

அதையடுத்து, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெற்றதற்கு பாஜகவே காரணம் என்றும், மத்திய அரசின் கொள்கைகளை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக பாஜக அரசு நிர்பந்தம் செய்கிறது என்று அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது, இந்த வருமானவரித்துறையின் சோதனைக்குப் பின்னால் மிகப்பெரும் உள்நோக்கம் உள்ளது. தமிழக முதலமைச்சர் அம்மா புரட்சித்தலைவி இறந்த சில நாட்களிலேயே பாஜக அரசு துரோகம் செய்துள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தியதில் உள்நோக்கம் இல்லை என்று உறுதியாகவும் கூற முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.அதிமுக செய்தி தொடர்பாளர் தீரன் கூறுகையில், இந்த செயல் பாஜகவின் திட்டமிட்ட சதியாகும். நாடாளுமன்றத்தில் அதிமுகவிற்கு 49 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவு தேவை என்பதற்காக பாஜக அரசு அதிமுகவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த சோதனையை நடத்தி மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதுபோல் உள்ளது .
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களுக்கு அதிமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் நலனை கணக்கில் கொண்டும்தான் பாஜக அரசுக்கு முதல்வர் அம்மா எச்சரிக்கையாக ஆதரவு கொடுத்து வந்தார். தலைமைச் செயலாளர் மற்றும் பிற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது எங்களை மிரட்டுவதாக உள்ளது என்று அவர் கூறினார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுகவிற்கு எதிரான ஓட்டுகளையும், அதிமுகவின் ஓட்டுகளையும் கைப்பற்றும் நோக்கில் பாஜக அரசு இந்த தந்திரத்தை கையாள்கிறது. ஆனால் இந்த செயல் அவர்களுக்கு எவ்வளவு தூரம் கைகொடுக்கும் என்பது பாஜகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கையைப் பொறுத்தே அமையவுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக