புதன், 19 அக்டோபர், 2011

ஜெயராஜ் பர்னாண்டோபுள்ளே படுகொலை பிரதிவாதிக்கு குற்றப்பத்திரிகை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பர்னாண்டோ புள்ளே படுகொலைக்கு உடந்தையானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதிவாதிக்கு இன்று முறையார்ந்த குற்றப்பத்திரிகை வழக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
புலிகள் சந்தேக நபரான குட்டி எனப்படும் சண்முகம் சூர்யகுமார் என இனக்காட்டப்பட்டுள்ளார்.
2008 ம் ஆண்டு மார்ச் மாதம் 10 ம் திகதி மற்றும் ஏப்பிரல் மாதம் 5 ம் திகதி காலப்பகுதியில் அமைச்சரை படுகொலை செய்வதற்கான வந்த தற்கொலை குண்டுதாரிக்கு தங்குமிட வசதி வழங்கியதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வழக்குதொடர்பான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ம் திகதிவரை ஒத்திவைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: