வெள்ளி, 28 ஜூன், 2019

திருமாவளவன் வெறும் தலித் மக்களுக்குத் தான் தலைவர் என்று சொன்னார்கள்...

Prakash JP : எதோ திருமாவளவன் வெறும் தலித் மக்களுக்குத் தான் தலைவர் என்று சொன்னார்கள்.. ஆனால், நாடாளுமன்றத்தில் அவரின் முதல் செயல்பாடு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவு மக்களின் உரிமைகளுக்காக இருக்கிறதே..
//மருத்துவ படிப்பில் சட்டப்படியான OBC இட ஒதுக்கீட்டை மத்திய தொகுப்பில் கொடுக்க வேண்டும்.. BC, MBC மக்கள் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.. தொல்.திருமாவளவன் MP மத்திய அமைச்சகத்தில் மனு.. // நாமெல்லாம் இந்து என்ற சொல்லும் பிஜேபி போன்ற ஹிந்துத்துவா தலைவர்கள் யாரும் இதற்கு குரல் கொடுக்கவில்லை... ஆனால், இந்து மதத்திற்கு எதிரி போல சித்தரிக்கப்படும் திருமாவளவன் தான் BC MBC இந்துக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார்..
மருத்துவப் படிப்பில் MBBS மற்றும் PG Medical Courses ஆகியவற்றில் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் OBC (BC & MBC) பிரிவுக்கான 27% இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர்.

உதாரணமாக, தமிழ்நாட்டிலிருந்து மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் MBBS இடங்கள் 490 அதில் 27% கணக்கிட்டால் 132 இடங்கள் OBC வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதுபோலவே PG Medical Courses இல் தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்புக்கு 879 இடங்கள் அளிக்கப்படுகின்றன. அதில் 27% கணக்கிட்டால் 237 இடங்கள் கிடைக்க வேண்டும். மத்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால் தமிழ்நாட்டில் மட்டும் 369 OBC (BC & MBC) மாணவர்களின் வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் பறிக்கப்படுகிறது.
இந்த அநீதியைக் களையவேண்டும் , பிற்படுத்தப்பட்ட &p; மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பு இடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனக் கேட்டு இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் MP தொல். திருமாவளவன் மனு அளித்துள்ளார்...

கருத்துகள் இல்லை: