ஞாயிறு, 23 ஜூன், 2019

தமிழகம் போன்ற சமவெளிகளில் பெரிய அணைகளைக் கட்ட முடியாது?

Don Vetrio Selvini : தமிழ்நாட்டில் நிறைய அணைகளைக் கட்ட வேண்டும் என்று
சங்கித்தனமான அறிவுரைகளை சில அறிவுஜீவிகளும் முன்வைக்கிறார்கள்.
நினைத்த இடத்தில் மருத்துவமனை கட்டலாம். அணையைக் கட்ட முடியாது.
அணையைக்கட்ட இயற்க்கையான அமைப்பு வேண்டும். மலைகள் சூழ்திருக்க
வேண்டும். இயற்கையான வடிகால் வசதி இருக்க வேண்டும். இது அத்தணையும் இருந்தாலும் அணையைக் கட்ட முடியுமா என்றால், முடியாது.
இதையும் தாண்டி, சூழியல் பாதிப்புகளை கணக்கில் எடுக்க வேண்டும். எத்தணை % காடுகள் தண்ணீர்ல் மூழ்கும், எத்தணை கிராமங்களை இடம் மாற்ற வேண்டும், அவர்களின் வாழ்வாதரதிற்கு என்ன மாற்று , வெள்ளப் பெருக்கு எவ்வளவு இருக்கு, வெள்ளத்தை எப்படி சமாளிப்பது, இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே அணையைக் கட்ட முடியும்.

உதாரணதிற்கு, படத்தைப் பாருங்கள் ( படம்-1 ). இந்த அணையின் பெயர் வைத்தரனா அணை , தானே மாவட்டத்தில், கோசாலே என்னும் கிராமத்தில் இருக்கிறது. அணையில் இருந்து 174 கி.மீ தொலைவில் உள்ள மும்பை நகருக்கு தண்ணீர் கொடுப்பதே , இந்த திட்டத்தின் நோக்கம்.
அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மற்றும் சுரங்கங்கள் உதவியுடன் தண்ணீர் மும்பைக்குச் செல்லும்.
படத்தில் இருப்பதை போல, மூன்று பக்கமும் மலைகள் , அணை கட்டுவதற்கு ஏற்ற புவிசார் அமைப்பு அமைப்பு தமிழகத்தில் இல்லை. இருக்கும் இடத்தில் எல்லாம் அணைகளை கட்டிவிட்டோம்.
தமிழ்நாட்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இதில் 24 (20%) அணைகள் மட்டுமே காமராசர் காலத்தில் கட்டப்பட்டவை. மற்ற 80க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டியது திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள்.
தமிழகம் போன்ற சமவெளிகளில் , பெரிய அணைகளைக் கட்ட முடியாது. வைத்தரனா அணை இருக்கும் இடத்துக்கு செல்ல வேண்டுமானால், 25 கி.மீ காட்டுக்குள் செல்ல வேண்டும். அப்படி இருந்தும், 5/6 கிராமங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது.
ஒரு வேளை , காவேரி டெல்டாவில் , சமவெளியில் அணை கட்ட வாய்ப்புகள் இருந்தால், 25-30 கிராமங்களை , இடப் பெயர்ச்சி செய்ய வேண்டும். இன்றைய சூழலில் இது முடியாத காரியம்.
வேறு எதுவுமே செய்ய முடியதா என்றால். இல்லை. செய்ய வேண்டியதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
மாயனூர் அருகே, காவெரிக்கு குறுக்கே தடுப்பணையை கட்டும் பணிகள் 2008ம் ஆண்டு , திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு ,2014ல் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இது, காவேரி-வைகை – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி.
மாயனூர் தடுப்பணையில் இருந்து 250 கி.மீ அளவுக்கு கால்வாய் அமைக்க வேண்டும். (படம்-2)ஐ பார்க்கவும். அப்படி அமைத்தால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகள் குடிநீர் மற்றும் பாசன வசதிகள் (பிங் வண்ணப் பரப்பு) பெரும்.
நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலினாலும், நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாலும் (10,000 கோடி ரூபாய் தேவை) கிடப்பில் உள்ளது.
திமுக ஆட்சிக்கு வரும் போது, இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்,ஏனெனில், இது கலைஞரின் கனவு திட்டங்களுல் ஒன்று.
பி.கு : இதற்கு அப்புறமும், நிறைய அணைகளைக் கட்டவில்லை என்றும் திராவிடக் கட்சிகள் அனைகளே கட்டவில்லை என்றும் சொல்பவர்களுக்கு ,கீழ்பாக்கம் மருத்துவனையில் மருத்தும் பார்பதற்கு உண்டாண செலவுகளை ஏற்க நான் தயார்.

கருத்துகள் இல்லை: