வியாழன், 9 செப்டம்பர், 2010

மலையகத்து மக்களின் காதுகளில் பூ சுத்த முடிந்தது ,சிறிறங்கா

மின்னல் சிறிறங்கா அலறிமாளிகையில் பால்சோறு உண்டு மகிழ்கின்றார்.

ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே ஆட்சி செய்யலாம் என்ற வரையறையை மாற்றியமைப்பதற்கு ஆதரவளித்த பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அலறிமாளிகையில் அமோக வரவேற்பும் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவாறு அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு நேரடியாக அலறிமாளிகை சென்று சிறிறங்கா பால்சோறு உண்டு மகிழ்வதை படத்தில் காண்கின்றீர்கள்.

அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் இணக்க அரசியலை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர் சிறிறங்காக. இவ்விமர்சிப்பினூடாகவே இவரால் மலையகத்து மக்களின் காதுகளில் பூ சுத்த முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது டக்ளசின் யூனியராக மாறியுள்ளார் என்பது சிறப்பம்சமாகும்.

கருத்துகள் இல்லை: