வியாழன், 22 டிசம்பர், 2016

நீ பழைய பன்னீரா வரணும்? (மாட்டிக்கிட்ட கூட்டாளிங்க)

தான் யார் என்பதை ஒவ்வொரு நாளும் ஆணித்தரமாக நிருபிக்க ஆரம்பித்து விட்டார், முதல்வர் . டெல்லிக்கு போய் வந்ததும் முதல் அதிரடியாக தலைமைச்செயலலாளர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம், கோட்டை என ரெய்டு தொடர்கிறது. அடுத்தடுத்த அட்டாக் தொடரும் என்கிறார்கள். இந்த நிலையில் நேற்று கடும் கோபத்தில் கோட்டைக்கு சிங்கமென வந்தார்
முதல்வர். மொத்த அமைச்சர்களையும் தனது அறைக்கு வரவைத்தார். யாரையும் உட்காரவும் சொல்லவில்லை. நின்றபடியே இருந்தார்கள். ஏறிட்டு பார்த்த முதல்வர், அம்மா விட்டுசென்ற கடமைகள் நிறைய இருக்கிறது. அம்மாவின் கனவுகளும் நிறைய இருக்கிறது. நமக்கு அம்மா மட்டும் தான். சின்ன அம்மா, பெரிய அம்மா, நடு அம்மா என்று யாரும் இல்லை. யாருக்கும் காவடி தூக்க வேண்டாம். யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. தப்பு பண்றவங்களுக்கு துணை போனீர்கள் என்றால் உங்களை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது. போய் வேலைகளை கவனியுங்கள் என்று கூறி அனுப்பினாராம். ஆடிப் போய்விட்டார்கள் அமைச்சர்கள். முகம் இருண்டு போய் திரும்பினார்கள் என்கிறார்கள். இது நம்ப பழைய பன்னீரா..? நடுங்கிப்போய் கிடக்கிறது கோட்டை வட்டாரம்.. லைவ்டே

கருத்துகள் இல்லை: