சனி, 22 அக்டோபர், 2011

முடிவு சாதகமாக இல்லை: 16 அதிகாரிகளை வெளியேற்ற வைத்த அதிமுகவினர்

நாகை: முடிவுகள் சாதகமாக வரவில்லை என்பதால் சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த 16 தேர்தல் அதிகாரிகளை அதிமுகவினர் வெளியேற்றச் செய்தனர். கடந்த 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான இடங்களில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவுக்கு சாதகமாக முடிவுகள் வரவில்லை என்று அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். பின்பு அந்த மையத்தில் இருந்த 16 அதிகாரிகளை உடனே வெளியேற்றாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து எந்தவித விசாரணையும் இன்றி அந்த 16 அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதிமுகவுக்கு ஆதரவான வேறு 16 அதிகாரிகளை வைத்து அங்கு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை: