வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மெரீனா தீவைப்பு.. குட்கா ஜோர்ஜ் மாற்றம் ..முன்பே கூவிய முகநூல் whistle blower

நடுகுப்பம் மீனவர்கள் பகுதிக்கு சென்று தீ வைத்தது எந்த காவல்துறை அதிகாரியின் தலைமையிலான குழு என்று எனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் விசாரித்துவிட்டேன்.. யாருக்கும் அதற்கான பதில் தெரியவில்லை.. அந்த கேரக்டரும் பின்னால் இருந்து இயக்கியது யார்.. என்பதும் மிக ரகசியமாக இருக்கிறது. நடுக்குப்பத்தில் நடந்தது எல்லாம் திட்டமிடப்பட்டு நடந்தது. எதற்காக செய்தார்கள் எனபதில்தான் அந்த அரசியல் ஒளிந்திருக்கிறது. இப்போது சென்னையில் அதேப்போன்று ஏதேனும் அசம்பாவிதம் மர்ம நபர்களால் நடத்தப்பட்டுவிடக்கூடாது என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை கமிஷனரும் நம்ம மலையாள சேட்டனுமான ஜார்ஜை முதல்வர் பன்னீர் செல்வம் மாற்றப்போவதாக தகவல்கள் வருகின்றன. அப்புறம் இரண்டு செய்திக்கும் தொடர்பில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
முகநூல் பதிவு Bala G முகநூல் பதிவு  

கருத்துகள் இல்லை: