மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக்கயிறு உள்ளிட்டவற்றைவைத்து, விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர். வாயில் எலிக்கறி, பாம்புக்கறியை வைத்தும் போராட்டம் நடத்தினர். தலையை அரைமொட்டை அடித்துக்கொண்டும், ஒரு பக்க மீசையை எடுத்தும் நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், போராட்டத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று, போராட்டக் களத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, அய்யாக்கண்ணு உடனடியாக டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்றுள்ள துவரங்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி பழனிசாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் அய்யாக்கண்ணு போராட்டக் களத்துக்கு வந்தார் விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக