
மேலும், அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக
கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலராக பதவியேற்க
முடியும் என்ற விதியை நீக்கித்தான், சசிகலா இடைக்கால பொதுச் செயலராக
பதவியேற்றார்.
ஆனால், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்
செயலராக யாரும் பதவியேற்க வழி செய்யும் வகையில் விதி இல்லாததால்,
சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்
செயலராக சசிகலா பதவியேற்பதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலர் பதவியில் சசிகலா
நீடிப்பதில் சிக்கல் இருக்கும் நிலையில், அவர் முதல்வராக பதவியேற்பதிலும்
சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக வழக்குரைஞர் விஜயன் கூறியுள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
கூறியிருப்பதாவது, அந்நியச் செலாவணி முறைகேட்டு வழக்கில், சசிகலா தரப்பில்
தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.
எனவே, அவர் பதவியேற்பில் சட்ட சிக்கல் உள்ளது.
அதே போல, இந்திய அரசியலமைப்பு 10வது
விதியின்படி, நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க
வேண்டும். ஆனால், சசிகலா இன்னும் உறுப்பினர் ஆகவில்லை.
மேலும், சட்டமன்ற உறுப்பினராக அவையில்
அமர்வதற்கு பிரமாணம் எடுக்க வேண்டும். அப்படியே முதல்வராக பொறுப்பேற்றுக்
கொண்டு சட்டப்பேரவைக்குள் வந்தாலும் 6 மாத காலம் உறுப்பினராக இல்லாமல்
எப்படி சட்டப்பேரவையில் அமர முடியும்.
இந்த சூழ்நிலையில்தான், சசிகலா முதல்வராக
பதவியேற்பதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யவே,
வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து கிளம்பினார் என்றும், அதற்கு சரியான
தீர்வு கிடைத்ததும் அவர் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளன. தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக