
பல்கலைக்கழக துணை வேந்தர் பல்கலைக்கழக துணை வேந்தர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ். சுப்பையா, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.மணியன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ். தங்கசாமி ஆகியோர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அனிதா குப்புசாமி அனிதா குப்புசாமி அதிமுக நட்சத்திர பேச்சாளர் அனிதா குப்புசாமி மற்றும் அவரது கணவரும், நாட்டுப்புற பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் சசிகலாவிடம் இரங்கல் தெரிவித்தனர்.
டிவி நிறுவன அதிபர்கள் டிவி நிறுவன அதிபர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு ஆசிரியர் அருண் ராம்,
ப்ரவோக் பத்திரிக்கையின் பாபு ஜெயக்குமார்,
நவீன நெற்றிக்கண் மணி,
குமுதம் வரதராஜன்,
நியூஸ்7 செய்தி சேனல் உரிமையாளர் வி வி சுப்பிரமணியன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஆதரவு தெரிவித்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு செய்தியாளர்கள் சந்திப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.எஸ். பாத்திமா முசஃபர் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.சகாயராஜ், மாலை தமிழகம் நாளிதழ் குழுமங்களின் தலைவரும், ஆசிரியருமான கே. சர்வோதயம் ஆகியோரும் போயஸ் தோட்டத்திற்கு வந்து ஆறுதல் கூறினர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பலரும் போயஸ்தோட்டத்திற்கு வேதா நிலையத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பலரும் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக