வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

Sivasankaran Saravanan :ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தை கேலிக்கூத்தாக்கியதில் பன்னீருக்கும் பங்கிருக்கிறது..!

எனக்கென்னவோ ஓபிஎஸ் சை விட ஜெ.தீபா சற்று நேர்மையானவராக தெரிகிறார். தன்னை மருத்துவமனையில் ஜெயலலிதா வை பார்க்க அனுமதிக்கவில்லை என அப்போதும் சொன்னார் இப்போதும் சொல்கிறார். ஆரம்பத்திலிருந்தே சசிகலாவை எதிர்ப்பவரும் இவரே.
செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி போன வாரம் வரைக்கும் சசிக்கு முட்டுக்கொடுத்து வந்த பன்னிர் இன்று தனக்கு பதவி இல்லையென தெரிந்தவுடன் சசியை எதிர்ப்பது நேர்மையான செயலாகத் தெரியவில்லை. ஓபிஎஸ் மட்டும் அன்றைக்கே தான் ஜெயலலிதா வை பார்க்கவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தால், என்ன செய்வதென்று தெரியாமல் புழுங்கிக்கொண்டிருந்த ஜெ விசுவாசிகள் கண்டிப்பாக சசிகலாவிற்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள் ..! ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தை கேலிக்கூத்தாக்கியதில் இவருக்கும் பங்கிருக்கிறது..! முகநூல் பதிவு சிவசங்கரன்

கருத்துகள் இல்லை: