வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

மதுசூதனன் : பொதுக்குழு விரைவில் கூடுகிறது .. சசிகலாவை நீக்கி விட்டோம் . புதிய பொது செயலரை தேர்ந்தெடுப்போம் !

சசிகலா நீக்கம் - விரைவில் தேர்தல் நடக்கும் : மதுசூதனன் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் நிலவிவரும் குழப்பமான சூழலால் முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையிலும், பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையிலும்  அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ளது. இதில் ஓ.பி.எஸ். தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மதுசூதனன். இதனால், அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இன்று மாலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மதுசூதனன் செய்தியாளர்களை சந்தித்தார்."
;அப்போது அவர்,  ‘’எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டத்தின்படி சசிகலா பொதுச்செயலாளரே அல்ல.  அதிமுக சட்டத்தி அதிமுக தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர்  என்ற ஒன்றே கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடக்கும்’’ என்று தெரிவித்தார்  ;படங்கள்: செண்பகபாண்டியன் நக்கீரன்

கருத்துகள் இல்லை: