சனி, 8 ஏப்ரல், 2017

வாக்களர்களுக்கு பணம் கொடுத்த மொத்த விபர பட்டியல் சிக்கியது .. அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கு இதுவே போதுமானது

Troll Mafia :அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில்..
செங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் .
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது...
ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்...
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்...
மின்சார துறை அமைச்சர் த ங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்..
நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 89,65,80,000 ரூபாய்.
இவை ஓட்டுக்காக ₹4000 வீதம் வாக்களர்களுக்கு வழங்க ஏறக்குறைய
₹90 கோடி ரூபாய்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.. இதுவரை ₹50 கோடிக்குமேல் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

இனியும் என்ன தயக்கம்..வெளிபடையாகவே பணம் தருவது தெரிகிறது.. அதை அமைச்சர்களே முன்னின்று பிரித்து வழங்கியதற்கான ஆதாரம் சோதனையின் போது சிக்கியிருக்கிறது..அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்து விசாரிப்பதுதானே முறை.. ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு முழு அளவிளான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்..
..
எப்படியும் வெற்றிபெற வேண்டும் அதைவிட பன்னீர் அணியைவிட கூடுதலாக வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக ₹90 கோடியை சதாரணமாக செலவு செய்கிறார்கள்..தினகரனுக்கு எங்கிருந்துவந்தது இந்த பணம் .. வரிஏய்ப்பு செய்து ₹28கோடியை இன்னமும் அபதாரமாக செலுத்தாமல் இழுத்தடிக்கும் தினகரன் ₹90 கோடியை சர்வசாதாரணமாக செலவிட்டு ஜெயிக்க பார்க்கிறார்..முதலில் பெரும்பொருட்செலவை செய்த இவரை தகுதிநீக்கம் செய்யவேண்டும்.. பிறகு உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும்..
..
நியாயமான தேர்தலை உறுதிசெய்யவேண்டும் ஆணையம்..அப்போதுதான் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை மிளிரும்.. இல்லையெனில் நேரடியாகவே IPL போல ஏலம் விட்டுவிடலாம்.. ஜனநாயகத்தை கழுத்தறுக்கும் செயலை .. திமிரோடு செய்து நகைக்கிறார்.. தினகரன்.. ஆட்சி அதிகாரம் அமைச்சர்கள் அதிகாரிகள் துணையோடு தேர்தல் ஆணையத்தையே கேலிபொருளாக்கி .. எதுவும் செய்யமுடியாது பணத்தால் வாங்கிவிடுவேன் என அறைகூவல் விடுகிறார்..
..
தினகரன் தகுதியற்ற வேட்பாளர்.. ஜனநாயக மாண்பை குத்தி ரணமாக்கி.. எப்படியும் வெற்றிபெறவேண்டும் ..அதற்காக எதையும் விலைபேசுவேன் என்கிற நிலை.. அப்பட்டமாக தெரிகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல்.. தினகரனை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நியாயமாக நடத்தவேண்டும்..  முகநூல் பதிவு
..

கருத்துகள் இல்லை: