புதன், 21 டிசம்பர், 2016

11 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு குறி! ..மொத்தமா அள்ளிக்கோ அள்ளிக்கோ ...

இன்னும் 11 ஐ.ஏ.எஸ்.களை சி.பி.ஐ.யும், வருமான வரித்துறையும் குறிவைத்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்ட ப்ளக்ஸ் போர்டுகளே இதற்கு காரணம். மக்கள் செய்தி மையம் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் அன்பழகன் என்பவர் தான் அந்த போர்டுகளை வைத்தார். அப்படி அவர் வைத்த பேனரில் பத்தாயிரம் கோடி ரூபாய் ஊழல் புரிந்தவர்கள் என்று விளம்பரப்படுத்தினார். அதுமட்டுமல்ல தமிழக அரசின் முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் ராம்மோகன்ராவின் படமும் இடம்பெற்றிருந்தது. அந்த பேனர்களை அகற்ற அதிகாரிகள் தங்கள் பவரை யூஸ் செய்தார்கள். எந்த அடிப்படையில் பத்தாயிரம் கோடி ஊழல் புரிந்தார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள் என உளவுத்துறை குடைந்தது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அத்தனை விவரங்களும் அவர்கள் முன் கடைவிரிக்கப்பட்டது. பேனரில் வெளியிட்டிருந்த அத்தனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடைய ஊழல்களும் அவற்றில் இருந்தன. இந்த தகவலை அறிந்த பேனரில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடக்கிவாசிக்க ஆரம்பித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை அவர்களுக்கென சங்கம் உள்ளது.அதன் மூலம் அடக்கலாம் என்று முயன்றும் மண்ணை கவ்வினர்.இந்நிலையில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் புகைபடங்களோடு பப்ளிக்காக வைக்கப்பட்ட பேனரில் உள்ளவர்கள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு சென்றுள்ளது. அடுத்ததாக… லைவ்டே

கருத்துகள் இல்லை: