புதன், 5 ஏப்ரல், 2017

BBC: வட மாநிலங்களில் ஊர் பெயர் தமிழில் எழுதப்படுமா? பழ.கருப்பையா கேள்வி

வட மாநிலத்தவர்களை கருத்தில் கொண்டு மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றும், பொது மொழியான ஆங்கிலத்தில்தான் ஊர் பெயர்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்றும் மூத்த அரசியல் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பழ.கருப்பையா பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஊர் பெயர்கள் இந்தி மொழியில் எழுதப்பட்டது பற்றி மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து குறித்து பழ.கருப்பையா குறிப்பிடுகையில், ''வடமாநிலத்தவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஆங்கிலப் பெயர்களை அகற்றிவிட்டு, இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டால், தமிழர்கள் மற்றும் தென் மாநிலத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ள மைல் கற்களில் தமிழிலும், பிற தென் இந்திய மொழிகளிலும் ஊர் பெயர்கள் எழுதப்படுமா?'' என்று வினவினார்.


இது குறித்து மேலும் பழ.கருப்பையா கூறுகையில், ''உலக மனிதர்கள் முழுவதும், தமிழகத்தில் வாகனங்கள் ஓட்டுகின்றனர். அதனால், ஆங்கிலத்தில் ஊர்ப் பெயர்கள் எழுதப்படுவது மிகவும் அவசியம். ஆங்கிலத்தில் எழுதுவது தான் சரியானதாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.

''18 மொழிகளும், இந்தியாவின் தேசிய மொழிகளாக இருக்க வேண்டும். இல்லையெனில், அந்தந்த மாநில மொழியும், ஆங்கிலமும் முக்கியத்துவம் பெற வேண்டும். ஒரு மொழி மட்டும்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல'' என்று பழ.கருப்பையா மேலும் குறிப்பிட்டார்.

  வடநாட்டினருக்கு வால் பிடிப்பதை விட்டு விட்டு தென் மாநிலத்தவர்கள் நலன் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்று பழ.கருப்பையா மேலும் கூறினார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின்போது, கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பற்றி பழ.கருப்பையா பதிலளிக்கையில், '' காங்கிரஸ் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகளையே தற்போதைய ஆட்சியும் பின்பற்றினால், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் வேர் ஊன்ற முடியாது'' என்று குறிப்பிட்டார்.
 மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த டி. ஆர். பாலு இந்தி பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் ஒன்றிரண்டு இடங்களில் இந்தியில் எழுதப்பட்டதை திருத்தி எழுத வேண்டும் என்று டி. ஆர். பாலு அப்போதே வலியுறுத்தினார் என்று பழ.கருப்பையா நினைவு கூர்ந்தா

கருத்துகள் இல்லை: