வியாழன், 9 பிப்ரவரி, 2017

கூவதூரில் எம் எல் ஏக்கள் சிறைப்பிடிப்பு . மன்னார்குடி அடியாட்கள் கட்டுப்பாட்டில் தமிழக ஜனநாயகம்?

தமிழக அதிமுக #MLA கள் சிறை பிடித்து வைக்கும் நிலை பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது ரிசார்ட் பகுதியாக அன்றாடப் பணிக்கு செல்லூம் மக்களைக் கூட விடாமல் தடுத்து அவர்களை அடித்து விரட்டி வருகின்றனர். இந்த அராஜகத்தால் கூவத்தூர் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் நம்மிடம் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

நாச்சியாள் சுகந்தி: அரசு வக்கீல் ஹைகோர்ட்ல தைரியமா பொய் சொல்றார். அங்க நீதி சொல்ல உக்கார்ந்து நீதிபதிக்கும் உண்மை தெரியும். எல்லா உண்மையும் தெரிஞ்சும் தெரியாதது போல எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதை அவர் நம்பியுள்ளார்.
ஏழரை கோடி தமிழர்களை சாட்சியாக வைத்துதான் அரசு வக்கீல் நீதிமன்றத்தில் பொய் பேசியுள்ளார்.
இதுதான் வக்கீல், நீதிபதிகளின் நீதி, நேர்மை.
இங்கே எல்ல்லாமே நாடகம் என்று சொல்வதை விட மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதை விட, மக்களையும் நீதியையும் அவமதிக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் பண்புகளை தீயித்து கொளுத்துகிறார்கள் அரசியல்வாதிகள். இதில் ஜனநாயக்த்தின் நான்காம் தூணூம் ஒத்து ஊதுகிறது.
அப்போ யார் தான் நீதிபதிகள்?????

மக்கள் மட்டுமே நீதிபதிகள். முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை: