

அவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பதி அலிபிரி பகுதியில் இருந்து நடந்து சென்று மலை ஏறி சாமி தரிசனம் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
இளம்பெண் புஜ்ஜிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர் குள்ளயப்பா என்பவர் இதை கவனித்தார்.
உடனடியாக அவர் புஜ்ஜியை தோளில் சுமந்துகொண்டு நடக்க தொடங்கினார். சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் இளம்பெண்ணை சுமந்துகொண்டு திருமலையை சென்று அடைந்தார். அங்கு அந்த பெண் அஸ்வினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அந்த பெண் நன்கு குணம் அடைந்து வருகிறார். இந்த நிலையில் போலீஸ்காரர் குள்ளயப்பா இளம்பெண்ணை சுமந்து சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
அதை பார்த்து ஏராளமானோர் போலீஸ்காரர் குள்ளயப்பாவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜனும் போலீஸ்காரர் குள்ளயப்பாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், திருப்பதிக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களிடமும் குள்ளயப்பா போன்று போலீஸ்காரர்கள் கனிவுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக