சனி, 29 ஜூன், 2019

தினகரன் கட்சியின் சசிரேகாவும் கணவர் அன்புவும் அதிமுகவில் சேர்ந்தனர்

tamil.oneindia.com : சென்னை: அதிமுகவில் தம்பதி சகிதமாக இணைந்த
சசிரேகாவுக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் சசிரேகா. அக்கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளரும்கூட.
டிவி விவாதங்களை பார்ப்பவர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். தினகரனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வாய் கிழிய சண்டை போடுவார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் இவர் பேசாத பேச்சில்லை. ஆனால் தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு இவர் அமமுகவில் சரிவர செயல்படாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று திடீரென சசிரேகா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். கூடவே வழக்கறிஞரான தன் கணவன்  அன்பு, மற்றும் ஆதரவாளர்களையும் அழைத்து கொண்டு போய் அதிமுகவில் இணைத்துள்ளார்.
 AIADMK கட்சியின் செய்தி தொடர்பாளரான சசிரேகாவும், அமமுகவின் வழக்குகளை கவனித்து கொண்டு இருந்த அவரது கணவர் அன்பு இருவருமே ஒரே நேரத்தில் கட்சியை விட்டு பறந்ததால், தினகரனுக்கு பெருத்த ஷாக் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது

கருத்துகள் இல்லை: