வெள்ளி, 3 டிசம்பர், 2010

கள்ளக் காதல் சோடியை விரட்டிய படையினர்


சுன்னாகம் மயிலனிப் பகுதியில் கள்ளக் காதல் புரிந்த இளம் சோடி வசமாக இராணுவத்தினரிடம் அகப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தனியார் வளவில் காணப்படும் பற்றையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கள்ளக் காதல் புரிந்தவர்கள் கிராம அலுவலரின் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் உரியவர்களை விசாரணை செய்துவிட்டு கடும் எச்சரிக்கை செய்ததுடன், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அவர்களை விடுவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை: