புதன், 21 டிசம்பர், 2016

ஜெயலலிதா வீட்டு பணிப்பெண்களை காணவில்லை .. நான்கு பணிப்பெண்கள் மிஸ்ஸிங் !

அம்மா ஜெ., எங்கே போனாலும் கூடவே நான்கு பணிப் பெண்கள் செல்வார்கள். ஐந்து வருடங்களுக்கு முன் மிகத்துல்லியமாக தேர்வு செய்யப்பட்டு அம்மாவிடம் அந்தரங்க பணிப் பெண்களாக கார்டனுக்குள் வந்தார்கள். முழுக்க முழுக்க அம்மாவை பார்த்துக்கொள்வது அவர்களின் வேலை. அவர்கள் அம்மாவின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பார்கள். சசிகலாவின் எந்த ஆர்டர்க்கும் அவர்கள் கட்டுப்படவோ, பேச்சை கேட்பதோ கூடாது என்பது தான் சட்டம். இவர்கள் தமிழக உளவுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தார்கள். அம்மாவின் பயணங்களின் போது அவர்களுக்கு என்ன கொடுக்கிறார்கள். சாப்பாடு லிஸ்ட், தண்ணீரின் அளவு போன்ற அனைத்தும் பரிசோதனைக்குப் பின் இந்த பணிப் பெண்களுக்கு வழங்கப் படும். இவர்கள் உணவு கூட வெளியில் சாப்பிட முடியாது என்கிறார்கள். அதில் கலைவாணி என்கிற பெண் தான் செப்டம்பர் 22 அன்று கார்டனில் நடந்த சண்டையின் போது (?) போராடியவர் என்கிறார்கள். இப்போது அந்த பெண்கள் மாயமாகி விட்டார்கள். எங்கே போனார்கள், அவர்கள்? உயிரோடு இருகிறார்களா? அல்லது பெரிய அளவில் பணம் செட்டில் பண்ணி அனுப்பி விட்டார்களா என்பது தான் அம்மாவின் தீவிர பக்தர்களின் கொந்தளிப்பு மிகுந்த கேள்விகள். ஆனால் வழக்கம் போல இதற்கும் பதில் இருக்காது என்கிறார்கள் அவர்கள்..! அட நாராயணா..! லைவ்டே

கருத்துகள் இல்லை: