சனி, 22 அக்டோபர், 2011

புலிகளுக்காக நிதி திரட்டிய ஐவருக்கு நெதர்லாந்து ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது!

புலிகள் அமைப்பின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களிடம் குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் நிதி திரட்டியதாகவும், அந்த நிதியை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச பட்சமாக ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இளைஞர் அமைப்பு, நெதர்லாந்து தமிழ் கலை கலாச்சார அமைப்பு போன்ற பெயர்களில் புலி ஆதரவு அமைப்புக்களை உருவாக்கி பல மில்லியன் யூரோ நிதியை குறித்த நபர்கள் திரட்டியுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு திரட்டப்பட்ட பணம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: