மேலும் அவர் கூறியதாவது:- எனக்கெதிராக குற்றம் சுமத்துபவர்கள் வாருங்கள். கேமராவைக் கொண்டு வந்து படம் பிடித்து பாருங்கள். இங்கு தவறு ஏதேனும் நடந்திருக்கிறதா என்பதை சொல்லுங்கள்.
ஈஷாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை நிரூபியுங்கள். நான் இந்த இடத்தைவிட்டே போய்விடுகிறேன், என்றார் இந்நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் ஈஷாவிற்கு சென்று ஜக்கி வாசுதேவிற்கு எதிராக சில ஆதாரங்களை திரட்டியுள்ளார். அதை கேமிராவில் வீடியோ பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜக்கி வாசுதேவ் ஈஷாவைச் சுற்றி 10 லட்சம் மரங்கள் நட்டிருப்பதாகச் கூறினார். ஆனால், நிச்சயம் அங்கு அவ்வளவு மரங்கள் இல்லை. வெள்ளிங்கிரி மலையில் 60 லட்சம் மரங்களை நட்டதாகச் சொல்கிறார். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இவர் எப்படி மரங்கள் நட்டார் என்ற கேள்வி எழுகிறது.
அதே மாதிரி, காப்புக் காட்டின் எல்லையிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் இல்லை என ஜக்கி கூறினார். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் தற்போது முன்வைத்துள்ளோம். அவர் எந்தளவிற்கு காடுகளை அழித்திருக்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது, என்றார் வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக