வெள்ளி, 21 அக்டோபர், 2011

CCTV கமராவில் அம்பலம் வெள்ளையர்கள் பை காணாமல் போனதாக பொய்


பை காணாமல் போனதாக பொய் நாடகம் ஆடிய வெள்ளையர்கள்! CCTV கமராவில் அம்பலம்தங்களுடைய பை காணாமல் போனதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் செய்த முறைப்பாடு முற்றிலும் பொய்யானது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கொழும்பு அலெக்சேன்டர் வீதியில் வைத்து தங்களுடைய பை களவாடப்பட்டதாக கடந்த 2011 - 08 - 15 அன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகபநபர்களை கண்டுபிடிக்கவென பை காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவில் (CCTV) உள்ள காணொளிகளை பரிசீலித்துள்ளனர்.
இதன்படி குறித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலெக்சென்டர் வீதிக்குப் பயணித்தபோது அவர்கள் கைகளில் பைகள் எதுவும் இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவர்கள் செய்த முறைப்பாடு பொய்யானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: