செவ்வாய், 17 டிசம்பர், 2019

அவர்கள் யாரும் மொட்டயடித்ததில்லை கந்த சஷ்டி விரதம் இருந்ததில்லை மண்சோறு உண்பதில்லை

Dhinakaran Chelliah : பரம பக்தர்களே! தெய்வீக பக்த கோடிகளே!
ஏன் வேதியர் போல நீங்களும் இவற்றையெல்லாம் செய்யாமல் இருக்கலாமே?! இவற்றைச் செய்யாமலேயே அவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?!
அவர்கள் யாரும் மொட்டயடித்ததில்லை
கந்த சஷ்டி விரதம் இருந்ததில்லை
மண்சோறு உண்பதில்லை
கரகம் எடுப்பதில்லை
முளைப்பாரி தூக்குவதில்லை
தீக்குழி(பூக்குழி) இறங்குவதில்லை
நாவில் வேல் குத்தியதில்லை
காவடி எடுத்ததில்லை
சாமி ஆடியதில்லை
சாட்டையால் தங்களை அடித்துக் கொண்டதில்லை
கால் கடுக்க யாத்திரை போவதில்லை
அங்கப் பிரதட்ஷணம் பண்ணுவதில்லை
தீச்சட்டி ஏந்துவதில்லை
காது குத்திக் கொண்டதில்லை
அர்ச்சனை செய்வதில்லை
தட்டில் காசு போடுவதில்லை


பேய் பிடிப்பதுமில்லைர
பால் குடம் எடுப்பதில்லை
விளக்கு பூசை செய்வதில்லை
எண்ணைச் சட்டியில் கைவைப்பதில்லை
குழந்தைகளை தரையில் போட்டுத் தாண்டுவதில்லை
மரங்களில் தாலி கட்டியதில்லை
கோயிலைச் சுத்தம் செய்வதில்லை
ஆணி செருப்பு அணிவதில்லைஇளக்கு பூ
தலையில் தேங்காய் உடைப்பதில்லை
சப்பரம் தூக்கியதில்லை
தேர் இழுத்ததில்லை
பல்லக்கு தூக்கியதில்லை
நேர்த்திக் கடன் ஏதுமில்லை
சூடத்தை கையில் ஏந்தியதில்லை
குரு பூசை செய்வதில்லை
போட்டோவிலிருந்து திருநீறு விழுவதில்லை
சொக்கட்டான் கொளுத்துவதில்லை
மரங்களில் தொட்டிலைக் கட்டியதில்லை

ஆனா இதையெல்லாம் செய்யச் சொன்னது யார்?!
“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்” ஒரு ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத அறிவில்லாதவன் நான்.
(மணிவாசகர் திருவாசகம்)
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
(தொல்காப்பியம் பொருளதிகாரம் 22:4)
இது எழுதப்பட்டது வேறு காரணங்களுக்காக இருந்தாலும், மேலுள்ள கரணத்திற்கும் பொருந்தும்.

பின்குறிப்பு :   விசயத்தை தெளிவாக புரியும்படி எழுத முடியாத எனது இயலாமையை நினைத்து வருந்துகிறேன்.
முதலில் ஆன்மீகம் என்பதே ஆன்மா பற்றியது, ஆன்மாவே இல்லை அப்புறம் ஆன்மீகம் எங்கிருக்கும். ஆத்மாவை மறுதலித்தவை பௌத்தம் ஆசீவகம் போன்ற பல சித்தாந்தங்கள்.
இந்தியாவில்
15 நிமிடத்திற்கு ஒருதடவை தலித் மக்களுக்கு எதிரான வன்முறை நடப்பதாக மத்திய அரசின் statistics report சொல்கிறது, ஒரு நாளைக்கு இரண்டு தலித் மக்கள் சாதியின் பெயரால் கொல்லப்படுகிறார்கள். இதையும் மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.சாதி ஏற்றத் தாழ்வுகளினால் நமது நாடும் சமுதாயமும் முன்னேற இயலாமல் பல பின்னடைவுகளை இன்றும் சந்திக்கிறது. சரித்திரத்தில் இடை இடையே எழுந்த ஞானிகள் பெரியோர்கள் நடந்த அநியாயங்களை சீர்திருத்தி நல்வழிப்படுத்த முனைந்தார்கள். அன்பை அகிம்சையை அறத்தை மனிதநேயத்தை முன்னிறுத்திய தத்துவங்கள் அனைத்தையும் நாட்டை விட்டு அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டன. உதாரணம் பௌத்தம். இவை அனைத்திற்கும் மூல காரணம் வேத காலம் தொட்டு சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மக்களின் மனதை சிதைத்த “ஆத்மா based” வர்ணாசிரம தத்துவத்தை உள்ளடக்கிய வேத வைதீக சனாதன தர்மம். ஒட்டு மொத்த மக்களும் மன ரீதியாக பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். அதற்கான முழுக் காரணத்தையும் பழைய பதிவுகளில் தெளிவு படுத்தியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்கித்தள்ளி வரலாற்றுப் பிழைகளை சரிசெய்யாது சுய நல நோக்கில் கண்களை மூடி நம்மோடு இருப்பவர்களின் மீது மட்டும் அன்பு செலுத்துதல் எப்படி இயலும். என்னைப் பொறுத்த வரையில் கடைக்கோடி தாழ்த்தப்பட்டவராக கருதப்படுபவரும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களுப்கு அநீதி இழைக்கிறார்கள். வர்ணாசிரமத்தின் அமைப்பு அப்படி, அவரவர் பின்புலத்தையும் அவரவர் சார்ந்த குடும்பம், சமுதாயத்தை விமர்சிக்காது நியாயமான கேள்வி எழுப்பாது விடிவு இல்லை.
கண் முன்னே நடக்கும் அநியாங்களை தட்டிக் கேட்காது எப்படி ஒரு அன்பைப் பேசுபவரால் இருக்க இயலும்?!. அப்படி இருப்பவர் சுயநல வாதிதானே?!
தவறுகளுக்குக் காரணமான எந்தப் பின்புத்திலிருந்து வருபவர் ஆனாலும், தவற்றை திருத்த நினைப்பது மனித நேயத்தின் முதல்படி, சமத்துவத்தின் ஆரம்பம். இதை அடுத்துதான் அன்பும் கருணையும் இயல்பாக வர இயலும். மற்றபடி எல்லாமே illusion தான், கண் முன் நடக்கும் நிதர்சனமான உண்மை அல்ல.
அவரவர் செய்த, செய்யும் தவறுகளை உணரும் வரை வேதியர், வைதீகர்,ஆண்ட பரம்பரை, சத்ரியர், வைசியர், சூத்திரர், சண்டாளர், பஞ்சமர் என எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க இயலாது.

கருத்துகள் இல்லை: