புதன், 26 ஜூன், 2019

ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

p ranjithnakkheeran.in - kamalkumar": ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பை பேச்சுரிமை உள்ளது எனக்கூறி ரஞ்சித் தரப்பு முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குழு இனிவரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என அறிவுறுத்தியது. மேலும், அப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினாரென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறைகளை விதித்து ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

கருத்துகள் இல்லை: