ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சேனல்களின் பார்பன அக்கிரமம் ... மீண்டும் மீண்டும் பொய்களையே பரப்புதல்

தோழர் நந்தன் ஸ்ரீதரன் : இந்த சேனல் ஹிந்துத்துவாக்களின் அக்கிரமம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
எதேச்சையாக ஹிஸ்டரி சேனல் போட்டேன் அதில் ஹெரிடேஜ் இந்தியா என்ற இந்தியா முழுமைக்குமான குவிஸ் போட்டி போய்க்கொண்டிருக்கிறது. 1900 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்..
நமது கவலை அதல்ல.. அதில் குவிஸ் நடத்துபவர் ஒரு கேள்வி கேட்கிறார்: ஹிந்தியை இந்தியாவின் அஃபிஷியல் லாங்குவேஜாக மாற்றுவதற்கு போராடி விருதுகள் பெற்றவர் யார் என்று கேட்கிறார்.. மாணவர்களும் பதில் சொல்கிறார்கள்..
இதில் உள்ள பார்ப்பன அக்கிரமம்தான் நாம் கவனிக்க வேண்டியது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி அல்ல என்று உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டது. ஆனாலும் இந்த சங்கிகள் இந்த மாதிரியான கேள்விகளின் மூலம் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறார்கள். கேள்வியைப் பார்ப்பவர்களுக்கு மனதில் இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி என்றும் அதற்காக போராடியவர் என்று அந்த மனிதரின் பெயரும் மனதில் பதியும்..
உண்மையில் அவர் ஹிந்தி அலுவல் மொழியாவதற்கு போராடி இருககலாம். அதற்காக விருது பெற்றிருக்கலாம். ஆனால் ஹிந்தி அலுவல் மொழியாகவில்லை என்று எத்தனை பேருக்கு தெரியும். இப்படியாக நைசாக பிஞ்சு மனஞ்களில் மொழி வெறியை திணிக்கும் வேலையைத்தான் இந்த மாதிரி ஹெரிட்டேஜ் குவிஸ்கள் செய்து கொண்டிருக்கின்றன..
இதை யார்தான் தடுப்பது..  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: