ஞாயிறு, 15 டிசம்பர், 2019

முகாம்களில் உள்ள தமிழ் அகதிகள்.... இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் கள்ள மௌனம்

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறார்கள்!
இவர்களின் பிள்ளைகளும் அந்த பிள்ளைகளின் பிள்ளைகளும் இந்தியாவிலேயே பிறந்ததனால் அவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று   முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கேட்கிறார்கள்..

அதை விட மலையக தமிழர்களும் இங்கு இன்னும் அகதிகளாகத்தான் இன்னும் பலர் இருக்கிறார்கள் . அவர்கள் இலங்கைக்கு போக விரும்பவில்லை..
இது பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பெரிதாக குரல் கொடுப்பதாக தெரியவில்லை. இது ஒரு சந்தேகத்துக்கு உரிய விடயம்.  .
இலங்கை வடக்கு மாவட்டத்தில் 11 எம்பிக்கள் இருக்கவேண்டிய இடத்தில் வாக்காளர்கள் தொகை குறைந்ததால் அங்கு தற்போது  6 எம்பிக்களே தெரிவு செய்யப்படுகிறார்கள்.
தமிழக அகதி முகாம்களில் இருக்கும்  தமிழர்கள் மீண்டும் வடமாகாணத்திற்கு குடிபெயர்ந்தால்  அவர்களின் எம்பி தொகுதிகள்அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையே கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களும் புலம் பெயர் தமிழர்களும் இந்த குடியுரிமை மறுப்புக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் மத்தியில் உள்ளது.

ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் வாழும் இவர்களின் சந்ததியினர்  இந்தியர்களாகவே பல விதங்களிலும் வாழுகின்றனர் .
இவர்கள் பலருக்கு இலங்கை ஒரு அந்நிய தேசம்தான் .
அங்குள்ள கல்வி வேலைவாய்ப்பு சமுக சூழ்நிலை எல்லாமே ஒரு அன்னியமாகி போன நிலைதான் பெரிதும் காணப்படுகிறது.
இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் தீர்மானிக்க படவேண்டிய விடயமாகும்.
யாழ்ப்பாண அரசியல்வாதிகளோ  அல்லது  தமிழின விரோத பாஜக அரசியல்வாதிகளோ தீர்மானிப்பது நேர்மை ஆகாது.
இந்தியாவில் இந்தியர்களாகவே மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தமிழர்களின் கருத்தே இதில் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும் .
இதில் அரசியல் செய்ய எண்ணும் எவரையும் வரலாறு நேர்மையானவர்கள் என்று கருதாது.


கருத்துகள் இல்லை: