடாது என எண்ணியிருந்தோமோ அது இப்போது கண் முன்னே நடக்கிறது! இனி இதிலிருந்து மீண்டு வருவது சாத்தியமா என்பது கேள்விக்குறியே?!
புலன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, குடியேற்ற சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் மக்களே உங்களைக் கை கூப்பி வேண்டுகிறேன், ஒரு நிமிடம் நீங்கள் நடக்கும் அநீதிகளை உணரமாட்டீர்களா?! உங்கள் மனம் ஏன் இப்படி கல்லாகிப் போனது?! ஒரு நிமிடம் யோசியுங்கள்!
இனி பதிவு:

ஏன்தான் இப்பிடிப்பட்ட நூல்கள் கண்ணுக்கு புலப்படுகிறதோ தெரியவில்லை, வாசித்தால் இருப்பு கொள்ளவும் முடியவில்லை.
பழைய பதிவுகளில் சொன்னபடி கண்கள் காண்பதற்கே, சிந்தனை அவரவர் சிறப்பதற்கே!
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார்.
தனது (We or Our Nationhood Defined); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.
"We or Our Nationhood defined" - M. S. Golwalkar page 104
Emigrants have to get themselves naturally assimilated in the principal mass of population, the National Race, by adopting
its culture and language and sharing in its aspirations, by losing all consciousness of their separate existence, forgetting their foreign origin. If they do not do so, they live merely as outsiders,bound by all the codes and conventions of the
Nation, at the sufferance of the Nation and deserving of no special protection, far less any privilege or rights. There are only two courses open to the foreign elements, either to merge themselves in the national race and adopt its
culture, or to live at its mercy so long as the national race may allow them to do so and to quit the country at the sweet will of the national race. That is the only sound view on the minorities’ problem. That is the only logical and correct solution. That alone keeps the national life healthy and undisturbed

கருத்துகள் இல்லை: