வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஜோதிமணி : வரவிருக்கும் குடியரசு தேர்தலை தீர்மானிக்க போகும் அதிமுகவின் 37+14 எம்பிகள்,134 சட்டமன்ற உறுப்பினர்கள் !

(காசுக்கு ஒட்டுப்போட்டார்கள் தமிழக வாக்காளர்கள் .. அந்த காசை மீட்டெடுக்க பாஜகவிடம் காசுவாங்குவர்கள் அதிமுக உறுப்பினர்கள் .. அதை தவறு என்று கூற வாக்காளருக்கு உரிமை உண்டா? மக்கழே மக்கழே உங்களை நீங்களே விற்றது மறந்து போய் விட்டதா? அரசியல் விபசாரத்தில் நீங்கள்தானே வாடிக்கையாளர்கள்? )
jothimani. இன்னும் சில மாதங்களில் குடியரசு தலைவர் தேர்தல் வர இருக்கிறது. இதில் இந்தியாவெங்கும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கும். பெரிய மாநிலங்களான பீகார்,மேற்குவங்காளம்,மகாராஷ்டிராவில் (சிவசேனாவுடன் பிரிவு. சரிபாதி உறுப்பினர்கள் காங்கிரஸ், என் சி பி வசம்) பிஜேபிக்கு சொற்ப உறுப்பினர்கள். அடுத்து மிகப்பெரிய மாநிலமான உபியின் தேர்தல் முடிவு பிஜேபிக்கு அதிர்ச்சியளிக்கும். பஞ்சாப் கைவிட்டுப் போய்விட்டது. இந்தச் சூழலில் ஆந்திராவும்,தமிழகமுமே கைகொடுக்க வேண்டும். தமிழகம் குறிப்பாக அதிமுக (37+14 எம்பிகள்,134 சட்டமன்ற உறுப்பினர்கள்) எதிர்த்து வாக்களித்தால் பிஜேபி வேட்பாளரின் தோல்வி உறுதியாகிவிடும். இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. ஆகவே எண்ணிக்கையை ஒட்டியே பிஜேபி காய் நகர்த்தும். பிஜேபியின் முக்கியத் தலைவரான சுப்ரமணியம் சுவாமியின் சசிகலா ஆதரவு நிலைப்பாடும், குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி காய்களை நகர்த்துவதுபோல் தோன்றும் கவர்னரின் செயல்பாடும் சொல்கிற செய்தி உங்களுக்குப் புரிகிறதா ஓ பி எஸ்? 
டெல்லி,ராஜ்பவன் சதுரங்க ஆட்டங்களை எதிர்கொள்ள வெறும் பத்திரிக்கையாளர் சந்திப்புகள்,'ஆன்மாவின் வழிகாட்டல்' மட்டும் போதாது. அதற்கு மேலான சாதுர்யமும்,சாணக்கியத்தனமும்,தலைமைப் பண்பும் தேவை. இந்த நெருப்பாற்றை நீங்கள் நீந்திக் கடக்க வேண்டும். இதில் நீங்கள் தவறினால் இழப்பு உங்களுக்கு மட்டுமல்ல
ஓ பி எஸ். தமிழகத்தை தவறான கைகளில் ஒப்படைத்த வரலாற்றுப் பழியை நீங்கள் சுமக்க நேரிடும்.முகநூல்பதிவு ஜோதிமணி 

கருத்துகள் இல்லை: